புதிய பதிவுகள்
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by ayyasamy ram Today at 2:09 pm

» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Today at 1:58 pm

» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Today at 1:53 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:45 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:37 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:29 pm

» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Today at 12:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:15 pm

» பொண்டாட்டியாய் மாறும்போது மட்டும் ...
by ayyasamy ram Today at 12:10 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:02 pm

» வாழ்க்கையின் ரகசியம் என்ன...
by ayyasamy ram Today at 12:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 11:56 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 11:51 am

» அவங்கவங்க கஷ்டம் அவங்கவங்களுக்கு.
by ayyasamy ram Today at 11:47 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 11:43 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 11:31 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 11:29 am

» ஏது பிழை செய்தாலும் ஏழையேனுக்கிரங்கி...
by T.N.Balasubramanian Yesterday at 8:45 pm

» விநாயகனே வெல்வினையை வேர் அறுக்க வல்லான்…
by ayyasamy ram Yesterday at 5:07 pm

» உருவாய் அருவாய் உளதாய் இலதாய்…
by ayyasamy ram Yesterday at 5:04 pm

» ’கேக்’ குதா!
by ayyasamy ram Yesterday at 12:33 pm

» சிட்டுக்குருவி தினம் - பொது அறிவு (கே & ப)
by ayyasamy ram Yesterday at 12:20 pm

» செண்பகமே! செண்பகமே!
by ayyasamy ram Yesterday at 11:55 am

» கடவுளைக் காண ....
by rajuselvam Yesterday at 11:20 am

» நாம தான் கார்ல போற அளவுக்கு வாழ்க்கையில முன்னேறணும்!
by ayyasamy ram Yesterday at 9:52 am

» ஆவேசம் - திரை விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 7:02 am

» யுவா -திரைப்பட விமர்சனம்:
by ayyasamy ram Yesterday at 7:00 am

» "கள்வன்"திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 6:58 am

» கருத்துப்படம் 26/05/2024
by mohamed nizamudeen Sun May 26, 2024 6:16 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Sun May 26, 2024 11:35 am

» நீங்களே துணி துவைத்து காய வைங்க!
by ayyasamy ram Sun May 26, 2024 10:24 am

» திருஷ்டிக்கு வெள்ளைப் பூசணியை உடைப்பது ஏன்?
by ayyasamy ram Sun May 26, 2024 9:16 am

» வாஸ்து புருஷ மண்டலம் என்றால் என்ன?
by ayyasamy ram Sun May 26, 2024 9:15 am

» சந்தையில் அழகாய்த் தெரிந்தவள்…(விடுகதை)
by ayyasamy ram Sun May 26, 2024 9:07 am

» எட்டுவது போல் தெரியும்,ஆனால் எட்டாது!- விடுகதைகள்
by ayyasamy ram Sun May 26, 2024 9:05 am

» நுங்கு சர்பத்
by ayyasamy ram Sun May 26, 2024 9:03 am

» உமா ரமணன் பாடல்கள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:18 pm

» இன்றைய (மே 25) செய்திகள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:14 pm

» சினி மசாலா
by ayyasamy ram Sat May 25, 2024 10:11 pm

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by ayyasamy ram Sat May 25, 2024 10:09 pm

» உன்னை போல ஒருத்தனை நான் பார்த்தே இல்லை!
by ayyasamy ram Sat May 25, 2024 6:30 pm

» 7 மில்லியன் மக்கள் சிகரெட்பிடிப்பதை நிறுத்தி விடுகிறார்கள் !
by ayyasamy ram Sat May 25, 2024 6:14 pm

» ரீமால் புயல் இன்று மாலை வலுப்பெற வாய்ப்பு
by ayyasamy ram Sat May 25, 2024 1:55 pm

» கேன்ஸ் பட விழாவில் சிறந்த நடிகை விருது வென்று அனசுயா சென்குப்தா சாதனை
by ayyasamy ram Sat May 25, 2024 1:10 pm

» 27 ஆண்டுகளுக்குப் பிறகு இணையும் பிரபுதேவா, கஜோல்
by ayyasamy ram Sat May 25, 2024 11:11 am

» சாமை பொங்கல்
by ayyasamy ram Sat May 25, 2024 11:09 am

» சேர்க்கை சலி இல்லையேல் வாழ்க்கை இனிக்காது...
by ayyasamy ram Sat May 25, 2024 11:07 am

» சாமை பேரீச்ச ரோல்
by ayyasamy ram Sat May 25, 2024 8:59 am

» ஆறும் ஆறும் சேர்ந்தா என்ன வரும்...!
by ayyasamy ram Sat May 25, 2024 8:35 am

» உண்மை...உண்மை!
by ayyasamy ram Sat May 25, 2024 8:28 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சரியான உச்சரிப்பின் முக்கியத்துவம் -  டோண்டு ராகவன் Poll_c10சரியான உச்சரிப்பின் முக்கியத்துவம் -  டோண்டு ராகவன் Poll_m10சரியான உச்சரிப்பின் முக்கியத்துவம் -  டோண்டு ராகவன் Poll_c10 
27 Posts - 53%
heezulia
சரியான உச்சரிப்பின் முக்கியத்துவம் -  டோண்டு ராகவன் Poll_c10சரியான உச்சரிப்பின் முக்கியத்துவம் -  டோண்டு ராகவன் Poll_m10சரியான உச்சரிப்பின் முக்கியத்துவம் -  டோண்டு ராகவன் Poll_c10 
22 Posts - 43%
rajuselvam
சரியான உச்சரிப்பின் முக்கியத்துவம் -  டோண்டு ராகவன் Poll_c10சரியான உச்சரிப்பின் முக்கியத்துவம் -  டோண்டு ராகவன் Poll_m10சரியான உச்சரிப்பின் முக்கியத்துவம் -  டோண்டு ராகவன் Poll_c10 
1 Post - 2%
T.N.Balasubramanian
சரியான உச்சரிப்பின் முக்கியத்துவம் -  டோண்டு ராகவன் Poll_c10சரியான உச்சரிப்பின் முக்கியத்துவம் -  டோண்டு ராகவன் Poll_m10சரியான உச்சரிப்பின் முக்கியத்துவம் -  டோண்டு ராகவன் Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
சரியான உச்சரிப்பின் முக்கியத்துவம் -  டோண்டு ராகவன் Poll_c10சரியான உச்சரிப்பின் முக்கியத்துவம் -  டோண்டு ராகவன் Poll_m10சரியான உச்சரிப்பின் முக்கியத்துவம் -  டோண்டு ராகவன் Poll_c10 
305 Posts - 46%
ayyasamy ram
சரியான உச்சரிப்பின் முக்கியத்துவம் -  டோண்டு ராகவன் Poll_c10சரியான உச்சரிப்பின் முக்கியத்துவம் -  டோண்டு ராகவன் Poll_m10சரியான உச்சரிப்பின் முக்கியத்துவம் -  டோண்டு ராகவன் Poll_c10 
289 Posts - 43%
mohamed nizamudeen
சரியான உச்சரிப்பின் முக்கியத்துவம் -  டோண்டு ராகவன் Poll_c10சரியான உச்சரிப்பின் முக்கியத்துவம் -  டோண்டு ராகவன் Poll_m10சரியான உச்சரிப்பின் முக்கியத்துவம் -  டோண்டு ராகவன் Poll_c10 
23 Posts - 3%
T.N.Balasubramanian
சரியான உச்சரிப்பின் முக்கியத்துவம் -  டோண்டு ராகவன் Poll_c10சரியான உச்சரிப்பின் முக்கியத்துவம் -  டோண்டு ராகவன் Poll_m10சரியான உச்சரிப்பின் முக்கியத்துவம் -  டோண்டு ராகவன் Poll_c10 
17 Posts - 3%
prajai
சரியான உச்சரிப்பின் முக்கியத்துவம் -  டோண்டு ராகவன் Poll_c10சரியான உச்சரிப்பின் முக்கியத்துவம் -  டோண்டு ராகவன் Poll_m10சரியான உச்சரிப்பின் முக்கியத்துவம் -  டோண்டு ராகவன் Poll_c10 
10 Posts - 1%
சண்முகம்.ப
சரியான உச்சரிப்பின் முக்கியத்துவம் -  டோண்டு ராகவன் Poll_c10சரியான உச்சரிப்பின் முக்கியத்துவம் -  டோண்டு ராகவன் Poll_m10சரியான உச்சரிப்பின் முக்கியத்துவம் -  டோண்டு ராகவன் Poll_c10 
9 Posts - 1%
Jenila
சரியான உச்சரிப்பின் முக்கியத்துவம் -  டோண்டு ராகவன் Poll_c10சரியான உச்சரிப்பின் முக்கியத்துவம் -  டோண்டு ராகவன் Poll_m10சரியான உச்சரிப்பின் முக்கியத்துவம் -  டோண்டு ராகவன் Poll_c10 
4 Posts - 1%
Anthony raj
சரியான உச்சரிப்பின் முக்கியத்துவம் -  டோண்டு ராகவன் Poll_c10சரியான உச்சரிப்பின் முக்கியத்துவம் -  டோண்டு ராகவன் Poll_m10சரியான உச்சரிப்பின் முக்கியத்துவம் -  டோண்டு ராகவன் Poll_c10 
4 Posts - 1%
jairam
சரியான உச்சரிப்பின் முக்கியத்துவம் -  டோண்டு ராகவன் Poll_c10சரியான உச்சரிப்பின் முக்கியத்துவம் -  டோண்டு ராகவன் Poll_m10சரியான உச்சரிப்பின் முக்கியத்துவம் -  டோண்டு ராகவன் Poll_c10 
4 Posts - 1%
Guna.D
சரியான உச்சரிப்பின் முக்கியத்துவம் -  டோண்டு ராகவன் Poll_c10சரியான உச்சரிப்பின் முக்கியத்துவம் -  டோண்டு ராகவன் Poll_m10சரியான உச்சரிப்பின் முக்கியத்துவம் -  டோண்டு ராகவன் Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சரியான உச்சரிப்பின் முக்கியத்துவம் - டோண்டு ராகவன்


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82276
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed Apr 22, 2015 12:08 pm

நான் சமீபத்தில் 1955-56 கல்வியாண்டில் திருவல்லிக்கேணி ஹிந்து உயர்நிலைப் பள்ளியில் ஐந்தாம் வகுப்பு படிக்கையில் ஒரு தேர்வில் மகாத்மா காந்தியைக் கொன்றது யார் என்ற ஒரு வார்த்தையில் பதிலளிக்க வேண்டிய கேள்வி வந்தது. அதன் விடையை பாடத்தில் படித்திருந்தாலும் உப்பிலிக்கு காந்தியைக் கொன்றவரின் பெயர் அச்சமயம் பார்த்து மறந்து தொலைத்தது.

ஆனால் வேறு விஷயம் அரைகுறையாக நினைவுக்கு வரவே, மகாத்மா காந்தியைக் கொன்றது ஒரு வயதான நபர் என எழுதித் தொலைத்தான். மதிப்பிடப்பட்ட விடைத்தாள்களை மாணவர்களுக்கு வினியோகிக்கும் சமயம் ஆசிரியர் ரங்காராவ் அன்றைக்கென்று மழமழவென சவரம் செய்து வந்திருந்தார். ஆகவே அவர் கோபத்துடனேயே இருப்பார் என்பது மாணவர்களது சரியான அனுமானம்.

அப்படிப்பட்டவர் “உப்பிலி எழுந்திரு” என கர்ஜிக்க, உப்பிலிக்கு சர்வநாடியும் ஒடுங்கிற்று. “மகாத்மா காந்தியைக் கொன்றது யார்” என அவனிடம் முழு வகுப்பில் எல்லோருக்கும் முன்னால் கேள்வி கேட்க, தலைக்குமேலே வெள்ளம் போனால் சாணென்ன முழமென்ன என தெளிந்த உப்பிலி, அசட்டுத் துணிச்சலுடன் “கோட்ஸே சார்” என்று கூற, “பின்னே ஏன் காந்தியைக் கொன்றவர் ஒரு வயதானவ்ர் என எழுதினாய்” என ரங்காராவ் கர்ஜித்தார்.

உப்பிலி பவ்யமாகக் கைகளைக் கட்டிக் கொண்டு, “அப்படித்தான் புத்தகத்தில் போட்டிருக்கு” என்று கூற, எல்லா மாணவர்களுக்கும் ஒரே திகைப்பு. உப்பிலி மேலும் பவ்யமாகக் கூறலானான். “சார் புத்தகத்தில் போட்டிருக்கு சார், ‘மகாத்மா காந்தியை 1948, ஜனவரி 30-ஆம் தேதி மாலை கோட்ஸே என்கிற கயவன் சுட்டுக் கொன்றான்’ என்று” கூறினான்.

அடுத்த நிமிடம் ரங்காராவ் சார் அடக்க முடியாமல் சிரிக்க ஆரம்பித்தார். “அடே அசடு கயவன்னாக்க கிழவன்னு அர்த்தம் இல்லை, சரி உட்கார்” எனக்கூறிவிட்டு, கயவன் என்றால் கெட்டவன், தீயவன் என்றெல்லாம் விளக்கம் அளித்தார்.

இப்போது எனது பதிவின் விஷயத்துக்கு வருகிறேன். கிழவனை சரியாக உச்சரிக்காமல் ஒரு பெரிய கோஷ்டியே கெயவன் என்றும், கியவன் என்றும், கிளவன் என்றும் கூறிவரும் நிலையில் அப்பாவி உப்பிலி மட்டும் கயவனும் கிழவனே என முடிவுக்கு வந்ததில் என்ன ஆச்சரியம் இருக்க முடியும்?

இதுவாவது பரவாயில்லை, ஹாஸ்யமாக போயிற்று. இருப்பினும் தவறான உச்சரிப்பால் உயிருக்கே கேடு வந்ததும் நடந்திருக்கிறது.

எங்கே பிராமணன் சீரியல் பகுதி-2, ஆறாம் எபிசோடில் சோ அவர்கள் இதை சுவையாக விளக்குகிறார். இது பற்றி நான் இட்ட பதிவிலிருந்து சில வரிகள்:

“உமாவுக்கு பிறக்கப் போவது ஆணா பெண்ணா என்பதை ஸ்கேன் பண்ணிப் பார்த்தார்களா என வேம்பு சாஸ்திரிகள் கேட்க, அவ்வாறு செய்வது சட்ட விரோதம் என நீலகண்டனும் அவர் சம்பந்தியும் கூறுகின்றனர். ஆணோ பெண்ணோ நல்லபடியாக பிறந்தால் போதும் என பர்வதம் கூறுகிறாள்.

நுணலும் தன் வாயால் கெடும் என்னும் கணக்காக வேம்பு சாஸ்திரிகள் எல்லாம் தெரிந்த சிரோன்மணி அசோக் உமாவுக்கு என்ன குழந்தை பிறக்கும் என்பதை கூறலாமே எனக் கிண்டலாகக் கேட்டு, சொந்தச் செலவில் சூன்யம் வைத்துக் கொள்கிறார். அவர் முறைப்படி மந்திரங்கள் உச்சரித்திருந்தால், அவற்றின் அதிர்வுகளை உமாவின் கருவிலுள்ள குழந்தை பெற்றிருக்கும், அதையும் இவர் உணர்ந்திருந்தால் பிறக்கப் போகும் குழந்தை ஆணா பெண்ணா என வேம்பு சாஸ்திரிகளே கூறிடலாமே தான் எதற்கு என அசோக் வினயமாக பதிலளிக்கிறான். வேம்பு சாஸ்திரி திடுக்கிடுகிறார். தான் சொன்ன மந்திரங்களில் என்ன குறைவு என அவர் துணுக்குற்று கேட்க, எல்லோர் எதிரிலும் வேண்டாம், அவரிடம் தான் தனியாக கூறுவதாக அவன் தயங்க வேம்பு சாஸ்திரிகள் அவன் இப்போதே கூற வேண்டும் என பிடிவாதம் பிடிக்கிறார். அவரது மந்திரங்களில் ஸ்வரப்பிழை இருந்ததாக அசோக் கூறுகிறான்.

“ஸ்வரப்பிழையா, இது என்ன கச்சேரியா” என சோவின் நண்பர் வியக்க, கச்சேரியாக அமையக்கூடாது என்பதுதான் சரி என சோ விளக்குகிறார். வேதத்தின் ஸ்வரத்தை மாற்றல், அவசரப்படல், உணர்ச்சியின்றி அதை உச்சரித்தல், சொல் மாற்றிக் கூறுதல், அனாவசியமாக தலையெல்லாம் ஆட்டி சேஷ்டைகள் செய்தல் முதலியவை அடங்கிய ஆறு குறைகளை சோ அவர்கள் பட்டியலிடுகிறார். இந்திரனைக் கொல்லும் ஆற்றல் பெற்ற பிள்ளை பெறும் வரம் வேண்டி தவம் இருந்த ஸ்வஷ்டா என்னும் தேவத்தச்சன், தனது கோரிக்கையை ஸ்வரப்பிழையுடன் கூறியதில் இந்திரனால் கொல்லப்படும் மகன் என உருமாறி, அவனுக்கு பிறக்கும் மகனை இந்திரன் கையால் சாவதாக வரும் கதையையும் சோ கூறுகிறார். தினசரி வாழ்க்கையிலும் இம்மாதிரி தொனி மாறிய வரவேற்புரைகள் விபரீத பொருளை தருவதையும் உதாரணத்துடன் விளக்குகிறார்”.

அந்த எபிசோடின் வீடியோவுக்கான சுட்டி இதோ. (இந்த எபிசோடே இரண்டு வீடியோக்களில் உள்ளன. முதல் வீடியோ சுமார் 11 நிமிடங்கள், இரண்டாவது வீடியோ சுமார் 10 நிமிடங்கள். அதன் லொகேஷன் திரைக்கு கீழ் பகுதியில் வருகிறது. இரண்டையும் பார்த்தல் நலம்).

அதே போல “தாயே யசோதா உந்தன் ஆயர் குலத்துதித்த மாயன் கோபாலகிருஷ்ணன் செய்யும் ஜாலத்தைக் கேளாய்” என்னும் பாடலை பல பாடகர்கள் தாயே யசோதா உந்தன் நாயர் குலத்துதித்த மாயன் கோபாலகிருஷ்ணன் என்றெல்லாம் சிதைத்துப் பாடியதில் ஒரு குழந்தை கிருஷ்ணர் ஒரு நாயர் என்று முடிவுக்கு வந்தால் ஆச்சரியப்படுவதற்கு இல்லைதான்.

அம்மாதிரியான பிழைகள் வரலாகாது என்பதற்காகவே வடமொழி சுலோகங்களை தமிழில் எழுத முயலும்போது சரியான உச்சரிப்புக்காக கிரந்த எழுத்துக்களை பாவிக்கிறேன் என ஒருவர் கூறினால் அதில் என்ன தவறு இருக்க முடியும்?

விருப்பம் உள்ளவர்கள் பாவியுங்கள், மற்றவர்கள் விட்டுத் தொலையுங்களேன்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Wed Apr 22, 2015 1:19 pm

சரியான உச்சரிப்பின் முக்கியத்துவம் -  டோண்டு ராகவன் 3838410834 ரசிக்கத்தகுந்த கட்டுரை , பிழையுடன் எழுதுவதும் உச்சரிப்பதும் எவ்வளவு பெரிய விளைவுகளை உருவாக்கும் என்பதையும் விளக்குகிறது

M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Wed Apr 22, 2015 1:38 pm

சரியான உச்சரிப்பின் முக்கியத்துவம் -  டோண்டு ராகவன் 103459460 சரியான உச்சரிப்பின் முக்கியத்துவம் -  டோண்டு ராகவன் 1571444738



M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34985
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Wed Apr 22, 2015 5:57 pm

2010-11முதல் நான் விரும்பி படித்த பதிவர் .

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34985
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Wed Apr 22, 2015 6:26 pm

நேற்றைய airtel - T20 பாட்டு போட்டியில் , ஸ்பூர்த்தி என்ற சிறு பெண் பாடி முடித்ததும் ,
நடுவர் ஜேம்ஸ் வசந்தன் கூறியது ," உன்னுடைய மைனஸ் பற்றி ஒன்றும் சொல்வதற்கில்லை .
ஆனால் , உந்தன் உச்சரிப்பை பற்றி சொல்லியே ஆகவேண்டும் . சொல் என்பதை எல்லோரும் ,
'ஸொல் 'என்றே உச்சரிப்பர் . பாட்டிலும் அப்பிடியேதான் இருந்தது . ஆனால் சிறு குழந்தை நீ .சரியாக
'சொல் 'வருகின்றமாதிரி உச்சரித்ததற்கே உனக்கு முழு மார்க் தரவேண்டும் .
அவள் பாடிய பாட்டு " மன்னவன் வந்தானடி "
ரமணியன்




 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Wed Apr 22, 2015 7:10 pm

சரியான உச்சரிப்பின் முக்கியத்துவம் -  டோண்டு ராகவன் 3838410834 சரியான உச்சரிப்பின் முக்கியத்துவம் -  டோண்டு ராகவன் 103459460



சரியான உச்சரிப்பின் முக்கியத்துவம் -  டோண்டு ராகவன் EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonசரியான உச்சரிப்பின் முக்கியத்துவம் -  டோண்டு ராகவன் L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312சரியான உச்சரிப்பின் முக்கியத்துவம் -  டோண்டு ராகவன் EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Wed Apr 22, 2015 7:15 pm

T.N.Balasubramanian wrote:நேற்றைய airtel - T20 பாட்டு போட்டியில் , ஸ்பூர்த்தி    என்ற சிறு பெண் பாடி முடித்ததும் ,
நடுவர் ஜேம்ஸ் வசந்தன் கூறியது ," உன்னுடைய மைனஸ் பற்றி ஒன்றும் சொல்வதற்கில்லை .
ஆனால் , உந்தன் உச்சரிப்பை பற்றி சொல்லியே ஆகவேண்டும் . சொல் என்பதை எல்லோரும் ,
'ஸொல் 'என்றே உச்சரிப்பர் . பாட்டிலும் அப்பிடியேதான் இருந்தது . ஆனால் சிறு குழந்தை நீ .சரியாக
'சொல் 'வருகின்றமாதிரி உச்சரித்ததற்கே உனக்கு முழு மார்க் தரவேண்டும் .
அவள் பாடிய பாட்டு " மன்னவன் வந்தானடி "
ரமணியன்
     
நிஜமாகவே எனக்கு நேற்று தான் தெரியும் சொல் - ஸொல் இரண்டிற்கும் உள்ள வித்தியாசம். ஜேம்ஸ் ன் விளக்கம் அருமை .



சரியான உச்சரிப்பின் முக்கியத்துவம் -  டோண்டு ராகவன் EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonசரியான உச்சரிப்பின் முக்கியத்துவம் -  டோண்டு ராகவன் L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312சரியான உச்சரிப்பின் முக்கியத்துவம் -  டோண்டு ராகவன் EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34985
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Wed Apr 22, 2015 7:23 pm

அப்பிடி சொல்லுங்க !

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82276
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed Apr 22, 2015 9:08 pm

T.N.Balasubramanian wrote:2010-11முதல் நான் விரும்பி படித்த பதிவர் .

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1132202
-
தன்னம்பிக்கை உள்ள மனிதர்...
-
அவரது கேள்வி - பதில், பகுதிகளை நான் விரும்பிப் படிப்பதுண்டு...



Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக