ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 8:39 pm

» கருத்துப்படம் 07/07/2024
by mohamed nizamudeen Today at 8:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 8:09 pm

» நாவல்கள் வேண்டும்
by Jenila Today at 6:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:29 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by i6appar Today at 4:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:16 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 4:07 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:03 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by Dr.S.Soundarapandian Today at 10:48 am

» இணையத்தில் ரசித்தவை (பல்சுவை)
by Dr.S.Soundarapandian Today at 10:47 am

» தானியங்களில் பெயர் எழுதிய சம்சாரி - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 10:44 am

» வானவில் வாழ்க்கை - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 10:43 am

» அழகாய் இருந்தது மழை! - ஹைகூ
by Dr.S.Soundarapandian Today at 10:42 am

» புதுக்கவிதைகள்…
by Dr.S.Soundarapandian Today at 10:41 am

» சுட்டெரிக்கும் சூரியனுக்கு…(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:33 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

செம்மரக் கடத்தலில் தமிழக முன்னாள் அமைச்சர்: பரபரப்பு தகவல்கள்!

+2
ayyasamy ram
சிவா
6 posters

Go down

செம்மரக் கடத்தலில் தமிழக முன்னாள் அமைச்சர்: பரபரப்பு தகவல்கள்! Empty செம்மரக் கடத்தலில் தமிழக முன்னாள் அமைச்சர்: பரபரப்பு தகவல்கள்!

Post by சிவா Wed Apr 22, 2015 12:42 am



சென்னை: ஆந்திர மாநிலம் திருப்பதி வனப்பகுதியில் செம்மரங்களை வெட்டி கடத்தியதில் தமிழக மற்றும் ஆந்திர முன்னாள் அமைச்சர்களுக்கு தொடர்பு இருப்பதாக பரபரப்புத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

திருப்பதி வனப்பகுதியில் செம்மரங்களை வெட்டி கடத்தியதாகக் கூறி சமீபத்தில் 20 தமிழர்களை ஆந்திர மாநில சிறப்பு அதிரடிப்படை போலீசார் சுட்டுக் கொன்றனர்.நாட்டையே அதிர்ச்சியை ஏற்படுத்திய இந்த சம்பவத்திற்கு கண்டனங்கள் பெருகி வருகின்றன. இது தொடர்பான வழக்கு விசாரணை ஹைதராபாத் உயர்நீதி மன்றத்தில் நடந்து வருகிறது.

இந்த நிலையில் சுட்டுக்கொல்லப்பட்ட 20 தமிழர்களிடம் இருந்து கைப்பற்றப்பட்ட செல்போன்களில் பதிவாகி இருந்த நம்பர்களை தொடர்பு கொண்டு போலீசார் விசாரணை நடத்தினார்கள். அப்போது அந்த தொலைபேசி எண்கள் ஆந்திரா மற்றும் தமிழ்நாட்டைச் சேர்ந்த பிரபல அரசியல்வாதிகள் மற்றும் பெரும் தொழில் அதிபர்களின் எண்களாக இருப்பது தெரிய வந்தது. இதையடுத்து செம்மரம் வெட்ட தொழிலாளர்களை அழைத்து செல்லும் 16 ஏஜெண்டுகளை ஆந்திரா போலீசார் கைது செய்தனர்.

இவர்களிடம் தீவிர விசாரணை நடத்திய போது அவர்கள், ‘‘ஆந்திராவில் வெட்டப்படும் செம்மர கட்டைகள் சென்னை மற்றும் மேற்கு வங்கத்தில் உள்ள குடோன்களில் பதுக்கி வைக்கப்பட்டுள்ளன’’ என்று திடுக்கிடும் வாக்குமூலம் கொடுத்தனர்.

அதோடு செம்மர கடத்தலுக்கு பின்னணியில் இருக்கும் தமிழக, ஆந்திர அரசியல்வாதிகள், தொழில் அதிபர்களின் பெயர்களை ஆதாரங்களுடன் வெளியிட்டனர். இதன் மூலம் செம்மரக்கடத்தலில் மிகப்பெரிய ‘‘நெட்வொர்க்’’ ஒன்று ரகசியமாக இயங்குவது தெரிய வந்தது.

இதற்கிடையே சென்னை வியாசர்பாடியைச் சேர்ந்த முனியாண்டி உள்பட சிலர் ஆந்திரா போலீசாரிடம் சிக்கினார்கள். அவர்கள் ஆந்திரா, தமிழ்நாடு, மேற்கு வங்கத்தில் செம்மரக்கடத்தல் கும்பலின் நெட்வொர்க்கில் யார், யார் இருக்கிறார்கள் என்பது உள்ளிட்ட முழு விபரங்களையும் தெரிவித்தனர்.

இதனையடுத்து தீவிர வேட்டையில் இறங்கிய ஆந்திர போலீசார் நேற்று முன்தினம் இரவு 10 மணிக்கு தமிழகம் மற்றும் மேற்கு வங்காளத்தில் ஒரே நேரத்தில் அதிரடி நடவடிக்கையைத் தொடங்கினார்கள்.

சென்னைக்கு வந்திருந்த 40 போலீசார் 4 பிரிவாக பிரிக்கப்பட்டனர். தலா 10 போலீசாரை கொண்ட 4 படையினர் சோழவரம் அருகில் உள்ள எடப்பாளையம், ஆவடி காந்திநகர், கும்மிடிப்பூண்டி சிப்காட் மற்றும் மதுரவாயல் ஆகிய 4 இடங்களில் உள்ள குடோன்களை முற்றுகையிட்டு சோதனை மேற்கொண்டனர்.

இந்த 4 குடோன்களிலும் சுமார் 4.5 டன் செம்மர கட்டைகள் பதுக்கி வைக்கப்பட்டு இருப்பது கண்டு பிடிக்கப்பட்டது. அவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். இந்த 4 குடோன்களிலும் நேற்று அதிகாலை 5 மணி வரை சோதனை நீடித்தது.

இந்த 4 குடோன்களிலும் செம்மரக்கட்டைகளை கடத்தி வந்து பதுக்கி வைத்ததாக சரவணன் என்பவரை ஆந்திரா போலீசார் கைது செய்தனர். இவருக்கு ‘‘மெட்ராஸ் சரவணன்’’ என்றொரு பெயரும் உண்டு. இவர் சர்வதேச கடத்தல்காரர்களுடன் தொடர்பு வைத்துக் கொண்டு திருப்பதி வனப்பகுதியில் செம்மரங்களை வெட்டி கடத்தி வந்தார் என்று சித்தூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சீனிவாஸ் குற்றம் சாட்டியுள்ளார்.

சென்னையில் 4 இடங்களில் ஆந்திரா போலீசார் சோதனை நடத்திய அதே சமயத்தில் மேற்கு வங்க மாநிலத்தில் பூடான் எல்லைப் பகுதியையொட்டிய காட்டுப் பகுதிக்குள் இருந்த 2 குடோன்களில் அதிரடி சோதனை மேற்கொண்டனர். யானைகள் நடமாட்டம் மிகுந்த அந்த காட்டுப்பகுதியில் உள்ளூர் போலீசார் உதவியுடன் சோதனை நடத்தப்பட்டது. அப்போது 2 குடோன்களிலும் சுமார் 8 டன் செம்மரக்கட்டைகள் பதுக்கி வைத்திருப்பதை கண்டுபிடித்து பறிமுதல் செய்தனர்.

இந்த செம்மரங்களை பதுக்கி வைத்த சவுந்தரராஜன் என்பவரையும் ஆந்திரா போலீசார் கைது செய்தனர். இந்த சவுந்தரராஜன் சென்னையை சேர்ந்தவர். பர்மா தலைநகர் ரங்கூனில் குடும்பத்துடன் செட்டில் ஆகி விட்டார்.

திருப்பதியில் வெட்டப்படும் செம்மரங்களை சவுந்தர ராஜன் சென்னையில் உள்ள கடத்தல்காரர்கள் மூலம் பெற்று சீனா, பர்மா மற்றும் தென் கிழக்கு நாடுகளுக்கு சப்ளை செய்து வந்துள்ளார். குறிப்பாக நிலக்கரி லாரிகள் மூலம் அவர் சீனாவுக்கு பல ஆயிரம் கோடி ரூபாய் மதிப்புள்ள செம்மரக்கட்டைகளை அனுப்பி இருப்பதாக கூறப்படுகிறது.

இவருக்கும் சீனா, பர்மா மற்றும் தென்கிழக்கு ஆசிய நாடுகளில் உள்ள பெரிய கடத்தல்காரர்களுக்கும் நெருங்கிய தொடர்பு இருந்தது. எனவே பல ஆசிய நாடுகள் சவுந்தரராஜனை தேடி வந்தன. அவர் பிடிபட்டு இருப்பதை ஆந்திர மாநில போலீசார் மிகப்பெரிய திருப்பு முனையாக கருதுகிறார்கள்.

சென்னை மற்றும் மேற்கு வங்கத்தில் பறிமுதல் செய்யப்பட்ட செம்மரங்களின் மதிப்பு ரூ.10 கோடி முதல் ரூ.22 கோடி வரை இருக்கலாம் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. சென்னையில் கைதான மெட்ராஸ் சரவணனை நேற்று ஆந்திரா போலீசார் சித்தூருக்கு அழைத்து சென்று விட்டனர்.

மேற்கு வங்கத்தில் பிடிபட்ட சவுந்தரராஜன் நேற்று அங்குள்ள கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டார். பிறகு அவரை ஆந்திரா அழைத்து வந்து கொண்டிருக்கிறார்கள். சித்தூரில் வைத்து அவர்களிடம் அடுத்தகட்ட விசாரணை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

சரவணன், சவுந்தரராஜன் இருவரிடமும் நடத்தப்பட்ட முதல்கட்ட விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் கிடைத்துள்ளன. மேற்கு வங்க மாநிலத்தில் பூடான் நாட்டின் எல்லையில் உள்ள ஹசீரா காட்டுக்குள் இருந்த 2 குடோன்களும் அந்த பகுதி எம்.எல்.ஏ.க்கு சொந்தமானது என்ற அதிர்ச்சி தகவலை சவுந்தரராஜன் வெளியிட்டார்.

அதுபோல சரவணனிடம் நடத்தப்பட்ட முதல்கட்ட விசாரணையில், ஆந்திரா மற்றும் தமிழ்நாட்டை சேர்ந்த முன்னாள் அமைச்சர்கள் 2 பேருக்கு செம்மரங்கள் கடத்தலில் நேரடி தொடர்பு இருக்கும் அதிர்ச்சி தகவலை வெளியிட்டார். இதையடுத்து அந்த இரு முன்னாள் அமைச்சர்கள் பற்றி ஆந்திர மாநில சிறப்பு அதிரடிப்படை போலீசார் விசாரணையை தொடங்கி உள்ளனர். ஒரு முன்னாள் மந்திரியிடம் நேற்று போலீசார் விசாரணை நடத்தியதாக கூறப்படுகிறது.

தமிழ்நாட்டை சேர்ந்த அந்த முன்னாள் அமைச்சர் வட மாவட்டத்தை சேர்ந்தவர் ஆவார். அவரை இதுவரை போலீசார் கைது செய்யவில்லை. ஆந்திர மாநில போலீசாரின் விசாரணை வளையத்துக்குள் செல்லும் போது அவர் கைது செய்யப்படுவார் என்று கூறப்படுகிறது.

செம்மர கடத்தலில் தொடர்புடைய ஆந்திர முன்னாள் மந்திரியும் விரைவில் கைதாக வாய்ப்பு உள்ளது. அவரது உதவியாளரை போலீசார் நேற்று கைது செய்திருப்பதாக கூறப்படுகிறது. ஆனால் அது உறுதி செய்யப்படவில்லை.

ராயலசீமா பகுதி போலீஸ் ஐ.ஜி. கோபாலகிருஷ்ணா இது பற்றி கூறுகையில், ‘‘செம்மரம் கடத்தலில் தொடர்புடைய நெட்வொர்க்கை கண்டு பிடித்து விட்டோம். இது எங்களுக்கு கிடைத்த மிகப் பெரிய வெற்றி. விரைவில் இந்த கடத்தலுக்கு பின்னணியாக இருந்த அரசியல்வாதிகள், தொழில் அதிபர்கள் அனைவரும் கைது செய்யப்படுவார்கள்’’ என்றார்.

செம்மரக் கடத்தலில் தமிழக முன்னாள் அமைச்சர் மீது ஆந்திர மாநில போலீசாரின் பார்வை திரும்பி இருப்பதால், சென்னையில் உள்ள செம்மர கடத்தல்காரர்கள் அனைவரும் மிகவும் கலக்கம் அடைந்துள்ளதாகக் கூறப்படுகிறது.


செம்மரக் கடத்தலில் தமிழக முன்னாள் அமைச்சர்: பரபரப்பு தகவல்கள்! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

செம்மரக் கடத்தலில் தமிழக முன்னாள் அமைச்சர்: பரபரப்பு தகவல்கள்! Empty Re: செம்மரக் கடத்தலில் தமிழக முன்னாள் அமைச்சர்: பரபரப்பு தகவல்கள்!

Post by ayyasamy ram Wed Apr 22, 2015 7:58 am

4 குடோன்களிலும் சுமார் 4.5 டன் செம்மர கட்டைகள்
பதுக்கி வைக்கப்பட்டு இருப்பது கண்டு பிடிக்கப்பட்டது.
-
இது ஒரு லாரி லோடு கூட
இல்லையே...!!
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82839
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

செம்மரக் கடத்தலில் தமிழக முன்னாள் அமைச்சர்: பரபரப்பு தகவல்கள்! Empty Re: செம்மரக் கடத்தலில் தமிழக முன்னாள் அமைச்சர்: பரபரப்பு தகவல்கள்!

Post by கோ. செந்தில்குமார் Wed Apr 22, 2015 8:22 am

சூப்பருங்க செம்மரக் கடத்தலில் தமிழக முன்னாள் அமைச்சர்: பரபரப்பு தகவல்கள்! 3838410834
கோ. செந்தில்குமார்
கோ. செந்தில்குமார்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 332
இணைந்தது : 03/04/2014

http://www.aanmeegachudar.blogspot.in

Back to top Go down

செம்மரக் கடத்தலில் தமிழக முன்னாள் அமைச்சர்: பரபரப்பு தகவல்கள்! Empty Re: செம்மரக் கடத்தலில் தமிழக முன்னாள் அமைச்சர்: பரபரப்பு தகவல்கள்!

Post by ராஜா Wed Apr 22, 2015 11:09 am

இவனுங்க எந்த காலத்திலும் இந்த கடத்தல் கும்பலையோ அதில் சம்பந்தப்பட்டுள்ள அரசியல்வாதிகளையோ பிடிக்க மாட்டார்கள், குறைந்தபட்சம் பெயரை கூட வெளியிட மாட்டார்கள்.

ஊடகங்களும் இதை வைத்து தினமும் circulation ஐ அதிகபடுத்தி கொள்ள தான் இது போல பரபரப்பான செய்திகளாக வெளியிடுவார்கள்.
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

செம்மரக் கடத்தலில் தமிழக முன்னாள் அமைச்சர்: பரபரப்பு தகவல்கள்! Empty Re: செம்மரக் கடத்தலில் தமிழக முன்னாள் அமைச்சர்: பரபரப்பு தகவல்கள்!

Post by M.Saranya Wed Apr 22, 2015 2:10 pm

தகவலுக்கு நன்றி............


கொடுப்பதற்கும் பெறுவதற்கும் உரிய விலை மதிப்பில்லாத பரிசு அன்பு .

செம்மரக் கடத்தலில் தமிழக முன்னாள் அமைச்சர்: பரபரப்பு தகவல்கள்! W5td1pX3QFi1kBRhH0I3+Affection
M.Saranya
M.Saranya
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2190
இணைந்தது : 26/08/2014

Back to top Go down

செம்மரக் கடத்தலில் தமிழக முன்னாள் அமைச்சர்: பரபரப்பு தகவல்கள்! Empty Re: செம்மரக் கடத்தலில் தமிழக முன்னாள் அமைச்சர்: பரபரப்பு தகவல்கள்!

Post by M.M.SENTHIL Wed Apr 22, 2015 2:19 pm

ராஜா wrote:இவனுங்க எந்த காலத்திலும் இந்த கடத்தல் கும்பலையோ அதில் சம்பந்தப்பட்டுள்ள அரசியல்வாதிகளையோ பிடிக்க மாட்டார்கள், குறைந்தபட்சம் பெயரை கூட வெளியிட மாட்டார்கள்.

ஊடகங்களும் இதை வைத்து தினமும் circulation ஐ அதிகபடுத்தி கொள்ள தான் இது போல பரபரப்பான செய்திகளாக வெளியிடுவார்கள்.
மேற்கோள் செய்த பதிவு: 1132124

ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல்


M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு


பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

Back to top Go down

செம்மரக் கடத்தலில் தமிழக முன்னாள் அமைச்சர்: பரபரப்பு தகவல்கள்! Empty Re: செம்மரக் கடத்தலில் தமிழக முன்னாள் அமைச்சர்: பரபரப்பு தகவல்கள்!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» காங்கிரசை உதற தயாராகி வரும், முன்னாள் மத்திய அமைச்சர் வாசனுக்கு, தமிழக பா.ஜ., தரப்பில், மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தூது விட்டுள்ளார்.
» கிரானைட் கடத்தலில் ரூ16,338 கோடி இழப்பு ஏற்பட்டது எப்படி?: சகாயம் காட்டும் பரபரப்பு கணக்கு
» முன்னாள் அமைச்சர் நேரு கைது!
» சி.பி.ஐ. விசாரணையில் முன்னாள் அமைச்சர் அமித் ஷா
» முன்னாள் அமைச்சர் வீடுகளில் சோதனை

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum