ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 11:35 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 11:18 pm

» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by Dr.S.Soundarapandian Today at 10:03 pm

» ஹெல்மெட் காமெடி
by Dr.S.Soundarapandian Today at 10:01 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 10:01 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Today at 10:00 pm

» பல்சுவை களஞ்சியம் - ரசித்தவை
by Dr.S.Soundarapandian Today at 9:56 pm

» பல்சுவை களஞ்சியம்
by Dr.S.Soundarapandian Today at 9:50 pm

» பல்சுவை களஞ்சியம்
by ayyasamy ram Today at 8:58 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by ayyasamy ram Today at 8:56 pm

» இந்த வார சினிமா செய்திகள்
by ayyasamy ram Today at 8:49 pm

» சாக்கே சாராயம்
by ayyasamy ram Today at 8:46 pm

» நம்மிடமே இருக்கு மருந்து – நன்னாரி
by ayyasamy ram Today at 8:45 pm

» நெஞ்சம் நிறைந்த நிறைமதியே
by ayyasamy ram Today at 8:35 pm

» பருக்கைத் தேடும் காக்கைகள்
by ayyasamy ram Today at 8:34 pm

» பொல்லாத காதலுக்கு…
by ayyasamy ram Today at 8:33 pm

» அடியேன் பங்களிப்பு
by ayyasamy ram Today at 8:32 pm

» நெஞ்சிலே நினைவு எதற்கு?
by ayyasamy ram Today at 8:31 pm

» மரங்கொத்தி- புதுக் கவிதை
by ayyasamy ram Today at 8:29 pm

» கருத்துப்படம் 12/09/2024
by mohamed nizamudeen Today at 8:23 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:27 pm

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 7:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:59 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

கிஸா பிரமிடுகள்!

2 posters

Go down

கிஸா பிரமிடுகள்!  Empty கிஸா பிரமிடுகள்!

Post by சிவா Mon Apr 20, 2015 4:20 pm


உலக அதிசயங்களில் ஒன்று எகிப்தின் பிரமிடுகள். இது எல்லாரும் அறிந்த உண்மைதான். அரச குடும்பத்தினரின் இறந்த உடல்கள் மீண்டும் உயிர் பெரும் என்ற நம்பிக்கை காரணமாக, அவர்களது உடல்களை பாதுகாக்கும் இடமாக இத்தகைய பிரமிடுகள் அமைக்கப்பட்டன.

எகிப்து நாட்டின் தலைநகரான கெய்ரோவை ஒட்டிய புறநகர் பகுதியில் அமைந் துள்ளது கிஸா. இங்குள்ள நைல் நதி கரையோரம் சுமார் 4ஆயிரத்து 500 ஆண்டுகள் பழமையான மிகப்பெரிய "கிஸா பிரமிடு' உள்ளது.

146 மீட்டர் உயரத்திலான இந்தப் பிரமிடு 23 லட்சம் கற்களால் கட்டப்பட்டதாக அறியப்படுகிறது. ஒவ்வொரு கற்களும் 2 முதல் 9 டன் வரை எடை கொண்டது.

இவ்வளவு கற்களை எங்கிருந்து, எப்படி இங்கு கொண்டு வந்தனர்?

இந்தக் கற்கள் அனைத்தும் சுமார் 800 கி.மீ., தொலைவில் இருந்து சதுரம் சதுரமாக வெட்டி எடுத்து வரப்பட்டன. அத்தனையும் மனித சக்தியால் மட்டுமே சாதிக்க முடிந்தது என்பதுதான் நம்மை வியப்பில் ஆழ்த்துகிறது.

மிகக் குறுகிய காலத்திலேயே கடுமையான மனித சக்தி பயன்படுத்தப்பட்டு இந்த அதிசயம் சாதிக்கப்பட்டிருக்கும் என்றும் தெரிகிறது. பிரமிடு ஒரு கோடி டன் எடை யுள்ள தனி சுண்ணாம்பு பாறை கற்களால் எழுப்பப்பட்டது. சுண்ணாம்புக் கற்களின் மேலடுக்குகள் நன்றாகப் பாலிஷ் செய்யப் பட்டு வெளிப்புறம் பதிக்கப்பட்டுள்ளன.

23 லட்சம் சுண்ணாம்பு கற்கள், சுமார் 500 அடி உயரத்தில் எவ்வாறு கொண்டு செல்லப் பட்டு பணிகள் முடிக்கப்பட்டன என்பது மிகப் பெரிய ஆச்சரியமே.

மேலும், வெளிப்புறக்கற்களில் வித்தியாச மான எழுத்துக்கள் ஏராளமாகப் பதிக்கப் பட்டுள்ளன. இவற்றை மட்டுமே தொகுத்து பதிப்பித்தால் சுமார் பத்தாயிரம் பக்கங்கள் வரும் என்கின்றனர் ஆய்வாளர்கள்.

இத்தகைய கிஸா பிரமிட்டை யார் கட்டினர்? யாருடைய உதவியுடன் கட்டினர்? இவ்வாறு கட்டுவதற்கான கட்டுமான அறிவாற்றல் அவர்களுக்கு எப்படி ஏற்பட்டது?

கிஸாவில் உள்ள மூன்று பிரமிடுகளும் பித்தகோரஸ் என்கிற கணித விதிகளின் படியும், பிரபஞ்சத்தில் உள்ள மூன்று நட்சத்திரங்களைக் குறிக்கிற துல்லிய கோட் பாட்டின்படியும் அமைக்கப் பட்டுள்ளதாக ஆய்வாளர்கள் தெரிவிக் கின்றனர்.

மேலும், உள்ளே வைக்கப் பட்ட உடல்கள் கெட்டுப் போகா மல் முற்றிலும் உலர்ந்த நிலை யில் இருப்பது மிகப் பெரிய அதிசயமே.

பிரமிடுகளில் காணப்படும் ஏராள மான உள் அறைகளின் பயன்பாடு களும், அதன் குறுக்கும் நெடுக்கு மாகச் செல்கிற சதுரத் துளைகளின் பயன்பாடுகளும் மர்மங்களாகவே உள்ளன.

கி.மு.2566ம் ஆண்டில் எகிப்திய வம்சத்தைச் சேர்ந்த நான்காவது மன்னரான பாரோ குபூ என்பவர் தான் கிஸாவில் பிரம்மாண்டமான பிரமிட்டை அமைத்ததாக வரலாறு தெரிவிக்கிறது.

பிரமிடு அமைக்கப்பட்டு சுமார் 4,500 ஆண்டுகளுக்கு பிறகு, அதனுள் மறைந்து கிடக்கும் ரகசியத்தை முழுமையாக அறியும் ஆர்வம் லண்டனைச் சேர்ந்த ஆய்வாளர் ஒருவருக்கு ஏற்பட்டது.

அவர் தானே வடிவமைத்த "மைக்ரோ ஸ்நேக்,' என்னும் அதிநுட்பக் காமிராவுடன் மிகச்சிறிய ரோபோ ஒன்றை பிரமிட்டிற்குள் சிறிய துளையிட்டு அனுப்பினார்.

இது நடந்தது 1993ம் ஆண்டு.

உள்ளே நுழைந்த ரோபோ, அங்கு ஒரு கதவு இருப்பதைக் கண்டுபிடித்தது. அந்தக் கதவு உலோகங்களிலான ஒரு கொக்கி மூலம் மாட்டப்பட்டிருந்தது தெரியவந்தது. அந்தக் கொக்கியானது கதவைத் திறந்து மூடுவதற் கான சாவியாக இருக்கலாம் என்று தொல்லியல் ஆய்வாளர்கள் கருதினர்.

அதன் பின்னர் 2002ம் ஆண்டு, மற்று மொரு ரோபோ பிரமிட்டிற்குள் அனுப்பப் பட்டது. அதுவும் சில படங்களை எடுத்து அனுப்பியது. அவற்றில் பிரமிட்டின் உள்ளே ஒரு அறை இருப்பது போலவும், அந்த அறை ஒரு கல்லினால் அடைக்கப்பட்டிருப்பது போலவும் இருந்தது.

எனினும் இந்த இரண்டு ரோபோக்களாலும் உள்ளே இருப்பது என்னவென்பதைத் தெளி வாகப் படம் பிடிக்க முடியவில்லை. எனவே, பிரமிடின் ரகசியங்கள் பெரிய அளவில் வெளியாக முடியாமல் போயிற்று.

இதன்பின்னர் 2004ம் ஆண்டு பிரமிட்டின் உள்ளே மற்றுமொரு மைக்ரோ ரோபா ஒன்று அனுப்பப்பட்டது. அது எடுத்த புகைப்படம் தொல்பொருள் ஆய்வாளர்களைத் திகைப்பில் ஆழ்த்தியது. அது
சிவப்பு நிறத்தில் எகிப்திய எழுத்துக்கள் பிரமிடின் சுவரில் எழுதப்பட்டிருந்தன. அந்த எழுத்துக்கள் மூலம் பிரமிடில் மறைந்து கிடக்கும் ரகசிய முடிச்சுகளை ஒவ்வொன்றாய் அவிழ்க்கலாம் என்று ஆய்வாளர்கள் நம்பினர்.

ஆனால், அதுவும் காலைவாரி விட்டது என்றே சொல்ல வேண்டும். காரணம், எழுத்துக்கள் மிகச் சிறியதாக இருந்ததால் அதனைப் படித்து புரிந்து கொள்ள முடியாமல் போயிற்று.

எனினும் அந்த மைக்ரோ ரோபோ அனுப்பிய புகைப்படங்களால் பிரமிடின் வடிவத்தை ஓரளவிற்குக் கணிக்க முடிந்தது.

பிரமிடில் ராஜாவுக்குத் தனி அடுக்கு காணப்படு கிறது. இதில் இருந்து வெளிவரும் இரண்டு இணைப்பு பிரமிடின் வெளிப்புறம் வரை நீட்டிக் கொண்டிருக் கிறது. உள்ளே காற்று செல்வதற்கான வழியாக இது இருந்திருக்கக்கூடும் என்று கருதப்படுகிறது.

ராணிக்கு என்று தனியாக ஒரு அடுக்கும் இந்தப் பிரமிடுக்குள் அமைந்துள்ளது. இந்த அடுக்கில் இரண்டு சுரங்கபாதைகள் இணைக்கப்பட்டு, அவை இரண்டு கல் கதவுகளால் மூடப் பட்டுள்ளன.

ஆய்வுகள் தொடர்ந்து நடந்து வந்த போதிலும், பிரமிடினுள் பொதிந்து கிடக்கும் மர்ம முடிச்சுகள் இன்னும் அவிழ்க்கப்படவில்லை.

உண்மையில் பிரமிடில் மறைந்து கிடக்கும் உண்மைதான் என்ன?

அதனுள் கோடிக்கணக்கான தங்கப் புதையல் கொட்டிக் கிடப்பதாகக் கூறப்படுகிறதே அது உண்மையா? உள்ளே இறந்தவர்களின் ஆவிகள் உலாவுவதாகச் சொல்லப்படுவது உண்மையா?

அங்குள்ள கல் கதவுக்குப் பின்னால் மறைந்து கிடக்கும் ரகசியம் என்ன?

உள்ளே இருக்கும் சுரங்கப் பாதைகள் மற்றொரு பிரமிடிற்குள் செல்வ தாகக் கூறப்படுவது உண்மையா?

இவற்றுக்கெல்லாம் சரியான விடை இது வரை கிடைக்கப்பட வில்லை.

ஆனால், இதனுள் மம்மிகள் இருப்பது கண்டுபிடிக்கப் பட்டுள்ளது. அந்த மம்மிகள் எப்படி உள்ளே சமாதி ஆக்கப்பட்டன என்பது குறித்து ஆய்வாளர்கள் சில தகவல்களை வெளியிட்டுள்ளனர்.

அதாவது, இறந்தவர்களின் உடலைத் தனியாக ஒரு கூடாரத்திற்கு எடுத்துச் சென்று, கட்டிலில் அவரைக் கிடத்துவர். பின்னர் அந்த உடம்பைப் பேரீச்சை மதுவாலும், நைல் நதி நீராலும் நன்றாகக் கழுவி சுத்தம் செய்வர்.

உடலின் இடது பக்கத்தில் அறுத்து உள்ளே இருக்கும் பகுதிகளான நுரையீரல், கல்லீரல், வயிற்றுப் பகுதிகள், குடல் பகுதிகள் உள்ளிட்டவை வெளியே எடுக்கப்பட்டு கல் உப்பில் பதப்படுத்தப்படும்.

அந்தக்காலக் கட்டத்தில் இருதயம் அறிவின் இருப்பிடமாகக் கருதப்பட்டது. அதனால் அதனை வெளியே எடுக்கவில்லை.

ஒரு வளைந்த கம்பியை மூக்கின் வழியாக விட்டு, மண்டைக்குள் குடைந்து, லாவகமாக மூளையை வெளியே எடுத்தனர்.

பின்னர் உடல் முழுவதும் கல் உப்பால் மூடப்படும்.

நாற்பது நாட்களுக்கு பிறகு உடலை மறு படியும் நைல் நதி நீரால் கழுவி, அதன் மீது வாசனை எண்ணெயைத் தடவுவர். உடலானது இப்போது தன்னுடைய ஈரப்பதத்தை முழுவது மாக இழந்திருக்கும்.

உடலை பிசின் தடவிய துணியால் இறுக்கமாகச் சுற்றுவர். தலை, கைகள், கால்கள், உடல்பகுதி என்று தனித் தனியாகச் சுற்றப்படும். இதன் பிறகே அந்த உடல் அடக்கம் செய்யப்படும். அதுவே "மம்மி' என்று அழைக்கப்படுகிறது.

1999ம் ஆண்டு அர்ஜென்டினாவின் "லுல்லைலிகோ' என்னும் மலைப்பகுதியில் மூன்று மம்மிகள் கண்டெடுக்கப்பட்டன.

சுமார் 500 ஆண்டுகளுக்கு மேலான இந்த மம்மிகளின் உடலில் இருந்த ரத்தம் உறையாமல் அப்படியே இருந்தது ஆய்வாளர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

"இன்கா' இனத்தைச் சேர்ந்த இளம் பெண்ணின் மம்மி வடிவமும் அதில் ஒன்று. அந்தச் சிறுமிக்கு "லா டென்சிலா' என்ற பெயரைச் சூட்டியுள்ளனர் ஆய்வாளர்கள். அதாவது திருமணமாகாத இளம் பெண்' என்பதுதான் அந்தப் பெயருக்கான அர்த்தம்.

மதத்தின் பெயரால் இந்தப் பெண் உயிர் துறக்க நேரிட்டிருக்கலாம், என்று கருதப் படுகிறது. அதாவது கடவுளுக்காக அர்ப்பணிக்கப்பட்ட இந்தப் பெண்ணை, கடவுளுடன் வாழ்வதற்காக இவ்வாறு மலைப்பாங்கான இடத்தில் கொண்டு வந்து விட்டிருக்கலாம் அல்லது ஏதாவது விஷம் கலந்த உணவை வற்புறுத்தி உண்ண வைத்து அவளை இங்கே கொண்டு வந்திருக்கலாம் என்பது ஆய்வாளர்களின் கருத்து.

இந்த டென்சிலாவின் உடல் பாகங்கள் எதுவும் கெட்டுப் போகவில்லை. ரத்தம் கூட உறையாத அளவிற்கு பதமாக இருந்திருக்கிறது. அந்தப் பெண்ணின் தோல் கூட புத்துணர்ச்சியுடன் இருப்பது தான் மிக ஆச்சர்யம்.

இந்நிலையில் அவளது முடியை வைத்து, அவள் என்ன மாதிரியான உணவுப் பழக்கவழக்கங்களைக் கொண்டவள் என ஆராய்ந்த தில், இன்கா மக்கள் தங்கள் குழந்தைகளை நன்கு கொழுக்க வைத்து கடவுளுக்கு அர்ப்பணித்தது தெரிய வந்தது.

கடவுளுக்கு அர்ப்பணிப்பதற்கு சில ஆண்டுகளுக்கு முன்னதாகவே, விலங்கு களின் கொழுப்புகள் மற்றும் தானியங் களைக் கொடுத்து அக்குழந்தைகளை நன்கு செழிப்பாக்குவார்களாம்.

டென்சிலாவின் வயிற்றுப்பகுதியை ஆய்வு செய்த போது, அவள் இறப்பதற்கு சில மணி நேரங்களுக்கு முன்னதாக ஏதோ காய்கறி போன்ற உணவை உட்கொண் டிருக்க வேண்டும் என ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

டென்சிலாவின் உடல் இருந்த நிலையை வைத்து பார்க்கும் போது, அவள் இறப்பதற்கு முன்னதாக ஏதேனும் மருந்து உட்கொண்டிருக்கலாம், அதன் மூலம் அவளது மரணம் நிகழ்ந்திருக்கலாம் எனவும் அவர்கள் கருது கின்றனர்.

இவ்வாறு அர்ப்பணிக்கப்பட்டவர்களை அபாய கரமானதும், சிரமமானதுமான மலையின் உச்சிக்கு "இன்காக்கள்' சுமந்து செல்வர்.

இலக்கை அடைந்தவுடன் குடிக்க ஒரு மருந்து தரப் படுமாம். அதன் மூலம் வலி, பயம் மற்றும் எதிர்க்கும் மனோபாவம் அனைத்தும் இல்லாமல் போய்விடுமாம்.

பின்னர் அவர்களை உடன் சென்றவர்களே மூச்சுத் திணறச் செய்தோ, தலையில் ஓங்கி அடித்தோ அல்லது பனியில் உறைய விட்டோ பலி கொடுப்பார்களாம்.

நிறைய "இன்கா' குழந்தைகள் இதுபோல் திருவிழா வின் போதோ அல்லது சாதாரண நாட்களிலோ பலி கொடுக்கப் பட்டிருக்கலாம் என நம்பப்படுகிறது.

இதுபோன்ற தகவல்கள் அனைத்தும் முழுக்க, முழுக்க உண்மை என்று சொல்லி விட முடியாது. அனுமானங்கள் என்றாலும் பிரமிடுகளும், மம்மிகளும் இன்னும் மர்மம் பொதிந்த விஷயங்களாகவே இருக்கின்றன.


கிஸா பிரமிடுகள்!  Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

கிஸா பிரமிடுகள்!  Empty Re: கிஸா பிரமிடுகள்!

Post by ayyasamy ram Mon Apr 20, 2015 6:31 pm

கிஸா பிரமிடுகள்!  103459460
-
கிஸா பிரமிடுகள்!  W10eqTy4TSENal3fQTeh+3pyramids_giza
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83936
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum