Latest topics
» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம் by i6appar Today at 6:07 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:38 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:12 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 3:01 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 1:35 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:14 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 12:30 pm
» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Today at 12:23 pm
» கருத்துப்படம் 04/07/2024
by Dr.S.Soundarapandian Today at 12:21 pm
» அலங்கார முகமூடிகள்!
by Dr.S.Soundarapandian Today at 12:14 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 12:11 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am
» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am
» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am
» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am
» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am
» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am
» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am
» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm
» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm
» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am
» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am
» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am
» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am
» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am
» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am
» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm
Top posting users this week
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Guna.D |
| |||
ஜாஹீதாபானு |
| |||
i6appar |
|
Top posting users this month
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Guna.D |
| |||
ஜாஹீதாபானு |
| |||
i6appar |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
என்றும் விளம்பர ஒளிவெள்ளத்தில் கருணாநிதி!
+2
யினியவன்
சிவா
6 posters
Page 1 of 1
என்றும் விளம்பர ஒளிவெள்ளத்தில் கருணாநிதி!
மீண்டும் சத்தமின்றி சர்ச்சையைக் கிளப்பியிருக்கிறார் திமுக தலைவரும், முன்னாள் முதல்வருமான மு.கருணாநிதி.
வழக்கம் போலவே இந்த முறையும் அவரே வந்துதான் சர்ச்சையில் விழுந்திருக்கிறார். நடிகர் வடிவேலுவுக்கு ரிஸ்க் எடுப்பது ரஸ்க் சாப்பிடுவது மாதிரி என்றால், கருணாநிதிக்கு தொடர்ந்து சர்ச்சைகளை வலியப் போய் கிளப்புவதும், தானே சர்ச்சைகளின் சூத்திரதாரியாய் விளங்குவதும், பாமரனின் மொழியில் சொன்னால் அல்வா சாப்பிடுவதுப் போன்றது.
வைணவர்களின் முக்கிய ஆன்மிக குருவான ராமானுஜர் வாழ்க்கை வரலாற்றை தான் கதையாக எழுதி, கலைஞர் தொலைகாட்சிக்கு தொடராக எடுக்கப் போவதாக சில நாட்களுக்கு முன்பு கருணாநிதி கொடுத்த பேட்டிதான் சர்ச்சையைக் கிளப்பியிருக்கிறது.
அடிப்படையில் நாத்திகரான கருணாநிதி, எவ்வாறு வைணவர்களின் ஆன்மீக குரு வின் வாழ்க்கையை கதையாக எழுதலாம், படமாக எடுக்கலாம் என்று பிராமண சங்கங்களின் ஒரு தரப்பிடமிருந்து கண்டனம் கிளம்பியிருக்கிறது. 'வாழ்நாள் முழுவதும், பிராமணர்களை துவேஷிப்பதை வாழ்க்கை நெறியாகக் கொண்ட ஒருவர், தன்னை நாத்திகரென்றே பிரகடனப் படுத்திக் கொண்ட ஒருவர் ராமானுஜரின் வாழ்க்கையை கதையாக எழுதுவதை, சின்னத்திரை படமாக எடுப்பதை நாம் புறக்கணிக்க வேண்டும்' என்று ஏற்கெனவே அறிக்கை வெளியியிட்டு விட்டார், பிராமண இளைஞர் சங்கத்தைச் சேர்ந்த கே.ராமசுப்பிரமணியன்.
வெளிப்படையாக கருணாநிதியின் தொடருக்கு இதுவரை எவரும் தடை கேட்கவில்லை, வரும் நாட்களில் இந்த கோரிக்கை வரலாம். மற்றோர் புறம், நாத்திகரான கலைஞர், ராமானுஜரின் தொடரை எழுதுவது சரியல்ல என்றே ஒரு தரப்பு திராவிட இயக்கச் சிந்தனையாளர்களிடம் கருத்து நிலவுகிறது.
திராவிட இயக்க வரலாற்று அறிஞர்களில் முக்கியமானவரான க.திருநாவுக்கரசு இது தொடர்பாக கருணாநிதிக்கே தனது ஆட்சேபனையைத் தெரிவித்து கடிதம் எழுதி விட்டார். மார்க்சிய சிந்தனையாளரும், எழுத்தாளருமான அருணன், ராமானுஜரின் வாழ்க்கை வரலாற்றை கருணாநிதி யாரையோ திருப்திபடுத்தவே எழுதுகிறார் என்கிறார்.
இந்த சர்ச்சையைத் தான் கலைஞர் விரும்புகிறார். வாழ்த்தினாலும், வசவுகளையே தொடர்ந்து வீசினாலும், விவாதத்தின் மையப் புள்ளியாக என்றும் விளங்குவதே கலைஞரின் பேரவா. கிராமப்புறங்களில் ஒன்று சொல்லுவார்கள், தனக்குத் தானே அதிக முக்கியத்துவம் கொடுத்துக் கொள்ளும் ஒருவரைப் பற்றி; 'அவர் திருமண வீட்டில் மாப்பிள்ளையாகவும், துக்க வீட்டில் துக்கத்துக்கு காரணமாகவும் இருக்க விரும்புவாரென்று'.
திமுக தலைவரைப் போல தமிழக அரசியலில் விமர்சிக்கப்பட்டவர் வேறெவரும் இல்லையென்பது உண்மைதான். ஆனால் இதில் சரி பாதிக்கும் மேற்பட்ட சர்ச்சைகளுக்கு அவரே காரிய கர்த்தா என்பதுதான் உண்மை. சில வருடங்களுக்கு முன் இந்தக் கட்டுரையாளனுக்கு ஏற்பட்ட அனுபவம் சுவாரஸ்யமானது.
குமுதம் ரிப்போர்ட்டர் வார ஏட்டில் கலைஞரையும், குஷ்புவையும் இணைத்து வெளியிடப்பட்ட கட்டுரைக்காக திமுகவின் ஒவ்வொரு அணியினரும் அந்த அலுவலகம் முன்பாக ஒவ்வொரு நாளும் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஒரு குறிப்பிட்ட நாள் ஆர்பாட்டத்தில் ஈடுபடவிருந்த அணியின் தலைவருக்கு கருணாநிதியிடமிருந்து காலையிலேயே தொலைபேசி வந்தது. 'பார்த்து, ஆர்ப்பாட்டம் பண்ணுங்கள். நம்மைப் பற்றி எழுதுவதை நிறுத்தி விடப் போகிறார்கள்' என்பதுதான் அந்த தொலைபேசி தகவல். இதுதான் கருணாநிதி.
இதில் சரி, தவறு என்று ஏதும் இல்லை. இதில் வரும் விமர்சனங்களும் தன்னிலைப் படுத்தப் பட்டவைதான் (சப்ஜெக்டிவ்). 90 வயதை பூர்த்தி செய்து, வரும் ஜூனில் 91 வயதை தொடவிருக்கும் ஒருவர், அவர் மீது நமக்கு ஓராயிரம் விமர்சனங்கள் இருந்தாலும், பல விஷயங்களிலும் நாட்டம் செலுத்துவது ஆச்சரியமானதுதான்.
இந்த வயதிலும் புதியதாக ஒரு புத்தகத்தை, சின்னத் திரைக் காவியத்தை படைக்க முயலுவதென்பது, அசாத்திய ஆளுமையின் வெளிப்பாடுதான். இந்த 90 வயதிலும் கலைஞர் மு கருணாநிதி, விளம்பர ஒளி வெள்ளத்தில் நிற்கவே விரும்புகிறார் என்பது சப்ஜெக்டிவ்வாகவும் இருக்கலாம், அதை கடந்த உண்மையாகவும் இருக்கலாம்…
ஆனால் ராமானுஜரைப் பற்றி எழுத வந்து தானே இன்று கதாநாயகனாக, சர்ச்சை நாயகனாக நிற்கிறார் பாருங்கள், மு.கருணாநிதி… அதுதான் அவரது சூட்சுமம்..!
- ஆர்.மணி, பத்திரிகையாளர், அரசியல் விமர்சகர்
வழக்கம் போலவே இந்த முறையும் அவரே வந்துதான் சர்ச்சையில் விழுந்திருக்கிறார். நடிகர் வடிவேலுவுக்கு ரிஸ்க் எடுப்பது ரஸ்க் சாப்பிடுவது மாதிரி என்றால், கருணாநிதிக்கு தொடர்ந்து சர்ச்சைகளை வலியப் போய் கிளப்புவதும், தானே சர்ச்சைகளின் சூத்திரதாரியாய் விளங்குவதும், பாமரனின் மொழியில் சொன்னால் அல்வா சாப்பிடுவதுப் போன்றது.
வைணவர்களின் முக்கிய ஆன்மிக குருவான ராமானுஜர் வாழ்க்கை வரலாற்றை தான் கதையாக எழுதி, கலைஞர் தொலைகாட்சிக்கு தொடராக எடுக்கப் போவதாக சில நாட்களுக்கு முன்பு கருணாநிதி கொடுத்த பேட்டிதான் சர்ச்சையைக் கிளப்பியிருக்கிறது.
அடிப்படையில் நாத்திகரான கருணாநிதி, எவ்வாறு வைணவர்களின் ஆன்மீக குரு வின் வாழ்க்கையை கதையாக எழுதலாம், படமாக எடுக்கலாம் என்று பிராமண சங்கங்களின் ஒரு தரப்பிடமிருந்து கண்டனம் கிளம்பியிருக்கிறது. 'வாழ்நாள் முழுவதும், பிராமணர்களை துவேஷிப்பதை வாழ்க்கை நெறியாகக் கொண்ட ஒருவர், தன்னை நாத்திகரென்றே பிரகடனப் படுத்திக் கொண்ட ஒருவர் ராமானுஜரின் வாழ்க்கையை கதையாக எழுதுவதை, சின்னத்திரை படமாக எடுப்பதை நாம் புறக்கணிக்க வேண்டும்' என்று ஏற்கெனவே அறிக்கை வெளியியிட்டு விட்டார், பிராமண இளைஞர் சங்கத்தைச் சேர்ந்த கே.ராமசுப்பிரமணியன்.
வெளிப்படையாக கருணாநிதியின் தொடருக்கு இதுவரை எவரும் தடை கேட்கவில்லை, வரும் நாட்களில் இந்த கோரிக்கை வரலாம். மற்றோர் புறம், நாத்திகரான கலைஞர், ராமானுஜரின் தொடரை எழுதுவது சரியல்ல என்றே ஒரு தரப்பு திராவிட இயக்கச் சிந்தனையாளர்களிடம் கருத்து நிலவுகிறது.
திராவிட இயக்க வரலாற்று அறிஞர்களில் முக்கியமானவரான க.திருநாவுக்கரசு இது தொடர்பாக கருணாநிதிக்கே தனது ஆட்சேபனையைத் தெரிவித்து கடிதம் எழுதி விட்டார். மார்க்சிய சிந்தனையாளரும், எழுத்தாளருமான அருணன், ராமானுஜரின் வாழ்க்கை வரலாற்றை கருணாநிதி யாரையோ திருப்திபடுத்தவே எழுதுகிறார் என்கிறார்.
இந்த சர்ச்சையைத் தான் கலைஞர் விரும்புகிறார். வாழ்த்தினாலும், வசவுகளையே தொடர்ந்து வீசினாலும், விவாதத்தின் மையப் புள்ளியாக என்றும் விளங்குவதே கலைஞரின் பேரவா. கிராமப்புறங்களில் ஒன்று சொல்லுவார்கள், தனக்குத் தானே அதிக முக்கியத்துவம் கொடுத்துக் கொள்ளும் ஒருவரைப் பற்றி; 'அவர் திருமண வீட்டில் மாப்பிள்ளையாகவும், துக்க வீட்டில் துக்கத்துக்கு காரணமாகவும் இருக்க விரும்புவாரென்று'.
திமுக தலைவரைப் போல தமிழக அரசியலில் விமர்சிக்கப்பட்டவர் வேறெவரும் இல்லையென்பது உண்மைதான். ஆனால் இதில் சரி பாதிக்கும் மேற்பட்ட சர்ச்சைகளுக்கு அவரே காரிய கர்த்தா என்பதுதான் உண்மை. சில வருடங்களுக்கு முன் இந்தக் கட்டுரையாளனுக்கு ஏற்பட்ட அனுபவம் சுவாரஸ்யமானது.
குமுதம் ரிப்போர்ட்டர் வார ஏட்டில் கலைஞரையும், குஷ்புவையும் இணைத்து வெளியிடப்பட்ட கட்டுரைக்காக திமுகவின் ஒவ்வொரு அணியினரும் அந்த அலுவலகம் முன்பாக ஒவ்வொரு நாளும் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஒரு குறிப்பிட்ட நாள் ஆர்பாட்டத்தில் ஈடுபடவிருந்த அணியின் தலைவருக்கு கருணாநிதியிடமிருந்து காலையிலேயே தொலைபேசி வந்தது. 'பார்த்து, ஆர்ப்பாட்டம் பண்ணுங்கள். நம்மைப் பற்றி எழுதுவதை நிறுத்தி விடப் போகிறார்கள்' என்பதுதான் அந்த தொலைபேசி தகவல். இதுதான் கருணாநிதி.
இதில் சரி, தவறு என்று ஏதும் இல்லை. இதில் வரும் விமர்சனங்களும் தன்னிலைப் படுத்தப் பட்டவைதான் (சப்ஜெக்டிவ்). 90 வயதை பூர்த்தி செய்து, வரும் ஜூனில் 91 வயதை தொடவிருக்கும் ஒருவர், அவர் மீது நமக்கு ஓராயிரம் விமர்சனங்கள் இருந்தாலும், பல விஷயங்களிலும் நாட்டம் செலுத்துவது ஆச்சரியமானதுதான்.
இந்த வயதிலும் புதியதாக ஒரு புத்தகத்தை, சின்னத் திரைக் காவியத்தை படைக்க முயலுவதென்பது, அசாத்திய ஆளுமையின் வெளிப்பாடுதான். இந்த 90 வயதிலும் கலைஞர் மு கருணாநிதி, விளம்பர ஒளி வெள்ளத்தில் நிற்கவே விரும்புகிறார் என்பது சப்ஜெக்டிவ்வாகவும் இருக்கலாம், அதை கடந்த உண்மையாகவும் இருக்கலாம்…
ஆனால் ராமானுஜரைப் பற்றி எழுத வந்து தானே இன்று கதாநாயகனாக, சர்ச்சை நாயகனாக நிற்கிறார் பாருங்கள், மு.கருணாநிதி… அதுதான் அவரது சூட்சுமம்..!
- ஆர்.மணி, பத்திரிகையாளர், அரசியல் விமர்சகர்
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![என்றும் விளம்பர ஒளிவெள்ளத்தில் கருணாநிதி! Q9CBqnj](https://i.imgur.com/Q9CBqnj.png)
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: என்றும் விளம்பர ஒளிவெள்ளத்தில் கருணாநிதி!
ஏங்க இப்படி அடி வாங்குறீங்க? அடிக்கறப்ப ஒருத்தன் நீ ரொம்ப நல்லவன்டா
எவ்ளோ அடிச்சாலும் தாங்குற ன்னு சொன்னாம்மா அதான் - வடிவேலு
ஏங்க இப்படி அடி வாங்குறீங்க? அடிக்கறப்ப ஒருத்தனும் நீ ரொம்ப நல்லவன்டா ன்னு
சொல்லலேன்னாலும் அதை தாங்குற பக்குவம் இருக்கும்மா அதான் - கலைஞர்
எவ்ளோ அடிச்சாலும் தாங்குற ன்னு சொன்னாம்மா அதான் - வடிவேலு
ஏங்க இப்படி அடி வாங்குறீங்க? அடிக்கறப்ப ஒருத்தனும் நீ ரொம்ப நல்லவன்டா ன்னு
சொல்லலேன்னாலும் அதை தாங்குற பக்குவம் இருக்கும்மா அதான் - கலைஞர்
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Re: என்றும் விளம்பர ஒளிவெள்ளத்தில் கருணாநிதி!
நல்ல பதிவு....
நன்றி...........
நன்றி...........
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
கொடுப்பதற்கும் பெறுவதற்கும் உரிய விலை மதிப்பில்லாத பரிசு அன்பு .
![என்றும் விளம்பர ஒளிவெள்ளத்தில் கருணாநிதி! W5td1pX3QFi1kBRhH0I3+Affection](https://www.filepicker.io/api/file/w5td1pX3QFi1kBRhH0I3+Affection.jpg)
M.Saranya- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2190
இணைந்தது : 26/08/2014
Re: என்றும் விளம்பர ஒளிவெள்ளத்தில் கருணாநிதி!
art of being in limelight --எப்போதும் ஒளி வெள்ளத்தில் இருக்கும் கலை அறிந்த கலைஞர்.
வயதெல்லாம் தடை இல்லை இவருக்கு .
இவரே நவீன ராமானுஜன் என்று யாராவது கவிஞரை விட்டு சொல்ல சொன்னாலும் சொல்லுவார் .
ரமணியன்
வயதெல்லாம் தடை இல்லை இவருக்கு .
இவரே நவீன ராமானுஜன் என்று யாராவது கவிஞரை விட்டு சொல்ல சொன்னாலும் சொல்லுவார் .
ரமணியன்
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35031
இணைந்தது : 03/02/2010
Re: என்றும் விளம்பர ஒளிவெள்ளத்தில் கருணாநிதி!
ராமானுஜரே கனவில் வந்து கட்டளை இட்டதாக சொன்னாலும் சொல்வார்...!!
Re: என்றும் விளம்பர ஒளிவெள்ளத்தில் கருணாநிதி!
எல்லாம் சுயநலமே..............
சிவனாசான்- வி.ஐ.பி
- பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» நீதி என்றும் வெல்லும்; குறுக்கு வழிகளால் அதைத் தடுக்க முடியாது! - ஜெ., வழக்கு குறித்து கருணாநிதி
» ' நாகரிகம் மிக்கவர் கருணாநிதி': ராமதாஸ் - 'கருணாநிதி அன்பாக சொல்கிறார்': வைகோ
» தமிழ்தான் கருணாநிதி; கருணாநிதி தான் தமிழ்-கவர்னர் பர்னாலா
» விளம்பர வாசகம்!
» விளம்பர நன்கொடை
» ' நாகரிகம் மிக்கவர் கருணாநிதி': ராமதாஸ் - 'கருணாநிதி அன்பாக சொல்கிறார்': வைகோ
» தமிழ்தான் கருணாநிதி; கருணாநிதி தான் தமிழ்-கவர்னர் பர்னாலா
» விளம்பர வாசகம்!
» விளம்பர நன்கொடை
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|