புதிய பதிவுகள்
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:49 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:11 pm

» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:49 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:35 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:18 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:25 am

» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Yesterday at 5:33 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:18 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:00 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sun Jun 30, 2024 10:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 8:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:34 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:09 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sun Jun 30, 2024 6:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:14 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 4:34 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
 ஒரு கை ஓசை I_vote_lcap ஒரு கை ஓசை I_voting_bar ஒரு கை ஓசை I_vote_rcap 
5 Posts - 45%
ayyasamy ram
 ஒரு கை ஓசை I_vote_lcap ஒரு கை ஓசை I_voting_bar ஒரு கை ஓசை I_vote_rcap 
3 Posts - 27%
mohamed nizamudeen
 ஒரு கை ஓசை I_vote_lcap ஒரு கை ஓசை I_voting_bar ஒரு கை ஓசை I_vote_rcap 
2 Posts - 18%
VENKUSADAS
 ஒரு கை ஓசை I_vote_lcap ஒரு கை ஓசை I_voting_bar ஒரு கை ஓசை I_vote_rcap 
1 Post - 9%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
 ஒரு கை ஓசை I_vote_lcap ஒரு கை ஓசை I_voting_bar ஒரு கை ஓசை I_vote_rcap 
5 Posts - 45%
ayyasamy ram
 ஒரு கை ஓசை I_vote_lcap ஒரு கை ஓசை I_voting_bar ஒரு கை ஓசை I_vote_rcap 
3 Posts - 27%
mohamed nizamudeen
 ஒரு கை ஓசை I_vote_lcap ஒரு கை ஓசை I_voting_bar ஒரு கை ஓசை I_vote_rcap 
2 Posts - 18%
VENKUSADAS
 ஒரு கை ஓசை I_vote_lcap ஒரு கை ஓசை I_voting_bar ஒரு கை ஓசை I_vote_rcap 
1 Post - 9%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஒரு கை ஓசை


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Apr 20, 2015 3:34 pm

 ஒரு கை ஓசை 201504201424252808_One-Bookmarking-Hand_SECVPFகதிர்வேல் மூன்று வருட சிறைவாசம் முடித்து விட்டு வெளியே வந்தான். பஸ் ஏறி ஊரை நோக்கி புறப்பட்டவனின் மனம் அஞ்சலையை பார்க்கப் போகும் சந்தோஷத்தில் பஸ்சை விட வேகமாக பயணித்தது.

அஞ்சலை கதிர்வேலின் முறைப்பெண். அவள் பட்டம் படித்தவள். தனது முறைமாமன் படிக்கவில்லை என்றாலும் அவனையே திருமணம் செய்து கொள்வதில் உறுதியாக இருந்தாள்.

'அப்போதே மூக்கும் முழியுமாக அழகாக இருப்பாள். இந்த மூன்று ஆண்டுகளில் அவளது அழகில் செழுமை கூடியிருக்கும்' என்று மனத்திரையில் அவளை நினைக்கும்போதே கதிர்வேல் மனம் தேனாக இனித்தது.

அதேவேளையில் கணநேர கோபத்தில் செய்த தவறை நினைத்து மருகினான். ஆத்திரப்பட்டு அந்த தவறை செய்யவில்லையென்றால் இந்நேரம் தனக்கும் அஞ்சலைக்கும், திருமணம் முடிந்திருக்கும் என்று மனம் நொந்தவனின் நினைவு மூன்றாண்டுக்கு பின்னோக்கி பயணித்தது.

கதிர்வேல் எப்பவுமே முரட்டு சுபாவம் கொண்டவன். இவனது முறைப்பெண்ணான அஞ்சலையின் தங்கை அகிலா எட்டாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தாள். அவள் படித்த பள்ளிக்கு புதிதாக வந்த ஆசிரியர் சரவணன், அகிலாவை சரியாக படிக்கவில்லை என்று கண்டித்தார்.

வீட்டுக்கு அழுது கொண்டே வந்தவள் அக்கா அஞ்சலையிடம் விஷயத்தை சொல்ல, அவள் மூலம் கதிர்வேல் செவிக்கு தகவல் எட்டியது. அவனுக்கு கோபம் தலைக்கேறியது. ஆசிரியரை சந்தித்து கடுமையாக திட்டினான்.

அப்போது அவனது மிரட்டலுக்கு பணியாத ஆசிரியர் சரவணன் கோபத்துடன் கையை நீட்டிப் பேச, இருவருக்குள்ளும் வாக்குவாதம் முற்றியது. ஆத்திரத்தில் கதிர்வேல் தனது முதுகில் சொருகி வைத்திருந்த அரிவாளை எடுத்து மிரட்டியபோது தடுத்த சரவணன் கையை அது பதம் பார்த்தது. ஒரு கை துண்டிக்கப்பட்டு ரத்த வெள்ளத்தில் சரவணன் துடிக்க, கதிர்வேல் தண்டனை பெற்று சிறைக்கு சென்றான்.

அவனது ஊரில் பஸ் நின்றது. இறங்கி நடக்க தொடங்கினான்.

எதிரே கண்ணன் வந்தான். இவன் நண்பன்.

ஊர் நிலவரம் பற்றி அவனிடம் விசாரித்த கதிர்வேல், ''அஞ்சலை எப்படி இருக்கா?'' என்று கேட்க, கண்ணன் மவுனமானான். ''சொல்லுடா'' என்று கதிர்வேல் அதட்டினான். ''அவளுக்கு கல்யாணமாயிட்டுது கதிர். போன வருஷம் தான். இப்போ பக்கத்து ஊரில் புருஷனோட இருக்கா'' என்றான்.

''அவ விலாசம் தெரியுமா?''

''தெரியும்'' என்ற கண்ணன், அவள் விலாசத்தை சொன்னதும், ''அவளை பார்த்துட்டு அப்புறம் ஊருக்கு வர்றேன்டா'' என்று கூறிவிட்டு திரும்பி நடக்கத் தொடங்கினான்.

'என்னை இப்படி ஏமாற்றிட்டாளே' - அஞ்சலையை நினைக்க, நினைக்க கதிர்வேலுக்கு கோபம், கோபமாக வந்தது.

அஞ்சலையின் வீட்டை கண்டுபிடித்து கதவை தட்டிவிட்டு, கதிர்வேல் வீட்டுக்குள் நுழைந்தான்.

''எப்ப வந்தே?'' என்று கேட்டாள்.

''இன்னைக்குத்தான்''

''என்ன சாப்பிடுறே?''

''வேண்டாம்.. ஒன்றும் வேண்டாம்'' என்று கதிர்வேல் சொல்லிக்கொண்டிருந்தபோதே உள் அறையில் இருந்து வெளிப்பட்டவரை ஏறெடுத்து பார்த்தான்.

ஆசிரியர் சரவணன், ஒரு கையை இழந்து ஒற்றை கையுடன் நின்றிருந்தார்.

'இவர் இங்கே எப்படி?' - புரியாது அஞ்சலையை பார்த்தான் கதிர்வேல்.

''ஆமாம் மாமா! இவர்தான் என் புருஷன். நீ இவரோட கையை வெட்டி போட்டுட்டு போயிட்டே! ஆஸ்பத்திரியில் சேர்த்த இவரை கவனிக்க இவருக்கு சொந்தமுன்னு நம்ம ஊருக்குள்ள யாருமே இல்லை. நான்தான் கூட இருந்து கவனிச்சேன். குணமான பிறகு இவர் ஒரு கையோட பட்ட அவஸ்தைகளை பார்த்ததும் மனசுக்கு சங்கடமாயிடுச்சுது'' - நிதானமாக தொடர்ந்து பேசினாள் அஞ்சலை.

''நீ என் மாமன்! நீ செஞ்ச தப்புக்கு பிராயசித்தம் செய்யணுமுன்னு தோணிச்சு. ரெண்டு கையோட, நில புலன்களோட வசதியா இருக்கிற உன்னை கல்யாணம் பண்ணிக்க நிறைய பொண்ணுங்க வருவாங்க. ஆனா இவரை நினைச்சு பார்த்தியா? இவர் கையும் ஊனமாகி, மனசும் ஊனமாக நாம காரணமாக இருக்கலாமா? மனம் நொந்து இவர் சாபம் விட்டால் அது உன் குடும்பத்தை பாதிக்காதா? பாவம் செய்த நாம பரிகாரம் செய்றது தானே நியாயம்? அதனாலத்தான் நான் இவரை கல்யாணம் பண்ணிக்கிட்டேன். நான் செஞ்சது தப்பா மாமா?'' என்று கேட்டுவிட்டு கதிர்வேலை பார்த்தாள் அஞ்சலை.

அவளது பேச்சில் இருந்த நியாயத்தை புரிந்து கொண்ட கதிர்வேல் மெல்ல முணுமுணுத்தான்.

''இல்லே அஞ்சலை.. தப்பே இல்லை'' என்றவாறு கண்களைத் துடைத்துக்கொண்டு அமைதியாக ஊரை நோக்கி நடந்தான்.

- ஜெயவண்ணன்



 ஒரு கை ஓசை Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Mon Apr 20, 2015 3:38 pm

 ஒரு கை ஓசை 3838410834  ஒரு கை ஓசை 3838410834 சூப்பருங்க



M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82755
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Apr 20, 2015 3:56 pm

 ஒரு கை ஓசை 3838410834  ஒரு கை ஓசை 3838410834

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Mon Apr 20, 2015 5:25 pm

நல்ல கதை பகிர்வுக்கு நன்றி தம்பி



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Apr 20, 2015 11:00 pm

நல்ல கதை புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக