புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Today at 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Today at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இளமையைக் காக்கும் கரிசலாங்கண்ணி I_vote_lcapஇளமையைக் காக்கும் கரிசலாங்கண்ணி I_voting_barஇளமையைக் காக்கும் கரிசலாங்கண்ணி I_vote_rcap 
92 Posts - 61%
heezulia
இளமையைக் காக்கும் கரிசலாங்கண்ணி I_vote_lcapஇளமையைக் காக்கும் கரிசலாங்கண்ணி I_voting_barஇளமையைக் காக்கும் கரிசலாங்கண்ணி I_vote_rcap 
39 Posts - 26%
வேல்முருகன் காசி
இளமையைக் காக்கும் கரிசலாங்கண்ணி I_vote_lcapஇளமையைக் காக்கும் கரிசலாங்கண்ணி I_voting_barஇளமையைக் காக்கும் கரிசலாங்கண்ணி I_vote_rcap 
10 Posts - 7%
mohamed nizamudeen
இளமையைக் காக்கும் கரிசலாங்கண்ணி I_vote_lcapஇளமையைக் காக்கும் கரிசலாங்கண்ணி I_voting_barஇளமையைக் காக்கும் கரிசலாங்கண்ணி I_vote_rcap 
7 Posts - 5%
sureshyeskay
இளமையைக் காக்கும் கரிசலாங்கண்ணி I_vote_lcapஇளமையைக் காக்கும் கரிசலாங்கண்ணி I_voting_barஇளமையைக் காக்கும் கரிசலாங்கண்ணி I_vote_rcap 
1 Post - 1%
viyasan
இளமையைக் காக்கும் கரிசலாங்கண்ணி I_vote_lcapஇளமையைக் காக்கும் கரிசலாங்கண்ணி I_voting_barஇளமையைக் காக்கும் கரிசலாங்கண்ணி I_vote_rcap 
1 Post - 1%
eraeravi
இளமையைக் காக்கும் கரிசலாங்கண்ணி I_vote_lcapஇளமையைக் காக்கும் கரிசலாங்கண்ணி I_voting_barஇளமையைக் காக்கும் கரிசலாங்கண்ணி I_vote_rcap 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
இளமையைக் காக்கும் கரிசலாங்கண்ணி I_vote_lcapஇளமையைக் காக்கும் கரிசலாங்கண்ணி I_voting_barஇளமையைக் காக்கும் கரிசலாங்கண்ணி I_vote_rcap 
284 Posts - 45%
heezulia
இளமையைக் காக்கும் கரிசலாங்கண்ணி I_vote_lcapஇளமையைக் காக்கும் கரிசலாங்கண்ணி I_voting_barஇளமையைக் காக்கும் கரிசலாங்கண்ணி I_vote_rcap 
236 Posts - 37%
mohamed nizamudeen
இளமையைக் காக்கும் கரிசலாங்கண்ணி I_vote_lcapஇளமையைக் காக்கும் கரிசலாங்கண்ணி I_voting_barஇளமையைக் காக்கும் கரிசலாங்கண்ணி I_vote_rcap 
32 Posts - 5%
Dr.S.Soundarapandian
இளமையைக் காக்கும் கரிசலாங்கண்ணி I_vote_lcapஇளமையைக் காக்கும் கரிசலாங்கண்ணி I_voting_barஇளமையைக் காக்கும் கரிசலாங்கண்ணி I_vote_rcap 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
இளமையைக் காக்கும் கரிசலாங்கண்ணி I_vote_lcapஇளமையைக் காக்கும் கரிசலாங்கண்ணி I_voting_barஇளமையைக் காக்கும் கரிசலாங்கண்ணி I_vote_rcap 
19 Posts - 3%
prajai
இளமையைக் காக்கும் கரிசலாங்கண்ணி I_vote_lcapஇளமையைக் காக்கும் கரிசலாங்கண்ணி I_voting_barஇளமையைக் காக்கும் கரிசலாங்கண்ணி I_vote_rcap 
12 Posts - 2%
Rathinavelu
இளமையைக் காக்கும் கரிசலாங்கண்ணி I_vote_lcapஇளமையைக் காக்கும் கரிசலாங்கண்ணி I_voting_barஇளமையைக் காக்கும் கரிசலாங்கண்ணி I_vote_rcap 
8 Posts - 1%
Guna.D
இளமையைக் காக்கும் கரிசலாங்கண்ணி I_vote_lcapஇளமையைக் காக்கும் கரிசலாங்கண்ணி I_voting_barஇளமையைக் காக்கும் கரிசலாங்கண்ணி I_vote_rcap 
7 Posts - 1%
T.N.Balasubramanian
இளமையைக் காக்கும் கரிசலாங்கண்ணி I_vote_lcapஇளமையைக் காக்கும் கரிசலாங்கண்ணி I_voting_barஇளமையைக் காக்கும் கரிசலாங்கண்ணி I_vote_rcap 
7 Posts - 1%
mruthun
இளமையைக் காக்கும் கரிசலாங்கண்ணி I_vote_lcapஇளமையைக் காக்கும் கரிசலாங்கண்ணி I_voting_barஇளமையைக் காக்கும் கரிசலாங்கண்ணி I_vote_rcap 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இளமையைக் காக்கும் கரிசலாங்கண்ணி


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Apr 20, 2015 10:37 pm

இளமையைக் காக்கும் கரிசலாங்கண்ணி 201504201506354474_Youthful-active-Karicalankanni_SECVPF

கரிசலாங்கண்ணி கீரை ஈரமான நிலத்தில் வளரும் இயல்புடையது. வயல் வரப்புகளில் அதிகமாக தோன்றும் இதில் இரு வகை உண்டு. ஒன்று மஞ்சள் நிறத்திலும், இன்னொன்று வெள்ளை நிறத்திலும் பூ பூக்கும். இரண்டுமே மருத்துவ குணங்கள் நிறைந்தது.

இந்த கீரையில் தங்கச் சத்து உள்ளதால், இதை பொற்றிலை என்றும் பொற்கொடி என்றும் அழைக்கிறார்கள். இது ஒரு காயகற்ப மூலிகை. தினமும் இதை உணவில் பயன்படுத்தலாம்.

இது கல்லீரல், மண்ணீரல், சிறுநீரகத்தை தூய்மை செய்யும். சுரப்பிகளை செயல்பட தூண்டும். உடலை உறுதிப்படுத்தும். இரும்புச்சத்தும், ஏராளமான தாதுசத்துகளும் இந்த கீரையில் உள்ளன.

நீரிழிவு நோயை கட்டுப்படுத்தும். சளி, இருமலை குணமாக்கும். அஜீரணம், வயிற்றுவலி, குடல்புண், ரத்தசோகை, பித்தப்பை கற்கள் போன்றவற்றை போக்கும். உடலில் சேரும் அதிகமான கொழுப்பை கரைக்கும் சக்தியும் இருக்கிறது. மஞ்சள் காமாலை நோய்க்கு கரிசலாங்கண்ணி, கீழாநெல்லி இலை இரண்டையும் சம அளவு எடுத்து, அரைத்து ஒரு நெல்லிக்காய் அளவு 50 மி.லி பசும்பாலில் கலந்து ஏழு நாட்கள் குடித்தால் நோய் குணமாகும். ஈரல் வீக்கம் குறையும், பத்தியம் இருக்க வேண்டும். புளி, காரம் மற்றும் எண்ணெய் கலந்த உணவுகளை சாப்பிடக்கூடாது.

கண், முகம் வெளுத்து, கை, கால், மற்றும் பாதங்கள் வீங்கி சிறுநீர் தடையுடன் சிலருக்கு கடுமையான ரத்தசோகை ஏற்படும். அதற்கு ஒரு கைப்பிடி அளவு கரிசலாங்கண்ணி கீரையை எடுத்து, ஐந்து மிளகு சேர்த்து அரைத்து, ஒரு நெல்லிக்காய் அளவு தினமும் காலை சாப்பிட்டால் ரத்த சோகை படிப்படியாக குறைய ஆரம்பிக்கும்.

குழந்தைகளுக்கு ஏற்படும் சளி, இருமலுக்கு கரிசலாங்கண்ணி சாறு பத்து சொட்டும், தேன் 10 சொட்டும் கலந்து வெந்நீரில் சேர்த்து கொடுக்கவேண்டும்.

கரிசலாங்கண்ணி சாறு 100 மி.லி, நல்லெண்ணெய் 100 மி.லி, அதிமதுரம் 10 கிராம் போன்றவைகளை சேர்த்து காய்ச்சி, 5 மி.லி வீதம் காலையும், மாலையும் சாப்பிட்டால் சளி, இருமல் மற்றும் குரல் கம்மல் குணமாகும்.

இதனை தலைக்கு தேய்த்தால் தலைநோய், தூக்கமின்மை நீங்கும். கண்பார்வை அதிகரிக்கும். முடி உதிர்தல் நீங்கி முடி ஆரோக்கியமாக வளரும்.

இந்த கீரையை ஒரு கைப்பிடி அளவு எடுத்து, மென்று பல்துலக்கி வந்தால் பற்கள் நல்ல வெண்மை நிறமடையும். ஈறுகள் பலப்படும். அதன் சாற்றை நாக்கு, உள்நாக்கில் மேலும், கீழும் விரல்களால் தேய்த்துவந்தால் மூக்கு, தொண்டை பகுதியில் உள்ள கபம் வெளியேறும்.

இவ்வாறு செய்யும்போது உடலில் பித்தம் அதிகமாக இருந்தால் வாந்தியாக வெறியேறி விடும். இதனால் ஜீரண உறுப்புகள் தூய்மை அடைந்து கல்லீரல், மண்ணீரல், கணையம் போன்றவை நன்றாக வேலை செய்யும்.

சுவாசப்பை கழிவுகள் மற்றும் சிறுநீரகத்தில் உள்ள யூரியா போன்ற கழிவுகளையும் கரிசலாங்கண்ணி நீக்கும். ஒற்றை தலைவலியால் துன்பப்படுகிறவர்கள் இந்த கீரையை மென்று உள்நாக்கில் தேய்க்கவேண்டும். இதன் மூலம் பித்தம் நீங்கி தலைவலி அகலும்.

மேற்கண்டவாறு தினமும் கீரையை மென்று பல்துலக்குவது தந்த சுத்தி என்றழைக்கப்படுகிறது.

பச்சையாக கீரை கிடைக்காதவர்கள் ஒருதேக்கரண்டி கீரை பொடியை கொண்டும் தந்த சுத்தி செய்யலாம்.

கரிசலாங்கண்ணியை கொண்டு பல்வேறு மருந்துகள் தயார் செய்யப்படுகிறது. கூந்தல் தைலங்களிலும் இதன் சாறு சேர்க்கப்படுகிறது. இந்த கீரையை தினமும் உணவில் சேர்த்தால் என்றும் இளமையுடன் திகழலாம்.



இளமையைக் காக்கும் கரிசலாங்கண்ணி Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Apr 20, 2015 10:38 pm

கீரை பால்

கரிசலாங்கண்ணி கீரை பொடி - 100 கிராம்
முசுமுசுக்கை பொடி- 25 கிராம்
தூதுவளை பொடி - 25 கிராம்
சீரகம் பொடி-25 கிராம்
பனங்கற்கண்டு - தேவைக்கு
பால்-200 மி.லி

செய்முறை: எல்லா வகை பொடிகளையும் ஒன்றாக்கவும். அவற்றை 100 மி.லி நீரில் கலந்து கொதிக்கவைத்து வடிக்கட்டிக் கொள்ளுங்கள். அத்துடன் பாலை சூடாக்கி ஊற்றுங்கள். பனங்கற்கண்டு சேர்த்து பருகுங்கள்.

இந்த பானத்தை காலையில் காபி, டீக்கு பதில் சாப்பிட்டு வரலாம். இது கல்லீரலை பலப்படுத்தி, ஜீரண உறுப்புகளை நன்றாக இயங்கச் செய்யும்.



இளமையைக் காக்கும் கரிசலாங்கண்ணி Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Apr 20, 2015 10:39 pm

கீரை கூட்டு

கரிசலாங்கண்ணி கீரை -1 கட்டு
சின்ன வெங்காயம்-100 கிராம்
சீரகம்-1 தேக்கரண்டி
வேகவைத்த துவரம் பருப்பு-3மேஜைகரண்டி
மிளகு- 1 தேக்கரண்டி
உப்பு- தேவைக்கு

செய்முறை: கீரையை சுத்தம் செய்து சிறிதாக நறுக்கிக்கொள்ளுங்கள். சிறிய வெங்காயத்தையும் நறுக்குங்கள். வாணலியில் எண்ணெய் ஊற்றி சீரகம், மிளகு தாளித்து நறுக்கி வைத்துள்ள வெங்காயம் மற்றும் கீரையை கொட்டி வதக்கி, நீர் தெளித்து வாணலியை மூடி சிறு தீயில் வேக வையுங்கள். துவரம் பருப்பு, உப்பு சேர்த்து வெந்ததும் இறக்குங்கள்.

இதை சூடான சாதத்துடன் கலந்து சாப்பிட்டால் கல்லீரல் நன்கு வேலை செய்யும், ரத்த ஓட்டம் அதிகரிக்கும். ரத்த சோகை நீங்கும்.




இளமையைக் காக்கும் கரிசலாங்கண்ணி Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Apr 20, 2015 10:40 pm


துவையல்

கரிசலாங்கண்ணி கீரை-2 கைப்பிடி
காய்ந்த மிளகாய்-2
உளுத்தம் பருப்பு -1 தேக்கரண்டி
மிளகு - 1/2 தேக்கரண்டி
புளி- சிறிய எலுமிச்சை அளவு
நல்லெண்ணெய் -2 தேக்கரண்டி
உப்பு -தேவைக்கு

செய்முறை: வாணலியில் எண்ணெய் ஊற்றி உளுத்தம் பருப்பு, மிளகு, காய்ந்த மிளகாய், புளி ஆகியவற்றை போட்டு நன்றாக வதக்கி எடுக்கவும். அத்தோடு கீரையை நறுக்கிப்போட்டு கிளறுங்கள். அடுப்பில் இருந்து இறக்கி, ஆறிய பின்பு அரைத்து உப்பு சேருங்கள்.

இதை சூடான சாதத்துடன் கலந்து, நெய்யும் சேர்த்து சாப்பிடலாம். இட்லி, தோசைக்கு தொட்டுக்கொள்ளலாம். தலைமுடி உதிர்தல், இளவயதில் தோன்றும் நரை போன்ற பிரச்சினை உள்ளவர்களுக்கு இது நல்ல பலனைத்தரும்.





இளமையைக் காக்கும் கரிசலாங்கண்ணி Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Apr 20, 2015 10:40 pm

சத்து பானம்

கீரை பெரிய கட்டு -1
நாட்டு சர்க்கரை- 400 கிராம்
பாதாம் பருப்பு-50 கிராம்
பிஸ்தா பருப்பு-50 கிராம்
சாரை பருப்பு-50 கிராம்
முந்திரி பருப்பு-50 கிராம்

செய்முறை: கரிசலாங்கண்ணி கீரையை நறுக்கி அரையுங்கள். அதில் சிறிதளவு நீர் கலந்து வடிகட்டி சாறு எடுத்துக்கொள்ளுங்கள்.

500 மி.லி. சாற்றில் நாட்டு சர்க்கரையை கலந்து நன்கு கொதிக்க வையுங்கள். கொதித்து வரும்போது நீர் சுண்டி பச்சை நிறத்தில் சர்க்கரை போல படியும். அதை சேகரித்து ஆற வைத்து, அத்துடன் மேலே சொன்ன பருப்புகளை தூளாக்கி சேர்க்கவும்.

இதில் ஒரு தேக்கரண்டி எடுத்து, பாலில் கலந்து குடித்தால் ரத்தசோகை நீங்கும். இளநரை போகும். தலைமுடிசெழித்து வளரும். கரிசலாங்கண்ணியில் கரோட்டின் சத்து அதிகம் உள்ளதால் கண்பார்வை மேம்படும்.

டாக்டர் இரா. பத்மப்ரியா (சித்த மருத்துவர்)



இளமையைக் காக்கும் கரிசலாங்கண்ணி Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Apr 20, 2015 10:57 pm

நல்ல பகிர்வு சிவா , எங்கள் வீட்டில் முன்பு மஞ்சள் கரிசலாங்கண்ணி இருந்தது ....ஒரு உப்புக்கல் வைத்து வெறும் வைற்றில் சாப்பிட சொல்வா எங்க அம்மா புன்னகை .அந்த கீரை இல் பொரித்த கூட்டு செய்வார்கள் புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்

பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Postமாணிக்கம் நடேசன் Tue Apr 21, 2015 2:44 pm

நல்ல தவளைகளுக்கு, சாரி தகவல்களுக்கு மிக்க நன்றி மாமா அங்கள்.


கோ. செந்தில்குமார்
கோ. செந்தில்குமார்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 332
இணைந்தது : 03/04/2014
http://www.aanmeegachudar.blogspot.in

Postகோ. செந்தில்குமார் Tue Apr 21, 2015 4:53 pm

கரிசாலை என்றொரு பெயரும் இதற்குண்டு. இது ஒரு கற்ப மூலிகை. எந்த வகையில் உட்கொண்டாலும் இளமையைக் காக்கும்...!

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக