ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 12:30 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Today at 12:23 pm

» கருத்துப்படம் 04/07/2024
by Dr.S.Soundarapandian Today at 12:21 pm

» அலங்கார முகமூடிகள்!
by Dr.S.Soundarapandian Today at 12:14 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 12:11 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:51 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:45 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:22 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆந்திர போலீசார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 12 தமிழர்கள் சுட்டுக் கொலை!

+2
ராஜா
சிவா
6 posters

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

Go down

ஆந்திர போலீசார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 12 தமிழர்கள் சுட்டுக் கொலை! - Page 2 Empty ஆந்திர போலீசார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 12 தமிழர்கள் சுட்டுக் கொலை!

Post by சிவா Tue Apr 07, 2015 3:59 pm

First topic message reminder :

ஆந்திர போலீசார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 12 தமிழர்கள் சுட்டுக் கொலை! - Page 2 Andhira%20semmaram

திருப்பதி: திருப்பதி வனப்பகுதியில் செம்மரம் வெட்டச் சென்ற தமிழக தொழிலாளர்கள் மீது ஆந்திர போலீசார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 20 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.

திருப்பதி சேஷாசல வனப்பகுதி ஈசகுண்டாவில் சிலர் செம்மரங்களை வெட்டி கொண்டிருந்தனர். அப்போது, அங்கு வந்த ஆந்திர போலீசார் அவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தி உள்ளனர். இந்த துப்பாக்கிச் சூட்டில் 20 பரிதாபமாக உயிரிழந்து உள்ளனர். இதில், 12 பேர் தமிழகத்தை சேர்ந்தவர்கள் என தெரிய வந்துள்ளது.

இதுகுறித்து செம்மரக்கட்டை கடத்தல் கும்பல் தடுப்பு பிரிவு டி.ஐ.ஜி. கங்காராவ் கூறும்போது, ''திருப்பதி சேஷாசல வனப்பகுதி ஈசகுண்டாவில் ஸ்ரீவாரிமெட்டு என்ற இடத்தில் தமிழகத்தை சேர்ந்த 200 தொழிலாளர்கள் செம்மரம் வெட்டுவதாக ஆந்திர போலீசுக்கு ரகசிய தகவல் கிடைத்திருக்கிறது.

இந்த தகவலை அடுத்து அந்த வனப்பகுதியில் ஆந்திர போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டிருந்துள்ளனர். தேடுதல் வேட்டையின்போது, போலீசார் மீது மரம் வெட்டும் தொழிலாளர்கள் கல்வீசித் தாக்குதல் நடத்தி உள்ளனர். இந்த கல்வீச்சுத் தாக்குதலில் 2 ஆந்திர போலீசார் படுகாயம் அடைந்துள்ளனர்.

இதை தொடர்ந்து தொழிலாளர்கள் மீது போலீசார் துப்பாக்கிச் சூடு நடத்தி உள்ளனர். இதில் சிலர் பலியாகி உள்ளனர். அதில், 9 தொழிலாளர்கள் திருவண்ணாமலை மாவட்டத்தையும், 3 பேர் வேலூர் மாவட்டத்தையும் சேர்ந்தவர் என தெரிய வந்திருக்கிறது.

மேலும், இந்த துப்பாக்கி சூட்டில் சர்வதேச செம்மரக் கடத்தல் கும்பலை சேர்ந்த நபரும் உயிரிழந்து உள்ளார். மீதமுள்ள 7 பேரை அடையாளம் காணும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது" என்று கூறி உள்ளார்.


ஆந்திர போலீசார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 12 தமிழர்கள் சுட்டுக் கொலை! - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down


ஆந்திர போலீசார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 12 தமிழர்கள் சுட்டுக் கொலை! - Page 2 Empty Re: ஆந்திர போலீசார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 12 தமிழர்கள் சுட்டுக் கொலை!

Post by ராஜா Tue Apr 07, 2015 4:22 pm

உயிரிழப்பு வருந்தத்தக்க செய்தி சோகம் , இது போன்ற அரசாங்க விரோத செயலில் ஈடுபடும் பொது பாதிக்கபடுவது அப்பாவி கடைநிலை தொழிலாளர்கள் தான்.

நீண்ட காலமாக இந்த மரம் வெட்டும் தொழில் நடைபெற்று வருகிறது , இங்கிருந்து கூட்டம் கூட்டமாக பேருந்திலும் ரயிலிலும் சென்று செம்மரம் வெட்டி கொடுப்பதை வாடிக்கையாக வைத்துள்ளனர்.
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

ஆந்திர போலீசார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 12 தமிழர்கள் சுட்டுக் கொலை! - Page 2 Empty Re: ஆந்திர போலீசார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 12 தமிழர்கள் சுட்டுக் கொலை!

Post by சிவா Tue Apr 07, 2015 4:41 pm

துப்பாக்கிச்சூடு குறித்து சந்திரபாபு நாயுடுவுக்கு தமிழக அரசு அவசர கடிதம்.

திருப்பதி துப்பாக்கிச்சூடு குறித்து விசாரணை நடத்துமாறு ஆந்திரா முதல்வர் சந்திரபாபுவுக்கு தமிழக அரசு கடிதம் எழுதியுள்ளது. சுட்டுக் கொன்றதற்கு பதில் 20 பேரையும் கைது செய்திருக்கலாம் என்றும் துப்பாக்கிச் சூட்டில் மனித உரிமை மீறல்கள் நடைபெற்றிருக்கலாம் என்று தமிழக அரசு கூறியுள்ளது. விசாரணை நடத்தினால் முழு உண்மைகள் வெளியாகும் என தமிழக அரசு கருத்து தெரிவித்துள்ளது.


ஆந்திர போலீசார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 12 தமிழர்கள் சுட்டுக் கொலை! - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

ஆந்திர போலீசார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 12 தமிழர்கள் சுட்டுக் கொலை! - Page 2 Empty Re: ஆந்திர போலீசார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 12 தமிழர்கள் சுட்டுக் கொலை!

Post by T.N.Balasubramanian Tue Apr 07, 2015 4:42 pm

தமிழர்கள் என்றால் இளிச்சவாயர்களா என்று ஏற்கனவே பதிவு செய்த படி , அண்டை நாடுகளிலும் ,(லங்கா , மாலத்தீவு ) அண்டை மாநிலங்களிலும் கர்நாடகா ,ஆந்திரா , கேரளா முதலிய இடங்களிலும் கொடுமைக்கு ஆட்படுத்தப்படுகிறார்கள் . தமிழ்நாட்டிலேயே தமிழர்களை கிண்டல் அடிக்கும் குழுவும் இருக்கிறது .
தமிழ் மக்கள் ஜாக்கிரதையாக இருக்கவேண்டிய தருணம் .
ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35031
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

ஆந்திர போலீசார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 12 தமிழர்கள் சுட்டுக் கொலை! - Page 2 Empty Re: ஆந்திர போலீசார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 12 தமிழர்கள் சுட்டுக் கொலை!

Post by சிவா Wed Apr 08, 2015 4:07 pm

ஆந்திரத்திடம் தமிழக அரசு கெஞ்சுவது தவறானது: ராமதாஸ்

திருப்பதி வனப்பகுதியில் 20 தமிழர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட விவகாரத்தில், ஆந்திர அரசிடம் தமிழக அரசு கெஞ்சுவது தவறான அணுகுமுறை என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார்.

மேலும், இந்த விவகாரத்தை உடனடியாக குடியரசுத் தலைவர், பிரதமர் உள்ளிட்டோரின் கவனத்துக்கு இதைக் கொண்டு சென்று தமிழர்களின் படுகொலைக்கு நீதி கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்ட அறிக்கையில், "ஆந்திர மாநிலம் சேஷாசலம் மலைப் பகுதியில் 20 தமிழர்கள் ஆந்திரக் காவல்துறையால் சுட்டுக் கொல்லப்பட்டது குறித்து அதிர்ச்சியூட்டும் உண்மைகள் வெளியாகியுள்ளன. இது எதிர்பாராமல் நடந்த மோதலின் விளைவு அல்ல... திட்டமிட்டு நடத்தப்பட்ட போலி மோதல் படுகொலைகள் என்று நம்புவதற்குத் தேவையான அனைத்து ஆதாரங்களும் வெளியாகியிருக்கின்றன.

சேஷாசலம் மலைப்பகுதியில் உள்ள ஈதலகுண்ட, சீக்கட்டி தீகலகோண ஆகிய இடங்களில்தான் இந்தப் படுகொலைகள் நிகழ்த்தப்பட்டுள்ளன. அப்பகுதியில் இருந்த செம்மரங்களை வெட்டிக் கடத்தும் முயற்சியில் தொழிலாளர்கள் ஈடுபட்டிருந்தனர்; அவர்களை சுற்றி வளைத்து பிடிக்க முயன்றபோது, கற்களை வீசியதால் தற்காப்புக்காக சுட்டோம் என்று ஆந்திரக் காவல்துறையினர் கூறுவதை ஏற்க முடியாது. ஏனெனில், தொழிலாளர்கள் சுட்டுகொல்லப்பட்ட இடங்களில் ஒன்றான ஈதலகுண்டு பகுதியில் செம்மரங்களே கிடையாது. அதுமட்டுமின்றி அப்பகுதியில் புதர்களைத் தவிர வேறு எதுவும் கிடையாது. அப்பகுதியில் தொழிலாளர்கள் செம்மரம் வெட்டினார்கள் என்றும், காவல்துறையினர் சென்ற போது மறைந்திருந்து கற்களை வீசித் தாக்கினார்கள் என்பதும் பொய்களால் புனையப்பட்ட கட்டுக்கதை என்பதை தவிர வேறு என்னவாக இருக்க முடியும்?

கொல்லப்பட்ட தொழிலாளர்கள் வெட்டி வீழ்த்தியதாக கூறி பறிமுதல் செய்யப்பட்ட செம்மரக்கட்டைகள் அனைத்து பல ஆண்டுகள் பழமையானவை ஆகும். பழைய வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட அந்தக்கட்டைகளை அங்கு போட்டு காவல்துறையினர் நாடகம் ஆடியுள்ளனர். அக்கட்டைகளில் பழைய வழக்கு எண் எழுதப்பட்டிருப்பதும், அதை மறைக்கும் நோக்குடன் அவற்றின் மீது காவல்துறையினர் பெயிண்ட் பூசியிருப்பதுமே இது நாடகம் என்பதை வெட்ட வெளிச்சமாக்கும். பழையக் கட்டைகளா... புதிய கட்டைகளா? என்பதைக் கூட பார்க்காமல் இந்த படுகொலைகள் குறித்த தங்களின் கருத்தை விசாரணை அதிகாரிகள் நம்பி விடுவர் என்று காவல்துறையினர் கருதுகிறார்கள் என்றால் அவர்களின் படுகொலைகளுக்கு ஆந்திர அரசும், அதன் விசாரணை அதிகாரிகளும் எந்த அளவுக்கு ஆதரவாக இருக்கிறார்கள் என்பதை புரிந்து கொள்ளலாம்.

மோதலின்போது தொழிலாளர்கள் சுட்டுக்கொல்லப்பட்டிருந்தால் அவர்களது உடலின் பல பகுதிகளில் துப்பாக்கிக் குண்டு பாய்ந்த காயம் ஏற்பட்டிருக்க வேண்டும். ஆனால், கொல்லப்பட்ட 20 பேருக்கும் மார்பு மற்றும் நெற்றியில் தான் குண்டு பாய்ந்துள்ளது. அதுமட்டுமின்றி, மிகவும் நெருக்கத்தில் வைத்து அவர்களது உடலில் குண்டு பாய்ச்சப்பட்டிருக்கிறது. அவர்கள் ஏற்கனவே கைது செய்யப்பட்டு நெருக்கமாக நிற்கவைத்து தான் சுட்டுக் கொல்லப்பட்டிருக்க வேண்டும் என்ற சந்தேகத்தை இவை உறுதி செய்கின்றன. தொழிலாளர்களின் உடல்களில் நெருப்புக் காயங்களும் காணப்படுவதால் கொல்லப்படுவதற்கு முன்பு அவர்கள் கொடுமைப்படுத்தப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகமும் எழுகிறது.

ஆந்திரக் காவல்துறையின் சிறப்பு அதிரடிப்படைத் தலைவரான காந்தராவ், கடந்த சில நாட்களுக்கு முன்பாக தமிழகக் காவல்துறை அதிகாரிகளுக்கு எழுதியிருந்த கடிதத்தில், தமிழகத் தொழிலாளர்கள் ஆந்திராவுக்கு செம்மரம் வெட்ட வந்தால் அவர்களைச் சுட்டுக் கொல்வோம் என்று எச்சரித்திருந்தார். தமிழகத் தொழிலாளர்களை சுட்டு கொல்ல வேண்டும் என்ற வெறி அவருக்கு இருந்ததையே இது காட்டுகிறது. அதுமட்டுமின்றி, தமிழர்களை சுட்டுக்கொல்ல முடிவு செய்து விட்டு, அதற்கான காரணத்தை உருவாக்குவதற்காகக் கூட இப்படி ஒரு கடிதத்தை காந்த ராவ் எழுதியிருக்கக் கூடும்.

கொல்லப்பட்ட தொழிலாளர்களின் உடல்கள் காவல்துறையினரால் கையாளப்பட்ட விதம் இன்னும் கொடுமையானது. விலங்குகளின் உடல்களை எடுத்து வருவதைப் போல மூங்கிலில் கட்டித் தொங்க விடப்பட்ட நிலையில் தான் தொழிலாளர்களின் உடல்கள் கொண்டு வரப்பட்டன. ஒரு குறிப்பிட்ட தொலைவுக்குப் பிறகு அசுத்தமான டிராக்டரில் ஒன்றின்மீது ஒன்றாக உடல்களைப் போட்டு குப்பையைப் போல அள்ளிச் சென்றுள்ளனர். படுகொலைகள் நடந்த இடத்திற்கு ஒரு கிலோ மீட்டர் தூரம் வரை வாகனங்கள் செல்வதற்கு பாதை உள்ளது. அப்பாதையில் தான் பத்திரிகையாளர்கள் அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர். அவ்வாறு இருக்கும் போது தமிழகத் தொழிலாளர்களின் உடல்களை மிக மோசமான முறையில் ஆந்திரக் காவல்துறையினர் கையாண்டது அவர்களின் மனதில் புதைந்து கிடக்கும் தமிழகத் தொழிலாளர்களுக்கு எதிரான வன்மத்தையும், வெறுப்பையும் தான் காட்டுகின்றன.

ஏற்கனவே நான் கூறியதைப் போல சுட்டுக்கொல்லப்பட்ட தமிழர்கள் அனைவரும் அதிக கூலிக்கு ஆசைப்பட்டு போன அப்பாவிகள் தான். ஆந்திரத்தைச் சேர்ந்த மாஃபியா கும்பல்கள் தான் செம்மரங்களை கடத்தி வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்கின்றன. அவர்களுக்கு ஆந்திரத்திலுள்ள அனைத்துக் கட்சி அரசியல்வாதிகளுடனும் நெருங்கியத் தொடர்பு உள்ளது. இந்தக் கூட்டணி ஆந்திர வனத்தை மொட்டையடித்து வருகிறது. இதை மூடி மறைக்கவே அப்பாவித் தமிழர்களைக் கொன்று கடத்தல்காரர்களாக சித்தரித்து தங்களை உத்தமர்களாகக் காட்டும் முயற்சியில் ஈடுபட்டிருக்கின்றனர்.

தமிழகத் தொழிலாளர்கள் 20 பேரும் திட்டமிட்டு படுகொலை செய்யப்பட்டதற்கான ஆதாரங்கள் தெளிவாக இருப்பதால், அதன் அடிப்படையில் சிறப்பு அதிரடிப்படைத் தலைவர் காந்தாராவ் உள்ளிட்ட காவல்துறையினர் மீது கொலை மற்றும் கூட்டுச் சதி வழக்குத் தொடர்ந்து கைது செய்ய வேண்டும். ஆந்திர அரசால் திட்டமிட்டு நடத்தப்பட்ட கொலைகள் குறித்து அம்மாநில அரசே விசாரிப்பது முறையாக இருக்காது. எனவே, இது பற்றி உச்சநீதிமன்ற நீதிபதியைக் கொண்டு விசாரிக்க வேண்டும்.

தமிழக தொழிலாளர்கள் கொல்லப்பட்ட விஷயத்தில் தமிழக அரசு அலட்சியமாக செயல்படுவது கண்டிக்கத்தக்கது. கடந்த சில ஆண்டுகளுக்கு முன் மும்பையில் பிகார் தொழிலாளர்கள் தாக்கப்பட்டதை பிகார் மாநில அரசு தேசிய பிரச்சினையாக்கியது. இப்போது 20 தொழிலாளர்கள் கொல்லப்பட்டுள்ள நிலையில் நியாயமான விசாரணை நடத்தும்படி ஆந்திரத்திடம் தமிழகம் கெஞ்சுகிறது. இது தவறான அணுகுமுறையாகும். உடனடியாக குடியரசுத் தலைவர், பிரதமர் உள்ளிட்டோரின் கவனத்திற்கு இதைக் கொண்டு சென்று தமிழர்களின் படுகொலைக்கு நீதி கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று ராமதாஸ் கூறியுள்ளார்.


ஆந்திர போலீசார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 12 தமிழர்கள் சுட்டுக் கொலை! - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

ஆந்திர போலீசார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 12 தமிழர்கள் சுட்டுக் கொலை! - Page 2 Empty Re: ஆந்திர போலீசார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 12 தமிழர்கள் சுட்டுக் கொலை!

Post by T.N.Balasubramanian Wed Apr 08, 2015 4:24 pm

ராமதாஸ் கூறியுள்ளபடி , ராமதாஸ் கூறுவதற்கு முன்னமே , OPS செய்து இருந்தால் ,அதன் விளைவாக சென்னைக்கு வரவேண்டிய கிருஷ்ணா நீரில் , பங்கம் ஏற்பட்டால் , அப்பாவும் இதே ராமதாஸ் , இந்த விவகாரத்தை சரியான முறையில் கையாள தெரியவில்லை என்பார் .
எப்பிடி எல்லாம் குடைசல் தரலாம் என்று ரூம் போடாமல் தோட்டத்தில் உட்கார்ந்து யோசிப்பவர் .
ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35031
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

ஆந்திர போலீசார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 12 தமிழர்கள் சுட்டுக் கொலை! - Page 2 Empty Re: ஆந்திர போலீசார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 12 தமிழர்கள் சுட்டுக் கொலை!

Post by சிவா Wed Apr 08, 2015 4:35 pm

ஆந்திராவில், 20 கூலித்தொழிலாளிகள் மீது நடந்தது என்கவுன்டர் இல்லை; அப்பட்டமான கொலை' என, தமிழக போலீசார் கருத்து தெரிவித்தனர்.

இச்சம்பவம் குறித்து, தமிழக போலீசார் கூறியதாவது:

செம்மரம் கடத்தலின் பின்னால் மிகப்பெரிய கும்பல் செயல்படுகிறது. அவர்களின் பிடியில், திருவண்ணாமலை, வேலுார், சேலம், காஞ்சிபுரம் மாவட்டங்களைச் சேர்ந்த, கூலித்தொழிலாளிகள் சிக்கித் தவிக்கின்றனர்.அவ்வாறு அனுப்பி வைக்கப்பட்ட, கூலித்தொழிலாளிகள் தான், ஆந்திர மாநில போலீசாரின் துப்பாக்கி தோட்டாவுக்கு பலியாகி உள்ளனர்.அந்த சம்பவம் பல்வேறு கேள்விகளை எழுப்புகிறது.

*தொழிலாளிகள் சுட்டு வீழ்த்தப்பட்ட இடத்தில், உடல்களுக்கு அருகிலேயே, பழைய செம்மரக்கட்டைகள் கிடத்தப்பட்டு உள்ளன; இது நம்பும்படியாக இல்லை.

*உடல்களுக்கு அருகில் தண்ணீர் பாட்டில்கள், பிஸ்கட் பாக்கெட்கள், அறுபடாத செருப்பு, திட்டமிட்டு வைக்கப்பட்ட பை கிடக்கின்றன. இவையெல்லாம் ஜோடிக்கப்பட்டவையே.

*துப்பாக்கி சூடு நடத்தும் போது, குற்றவாளியின் மார்பையோ, நெற்றி பொட்டையோ குறி பார்த்து சுட முடியாது. அப்படி தோட்டா பாய்ந்தால் ஆச்சரியம்.

* முழங்காலுக்கு கீழே சுடப்பட்டு, ஓட முடியாமல் சரிந்து விழச் செய்து, மார்பில் சுடலாம். இவை அனைத்தும் போலீசாரின் உயிரை பாதுகாத்துகொள்ளவே. ஆனால், ஆந்திராவில் நடந்த என்கவுன்டரில், 20 பேருக்கும் நெற்றிபொட்டு, மார்பு பகுதியில் துப்பாக்கி சூடு இருப்பதாக தகவல் தெரிவிக்கிறது.இதனால், உண்மையான என்கவுன்டர் என்று சொல்வதற்கு எந்த முகாந்திரமும் இல்லை; அப்பட்டமான கொலை என்றே சொல்லத்தோன்றுகிறது.

* இருபதுபேரை ஒரு நேரத்தில், மார்பில், நெற்றிப் பொட்டில் சுட்டு, என்கவுன்டர் செய்யவே முடியாது. அவ்வாறு நடந்து இருந்தால், அந்த இடத்தின் சூழலே காட்டிக்கொடுத்து விடும்.

* செம்மரங்களை வெட்டச்சென்ற கூலித்தொழிலாளிகள் கூண்டோடு சிக்கிய போது, இந்த கொடூர சம்பவத்தை போலீசார் அரங்கேற்றி இருக்கலாம்.

* கூலித்தொழிலாளிகளிடம் அரிவாள், கோடாரி உள்ளிட்ட ஆயுதங்கள் மட்டுமே இருந்துள்ளன. அதைவைத்து, துரத்தி வரும் போலீஸ் பெரும்படையை, அவர்களால் என்ன செய்ய முடியும். கற்களை வீசலாம். அரிவாளால் வெட்ட வந்தனர் என்பதும் கேள்விக்குறியே.

* செம்மரக்கட்டை கடத்தலுக்கு பின்னால், இருக்கும் பெரும் தாதாக்களை கண்டறிந்து, அவர்களின் கொட்டத்தை அடக்கினால் மட்டுமே இப்பிரச்னைக்கு தீர்வு காண இயலும்.

அதிகாரிகளுடன் முதல்வர் ஆலோசனை:

ஆந்திர போலீசார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில், தமிழகத்தை சேர்ந்த, 12 கூலித்தொழிலாளிகள் இறந்தது தொடர்பாக, நேற்று தலைமைச் செயலகத்தில், முதல்வர் பன்னீர்செல்வம், அதிகாரிகளை அழைத்து ஆலோசனை நடத்தினார். உள்துறை செயலர் அபூர்வவர்மா, டி.ஜி.பி., அசோக்குமார், உளவுத்துறை ஐ.ஜி., கண்ணப்பன், அரசு ஆலோசகர்கள், ஷீலா பாலகிருஷ்ணன், ராமானுஜம் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

விசாரணைக்கு போலீஸ் வரவில்லை:

சித்துார் மாவட்ட வருவாய் அலுவலர் விஜயசந்த் கூறியதாவது:சித்துார் மாவட்ட கலெக்டர் சித்தார்த் உத்தரவின் பேரில், நான் நேரில் சென்று பார்வையிட்டேன்; ஒரு இடத்தில் ஒன்பது சடலங்களும், மற்றொரு இடத்தில், 11 சடலங்களும் கிடந்தன. நடந்த சம்பவம் குறித்து அறிய, துப்பாக்கிச் சூடு நடத்திய போலீசாரை விசாரணைக்கு அழைத்தோம்; ஆனால், இரவு 7:00 மணியாகியும் யாரும் வரவில்லை. அவர்களிடம் விசாரணை நடத்திய பின் தான், சம்பவம் குறித்த முழு விவரங்கள் தெரிய வரும்.இறந்தவர்களின் அடையாளமும், இதுவரை தெரியவில்லை. முதல் தகவலறிக்கையும் இன்னும் பதிவு செய்யப்படாததால், அவர்களின் உறவினர்களிடம் தகவல் கூறவில்லை.

இறந்தவர்களின் உடல்களை, பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றுள்ளோம்.இவ்வாறு, அவர் கூறினார்.

காங்., முன்னாள் எம்.பி., கண்டனம்:

சம்பவ இடத்தை, திருப்பதி தொகுதியின் காங்கிரஸ் முன்னாள் எம்.பி., ஜிந்தா மோகன் பார்வையிட்ட பின் கூறுகையில், ''காங்கிரஸ் ஆட்சியில், இதுபோன்ற என்கவுன்டர் நடந்ததில்லை. சம்பவத்தை நேரில் பார்க்கும் போது, போலீசாரே அழைத்து வந்து சுட்டு கொன்றுள்ளதாக தெரிகிறது. மரங்களை வெட்டும்போது தாக்கப்பட்ட சம்பவம் போல் இல்லை. மேலும், ஏற்கனவே பறிமுதல் செய்த ஆயுதங்களை, இவர்கள் வைத்திருப்பதாக கூறி, போலீசார் தப்பித்துக் கொள்வதற்காக இங்கு போட்டுள்ளனர். இந்த செயல் கண்டிக்கத்தது,'' என்றார்.

பிடித்து விசாரிக்காதது ஏன்?

இதுகுறித்து, திருப்பதியைச் சேர்ந்த ராமையா என்பவர் கூறுகையில், ''கூலித் தொழிலாளர்கள் வயிற்றுப் பிழைப்பிற்காக வருகின்றனர். அவர்களை சுட்டுக் கொன்றது, ஏற்றுக் கொள்ள முடியாது. இவர்களை ஏவி விடும் தரகர்களை கண்டிக்காமல், ஏழை தொழிலாளர்களை சுட்டுக் கொல்வது கண்டிக்கத்தக்கது. கூலித்தொழிலாளர்களை பிடித்து உரிய விசாரணை நடத்தியிருந்தாலே, கடத்தல் தொழிலில் ஈடுப்ட்டுள்ள முக்கிய புள்ளிகளின் விவரங்கள் தெரிய வந்திருக்கும்,'' என்றார்.

பலியானவர்கள் யார்? உறவினர்கள் தவிப்பு:

திருப்பதி வனப்பகுதியில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் இறந்த, 20 பேரில், திருவண்ணாமலை மாவட்டம், ஜவ்வாதுமலையை சேர்ந்த நம்மியம்பட்டு, கானமலை, மற்றும் வீரப்பனுார் கிராமங்களை சேர்ந்த, ஒன்பது பேர் அடங்குவர். முதற்கட்டமாக, இறந்தவர்களின் உடலை அடையாளம் காணும் பணியில், ஆந்திர போலீசார் ஈடுபட்டு உள்ளனர். ஆனால், நேற்று மாலை வரை, ஜவ்வாது மலை பகுதியில் இருந்து மரம் வெட்டச் சென்று இறந்தவர்கள் யார் என தெரிவில்லை. மரம் வெட்ட சென்ற தொழிலாளர்களின் குடும்பத்தை சேர்ந்தவர்கள், யார் இறந்தது என, தெரியாமல் தவித்து வருகின்றனர்.



ஆந்திர போலீசார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 12 தமிழர்கள் சுட்டுக் கொலை! - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

ஆந்திர போலீசார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 12 தமிழர்கள் சுட்டுக் கொலை! - Page 2 Empty Re: ஆந்திர போலீசார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 12 தமிழர்கள் சுட்டுக் கொலை!

Post by சிவா Wed Apr 08, 2015 4:39 pm

லியான 20 தமிழர்கள் குடும்பத்துக்கு தலா ரூ.3 லட்சம் நிதியுதவி: தமிழக அரசு

திருப்பதி வனப்பகுதியில் ஆந்திர போலீஸ் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த 20 தமிழர்களின் குடும்பத்துக்கு தலா 3 லட்சம் ரூபாய் நிதியுதவியை தமிழக அரசு அறிவித்துள்ளது.

இது தொடர்பாக தமிழக அரசு இன்று வெளியிட்ட செய்திக் குறிப்பு:

ஆந்திர மாநிலத்தில் உள்ள ஸ்ரீவாரி மெட்டு மற்றும் ஈசகுண்டா பகுதியில் உள்ள சேஷாசல வனப்பகுதியில் செம்மரக் கடத்தல் தடுப்புப் படையினர் 7.4.2015 செவ்வாய்க்கிழமை அன்று அதிகாலை நடத்திய துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் 20 தமிழர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இதை அறிந்த தமிழக முதல்வர், ஆந்திர மாநில முதல்வருக்கு இது தொடர்பாக 07.04.2015 அன்று கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்கள்.

அந்தக் கடிதத்தில், இந்தச் சம்பவத்தில் இறந்த அனைவரும் தமிழ்நாட்டிலுள்ள திருவண்ணாமலை மற்றும் வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் என்றும், அவர்கள் அனைவரும் சட்டவிரோத நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதற்கான வாய்ப்புகள் இருந்தாலும் அதற்காக நடத்தப்பட்ட நடவடிக்கையில் பலரும் இறந்துள்ளது மிகுந்த வருத்தத்தை அளிப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

மேலும், அவர்கள் ஒரு வேளை சட்டத்துக்கு விரோதமான செயல்பாடுகளில் ஈடுபட்டிருந்தாலும் கூட, இவ்வளவு பேர்கள் இறந்திருப்பதைப் பார்க்கும்போது அதிரடிப் படையினரின் நடவடிக்கைகள் அனைத்தும் கட்டுப்பாட்டுடன்தான் நடந்ததா என்பது சந்தேகத்தை எழுப்புவதாகவும் கூறியிருந்தார்.

அவர்கள் சட்ட விரோதமாக மரம் வெட்டுவதில் ஈடுபட்டிருந்தாலும் கூட, அவர்களை சுட்டுக்கொல்லாமல் கைது செய்யும் நடவடிக்கையை மேற்கொண்டிருக்கலாம் என்றும், இந்தச் சூழ்நிலையில் ஒரு விரைவான மற்றும் நம்பகமான விசாரணைக்கு ஆணையிடுமாறும், அப்பொழுதுதான் உண்மைநிலை அறியப்பட்டு, மனித உரிமை மீறியவர்களை பொறுப்பாக்க இயலும் என்றும், மனித

உரிமை மீறல் குற்றம் நடந்திருந்தால் இறப்பை ஏற்படுத்தியவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படவேண்டும் என்றும், மேலும் இறந்தவர்கள் குடும்பத்தினர்களுக்கு போதிய நிவாரணம் அளிக்கப்படவேண்டும் என்றும் அக்கடிதத்தில் தமிழக முதல்வர் கேட்டுக்கொண்டுள்ளார்.


ஆந்திர போலீசார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 12 தமிழர்கள் சுட்டுக் கொலை! - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

ஆந்திர போலீசார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 12 தமிழர்கள் சுட்டுக் கொலை! - Page 2 Empty Re: ஆந்திர போலீசார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 12 தமிழர்கள் சுட்டுக் கொலை!

Post by சிவா Wed Apr 08, 2015 4:39 pm


20 பேர் உடல்களை கொண்டுவர ஏற்பாடு

இச்சம்பவத்தில் பலியான பெரும்பாலோர் திருவண்ணாமலை மற்றும் வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால் அம்மாவட்டங்களின் மாவட்ட வருவாய் அலுவலர்களை அடங்கிய குழு திருவள்ளூர் மாவட்ட ஆட்சியரின் தலைமையில் திருப்பதிக்குச் சென்று இறந்தவர்களின் உடல்களை உடனடியாக திரும்ப கொண்டு வர ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்தக் குழுவினர் இறந்தவர்களின் உடல்களை திரும்ப கொண்டு வர தமிழக அரசின் சுகாதாரத் துறையின் அமரர் ஊர்திகளை எடுத்துச்செல்வார்கள். மேலும் இறந்தவர்களின் உடல்களை அடையாளம் கண்டு அவற்றைத் திரும்ப கொண்டு வருவதற்காக சம்பந்தப்பட்ட உறவினர்களை தொடர்பு கொண்டு அவர்களையும் திருப்பதி அழைத்துச் செல்ல சம்பந்தப்பட்ட மாவட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

இறந்தவர்களின் உடல்களை அடையாளம் கண்டு பிரேத பரிசோதனை முடிப்பதற்காக திருப்பதியில் காவல் துறையினருடன் இணைந்து செயல்படுவதற்காக மஞ்சுநாதா, இ.கா.ப., காவல்துறை தலைவர் தலைமையில் காவலர் குழு ஒன்று திருப்பதிக்கு அனுப்பப்பட்டுள்ளது.

இந்தத் துயரமான சம்பவத்தின் தன்மையைக் கருத்தில் கொண்டு தமிழக முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து இறந்தவர் ஒவ்வொருவருடைய குடும்பத்திற்கும் தலா ரூ.3 லட்சம் வழங்க தமிழக அரசால் ஆணையிடப்பட்டுள்ளது.

இவ்வாறு அந்தச் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


ஆந்திர போலீசார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 12 தமிழர்கள் சுட்டுக் கொலை! - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

ஆந்திர போலீசார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 12 தமிழர்கள் சுட்டுக் கொலை! - Page 2 Empty Re: ஆந்திர போலீசார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 12 தமிழர்கள் சுட்டுக் கொலை!

Post by சிவா Wed Apr 08, 2015 4:41 pm

சென்னை - ஆந்திரா பேருந்துகள் 2-வது நாளாக நிறுத்தம்

சென்னையில் இருந்து ஆந்திராவுக்கு 2வது நாளாக பேருந்துகள் இயக்கப்படவில்லை. கோயம்பேடு பேருந்து நிலையத்தில் ஆந்திர பேருந்துகளுக்கு பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. ஆந்திரா செல்லும் ரயில்களிலும் போலீஸார் பாதுகாப்புப் பணிக்காக அமர்த்தப்பட்டுள்ளனர்.

திருப்பதி வனப்பகுதியில் செம்மரங்களை வெட்டிய 20 தமிழர்களை ஆந்திர அதிரடிப்படை மற்றும் வனத்துறையினர் சுட்டுக்கொன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதனைக் கண்டித்து தமிழ்நாடு முழுவதும் பல்வேறு அமைப்பினர் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், சென்னை கோயம்பேட்டில் இருந்து ஆந்திரா செல்லும் பேருந்துகள் இன்று(புதன்கிழமை) 2வது நாளாக நிறுத்தப்பட்டுள்ளன. நெல்லூர், திருப்பதி, நகரி, குண்டூர் செல்லும் பேருந்துகள் வரிசையாக நிறுத்தப்பட்டு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

இதேபோல் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் உள்ளிட்ட இடங்களிலும் போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.


ஆந்திர போலீசார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 12 தமிழர்கள் சுட்டுக் கொலை! - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

ஆந்திர போலீசார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 12 தமிழர்கள் சுட்டுக் கொலை! - Page 2 Empty Re: ஆந்திர போலீசார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 12 தமிழர்கள் சுட்டுக் கொலை!

Post by ayyasamy ram Wed Apr 08, 2015 8:08 pm

தற்காப்புக்காகத்தான் 20 பேரை சுட்டு கொன்றோம் என்கிறார்
டி.ஐ.ஜி. காந்தாராவ்
--
20 தமிழர்களை சுட்டுக் கொன்றது எப்படி என்பது பற்றி ஆந்திர சிறப்பு படை போலீஸ் டி.ஐ.ஜி. காந்தாராவ் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

பேட்டியில் அவர், ’’கடந்த 4–ந் தேதி (சனிக்கிழமை) மாலையில் 500–க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் செம்மரம் வெட்டுவதற்காக ஆந்திர காடுகளில் புகுந்தனர். அவர்கள் அங்கேயே தங்கி இருந்து செம்மரகட்டைகளை வெட்டினார்கள். அவர்கள் காடுகளில் கும்பல் கும்பலாக ஆங்காங்கே குவிந்திருந்தனர்.

திருப்பதி அருகே சித்தூரில் சந்திரகிரி மண்டல பகுதியில் உள்ள சீகடிகோணை பகுதியில் 150 பேர் கொண்ட கும்பல் செம்மர கட்டைகள் வெட்டும் பணியில் ஈடுபட்டிருந்தது. பின்னர் அங்கிருந்து 1½ கி.மீ. தொலைவில் உள்ள ஈத குண்டா பகுதியில் மேலும் 150 பேர் கொண்ட கும்பல் செம்மரகட்டைகளை வெட்டிக் கொண்டிருந்தனர். மற்றொரு இடத்தில் 30 பேர் கொண்ட கும்பல் செம்மரக் கட்டைகளை வெட்டியது.

இதற்கிடையே செம்மர கட்டைகளை வெட்டுவதாக தகவல் கிடைத்ததும் எனது தலைமையில் சிறப்பு படையினர் அங்கு விரைந்தோம். எங்கள் குழுவில் 10 பேர் கொண்ட வனத்துறை ஊழியர்களும், 14 பேர் கொண்ட சிறப்பு படை போலீசாரும் இடம் பெற்றிருந்தனர்.

செம்மர கடத்தல் கும்பல் இருக்கும் சீகடிகோணை என்ற இடத்தை அடைந்த போது அங்கு ஒரு இடத்தில் 150 பேர் இருந்தனர். நாங்கள் 24 பேர்களே இருந்தோம். அதிகாலை 4½ மணிக்கு பவுர்ணமி நிலா வெளிச்சம் அதிகமாக இருந்ததால் காட்டில் எத்தனை பேர் கொண்ட கும்பல் இருந்தது என்பதை எங்களால் நன்றாக பார்க்க முடிந்தது.

முதலில் செம்மர கடத்தல் கும்பலை சரண் அடையுமாறு நான் எச்சரிக்கை செய்தேன். நாங்கள் குறைவான பேரே சென்றதால் அந்த கும்பல் எங்களை கண்டு பயப்பட வில்லை. மாறாக எங்களை தாக்க தொடங்கினார்கள். செம்மர கடத்தல் கும்பலில் உள்ளவர்கள் நாட்டு துப்பாக்கி வைத்திருந்தனர். கற்களையும் ஆங்காங்கே குவித்து வைத்திருந்தனர்.

எங்களை நோக்கி அவர்கள் கற்களை வீசி தாக்குதல் நடத்தினார்கள். நாட்டு துப்பாக்கியாலும் சுட்டனர். அவர்கள் தாக்கிய படியே எங்களை நோக்கி முன்னேறி வந்தனர். இதனால் அவர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்தினோம். இதில் 11 பேர் உயிரிழந்தனர். மற்றவர்கள் தப்பி ஓடி விட்டனர்.

மேலும் ஈதகுண்டா பகுதியிலும் தங்கியிருந்த மற்றொரு கும்பல் மீதும் துப்பாக்கி சூடு நடத்தினோம். இதில் 9 பேர் பலியானார்கள். செம்மர கடத்தல் கும்பல் எங்களை தாக்க வந்ததால் தற்காப்புக்காக நாங்கள் சுட வேண்டியதாகி விட்டது’’என்று கூறினார்.

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82799
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

ஆந்திர போலீசார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 12 தமிழர்கள் சுட்டுக் கொலை! - Page 2 Empty Re: ஆந்திர போலீசார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 12 தமிழர்கள் சுட்டுக் கொலை!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

Back to top

- Similar topics
» ஸ்ரீநகரில் பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 5 ராணுவ வீரர்கள் பலி
» காஷ்மீர்: போலீஸ் துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் சாவு
»  கென்யாவில் மீண்டும் கலவரம்: சர்ச் எரிப்பு - துப்பாக்கிச் சூட்டில் 4 பேர் பலி
» பாகிஸ்தானில் யு டியூப் தடை அமெரிக்காவை கண்டித்து வன்முறை துப்பாக்கிச் சூட்டில் 2 பேர் பலி
» குவைத் இளவரசர் உறவினரால் சுட்டுக் கொலை!

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum