Latest topics
» நாவல்கள் வேண்டும்by Srinivasan23 Today at 12:45 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 11:03 am
» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Today at 8:41 am
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by ayyasamy ram Today at 8:40 am
» நாவல்கள் வேண்டும்
by Harriz Today at 4:07 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:20 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:17 pm
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:50 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:44 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:41 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:12 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:55 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:38 am
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Yesterday at 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 11:11 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:57 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 10:56 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:43 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:04 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Fri Jun 28, 2024 9:52 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:49 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:35 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am
» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am
» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am
» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am
» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:36 am
» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:35 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:33 am
Top posting users this week
heezulia | ||||
ayyasamy ram | ||||
T.N.Balasubramanian | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Srinivasan23 | ||||
Balaurushya | ||||
Karthikakulanthaivel | ||||
prajai | ||||
Manimegala |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Srinivasan23 | ||||
Karthikakulanthaivel | ||||
sugumaran | ||||
Ammu Swarnalatha |
நிகழ்நிலை நிர்வாகிகள்
மரத்துப்போனதா மனிதநேயம்?
4 posters
Page 1 of 1
மரத்துப்போனதா மனிதநேயம்?
மரத்துப்போனதா மனிதநேயம்? மரங்களை வதம் செய்யும் பாதகர்கள்!
என்னை நம்பி வந்தவர்களை ஒரு போதும் ஏமாற்றத்துடன் அனுப்பியது கிடையாது. சோர்வாக வருபவர்களுக்கு இளைப்பாற நிழல் தருகிறேன் கவலையோடு வருபவர்களுக்கு வசந்த காற்று வீசுகிறேன்... பசியோடு வருவோர்க்கு பசியாற பழங்களை தருகிறேன்... பறவைகள் குடும்பமாக வசிக்க இடம் தருகிறேன் என்னை சுமக்கும் பூமியை குளிர வைக்க வானில் குளிர்ந்த காற்றை வீசி மழை பெற உதவுகிறேன்... இவ்வாறு எனது வாழ்க்கையே மற்றவருக்காக வாழும் எனக்கு, மனிதர்கள் கொடுக்கும் பரிசு என்னை வெட்டி சாய்ப்பதுதான்,' என சொல்லாமல் சொல்லி வேதனையை சுமந்து நிற்கின்றன மரங்கள்...
நிழல் தந்து காக்கும் மரங்களின் இலைகள் விழுவதைக்கூட ஏற்க முடியாத மனிதர்கள், அற்ப காரணங்களுக்காக மரத்தை வெட்டி சாய்ப்பது கொடுமை. அதிலும் கொடுமையான விஷயம் ஆசிட் ஊற்றி மரங்களை உயிருடன் கொல்வது தான். இதனை தடுக்க வேண்டிய அதிகாரிகள் யாரும் இதை கண்டுகொள்வதில்லை. இவ்வாறு வெட்டி சாய்க்கப்பட்ட மரங்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே தான் போகிறது.
ரோடு விரிவாக்கம் போன்ற பணிகளுக்காக வெட்டப்படும் மரங்களுக்கு, மாற்றாக மரக்கன்றுகள் கூட நடப்படாதது வேதனையான விஷயம். மரங்களை தொடர்ந்து வெட்டி சாய்ப்பதால், மாசுபட்ட உலகம், உலக வெப்பமாதல், மழை பொய்த்தது போன்ற பல்வேறு பிரச்னைகள் தலை துாக்கி வருகின்றன. மற்றொரு 'மரம் வளர்ப்போம்... மழை பெறுவோம்,' என விழிப்புணர்வு பேரணிகள் நடத்தப்பட்டு, மரம் வளர்ப்பதன் அவசியம் குறித்து விளக்கப்படுகிறது.
ஆனால் நடப்படும் மரக்கன்றுகள் முறையாக பராமரிக்கப்படாமல் அப்படியே கருகி போய் விடுகின்றன. பேரணியும், மரக்கன்று நடுவதும் தற்போது சம்பிரதாயமாக மாறியுள்ளது. அதற்கு பின்,அந்த மரக்கன்று முறையாக வளர்க்கப்படுகிறதா என்பது குறித்து யாரும் கண்டுகொள்வதில்லை.
மரங்கள் வெட்டி சாய்ப்பதையும், ஆசிட் ஊற்றி மரங்களை பட்டு போக செய்யும் செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். மரங்கள் வளர்ப்பு குறித்து அந்த ஒரு நாளில் மட்டும் கருத்துக்களை தெரிவிக்கும் சிலர், அதோடு மறந்து செல்வதையும் கண்கூடாக பார்க்க முடிகிறது.எனவே, மரத்துபோயுள்ள மரம் வளர்ப்பு குறித்த நோக்கத்தை புரிய வைக்கவேண்டும்.
போதிய விழிப்புணர்வு ஏற்படுத்தி, ஒரு மரம் வெட்டப்படும் போது, குறைந்த பட்சம் இரண்டு மரக்கன்றுகளையாவது நட வைக்க வேண்டும்.இதுபோன்ற செயல்களை செய்தால், மரங்களை நன்றாக வளர்த்து, மழை பெறுவதுடன் போதிய நன்மைகளை பெற முடியும். வருங்கால சந்ததிகளுக்கு பசுமையான பகுதியை நாம் அளிக்க முடியும்.
இல்லையெனில், வறட்சி, பஞ்சம் போன்றவை நிலவும் நாட்டையே, நம் வருங்கால சந்ததிக்கு விட்டுச்செல்லும் அவலம் ஏற்படும்.எனவே, மரக்கன்றுகள் வளர்ப்பதன் உன்னத நோக்கத்தினை மனதில் வைத்துக்கொண்டு, உண்மையாக மரக்கன்றுகளை நட்டு பராமரிக்க அனைவரும் கைகோர்க்க வேண்டும். அவை வளரும் போது, அவற்றை பார்க்கும் நமக்கு கிடைக்கும் மகிழ்ச்சியே தனி சுகம்தான்... அதனால், மரங்களை வெட்டாமல், மரங்களை வளர்க்க, பாதுகாக்க உறுதி யெடுப்போம்.
.............
என்னை நம்பி வந்தவர்களை ஒரு போதும் ஏமாற்றத்துடன் அனுப்பியது கிடையாது. சோர்வாக வருபவர்களுக்கு இளைப்பாற நிழல் தருகிறேன் கவலையோடு வருபவர்களுக்கு வசந்த காற்று வீசுகிறேன்... பசியோடு வருவோர்க்கு பசியாற பழங்களை தருகிறேன்... பறவைகள் குடும்பமாக வசிக்க இடம் தருகிறேன் என்னை சுமக்கும் பூமியை குளிர வைக்க வானில் குளிர்ந்த காற்றை வீசி மழை பெற உதவுகிறேன்... இவ்வாறு எனது வாழ்க்கையே மற்றவருக்காக வாழும் எனக்கு, மனிதர்கள் கொடுக்கும் பரிசு என்னை வெட்டி சாய்ப்பதுதான்,' என சொல்லாமல் சொல்லி வேதனையை சுமந்து நிற்கின்றன மரங்கள்...
நிழல் தந்து காக்கும் மரங்களின் இலைகள் விழுவதைக்கூட ஏற்க முடியாத மனிதர்கள், அற்ப காரணங்களுக்காக மரத்தை வெட்டி சாய்ப்பது கொடுமை. அதிலும் கொடுமையான விஷயம் ஆசிட் ஊற்றி மரங்களை உயிருடன் கொல்வது தான். இதனை தடுக்க வேண்டிய அதிகாரிகள் யாரும் இதை கண்டுகொள்வதில்லை. இவ்வாறு வெட்டி சாய்க்கப்பட்ட மரங்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே தான் போகிறது.
ரோடு விரிவாக்கம் போன்ற பணிகளுக்காக வெட்டப்படும் மரங்களுக்கு, மாற்றாக மரக்கன்றுகள் கூட நடப்படாதது வேதனையான விஷயம். மரங்களை தொடர்ந்து வெட்டி சாய்ப்பதால், மாசுபட்ட உலகம், உலக வெப்பமாதல், மழை பொய்த்தது போன்ற பல்வேறு பிரச்னைகள் தலை துாக்கி வருகின்றன. மற்றொரு 'மரம் வளர்ப்போம்... மழை பெறுவோம்,' என விழிப்புணர்வு பேரணிகள் நடத்தப்பட்டு, மரம் வளர்ப்பதன் அவசியம் குறித்து விளக்கப்படுகிறது.
ஆனால் நடப்படும் மரக்கன்றுகள் முறையாக பராமரிக்கப்படாமல் அப்படியே கருகி போய் விடுகின்றன. பேரணியும், மரக்கன்று நடுவதும் தற்போது சம்பிரதாயமாக மாறியுள்ளது. அதற்கு பின்,அந்த மரக்கன்று முறையாக வளர்க்கப்படுகிறதா என்பது குறித்து யாரும் கண்டுகொள்வதில்லை.
மரங்கள் வெட்டி சாய்ப்பதையும், ஆசிட் ஊற்றி மரங்களை பட்டு போக செய்யும் செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். மரங்கள் வளர்ப்பு குறித்து அந்த ஒரு நாளில் மட்டும் கருத்துக்களை தெரிவிக்கும் சிலர், அதோடு மறந்து செல்வதையும் கண்கூடாக பார்க்க முடிகிறது.எனவே, மரத்துபோயுள்ள மரம் வளர்ப்பு குறித்த நோக்கத்தை புரிய வைக்கவேண்டும்.
போதிய விழிப்புணர்வு ஏற்படுத்தி, ஒரு மரம் வெட்டப்படும் போது, குறைந்த பட்சம் இரண்டு மரக்கன்றுகளையாவது நட வைக்க வேண்டும்.இதுபோன்ற செயல்களை செய்தால், மரங்களை நன்றாக வளர்த்து, மழை பெறுவதுடன் போதிய நன்மைகளை பெற முடியும். வருங்கால சந்ததிகளுக்கு பசுமையான பகுதியை நாம் அளிக்க முடியும்.
இல்லையெனில், வறட்சி, பஞ்சம் போன்றவை நிலவும் நாட்டையே, நம் வருங்கால சந்ததிக்கு விட்டுச்செல்லும் அவலம் ஏற்படும்.எனவே, மரக்கன்றுகள் வளர்ப்பதன் உன்னத நோக்கத்தினை மனதில் வைத்துக்கொண்டு, உண்மையாக மரக்கன்றுகளை நட்டு பராமரிக்க அனைவரும் கைகோர்க்க வேண்டும். அவை வளரும் போது, அவற்றை பார்க்கும் நமக்கு கிடைக்கும் மகிழ்ச்சியே தனி சுகம்தான்... அதனால், மரங்களை வெட்டாமல், மரங்களை வளர்க்க, பாதுகாக்க உறுதி யெடுப்போம்.
.............
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: மரத்துப்போனதா மனிதநேயம்?
மரம் வெட்ட தடை விதிக்கப்படுமா?
இயற்கை அன்னையின் மடியில் தவழும் வால்பாறையில் உள்ள, பசுமை மாறாக்காடு களை பாதுகாக்க மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்தாலும், அதையும் மீறி வனவிலங்குகளுக்கும் இயற்கைக்கும் பாதிப்பும் ஏற்படும் வகையில், சில எஸ்டேட் பகுதியில் தொடர்ந்து மரங்கள் வெட்டப்படுவதால், மழை குறைய வாய்ப்புள்ளது. இங்குள்ள மரங்களை ஆதாரமாகக்கொண்டுதான், ஆண்டு தோறும் பருவமழை பெய்து வருகிறது. இந்நிலையில் வால்பாறை மலைப்பகுதியில் இயற்கைக்கு பாதிப்பு ஏற்படும் வகையில் மரங்களை வெட்ட அரசு அனுமதிக்கக்கூடாது. சுற்றுச்சுழலை பாதுகாக்கும் வகையில் கூடுதல் மரங்களை நடவு செய்ய வேண்டும் என்பது இயற்கை ஆர்வலர்களின் கோரிக்கையாக உள்ளது.
இயற்கை அன்னையின் மடியில் தவழும் வால்பாறையில் உள்ள, பசுமை மாறாக்காடு களை பாதுகாக்க மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்தாலும், அதையும் மீறி வனவிலங்குகளுக்கும் இயற்கைக்கும் பாதிப்பும் ஏற்படும் வகையில், சில எஸ்டேட் பகுதியில் தொடர்ந்து மரங்கள் வெட்டப்படுவதால், மழை குறைய வாய்ப்புள்ளது. இங்குள்ள மரங்களை ஆதாரமாகக்கொண்டுதான், ஆண்டு தோறும் பருவமழை பெய்து வருகிறது. இந்நிலையில் வால்பாறை மலைப்பகுதியில் இயற்கைக்கு பாதிப்பு ஏற்படும் வகையில் மரங்களை வெட்ட அரசு அனுமதிக்கக்கூடாது. சுற்றுச்சுழலை பாதுகாக்கும் வகையில் கூடுதல் மரங்களை நடவு செய்ய வேண்டும் என்பது இயற்கை ஆர்வலர்களின் கோரிக்கையாக உள்ளது.
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: மரத்துப்போனதா மனிதநேயம்?
சித்ரவதைக்கு உள்ளாகும் மரங்கள்:
கோடை வெப்பத்தின் தாக்குதலில் இருந்து மக்களை பாதுகாக்க இதமான காற்றும், மிதமான மழையும் இருந்தால் வாழ்க்கை எவ்வளவு இனிதாக இருக்கும் என எண்ணி பார்த்து ஆனந்தம் அடையும் நாம் அதை தரும் மரங்களை வளர்க்க முயற்சி செய்ய வேண்டும் என இயற்கை ஆர்வலர்கள் வலியுறுத்துகின்றனர். சமீபகாலமாக நம் அனைவரையும் கவலை கொள்ள செய்யும் செய்தி பருவநிலை மாறி பெய்யும் மழை ஆடிப்பட்டம், சித்திரைப்பட்டம் என பருவ காலம் காட்டு விவசாயம் பார்த்தவர்கள் இன்று மழை பெய்யும் பருவம் எது என தெரியாமல் குழம்பி போய் உள்ளனர்.
பருவநிலை மாற்றங்கள் ஏற்பட முக்கிய காரணம் வனங்கள் அழிக்கப்படுவதும், மரங்கள் வெட்டப்படுவதுதான்.விளைநிலங்களையும் அழித்து குடியிருப்புகளாக மாற்றுவதும், சாலைகள் அமைக்க, மின்பாதை அமைக்க என பல்வேறு காரணங்களுக்காக மரங்களை வெட்டி தள்ளுவதுதான் முக்கிய பணியாக தற்போது நடந்து வருகிறது.எதிர்கால சந்ததியினர் வளமுடனும், நலமுடனும், வாழ, தூய்மையான சுற்றுச்சூழல் மிக முக்கியம். அதற்கு மரங்கள் இந்த மண்ணில் உயிர் வாழ வேண்டும்.
மரங்களுக்கு பாதுகாப்பு தேவை:
கிணத்துக்கடவு அரசு மேல்நிலைப்பள்ளி மைதானத்தை ஒட்டியுள்ள, நெகா மரத்தை கவனிக்காமல் விட்டதால், அம்மரம் பட்டுபோய்விட்டது. மேலும், தினசரி மார்க்கெட் எதிரேயுள்ள புளிய மரத்தில், கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு பாதியை வெட்டிவிட்டனர். அதன்பின்பும் கவனிக்காமல் விடப்பட்டது.இருப்பினும், தற்போது, மரத்தில் இருந்து கிளைகள் வளர்ச்சியடைந்து வருகிறது.
இம்மரத்தை தேசிய நெடுஞ்சாலைத்துறையினரும், சுற்றுச்சூழல் மாசுபாட்டுத்துறையினரும் தொடர்ந்து கவனம் செலுத்தினால், பாதுகாக்கலாம். இதற்கு முன்பு, அரசம்பாளையம் பிரிவு அருகே இருந்த புளிய மரம் வாகனத்திற்கு இடையூறாக இருப்பதாக கூறி வெட்டப்பட்டது. பொன்மலை வேலாயுதசாமி கோவில் அடிவாரம் முன்பு, வணிக வளாகத்திற்கு சிரமமாக இருப்பதாகக்கூறி, ஒரு மரம் கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு வெட்டப்பட்டுள்ளது. இவ்வாறு மரங்களை வெட்டியதோடு, கவனிக்காமல் விடும்போது, மரம் பட்டுப்போவதும் தொடர்கதையாக இருக்கிறது. இதனை சம்பந்தப்பட்ட துறையினர் கவனிக்க வேண்டும்.
தினமலர்
கோடை வெப்பத்தின் தாக்குதலில் இருந்து மக்களை பாதுகாக்க இதமான காற்றும், மிதமான மழையும் இருந்தால் வாழ்க்கை எவ்வளவு இனிதாக இருக்கும் என எண்ணி பார்த்து ஆனந்தம் அடையும் நாம் அதை தரும் மரங்களை வளர்க்க முயற்சி செய்ய வேண்டும் என இயற்கை ஆர்வலர்கள் வலியுறுத்துகின்றனர். சமீபகாலமாக நம் அனைவரையும் கவலை கொள்ள செய்யும் செய்தி பருவநிலை மாறி பெய்யும் மழை ஆடிப்பட்டம், சித்திரைப்பட்டம் என பருவ காலம் காட்டு விவசாயம் பார்த்தவர்கள் இன்று மழை பெய்யும் பருவம் எது என தெரியாமல் குழம்பி போய் உள்ளனர்.
பருவநிலை மாற்றங்கள் ஏற்பட முக்கிய காரணம் வனங்கள் அழிக்கப்படுவதும், மரங்கள் வெட்டப்படுவதுதான்.விளைநிலங்களையும் அழித்து குடியிருப்புகளாக மாற்றுவதும், சாலைகள் அமைக்க, மின்பாதை அமைக்க என பல்வேறு காரணங்களுக்காக மரங்களை வெட்டி தள்ளுவதுதான் முக்கிய பணியாக தற்போது நடந்து வருகிறது.எதிர்கால சந்ததியினர் வளமுடனும், நலமுடனும், வாழ, தூய்மையான சுற்றுச்சூழல் மிக முக்கியம். அதற்கு மரங்கள் இந்த மண்ணில் உயிர் வாழ வேண்டும்.
மரங்களுக்கு பாதுகாப்பு தேவை:
கிணத்துக்கடவு அரசு மேல்நிலைப்பள்ளி மைதானத்தை ஒட்டியுள்ள, நெகா மரத்தை கவனிக்காமல் விட்டதால், அம்மரம் பட்டுபோய்விட்டது. மேலும், தினசரி மார்க்கெட் எதிரேயுள்ள புளிய மரத்தில், கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு பாதியை வெட்டிவிட்டனர். அதன்பின்பும் கவனிக்காமல் விடப்பட்டது.இருப்பினும், தற்போது, மரத்தில் இருந்து கிளைகள் வளர்ச்சியடைந்து வருகிறது.
இம்மரத்தை தேசிய நெடுஞ்சாலைத்துறையினரும், சுற்றுச்சூழல் மாசுபாட்டுத்துறையினரும் தொடர்ந்து கவனம் செலுத்தினால், பாதுகாக்கலாம். இதற்கு முன்பு, அரசம்பாளையம் பிரிவு அருகே இருந்த புளிய மரம் வாகனத்திற்கு இடையூறாக இருப்பதாக கூறி வெட்டப்பட்டது. பொன்மலை வேலாயுதசாமி கோவில் அடிவாரம் முன்பு, வணிக வளாகத்திற்கு சிரமமாக இருப்பதாகக்கூறி, ஒரு மரம் கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு வெட்டப்பட்டுள்ளது. இவ்வாறு மரங்களை வெட்டியதோடு, கவனிக்காமல் விடும்போது, மரம் பட்டுப்போவதும் தொடர்கதையாக இருக்கிறது. இதனை சம்பந்தப்பட்ட துறையினர் கவனிக்க வேண்டும்.
தினமலர்
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: மரத்துப்போனதா மனிதநேயம்?
மிகவும் மரத்தின் மீதான சிந்தனையை தூண்டிய பதிவு!மிக்க நன்றி!
monikaa sri- பண்பாளர்
- பதிவுகள் : 235
இணைந்தது : 03/04/2015
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|