ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:54 pm

» கருத்துப்படம் 17/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:29 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Yesterday at 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Yesterday at 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Yesterday at 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Yesterday at 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Yesterday at 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Yesterday at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

அழகை அள்ளிக் கொள்ள ஆசை!

Go down

அழகை அள்ளிக் கொள்ள ஆசை! Empty அழகை அள்ளிக் கொள்ள ஆசை!

Post by சிவா Mon Apr 20, 2015 10:47 pm

அழகை அள்ளிக் கொள்ள ஆசை! 201504201401503019_Beauty-Take-Desire_SECVPFபெண்கள் அவசரமாக எங்கே கிளம்பிப்போனாலும், அதற்குள் ஒருமுறை கண்ணாடி முன்பு நின்று 'முகத்தில் பவுடர் சரியாக பூசப்பட்டிருக்கிறதா? துல்லியமாக கண்மை இட்டு, பொட்டு பொருத்தமாக அமைந்திருக்கிறதா?' என்றெல்லாம் ஒரு பார்வை பார்த்துவிட்டுத்தான், வெளியே கிளம்புகிறார்கள். எல்லாம் சரியாக இருந்தால்தான் முகத்தில் தன்னம்பிக்கையும், மகிழ்ச்சியும் தவழும். சின்ன குறைபாடு தெரிந்தாலே எல்லாமே 'பொசுக்'கென்று போனதுபோல் இருக்கும்.

முன்பெல்லாம் 'ஐபுரோ' செய்யவும், பேஷியல் செய்யவும் குறிப்பிட்ட வயதை நிர்ணயித்திருந்தார்கள். இளம் வயதில் அவை எதற்கு என்று நினைத்தார்கள். இன்றைய நிலை அதுவல்ல, அழகாக தோன்ற இளம் வயதிலே பிளாஸ்டிக் சர்ஜரி வரை போய்விடுகிறார்கள். 40 வயதைக் கடந்துவிட்டால் எதை செய்தாவது இளமையோடு தோன்றவேண்டும் என்ற முடிவுக்கு வந்துவிடுகிறார்கள்.

அழகில் அதிக அக்கறை எடுத்துக்கொண்டு அதைத் தேடி செல்லும்போது சில நேரங்களில் அபத்தங்களும் ஏற்படத்தான் செய்கின்றன. முகத்திற்கான கிரீமை அடிக்கடி மாற்றிக்கொண்டே இருப்பார்கள். எது நன்றாக அமையுமோ அதை தேர்ந்தெடுத்துவிடலாமே என்று நினைப்பார்கள். ஆனால் எதுவும் சரியாக அமையாமல், இருக்கிற அழகையும் கெடுத்துவிடுவதுண்டு. சரியான மேக்-அப் பொருட்களை தேர்ந்தெடுத்து வாங்கினால் மட்டும் போதாது. அவற்றை எந்த அளவில், எப்படி பயன்படுத்தவேண்டும் என்றும் தெரிய வேண்டும். இளம் பெண் 'ஓவர் மேக்-அப்' செய்துவிட்டால் அதுவும் சரிவராது. நடுத்தர வயது பெண் கிலிட்டர் மேக்-அப் செய்தாலும் அது அபத்தமாகிவிடக்கூடும்.

நல்ல கலரான பெண்களை பார்க்கும்போது நாமும் அதுபோல் ஆகவேண்டும் என்ற ஆசை சில பெண்களுக்கு ஏற்படும். அந்த ஆசை தவறானதல்ல. ஆனால் அதற்காக கடைபிடிக்கும் வழிமுறை தவறாகிவிடக்கூடாது. கலராக தோன்ற விரும்புகிறவர்கள் இளம் நிறத்திலான பவுண்ட்டேஷனை முகத்தில் நிறைய பூசிவிடுவார்கள். அந்த நிகழ்ச்சியில் எடுத்த போட்டோக்களை பார்க்கும்போதுதான் வாரி பூசியிருப்பது தெரியவரும்.

பவுண்ட்டேஷன் தேர்ந்தெடுக்கும்போது மிகுந்த கவனம் தேவை. சருமத்திற்கு பொருத்தமானதை பரிசோதனை செய்து பார்த்து வாங்கவேண்டும். கை மணிக்கட்டில் புரட்டிப்பார்த்து சோதிக்காமல், முகத்தின் ஏதாவது ஒரு பகுதியில் பூசிப்பார்த்து வாங்குவதே சரியானது.

முகத்திற்கு கணக்கில்லாமல் பவுடர் அடித்துவிட்டு வரும் சிலரை அன்றாடம் சந்திக்கிறோம். சிறிது நேரம் கடந்ததும் முகத்தில் ஒட்டிப்பிடித்தபடி இருக்கும்.

எண்ணெய்த்தன்மை கொண்ட சருமம் உடையவர்கள்தான் முகத்திற்கு அதிகம் பவுடர் பூசுவார்கள். அளவுக்கு அதிகமாக பவுடர் பூசும்போது சருமம் வறண்டு, பார்க்க அழகற்றதாகிவிடும். இயல்பான ஜொலிப்பும் இல்லாமல் போய்விடும். அதனால் அதிகமாக பவுடர் பூச விரும்புகிறவர்கள், பவுடருக்கு பதில் காம்பாக்ட் பயன்படுத்தவேண்டும்.

இன்றைய இளம்பெண்கள் தங்கள் கண்களை அழகுபடுத்துவதற்குதான் அதிக நேரத்தை செலவிடுகிறார்கள். முதலில் புருவத்தில் கவனம் செலுத்துகிறார்கள். புருவ முடிகள் எளிதாக ஒரு அமைப்புக்குள் வருவதில்லை. புருவ முடிகள் கட்டுக்குள் வராவிட்டால் புரோஷேப்பர், புரோ ஜெல், வாஸ்லின் போன்ற ஏதாவது ஒன்றை பயன்படுத்தி அதை சரிசெய்யலாம். வளர்ந்து நிற்கும் சிறிய ரோமங்களை ட்ரிம் செய்யவோ டீசர் மூலம் நீக்கவோ செய்யலாம். அடர்த்தியான புருவமாக இருந்தால் அதே நிறத்திலான ஐபுரோ பென்சில் மூலம் லைட் ஷேடு கொடுத்தால் போதும்.

கண்களை பெரிதாகவும், அழகாகவும் காட்ட இமைகளை ஜொலிக்க செய்கிறார்கள். இதற்கு ஐலாஷ்கேலர் பயன்படுத்தலாம். கேல் செய்த பின்பு மஸ்காரா போடவேண்டும். வெள்ளை நிறம் கொண்டவர்களுக்கு பிங்க், ப்ளூ, லாவண்டர் போன்ற நிறங்கள் பொருந்தும். கண்ணாடி பயன்படுத்துகிறவர்கள் கண்ணாடி பிரேமுக்கு பொருத்தமாக ஐஷேடோ போடவேண்டும். பிரேம் நிறத்தைவிட லைட் கலராக இருப்பது நல்லது.

உதடுகள் இயற்கையிலே பேரழகு கொண்டவை. அதற்கு மேலும் அழகு கொடுக்க விரும்புகிறவர்கள் ஒரு சொட்டு லிப்குளோஸ் போட்டால் போதும். கண்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து மேக்-அப் செய்திருந்தால் உதடுகளுக்கு இளம் நிற லிப்குளோஸ் பொருத்தமாக இருக்கும். இளம் வயதுகொண்டவர்கள் கிளீயர் கோட் பூசி உதட்டு அழகை மேம்படுத்தலாம். லிப்ஸ்டிக் பயன்படுத்துகிறவர்கள் அதே ஷேடு கொண்ட லிப்லைனர் பயன்படுத்தவேண்டும். உதடுகளை ஜொலிக்கவைக்க அடர் நிறத்தில் உள்ள லிப்ஸ்டிக்கை பலர் பயன்படுத்துகிறார்கள். ஆனால் அது வயதை அதிகரித்துக்காட்டிவிடும்.

30 வயதாகும்போதே 'இளமை போய்விடுமோ!' என்ற கவலை நிறைய பெண்களுக்கு ஏற்பட்டுவிடுகிறது. அழகை நினைத்து அவர்கள் டென்ஷனாகி விடுகிறார்கள். அப்போது தங்கள் தன்னம்பிக்கையை அதிகரித்துக்கொள்வதற்காக அதிக அளவு மேக்-அப் செய்துவிடுகிறார்கள். குழம்பில் உப்பு அதிகரித்தாலும், காரம் அதிகரித்தாலும் என்ன விளைவு ஏற்படுமோ அதுபோன்றதுதான் மேக்-அப்பில் ஏற்படும் குளறுபடிகளும். முகத்திற்கு கிரீம்களை அளவோடு பயன்படுத்தவேண்டும். அடுத்தவர்கள் பார்க்கும்போது 'மேக்-அப் போட்டிருக்கிறாளா.. இல்லையா?' என்று தோன்றும் விதத்தில் அமைந்திருக்கவேண்டும். மேக்-அப் ஒரு கலை. அதை கவனமாக செய்தால் மட்டுமே அழகு அதிகரிக்கும்.


அழகை அள்ளிக் கொள்ள ஆசை! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum