புதிய பதிவுகள்
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Sat Sep 28, 2024 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
பணிபுரிபவரை கோபிப்பவரா நீங்கள்? Poll_c10பணிபுரிபவரை கோபிப்பவரா நீங்கள்? Poll_m10பணிபுரிபவரை கோபிப்பவரா நீங்கள்? Poll_c10 
1 Post - 100%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பணிபுரிபவரை கோபிப்பவரா நீங்கள்? Poll_c10பணிபுரிபவரை கோபிப்பவரா நீங்கள்? Poll_m10பணிபுரிபவரை கோபிப்பவரா நீங்கள்? Poll_c10 
284 Posts - 45%
heezulia
பணிபுரிபவரை கோபிப்பவரா நீங்கள்? Poll_c10பணிபுரிபவரை கோபிப்பவரா நீங்கள்? Poll_m10பணிபுரிபவரை கோபிப்பவரா நீங்கள்? Poll_c10 
237 Posts - 37%
mohamed nizamudeen
பணிபுரிபவரை கோபிப்பவரா நீங்கள்? Poll_c10பணிபுரிபவரை கோபிப்பவரா நீங்கள்? Poll_m10பணிபுரிபவரை கோபிப்பவரா நீங்கள்? Poll_c10 
32 Posts - 5%
Dr.S.Soundarapandian
பணிபுரிபவரை கோபிப்பவரா நீங்கள்? Poll_c10பணிபுரிபவரை கோபிப்பவரா நீங்கள்? Poll_m10பணிபுரிபவரை கோபிப்பவரா நீங்கள்? Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
பணிபுரிபவரை கோபிப்பவரா நீங்கள்? Poll_c10பணிபுரிபவரை கோபிப்பவரா நீங்கள்? Poll_m10பணிபுரிபவரை கோபிப்பவரா நீங்கள்? Poll_c10 
19 Posts - 3%
prajai
பணிபுரிபவரை கோபிப்பவரா நீங்கள்? Poll_c10பணிபுரிபவரை கோபிப்பவரா நீங்கள்? Poll_m10பணிபுரிபவரை கோபிப்பவரா நீங்கள்? Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
பணிபுரிபவரை கோபிப்பவரா நீங்கள்? Poll_c10பணிபுரிபவரை கோபிப்பவரா நீங்கள்? Poll_m10பணிபுரிபவரை கோபிப்பவரா நீங்கள்? Poll_c10 
8 Posts - 1%
Guna.D
பணிபுரிபவரை கோபிப்பவரா நீங்கள்? Poll_c10பணிபுரிபவரை கோபிப்பவரா நீங்கள்? Poll_m10பணிபுரிபவரை கோபிப்பவரா நீங்கள்? Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
பணிபுரிபவரை கோபிப்பவரா நீங்கள்? Poll_c10பணிபுரிபவரை கோபிப்பவரா நீங்கள்? Poll_m10பணிபுரிபவரை கோபிப்பவரா நீங்கள்? Poll_c10 
7 Posts - 1%
mruthun
பணிபுரிபவரை கோபிப்பவரா நீங்கள்? Poll_c10பணிபுரிபவரை கோபிப்பவரா நீங்கள்? Poll_m10பணிபுரிபவரை கோபிப்பவரா நீங்கள்? Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பணிபுரிபவரை கோபிப்பவரா நீங்கள்?


   
   
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sun Apr 19, 2015 11:30 pm

வேலை கலாசாரம் மாறி வருவதால், இங்கு வேலைக்கு ஆட்கள் கிடைப்பது கடினமாக இருக்கிறது...' என அமெரிக்காவில் மட்டுமல்ல, மலேசியா, சிங்கப்பூர் மற்றும் வளைகுடா நாடுகளில் வசிக்கும் தமிழர்கள் சொல்லும் போது, வியப்பாக இருக்கும்.

அதேவேளை, தமிழகத்தை நினைத்து பெருமிதமாகவும் இருக்கும். காரணம், இங்கு வேலைக்கு ஆட்கள் எளிதாகவும், ஒரு சில ஆயிரங்களுக்கே கிடைக்கின்றனரே...
ஆனால், இந்நிலை மாறி, இன்று, வெளிநாட்டு தமிழர்கள் வெளிப்படுத்திய ஆதங்கம், நமக்கும் வர ஆரம்பித்து விட்டது.

'ஆள் கிடைக்கல; கிடைச்சாலும் சம்பளம் ஏகமா கேக்குறாங்க. கொடுத்து கட்டுப்படியாகல; சரி... நல்லபடியா வேலை பாக்குறாங்களான்னு பார்த்தா அதுவும் இல்ல. கையும், வாயும் சுத்தமில்ல; வந்தாலும் நாள்பட நிலைக்கிறதில்ல...' என்ற புலம்பல்கள் தான், இங்கும் கேட்கிறது.
மேலும், பாரம்பரியக் கலைகள் மற்றும் குலத் தொழிலை எடுத்துச் செய்ய ஆட்கள் இல்லை என்ற நிலைமையும் உருவாகி விட்டது.

விவசாயத் தொழிலாளர்கள் கிடைப்பதில்லை; விவசாயக் குடும்பத்தில் பிறந்தவரோ அமெரிக்காவிற்கு பறக்கத் துடிக்கிறார்.

ஏற்காட்டில் எஸ்டேட் அதிபர் ஒருவர், 'பேசாம என் எஸ்டேட்டை வித்துரலாம்ன்னு பாக்குறேன். காபி கொட்டை பறிக்க ஆளே கிடைக்கிறதில்ல; வீட்டுக்கு வீடு வேன் அனுப்பி ஆட்களை அழைச்சிட்டு வர வேண்டியுள்ளது. இதைவிட கடினமான விஷயம், அவர்கள் போடும் நிபந்தனைகள்...' என்று சலித்துக் கொண்டார். இது, மிகைப்படுத்தப்படாத உண்மை.

நன்கு கல்வி கற்று, நல்ல சம்பளம் வாங்க வேண்டும்; வெளியூரோ, வெளிநாடோ போக வேண்டும்; கை கட்டிப் பிழைக்காமல், கை நிறைய சம்பாதித்து, வசதியாக வாழ வேண்டும் என்ற மனோபாவம், சமூகத்தின் அடிமட்டம் வரை வளர்ந்து விட்டதால், எளிய வேலைகளுக்கு ஆள் கிடைப்பது, குதிரை கொம்பாகி வருகிறது.

அத்துடன், 'எங்க அப்பா காலத்துலேந்து நம்ம ஐயா கிட்ட தான் இருக்கோம்; பரம்பரை சேவகமுங்க. எங்களுக்கு ஏதுங்க வேறு உலகம்...' என்கிற விசுவாச புராணங்கள் எல்லாம், பரணுக்குப் போய் விட்டது.

'ஆயிரம் அதிகம் தருகிறாயா, உன்னிடம் வேலைக்கு வருகிறேன்; இன்னொருத்தர், 2,000 ரூபாய் தந்தால், அவரிடம் சேர்ந்து கொள்வேன்...' என்ற மேலைநாட்டு மனோபாவம் இங்கும் வ(ளர்)ந்து விட்டது.

ஒரு நிறுவனத்தை சரிவிற்கு கொண்டு வர, போட்டியில் அதைச் சாய்க்க, அந்நிறுவனத்தின் முதுகெலும்பாக உழைப்பவர்கள் யார் இருக்கின்றனரோ, அவர்களுக்கு தூண்டில் போடும் அமெரிக்க கலாசாரம், இங்கும் பரவி விட்டதால், வேலையில் நிலைப்பவர்கள் மிகவும் குறைந்து போயினர்.

முதலாளி பேச்சுக்கு, மறுபேச்சு இல்லை என்பதெல்லாம் இப்போது இல்லை. கட்டளையிட்டால், சிரமேற்கொண்டு செய்யும் காலம் போய், 'போய்யா போ... நீயும், உன் வேலையும்; உன்ன விட்டா எனக்கு எத்தனையோ முதலாளி...' என்று தோளில் உள்ள துண்டை உதறுவது போல், தன் தோளில் உள்ள பொறுப்புகளை உதறுவதற்கு, உழைப்புலகம் தயாராகி விட்டது. இவற்றோடு, தன்மானமும், ரோஷமும் மனிதர்களிடம் அதிகமாகி விட்டன.

இத்தகைய சூழலில், முதலாளிகள் பாடு பெரும் திணறல். இதில், வேடிக்கை என்னவென்றால், பேசி வைத்து கும்பலாக வேறு முகாம் மாறுகின்றனரே அதுதான்!

இதோடு முடிந்ததா என்றால், இல்லை. தொழிலாளிகளுக்கு, முதலாளிகள் ஆகும் ஆசையை, பல தனி மனித மேம்பாட்டு பயிற்சி வகுப்புகள், தன் முனைப்புத் தூண்டல் பேச்சுகள், உனக்கு நீயே முதலாளி என்ற எம்.எல்.எம்., (மல்டி லெவல் மார்க்கெட்டிங்) முடுக்கல்கள் ஆகியவற்றால், 'எப்படா கழண்டு கொள்வோம்...' என்ற மனநிலையில் பலர்.

இத்தகைய கதகதப்பு சூட்டில் இருக்கும் பணியாளர்களை, ஆண்டான், அடிமையாக நடத்துவதும், கோபித்துக் கொள்வதும், தண்டிப்பதும் சரிப்பட்டு வராது.

குறைகளோடு அவர்களை ஏற்று, மனிதாபிமானத்துடன் நடத்தி, அன்பு காட்டி, நற்செயல்களுக்கு முதுகில் தட்டிக் கொடுத்து, ஊக்கத் தொகைகள் வழங்கி, நன்கு அங்கீகரித்து, நம் நல்ல மனதை (?) புரிய வைத்தால், கொஞ்சக் காலமாவது வண்டியை ஓட்டலாம்.

கோபத்தால் குதித்தால், நம்மை விட ஒருபடி மேலே தாவ அவர்கள் தயார்.
புதிதாக வந்து சேருபவரை விட, இவரே தேவலை என்ற நிலைமையும் உருவாகலாம்.
இனி எப்படி வசதி?

லேனா தமிழ்வாணன்



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Sun Apr 19, 2015 11:37 pm

நல்ல பகிர்வு அம்மா அன்பு மலர் அன்பு மலர்

முற்றிலும் உண்மை



M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sun Apr 19, 2015 11:52 pm

//நன்கு கல்வி கற்று, நல்ல சம்பளம் வாங்க வேண்டும்; வெளியூரோ, வெளிநாடோ போக வேண்டும்; கை கட்டிப் பிழைக்காமல், கை நிறைய சம்பாதித்து, வசதியாக வாழ வேண்டும் என்ற மனோபாவம், சமூகத்தின் அடிமட்டம் வரை வளர்ந்து விட்டதால், எளிய வேலைகளுக்கு ஆள் கிடைப்பது, குதிரை கொம்பாகி வருகிறது.//

இது தான் நிஜம்...பல்லக்கில் ஏற எல்லோருமே தயார் ஆகிவிட்ட நிலையில் பல்லக்கை தூக்குவது யார் என்பது தான் மில்லியன் டாலர் கேள்வி இன்று புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sun Apr 19, 2015 11:54 pm

M.M.SENTHIL wrote:நல்ல பகிர்வு அம்மா அன்பு மலர் அன்பு மலர்

முற்றிலும் உண்மை
மேற்கோள் செய்த பதிவு: 1131536

நன்றி செந்தில் புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக