Latest topics
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ by heezulia Today at 8:55 pm
» நாவல்கள் வேண்டும்
by M. Priya Today at 8:43 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:49 pm
» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 7:43 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Today at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
M. Priya | ||||
Srinivasan23 |
Top posting users this month
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
Rathinavelu | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
பங்குனி உத்திர மங்கலங்கள் ஒன்றா! இரண்டா! 03.04.2015
2 posters
Page 1 of 1
பங்குனி உத்திர மங்கலங்கள் ஒன்றா! இரண்டா! 03.04.2015
ஒவ்வொரு மாதமும் உத்திர நட்சத்திரம் வந்தாலும் பங்குனி மாதத்தில் பங்கு பெறுகிற உத்திரம் தனிச்சிறப்பு பெறுகிறது. இந்த நட்சத்திரத்தை பக்தி நட்சத்திரம் என்றே பகரலாம்.
ஆம்! தெய்வங்களே தேர்ந்தெடுத்துக்கொண்ட மங்கள நித்திலமே பங்குனி உத்திரம்.பாமாலை பாடிக்கொடுத்தும், பூமாலை சூடிக் கொடுத்தும் அரங்கனுக்கே ஆட்பட்ட ஆண்டாள் – ரங்கமன்னார் திருமணமும், பார்வதி – பரமேஸ்வரர் திருமணமும், தெய்வயானை – திருமுருகன் கல்யாணமும், மீனாட்சி சுந்தரேஸ்வரர் விவாகமும் நிகழ்ந்த நன்னாள் பங்குனி உத்திரத்தில்தான் என்று புராணங்கள் மூலம் அறியலாம்.
இந்தத் திருமணங்கள் மட்டுமா? ஒரே சமயத்தில் ஒரே மணமேடையில் இதிகாச ஜோடிகள் நால்வர் இணைந்ததும் இந்த சுபதினத்தில்தான். ராமன் – சீதை, பரதன்- மாண்டவி, லட்சுமணன் – ஊர்மிளை, சத்ருக்ணன்- சுருதகீர்த்தி என ஜகம்புகழும் புண்ணிய கதையான ராமாயணம் தெரிவிக்கின்றது.
கல்யாணக் கொண்டாட்டங்கள் மட்டுமல்ல! பிரசித்தி பெற்ற ஆலயங்களில் பெருவிழாவும் இந்நன்னாளில்தான். பழனியில் காவடி உற்ஸவம், திருமயிலையில் அறுபத்து மூவர் உற்ஸவம், செந்தூரிலும், சுவாமி மலையிலும் வள்ளி கல்யாணம், காஞ்சிபுரத்தில் கல்யாண உற்ஸவம், மதுரையில் மீனாட்சி கல்யாணம் என பங்குனி உத்திர மங்கலங்கள் ஒன்றா! இரண்டா!
பந்தள குமாரனாக மணிகண்ட பெருமான் கேரள பூமியில் அவதரித்ததும் இந்நன்னாளே! அதனால்தான் சபரிமலையில் இந்த தினத்தில் ருத்ர பாராயணம் மற்றும் மகா அபிஷேகம் ஹரிஹர சுதனுக்கு நடைபெறுகிறது.
வில் விஜயன் அர்ஜுனனுக்கு “பல்குனன்’ என்றும் பெயர் விளங்கக் காரணம் பாண்டவரில் புகழ் பூண்டவனாக விளங்கும் அவன் இந்நன்னாளில் பிறந்ததால் தான்.
விசேஷமான இத்திருநாளில் விரதம் இருப்பதும், அன்னதானம் வழங்குவதும் நம் முன்வினைகளை நீக்கி நலம் அருளும். பங்குனி உத்திர விரதத்தை பாங்குறக் கடைப்பிடித்தே பாற்கடலில் தோன்றிய திருமகள் பெருமாள் மார்பில் இடம்பெற்றாள் எனப் பேசுகின்றன இதிகாசங்கள்.
இருப்பவர்களை சிறப்பாக வாழ வைப்பது மட்டுமல்ல இவ்விரதத்தின் மகிமை. இறப்பவரையும் எழுப்பவல்லது பங்குனி உத்திரம். ஆம்! நெற்றிக்கண் நெருப்பால் நிர்மூலமான மன்மதனை அவன் மனைவி ரதி தேவிக்காக சிவபெருமான் எழுப்பித் தந்ததும் இம்மங்கள நித்திலத்தில்தான்!
தினமணி
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: பங்குனி உத்திர மங்கலங்கள் ஒன்றா! இரண்டா! 03.04.2015
பங்குனி மாதத்தில் உத்திர நட்சத்திரத்தில் பௌர்ணமி வரும் நாளில் பங்குனி உத்திர திருநாள் போற்றப்படுகிறது. தெய்வத் திருமணங்கள் பங்குனி பௌர்ணமி திருநாளில் நடத்தப்படுகின்றன. அந்த சமயங்களில் பல அதிசய நிகழ்வுகள் நடைபெற்றதாக சொல்லப்படுகின்றது.
சிதம்பரத்திலிருந்து சுமார் 5 கி.மீ தொலைவில் கொள்ளிடம் ஸ்ரீ புலீஸ்வரி அம்மன் கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலின் தல விருட்சம் குராமரம். இம்மரத்திற்கு ஒரு சிறப்பு உண்டு. இக்கோயிலில் முதல்நாள் கொடியேற்றத்துடன் பங்குனி உத்திரத் திருவிழா துவங்கும். அன்றைய தினம் குராமரம் பூக்களால் நிறைந்து அழகுடன் காட்சி தரும். திருவிழா நடக்கும் பத்து நாள்களும் இம்மரத்தில் பூக்கள் நிறைந்து மணம் பரப்பும். பதினோராம் நாள் கொடியிறக்கத்தின்போது மரத்தில் இருக்கும் அனைத்து பூக்களும் உதிர்ந்து பூக்கள் இல்லாது காட்சியளிக்கும். இம் மலர் பூத்திருக்கும் காலங்களில் முருகப்பெருமானுக்கும் அம்மனுக்கும் அர்ப்பணித்து வழிபடுவர். ஒவ்வோர் ஆண்டும் இந்த அதிசயம் நிகழும்.
திருஞானசம்பந்தர், மயிலாப்பூரில் வாழ்ந்த சிவநேசரின் பாம்பு தீண்டி இறந்துபோன மகள் பூம்பாவையை மீண்டும் உயிர்ப்பித்து எழுந்து வரச்செய்து அற்புதத்தை நிகழ்த்திக் காட்டிய நந்நாள் பங்குனி உத்திர திருநாளாகும்.
திருமலை- திருப்பதியில் உள்ள பதினான்கு தீர்த்தங்களில் ஒன்று தும்புரு தீர்த்தம். இந்தத் தீர்த்தத்தில் பங்குனி உத்திர நாளில் அனைத்து புனித தீர்த்தங்களும் வந்து இணைவதாக ஐதீகம். எழுமலையானை தரிசிப்பதற்கு முன்பாக இத்தீர்த்தத்தில் நீராடி பலன் பெறுகிறார்கள்.
திருநெல்வேலி, தெற்கு கருங்குளத்தில் பூசாஸ்தா கோயில் அமைந்துள்ளது. இங்கு பங்குனி உத்திரத் திருவிழாவின்போது ஆண்கள் தயாரித்து படைக்கும் கொழுக்கட்டை வழிபாடு பிரசித்தமானது. மேலும் பங்குனி உத்திரம் பத்து நாள் விழாவும் நடைபெறுகிறது. அச்சமயத்தில் இங்குள்ள தலவிருட்சம் ஒருசில நாள்களுக்கு பூத்துக் குலுங்கும். விழா முடிவடைந்ததும் மரத்தில் உள்ள பூக்கள் உதிர்ந்துவிடும். பின்னர் அடுத்த பங்குனி உத்திர விழா சமயத்தில்தான் பூக்குமாம்!
டி.ஆர். பரிமளரங்கன்
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Similar topics
» பங்குனி உத்திர துளிகள்
» பங்குனி உத்திர தினத்தின் சிறப்புகள்!!
» நாளை பங்குனி உத்திர திருமண விரதம்
» பங்குனி உத்திர சிறப்புகள்
» பங்குனி உத்திர விரதம்
» பங்குனி உத்திர தினத்தின் சிறப்புகள்!!
» நாளை பங்குனி உத்திர திருமண விரதம்
» பங்குனி உத்திர சிறப்புகள்
» பங்குனி உத்திர விரதம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|