புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Sat Sep 28, 2024 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Sep 28, 2024 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
அக்ளி அக்ரி - அரசுக்கு அவமானம்  Poll_c10அக்ளி அக்ரி - அரசுக்கு அவமானம்  Poll_m10அக்ளி அக்ரி - அரசுக்கு அவமானம்  Poll_c10 
284 Posts - 45%
heezulia
அக்ளி அக்ரி - அரசுக்கு அவமானம்  Poll_c10அக்ளி அக்ரி - அரசுக்கு அவமானம்  Poll_m10அக்ளி அக்ரி - அரசுக்கு அவமானம்  Poll_c10 
236 Posts - 37%
mohamed nizamudeen
அக்ளி அக்ரி - அரசுக்கு அவமானம்  Poll_c10அக்ளி அக்ரி - அரசுக்கு அவமானம்  Poll_m10அக்ளி அக்ரி - அரசுக்கு அவமானம்  Poll_c10 
32 Posts - 5%
Dr.S.Soundarapandian
அக்ளி அக்ரி - அரசுக்கு அவமானம்  Poll_c10அக்ளி அக்ரி - அரசுக்கு அவமானம்  Poll_m10அக்ளி அக்ரி - அரசுக்கு அவமானம்  Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
அக்ளி அக்ரி - அரசுக்கு அவமானம்  Poll_c10அக்ளி அக்ரி - அரசுக்கு அவமானம்  Poll_m10அக்ளி அக்ரி - அரசுக்கு அவமானம்  Poll_c10 
19 Posts - 3%
prajai
அக்ளி அக்ரி - அரசுக்கு அவமானம்  Poll_c10அக்ளி அக்ரி - அரசுக்கு அவமானம்  Poll_m10அக்ளி அக்ரி - அரசுக்கு அவமானம்  Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
அக்ளி அக்ரி - அரசுக்கு அவமானம்  Poll_c10அக்ளி அக்ரி - அரசுக்கு அவமானம்  Poll_m10அக்ளி அக்ரி - அரசுக்கு அவமானம்  Poll_c10 
8 Posts - 1%
T.N.Balasubramanian
அக்ளி அக்ரி - அரசுக்கு அவமானம்  Poll_c10அக்ளி அக்ரி - அரசுக்கு அவமானம்  Poll_m10அக்ளி அக்ரி - அரசுக்கு அவமானம்  Poll_c10 
7 Posts - 1%
Guna.D
அக்ளி அக்ரி - அரசுக்கு அவமானம்  Poll_c10அக்ளி அக்ரி - அரசுக்கு அவமானம்  Poll_m10அக்ளி அக்ரி - அரசுக்கு அவமானம்  Poll_c10 
7 Posts - 1%
mruthun
அக்ளி அக்ரி - அரசுக்கு அவமானம்  Poll_c10அக்ளி அக்ரி - அரசுக்கு அவமானம்  Poll_m10அக்ளி அக்ரி - அரசுக்கு அவமானம்  Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அக்ளி அக்ரி - அரசுக்கு அவமானம்


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Apr 10, 2015 2:13 pm

அக்ளி அக்ரி - அரசுக்கு அவமானம்  15a

'கெட்டதில் இருந்து கழிசடைக்குப் போவதுதான் இங்கு அரசியல் வளர்ச்சி’ என்றார் தந்தை பெரியார். இதற்கு 'மாட்டிக்கொண்ட’ உதாரணம் 'அக்ரி’ கிருஷ்ணமூர்த்தி!


தமிழக வேளாண்மைத் துறையின் உதவிச் செயற்பொறியாளராக திருநெல்வேலியில் பணியாற்றிய முத்துக்குமாரசாமி, ரயில் முன் பாய்ந்து உயிரை மாய்த்துக்கொண்டது பிப்ரவரி மாதம் 20-ம் தேதி. இந்த வழக்கில், தமிழக வேளாண்மை அமைச்சராக இருந்து பதவி பறிக்கப்பட்ட 'அக்ரி’ கிருஷ்ணமூர்த்தி கைதுசெய்யப்பட்டது ஏப்ரல் 5-ம் தேதி. இதற்கு இடைப்பட்ட காலத்தில் நடந்ததை அறிந்தால், இந்தக் கைது நடவடிக்கையைத் துணிச்சலானது எனப் போற்ற முடியாது. மறைப்பதற்கான வேலைகளை எல்லாம் பார்த்தும், அது முடியாமல்போனதால் வேறு வழியே இல்லாமல் 'அக்ரி’ கிருஷ்ணமூர்த்தி கைதியாக்கப்பட்டுள்ளார். ஓர் அரசு அதிகாரியை தற்கொலைக்குத் தூண்டிய விவகாரத்தில் தொடர்புடைய அ.தி.மு.க பிரமுகர்கள் சிலர், இன்னும் சிக்கவேண்டியுள்ளது. அ.தி.மு.க ஆட்சியும் அ.தி.மு.க என்ற கட்சியும் எப்படிக் கெட்டுக் கிடக்கின்றன என்பதை அம்பலப்படுத்திவிட்டு இறந்திருக்கிறார் முத்துக்குமாரசாமி.

வேளாண்மைத் துறையில் தற்காலிக ஓட்டுநர்களாக ஏழு பேரைத் தேர்வுசெய்வதற்கான உத்தரவை, நேர்மையாக அமல்படுத்த முயற்சித்ததில்தான் முத்துக்குமாரசாமியின் உயிர் பலியாகியிருக்கிறது. தனக்குத் தரப்பட்ட பொறுப்பைச் செயல்படுத்தும்விதமாக ஏழு பேரையும் தகுதியின் அடிப்படையில் தேர்வுசெய்துள்ளார் முத்துக்குமாரசாமி. யார் பணம் தருகிறார்களோ, அவர்களை நியமிக்கச் சொல்லியிருக்கிறார் 'அக்ரி’ கிருஷ்ணமூர்த்தி. அதற்கு முத்துக்குமாரசாமி சம்மதிக்கவில்லை. இந்த ஏழு இடங்களையும் நெல்லையைச் சேர்ந்த ஆளும் கட்சிப் பிரமுகர்கள் சிலருக்கு 'குத்தகையாகவும்’ கொடுத்துள்ளார்கள். அதாவது அவர்கள் 'விற்று’ எடுத்துக்கொள்ளவேண்டியதுதான். நெல்லுக்கு மட்டுமே பாய்ந்துகொண்டிருக்கக் கூடாது அல்லவா? 'புல்லுக்கும் போகட்டும்’ என்ற பரந்த மனோபாவம்!

அந்தப் பிரமுகர்கள், முத்துக்குமாரசாமிக்கு நெருக்கடி கொடுக்கிறார்கள். தாங்கள் சொல்பவர்களுக்கு வேலை நியமனம் தரச் சொல்கிறார்கள். மறுக்கிறார் முத்துக்குமாரசாமி. விதிமுறைப்படி, ஆட்களைத் தேர்வுசெய்கிறார். நியமனம் செய்கிறார். 'நாங்கள் சொன்ன ஆட்களை நியமிக்காவிட்டாலும் போகட்டும். நியமிக்கப்பட்ட ஏழு பேரிடம் பணம் வாங்கிக் கொடு’ என்ற அடுத்த அஸ்திரத்தை வீசுகிறார்கள். 'நான் அப்படிப் பணம் வாங்கித் தர மாட்டேன். என்னால் அது முடியாது’ என முத்துக்குமாரசாமி மறுக்கிறார். விடவில்லை அவர்கள். 'உன்னால் பணம் வசூல்செய்து தர முடியாவிட்டால், உன் பணத்தில் இருந்து கொடு’ என்கிறார்கள். எப்படியோ தப்பிக்க நினைத்து தனது சொந்தப் பணத்தில் இருந்து ஓரளவு திரட்டிக் கொடுக்கிறார். 'முழுப் பணத்தையும் கொடு’ என அவர்கள் நெருக்குகிறார்கள். அவ்வளவு தர அவரால் இயலவில்லை. அமைச்சர் 'அக்ரி’ கிருஷ்ணமூர்த்தி, அவரோடு இன்று கைதாகியுள்ள வேளாண் பொறியியல் துறை முதன்மைப் பொறியாளர் (பொறுப்பு) செந்தில், நெல்லை அ.தி.மு.க பிரமுகர்கள் நான்கைந்து பேர் என விடுபட முடியாத வளையத்தில் மாட்டிக்கொண்டு தவித்தார் முத்துக்குமாரசாமி. அவரால் பணம் கொடுக்க முடியவில்லை. இருந்தது உயிர் மட்டும்தான். கொடுத்துவிட்டார்!

'எந்தப் பிரச்னையையும் அமுக்க வேண்டுமானால், அதில் கல்லைப் போடு; இல்லைன்னா, கமிட்டியைப் போடு’ என்பார்கள். அந்த வரிசையில் சேர்க்கவேண்டிய ஒன்று சி.பி.சி.ஐ.டி விசாரணை. முத்துக்குமாரசாமி தற்கொலையும் சி.பி.சி.ஐ.டி விசாரணைக்குப் போனது. தற்கொலை செய்துகொள்வதற்கு முன்னால் யார் யாரிடம் முத்துக்குமாரசாமி பேசினார், அவர்களில் யாராவது இவரை மிரட்டினார்களா என்பதில் இருந்து சி.பி.சி.ஐ.டி தொடங்கி இருக்க வேண்டும். அமைச்சர் 'அக்ரி’ கிருஷ்ணமூர்த்தியின் பி.ஏ-க்கள் பெயர், இறுதியாகப் பேசிய பட்டியலில் இருப்பதாக தகவல் கசிந்தது. ஒரு பி.ஏ-வை விசாரிப்பதாகவும் அவரைக் கைதுசெய்துவிட்டதாகவும் தகவல் பரவியது. உடனடியாக வேர்த்து விறுவிறுத்துப்போய், 'அப்படி நாங்கள் யாரையும் கைதுசெய்யவில்லை’ எனப் பெயர் குறிப்பிட விரும்பாத போலீஸ் அதிகாரி பேட்டி வரவைத்தார். 'அக்ரி’ கிருஷ்ணமூர்த்தியின் கட்சிப் பொறுப்புகள் பறிக்கப்பட்டு, அவரது அமைச்சர் பதவியே பிடுங்கப்பட்ட வழக்கில், அவரது பி.ஏ-வை விசாரிப்பதைக்கூட பகிரங்கமாக மறுக்கவேண்டிய அவசியம் என்ன வந்தது? சி.பி.சி.ஐ.டி விசாரிக்கலாம் எனச் சொன்னோமே தவிர, விசாரிக்கச் சொல்லவில்லையே என்ற அர்த்தத்தில் நடந்துகொண்டார்கள்.

முதலில், போலீஸ் கண்காணிப்பு முத்துக்குமாரசாமி வீட்டைச் சுற்றி இருந்திருக்க வேண்டும்; அவரது குடும்பத்துக்கு அச்சுறுத்தல் இருக்கிறதா எனப் பார்த்திருக்க வேண்டும். அச்சுறுத்தல் செய்பவர்களைக் கண்டுபிடித்தால், தற்கொலைக்குத் தூண்டியவரை நெருங்கிவிடலாம் என்பது சிம்பிள் லாஜிக். முத்துக்குமாரசாமி வீட்டுக்கே வந்து, ' 'நடந்தது நடந்துவிட்டது. இதில் நாங்கள் மேல் நடவடிக்கைக்கு விரும்பவில்லை. எங்கள் குடும்பத்தில் யாராவது ஒருவருக்கு அரசு வேலை கொடுங்கள்’ என எழுதிக்கொடுங்கள்'' என அவரது மகனிடம் கேட்டுள்ளார் அரசு அதிகாரி ஒருவர். அவர் விசாரணை வளையத்தில் வந்ததாகத் தெரியவில்லை.

இதைவிட கொடூரம், முத்துக்குமாரசாமியை ஊழல் பேர்வழி எனக் காட்ட முயற்சித்தது. முத்துக்குமாரசாமிக்கு வருமான வரித் துறையில் இருந்து விசாரணை அழைப்பு வந்துள்ளது. அவர் எல்.ஐ.சி-யில் கடன் வாங்கி வீடு கட்டியுள்ளார். இவருக்கு வீடு கட்டித் தந்த கட்டட ஒப்பந்தக் காரருக்கும் விசாரணை அழைப்பு வந்துள்ளது. முத்துக்குமாரசாமியின் வீட்டுக்கு விசாரணை நடத்தப்போன போலீஸிடம் அவரது குடும்பத்தினரே இதனைச் சொல்லியும் உள்ளார்கள். இதை வைத்து, 'முத்துக்குமாரசாமிக்கு முறைகேடாகப் பணம் வந்தது. அவர் ரியல் எஸ்டேட்டில் முதலீடு செய்தார். அதை வருமான வரித் துறை கண்டுபிடித்துவிட்டது. அவரை விசாரணைக்கு அழைத்தது. அதனால்தான் தற்கொலை செய்து கொண்டார்’ எனப் பரப்பினார்கள். தவறான வழியில் பணம் சம்பாதிக்க நினைப்பவன் தற்கொலை செய்ய மாட்டான், மான அவமானம் பற்றி கவலைப்படாதவன்தான் குற்றங்களில் இறங்குவான் என்பதுகூடத் தெரியாமல்... 'தற்கொலை’ செய்துகொண்ட முத்துக்குமாரசாமியை இவர்கள் மீண்டும் 'கொலை’ செய்தார்கள்.

ரத்தம் சிந்தினால், அது பழிவாங்காமல் விடாது என்பது யதார்த்தம். ஊடகம், அரசியல் கட்சித் தலைவர்கள், சமூக இயக்கங்கள், அரசு ஊழியர்கள்... என அனைத்துத் தரப்பு மக்களின் இடித்துரைப்புக்குப் பின் 'அக்ரி’ கிருஷ்ணமூர்த்தியை கைதுசெய்வதைத் தவிர வேறு வழி இல்லை என்ற நெருக்கடி உண்டாகிவிட்டது. சி.பி.ஐ விசாரணை கேட்டு எந்த நேரமும் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்படலாம் என்ற நிலையில், விவகாரமான கேள்விகளை நீதிமன்றம் கேட்கலாம் என்ற அச்சத்தில் 'அக்ரி’ கைதுசெய்யப்பட்டுள்ளார். புண்ணியங்களுக்காகக் கோயில் கோயிலாகப் பரிகாரங்கள் செய்துவரும்போது, 'இந்தப் பாவம் எதற்கு நமக்கு?’ என்ற நடுக்கமும் இந்தக் கைதுக்குத் தூண்டி இருக்கலாம். தற்கொலை செய்துகொண்ட முத்துக்குமாரசாமியின் குடும்பம், தமிழகத் தலைமைச் செயலாளர் ஞானதேசிகனுக்கு ஓரளவு உறவுமுறை கொண்டது. மாநிலத்தின் தலைமைச் செயலாளரின் உறவுக் குடும்பத்துக்கு ஏற்பட்ட நெருக்கடிக்கு, நடவடிக்கை எடுக்கவே இவ்வளவு தாமதமும் இழுத்தடிப்பும் நடக்குமானால், அப்பாவிகள் நிலைமையைச் சொல்லத் தேவை இல்லை.

இது ஏதோ 'அக்ரி’ கிருஷ்ணமூர்த்திக்கும் அதிகாரி முத்துக்குமாரசாமிக்குமான தனிப்பட்ட பிரச்னை அல்ல. 'அக்ரி’யைப்போலவே, இன்னும் அவரைவிடக் கூடுதலாகவே அதிகார வேட்கையோடு நடந்துகொள்ளும் அமைச்சர்கள் மேலும் பலர், இந்த அமைச்சரவையில் உண்டு. ஐ.ஏ.எஸ்-கள் என்றும் பாராமல், அரசு அதிகாரிகள் என்றும் மதிக்காமல் நேர்மையான மனிதர்களை நித்தமும் இவர்கள் துள்ளத் துடிக்க துன்புறுத்திக்கொண்டுதான் இருக்கிறார்கள். முத்துக்

குமாரசாமியைப்போல் இவர்கள் தற்கொலை செய்துகொள்ளவில்லையே தவிர, செத்துப்பிழைத்துக்கொண்டுதான் இருக்கிறார்கள். அவர்களும் கண்காணிக்கப்பட, விசாரிக்கப்பட வேண்டிய நேரம் இது!

யார் விசாரிப்பது தமிழக முதல்வரா... மக்களின் முதல்வரா?

விகடன்



அக்ளி அக்ரி - அரசுக்கு அவமானம்  Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Fri Apr 10, 2015 2:17 pm

அக்ரி அக்லி
அம்மா வெகுளி
அப்படீன்னு தான
திருந்தாத தமிழகம் சொல்லுது




M.Saranya
M.Saranya
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2190
இணைந்தது : 26/08/2014

PostM.Saranya Fri Apr 10, 2015 2:28 pm

அக்ரி’யைப்போலவே, இன்னும் அவரைவிடக் கூடுதலாகவே அதிகார வேட்கையோடு நடந்துகொள்ளும் அமைச்சர்கள் மேலும் பலர், இந்த அமைச்சரவையில் உண்டு. ஐ.ஏ.எஸ்-கள் என்றும் பாராமல், அரசு அதிகாரிகள் என்றும் மதிக்காமல் நேர்மையான மனிதர்களை நித்தமும் இவர்கள் துள்ளத் துடிக்க துன்புறுத்திக்கொண்டுதான் இருக்கிறார்கள்.


முற்றிலும் உண்மை...........ஆனால் இந்த அமைச்சரவை மட்டுமல்ல ஆட்சியில் அமரும் ஒவ்வொரு கட்சியினரும் இப்படித்தான் நடந்து கொள்கின்றனர்....அதிலும் நம் தமிழ் நாட்டில் மிகவும் மோசமான நிலையே உள்ளது.....



கொடுப்பதற்கும் பெறுவதற்கும் உரிய விலை மதிப்பில்லாத பரிசு அன்பு .

அக்ளி அக்ரி - அரசுக்கு அவமானம்  W5td1pX3QFi1kBRhH0I3+Affection
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக