புதிய பதிவுகள்
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 15:40

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 15:39

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 15:35

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 15:33

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 15:23

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 14:52

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 14:39

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 14:24

» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 9:44

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 8:47

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 8:45

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 8:43

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 8:41

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 8:38

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 21:57

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 18:29

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 16:50

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 14:29

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 23:36

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 23:20

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 22:24

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue 17 Sep 2024 - 14:33

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:09

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:08

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:07

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:05

» மீலாது நபி
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:02

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:00

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon 16 Sep 2024 - 16:01

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon 16 Sep 2024 - 15:17

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon 16 Sep 2024 - 13:04

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Mon 16 Sep 2024 - 1:17

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun 15 Sep 2024 - 23:31

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:33

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:31

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:30

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:28

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:26

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:24

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:22

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:19

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:16

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:15

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:13

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:12

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:09

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:06

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:05

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:04

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun 15 Sep 2024 - 17:49

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கஜூராகோ கோயில்கள் Poll_c10கஜூராகோ கோயில்கள் Poll_m10கஜூராகோ கோயில்கள் Poll_c10 
21 Posts - 48%
heezulia
கஜூராகோ கோயில்கள் Poll_c10கஜூராகோ கோயில்கள் Poll_m10கஜூராகோ கோயில்கள் Poll_c10 
8 Posts - 18%
mohamed nizamudeen
கஜூராகோ கோயில்கள் Poll_c10கஜூராகோ கோயில்கள் Poll_m10கஜூராகோ கோயில்கள் Poll_c10 
5 Posts - 11%
வேல்முருகன் காசி
கஜூராகோ கோயில்கள் Poll_c10கஜூராகோ கோயில்கள் Poll_m10கஜூராகோ கோயில்கள் Poll_c10 
4 Posts - 9%
T.N.Balasubramanian
கஜூராகோ கோயில்கள் Poll_c10கஜூராகோ கோயில்கள் Poll_m10கஜூராகோ கோயில்கள் Poll_c10 
3 Posts - 7%
Raji@123
கஜூராகோ கோயில்கள் Poll_c10கஜூராகோ கோயில்கள் Poll_m10கஜூராகோ கோயில்கள் Poll_c10 
2 Posts - 5%
kavithasankar
கஜூராகோ கோயில்கள் Poll_c10கஜூராகோ கோயில்கள் Poll_m10கஜூராகோ கோயில்கள் Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
கஜூராகோ கோயில்கள் Poll_c10கஜூராகோ கோயில்கள் Poll_m10கஜூராகோ கோயில்கள் Poll_c10 
144 Posts - 41%
ayyasamy ram
கஜூராகோ கோயில்கள் Poll_c10கஜூராகோ கோயில்கள் Poll_m10கஜூராகோ கோயில்கள் Poll_c10 
136 Posts - 38%
Dr.S.Soundarapandian
கஜூராகோ கோயில்கள் Poll_c10கஜூராகோ கோயில்கள் Poll_m10கஜூராகோ கோயில்கள் Poll_c10 
21 Posts - 6%
mohamed nizamudeen
கஜூராகோ கோயில்கள் Poll_c10கஜூராகோ கோயில்கள் Poll_m10கஜூராகோ கோயில்கள் Poll_c10 
20 Posts - 6%
Rathinavelu
கஜூராகோ கோயில்கள் Poll_c10கஜூராகோ கோயில்கள் Poll_m10கஜூராகோ கோயில்கள் Poll_c10 
8 Posts - 2%
வேல்முருகன் காசி
கஜூராகோ கோயில்கள் Poll_c10கஜூராகோ கோயில்கள் Poll_m10கஜூராகோ கோயில்கள் Poll_c10 
7 Posts - 2%
prajai
கஜூராகோ கோயில்கள் Poll_c10கஜூராகோ கோயில்கள் Poll_m10கஜூராகோ கோயில்கள் Poll_c10 
6 Posts - 2%
T.N.Balasubramanian
கஜூராகோ கோயில்கள் Poll_c10கஜூராகோ கோயில்கள் Poll_m10கஜூராகோ கோயில்கள் Poll_c10 
4 Posts - 1%
Guna.D
கஜூராகோ கோயில்கள் Poll_c10கஜூராகோ கோயில்கள் Poll_m10கஜூராகோ கோயில்கள் Poll_c10 
4 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
கஜூராகோ கோயில்கள் Poll_c10கஜூராகோ கோயில்கள் Poll_m10கஜூராகோ கோயில்கள் Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கஜூராகோ கோயில்கள்


   
   

Page 1 of 12 1, 2, 3 ... 10, 11, 12  Next

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri 21 Aug 2009 - 23:01

கஜூராகோ மத்யபிரதேசத்தில் சத்ரபூர் மாவட்டத்தில் உள்ளது. கஜுராஹே என்ற பேரானது ஈச்சமரத்து ஓலையில் இருந்து பெறப்பட்டது. காஜூர் என்று அது இந்த பகுதியின் ஹிந்தியில் அழைக்கப்படுகிறது. இப்பகுதியே ஈச்சங்காடாக இருந்திருக்கிறது. இப்போதும் இப்பகுதியில் ஈச்சமரங்களை அதிகமாகக் காணலாம்.

கஜுராஹோ ஒருகாலத்தில் சந்தேலா மன்னர்களின் தலைநகரமாக இருந்திருக்கிறது. அவர்கள் கிபி பத்தாம் நூற்றாண்டு முதல் பன்னிரண்டாம் நூற்றாண்டுவரை ஆண்டிருக்கிறார்கள். கிபி 950 முதல் நூற்றைம்பது வருடக்கால இடைவெளியில் இங்குள்ள கோயில்கள் கட்டபப்ட்டிருக்கலாம் என்று சொல்லப்படுகிறது. சந்தேலர்களின் தலைநகரம் மஹோபாவுக்கு பின்னர் மாற்றப்பட்டாலும் இந்த நகரம் ஒரு புனிதத்தலமாகவே நீடித்தது. முகலாய ஆட்சிக்காலத்திற்கு முன்னரே இந்நகரம் கைவிடப்பட்டு காடுக்குள் மறைந்துவிட்டது. ஆகவே வட இந்தியாவில் உள்ள பேராலயங்கள் அனைத்தையும் முகலாயர்கள் அழித்தபோது இந்த ஆலயத்தொகை அவர்களால் அழிக்கபப்டாமல் எஞ்சியது. பின்னர் பிரிட்டிஷார் காலத்தில்தான் இந்த ஆலயங்கள் கண்டடையப்பட்டன. அவர்கள் இதை ஒரு மாபெரும் கலைச்சின்னமாக எண்ணி உரிய முறையில் பேணினார்கள். பிரிட்டிஷ் கலாகட்டத்திலேயே விரிவான அகழ்வாராய்ச்சிகளும் பாதுகாப்புப்பணிகளும் இந்த ஆலயங்களில் நிகழ்த்தப்பட்டுள்ளன.

இந்நகரின் எல்லைக்குள் கிட்டத்தட்ட 80 கோயில்கள் இருந்ததாகச் சொல்லப்படுகிறது. அவற்றில் 22 கோயில்கள்தான் இப்போது ஓரளவாவது நல்லநிலையில் உள்ளன. பல கோயில்களின் அடித்தளங்கள் அகழ்ந்து எடுக்கபப்ட்டுள்ளன. இவை 21 சதுர மைல் பரப்பளவில் பல இடங்களிலாக சிதறிப்பரந்திருக்கின்றன. எல்லா கோயில்களும் செங்கல் நிறமுள்ள சிவப்புக்கல்லால் செய்யப்பட்டவை. இது மணல்பாறை ஆதலினால் மிகநுட்பமாக செதுக்க ஏற்றது. இதனால் இக்கோயில்களில் சிற்பங்கள் இல்லாத இடமே இல்லை. பல கோயில்களை இதழ் விரித்த மலர்கள் என்றே சொல்லி விடலாம். மலரின் அல்லிவட்டம் புல்லி வட்டம் போன்றவற்றில் உள்ள நெருக்கமான சிக்கலான பின்னல்களும் அடுக்குகளும் இக்கோயில் முழுக்க நிறைந்துள்ளன. அதேசமயம் இங்குள்ள தூண்கள் சாதாரணமான அறுபட்டை வடிவங்கள் மட்டுமே. காகதீய சாளுக்கிய பாணி கோயில்களில் தூண்கள் ஒவ்வொன்றும் சிற்பங்கள் மண்டிய கலைக்கூடங்களாக இருப்பதுடன் ஒப்பிட்டால் இது வியப்பூட்டுகிறது.

வட இந்தியாவில் உள்ள நாகர பாணி கோபுர அமைப்புக்கும் அடுக்குவடிவிலான கற்கட்டுமான முறைக்கும் மிகச்சிறந்த உதாரணங்களாக கஜுராஹோ கோயில்கள் சுட்டிக்காட்டப்படுகின்றன. பெரும்பாலான புகழ்பெற்ற ஆலயங்கள் அழிக்கபப்ட்டுவிட்ட நிலையில் கஜுராஹோ எஞ்சியது ஒரு நல்லூழ்தான். பஞ்சாயதனம் [ஐந்து ஆயதனங்கள்] என்ற கட்டிட அமைப்பு கொண்டவை இவை. அதாவது ஒரு மையக்கருவறையும் அதன் இருபக்கங்களும் இரண்டு வீதம் நான்கு துணைக்கருவறைகளும் கொண்ட அமைப்பு இது. இங்குள்ள பழைமையான சில கோயில்கள் சமண ஆலயங்கள். மும்மூர்த்திகளுக்கும் ஜகதாம்பாள் போன்ற தேவியருக்கும் கோயில்கள் உள்ளன.

இங்குள்ள கோபுரவடிவை நாம் தென்நாட்டுக் கோயில்களில் வேறு ஒரு வடிவில் காணலாம். ஆனால் நம்முடைய கோபுரங்கள் ஒரே கூம்பு வடிவம் கொண்டவை. இவை பல கோபுரங்கள் இணைந்து ஒரு கொத்து போல தோற்றம் அளிப்பவை. கோபுரவடிவுக்குள் மேலும் கோபுரங்கள். இவை சிகரங்கள் என்று சொல்லபப்டுகின்றன ஒன்றன்மீது ஒன்றாக தட்டுகளாக அடுக்கபப்ட்டு மேலே குறுகிச் சென்று கலசத்தில் முடியும் அமைப்பு கொண்டவை. அதேசமயம் கூம்பு போன்ற அமைப்பு இல்லாமல் விளிம்பு வளைவாக இருக்கும். நட்டுவைத்த மக்காச்சோளக் கதிர்களைப்போன்று இருப்பதாக தோன்றுகிறது இ ங்குள்ள ஆகப்பெரிய ஆலயமான காந்தரிய மகாதேவர் கோயில் கோபுரத்தில் 84 சிகரங்கள் உள்ளன. 116 அடி உயரம் உள்ளது இந்த கோபுரம்.

தென்னாட்டில் ஹொய்ச்சள, விஜயநகர பாணி கோயில்களிலும் கோபுரங்கள் சிறு தட்டுகளாக மேலேறி சுருங்கிச்செல்லும் அமைப்பு உண்டு. இங்குள்ள கோபுரங்கள் அனைத்துமே கருவறைக்கு மேலேதான் உள்ளன. கற்களை அடுக்கிக் கட்டப்படுபவை நம்முடைய கோயில்கள். ஆகவே அவை பிரம்மிடு போன்று கூம்பிச்செல்பவை. கஜுராகோ ஆலயக்கோபுரங்கள் செங்குத்தாக எழுந்து செல்கிறது. சிற்பக்கற்கள் ஒன்றுடன் ஒன்று மாட்டப்பட்டு திருகப்பட்டுள்ளன என்று சொல்கிறார்கள்.

கஜுராஹோ கோபுரங்களின் அமைப்பு இமயமலைச் சிகரங்களை ஒத்தது என்று சொல்லபப்டுகிறது. இந்த விஷயத்தைப்பற்றி கலைவிமரிசகர்கள் எழுதியிருக்கிறார்கள். ஒரு பகுதியின் கட்டிடக்கலையில் அப்பகுதியின் மலைகளின் பாறைகளின் அமைப்பு அழகியல் ரீதியான பாதிப்பைச் செலுத்துகிறது. ற்றோப்பிய ஊசிக்கோபுரங்கள் பனியிருகும் அந்நாட்டு மலைமுடிகள். அரேபிய கும்மட்டங்கள் காற்று அரித்த மணல்பாறைகளின் வளைமுகடுகள். அப்படிப்பார்த்தால் செங்குத்தாக ஓங்கி எழுந்த நம்முடைய ராயகோபுரங்கள் தென்னகத்து கரும்பாறைகளின் மானுடநகல்கள்.

கஜுராகோ கோயில்களைச் சுற்றியிருந்த பாலைவனச்சாயல்கொண்ட புதர்க்காடுகளை அழித்து அவற்றைசுற்றி நந்தவனம் அமைக்கும் பணி பிரிட்டிஷ்காலத்திலேயே செய்யபப்ட்டுவிட்டது. காந்தரிய மகாதேவர் ஆலயம் உள்பட முக்கியமான கோயில்கள் அனைத்தும் ஒரே வளாகத்துக்குள் உள்ளன . வளாகத்துக்கு வெளியே உள்ள கோயில்கள் சிற்ப அடிபப்டையில் முக்கியமானவை அல்ல.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri 21 Aug 2009 - 23:01

பலரும் எண்ணிவருவது போல கோயில்களின் சன்னிதிகளில் பாலியல் சிற்பங்கள் ஏதும் கிடையாது. பெரும்பாலும் புறச்சுற்றுச்சுவர்களிலும் அடிஸ்தானத்தின் கற்களிலும்தான் புடைப்புச் சிற்பங்களாக பாலியல் சிற்பங்கள் உள்ளன. இன்னொன்று இந்தவகையான பாலியல் சிற்பகளிலில் தேவர்களோ கந்தர்வர்களோ இல்லை. அன்றாட வாழ்க்கைச் சித்தரிப்பின் பகுதிகளாகவே இவை உள்ளன. அவற்றில் சித்தரிக்கபப்ட்டிருப்பவர்கள் பெரும்பாலும் தாசிகள். அவர்கள் அணிந்துள்ள நகைகளில் தாசிகளுக்கான தாலிகள் இருப்பதிலிருந்து கலைவிமரிசகர்கள் இதை ஊகித்திருக்கிறார்கள்.

மேலும் இப்பெண்கள் ஒப்பனைசெய்துகொள்வது பாணர்களும் நட்டுவர்களும் கூட ஆட ஆடல்கலைகளில் ஈடுபடுவது போன்ற சிற்பங்கள் ஏராளமாக உள்ளன. பெரும்பாலான தாசிகளுடன் தோழிகளும் காணப்படுகிறார்கள். நீராடுதல் உடைகளை மாற்றுதல் உடைகளைச் சரிசெய்தல் போன்ற நிலைகளில் நளினமான அசைவுகளின் உறைநிலையில் அவர்கள் நின்றிருக்கிறார்கள். செல்வமும் சமூக மதிப்பும் மத அங்கீகாரமும் கொண்ட பரத்தை வாழ்க்கையின் சித்திரங்கள்தான் அவை என்பதே ஊகிக்கக்கூடியதாக உள்ளது.

இங்குள்ள காமச்சித்தரிப்புகளை வாத்ஸ்யயனரின் காமசூத்ரத்துடன் இணைத்து புரிந்துகொள்ள முயல்வது மேலைநாட்டவரின் முறையாக உள்ளது. ஆரம்பகால ஆய்வாளர்கள் பலர் அப்படி எழுதியுள்ளனர். ஆனால் இங்குள்ள காமச்சித்தரிப்புகள் அலங்காரத்தன்மையுடன் மிகைப்படுத்தப்பட்டவை. உண்மையில் பல தோற்றங்கள் வரைதளத்தை நிரப்பும் நோக்கத்துடன் உருவாக்கப்ப்ட்டவை. அதீத நெளிவுகள் கைகால் பின்னல்கள் போன்றவை இதனாலேயே உருவாகின்றன.

இத்தகைய காமச்சித்தரிப்புகளுக்கு என்ன காரணம் இருக்க முடியும்? பலவகையான விளக்கங்கள் உள்ளன. வழிகாட்டிகள் பொதுவாக "காம குரோதங்களை வெளியே விட்டுவிட்டு உள்ளே செல்ல வேண்டும்" என்பதை காட்டுவதற்காக இவை செதுக்கப்பட்டுள்ளன என்பார்கள். அது ஒரு பௌராணிக விளக்கம் மட்டுமே. வரலாற்று ரீதியாகப் பார்த்தால் இரண்டு விளக்கங்களைக் கொடுக்கலாம். ஒன்று அது அக்கால வாழ்க்கையின் பிரிக்கமுடியாத ஒரு கூறு. அக்காலகட்ட வாழ்க்கை என்பது கொண்டாட்டத்தால் ஆனது. ராமப்பாகோயில் மண்டபமே இதற்கு இன்னொரு உதாரணம். கலையும் கேளிக்கையுமாக பெரும் களியாட்டம் அந்த மண்டபத்தில் செதுக்கப்பட்டுள்ளது.

இன்னொரு விளக்கம் இந்தச் சிற்பங்களுக்கு தாந்த்ரீக வழிபாட்டு முறைமைகளுடன் நேரடியான உறவு உண்டு என்பது. கஜுராஹோவில் தாந்த்ரீகம் வலுவாக இருந்திருப்பதை இங்குள்ள பல்வேறு தாந்த்ரீக அடையாளங்கள் [யந்திரங்கள்] மூலம் நாம் அறியலாம். தாந்த்ரீக வழிபாட்டுக்கு கோயிலின் பெரும் கட்டமைப்புக்குள் ஓர் இடம் அளிப்பதற்காகவே இச்சிற்பங்கள் செதுக்கப்பட்டிருக்கலாம். அவை புறச்சுவர்களில் அமைந்திருப்பதும் முக்கியமானது.

தாந்த்ரீகம் என்பது பழங்குடி வழிபாட்டுமுறைகளின் நீட்சியாகும். அவ்வழிபாட்டுமுறைகள் பெருமதத்தின் தத்துவத்தால் விளக்கப்படும்போது தாந்த்ரீகம் உருவாகிறது. வழிபாட்டுக்காக களங்கள் வரைவதும், சின்னங்கள் உருவாக்குவதும், பிம்பங்கள் உருவாக்குவதும் தாந்த்ரீகத்தின் வழிமுறையாக உள்ளன. பல்வேறுவகையான அனுஷ்டானங்கள் குறியீட்டுச்சடங்குகள் மூலம் ஆழ்மனதை உக்கிரப்படுத்தி வெளிப்படச்செய்வது அவர்களின் இயல்பு. மனித உடலில் அழகையும் அழிவையும் அவர்கள் வழிபடுவதுண்டு. தாந்த்ரீகமுறை என்பது சைவம் வைணவம் சாக்தம் ஆகிய மூன்று மதங்களிலும் ஊடுருவி நீடிக்கும் ஒன்று. இந்தியாவின் யோக மரபில் தாந்த்ரீகத்தின் பங்களிப்பு மிக அதிகம். சிற்பக்கலை கட்டிடக்கலை ஓவியக்கலை மருத்துவம் போன்றவற்றிலும் அது பெரும் பங்காற்றியிருக்கிறது. நாம் இன்றுகாணும் பல்வேறு இறைவடிவங்கள் தாந்த்ரீ£கத்தால் உருவாக்கப்பட்டவையே.

தாந்த்ரீகம் காலப்போக்கில் பெருமதங்களுக்குள் இழுத்து கரைக்கப்பட்டது. ஆறாம் நூற்றாண்டு முதல் உருவான பக்தி இயக்கமே தாந்த்ரீகத்தை இல்லாமலாக்கியது எனலாம். ஆனாலும் பண்பாட்டில் தாந்த்ரீகமுறைகளின் இடம் ஏதோ ஒருவடிவில் இருந்துகொண்டே இருக்கிறது. தமிழகத்தில் பெரும்பாலான சித்தர்கள் தாந்த்ரீக முறைகளைச் சார்ந்தவர்களே. கன்னட வசன இயக்கத்தைச் சார்ந்தவர்கள் பலர் தாந்த்ரீகர்கள். தாந்த்ரீகம் அதிகார அமைப்புக்கு வெளியே நிற்கும் தன்மை கொண்டதாகையால் அதில் ஒரு கலக அம்சம் எப்போதும் இருக்கிறது. ஒழுக்கவியலை அவர்கள் பொருட்படுத்தவில்லை. வாழ்க்கையை அவர்கள் விலக்கவில்லை, அறிய முயன்றனர். ஆகவே காமத்தைக் கொண்டாடினர் அல்லது கடந்துசென்றனர்.

மத்தியபிரதேசம் பின்னர் கிருஷ்ணபக்தி அலையால் மூழ்கடிக்கப்பட்டது. வைணவத்தில் இருந்த தாந்த்ரீகம் முழுமையாகவே மறைந்தது. வங்கம் கேரளம் ஒரியா முதலிய மேற்குக்கரை பகுதிகளில் மட்டும் அது நீடித்தது. இப்பகுதியில் தாந்த்ரீகம் வலுவாக ஆட்சி செலுத்திய காலகட்டத்தின் சின்னமாக விளங்குகிறது கஜுராஹோ.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri 21 Aug 2009 - 23:52

கஜூராகோ கோயில்கள் Khajuraho011

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri 21 Aug 2009 - 23:53

கஜூராகோ கோயில்கள் Khajuraho012

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri 21 Aug 2009 - 23:54

கஜூராகோ கோயில்கள் Khajuraho013

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri 21 Aug 2009 - 23:54

கஜூராகோ கோயில்கள் Khajuraho014

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri 21 Aug 2009 - 23:55

கஜூராகோ கோயில்கள் Khajuraho015

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri 21 Aug 2009 - 23:55

கஜூராகோ கோயில்கள் Khajuraho016

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri 21 Aug 2009 - 23:56

கஜூராகோ கோயில்கள் Khajuraho017

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri 21 Aug 2009 - 23:57

கஜூராகோ கோயில்கள் Khajuraho018

Sponsored content

PostSponsored content



Page 1 of 12 1, 2, 3 ... 10, 11, 12  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக