புதிய பதிவுகள்
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:45 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:30 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:22 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:07 pm

» கருத்துப்படம் 23/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:29 pm

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 7:10 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 7:06 pm

» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 7:05 pm

» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:02 pm

» சமையல்...சமையல்
by ayyasamy ram Yesterday at 6:53 pm

» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Yesterday at 5:51 pm

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Yesterday at 5:42 pm

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Yesterday at 5:35 pm

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Yesterday at 5:12 pm

» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Yesterday at 5:10 pm

» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Yesterday at 5:08 pm

» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Yesterday at 5:06 pm

» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Yesterday at 5:04 pm

» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Yesterday at 5:01 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:08 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:28 pm

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Yesterday at 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sun Sep 22, 2024 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:15 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Sun Sep 22, 2024 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:11 pm

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun Sep 22, 2024 11:04 pm

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:04 pm

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:02 pm

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:00 pm

» ஊரும் பேரும்
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:58 pm

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:57 pm

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:56 pm

» கொடையாளர்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:54 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 22, 2024 10:08 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 9:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 22, 2024 9:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 22, 2024 8:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 8:12 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 7:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 7:10 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Sun Sep 22, 2024 10:44 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
40 நாட்கள்! Poll_c1040 நாட்கள்! Poll_m1040 நாட்கள்! Poll_c10 
21 Posts - 70%
heezulia
40 நாட்கள்! Poll_c1040 நாட்கள்! Poll_m1040 நாட்கள்! Poll_c10 
6 Posts - 20%
வேல்முருகன் காசி
40 நாட்கள்! Poll_c1040 நாட்கள்! Poll_m1040 நாட்கள்! Poll_c10 
1 Post - 3%
viyasan
40 நாட்கள்! Poll_c1040 நாட்கள்! Poll_m1040 நாட்கள்! Poll_c10 
1 Post - 3%
mohamed nizamudeen
40 நாட்கள்! Poll_c1040 நாட்கள்! Poll_m1040 நாட்கள்! Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
40 நாட்கள்! Poll_c1040 நாட்கள்! Poll_m1040 நாட்கள்! Poll_c10 
213 Posts - 42%
heezulia
40 நாட்கள்! Poll_c1040 நாட்கள்! Poll_m1040 நாட்கள்! Poll_c10 
203 Posts - 40%
mohamed nizamudeen
40 நாட்கள்! Poll_c1040 நாட்கள்! Poll_m1040 நாட்கள்! Poll_c10 
26 Posts - 5%
Dr.S.Soundarapandian
40 நாட்கள்! Poll_c1040 நாட்கள்! Poll_m1040 நாட்கள்! Poll_c10 
21 Posts - 4%
prajai
40 நாட்கள்! Poll_c1040 நாட்கள்! Poll_m1040 நாட்கள்! Poll_c10 
12 Posts - 2%
வேல்முருகன் காசி
40 நாட்கள்! Poll_c1040 நாட்கள்! Poll_m1040 நாட்கள்! Poll_c10 
10 Posts - 2%
Rathinavelu
40 நாட்கள்! Poll_c1040 நாட்கள்! Poll_m1040 நாட்கள்! Poll_c10 
8 Posts - 2%
Guna.D
40 நாட்கள்! Poll_c1040 நாட்கள்! Poll_m1040 நாட்கள்! Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
40 நாட்கள்! Poll_c1040 நாட்கள்! Poll_m1040 நாட்கள்! Poll_c10 
7 Posts - 1%
mruthun
40 நாட்கள்! Poll_c1040 நாட்கள்! Poll_m1040 நாட்கள்! Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

40 நாட்கள்!


   
   
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Mar 31, 2015 9:17 am

சென்னைக்கு வருவது, இதுதான் முதல் முறை. திரு.வி.க.,நகரில் சித்தப்பா வீடு இருந்தது. சித்தப்பா ரொம்ப நாளாய் வரச் சொல்லி அழைத்துக் கொண்டிருந்தார். ஒரு வழியாக வந்து சேர்ந்ததும், சந்தோஷப்பட்டாலும், அவர் முகத்தில் ஏதோ சஞ்சலம் தெரிந்தது. விசாரித்த போது, ''அமீர் சாஹெப்பிற்கு உடம்புக்கு முடியல; ரொம்ப சீரியசாக இருக்கார். ஆஸ்பத்திரிக்கு போகணும்...'' என்றார். ''யார் சித்தப்பா அமீர் சாஹெப்?'' என்று கேட்டேன்.

''கூடவா வா சொல்றேன்,'' என்று, புரசை வாக்கத்தில் இருந்த ஆயிஷா மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார். அமீர் சாஹெப் அனுமதிக்கப்பட்டிருந்த அறைக்கு வெளியே மக்கள் கூடியிருந்தனர். அதில், மிக கவலையோடு நின்றிருந்த நான்கு பேரை சுட்டிக் காட்டிய சித்தப்பா, ''இந்த நான்கு பேரும் ஒரு காலத்தில பொறுக்கிங்களா திரிஞ்சாங்க; இவங்களப் பாத்தா ஏரியாவே பயந்து நடுங்கும். ஆனா, இப்ப நல்லவங்களா மாறிட்டாங்க,'' என்றார். ''அது எப்படி சித்தப்பா...'' என்றேன் நான்.

''அது, ஒரு பெரிய கதை,'' என்று கூறிய சித்தப்பா, என்னை ஒரு ஓரமாக அழைத்து சென்று, அவர்களைப் பற்றி சொல்ல ஆரம்பித்தார்...
இப்ராஹிம் பாயை, அப்பகுதி மக்கள், அமீர் சாஹெப் என்று தான் அழைப்பர்.

நெடிய உயரம், நீண்ட கரிய தாடி, கூரான மூக்கு, புன்னகை தவழும் முகம் என, முதல் சந்திப்பிலேயே யாரையும் நண்பனாக்கி விடும் தோற்றம் அவருக்கு. ஐந்து வேளை, நேரம் தவறாமல் தொழுவார். அவரை நேசிப்பவர்கள் அதிகம்; அதே போல், அவரைப் பார்த்து பயந்து ஓடுவோரும் உண்டு. காரணம், மசூதிக்கு தொழ வராதவர்களை தொழ அழைப்பார். அதனால், அவரை பார்த்து சிலர் ஒளிந்து கொள்வர். அதில், இந்த நால்வரும் அடக்கம்.

எப்போது பார்த்தாலும் டீக்கடையில் உட்கார்ந்து பீடி குடித்துக் கொண்டிருப்பர் அல்லது சலூன் கடையில் அரட்டை அடிப்பர். பகலில் சூதாடுவர்; இரவானால், குடித்து கும்மாளமிடுவர். சாப்பிடவும், தூங்கவும் மட்டுமே வீட்டிற்கு செல்வர். வீட்டில் மிகவும் பண நெருக்கடி என்றால் தான், ஏதாவது கூலி வேலைக்கு செல்வர்; ரொம்ப கஷ்டம் என்றால், மற்றவர்களிடம் கடன் கேட்பர். அவர்கள் கடனை திருப்பி கேட்டால், வேறு யாரிடமாவது வட்டிக்கு கடன் வாங்கிக் கொடுப்பர்.

அவர்களைப் பற்றி அறிந்த அமீர் சாஹெப், அவர்கள் மசூதிக்கு வந்து தொழுகையாளியாக மாறி விட்டால், அவர்களுடைய கெட்ட பழக்கங்கள் நீங்கி விடும் என்று எண்ணி, தொடர்ந்து, அவர்களிடம் நயமாக பேசினார். ஆனால், அது, அவர்களுக்கு புரியவில்லை; அவர் வருவது தெரிந்தால் ஒளிந்து கொள்வர்.

இவர்கள் இப்படிச் செய்வதால், சில சமயங்களில், அவர்களுடைய வீடுகளுக்கே சென்று அழைப்பார் அமீர் சாஹெப். அவர்களுடைய வீட்டுப் பெண்களோ, 'அமீர் சாஹெப்... இவர்களை எப்படியாவது உங்களோட ஜமாத்துக்கு கூட்டிட்டு போய் தொழ வையுங்க...' என்பர்.

அன்று வழக்கம் போல் கடைவீதி பக்கமாக நடந்து சென்றார் அமீர் சாஹெப். அவரை பார்த்து ஓடி, ஒளியும் நால்வரும், அன்று ஏனோ நகராமல், அவரை கண்டு கொள்ளாமல் நின்றிருந்தனர்.
'அஸ்ஸலாமு அலைக்கும்...'
'வாலைக்கும் ஸலாம்...'

'இன்ஷா அல்லாஹ்! இந்த வாரம், 40 நாளைக்கு சில்லா ஜமாத் புறப்படுது; நானும் போறேன்; நீங்களும் வரணும்...' என்றார்.

'சில்லா ஜமாத்ன்னா என்ன?' என்று கேட்டான் அவர்களில் ஒருவன்.
'இறைவனுடைய பாதையில், 40 நாட்கள் செல்வதற்கு பெயர் தான் சில்லா ஜமாத்...'
'எங்கே போவது?' என்று கேட்டான் மற்றொருவன்.

'மசூதியில போயி தங்குவோம்; ஐந்து வேளையும் விடாமல் தொழுவோம். அந்த பகுதியில் தொழாதவர்களை சந்தித்து, 'தொழுகையில் தான் வெற்றி இருக்கிறது...' என்று சொல்லி, மசூதிக்கு அழைத்து வருவோம். நாங்களே சமைத்து உண்போம்...'என்றார்.

'எவ்வளவு செலவாகும்...' என்றான் மூன்றாமவன்.
'ஆளுக்கு, 1,500 ரூபாயிலிருந்து, 2,000 ரூபாய் வரை ஆகும்...' என்றார்.
'இடையில வீட்டிற்கு வரக்கூடாதா?'

'அப்படி எதுவும் கட்டாயமில்ல; ரொம்ப அவசியம்ன்னா வரலாம்...'
'நாற்பது நாட்கள் எப்படி வீட்டை விட்டு, மனைவி, பிள்ளைகளை விட்டு வருவது... நாம இல்லாம, குடும்பம் எப்படி நடக்கும்?'என்று கேட்டான் ஒருவன்.

'நம்மிடமுள்ள கர்வம் அகலவும், நம்மிடையே, ஒரு மாற்றம் உருவாகவும், இறைவனால் தான் எல்லாம் நடக்கிறது என்பதை உணரவும் தான், சில்லா ஜமாத்திற்கு செல்கிறோம். அதனால், குடும்பத்தை அந்த இறைவனே பார்த்துக் கொள்வார்...' என்றார்.

'பாக்கலாம்...' என்றனர். தொடர்ந்து அவர்களிடம், 40 நாட்களுக்காக, அழைப்பு விடுத்தார். அத்துடன், அவர்களுடைய வீட்டாரும், சில்லா ஜமாத்திற்கு செல்லும் படி வற்புறுத்திய போது, 'ஜமாத்திற்கு போக பணம் தேவைபடும்; அதோட வீட்டுச் செலவுக்கும் காசு வேணும்...' என்று சமாளித்துப் பார்த்தனர். ஆனால், வீட்டுப் பெண்களோ,'வீட்டு செலவ நாங்க பார்த்துக்றோம்; நீங்க ஜமாத்தில், 40 நாளைக்கு போறதா இருந்தா அந்த காசையும் நாங்களே தர்றோம்...' என்றனர்.
அன்றிரவு, அந்த நால்வர் அணி, ரகசியமாக கூடி விவாதித்தது...

'ஏண்டா... அந்த ஆளை ஆரம்பத்துலேயே வெட்டி விடாம விஷயம் இவ்வளவு தூரம் வந்துருச்சே... வீட்டிலேயும் இனி நம்மள அனுப்பாம விடமாட்டாங்க போலிருக்கே... எனக்கு ஒரு யோசனை தோணுது... ஒரு முறை ஜமாத்திற்கு போய் தான் பாப்போம்; அங்கே நாம செய்கிற கலாட்டாவில அந்த அமீர் சாஹெப், இனி யாரையும் ஜமாத்துக்கு அழைக்கவே கூடாது...' என்று ஒருவன் யோசனை சொன்னதும், அதை மற்ற மூவரும் ஏற்றுக் கொண்டனர்
.
இறைவன் எல்லா சூழ்ச்சியையும் முறியடிக்கக்கூடியவன் என்று, பாவம் அவர்களுக்கு தெரியவில்லை.

அந்த நால்வரும், 40 நாட்கள் சில்லாவுக்கு செல்வதைப்பற்றி, மசூதியில் பரபரப்பாக பேசினர்.
'அமீர் சாஹெப், இது தேவைதானா... ரிஸ்க் எடுக்காதீங்க...'என்றனர்.

thodarum............



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Mar 31, 2015 9:20 am

'அப்படிச் சொல்லாதீங்க; நாம ஒருவர் செய்யும் பாவச் செயல்களைத் தான் வெறுக்கணுமே தவிர, அவங்களையே வெறுக்கக் கூடாது...' என்று கூறி, அவர்களை சமாதானப்படுத்தினார்.
ஜமாத்தின் தலைவராக அமீர் சாஹெப் இருந்தார். முதல் நாள், அமீர் சாஹெப் மற்றும் ஒரு இளைஞனும் சேர்ந்து சமையல் செய்தனர்.

'என்ன சாப்பாடு இது... உப்பும் இல்ல; காரமும் இல்ல...' என்று நால்வரும் கோபப்பட்டனர்.
அன்றிரவு, மது அருந்தாததாலும், ஊரெல்லாம் சுற்றியதாலும் கால் வலிக்குது என்று கூறி தூங்க முடியாமல் அவஸ்தைப் பட்டனர். அவர்கள் அருகே அமர்ந்து அவர்களுடைய கால்களை பிடித்து விட்டார் அமீர் சாஹெப். அது சரியில்லை என்று தெரிந்தும், அதை ரசித்தனர். அவர் மென்மையாக பிடித்து விட்டதில் சிறிது நேரத்தில், தூங்கி விட்டனர்.

அதிகாலை, 3:00 மணிக்கே, தஹஜ்ஜுத் தொழுகைக்காக எழுந்த அமீர் சாஹெப், மற்றவர்களின் தூக்கத்தை கெடுக்காமல், ஒரு ஓரமாக நின்று தொழுதார். மற்றவர்களும், ஒன்றன் பின் ஒன்றாக எழுந்து தொழ ஆரம்பித்தனர். ஆனால், அந்த நால்வர் மட்டும் எழவில்லை.

காலை, 5:00 மணிக்கு, பஜர் தொழுகைக்கு, அவர்களை எழுப்பினார் அமீர் சாஹெப். அதுவரை, அவ்வளவு சீக்கிரமாய் எழுந்து பழகாத அவர்களுக்கு அது, மிகவும் சிரமமாக இருந்தது. தொழுது முடிந்ததும், ஒரு ஓரமாய் படுத்து, மறுபடியும் தூங்கி விட்டனர். கொஞ்ச நேரத்தில் டீ, பிஸ்கட் வர அவர்களை எழுப்பி தந்த அமீர், காலை உணவாக உப்புமா தயாரித்தார்.

வேறு வழியில்லாமல் அதைப் சாப்பிட்ட நால்வர் கூட்டணி, 'பரவாயில்லை, இது கூட நல்லாத்தான் இருக்கு; அமீர் சாஹெப், இன்னைக்கு நாங்க நால்வரும் சேர்ந்து சமைக்கிறோம்; ஒரு வாய்ப்பு கொடுத்து பாருங்க...' என்றனர்.

சரி என்று அவர் ஒப்புதல் தரவே, சமைப்பதற்காக காய்கறி, அரிசி, மளிகை பொருட்கள் வாங்க, பஜாருக்கு சென்றனர். பஜாரில் பொருட்களை வாங்கும் போதுதான், விலைவாசி பற்றியே, அவர்களுக்கு தெரிந்தது. நாம் கொடுக்கும் கொஞ்ச பணத்தில், பெண்கள் எப்படிக் குடும்பம் நடத்துகின்றனர் என்று நினைத்து, முதன் முதலாக கவலைப்பட்டனர்.

சமையல் செய்யும் போது, ஸ்டவ்வை பற்ற வைக்கவும், வெங்காயம் நறுக்கவும், அவர்கள் பட்ட கஷ்டங்கள், மறுபடியும் வீட்டு நினைப்பை கொடுத்தது.

ஒரு வழியாக சமையல் வேலைகளை முடித்தனர். ஜுஹர் தொழுகைக்கு பின், பகல் உணவுக்காக மற்றவர்கள் உட்கார்ந்தனர். அவர்களுக்கு, அந்த நால்வரும் உணவு பரிமாறினர். எல்லாரும் அமைதியாக சாப்பிட்டனர்.

'அற்புதம்; உண்மையிலேயே வீட்டு சாப்பாடு நினைவுக்கு வருது...' என்றார் அமீர் சாஹெப். அவர்கள் சாப்பிட்டு முடித்த பின், அந்த நால்வரும் சாப்பிட உட்கார்ந்தனர். அமீர் சாஹெப் அவர்களுக்கு பரிமாறினார். ஒரு பிடி சோற்றை எடுத்து வாயில் வைத்ததுமே அவர்கள் முகம் மாறிவிட்டது. 'இவ்வளவு மோசமாக உள்ளதே... இதையா மற்றவர்கள் ஒரு குறை கூட சொல்லாமல் சாப்பிட்டனர்... இந்த உணவையா அமீர் சாஹெப் பாராட்டினார்...' என, நினைத்து வெட்கப்பட்டனர்.

'அமீர் சாஹெப் என்னை எட்டி உதையுங்கள்...' என்றான் அவர்களில் ஒருவன்.
'ஏன்?' என்று கேட்டார்.

'சுவையாக சமைக்காத என் மனைவியை, நான் அப்படித்தான் உதைப்பேன்...' என்றான். 'அப்படி செய்வது தவறு. சமையல் நல்லா இருந்தா பாராட்டுங்க; இல்லேன்னா திட்டாதீங்க; பொறுமையா சொல்லுங்க. எந்த நிலையிலும் இறைவனுக்கு நன்றி சொல்ல தவறாதீங்க...' என்றார். அவர்கள் மவுனமாக தலை குனிந்தபடி சாப்பிட்டனர்.

ஒரு வாரம் இப்படியே கழிந்தது. ஆரம்பத்தில் கொஞ்சம் கஷ்டப்பட்டாலும், நாளடைவில் மசூதியின் சூழல், அந்த நால்வருக்கும் பழகிப் போனது. ஐந்து வேளையும் விடாமல் தொழுதனர். அமீர் சாஹெப் தூங்கும் போது அவருக்கு கால் பிடித்து விடுவர். அவருக்கு தலைவலி என்றால், தைலம் தடவி விட்டனர். அவர் தூங்கும் வரை, பக்கத்திலே உட்காந்திருந்தனர்.

முதன் முறையாக அவர்களுக்கு வீட்டு ஞாபகம் வந்தது. பக்கத்தில் இருந்த மளிகை கடையின் தொலைபேசியிலிருந்து தங்கள் வீட்டிற்கு பேசினர். அம்மா மற்றும் மனைவிக்கு சலாம் கூறி, நலம் விசாரித்தனர். பிள்ளைகளைப் பற்றி கேட்டனர். தங்கள் கணவர்தானா இப்படி பேசுவது என்று மனைவியர்க்கு வியப்பு.

அந்த நால்வரும் பஜாருக்கு சென்ற போது, யாரோ அமீர் சாஹெப் பற்றி தவறாக பேசி விட்டார். உடனே, கோபம் வந்து, அந்த ஆளை அடிக்க பாய்ந்து விட்டனர்.

'பொறுமையாயிருங்க, அவர் தெரியாமல் பேசி விட்டார். நீங்க இப்படி கலாட்டா செஞ்சா ஜமாத் பெயர்தான் கெடும்...' என்று அவர்களை சமாதானப்படுத்தினார் அமீர் சாஹெப். அவர்கள் மவுனமாக, அவரை பின் தொடர்ந்து, மசூதிக்கு சென்றனர்.

ஒரே மாதத்தில் நேரத்திற்கு தொழவும், குர் ஆன் ஓதவும் கற்றுக் கொண்டனர். கொஞ்சம் கொஞ்சமாக அவர்கள் மாறி போயினர். அவர்களுடைய பேச்சு, நடை, உடை, பாவனை மாறி, கனிவு, கருணை, பொறுமையுடன் காணப்பட்டனர். இப்ப யார் அவர்களை பார்த்தாலும், அந்த பழைய மனிதர்களா இவர்கள் என்று வியந்து போயினர்.

நாற்பது நாட்கள் முடிந்து, வீட்டிற்கு செல்லும் சமயம் வந்தது. பழங்கள், இனிப்பு, அத்தர் என்று, அவர்களுக்கு வாங்கி கொடுத்த அமீர் சாஹெப், 'உங்க வீட்டில் பிள்ளைங்க ஆசையுடன் எதிர்பார்ப்பர்; இதை கொண்டு போய் கொடுங்க...' என்று கூறி, அவர்களை அனுப்பி வைத்தார்.
புதிய மனிதர்களாய் மாறி வந்தவர்களுக்கு வீட்டிலும், அந்த பகுதியிலும் நல்ல மரியாதை கிடைத்தது. அதன்பின், அவர்கள் பழைய மாதிரி வீணாக பொழுதை கழிக்கவில்லை. நால்வரும் சேர்ந்து, ஒரு டீ கடை போட்டனர்; அது, நன்றாகவே போய் கொண்டிருக்கிறது. தொழுகை சமயங்களில், மசூதிக்கு செல்கின்றனர்.

இதை அனைத்தையும் சித்தப்பா சொல்லி முடித்த போது, என் கண்களும் கலங்கி விட்டது. இறைவன், தன்னை நாடியவர்களுக்கு, நேர்வழியை காட்டுகிறான் என்பதை உணர்ந்தேன்.
மருத்துவமனையிலிருந்த கூட்டம் மெல்லக் குறைந்தது. ஆனால், அந்த நால்வர் மட்டும் அங்கேயே இருந்தனர்.

'எங்க அமீர் சாஹெப் கண் திறக்கும் வரை நாங்க இங்கிருந்து நகர மாட்டோம்; எங்களைவிட்டுட்டு போயிடாதீங்க அமீர் சாஹெப். நாங்கள் அனாதைகளாக ஆகிடுவோம்...' என்று அவர்கள் கதறினர்.
அவர்களுடைய நம்பிக்கை நிறைவேறட்டும் என்று இறைவனை பிரார்த்தித்தப்படி மருத்துவமனையை விட்டு, சித்தப்பாவுடன் வெளியேறினேன்.

அப்சல்



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
M.Saranya
M.Saranya
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2190
இணைந்தது : 26/08/2014

PostM.Saranya Tue Mar 31, 2015 12:58 pm

அருமையான கதை..........




கொடுப்பதற்கும் பெறுவதற்கும் உரிய விலை மதிப்பில்லாத பரிசு அன்பு .

40 நாட்கள்! W5td1pX3QFi1kBRhH0I3+Affection
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக