Latest topics
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்by ayyasamy ram Today at 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Today at 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Today at 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Today at 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Today at 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Today at 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Today at 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Today at 8:15 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 5:19 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 3:33 pm
» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Today at 3:16 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:09 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 1:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:38 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:31 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Today at 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm
» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am
» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am
» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:35 am
» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:33 am
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
mohamed nizamudeen | ||||
sureshyeskay | ||||
viyasan | ||||
eraeravi |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
தூக்கம் தந்து, வாதம் விரட்டும் முருங்கை!
3 posters
Page 1 of 1
தூக்கம் தந்து, வாதம் விரட்டும் முருங்கை!
முருங்கை... நுனி முதல் வேர் வரை மருத்துவப்பயன் மிக்கது என்பதால் இதை பிரம்ம விருட்சம் என்பார்கள்.
முருங்கையில் இரண்டு வகை உண்டு. முருங்கை மற்றும் காட்டு முருங்கை. முதல் வகை முருங்கையில் சோற்று முருங்கை, பனி முருங்கை, கோடை முருங்கை, நீர் முருங்கை போன்றவற்றை உண்பதன் மூலம் நோய்கள் நீங்கும். சோற்று முருங்கையின் காயை உண்டால் அது எலும்பினுள் உள்ள பசைக்கு பலம் சேர்க்கும். மஜ்ஜையை அதிகப்படுத்தும். மேலும், கல்லீரலில் பித்தத்தை சுரக்க வைக்கும் இந்த சோற்று முருங்கையின் கீரை எக்காலத்திலும் கிடைக்கக்கூடியது. இதன் கீரையை சமைத்து உண்பதால் கணையத்தில் சமான வாயுவை சுரக்கச்செய்யும். (சமான வாயுவானது பசி, தாகம், செரிமானம், உடல் சூடு ஆகியவற்றை சரி செய்து சமநிலையில் வைக்கக்கூடியது)
...................
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: தூக்கம் தந்து, வாதம் விரட்டும் முருங்கை!
அடுத்தது, பனிமுருங்கையில் உள்ள பட்டையை ஐந்து கொட்டைப்பாக்கு அளவு எடுத்து 100 மில்லி பாலில் போட்டு வேக வைத்து இரவு தூங்கப்போகும் முன் குடித்து வந்தால் எப்படிப்பட்ட நோயால் அவதிப்பட்டு தூக்கம் வராமல் போனாலும் நிம்மதியான தூக்கம் வரும். கோடை முருங்கையின் கீரை, மூட்டுகளில் உள்ள வீக்கங்களை, அதாவது பித்த வாயுவை குணப்படுத்தும். இந்தக் கீரையை கசாயம் வைத்தோ, சாம்பார் வைத்தோ சாப்பிட்டு வந்தால் நீர் போகும். இதனால் வாயுக்கோளாறுகள் விலகுவதோடு பிடிப்புகள் விலகும். இதன் கீரையை உப்புடன் சேர்த்து கசக்கி அரை டீஸ்பூன் அளவு தினமும் காலை வெறும் வயிற்றில் 3 நாட்கள் சாப்பிட்டு வந்தால் வயிற்று வலிகளை குணப்படுத்துவதோடு, பின்நாட்களில் வயிற்று வலிகள் வராமலிருக்கச் செய்யும். இதன் பட்டை 100 கிராம் எடுத்து 20 கிராம் மிளகு, 5 கிராம் சுக்கு சேர்த்து நசுக்கி மாட்டுக்குக் கொடுத்தால் வயிறு உப்புசம், நீர்க்கோழை மற்றும் மலச்சிக்கல் நீங்கும்.
..................
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: தூக்கம் தந்து, வாதம் விரட்டும் முருங்கை!
நீர் முருங்கையின் கீரையை பொரியல் செய்து சாப்பிட்டால் கால் வலி விலகும். ஜீரணக்கோளாறுகள் விலகுவதோடு உடல் ஆரோக்கியத்தைக் கொடுக்கும். இதன் காயில் உள்ள பருப்பை நெய்விட்டு வறுத்து இடித்துப் பொடியாக்கி சாம்பாரிலோ, ரசத்திலோ அரை டீஸ்பூன் அளவு 48 நாட்கள் சாப்பிட்டு வந்தால் நோய் எதிர்ப்பு சக்தி கிடைக்கும்.
மேலும், வாதக்கோளாறு மற்றும் மூட்டு வலி உள்ளவர்கள் முருங்கைக்கீரையுடன், வாதநாராயணன் மற்றும் நச்சு கெட்ட கீரை எனப்படும் லெச்சக்கொட்டை கீரையை சேர்த்து சமைத்து சாப்பிட்டு வந்தால் பலன் கிடைக்கும்.
சித்த மருத்துவத்தைப் பொறுத்தமட்டில் உடல் சோர்வு, நரம்புத் தளர்ச்சியைப்போக்க மருந்து செய்யும்போது அதில் முருங்கை விதை அல்லது முருங்கைப் பிசின் முக்கிய இடம் வகிக்கிறது. இத்தகைய மருந்துகள் ஆண்களுக்கு வரக்கூடிய ஆண்மைக்குறை, குழந்தைப்பேறின்மை உள்ளிட்ட அனைத்து குறைபாடுகளையும் போக்கக்கூடியது.
விகடன்
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: தூக்கம் தந்து, வாதம் விரட்டும் முருங்கை!
முருங்கையில் இரண்டு வகை உண்டு. முருங்கை மற்றும் காட்டு முருங்கை. முதல் வகை முருங்கையில் சோற்று முருங்கை, பனி முருங்கை, கோடை முருங்கை, நீர் முருங்கை
இப்ப தான் இதை கேள்விபடுகிறேன் , ஒவ்வொன்றுக்கும் படம் இருக்கிறதா ?!
Re: தூக்கம் தந்து, வாதம் விரட்டும் முருங்கை!
ராஜா wrote:முருங்கையில் இரண்டு வகை உண்டு. முருங்கை மற்றும் காட்டு முருங்கை. முதல் வகை முருங்கையில் சோற்று முருங்கை, பனி முருங்கை, கோடை முருங்கை, நீர் முருங்கை
இப்ப தான் இதை கேள்விபடுகிறேன் , ஒவ்வொன்றுக்கும் படம் இருக்கிறதா ?!
நான் குட்டை முருங்கை மற்றும் சோற்று முருங்கை என்று கேள்விப்பட்டிருக்கிறேன்.
குட்டை முருங்கை சிக்கிரம் வளர்ந்து பலன் தரும், குத்துச்செடி போல இருக்கும்.
சோற்று முருங்கை இன் காய்கள் நல்ல சதைப்பற்றாக இருக்கும்....முன்பு எங்கள் வீட்டில் இருந்தது.
படங்கள் கிடைக்கலை....எல்லாமரங்களும் ஒன்று போலவே இருக்கு
Last edited by krishnaamma on Tue Apr 21, 2015 12:37 am; edited 1 time in total
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: தூக்கம் தந்து, வாதம் விரட்டும் முருங்கை!
முருங்கையை பற்றி மேலும் சில விவரங்கள்........ நெட் இல் பார்த்தேன்.....
இதன் அனைத்து பாகங்களும் உபயோகம்ஆனது . இதன் விதை காய் ,இல்லை ,இலையின் ஈர்க்கு , மரம் ,வேர் ,பூ அனைத்துமே பயனுள்ளவை ..
இதன் விதையில் இருந்து பயோ டீசல் எடுக்கலாம் ,சமையல் எண்ணெய்எடுக்கலாம்
மேலும் மேனி எழிலுக்கு , சுகதாரத்திற்கு ,இயந்திரத்திற்கு மசக்கு எண்ணெய் ,இன்னும் என்னவோ உபயோகம் .
ஆரஞ்சை போல் 7 மடங்கு வைட்டமின் c அடங்கியது .
பாலில் இருப்பதை போல் 4 மடங்கு சுண்ணாம்பு சத்து அடங்கியது
காரட்டில் இருப்பதைப் போல் 4 மடங்கு வைட்டமின் A அடங்கியது
வாழை பழததை போல் 3 மடங்கு பொட்டாசியம் அடங்கியது
தயிரில் இருப்பதை விட 2 மடங்கு புரோட்டின் அடங்கியது
இரும்பு சத்து அமரிமிதமாக உள்ளது .எந்த கீரையையும் விட 75 மடங்கு இரும்பு சத்து அதிகம்.
இறைவனின் கொடை என கூறுவதில் ஒரு அர்த்தம் இருக்கிறது இது 200 நாடுகளுக்கு மேல் உலகில் விளைகிறது.
Moringa oleifera, commonly referred to simply as "Moringa"
(Hindi: सहजन sahjan;
Tamil murungai', முருங்கை;
Kannada Nuggekai ನುಗ್ಗೆ ಕಾಯಿ; మునగకాయ
Telugu; Marathi Shevaga;
Muringakkaya in Malayalam
சித்தர்கள் முருங்கையை பிரம்ம விருட்சம் என்றே அழைக்கின்றனர். முருங்கையின் இலை, பூ, பிஞ்சு, காய், விதை, பட்டை, வேர் என அனைத்து பாகங்களும் அளவற்ற மருத்துவக் குணங்களைக் கொண்டவை.
இந்தியாவில் இமயமலையில் தொடங்கி குமரி வரை எங்கும் காணப்படும் மரங்களில் முருங்கை முக்கியமானது .
இலங்கை, மியான்மர், மலேசியா போன்ற நாடுகளில் இதனை அதிகம் பயிர்செய்கின்றனர். இதில் காட்டு முருங்கை, கொடிமுருங்கை, தவசு முருங்கை என பலவகையுண்டு.
முருங்கைக் கீரையைப் போலவே பூவிலும் அதிக மருத்துவக் குணங்கள் உள்ளன.
முருங்கை பூவின் மருத்துவ மகிமையை பல நூல்களில் சித்தர்கள் எழுதியுள்ளனர்.
விழிகுளிரும் பித்தம்போம் வீறருசி யேகும்
அழிவிந் துவும்புஷ்டி யாகும் - எழிலார்
ஒருங்கையக லாககற் புடைவா ணகையே
முருங்கையின் பூவை மொழி
- அகத்தியர் குணபாடம்
வெண்மை நிறங்கொண்ட சிறிய பூக்கள் கொத்து கொத்தாக காணப்படும்.
கண்களைப் பாதுகாக்க முருங்கையின் பூவை மொழி முருங்கைப் பூவுடன் பசும்பால் சேர்த்து நன்றாகக் காய்ச்சி காலை மாலை என இருவேளையும் அருந்தி வந்தால் கண்களில் ஈரப்பசை அதிகரித்து, கண் பார்வைக் கோளாறுகள் நீங்கும்.
முருங்கைப் பூவை அரைத்து பாலில் கலந்து கொதிக்க வைத்து அதனுடன் பனங்கற்கண்டு சேர்த்து காலை மாலை இருவேளையும் அருந்தி வந்தால் நினைவாற்றல் அதிகரிக்கும்.
முருங்கைப் பூவை நிழலில் உலர்த்தி பொடி செய்து வைத்துக்கொண்டு தினமும் கஷாயம் செய்து காலை மாலை அருந்தி வந்தால் உடலில் உள்ள பித்தம் குறைந்து, உடல் அசதி நீங்கி உடல் நிலை சீராகும்.
முருங்கைப் பூவை கஷாயம் செய்து வாரம் இருமுறை அருந்தி வந்தால் நரம்புத் தளர்ச்சி நீங்கும்.
நீரிழிவு நோயாளிகளின் நிலையும் இதுபோல்தான். இவர்கள் முருங்கைப் பூவை அடிக்கடி உணவில் சேர்த்துக்கொண்டால் நீரிழிவு நோயால் ஏற்பட்ட பாதிப்புகள் நீங்கும்.
இவர்கள் முருங்கைப் பூவை அரைத்து பாலில் கொதிக்க வைத்து பனங்கற்கண்டு கலந்து 48 நாட்கள் அதாவது ஒரு மண்டலம் அருந்தி வந்தால் தாம்பத்ய உறவில் நாட்டம் உண்டாகும்.
இதை இயற்கையின் வயகரா எனக்கூறலாம் .
இதன் பிசின் கூட மோகத்தை கூட்டவல்லது .பாலில் இட்டு இரவில் சாப்பிடலாம்.
.
இதன் காயை பற்றித்தான் பாக்கியராஜ் சினிமா மூலம் முன்பே பிரபலம் ஆக்கிவிட்டார் .
காய் கறிகளில் முருங்கை சுவையானது அனைவரும் விரும்புவது .அதிக சத்துள்ளதும் கூட
வீட்டுக்கொரு முருங்கை இருந்தால் வைத்தியருக்கும் வேலையில்லை .
சாப்பாட்டிற்கும் கவலையில்லை .
இதன் அனைத்து பாகங்களும் உபயோகம்ஆனது . இதன் விதை காய் ,இல்லை ,இலையின் ஈர்க்கு , மரம் ,வேர் ,பூ அனைத்துமே பயனுள்ளவை ..
இதன் விதையில் இருந்து பயோ டீசல் எடுக்கலாம் ,சமையல் எண்ணெய்எடுக்கலாம்
மேலும் மேனி எழிலுக்கு , சுகதாரத்திற்கு ,இயந்திரத்திற்கு மசக்கு எண்ணெய் ,இன்னும் என்னவோ உபயோகம் .
ஆரஞ்சை போல் 7 மடங்கு வைட்டமின் c அடங்கியது .
பாலில் இருப்பதை போல் 4 மடங்கு சுண்ணாம்பு சத்து அடங்கியது
காரட்டில் இருப்பதைப் போல் 4 மடங்கு வைட்டமின் A அடங்கியது
வாழை பழததை போல் 3 மடங்கு பொட்டாசியம் அடங்கியது
தயிரில் இருப்பதை விட 2 மடங்கு புரோட்டின் அடங்கியது
இரும்பு சத்து அமரிமிதமாக உள்ளது .எந்த கீரையையும் விட 75 மடங்கு இரும்பு சத்து அதிகம்.
இறைவனின் கொடை என கூறுவதில் ஒரு அர்த்தம் இருக்கிறது இது 200 நாடுகளுக்கு மேல் உலகில் விளைகிறது.
Moringa oleifera, commonly referred to simply as "Moringa"
(Hindi: सहजन sahjan;
Tamil murungai', முருங்கை;
Kannada Nuggekai ನುಗ್ಗೆ ಕಾಯಿ; మునగకాయ
Telugu; Marathi Shevaga;
Muringakkaya in Malayalam
சித்தர்கள் முருங்கையை பிரம்ம விருட்சம் என்றே அழைக்கின்றனர். முருங்கையின் இலை, பூ, பிஞ்சு, காய், விதை, பட்டை, வேர் என அனைத்து பாகங்களும் அளவற்ற மருத்துவக் குணங்களைக் கொண்டவை.
இந்தியாவில் இமயமலையில் தொடங்கி குமரி வரை எங்கும் காணப்படும் மரங்களில் முருங்கை முக்கியமானது .
இலங்கை, மியான்மர், மலேசியா போன்ற நாடுகளில் இதனை அதிகம் பயிர்செய்கின்றனர். இதில் காட்டு முருங்கை, கொடிமுருங்கை, தவசு முருங்கை என பலவகையுண்டு.
முருங்கைக் கீரையைப் போலவே பூவிலும் அதிக மருத்துவக் குணங்கள் உள்ளன.
முருங்கை பூவின் மருத்துவ மகிமையை பல நூல்களில் சித்தர்கள் எழுதியுள்ளனர்.
விழிகுளிரும் பித்தம்போம் வீறருசி யேகும்
அழிவிந் துவும்புஷ்டி யாகும் - எழிலார்
ஒருங்கையக லாககற் புடைவா ணகையே
முருங்கையின் பூவை மொழி
- அகத்தியர் குணபாடம்
வெண்மை நிறங்கொண்ட சிறிய பூக்கள் கொத்து கொத்தாக காணப்படும்.
கண்களைப் பாதுகாக்க முருங்கையின் பூவை மொழி முருங்கைப் பூவுடன் பசும்பால் சேர்த்து நன்றாகக் காய்ச்சி காலை மாலை என இருவேளையும் அருந்தி வந்தால் கண்களில் ஈரப்பசை அதிகரித்து, கண் பார்வைக் கோளாறுகள் நீங்கும்.
முருங்கைப் பூவை அரைத்து பாலில் கலந்து கொதிக்க வைத்து அதனுடன் பனங்கற்கண்டு சேர்த்து காலை மாலை இருவேளையும் அருந்தி வந்தால் நினைவாற்றல் அதிகரிக்கும்.
முருங்கைப் பூவை நிழலில் உலர்த்தி பொடி செய்து வைத்துக்கொண்டு தினமும் கஷாயம் செய்து காலை மாலை அருந்தி வந்தால் உடலில் உள்ள பித்தம் குறைந்து, உடல் அசதி நீங்கி உடல் நிலை சீராகும்.
முருங்கைப் பூவை கஷாயம் செய்து வாரம் இருமுறை அருந்தி வந்தால் நரம்புத் தளர்ச்சி நீங்கும்.
நீரிழிவு நோயாளிகளின் நிலையும் இதுபோல்தான். இவர்கள் முருங்கைப் பூவை அடிக்கடி உணவில் சேர்த்துக்கொண்டால் நீரிழிவு நோயால் ஏற்பட்ட பாதிப்புகள் நீங்கும்.
இவர்கள் முருங்கைப் பூவை அரைத்து பாலில் கொதிக்க வைத்து பனங்கற்கண்டு கலந்து 48 நாட்கள் அதாவது ஒரு மண்டலம் அருந்தி வந்தால் தாம்பத்ய உறவில் நாட்டம் உண்டாகும்.
இதை இயற்கையின் வயகரா எனக்கூறலாம் .
இதன் பிசின் கூட மோகத்தை கூட்டவல்லது .பாலில் இட்டு இரவில் சாப்பிடலாம்.
.
இதன் காயை பற்றித்தான் பாக்கியராஜ் சினிமா மூலம் முன்பே பிரபலம் ஆக்கிவிட்டார் .
காய் கறிகளில் முருங்கை சுவையானது அனைவரும் விரும்புவது .அதிக சத்துள்ளதும் கூட
வீட்டுக்கொரு முருங்கை இருந்தால் வைத்தியருக்கும் வேலையில்லை .
சாப்பாட்டிற்கும் கவலையில்லை .
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Similar topics
» சர்க்கரை நோயை விரட்டும் முருங்கை டீ
» பார்கின்ஸன்ஸ் வியாதி (Parkinson's Disease) – கம்ப வாதம் - நடுக்கு வாதம்
» முடக்கு வாதம் அல்லது மூட்டு வாதம் .(RHEUMATOID DISEASE)
» தூக்கம் தேடும் விழிகள்: தூக்கம் பற்றிய அறிவியல் ஆய்வு
» (வி)வாதம்
» பார்கின்ஸன்ஸ் வியாதி (Parkinson's Disease) – கம்ப வாதம் - நடுக்கு வாதம்
» முடக்கு வாதம் அல்லது மூட்டு வாதம் .(RHEUMATOID DISEASE)
» தூக்கம் தேடும் விழிகள்: தூக்கம் பற்றிய அறிவியல் ஆய்வு
» (வி)வாதம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|