Latest topics
» நிலவோடு வான்முகம் வான்முகில்by heezulia Today at 4:22 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:11 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 3:28 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 3:07 pm
» கருத்துப்படம் 04/10/2024
by mohamed nizamudeen Today at 3:01 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:46 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:26 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:16 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:06 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 1:40 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:01 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:48 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:30 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:10 pm
» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Today at 11:36 am
» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Today at 7:22 am
» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Today at 7:16 am
» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Today at 7:15 am
» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Today at 7:14 am
» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Today at 7:12 am
» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Today at 7:11 am
» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Today at 7:09 am
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed Oct 02, 2024 8:27 pm
» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm
» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:53 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am
» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm
» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm
» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm
» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm
» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm
» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm
» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm
» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm
» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm
» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:24 pm
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
dhilipdsp | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
D. sivatharan | ||||
kavithasankar | ||||
Sathiyarajan | ||||
Guna.D |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
kavithasankar | ||||
Sathiyarajan | ||||
Guna.D | ||||
D. sivatharan |
நிகழ்நிலை நிர்வாகிகள்
பிறரை வசப்படுத்துவது எப்படி?
+2
T.N.Balasubramanian
krishnaamma
6 posters
Page 1 of 2
Page 1 of 2 • 1, 2
பிறரை வசப்படுத்துவது எப்படி?
பிறரை வசப்படுத்தும் கலை மட்டும் கை வரப்பெற்று விட்டால், வாழ்வின் பாதி சவால்களுக்கு விடை கண்டு விடலாம். 'பிறரை வசப்படுத்தி என்ன ஆகப் போகிறது... இதெல்லாம் அனாவசியம்; தேவையில்லாத வேலை. எவன் தயவும் எனக்கு தேவையில்ல...' என்று வாதிடும் வறட்டுவாதிகளையும் கூட, இக்கட்டுரை சிறு மன மாற்றத்திற்கு வித்திடும் என்ற நம்பிக்கை, எனக்கு உள்ளது.
மனிதனின் மிகப் பெரிய பலவீனம் அன்பிற்கு ஏங்குவது! இப்படி ஏங்குவதை கூட ஏனோ சிலர் வெளிக்காட்டிக் கொள்வதில்லை. ஒரு பாலைவன பயணிக்கு நீர் கொடுப்பதை விடவும் தேவையான விஷயம் இது. அன்பின் முதல் அடையாளம், புன்னகை; பின், கனிவான சொற்கள், மரியாதை மிகுந்த உடல்மொழிகள். நிறைவாக, மனிதநேயத்தை வெளிப்படுத்தும் அணுகுமுறைகள்.
'என்னை எவனும் மதிப்பதில்லை; யாரும் பொருட்படுத்துவதில்லை; ஒரு உதவி கூட ஒருத்தனும் செய்றதில்லை. மோசமான உலகமிது...' என்று ஒருவர் புலம்பினால், கோளாறு இவரிடம் தான் உள்ளது என்பது மிகத் தெளிவு.
'பணமிருந்தா தான் மதிக்கிறாங்க; இல்லைன்னா எவன் மதிக்கிறான்...' என்று வாதிடுவோரும் இருக்கின்றனர்.
பொதுவாழ்வில் அதிகம் நேசிக்கப்படுபவர்களின் பட்டியலை எடுங்கள். இவர்களுள் பணத்திற்காக மட்டும் மதிக்கப்படுபவர்களை ஓரங்கட்டுங்கள். மீதமிருப்பவர்களுக்கு இவர்கள் என்ன பதில் சொல்லப் போகின்றனர்? அன்னை தெரசா பணத்திற்காகவா மதிக்கப்பட்டார்?
சமூகத்தை ஒட்டு மொத்தமாக குற்றவாளிக் கூண்டிலேற்றி குற்றம் சாட்டும் இவர்களிடம் ஒரு பதில் வாதம் வைக்கட்டுமா... மற்றவர்களை வசப்படுத்த தெரியாமல் போன குறை உங்களிடம் இருப்பதால் தான், இந்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளீர்கள் என்கிறேன் நான். வாருங்கள் பதிலோடு வாதிடுவோம்!
ஒரு கூட்டத்தில், தனக்கு முன் பேசியவரை, அடுத்து பேசியவர் கடுமையாக குறை கூறினார். (இத்தனைக்கும் அது பட்டிமன்றம் அல்ல!) பலருக்கும், 'என்ன அருமையான கோணம்; பிரமாதமான வாதம்...' என்று தோன்றியது. சுட்டிக்காட்டப்பட்டவர், 'ஸ்கேன் எந்திரம் கூட இப்படிக் கண்டுபிடிக்காது; இதை நான் வரவேற்கிறேன். என்னை நான் திருத்திக் கொள்கிறேன்...' என்று கூறினார். அன்றைய கூட்டத்தின் நாயகராக ஆனவர் இவர் தான்.
தோற்றத்தால் வசப்படுத்த முடியாதவர்கள், உடையால் வசப்படுத்தலாம்; (பிரமாதமான டிரஸ் சென்ஸ் இவருக்கு) இரண்டும் இல்லாதவர்கள், பணிவால் வசப்படுத்தலாம்.
போலித்தனம் இல்லாத வார்த்தைகளால் வசப்படுத்தலாம்; கருணையால், பரிவால் வசப்படுத்த முடியாதவர்கள், இவ்வுலகில் மிகக்குறைவு.
வீட்டில் ஒரு பழுது; அதைச் சரிசெய்ய வரும் ஊழியரை, 'எப்ப சொன்னேன்; இப்பத்தான் வர்றே...' என்று வரவேற்பதைக் காட்டிலும், அதையே சிறிது மாற்றி, 'வாங்க வாங்க... உங்களை தான் ஆர்வமா எதிர்பார்த்துட்டிருக்கோம். முதல்ல டீ, காபி; அப்புறம் தான் வேலை...' என்று கிண்டலடிக்காத தொனியில் சொல்லுங்கள்.
வேலையின் தரம் உயர்ந்து, கூலி குறையா விட்டால் என்னைக் கேளுங்கள். ஏனோ ஊழியர்களை மிக மோசமாகவே நடத்துகிறோம். அவர் மனதிற்குள் ஓடும், 'நெகட்டிவ்' ஒயரை தொடாதீர்கள்; 'ஷாக்' தருவார். 'பாசிட்டிவ்' ஒயரை தொடுங்கள்; அவர் நம் வசமாவார்.
சிறு சிறு உதவிகளால் பிறரை வசப்படுத்தலாம்; விமானம், ரயில் மற்றும் பேருந்தில், உங்களது சக பயணிகளை சிறு செயல்களால் வசப்படுத்துங்கள். பயணமே இனிமையாகி விடும். வசப்படுத்துறதாவது வெங்காயமாவது என்று நடந்து பாருங்கள்... பயணத்தின் இனிமையை சக பயணிகள் எப்படிப் பறித்து விடுகின்றனர் என்பதை உணர்வீர்கள்.
திறமைகளை காட்டி வசப்படுத்துங்கள்; பணமும், புகழும் கை கட்டி, உங்களுக்கு சேவகம் புரியும்.
நோட்டால் (பணத்தால்) வசப்படுத்துங்கள்; நீங்களும் இந்திரன், சந்திரன் தான்.
பலத்தால் வசப்படுத்துங்கள்; உலகமே உங்களை அண்ணாந்து பார்க்கும்.
பிறரை வசப்படுத்தி வாழும் வாழ்க்கை இனியது மட்டுமல்ல, சுவை மிகுந்ததும் கூட!
லேனா தமிழ்வாணன்
மனிதனின் மிகப் பெரிய பலவீனம் அன்பிற்கு ஏங்குவது! இப்படி ஏங்குவதை கூட ஏனோ சிலர் வெளிக்காட்டிக் கொள்வதில்லை. ஒரு பாலைவன பயணிக்கு நீர் கொடுப்பதை விடவும் தேவையான விஷயம் இது. அன்பின் முதல் அடையாளம், புன்னகை; பின், கனிவான சொற்கள், மரியாதை மிகுந்த உடல்மொழிகள். நிறைவாக, மனிதநேயத்தை வெளிப்படுத்தும் அணுகுமுறைகள்.
'என்னை எவனும் மதிப்பதில்லை; யாரும் பொருட்படுத்துவதில்லை; ஒரு உதவி கூட ஒருத்தனும் செய்றதில்லை. மோசமான உலகமிது...' என்று ஒருவர் புலம்பினால், கோளாறு இவரிடம் தான் உள்ளது என்பது மிகத் தெளிவு.
'பணமிருந்தா தான் மதிக்கிறாங்க; இல்லைன்னா எவன் மதிக்கிறான்...' என்று வாதிடுவோரும் இருக்கின்றனர்.
பொதுவாழ்வில் அதிகம் நேசிக்கப்படுபவர்களின் பட்டியலை எடுங்கள். இவர்களுள் பணத்திற்காக மட்டும் மதிக்கப்படுபவர்களை ஓரங்கட்டுங்கள். மீதமிருப்பவர்களுக்கு இவர்கள் என்ன பதில் சொல்லப் போகின்றனர்? அன்னை தெரசா பணத்திற்காகவா மதிக்கப்பட்டார்?
சமூகத்தை ஒட்டு மொத்தமாக குற்றவாளிக் கூண்டிலேற்றி குற்றம் சாட்டும் இவர்களிடம் ஒரு பதில் வாதம் வைக்கட்டுமா... மற்றவர்களை வசப்படுத்த தெரியாமல் போன குறை உங்களிடம் இருப்பதால் தான், இந்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளீர்கள் என்கிறேன் நான். வாருங்கள் பதிலோடு வாதிடுவோம்!
ஒரு கூட்டத்தில், தனக்கு முன் பேசியவரை, அடுத்து பேசியவர் கடுமையாக குறை கூறினார். (இத்தனைக்கும் அது பட்டிமன்றம் அல்ல!) பலருக்கும், 'என்ன அருமையான கோணம்; பிரமாதமான வாதம்...' என்று தோன்றியது. சுட்டிக்காட்டப்பட்டவர், 'ஸ்கேன் எந்திரம் கூட இப்படிக் கண்டுபிடிக்காது; இதை நான் வரவேற்கிறேன். என்னை நான் திருத்திக் கொள்கிறேன்...' என்று கூறினார். அன்றைய கூட்டத்தின் நாயகராக ஆனவர் இவர் தான்.
தோற்றத்தால் வசப்படுத்த முடியாதவர்கள், உடையால் வசப்படுத்தலாம்; (பிரமாதமான டிரஸ் சென்ஸ் இவருக்கு) இரண்டும் இல்லாதவர்கள், பணிவால் வசப்படுத்தலாம்.
போலித்தனம் இல்லாத வார்த்தைகளால் வசப்படுத்தலாம்; கருணையால், பரிவால் வசப்படுத்த முடியாதவர்கள், இவ்வுலகில் மிகக்குறைவு.
வீட்டில் ஒரு பழுது; அதைச் சரிசெய்ய வரும் ஊழியரை, 'எப்ப சொன்னேன்; இப்பத்தான் வர்றே...' என்று வரவேற்பதைக் காட்டிலும், அதையே சிறிது மாற்றி, 'வாங்க வாங்க... உங்களை தான் ஆர்வமா எதிர்பார்த்துட்டிருக்கோம். முதல்ல டீ, காபி; அப்புறம் தான் வேலை...' என்று கிண்டலடிக்காத தொனியில் சொல்லுங்கள்.
வேலையின் தரம் உயர்ந்து, கூலி குறையா விட்டால் என்னைக் கேளுங்கள். ஏனோ ஊழியர்களை மிக மோசமாகவே நடத்துகிறோம். அவர் மனதிற்குள் ஓடும், 'நெகட்டிவ்' ஒயரை தொடாதீர்கள்; 'ஷாக்' தருவார். 'பாசிட்டிவ்' ஒயரை தொடுங்கள்; அவர் நம் வசமாவார்.
சிறு சிறு உதவிகளால் பிறரை வசப்படுத்தலாம்; விமானம், ரயில் மற்றும் பேருந்தில், உங்களது சக பயணிகளை சிறு செயல்களால் வசப்படுத்துங்கள். பயணமே இனிமையாகி விடும். வசப்படுத்துறதாவது வெங்காயமாவது என்று நடந்து பாருங்கள்... பயணத்தின் இனிமையை சக பயணிகள் எப்படிப் பறித்து விடுகின்றனர் என்பதை உணர்வீர்கள்.
திறமைகளை காட்டி வசப்படுத்துங்கள்; பணமும், புகழும் கை கட்டி, உங்களுக்கு சேவகம் புரியும்.
நோட்டால் (பணத்தால்) வசப்படுத்துங்கள்; நீங்களும் இந்திரன், சந்திரன் தான்.
பலத்தால் வசப்படுத்துங்கள்; உலகமே உங்களை அண்ணாந்து பார்க்கும்.
பிறரை வசப்படுத்தி வாழும் வாழ்க்கை இனியது மட்டுமல்ல, சுவை மிகுந்ததும் கூட!
லேனா தமிழ்வாணன்
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: பிறரை வசப்படுத்துவது எப்படி?
அது எப்பிடிங்க இது மாதிரி நல்ல பதிவுகளை தேர்வு செய்து போடுகிறீர்கள் .!
ரமணியன்
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010
Re: பிறரை வசப்படுத்துவது எப்படி?
T.N.Balasubramanian wrote:அது எப்பிடிங்க இது மாதிரி நல்ல பதிவுகளை தேர்வு செய்து போடுகிறீர்கள் .!
ரமணியன்
நிஜமாவே சொல்லறீங்களா , இல்லை கட்டுரை படித்த தாக்கத்தில் சொல்லறீங்களா ஐயா ?
.
.
.
.
என்றாலும் என் பங்குக்கு ..........." எல்லாம் உங்களைப்போல பெரியவா பழக்கமும் ஆசிர்வாதமும் , தான் காரணம் ஐயா "
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: பிறரை வசப்படுத்துவது எப்படி?
அருமையான பதிவு...........
வசப்படுத்தும் கலை அனைவருக்கும் வருமா?????????
வசப்படுத்தும் கலை அனைவருக்கும் வருமா?????????
கொடுப்பதற்கும் பெறுவதற்கும் உரிய விலை மதிப்பில்லாத பரிசு அன்பு .
M.Saranya- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2190
இணைந்தது : 26/08/2014
Re: பிறரை வசப்படுத்துவது எப்படி?
மேற்கோள் செய்த பதிவு: 1127926M.Saranya wrote:அருமையான பதிவு...........
வசப்படுத்தும் கலை அனைவருக்கும் வருமா?????????
கொஞ்சம் கஷ்டம் தான்......பழகணும் சரண்யா
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: பிறரை வசப்படுத்துவது எப்படி?
எனக்கு மிக மிக கடினம் அம்மா ......
கொடுப்பதற்கும் பெறுவதற்கும் உரிய விலை மதிப்பில்லாத பரிசு அன்பு .
M.Saranya- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2190
இணைந்தது : 26/08/2014
ஜாஹீதாபானு- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011
Re: பிறரை வசப்படுத்துவது எப்படி?
நல்ல பகிர்வும்மா
(இத விட எளிதாக - அதிக வட்டி தரேன்னு சொன்னா லட்ச லட்சமா கொண்டு வந்து கொட்டிடுவாங்களே மதி மயங்கி)
(இத விட எளிதாக - அதிக வட்டி தரேன்னு சொன்னா லட்ச லட்சமா கொண்டு வந்து கொட்டிடுவாங்களே மதி மயங்கி)
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Re: பிறரை வசப்படுத்துவது எப்படி?
எல்லாருக்கும் அதிஷ்டம் இருந்தால்தான் வசபடுத்தவும் முடியும். எல்லாம் பிறந்த நேரத்தை வைத்தே அமையும் . நல்ல பதிவு.........
சிவனாசான்- வி.ஐ.பி
- பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014
Page 1 of 2 • 1, 2
Similar topics
» பிறரை அழ வைக்காதே…!
» பிறரை அழ வைக்காதே - -குழந்தையானந்தசுவாமி
» பிறரை நேசிக்க கற்றுக்கொள்ளுங்கள்...!!
» பிறரை மனதாரப் பாராட்டுங்கள்!
» பிறரை சந்தோசப்படுத்த சிரிப்பதில் தவறில்லை!
» பிறரை அழ வைக்காதே - -குழந்தையானந்தசுவாமி
» பிறரை நேசிக்க கற்றுக்கொள்ளுங்கள்...!!
» பிறரை மனதாரப் பாராட்டுங்கள்!
» பிறரை சந்தோசப்படுத்த சிரிப்பதில் தவறில்லை!
Page 1 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|