Latest topics
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)by ayyasamy ram Yesterday at 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:54 pm
» கருத்துப்படம் 17/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:29 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Yesterday at 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Yesterday at 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Yesterday at 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Yesterday at 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Yesterday at 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Yesterday at 7:30 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm
» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm
» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm
» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm
» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm
» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm
» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm
» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm
» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm
» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm
» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm
Top posting users this month
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D | ||||
வேல்முருகன் காசி | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
இளமையைக் காக்கும் கரிசலாங்கண்ணி
4 posters
Page 1 of 1
இளமையைக் காக்கும் கரிசலாங்கண்ணி
கரிசலாங்கண்ணி கீரை ஈரமான நிலத்தில் வளரும் இயல்புடையது. வயல் வரப்புகளில் அதிகமாக தோன்றும் இதில் இரு வகை உண்டு. ஒன்று மஞ்சள் நிறத்திலும், இன்னொன்று வெள்ளை நிறத்திலும் பூ பூக்கும். இரண்டுமே மருத்துவ குணங்கள் நிறைந்தது.
இந்த கீரையில் தங்கச் சத்து உள்ளதால், இதை பொற்றிலை என்றும் பொற்கொடி என்றும் அழைக்கிறார்கள். இது ஒரு காயகற்ப மூலிகை. தினமும் இதை உணவில் பயன்படுத்தலாம்.
இது கல்லீரல், மண்ணீரல், சிறுநீரகத்தை தூய்மை செய்யும். சுரப்பிகளை செயல்பட தூண்டும். உடலை உறுதிப்படுத்தும். இரும்புச்சத்தும், ஏராளமான தாதுசத்துகளும் இந்த கீரையில் உள்ளன.
நீரிழிவு நோயை கட்டுப்படுத்தும். சளி, இருமலை குணமாக்கும். அஜீரணம், வயிற்றுவலி, குடல்புண், ரத்தசோகை, பித்தப்பை கற்கள் போன்றவற்றை போக்கும். உடலில் சேரும் அதிகமான கொழுப்பை கரைக்கும் சக்தியும் இருக்கிறது. மஞ்சள் காமாலை நோய்க்கு கரிசலாங்கண்ணி, கீழாநெல்லி இலை இரண்டையும் சம அளவு எடுத்து, அரைத்து ஒரு நெல்லிக்காய் அளவு 50 மி.லி பசும்பாலில் கலந்து ஏழு நாட்கள் குடித்தால் நோய் குணமாகும். ஈரல் வீக்கம் குறையும், பத்தியம் இருக்க வேண்டும். புளி, காரம் மற்றும் எண்ணெய் கலந்த உணவுகளை சாப்பிடக்கூடாது.
கண், முகம் வெளுத்து, கை, கால், மற்றும் பாதங்கள் வீங்கி சிறுநீர் தடையுடன் சிலருக்கு கடுமையான ரத்தசோகை ஏற்படும். அதற்கு ஒரு கைப்பிடி அளவு கரிசலாங்கண்ணி கீரையை எடுத்து, ஐந்து மிளகு சேர்த்து அரைத்து, ஒரு நெல்லிக்காய் அளவு தினமும் காலை சாப்பிட்டால் ரத்த சோகை படிப்படியாக குறைய ஆரம்பிக்கும்.
குழந்தைகளுக்கு ஏற்படும் சளி, இருமலுக்கு கரிசலாங்கண்ணி சாறு பத்து சொட்டும், தேன் 10 சொட்டும் கலந்து வெந்நீரில் சேர்த்து கொடுக்கவேண்டும்.
கரிசலாங்கண்ணி சாறு 100 மி.லி, நல்லெண்ணெய் 100 மி.லி, அதிமதுரம் 10 கிராம் போன்றவைகளை சேர்த்து காய்ச்சி, 5 மி.லி வீதம் காலையும், மாலையும் சாப்பிட்டால் சளி, இருமல் மற்றும் குரல் கம்மல் குணமாகும்.
இதனை தலைக்கு தேய்த்தால் தலைநோய், தூக்கமின்மை நீங்கும். கண்பார்வை அதிகரிக்கும். முடி உதிர்தல் நீங்கி முடி ஆரோக்கியமாக வளரும்.
இந்த கீரையை ஒரு கைப்பிடி அளவு எடுத்து, மென்று பல்துலக்கி வந்தால் பற்கள் நல்ல வெண்மை நிறமடையும். ஈறுகள் பலப்படும். அதன் சாற்றை நாக்கு, உள்நாக்கில் மேலும், கீழும் விரல்களால் தேய்த்துவந்தால் மூக்கு, தொண்டை பகுதியில் உள்ள கபம் வெளியேறும்.
இவ்வாறு செய்யும்போது உடலில் பித்தம் அதிகமாக இருந்தால் வாந்தியாக வெறியேறி விடும். இதனால் ஜீரண உறுப்புகள் தூய்மை அடைந்து கல்லீரல், மண்ணீரல், கணையம் போன்றவை நன்றாக வேலை செய்யும்.
சுவாசப்பை கழிவுகள் மற்றும் சிறுநீரகத்தில் உள்ள யூரியா போன்ற கழிவுகளையும் கரிசலாங்கண்ணி நீக்கும். ஒற்றை தலைவலியால் துன்பப்படுகிறவர்கள் இந்த கீரையை மென்று உள்நாக்கில் தேய்க்கவேண்டும். இதன் மூலம் பித்தம் நீங்கி தலைவலி அகலும்.
மேற்கண்டவாறு தினமும் கீரையை மென்று பல்துலக்குவது தந்த சுத்தி என்றழைக்கப்படுகிறது.
பச்சையாக கீரை கிடைக்காதவர்கள் ஒருதேக்கரண்டி கீரை பொடியை கொண்டும் தந்த சுத்தி செய்யலாம்.
கரிசலாங்கண்ணியை கொண்டு பல்வேறு மருந்துகள் தயார் செய்யப்படுகிறது. கூந்தல் தைலங்களிலும் இதன் சாறு சேர்க்கப்படுகிறது. இந்த கீரையை தினமும் உணவில் சேர்த்தால் என்றும் இளமையுடன் திகழலாம்.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: இளமையைக் காக்கும் கரிசலாங்கண்ணி
கீரை பால்
கரிசலாங்கண்ணி கீரை பொடி - 100 கிராம்
முசுமுசுக்கை பொடி- 25 கிராம்
தூதுவளை பொடி - 25 கிராம்
சீரகம் பொடி-25 கிராம்
பனங்கற்கண்டு - தேவைக்கு
பால்-200 மி.லி
செய்முறை: எல்லா வகை பொடிகளையும் ஒன்றாக்கவும். அவற்றை 100 மி.லி நீரில் கலந்து கொதிக்கவைத்து வடிக்கட்டிக் கொள்ளுங்கள். அத்துடன் பாலை சூடாக்கி ஊற்றுங்கள். பனங்கற்கண்டு சேர்த்து பருகுங்கள்.
இந்த பானத்தை காலையில் காபி, டீக்கு பதில் சாப்பிட்டு வரலாம். இது கல்லீரலை பலப்படுத்தி, ஜீரண உறுப்புகளை நன்றாக இயங்கச் செய்யும்.
கரிசலாங்கண்ணி கீரை பொடி - 100 கிராம்
முசுமுசுக்கை பொடி- 25 கிராம்
தூதுவளை பொடி - 25 கிராம்
சீரகம் பொடி-25 கிராம்
பனங்கற்கண்டு - தேவைக்கு
பால்-200 மி.லி
செய்முறை: எல்லா வகை பொடிகளையும் ஒன்றாக்கவும். அவற்றை 100 மி.லி நீரில் கலந்து கொதிக்கவைத்து வடிக்கட்டிக் கொள்ளுங்கள். அத்துடன் பாலை சூடாக்கி ஊற்றுங்கள். பனங்கற்கண்டு சேர்த்து பருகுங்கள்.
இந்த பானத்தை காலையில் காபி, டீக்கு பதில் சாப்பிட்டு வரலாம். இது கல்லீரலை பலப்படுத்தி, ஜீரண உறுப்புகளை நன்றாக இயங்கச் செய்யும்.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: இளமையைக் காக்கும் கரிசலாங்கண்ணி
கீரை கூட்டு
கரிசலாங்கண்ணி கீரை -1 கட்டு
சின்ன வெங்காயம்-100 கிராம்
சீரகம்-1 தேக்கரண்டி
வேகவைத்த துவரம் பருப்பு-3மேஜைகரண்டி
மிளகு- 1 தேக்கரண்டி
உப்பு- தேவைக்கு
செய்முறை: கீரையை சுத்தம் செய்து சிறிதாக நறுக்கிக்கொள்ளுங்கள். சிறிய வெங்காயத்தையும் நறுக்குங்கள். வாணலியில் எண்ணெய் ஊற்றி சீரகம், மிளகு தாளித்து நறுக்கி வைத்துள்ள வெங்காயம் மற்றும் கீரையை கொட்டி வதக்கி, நீர் தெளித்து வாணலியை மூடி சிறு தீயில் வேக வையுங்கள். துவரம் பருப்பு, உப்பு சேர்த்து வெந்ததும் இறக்குங்கள்.
இதை சூடான சாதத்துடன் கலந்து சாப்பிட்டால் கல்லீரல் நன்கு வேலை செய்யும், ரத்த ஓட்டம் அதிகரிக்கும். ரத்த சோகை நீங்கும்.
கரிசலாங்கண்ணி கீரை -1 கட்டு
சின்ன வெங்காயம்-100 கிராம்
சீரகம்-1 தேக்கரண்டி
வேகவைத்த துவரம் பருப்பு-3மேஜைகரண்டி
மிளகு- 1 தேக்கரண்டி
உப்பு- தேவைக்கு
செய்முறை: கீரையை சுத்தம் செய்து சிறிதாக நறுக்கிக்கொள்ளுங்கள். சிறிய வெங்காயத்தையும் நறுக்குங்கள். வாணலியில் எண்ணெய் ஊற்றி சீரகம், மிளகு தாளித்து நறுக்கி வைத்துள்ள வெங்காயம் மற்றும் கீரையை கொட்டி வதக்கி, நீர் தெளித்து வாணலியை மூடி சிறு தீயில் வேக வையுங்கள். துவரம் பருப்பு, உப்பு சேர்த்து வெந்ததும் இறக்குங்கள்.
இதை சூடான சாதத்துடன் கலந்து சாப்பிட்டால் கல்லீரல் நன்கு வேலை செய்யும், ரத்த ஓட்டம் அதிகரிக்கும். ரத்த சோகை நீங்கும்.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: இளமையைக் காக்கும் கரிசலாங்கண்ணி
துவையல்
கரிசலாங்கண்ணி கீரை-2 கைப்பிடி
காய்ந்த மிளகாய்-2
உளுத்தம் பருப்பு -1 தேக்கரண்டி
மிளகு - 1/2 தேக்கரண்டி
புளி- சிறிய எலுமிச்சை அளவு
நல்லெண்ணெய் -2 தேக்கரண்டி
உப்பு -தேவைக்கு
செய்முறை: வாணலியில் எண்ணெய் ஊற்றி உளுத்தம் பருப்பு, மிளகு, காய்ந்த மிளகாய், புளி ஆகியவற்றை போட்டு நன்றாக வதக்கி எடுக்கவும். அத்தோடு கீரையை நறுக்கிப்போட்டு கிளறுங்கள். அடுப்பில் இருந்து இறக்கி, ஆறிய பின்பு அரைத்து உப்பு சேருங்கள்.
இதை சூடான சாதத்துடன் கலந்து, நெய்யும் சேர்த்து சாப்பிடலாம். இட்லி, தோசைக்கு தொட்டுக்கொள்ளலாம். தலைமுடி உதிர்தல், இளவயதில் தோன்றும் நரை போன்ற பிரச்சினை உள்ளவர்களுக்கு இது நல்ல பலனைத்தரும்.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: இளமையைக் காக்கும் கரிசலாங்கண்ணி
சத்து பானம்
கீரை பெரிய கட்டு -1
நாட்டு சர்க்கரை- 400 கிராம்
பாதாம் பருப்பு-50 கிராம்
பிஸ்தா பருப்பு-50 கிராம்
சாரை பருப்பு-50 கிராம்
முந்திரி பருப்பு-50 கிராம்
செய்முறை: கரிசலாங்கண்ணி கீரையை நறுக்கி அரையுங்கள். அதில் சிறிதளவு நீர் கலந்து வடிகட்டி சாறு எடுத்துக்கொள்ளுங்கள்.
500 மி.லி. சாற்றில் நாட்டு சர்க்கரையை கலந்து நன்கு கொதிக்க வையுங்கள். கொதித்து வரும்போது நீர் சுண்டி பச்சை நிறத்தில் சர்க்கரை போல படியும். அதை சேகரித்து ஆற வைத்து, அத்துடன் மேலே சொன்ன பருப்புகளை தூளாக்கி சேர்க்கவும்.
இதில் ஒரு தேக்கரண்டி எடுத்து, பாலில் கலந்து குடித்தால் ரத்தசோகை நீங்கும். இளநரை போகும். தலைமுடிசெழித்து வளரும். கரிசலாங்கண்ணியில் கரோட்டின் சத்து அதிகம் உள்ளதால் கண்பார்வை மேம்படும்.
டாக்டர் இரா. பத்மப்ரியா (சித்த மருத்துவர்)
கீரை பெரிய கட்டு -1
நாட்டு சர்க்கரை- 400 கிராம்
பாதாம் பருப்பு-50 கிராம்
பிஸ்தா பருப்பு-50 கிராம்
சாரை பருப்பு-50 கிராம்
முந்திரி பருப்பு-50 கிராம்
செய்முறை: கரிசலாங்கண்ணி கீரையை நறுக்கி அரையுங்கள். அதில் சிறிதளவு நீர் கலந்து வடிகட்டி சாறு எடுத்துக்கொள்ளுங்கள்.
500 மி.லி. சாற்றில் நாட்டு சர்க்கரையை கலந்து நன்கு கொதிக்க வையுங்கள். கொதித்து வரும்போது நீர் சுண்டி பச்சை நிறத்தில் சர்க்கரை போல படியும். அதை சேகரித்து ஆற வைத்து, அத்துடன் மேலே சொன்ன பருப்புகளை தூளாக்கி சேர்க்கவும்.
இதில் ஒரு தேக்கரண்டி எடுத்து, பாலில் கலந்து குடித்தால் ரத்தசோகை நீங்கும். இளநரை போகும். தலைமுடிசெழித்து வளரும். கரிசலாங்கண்ணியில் கரோட்டின் சத்து அதிகம் உள்ளதால் கண்பார்வை மேம்படும்.
டாக்டர் இரா. பத்மப்ரியா (சித்த மருத்துவர்)
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: இளமையைக் காக்கும் கரிசலாங்கண்ணி
நல்ல பகிர்வு சிவா , எங்கள் வீட்டில் முன்பு மஞ்சள் கரிசலாங்கண்ணி இருந்தது ....ஒரு உப்புக்கல் வைத்து வெறும் வைற்றில் சாப்பிட சொல்வா எங்க அம்மா .அந்த கீரை இல் பொரித்த கூட்டு செய்வார்கள்
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: இளமையைக் காக்கும் கரிசலாங்கண்ணி
நல்ல தவளைகளுக்கு, சாரி தகவல்களுக்கு மிக்க நன்றி மாமா அங்கள்.
மாணிக்கம் நடேசன்- கல்வியாளர்
- பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009
Re: இளமையைக் காக்கும் கரிசலாங்கண்ணி
கரிசாலை என்றொரு பெயரும் இதற்குண்டு. இது ஒரு கற்ப மூலிகை. எந்த வகையில் உட்கொண்டாலும் இளமையைக் காக்கும்...!
Similar topics
» படித்ததில் பிடித்தது :) -- புல் டேங்க்கிற்கு பெட்ரோல் நிரப்பாதீர்கள்!
» கரிசலாங்கண்ணி
» மூலிகைகளின் அற்புதங்கள்
» கரிசலாங்கண்ணி
» கரிசலாங்கண்ணி மூலிகை
» கரிசலாங்கண்ணி
» மூலிகைகளின் அற்புதங்கள்
» கரிசலாங்கண்ணி
» கரிசலாங்கண்ணி மூலிகை
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|