புதிய பதிவுகள்
» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Today at 7:33 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:56 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:52 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 11:41 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:27 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:12 pm
» கருத்துப்படம் 21/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:07 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:55 pm
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Yesterday at 7:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 5:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:52 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:58 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:36 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:50 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:15 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Yesterday at 12:52 pm
» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 12:48 pm
» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Yesterday at 12:32 pm
» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Yesterday at 12:26 pm
» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 12:20 pm
» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Yesterday at 10:44 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri Sep 20, 2024 11:32 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 20, 2024 9:46 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Fri Sep 20, 2024 9:36 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Fri Sep 20, 2024 7:46 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Sep 19, 2024 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
by ayyasamy ram Today at 7:33 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:56 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:52 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 11:41 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:27 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:12 pm
» கருத்துப்படம் 21/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:07 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:55 pm
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Yesterday at 7:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 5:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:52 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:58 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:36 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:50 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:15 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Yesterday at 12:52 pm
» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 12:48 pm
» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Yesterday at 12:32 pm
» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Yesterday at 12:26 pm
» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 12:20 pm
» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Yesterday at 10:44 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri Sep 20, 2024 11:32 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 20, 2024 9:46 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Fri Sep 20, 2024 9:36 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Fri Sep 20, 2024 7:46 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Sep 19, 2024 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
prajai | ||||
Raji@123 | ||||
Saravananj | ||||
kavithasankar | ||||
Barushree |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
Rathinavelu | ||||
T.N.Balasubramanian | ||||
Guna.D | ||||
Raji@123 |
நிகழ்நிலை நிர்வாகிகள்
பழங்காசுகள்
Page 1 of 1 •
பழங்கால வாணிபத்தில் தொடர்ந்து பின்பற்றப்பட்டுவந்த “பண்டமாற்று“ முறையின் அடுத்த கட்ட வளர்ச்சிநிலையாகக் குறிப்பிட்ட அளவு பொன்னைக் கொடுத்து எப்பொருளினையும் பெறும்நிலை ஏற்பட்டது. இங்குப் பொன் ஒரு “பொதுப்பொருள்“ என்ற நிலையில் அது கையாளப்பெற்றது. அதன் பின்னர் இந்தியாவின் நிலையான அரசுகள் பிற நாட்டினரின் நாணயப் பயன்பாட்டினைப் பார்த்துத் தாங்களும் நாணய சாலைகளை அமைத்து, காசுகளை உருவாக்கி, தங்களின் ஆட்சிக்குட்பட்ட பகுதிகளில் வணிகப் புழக்கத்திற்காக அவற்றைப் பொதுமக்கள் மத்தியில் பரப்பினர். இக்காசுகள் பொன், வெள்ளி, செம்பு போன்ற உலோகத்தால் சதுரம் அல்லது செவ்வக வடிவில் உருவாக்கப்பெற்றன.
குத்துக்குறி நாணயங்கள்
பண்டைய இந்தியாவில் வேத காலத்திலிருந்தே நாணயங்கள் வழக்கில் இருந்துள்ளன. ஓரின மக்களால் “அடும்பரா“ என்ற நாணயங்கள் வெளியிடப்பட்டுள்ளன. இவ்வகையான இந்திய நாணயங்களை அலெக்சாந்தர் பார்த்துள்ளதாகக் குறிப்பு உள்ளது. நந்தர், மௌரியர், சுங்கர், கண்வர் முதலிய பேரரசர்களும் நாணயங்களை வெளியிட்டுள்ளனர். அந் நாணயங்களில் சின்னங்கள் பொறிக்கப்பெற்றன. ஆதலால் அந் நாணயங்களை “முத்திரை நாணயங்கள்“ என்றனர். இவற்றைத் தமிழில் “குத்துக்குறி நாணயங்கள்“ என்று அழைத்தனர். மோரியர் ஆட்சியில் கர்ஷபணம், சுவர்ண, தரணம், மாசகம் போன்ற காசுவகைகள் புழக்கத்தில் இருந்ததாக கௌடில்யர் குறிப்பிட்டுள்ளார். மௌரியரின் முத்திரை நாணயங்கள் தமிழகத்தில் வீரசிகாமணி, தாராபுரம், வெம்பாவூர், கவுனியண்குட்டை, தொண்டமானத்தம், மாம்பலம் ஆகிய பகுதிகளில் கண்டெடுக்கப்பெற்றுள்ளன. ஆதலால், இந்தியாவின் உள்நாட்டு வாணிபத்தில் குறிப்பாக வட, தென்னிந்திய வாணிப உறவில் குத்துக்குறி நாணயங்கள் பெரும்பங்காற்றியுள்ளமையை அறியமுடிகின்றது. இவற்றின் காலம் பொ.யு.மு. மூன்றாம் நூற்றாண்டு முதல் பொ.யு.மு. 175 ஆம் ஆண்டு வரை என்று கணித்துள்ளனர். இவர்களைத் தொடர்ந்து குஷானர்களும் நாணயங்களை வெளியிட்டனர்.
சங்க காலப் பாண்டியர் காசுகள்
மூவேந்தருள் பாண்டியரே முதன்முதலில் வெள்ளி முத்திரைக் காசுகளை வெளியிட்டனர். இவை நந்தர்களாலும் மோரியராலும் வெளியிடப்பட்ட “கர்ஷபணம்“போன்று இருந்தன. இக் கர்ஷ பணம் ஒரு கர்ஷ எடையில் (146.4 க்ரைன் என்பது ஒரு கர்ஷ எடை) இருந்தன. பாண்டியரின் காசுகளில் ஒருபுறம் மீன் சின்னமும் மறுபுறம் சூரியன் மற்றும் மங்கலச் சின்னங்களும் காணப்படுகின்றன. இவை பொ.யு.மு. இரண்டாம் நூற்றாண்டளவில் வெளியிடப்பெற்றிருக்கலாம்.
மதுரை கோவலன்பொட்டல் என்ற இடத்தில் நடைபெற்ற அகழாய்வில் சங்க காலப் பாண்டியரின் சதுர வடிவச் செப்புக் காசு ஒன்றும் வெண்மையான இதய வடிவ மணி ஒன்றும் தமிழி எழுத்துப் பொறிப்புள்ள மட்கலன்கள் இரண்டும் மனிதனின் எலும்புக்கூடும் கிடைத்துள்ளன.59 மதுரை வைகையாற்றுப் பகுதியில் பொ.யு.மு. மூன்றாம் நூற்றாண்டைச் சார்ந்த நாணயங்கள் பல கிடைக்கப்பெற்றுள்ளன. இக்காலப் பகுதியைச் சார்ந்த மோரியரின் முத்திரை இடப்பெற்ற வெள்ளிக் காசுகளும் கிடைத்துள்ளன. இக்காசுகளைப் பின்பற்றிப் பாண்டியர்கள் தங்களின் காசுகளில் மீன் சின்னத்தைப் பொறித்து வெளியிட்டனர். பாண்டியரின் சதுர வடிவிலமைந்த காசுகளில் ஒருபுறத்தில் மங்கலச் சின்னங்களுடன் நிற்கும் யானையும் மறுபுறம் கோட்டுருவமாக உள்ள மீன் சின்னமும் பொறிக்கப்பெற்றுள்ளன.
மதுரையில் கிடைக்கப்பெற்றுள்ள சங்க காலக் காசுகளுள் ஒன்றில் “பெருவழுதி“ என்ற பெயர் பொறிக்கப்பெற்றுள்ளது. இதன் ஒருபுறத்தில் கடல் ஆமைகள் உள்ள நீர்த்தொட்டியின் முன் நிற்கும் குதிரையின் உருவம் உள்ளது. குதிரையின் கீழ்ப் புறத்தில் எழுத்துகளைப் பொறிக்கவில்லை. “டவுரின்“ சின்னத்தைத்தான் பொறித்துள்ளனர். இதன் மேற்புறத்தில் தமிழி எழுத்துருவில் “பெருவழுதி“ என்று எழுதப்பெற்றுள்ளது. இந்தச் செப்புக் காசு 1.7 செ.மீ. நீளமும் 1.7. செ.மீ. அகலமும் 4.100கிராம் எடையும் உடையது.60 இக் காசின் காலம் பொ.யு.மு. இரண்டாம் நூற்றாண்டு ஆகும். இக்கருத்துகளை இரா. கிருஷ்ணமூர்த்தி உறுதிபடுத்தியுள்ளார்.
சங்க காலப் பாண்டியர் வெளியிட்டுள்ள செப்பு நாணயங்கள் பல கிடைக்கப்பெற்றுள்ளன. அந் நாணயங்களுள் சிலவற்றில் குதிரை, தொட்டி, ஆமை சின்னங்களும் சிலவற்றில் யானை, தொட்டி, ஆமை சின்னங்களும் சிலவற்றில் கோயில், ஆமை சின்னங்களும் சிலவற்றில் தமிழி எழுத்துருவில் “பெருவழுதி“ என்ற சொல்லும் சிலவற்றில் பெருவழுதியின் தலை உருவமும் பொறிக்கப்பெற்றுள்ளன. இவை அனைத்திலும் ஒரு புறத்தில் மீன் சின்னம் பொறிக்கப் பெற்றுள்ளமையால் இவை பாண்டியரின் காசுகள்தான் என்று உறுதிப்படுத்த முடிகின்றது.
அழகன் குளத்தில் நடத்தப்பெற்ற அகழாய்வில் பாண்டியரின் நீள்சதுரச் செப்புக்காசு ஒன்று கிடைக்கப்பெற்றுள்ளது. அதன் ஒரு புறத்தில் மீன் உருவமும் மறுபுறத்தில் திமிலோடு கூடிய காளையின் நின்றநிலை உருவமும் காளையின் முகத்திற்குக் கீழ் தொட்டியும் காணப்படுகின்றது.
பெருவழுதி என்று தமிழி எழுத்துருவில் பொறிக்கப்பெற்ற காசுகளில் சில அறுபக்க வடிவிலும் உள்ளன. அவற்றின் முன்புறம் குதிரை, தொட்டில் ஆமை, “பொருவழுதி“ என்ற சொல் ஆகியனவும் பின்புறம் இரண்டு மீன் உருவங்களும் (இணைக்கயல்) (கயல்-மீன்) பொறிக்கப்பெற்றுள்ளன.
சதுர வடிவில் கிடைக்கப்பெற்றுள்ள காசுகளின் ஒருபுறத்தில் குதிரை, வியூபத் தம்பம், வேலியிட்ட மரம், நந்திபாதம், யாககுண்டம் முதலான உருவங்களும் மறுபுறத்தில் மீன் சின்னமும் பொறிக்கப்பெற்றுள்ளன. இக் காசுகளில் “பெருவழுதி“ என்ற சொல் இல்லை. இக்காசுகளில் யாகங்கள் பற்றிய குறிப்புகள் உருவங்களாக வெளிப்படுவதால், இவை பல்யாகசாலை முதுகுடுமிப் பெருவழுதியால் வெளியிடப்பட்டிருக்கலாம் என்று கருதலாம். இப் பாண்டியர் அசுவமேதயாகம் செய்துள்ளார் என்பதற்கு இக்காசுகள் சான்றாக உள்ளன.
கிரேக்க, ரோமானியரின் காசுகளில் அரசரின் தலைவடிவம் பொறிக்கப்பட்டிருக்கும். அக் காசுகளைப் பின்பற்றிப் பாண்டியரும் தங்களின் தலைவடிவத்தினைக் காசுகளில் பொறித்திருக்கலாம். இத்தகைய காசுகளின் காலம் பொ.யு.மு. இரண்டாம் நூற்றாண்டாக இருக்கலாம்.
கரூரில் கிடைக்கப்பெற்ற காசு ஒன்றில் ஒருபுறம் யானையும் அதன்மேல் எட்டு மங்கலச் சின்னங்களும் யானையின் முன்புறம் சூலமும் வில்லும் பொறிக்கப்பெற்றுள்ளன. இதன் மறுபுறத்தில் வேலியிட்ட மரமும் மீன் குறியீடும் உள்ளன.
மதுரையில் 1917ஆம் ஆண்டு ஹார்விமில் கட்டுவதற்காக வானம்தோண்டியபோது (நிலத்தைத் தோண்டுதல்), ரோமானியரின் பழங்காலத் தங்கக்காசுகள் 11 கிடைக்கப்பெற்றன. இவற்றுள் கிளாடியஸ், நீரோ, டோமிட்டன் ஆகியோரின் தங்கக்காசுகளும் அடக்கம். பழங்காலத்தில் மதுரையோடு ரோமானியர்கள் வணிகவுறவு கொண்டிருந்தனர் என்பதற்கு இவை சான்றாக அமைகின்றன.
சங்க காலச் சேரர் காசுகள்
சேரர்கள் தங்களின் வெள்ளிக் காசுகளில் ஐந்து முத்திரைகளைப் பதித்தனர். கரூர் அமராவதி ஆற்றுப்படுகைகளில் கண்டறியப்பெற்ற காசுகளின் முன்புறத்தில் முகடு, சூரியன், சந்திரன், ஸ்தூபம், தொட்டிக்குள் மீன் ஆகியனவும் பின்புறத்தில் சேரரின் அரச முத்திரையான வில்லும் அம்பும் பொறிக்கப்பெற்றன. இவை “அச்சுக்குத்தப்பெற்ற காசுகள்“ என்று அழைக்கப்பெற்றன.61 சேரரின் செப்புக்காசுகள் இரண்டு கண்டெடுக்கப்பெற்றுள்ளன. அதில் ஒன்றின் ஒருபுறம் காளையின் நின்றநிலை உருவமும் கலப்பையும் மறுபுறம் வில், அம்பு, அங்குசம் ஆகியனவும் பொறிக்கப்பெற்றுள்ளன. மற்றொன்றின் ஒருபுறம் காளையின் நின்ற நிலை உருவமும் மறுபுறத்தில் வில், அம்பு, அம்பின் இருபுறத்தலும் ஸ்வஸ்திக் சின்னம், அங்குசம் ஆகியன பொறிக்கப்பெற்றுள்ளன. இவற்றின் காலம் பொ.யு.மு. முதல் நூற்றாண்டாகும்.
கரூர் அமராவதி ஆற்றுப்படுகையில் கண்டெடுக்கப்பெற்ற காசுகளுள் சிலவற்றில் சேரமான் மாக்காதையின் பெயர் தமிழி எழுத்துருவிலும் அவரின் தலை உருவங்கள் ஐந்து வகையில் (ஒரு காசில் ஓர் உருவ வகை என) பொறிக்கப்பெற்றுள்ளன. ஆதலால், வரலாற்றில் மாக்கோதை என்ற பெயரொட்டுடைய சேரவேந்தர்கள் ஐவர் இருந்தார்களா? இவர்களுள் ஒருவர் புறநானூற்றின் ஐந்தாம் பாடலில் இடம்பெற்றுள்ள சேரமான் கோட்டம்பலத்துத் துஞ்சிய மாக்கோதையா? என்ற வினாக்களுக்கு விடை கிடைக்கவில்லை. இக் காசுகளின் காலம் பொ.யு. முதல் நூற்றாண்டாகும்.
சேரர் மரபில் “பொறையர்“ குலத்து வேந்தரான் அந்துவன் சேரல் இரும்பொறையின் காசும் கண்டெடுக்கப்பெற்றுள்ளது. இதில் எழுத்துகளும் உள்ளன. சேர வேந்தர் கொல்லி மலையினை வென்றதன் நினைவாக ஒரு காசினை வெளியிட்டுள்ளார். அக்காசின் ஒருபுறத்தில் தோரணவாயிலின் உள்ளே ஒரு வேந்தர் நின்றநிலையில் உருவமும் அக்காசின் விளிம்புகளில் தமிழி எழுத்துருவில் “கொல் ஈப்புறை“ என்ற சொல்லும் பொறிக்கப்பெற்றுள்ளன. அதனை ஒட்டி ஆற்றுநீரில் இரண்டு மீன்கள் நீந்திக்கொண்டிருப்பது போலவும் பொறிப்புகள் உள்ளன. அக்காசின் மறுபுறம் வில்லும் அம்பும் பொறிக்கப்பெற்றுள்ளன. இது சேர வேந்தர் கொல்லிப் பொறையன் வெளியிட்டதாக இருக்கலாம் என்று நம்பப்படுகின்றது. மற்றொரு காசில் ஒருபுறம் தமிழி எழுத்தில் “கொல்லிப்பொறையன்“ என்று எழுதப்பெற்றும் மறுபுறம் தோரணவாயிலின் நடுவில் நிற்கும் வேந்தரின் உருவமும் அவரது வலதுகரத்தில் ஏந்திய நிலையில் போர்க்கருவியும் வேந்தரின் இடதுபுறத்தில் நெடிய வேலியிட்ட மரம் ஒன்றும் வலப்புறம் ஒன்றெயொன்று தொடர்ந்து வேந்தரை நோக்கி நீந்திவரும் மூன்று மீன்களும் பொறிக்கப்பெற்றுள்ளன. இக்காசுகள் வட்ட வடிவத்திலும் தடித்தும் இருக்கின்றன. கரூரில் சீனம், கிரேக்கம், ரோம், சிரியா, பொனிசியா ஆகிய நாடுகளின் நாணயங்களும் கண்டெடுக்கப்பெற்றுள்ளன. இவை அந்நாடுகளுடனான கரூரின் வாணிப நடவடிக்கைகளுக்குச் சான்றுகளாக உள்ளன.
சங்க காலச் சோழர் காசுகள்
சங்கப் பாண்டியர், சங்கச் சேரர்களைப் போலச் சங்கச் சோழர்கள் மிகுதியான வகைகளிலும் எண்ணிக்கைகளிலும் காசுகளை வெளியிடவில்லை என்றே கருத இடமுள்ளது. சங்கச் சோழர்கள் செப்பு நாணயங்களை மட்டுமே வெளியிட்டுள்ளனர்.62 பூம்புகார் அகழாய்வில் சங்கச் சோழரின் சதுர வடிவ செப்புக்காசுகள் கண்டெடுக்கப்பெற்றுள்ளன. அதில் ஒருபுறம் யானையும் மறுபுறம் புலியின் உருவமும் பொறிக்கப்பெற்றுள்ளன. சிலவற்றில் முன்புறம் குடை, யானை, குதிரை ஆகிய சின்னங்களும் மறுபுறம் புலியின் சின்னமும் பொறிக்கப்பெற்றுள்ளன. சோழரின் முட்டை வடிவ செப்புக்காசும் கிடைக்கப்பெற்றுள்ளது. கிடைக்கப்பெற்றுள்ள சோழர் காசுகளில் உள்ள சின்னங்களைக் காணும்போது, அவற்றில் ஒரு புறம் புலியும் மறுபுறம் தேர், குதிரைகள் பூட்டப்பெற்றத் தேர், யானை, வேலியிட்ட மரம், குடை, வேல், விலங்கு, மரம் போன்றனவற்றுள் ஒன்றா சிலவோ பொறிக்கப்பெற்றுள்ளன என்பதனை அறியமுடிகின்றது. சோழர் காசுகளில் எழுத்துப்பொறிப்புகள் உடைய காசுகள் இதுவரை கிடைக்கப்பெறவில்லை.63 இதுவரை கிடைக்கப்பெற்றுள்ள சங்கச் சோழர்களின் காசுகளின் காலம் பொ.யு.மு. இரண்டாம் நூற்றாண்டு முதல் பொ.யு.மு. முதல் நூற்றாண்டு வரையில் என்று கணித்துள்ளனர்.
தமிழகத்தில் அயல்நாட்டு நாணயங்கள்
பழந்தமிழகத்தின் அயல் வாணிபக் களமாகத் திகழ்ந்த பூம்புகார், முசிறி, கொற்கை, கொல்லத்துறை, எயிற்பட்டினம், தொண்டி, மருங்கூர்ப்பட்டினம், பந்தர், கொடுமணம், தரங்கம்பாடி, நீர்க்குன்றம், புதுச்சேரி, நீர்ப்பெயற்று ஆகிய இடங்களில் அருகாமையில் அயல் நாணயங்கள் புதையுண்டிருக்க வாய்ப்புகள் மிகுதி. 64
பொ.யு.மு. 350ஆம் ஆண்டுக்கும் பொ.யு.மு. 100 ஆம் ஆண்டுக்கும் இடைப்பட்ட காலத்தைச் சார்ந்த கிரேக்க நாணயங்கள் 50-க்கும் மேற்பட்டவை கரூர் ஆற்றுப்படுகையில் கண்டெடுக்கப்பெற்றுள்ளன. இவ் ஆற்றுப்பகுதியில் திரேஸ், கிரீஸ், கீரீட், ரோட்ஸ், சிரியா, பொனீசிய (லெபனான்), பிலிஸ்தியா, அஸ்கலோன், எதியோப்பியா, சூடான், ஜூடேயா, ஆகிய நாட்டு நாணயங்கள் சில கிடைத்துள்ளன. இவற்றுள் சில தங்க நாணயங்கள். இவற்றின் காலம் பொ.யு.மு. முதல் நூற்றாண்டாகும்.
ரோம் நாட்டு நாணயங்கள் கரூர், கோவை (கத்தாங்கன்னி, குருத்துப்பாளையம், பெண்ணார், வெள்ளலூர், பொள்ளாச்சி), ஈரோடு போன்ற ஊர்களில் கிடைக்கப்பெற்றுள்ளன. பாண்டிய நாட்டிலுள்ள மதுரை கலயம் புத்தூர், நெல்லை கரிவலம் வந்தநல்லூர், சோழ நாட்டில் உள்ள பூம்புகார், தஞ்சாவூர், தொண்டை நாட்டில் உள்ள மாமல்லபுரம், மாம்பலம், கடலூர் ஆகிய பகுதிகளிலும் கிடைக்கப்பெற்றுள்ளன. பொ.யு. 54ஆம் ஆண்டு முதல் 68ஆம் ஆண்டு வரையில் ரோமை ஆண்ட நீரோ மன்னரின் காலத்தில் ரோம் நாணயங்களில் போலிகள் (கள்ளக் காசுகள்) ஊடுறுவின. இதனால் தமிழக வணிகர்கள் ரோம நாணயங்களை சந்தேகக் கண்ணுடன் பார்த்தனர்.
பொ.யு.மு. ஆறாம் நூற்றாண்டிலிருந்தே சீனா, தமிழகத்துடன் வாணிபத்தொடர்பு கொண்டிருந்தபோதும் தமிழகப் பகுதியில் இதுவரை பொ.யு. இரண்டாம் நூற்றாண்டுக்கு முந்தைய சீனாக்காசுகள் (சீனக்கனகம்) கிடைக்கவில்லை.65 பொ.யு.மு. இரண்டாம் நூற்றாண்டின் சீன நாணயம் தஞ்சாவூரில் கிடைக்கப்பெற்றுள்ளது. மேலும்,பட்டுக்கோட்டை வட்டம் ஒலயக் குன்னம் என்ற ஊரிலும்மன்னார்குடி வட்டத்திலுள்ள தாலிக்கோட்டை என்ற கிராமத்திலும் சீன நாணயங்கள் மிகுதியாகக் கிடைத்துள்ளன.
ஒரு பழங்காசினைக் கொண்டு வரலாற்றுச் செய்திகள் பலவற்றை அறிந்துகொள்ளமுடியும். அக்காசு கண்டெடுக்கப்பெற்ற இடத்தினையும் அக்காசில் உள்ள குறிகளையும் கொண்டு அக்காசினை வெளியிட்ட பேரரசின் எல்லைகளும் பரப்பும், அப்பேரரசின் பொருளாதாரம், வணிபத்தொர்புகள், அப்பேரரசரின் மரபுவரிசைநிலை, எழுத்துவடிவம், சமயப்பற்று, சடங்குகள் இன்ன பிறவற்றையும் கணிக்க முடியும்.
முனைவர் ப. சரவணன்
[You must be registered and logged in to see this image.]
[You must be registered and logged in to see this image.]
[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|