Latest topics
» அழகு இயற்கை அளித்துள்ள பேறுby Dr.S.Soundarapandian Today at 12:14 am
» யூடியூப் பகிர்வு: ஏதாவது நல்ல செய்தி இருக்கா?
by Dr.S.Soundarapandian Today at 12:07 am
» யூடியூப் பகிர்வு: சில அதிர்ச்சிக் 'குறிப்பு'கள் - பெற்றோர்கள் அவசியம் பார்க்கவும் !
by Dr.S.Soundarapandian Today at 12:06 am
» யூடியூப் பகிர்வு: அசாமின் புதுவித மீன் பிடித்தல் முறை
by Dr.S.Soundarapandian Today at 12:02 am
» வேது பிடித்தல்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:59 pm
» கர்மவீரரே...
by Dr.S.Soundarapandian Yesterday at 11:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:38 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:13 pm
» பண்ணும் கீர்த்தனையும் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:11 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:33 pm
» கர்மவீரரே…
by ayyasamy ram Yesterday at 9:30 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:54 pm
» புதிய காலை ஒன்று புலரட்டும்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:20 pm
» ஆசிரியர் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:19 pm
» அத்தனை உயிருக்கும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:16 pm
» வலசை போகும் வழியில்…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 7:15 pm
» புதுக்கவிதைகள் - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 7:14 pm
» தெரியமா சேதி…?
by ayyasamy ram Yesterday at 7:09 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:06 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:50 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:27 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:27 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:11 pm
» அழகு பற்றிய பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 2:39 pm
» அழகு அது பார்ப்பவர் கண்ணில் உண்டு! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 2:30 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:49 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:21 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:06 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:29 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:02 pm
» அரசு உதவி பெறும் பள்ளிகளில் காலை உணவுத் திட்டம்
by ayyasamy ram Yesterday at 11:07 am
» மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை!
by ayyasamy ram Yesterday at 9:15 am
» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 9:08 am
» எல்லாம் சில காலம் தான்..........
by rajuselvam Yesterday at 4:16 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 12:25 am
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Jul 14, 2024 11:26 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Jul 14, 2024 11:17 pm
» வந்தேன் வந்தேன் மீண்டும் நானே வந்தேன்
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:38 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Jul 14, 2024 8:37 pm
» ஆராரோ ஆரீராரோ அம்புலிக்கு நேரிவரோ...
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:35 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:24 pm
» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:17 pm
» ஆட்டிப்படைக்கும் தேவதைகள் - புதுக்கவிதை
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:11 pm
» முடிவிலி - புதுக்கவிதை
by Anthony raj Sun Jul 14, 2024 8:04 pm
» திருநீறு வாங்கும்போது கவனிக்க வேண்டியது!
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:03 pm
» வைத்திய வீர்ராகவர் பெருமாள் -(69வது திவ்ய தேசம்)
by ayyasamy ram Sun Jul 14, 2024 7:55 pm
» இன்றைய செய்திகள் - ஜூலை 14
by ayyasamy ram Sun Jul 14, 2024 7:51 pm
» கருத்துப்படம் 14/07/2024
by mohamed nizamudeen Sun Jul 14, 2024 7:14 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jul 14, 2024 11:22 am
» பேரணியின் போது துப்பாக்கிச்சூடு.. நடந்தது என்ன? டொனால்டு ட்ரம்ப் விளக்கம்!
by ayyasamy ram Sun Jul 14, 2024 9:24 am
Top posting users this week
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
ஆனந்திபழனியப்பன் |
| |||
prajai |
| |||
rajuselvam |
| |||
kavithasankar |
|
Top posting users this month
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
i6appar |
| |||
mohamed nizamudeen |
| |||
Anthony raj |
| |||
T.N.Balasubramanian |
| |||
prajai |
| |||
Guna.D |
| |||
ஆனந்திபழனியப்பன் |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
டெஸ்ட் டியூப் பேபி - என் பார்வையில்............. விமந்தனி.
4 posters
Page 1 of 2
Page 1 of 2 • 1, 2
டெஸ்ட் டியூப் பேபி - என் பார்வையில்............. விமந்தனி.
இது கொஞ்சம் நீ.............ளமான கட்டுரை. கொஞ்சம் பொறுமை காத்து அவசியம் முழுவதுமாய் படிப்பீர்கள் என்ற நம்பிக்கையுடன் தொடங்குகிறேன்.
சமீபத்தில் நம் கிருஷ்ணாம்மா எழுதிய ‘குழந்தை....!’ சிறுகதையை படித்த போது, நீறு பூத்த நெருப்பாய் இருந்த; இதை சார்ந்த ஒரு நிகழ்ச்சி ஒன்று, என் நினைவுக்கு வர, அதை உங்களோடு பகிர்ந்து கொள்ள விரும்பியே இதனை பதிவிடுகிறேன்.
கதையை மிகவும் அருமையாக எழுதி இருந்தார் கிருஷ்ணாம்மா. நடைமுறையிலுள்ள யதார்த்தமான சாத்தியகூறுகள் நிறைந்த கதை - இல்லை, இல்லை.... கதையல்ல நிஜம்.
![டெஸ்ட் டியூப் பேபி - என் பார்வையில்............. விமந்தனி. L5UMccpuQASGNvHLVBUV+invitro2](https://www.filepicker.io/api/file/l5UMccpuQASGNvHLVBUV+invitro2.jpg)
இந்த கதை படிக்கையில் எனக்கு ஒன்று நினைவுக்கு வந்தது. எந்த ஆண்டு என்பது நினைவிலில்லை. 2003 or 2004 கா என்று தெரியவில்லை. விஜய் டிவியில் ‘கேள்விகள் 1000’ நிகழ்ச்சியில், நடிகை ரோஹிணியின் நேர்காணலில் இந்த test tube பேபி பற்றி (G.G.Hospital) டாக்டர். கமலா செல்வராஜின் நிகழ்ச்சி. (என் அம்மா என்னை கருவுற்றிருந்த போது இவரிடம் தான் treatment பார்த்தார்களாம். என் தம்பி பிறந்தது கூட இவர் கிளீனிக்கில் தான். அப்போது இவ்வளவு பெரிய hospital லை இந்தம்மா கட்டியிருக்க வில்லை. எங்களுக்கு அப்போதைய family டாக்டர் இவர் தான். )
Live நிகழ்ச்சி என்பதால் நேயர்களும் அவரவர் சந்தேகங்களை கேட்டுக்கொண்டிருந்தார்கள்.
அதில், ஒவ்வொருமுறையும் டாக்டரம்மா அழுத்தம் திருத்தமாய் கூறுவது என்னவென்றால், ‘குழந்தை இன்மை என்பது ஒரு குறையே இல்லை. திருமணமாகி ஒரு வருடத்திற்குள் கருத்தரிக்கவில்லை என்றால், உடனடியாக அதற்குண்டான சிகிச்சை மேற்கொள்ளுங்கள்... அதிலும் பலனளிக்க வில்லையென்றால் தயங்காமல் test tube பேபி க்கு முயற்சியுங்கள்....’ இது தான் அவரது statement டாக இருந்தது. தாரக மந்திரம் போல இதை தான் திருப்பி, திருப்பி சொல்லிக்கொண்டிருந்தார். கிட்ட தட்ட மார்க்கெட்டிங் போல.....
‘குழந்தை இல்லாதவர்கள் ஏதேனும் குழந்தையை தத்து எடுத்துக்கொள்வதை பற்றி என்ன நினைக்கிறீர்கள்...?’ என்று நடிகை ரோகிணி அவர்கள் கேட்டதற்கு, அந்த டாக்டரம்மா, ‘அந்த தவறை ஒரு போதும் செய்யாதீர்கள்’ என்ற ரீதியில் பேசி, ‘என்ன செலவானாலும் பரவாயில்லை தன் ரத்தத்தில் உதித்த குழந்தையை பெறுவது தான் நல்லது. குழந்தைகளை தத்து எடுத்து வளர்ப்பது என்பது சரிபட்டு வராது....’ என்றவர், ‘.....ஆயிரம் தான் இருந்தாலும் நாம் சுமந்து பெறும் குழந்தை போலாகுமா.....?’ என்றும் கேட்டு வைத்தார்.
கூடவே குழந்தையை தத்து எடுத்து வளர்ப்பதால் ஏற்படும் சிக்கல்களையும் சொல்லியிருந்தார். ‘வேறு குழந்தைகளை தத்து எடுத்தால், என்னத்தான் நல்ல முறையில் வளர்த்தாலும், அது தன் பிறவி குணத்தை காட்டிவிடுமாம்.. .. நாளை ஏதேனும் உடம்புக்கு வந்தாலும், பரம்பரையாய் வரக்கூடிய வியாதிகள் என்ன என்று தெரியாதாம்.
சாதாரணமாக எத்தனை பரம்பரை வியாதிகள் பற்றி நமக்கு தெரியும்? அப்பா, தாத்தா, கொள்ளு தாத்தா, அதற்கு முன் முப்பாட்டன், முப்பாட்டனுக்கு முப்பாட்டன்...?
ஒன்றும் வேண்டாம்.... நம் தாத்தாவுக்கு என்னென்ன வியாதிகள் இருந்தது என்று எத்தனை பேருக்கு தெரியும்....? நிறைய படித்தவர்களாக கூட இருக்கட்டுமே....
‘எங்க பரம்பரையில்... எங்க தாத்தா, அப்பா, நான்......... யாருக்கும் இசை ஞானமே கிடையாது... சுத்த ஞான சூன்யம். ஆனா, எம்பையன் எப்படி இவ்ளோ நல்லா பாடறான்...?’ என்று வியக்கும் தகப்பனுக்கு தெரியாது – தனக்கு முன் உதித்த 23 தலைமுறையினரில் யாரோ ஒருவரின் ஜீன் செய்கிற வேலை என்பது – என்று, ஒருமுறை ஒரு ஆன்மீக சொற்பொழிவில் சொல்ல கேட்டிருக்கிறேன்.
அப்புறம், தத்தெடுத்த குழந்தை நம்மை போல இருக்காதாம்... நிஜம் தான். ஆனால், நல்ல நிறமாக இருந்தும் சில தம்பதியருக்கு ஏன் குழந்தை கருப்பாக பிறக்கிறது? இதுவும் இயற்கையின் வினோதம்.
பிறகு அந்த டாக்டர் இன்னொன்றும் சொன்னார். கேட்கவே அருவருப்பாக இருந்தது. அதாவது, கணவருக்கு குறை எனில், தன் மனைவி மூலமாவது குழந்தை தனக்கு பிறக்க வேண்டும் என்று இன்னொரு ஆணின் (உயிர்ப்பான) விந்தணுவை தன் மனைவியின் கருப்பைக்குள் செலுத்த அனுமதிக்கும் பரந்த(!)மனப்பான்மையும், பெருந்தன்மை(!)யும் வேண்டுமாம். (அந்த டாக்டர் சொன்ன சத்தியமான வார்த்தைகள் இது...! இதை இல்லையென்று மறுக்கமுடியாது)
சமீபத்தில் நம் கிருஷ்ணாம்மா எழுதிய ‘குழந்தை....!’ சிறுகதையை படித்த போது, நீறு பூத்த நெருப்பாய் இருந்த; இதை சார்ந்த ஒரு நிகழ்ச்சி ஒன்று, என் நினைவுக்கு வர, அதை உங்களோடு பகிர்ந்து கொள்ள விரும்பியே இதனை பதிவிடுகிறேன்.
கதையை மிகவும் அருமையாக எழுதி இருந்தார் கிருஷ்ணாம்மா. நடைமுறையிலுள்ள யதார்த்தமான சாத்தியகூறுகள் நிறைந்த கதை - இல்லை, இல்லை.... கதையல்ல நிஜம்.
![டெஸ்ட் டியூப் பேபி - என் பார்வையில்............. விமந்தனி. L5UMccpuQASGNvHLVBUV+invitro2](https://www.filepicker.io/api/file/l5UMccpuQASGNvHLVBUV+invitro2.jpg)
இந்த கதை படிக்கையில் எனக்கு ஒன்று நினைவுக்கு வந்தது. எந்த ஆண்டு என்பது நினைவிலில்லை. 2003 or 2004 கா என்று தெரியவில்லை. விஜய் டிவியில் ‘கேள்விகள் 1000’ நிகழ்ச்சியில், நடிகை ரோஹிணியின் நேர்காணலில் இந்த test tube பேபி பற்றி (G.G.Hospital) டாக்டர். கமலா செல்வராஜின் நிகழ்ச்சி. (என் அம்மா என்னை கருவுற்றிருந்த போது இவரிடம் தான் treatment பார்த்தார்களாம். என் தம்பி பிறந்தது கூட இவர் கிளீனிக்கில் தான். அப்போது இவ்வளவு பெரிய hospital லை இந்தம்மா கட்டியிருக்க வில்லை. எங்களுக்கு அப்போதைய family டாக்டர் இவர் தான். )
Live நிகழ்ச்சி என்பதால் நேயர்களும் அவரவர் சந்தேகங்களை கேட்டுக்கொண்டிருந்தார்கள்.
அதில், ஒவ்வொருமுறையும் டாக்டரம்மா அழுத்தம் திருத்தமாய் கூறுவது என்னவென்றால், ‘குழந்தை இன்மை என்பது ஒரு குறையே இல்லை. திருமணமாகி ஒரு வருடத்திற்குள் கருத்தரிக்கவில்லை என்றால், உடனடியாக அதற்குண்டான சிகிச்சை மேற்கொள்ளுங்கள்... அதிலும் பலனளிக்க வில்லையென்றால் தயங்காமல் test tube பேபி க்கு முயற்சியுங்கள்....’ இது தான் அவரது statement டாக இருந்தது. தாரக மந்திரம் போல இதை தான் திருப்பி, திருப்பி சொல்லிக்கொண்டிருந்தார். கிட்ட தட்ட மார்க்கெட்டிங் போல.....
‘குழந்தை இல்லாதவர்கள் ஏதேனும் குழந்தையை தத்து எடுத்துக்கொள்வதை பற்றி என்ன நினைக்கிறீர்கள்...?’ என்று நடிகை ரோகிணி அவர்கள் கேட்டதற்கு, அந்த டாக்டரம்மா, ‘அந்த தவறை ஒரு போதும் செய்யாதீர்கள்’ என்ற ரீதியில் பேசி, ‘என்ன செலவானாலும் பரவாயில்லை தன் ரத்தத்தில் உதித்த குழந்தையை பெறுவது தான் நல்லது. குழந்தைகளை தத்து எடுத்து வளர்ப்பது என்பது சரிபட்டு வராது....’ என்றவர், ‘.....ஆயிரம் தான் இருந்தாலும் நாம் சுமந்து பெறும் குழந்தை போலாகுமா.....?’ என்றும் கேட்டு வைத்தார்.
கூடவே குழந்தையை தத்து எடுத்து வளர்ப்பதால் ஏற்படும் சிக்கல்களையும் சொல்லியிருந்தார். ‘வேறு குழந்தைகளை தத்து எடுத்தால், என்னத்தான் நல்ல முறையில் வளர்த்தாலும், அது தன் பிறவி குணத்தை காட்டிவிடுமாம்.. .. நாளை ஏதேனும் உடம்புக்கு வந்தாலும், பரம்பரையாய் வரக்கூடிய வியாதிகள் என்ன என்று தெரியாதாம்.
சாதாரணமாக எத்தனை பரம்பரை வியாதிகள் பற்றி நமக்கு தெரியும்? அப்பா, தாத்தா, கொள்ளு தாத்தா, அதற்கு முன் முப்பாட்டன், முப்பாட்டனுக்கு முப்பாட்டன்...?
ஒன்றும் வேண்டாம்.... நம் தாத்தாவுக்கு என்னென்ன வியாதிகள் இருந்தது என்று எத்தனை பேருக்கு தெரியும்....? நிறைய படித்தவர்களாக கூட இருக்கட்டுமே....
‘எங்க பரம்பரையில்... எங்க தாத்தா, அப்பா, நான்......... யாருக்கும் இசை ஞானமே கிடையாது... சுத்த ஞான சூன்யம். ஆனா, எம்பையன் எப்படி இவ்ளோ நல்லா பாடறான்...?’ என்று வியக்கும் தகப்பனுக்கு தெரியாது – தனக்கு முன் உதித்த 23 தலைமுறையினரில் யாரோ ஒருவரின் ஜீன் செய்கிற வேலை என்பது – என்று, ஒருமுறை ஒரு ஆன்மீக சொற்பொழிவில் சொல்ல கேட்டிருக்கிறேன்.
அப்புறம், தத்தெடுத்த குழந்தை நம்மை போல இருக்காதாம்... நிஜம் தான். ஆனால், நல்ல நிறமாக இருந்தும் சில தம்பதியருக்கு ஏன் குழந்தை கருப்பாக பிறக்கிறது? இதுவும் இயற்கையின் வினோதம்.
பிறகு அந்த டாக்டர் இன்னொன்றும் சொன்னார். கேட்கவே அருவருப்பாக இருந்தது. அதாவது, கணவருக்கு குறை எனில், தன் மனைவி மூலமாவது குழந்தை தனக்கு பிறக்க வேண்டும் என்று இன்னொரு ஆணின் (உயிர்ப்பான) விந்தணுவை தன் மனைவியின் கருப்பைக்குள் செலுத்த அனுமதிக்கும் பரந்த(!)மனப்பான்மையும், பெருந்தன்மை(!)யும் வேண்டுமாம். (அந்த டாக்டர் சொன்ன சத்தியமான வார்த்தைகள் இது...! இதை இல்லையென்று மறுக்கமுடியாது)
- தொடரும்.
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
விமந்தனி- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
Re: டெஸ்ட் டியூப் பேபி - என் பார்வையில்............. விமந்தனி.
இதே போல மனைவியும், அவளுக்கு குறையிருந்தால், கணவனுடைய உயிரணுவோடு, இன்னொரு பெண்ணின் கருமுட்டையை கலந்து, சுமந்து பெற்றுகொள்ளும் பக்குவத்தையும் மனதளவில் பெறவேண்டுமாம்.
அதாவது…. நவீன முறையில் ஆணையும், பெண்ணையும் சோரம் போக சொல்கிறார் போலிருக்கிறது. வியாபாரம் ஒன்றே குறிக்கோளாய் இருக்கும் இவர்களுக்கு, அந்த குழந்தை பிறந்து வளர, வளர சம்மந்தப்பட்ட அந்த தம்பதியருக்கு ஏற்படும் இன்னல்களை பற்றி அவர்களுக்கு என்ன கவலை...?
![டெஸ்ட் டியூப் பேபி - என் பார்வையில்............. விமந்தனி. XhX9TxAQTOD9Gxc1EySd+test-tube-babies](https://www.filepicker.io/api/file/XhX9TxAQTOD9Gxc1EySd+test-tube-babies.jpg)
குழந்தையில்லா தம்பதியரின் குறையை மிக அழகாகவும், புத்திசாலி தனமாகவும் வியாபாரமாக்கி கொண்டிருக்கிறார்கள் மருத்துவ வியாபாரிகள். இன்றளவும் இது தொடர்ந்து கொண்டு தான் இருக்கிறது. கடவுளாக நினைக்கப்படும் மருத்துவர்கள் எவ்வளவு அழகாய் தங்கள் தொழிலை வியாபாரமாக்குகிறார்கள் பாருங்கள்.
சரி, விஷயத்திற்கு வருகிறேன். இது நேரடி ஒளிபரப்பானதால், பல நேயர்கள் கேட்ட எல்லா கேள்விகளுக்கும் டாக்டர் மார்கெட்டிங் ரீதியிலேயே தான் பதில் கூறி வந்தார்.
அப்போது ஒருவர் (ஆண்) போன் செய்தார். “நீங்கள் சொன்னது போல என் நண்பர் ஒருவர் தன் மனைவி மூலமாகவாவது தனக்கு குழந்தை பிறக்கட்டும் என்று பரந்த(!) மனப்பான்மையுடன் நடந்து கொண்டதில், பிறந்த குழந்தை அவருக்கு கொஞ்சமும் சம்பந்தமில்லாமல் நீக்ரோ குழந்தையை போல பிறந்ததை கண்டு, சொந்தங்கள் அரசல், புரசலாக பேசத்துவங்க..... இதனால் என் நண்பர் மனநலம் பாதிக்கப்பட்டு, இப்போது அதற்கு சிகிச்சை எடுத்துக்கொண்டு வருகிறார். இதற்கு நீங்கள் சொல்லும் விளக்கம் என்ன....?
“மேலும் இதில் இப்படி ஒரு ரிஸ்க் இருக்கும் விஷயத்தை ஏன் முதலிலேயே அந்த தம்பதியரிடம் மருத்துவர்கள் சொல்வதில்லை. test tube பேபிக்கு சம்மந்தப்பட்ட கணவன் – மனைவியின், உயிரணு-கரு முட்டையை தான் சேர்க்கிறீர்கள் என்று ஏன் மருத்துவர்கள் உத்தரவாதம் அளிப்பதில்லை....?” என்று கேட்டதற்கு அந்த மருத்துவர் சரியான விளக்கம் அளிக்கவே இல்லை.
ஆணுக்கோ, பெண்ணுக்கோ இருக்கும் குறைபாட்டை நிவர்த்தி செய்ய முடியாத பட்ஷத்தில், வேறு ஏதேனும் ஆலோசனை கூறலாமே...? அதை விடுத்து இது என்ன....? இது மட்டும் நம் கலாச்சாரத்தையும், பண்பாட்டையும் களங்கப்படுத்தும் செய்கையாக தெரியவில்லையா...? அதை விட யாருக்கு குறை இல்லையோ அவர் வேறு திருமணமே செய்து கொள்ளலாமே..... அறிவியல் ரீதியாக சோரம் போவதை விட இது எவ்வளவோ மேல்.
கருக்குழாயில் கரு உருவாக முடியாத பட்சத்தில் test tube பேபி என்பது வேண்டுமானால் ஏற்றுக்கொள்ளலாம். ஆனால், வாடகை தாய் மூலம், இன்னொரு ஆணின் விந்தணு மூலம் மற்றும் இன்னொரு பெண்ணின் சினை முட்டை மூலம் கருத்தரிப்பது என்பது......... தற்காலிக நிவாரணமாகவும், சமூகத்தின் அனுதாபப்பார்வையிலிருந்து அப்போதைக்கு தப்பிக்கவும் தான் பயன்படுமே தவிர...... நிச்சயமாக ஆயுள் முழுக்க – சம்மந்தப்பட்ட கணவனாலோ, மனைவியாலோ கண்டிப்பாக ஏற்றுக்கொள்ளவே முடியாது.
ஒரு சில, பல கட்டங்களில் அவர்களால் சஞ்சலத்தொடும், மன உறுத்தலோடும் சத்தியமாய் அந்த குழந்தையை வளர்க்க முடியாது. இத்தகைய மன உளைச்சலும், ஆரோக்கியமற்ற சூழலிலும் வளரும் ‘அந்த’ குழந்தையின் எதிர்காலம்...? ஆண்டவனுக்கே வெளிச்சம்.........................
அடுத்து 2 வருடங்கள் கழித்து அதே டாக்டர் மறுமடியும் ஜெயா டிவியில், ‘அச்சமில்லை, அச்சமில்லை...’ நிகழ்ச்சியிலும், முன்பு சொன்ன மாதிரியே தான் பெட்டி கொடுத்திருந்தார். நல்லவேளை இது லைவ் ப்ரோக்ராம் இல்லை. அதனால் யாரும் எதுவும் கேட்கவில்லை.
இந்த முறை, இறுதியில் - அந்த மருத்துவர், “முதலில் அனாதை பிள்ளைகள் வராமல் இருக்க என்ன செய்யலாம் என்றாராய்ந்து, அதனை களைய பார்க்க வேண்டும். அதை விடுத்து டிவி போன்ற மீடியாக்கள் மூலம், அனாதை பிள்ளைகளை தத்து எடுக்க சொல்லி விளம்பரப்படுத்துவது சரியில்லை.
“அதற்காக, நான் அனாதை பிள்ளைகளுக்கு எதிரி இல்லை. நானும் விசேஷ நாட்களில் ஆசிரமங்களுக்கு சென்று, அவர்களுடன் சாப்பிட்டு, ஸ்வீட் கொடுத்து நம் பேரப்பிள்ளைகளை கொஞ்சுவது போல கொஞ்சி, அழுதுட்டு தான் வர்றேன்....” என்று சொல்லி முடிக்கிறார்.
நான் ஒன்று கேக்கவேண்டும். நன்றாக யோசித்து சொல்லுங்கள்....
சுயமாக பெற்றெடுத்த எத்தனை பேருக்கு, சரியான பிள்ளைகள் வாய்த்திருக்கிறார்கள்...?????????????? அதற்கு உதாரணம் –
அதாவது…. நவீன முறையில் ஆணையும், பெண்ணையும் சோரம் போக சொல்கிறார் போலிருக்கிறது. வியாபாரம் ஒன்றே குறிக்கோளாய் இருக்கும் இவர்களுக்கு, அந்த குழந்தை பிறந்து வளர, வளர சம்மந்தப்பட்ட அந்த தம்பதியருக்கு ஏற்படும் இன்னல்களை பற்றி அவர்களுக்கு என்ன கவலை...?
![டெஸ்ட் டியூப் பேபி - என் பார்வையில்............. விமந்தனி. XhX9TxAQTOD9Gxc1EySd+test-tube-babies](https://www.filepicker.io/api/file/XhX9TxAQTOD9Gxc1EySd+test-tube-babies.jpg)
குழந்தையில்லா தம்பதியரின் குறையை மிக அழகாகவும், புத்திசாலி தனமாகவும் வியாபாரமாக்கி கொண்டிருக்கிறார்கள் மருத்துவ வியாபாரிகள். இன்றளவும் இது தொடர்ந்து கொண்டு தான் இருக்கிறது. கடவுளாக நினைக்கப்படும் மருத்துவர்கள் எவ்வளவு அழகாய் தங்கள் தொழிலை வியாபாரமாக்குகிறார்கள் பாருங்கள்.
சரி, விஷயத்திற்கு வருகிறேன். இது நேரடி ஒளிபரப்பானதால், பல நேயர்கள் கேட்ட எல்லா கேள்விகளுக்கும் டாக்டர் மார்கெட்டிங் ரீதியிலேயே தான் பதில் கூறி வந்தார்.
அப்போது ஒருவர் (ஆண்) போன் செய்தார். “நீங்கள் சொன்னது போல என் நண்பர் ஒருவர் தன் மனைவி மூலமாகவாவது தனக்கு குழந்தை பிறக்கட்டும் என்று பரந்த(!) மனப்பான்மையுடன் நடந்து கொண்டதில், பிறந்த குழந்தை அவருக்கு கொஞ்சமும் சம்பந்தமில்லாமல் நீக்ரோ குழந்தையை போல பிறந்ததை கண்டு, சொந்தங்கள் அரசல், புரசலாக பேசத்துவங்க..... இதனால் என் நண்பர் மனநலம் பாதிக்கப்பட்டு, இப்போது அதற்கு சிகிச்சை எடுத்துக்கொண்டு வருகிறார். இதற்கு நீங்கள் சொல்லும் விளக்கம் என்ன....?
“மேலும் இதில் இப்படி ஒரு ரிஸ்க் இருக்கும் விஷயத்தை ஏன் முதலிலேயே அந்த தம்பதியரிடம் மருத்துவர்கள் சொல்வதில்லை. test tube பேபிக்கு சம்மந்தப்பட்ட கணவன் – மனைவியின், உயிரணு-கரு முட்டையை தான் சேர்க்கிறீர்கள் என்று ஏன் மருத்துவர்கள் உத்தரவாதம் அளிப்பதில்லை....?” என்று கேட்டதற்கு அந்த மருத்துவர் சரியான விளக்கம் அளிக்கவே இல்லை.
ஆணுக்கோ, பெண்ணுக்கோ இருக்கும் குறைபாட்டை நிவர்த்தி செய்ய முடியாத பட்ஷத்தில், வேறு ஏதேனும் ஆலோசனை கூறலாமே...? அதை விடுத்து இது என்ன....? இது மட்டும் நம் கலாச்சாரத்தையும், பண்பாட்டையும் களங்கப்படுத்தும் செய்கையாக தெரியவில்லையா...? அதை விட யாருக்கு குறை இல்லையோ அவர் வேறு திருமணமே செய்து கொள்ளலாமே..... அறிவியல் ரீதியாக சோரம் போவதை விட இது எவ்வளவோ மேல்.
கருக்குழாயில் கரு உருவாக முடியாத பட்சத்தில் test tube பேபி என்பது வேண்டுமானால் ஏற்றுக்கொள்ளலாம். ஆனால், வாடகை தாய் மூலம், இன்னொரு ஆணின் விந்தணு மூலம் மற்றும் இன்னொரு பெண்ணின் சினை முட்டை மூலம் கருத்தரிப்பது என்பது......... தற்காலிக நிவாரணமாகவும், சமூகத்தின் அனுதாபப்பார்வையிலிருந்து அப்போதைக்கு தப்பிக்கவும் தான் பயன்படுமே தவிர...... நிச்சயமாக ஆயுள் முழுக்க – சம்மந்தப்பட்ட கணவனாலோ, மனைவியாலோ கண்டிப்பாக ஏற்றுக்கொள்ளவே முடியாது.
ஒரு சில, பல கட்டங்களில் அவர்களால் சஞ்சலத்தொடும், மன உறுத்தலோடும் சத்தியமாய் அந்த குழந்தையை வளர்க்க முடியாது. இத்தகைய மன உளைச்சலும், ஆரோக்கியமற்ற சூழலிலும் வளரும் ‘அந்த’ குழந்தையின் எதிர்காலம்...? ஆண்டவனுக்கே வெளிச்சம்.........................
அடுத்து 2 வருடங்கள் கழித்து அதே டாக்டர் மறுமடியும் ஜெயா டிவியில், ‘அச்சமில்லை, அச்சமில்லை...’ நிகழ்ச்சியிலும், முன்பு சொன்ன மாதிரியே தான் பெட்டி கொடுத்திருந்தார். நல்லவேளை இது லைவ் ப்ரோக்ராம் இல்லை. அதனால் யாரும் எதுவும் கேட்கவில்லை.
இந்த முறை, இறுதியில் - அந்த மருத்துவர், “முதலில் அனாதை பிள்ளைகள் வராமல் இருக்க என்ன செய்யலாம் என்றாராய்ந்து, அதனை களைய பார்க்க வேண்டும். அதை விடுத்து டிவி போன்ற மீடியாக்கள் மூலம், அனாதை பிள்ளைகளை தத்து எடுக்க சொல்லி விளம்பரப்படுத்துவது சரியில்லை.
“அதற்காக, நான் அனாதை பிள்ளைகளுக்கு எதிரி இல்லை. நானும் விசேஷ நாட்களில் ஆசிரமங்களுக்கு சென்று, அவர்களுடன் சாப்பிட்டு, ஸ்வீட் கொடுத்து நம் பேரப்பிள்ளைகளை கொஞ்சுவது போல கொஞ்சி, அழுதுட்டு தான் வர்றேன்....” என்று சொல்லி முடிக்கிறார்.
நான் ஒன்று கேக்கவேண்டும். நன்றாக யோசித்து சொல்லுங்கள்....
சுயமாக பெற்றெடுத்த எத்தனை பேருக்கு, சரியான பிள்ளைகள் வாய்த்திருக்கிறார்கள்...?????????????? அதற்கு உதாரணம் –
- தொடரும்
Last edited by விமந்தனி on Tue Mar 31, 2015 12:19 am; edited 1 time in total
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
விமந்தனி- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
Re: டெஸ்ட் டியூப் பேபி - என் பார்வையில்............. விமந்தனி.
அதற்கு உதாரணம் –
ஊரில் மலிந்து கிடக்கும் முதியோர் இல்லங்களே சாட்சி.
எத்தனை வீடுகளில் வயதானவர்கள் கொடுமைபடுத்தப்பட்டு கொண்டிருக்கிறார்கள்?
இது வெளியில் வராத சாட்சிகள்.
இதனை யாராவது மறுக்க முடியுமா? அத்தனை முதியோர்களுக்கும் பிள்ளைகள் இருக்கிறார்கள். அவர்கள் அனைவருமே இவர்களது ரத்தத்தில் உதித்தவர்கள் தாம்...... தன் ரத்தத்தில் உதித்தவர்களே எப்படி இவர்களை இல்லங்களில் கொண்டு வந்து தள்ளியிருக்கிறார்கள்.......?
ஏன்.....?
விடியல் மட்டுமில்லை, விடையில்லா கேள்வியும் கூட.
யோசித்தால் வேடிக்கையாக தான் உள்ளது. விடை கிடைக்காத யோசனை.
சமீபத்தில் ஒரு நியூஸ் கேள்விப்பட்டேன். அதாவது, சந்தர்ப்ப சூழ்நிலையால் கர்ப்பப்பை நீக்கப்பட்ட, தன் மகளுக்காக, 61 வயதான அவளுடைய தாய், வாடகை தாயாக மாறி ஒரு பெண் குழந்தையை, தன் மகளுக்கு பெற்று கொடுத்திருக்கிறார்.
![டெஸ்ட் டியூப் பேபி - என் பார்வையில்............. விமந்தனி. K5u3htCcTW6O4uvdYByr+Untitled](https://www.filepicker.io/api/file/k5u3htCcTW6O4uvdYByr+Untitled.jpg)
பிறந்த அந்த குழந்தை யாரை அம்மா என்று அழைக்கும்? கருமுட்டை கொடுத்தவளையா அல்லது சுமந்தவளையா? சுமந்து பெற்றவள் தான் தாய் என்றால், அந்த குழந்தையை சுமந்து பெற்ற பாட்டி தானே அந்த குழந்தைக்கு அம்மா?????????? இதற்கு யாரேனும் பதில் சொல்ல முடியுமா?
விஞ்ஞான புரட்சி என்ற பெயரில் அறிவியலின் அட்டூழியத்தை பார்த்தீர்களா? இந்த மறை கழண்டுவிட்ட ஜனங்களும், எதை தின்றால் பித்தம் தெளியும் என்று பின்விளைவுகளை பற்றி யோசிக்காமல், எதன் பின்னால் போகிறோம் என்றே தெரியாமல் போகும் அவலமும் அதிகரித்து விட்டது.
புராண கால குந்தியையே மிஞ்சி விடுவார்கள் போலிருக்கிறது நம் நாட்டு குந்தி தேவிகள்.
கடைசியாக எனக்கு தோன்றிய ஒன்றை சொல்லிவிடுகிறேன். பிள்ளைகள் அமைவது என்பது, அவரவர் பூர்வ ஜென்ம பாவ, புண்ணியத்தை சேர்ந்தது. பெற்றெடுத்தாலும், தத்தெடுத்தாலும் அந்த பிள்ளையால் நாம் சுகப்பட்டு பெருமைக்குள்ளாவதும், கஷ்டப்பட்டு அவமானதிற்குள்ளாவதும், அவரவர் விதி, வினை பயனை பொறுத்த விஷயம். இதை எந்த test tube பேபியும் மாற்றி விடாது. விஞ்ஞான முன்னேற்றம் என்பது சந்தோஷத்தை கொடுக்க கூடியதாக இருக்கவேண்டுமே அன்றி சங்கடத்தை எற்படுத்தி சாகடிப்பதாக இருக்க கூடாது.
‘அவனுக்கு’ தெரியும். யாருக்கு எதை, எப்போது, எங்கே, எப்படி எந்த வகையில் கொடுக்கவேண்டும் என்று. இதில், மெத்த படித்தவர்கள் தான் தங்கள் மெத்தனத்தை பகிரங்கப்படுத்துகிறார்கள் என்பது தான் கவலைக்குரிய விஷயமே.....
முன்னேற்றம் என்பது விஞ்ஞானத்தில் மட்டும் இருந்தால் போதாது. மனித நேயமும், மனிதம் மற்றும் மனிதாபிமானமும் மனதளவில் முன்னேற்றம் அடைந்திருக்கவேண்டும்.
வெகு நாட்களாக என்னுள் கனன்று கொண்டிருந்த கனல், இங்கே உங்களிடம் பகிர்ந்து கொண்டதன் மூலம் இப்போது நீரூற்றப்பட்டு விட்டது.
ஜெயா டிவியில் ஒளிபரப்பான போதே என் குமுறலை ஒரு கட்டுரையாக எழுதி ‘அவள்’ விகடனுக்கு (2006-ல்) அனுப்பி வைத்தேன். ஆனால், ஏனோ தெரியவில்லை... அவர்கள் எனது கட்டுரையை அங்கீகரிக்கவில்லை. என் ஆதங்கத்தில் நியாயம் இருப்பதாக அவர்களுக்கு தோன்றவில்லையோ என்னவோ...........!!!!!!!!!!!!!!!!!!
ஊரில் மலிந்து கிடக்கும் முதியோர் இல்லங்களே சாட்சி.
எத்தனை வீடுகளில் வயதானவர்கள் கொடுமைபடுத்தப்பட்டு கொண்டிருக்கிறார்கள்?
இது வெளியில் வராத சாட்சிகள்.
இதனை யாராவது மறுக்க முடியுமா? அத்தனை முதியோர்களுக்கும் பிள்ளைகள் இருக்கிறார்கள். அவர்கள் அனைவருமே இவர்களது ரத்தத்தில் உதித்தவர்கள் தாம்...... தன் ரத்தத்தில் உதித்தவர்களே எப்படி இவர்களை இல்லங்களில் கொண்டு வந்து தள்ளியிருக்கிறார்கள்.......?
ஏன்.....?
விடியல் மட்டுமில்லை, விடையில்லா கேள்வியும் கூட.
யோசித்தால் வேடிக்கையாக தான் உள்ளது. விடை கிடைக்காத யோசனை.
சமீபத்தில் ஒரு நியூஸ் கேள்விப்பட்டேன். அதாவது, சந்தர்ப்ப சூழ்நிலையால் கர்ப்பப்பை நீக்கப்பட்ட, தன் மகளுக்காக, 61 வயதான அவளுடைய தாய், வாடகை தாயாக மாறி ஒரு பெண் குழந்தையை, தன் மகளுக்கு பெற்று கொடுத்திருக்கிறார்.
![டெஸ்ட் டியூப் பேபி - என் பார்வையில்............. விமந்தனி. K5u3htCcTW6O4uvdYByr+Untitled](https://www.filepicker.io/api/file/k5u3htCcTW6O4uvdYByr+Untitled.jpg)
பிறந்த அந்த குழந்தை யாரை அம்மா என்று அழைக்கும்? கருமுட்டை கொடுத்தவளையா அல்லது சுமந்தவளையா? சுமந்து பெற்றவள் தான் தாய் என்றால், அந்த குழந்தையை சுமந்து பெற்ற பாட்டி தானே அந்த குழந்தைக்கு அம்மா?????????? இதற்கு யாரேனும் பதில் சொல்ல முடியுமா?
விஞ்ஞான புரட்சி என்ற பெயரில் அறிவியலின் அட்டூழியத்தை பார்த்தீர்களா? இந்த மறை கழண்டுவிட்ட ஜனங்களும், எதை தின்றால் பித்தம் தெளியும் என்று பின்விளைவுகளை பற்றி யோசிக்காமல், எதன் பின்னால் போகிறோம் என்றே தெரியாமல் போகும் அவலமும் அதிகரித்து விட்டது.
புராண கால குந்தியையே மிஞ்சி விடுவார்கள் போலிருக்கிறது நம் நாட்டு குந்தி தேவிகள்.
கடைசியாக எனக்கு தோன்றிய ஒன்றை சொல்லிவிடுகிறேன். பிள்ளைகள் அமைவது என்பது, அவரவர் பூர்வ ஜென்ம பாவ, புண்ணியத்தை சேர்ந்தது. பெற்றெடுத்தாலும், தத்தெடுத்தாலும் அந்த பிள்ளையால் நாம் சுகப்பட்டு பெருமைக்குள்ளாவதும், கஷ்டப்பட்டு அவமானதிற்குள்ளாவதும், அவரவர் விதி, வினை பயனை பொறுத்த விஷயம். இதை எந்த test tube பேபியும் மாற்றி விடாது. விஞ்ஞான முன்னேற்றம் என்பது சந்தோஷத்தை கொடுக்க கூடியதாக இருக்கவேண்டுமே அன்றி சங்கடத்தை எற்படுத்தி சாகடிப்பதாக இருக்க கூடாது.
‘அவனுக்கு’ தெரியும். யாருக்கு எதை, எப்போது, எங்கே, எப்படி எந்த வகையில் கொடுக்கவேண்டும் என்று. இதில், மெத்த படித்தவர்கள் தான் தங்கள் மெத்தனத்தை பகிரங்கப்படுத்துகிறார்கள் என்பது தான் கவலைக்குரிய விஷயமே.....
முன்னேற்றம் என்பது விஞ்ஞானத்தில் மட்டும் இருந்தால் போதாது. மனித நேயமும், மனிதம் மற்றும் மனிதாபிமானமும் மனதளவில் முன்னேற்றம் அடைந்திருக்கவேண்டும்.
வெகு நாட்களாக என்னுள் கனன்று கொண்டிருந்த கனல், இங்கே உங்களிடம் பகிர்ந்து கொண்டதன் மூலம் இப்போது நீரூற்றப்பட்டு விட்டது.
ஜெயா டிவியில் ஒளிபரப்பான போதே என் குமுறலை ஒரு கட்டுரையாக எழுதி ‘அவள்’ விகடனுக்கு (2006-ல்) அனுப்பி வைத்தேன். ஆனால், ஏனோ தெரியவில்லை... அவர்கள் எனது கட்டுரையை அங்கீகரிக்கவில்லை. என் ஆதங்கத்தில் நியாயம் இருப்பதாக அவர்களுக்கு தோன்றவில்லையோ என்னவோ...........!!!!!!!!!!!!!!!!!!
............................விமந்தனி.
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
விமந்தனி- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
Re: டெஸ்ட் டியூப் பேபி - என் பார்வையில்............. விமந்தனி.
//இதில் இப்படி ஒரு ரிஸ்க் இருக்கும் விஷயத்தை ஏன் முதலிலேயே அந்த தம்பதியரிடம் மருத்துவர்கள் சொல்வதில்லை. test tube பேபிக்கு சம்மந்தப்பட்ட கணவன் – மனைவியின், உயிரணு-கரு முட்டையை தான் சேர்க்கிறீர்கள் என்று ஏன் மருத்துவர்கள் உத்தரவாதம் அளிப்பதில்லை....?” என்று கேட்டதற்கு அந்த மருத்துவர் சரியான விளக்கம் அளிக்கவே இல்லை.//
இது ரொம்ப நிஜம் விமந்தனி.............இவருக்கு தெரிந்த ஒருவருக்கு அப்படி ஆனதாம் ..பாவம் அவர்கள்
இது ரொம்ப நிஜம் விமந்தனி.............இவருக்கு தெரிந்த ஒருவருக்கு அப்படி ஆனதாம் ..பாவம் அவர்கள்
![சோகம்](/users/1813/71/41/02/smiles/440806.gif)
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: டெஸ்ட் டியூப் பேபி - என் பார்வையில்............. விமந்தனி.
//‘அவனுக்கு’ தெரியும். யாருக்கு எதை, எப்போது, எங்கே, எப்படி எந்த வகையில் கொடுக்கவேண்டும் என்று. //.
என் கருத்தும் இது தான்.......ஆனால் நான் இதை சொன்னால் என்னை 1930 இல் இருக்க வேண்டியவள் என்று சொல்கிறார்கள் விமந்தனி
.......நல்ல பகிர்வு ! சூப்பர் !
என் கருத்தும் இது தான்.......ஆனால் நான் இதை சொன்னால் என்னை 1930 இல் இருக்க வேண்டியவள் என்று சொல்கிறார்கள் விமந்தனி
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: டெஸ்ட் டியூப் பேபி - என் பார்வையில்............. விமந்தனி.
நன்றி கிருஷ்ணாம்மா. மாதொரு பாகனுக்கு கருப்பு கோடி காட்டுபவர்கள், ஏன் இந்த நவீன முறை கலாச்சார சீர்கேட்டிற்கு ஆரத்தி எடுத்து வரவேற்கிறார்கள் என்று தெரியவில்லை.
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
விமந்தனி- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
Re: டெஸ்ட் டியூப் பேபி - என் பார்வையில்............. விமந்தனி.
மேற்கோள் செய்த பதிவு: 1127846விமந்தனி wrote:நன்றி கிருஷ்ணாம்மா. மாதொரு பாகனுக்கு கருப்பு கோடி காட்டுபவர்கள், ஏன் இந்த நவீன முறை கலாச்சார சீர்கேட்டிற்கு ஆரத்தி எடுத்து வரவேற்கிறார்கள் என்று தெரியவில்லை.
கேட்டால்............ விஞ்ஞான வளர்ச்சியை நாம் ஒப்புக்கொள்ளவில்லை என்று சொல்வார்கள் விமந்தனி
![சோகம்](/users/1813/71/41/02/smiles/440806.gif)
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: டெஸ்ட் டியூப் பேபி - என் பார்வையில்............. விமந்தனி.
என்னாச்சு...? கிருஷ்ணாம்மாவை தவிர, யாருமே இந்த பதிவை பார்க்கவில்லையா? அல்லது என் கருத்தில் உடன்பாடு இல்லையா...? ஒருவரும் பின்னூட்டமே இடவில்லையே....... ஏன்?
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
விமந்தனி- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
Re: டெஸ்ட் டியூப் பேபி - என் பார்வையில்............. விமந்தனி.
மேற்கோள் செய்த பதிவு: 1127837krishnaamma wrote://இதில் இப்படி ஒரு ரிஸ்க் இருக்கும் விஷயத்தை ஏன் முதலிலேயே அந்த தம்பதியரிடம் மருத்துவர்கள் சொல்வதில்லை. test tube பேபிக்கு சம்மந்தப்பட்ட கணவன் – மனைவியின், உயிரணு-கரு முட்டையை தான் சேர்க்கிறீர்கள் என்று ஏன் மருத்துவர்கள் உத்தரவாதம் அளிப்பதில்லை....?” என்று கேட்டதற்கு அந்த மருத்துவர் சரியான விளக்கம் அளிக்கவே இல்லை.//
இது ரொம்ப நிஜம் விமந்தனி.............இவருக்கு தெரிந்த ஒருவருக்கு அப்படி ஆனதாம் ..பாவம் அவர்கள்![]()
மிகவும் சீரியசான விஷயம் இது !
பெற்றெடுப்பவள் --நிச்சயமாக அறியப்படுகிறார் --தாயார் என மதிக்கபடுகிறார் .
surrogasy வாடகை தாய் --யார் என்பது 2/3 பேருக்கு மட்டுமே தெரியும் . அதில் ஒருவர் டாக்டர் /டீம்
biological father என்று பிரயோகம் ஒன்று உள்ளது . biological mother என்ற வார்த்தை பிரயோகம் இல்லை .
ஒரு விவாதப் பொருட்டு , மகளுக்காக ,கருப்பையை வாடகைக்கு கொடுத்த தாயார் , குழந்தைக்கு தாயாரா ?
அல்லது பாட்டியா ? போன்ற கேள்விகளை ஒரு புறம் ஒதுக்கி விட்டு ,கருமுட்டை மகளுடையதுதான் , உயிரணு மாப்பிள்ளையினுடையதுதான் என்று எந்த மருத்துவரும் உறுதி மொழி கொடுக்கப்போவதில்லை .
complicated topic என்பதால் தான் நான் மௌனம் காத்தேன் .
DNA ஒரு விதத்தில் தகப்பன் (தாயார் கூட ) யார் என காண்பிக்கும் , என்று நினைக்கிறேன்
நடைமுறையா இது .
கவிஞர் கூறியபடி , தாய் என்பது சத்தியம், தந்தை என்பது நம்பிக்கை என்ற நம்பிக்கையில் தான் உலகம் ஓடுகிறது மிகவும் ஆராய்ந்தால் opening up the Pandora's box ஆகிவிடும் .
ரமணியன்
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35038
இணைந்தது : 03/02/2010
Re: டெஸ்ட் டியூப் பேபி - என் பார்வையில்............. விமந்தனி.
//கருக்குழாயில் கரு உருவாக முடியாத பட்சத்தில் test tube பேபி என்பது வேண்டுமானால் ஏற்றுக்கொள்ளலாம். ஆனால், வாடகை தாய் மூலம், இன்னொரு ஆணின் விந்தணு மூலம் மற்றும் இன்னொரு பெண்ணின் சினை முட்டை மூலம் கருத்தரிப்பது என்பது......... தற்காலிக நிவாரணமாகவும், சமூகத்தின் அனுதாபப்பார்வையிலிருந்து அப்போதைக்கு தப்பிக்கவும் தான் பயன்படுமே தவிர...... நிச்சயமாக ஆயுள் முழுக்க – சம்மந்தப்பட்ட கணவனாலோ, மனைவியாலோ கண்டிப்பாக ஏற்றுக்கொள்ளவே முடியாது. //
இது எவ்வளவு பெரிய அசிங்கம் என யாருக்கும் தெரிவதில்லை அக்கா ....
தத்து பிள்ளையையாவது ஓரளவு மனம் ஏற்றுக் கொள்ளும் ஆனால் இப்படி ஒரு வழியில் பிறக்கும் குழந்தையால் குழப்பமெ வரும்....
இது எவ்வளவு பெரிய அசிங்கம் என யாருக்கும் தெரிவதில்லை அக்கா ....
தத்து பிள்ளையையாவது ஓரளவு மனம் ஏற்றுக் கொள்ளும் ஆனால் இப்படி ஒரு வழியில் பிறக்கும் குழந்தையால் குழப்பமெ வரும்....
ஜாஹீதாபானு- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011
Page 1 of 2 • 1, 2
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» டெஸ்ட் டியூப் பேபி..?
» யூ டியூப் ஸ்டார்
» குழந்தைகளுக்காக "யூ டியூப்' இணையதளம்!
» குழந்தைகளுக்காக “யூ டியூப்’ இணையதளம்!
» சீனாவில் ‘யூ-டியூப்’ இணையதளத்திற்கு தடை?
» யூ டியூப் ஸ்டார்
» குழந்தைகளுக்காக "யூ டியூப்' இணையதளம்!
» குழந்தைகளுக்காக “யூ டியூப்’ இணையதளம்!
» சீனாவில் ‘யூ-டியூப்’ இணையதளத்திற்கு தடை?
Page 1 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|