ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 10:16 am

» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

செல்போன் கதிர்வீச்சு உயிருக்கு எமன்! எச்சரிக்கும் மருத்துவர்கள்

4 posters

Go down

செல்போன் கதிர்வீச்சு உயிருக்கு எமன்! எச்சரிக்கும் மருத்துவர்கள் Empty செல்போன் கதிர்வீச்சு உயிருக்கு எமன்! எச்சரிக்கும் மருத்துவர்கள்

Post by சிவா Mon Mar 30, 2015 12:56 am

செல்போன் கதிர்வீச்சு உயிருக்கு எமன்! எச்சரிக்கும் மருத்துவர்கள் P26
செல்போன் பற்றிய பீதியை மத்திய அரசே பற்ற வைத்துள்ளது. கடந்த வாரத்தில் மத்திய அரசின் தொலைத்தொடர்புத் துறை வெளியிட்ட விளம்பரத்தில் செல்போனை எப்படி பயன்படுத்தக் கூடாது என்று சொல்லி இருந்த கட்டளைகள் மரண பயத்தை விதைப்பதாக உள்ளன. ஏன் இந்தத் திடீர் விளம்பரம்..?

மனிதன் கண்டுபிடித்தப் பொருட்கள் அனைத்தும், ஆக்கத்துக்கும் அழிவுக்கும் அடிப்படையாக இருக்கின்றன என்ற கூற்று அடிக்கடி நிரூபிக்கப்பட்டு வருகிறது. தொலைத் தொடர்புக்குப் பயன்படுத்தப்படும் செல்போனும் இதுக்கு விதிவிலக்கல்ல. செல்போன் கதிர்வீச்சால் மனிதனுக்குப் பாதிப்பு என்று ஆய்வுகள் மூலம் சொல்லப்பட்டாலும், யாரும் அதைப் பயன்படுத்தாமல் இருக்கப் போவதில்லை.  ஆனால் எப்படி பயன்படுத்த வேண்டும் என்று மக்களுக்கு உணர்த்தவே அந்த அறிவிப்பை மத்திய அரசு செய்துள்ளது.

இதுபற்றி மூளை நரம்பியல் நிபுணர் அலீமிடம் பேசினோம்.

'இன்று செல்போன் இல்லாத மனிதனை வேற்றுகிரகவாசிபோல பார்க்கும் மனநிலைக்கு மக்கள் வந்துவிட்டார்கள். செல்போன்கள் முழுக்க முழுக்க மின்காந்த அலைவரிசையில் இயங்குபவை. மக்களின் அதிகபட்ச பயன்பாடு காரணமாகக் கண்களுக்குப் புலப்படாத இந்த மின் அலைவரிசைகள், நம் பூமிப்பந்தில் எங்கும் நீக்கமற நிறைந்திருக்கின்றன. இவற்றின் பயன்களைப்போலவே, இவற்றால் சில பாதிப்புகளும் இருக்கின்றன. இந்தக் கதிர்வீச்சினால் அதிகம் பாதிக்கப்படுவது மூளைதான். 20 சதவிகிதம் முதல் 60 சதவிகிதமான நோய்கள் இதன் மூலம் ஏற்படக்கூடியதாக உள்ளன என்பது கண்டறியப்பட்டுள்ளது. மின்காந்த அலைகளான செல்போன் அலைகள், நமது உடலில் செயல்படும் மின்சாரத்துடன் இடையீடு செய்யும். இவை மக்களுக்கு கண் எரிச்சல், தலைவலி, வாந்தி போன்ற பாதிப்புகளை அடிக்கடி ஏற்படுத்துவதாகச் சில ஆராய்ச்சிகள் கூறுகின்றன.

ஒவ்வொரு செல்போனிலும் இருந்து பேசும் நேரத்துக்கேற்ப கதிர்வீச்சின் தன்மை (Specific Absorption Rate -SAR)  அளவிடப்படும்.  ஒரு கிராம் மனித திசுவுக்கு சராசரியாக 1.6W/kg என்ற அளவில் இருத்தல் வேண்டும். இந்த அளவானது, சீன தயாரிப்பு செல்போன்கள் அனைத்திலும் மாறுபட்டு இருக்கும். அவற்றைப் பயன்படுத்துவதால் பாதிப்பு அதிகளவில் இருக்கும். அவை சாதாரண பிரச்னைகள் முதல் காதுகேளாமை வரை ஏற்படுத்தும். அதிகப்படியான கதிர்வீச்சு காரணமாக மூளைப் புற்றுநோய்க்கட்டிகள் வரும் ஆபத்து குறித்தும் ஆராய்ச்சிகள் நடந்து வருகின்றன. எனினும், அவை இன்னும் நிரூபிக்கப்படவில்லை. குழந்தைகளுக்கு மண்டை ஓடு மிகவும் மெல்லியதாக இருக்கும். கதிர்வீச்சு காரணமாக பிற்காலத்தில் அவர்கள் அதிக பாதிப்புக்கு ஆளாக நேரிடும்.

இதுமட்டுமில்லாமல், நரம்பியல் தொந்தரவாகத் தலைவலிப் பிரச்னை ஏற்படலாம். தொடர்ந்து குறுஞ்செய்தி அனுப்புவதாலும் கைகளைத் தொடர்ந்து ஒரே கோணத்தில் வைத்து பயன்படுத்துவதாலும் மூட்டு எலும்புகள் பாதிப்படையலாம். தோள்பட்டையில் செல்போனை வைத்துச் சாய்ந்தபடி பேசுவதால் தோள்பட்டை வலி, கழுத்து வலி ஏற்படும் ஆபத்து உள்ளது. அதிகப்படியாக பயன்படுத்துவதால், கற்றலில் குறைபாடு, ஞாபகமறதி, தூக்கமின்மை, இதயத் துடிப்பு அதிகரித்தல், உடல் சோர்வு போன்ற பாதிப்புகள் ஏற்பட வாய்ப்பு இருப்பதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது. அதிகப்படியான கதிர்வீச்சு காரணமாக விந்தணுக்களின் எண்ணிக்கையில்கூட பாதிப்பு ஏற்படும் என்கிற அதிர்ச்சித் தகவலும் உண்டு. இதுபோன்ற பிரச்னைகளைக் கருத்தில்கொண்ட அரசு,  செல்போன் டவர்களில் இருந்து வெளிப்படும் எலக்ட்ரோ மேக்னடிக் கதிர்வீச்சின் தற்போதைய அளவை, 10 மடங்கில் இருந்து ஒரு மடங்காகக் குறைக்கப்படவேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது. ஆனாலும், அதிகப்படியாக செல்போன்கள் பயன்படுத்துவதை நாம் தவிர்க்க வேண்டும்' என்று எச்சரித்தார்.

தேசிய தொலைத்தொடர்புத் துறை ஊழியர்கள் சம்மேளனத்தின் சென்னை தொலைபேசி மாநில சங்கத்தின் செயலாளர் சி.கே.மதிவாணனிடம் பேசினோம். ''சில தனியார் நிறுவனங்கள் தங்களுக்கு என ஒதுக்கப்பட்ட அளவைவிட அதிகமாக ரேடியோ அலைவரிசைகளைப் பயன்படுத்துகிறார்கள். இதனால் செல்போன் சிக்னல் சரியாக இருக்கும். ஆனால், இது மனிதர்கள், பறவைகள் மற்றும் சூழலுக்குத்தான் ஆபத்து.  1 வாட் (செல்போன் வெளிப்படுத்தும் கதிர்வீச்சின் அளவு) ஆற்றல் மூலம் மைக்ரோவேவ் அடுப்பில் ஒரு லிட்டர் நீரை 1 டிகிரி செல்சியஸ் வரைச் சூடாக்க 500 விநாடிகள் தேவைப்படுகின்றன. நாம் தொடர்ந்து மொபைல் போனில் பேசுவதால் காதுமடல்கள் மூலம் உள்ளிருக்கும் உறுப்புகளுக்கும் வெப்ப அதிகரிப்பால் பாதிப்பு ஏற்படும். அரசு நிறுவனமான பி.எஸ்.என்.எல் தங்களுக்கு என வரையறுக்கப்பட்ட அளவை மட்டுமே பயன்படுத்துகின்றனர். அதனால்தான், அவர்களுடைய சிக்னல் அளவு குறைவாக உள்ளது என மக்கள் தெரிவிக்கிறார்கள். சிக்னல் நன்றாகக் கிடைக்க வேண்டும் என்பதற்காகச் செய்யும் ஏற்பாடு, மக்களுக்குப் பாதிப்பை ஏற்படுத்தும் என்பதை உணர வேண்டும்' என்றார்.

திடீரென்று மொபைல் ரிங்டோனோ அல்லது குறுஞ்செய்தியோ வந்ததுபோல் இருக்கும். ஆனால், போனை எடுத்துப் பார்த்தால் எதுவும் இருக்காது. அதேபோல அடிக்கடி போனை எடுத்துப் பார்க்கத் தூண்டும். இது சாதாரண விஷயமாகத் தோன்றலாம் ஆனால், இதுவும் ஒருவகை மனநோய் பாதிப்புதான். இதன் பெயர் 'ரிங்டோன் ஃபோபியா.’ இப்படியாக, போனை எடுத்துப் பார்ப்பது அடிக்கடி நிகழ்ந்தால் நம்மை அறியாமலேயே டென்ஷன், பதற்றம், கோபம், முரட்டுத்தனம், படபடப்பு ஆகியவை நமக்கு ஏற்படும். இது  தொடர்ந்தால் செல்போனைக் கண்டாலோ எரிச்சல் வந்துவிடும். இந்தப் பிரச்னைகளுக்குச் சரியான சிகிச்சை எடுத்துக்கொள்ளாமல், கண்டுகொள்ளாமல் விட்டுவிட்டால் ஒரு கட்டத்தில் மனநோய்கூட ஏற்படலாம்.

ஆபத்தையும் கையோடு சேர்த்தே வைத்திருக்கிறோம். ஜாக்கிரதை!

செல்போனை ஜாக்கிரதையாகப் பயன்படுத்த சில யோசனைகள்!

செல்போனைப் பயன்படுத்தும்போது காது மடலில் வலி, காது சூடாதல் போன்ற பிரச்னைகள் ஏற்படக்கூடும். அதனால் ஹேண்ட்ஸ் ஃப்ரீ பயன்படுத்துவதன் மூலம் செல்போன் கதிர்வீச்சு பாதிப்புகளில் இருந்து ஓரளவு தப்ப முடியும்.

உங்கள் செல்போனின் சிக்னல் குறைவாக இருக்கும்போது, செல்போனில் பேசுவதைத் தவிர்க்கவும். ஏனெனில் அந்த நேரத்தில் செல்போன், சிக்னலை முழுமையாகப் பெற அதிக அளவு கதிர்வீச்சை வெளிப்படுத்தும்.

செல்போன் பேசும்போது மூளையின் செயல்பாடு சற்றே அதிகமாக இருப்பதாகக் கண்டறியப்பட்டு உள்ளது. எனவே, ஒரே பகுதியில் போனை வைத்துப் பேசாமல் அவ்வப்போது மாற்றி மாற்றி வைத்துப் பேசுங்கள்.

தலையணைக்கு அடியில் செல்போனை வைத்துவிட்டுத் தூங்கும் பழக்கத்தைத் தவிர்க்கவேண்டும். காரணம் ரேடியோ அலைவரிசைகள் மூளையைப் பாதிக்கும் வாய்ப்புள்ளது.

காதில் செவித்திறன் கருவிகள் ஏதேனும் பொருத்தியிருந்தால், குறிப்பிட்ட அந்தப் பகுதியில் இருந்து 15-30 செ.மீ தூரத்துக்கு செல்போனைத் தள்ளியே வைத்துப் பேசுங்கள்.

மொபைல் வாங்கும்போதே அதனின் ஷிகிஸி  அளவை சரி பார்த்துக்கொள்ளவும்.

அழைப்பு இணையப்பெற்ற பிறகு போனைக் காதில் வைத்துப் பேசவும். காரணம், முதல் ஒலியானது அதிக அளவில் தொடங்கி, பின்னர் தேவையான அளவுக்குக் குறையும். அழைப்பு இணையும் சமயத்தில் அதிக ஆற்றல் வெளிப்படும்.

செல்போன்களை சட்டையின் இடதுபக்க பாக்கெட்டில் வைத்தால், கதிர்வீச்சின் மூலம் இதயம் பாதிக்கப்பட வாய்ப்பு உண்டு. எனவே அதைத் தவிர்க்கவும்.

போனில் பேசும்போது இரண்டு ஓரங்களை மட்டும் பிடித்துப் பேசவும். கைகளால் முழுவதுமாகப் பின் பக்கத்தை மூடிக்கொண்டு பேச வேண்டாம். வைப்ரேட் மோடில் செல்போனை வைத்திருப்பதைத் தவிர்க்கவும். பாக்கெட்டில் வைத்திருப்பதால் இதன் மூலம் ஏற்படும் அதிர்வலைகள் அதிகமாக உடல் பாகங்களைத் தாக்குகின்றன. மிக முக்கியமாக போனில் செலவிடும் நேரத்தைக் குறையுங்கள். அழைப்புகளுக்கான நேரத்தையும் கட்டுப்படுத்தினால் உடல்நலன் பாதுகாக்கப்படும்.

விகடன்


செல்போன் கதிர்வீச்சு உயிருக்கு எமன்! எச்சரிக்கும் மருத்துவர்கள் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

செல்போன் கதிர்வீச்சு உயிருக்கு எமன்! எச்சரிக்கும் மருத்துவர்கள் Empty Re: செல்போன் கதிர்வீச்சு உயிருக்கு எமன்! எச்சரிக்கும் மருத்துவர்கள்

Post by விமந்தனி Mon Mar 30, 2015 1:18 am

தற்போது தேவையான நல்ல பதிவு. நன்றி சிவா.


செல்போன் கதிர்வீச்சு உயிருக்கு எமன்! எச்சரிக்கும் மருத்துவர்கள் EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonசெல்போன் கதிர்வீச்சு உயிருக்கு எமன்! எச்சரிக்கும் மருத்துவர்கள் L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312செல்போன் கதிர்வீச்சு உயிருக்கு எமன்! எச்சரிக்கும் மருத்துவர்கள் EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Back to top Go down

செல்போன் கதிர்வீச்சு உயிருக்கு எமன்! எச்சரிக்கும் மருத்துவர்கள் Empty Re: செல்போன் கதிர்வீச்சு உயிருக்கு எமன்! எச்சரிக்கும் மருத்துவர்கள்

Post by M.Saranya Mon Mar 30, 2015 5:25 pm

சிறந்த பதிவு.............


கொடுப்பதற்கும் பெறுவதற்கும் உரிய விலை மதிப்பில்லாத பரிசு அன்பு .

செல்போன் கதிர்வீச்சு உயிருக்கு எமன்! எச்சரிக்கும் மருத்துவர்கள் W5td1pX3QFi1kBRhH0I3+Affection
M.Saranya
M.Saranya
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2190
இணைந்தது : 26/08/2014

Back to top Go down

செல்போன் கதிர்வீச்சு உயிருக்கு எமன்! எச்சரிக்கும் மருத்துவர்கள் Empty Re: செல்போன் கதிர்வீச்சு உயிருக்கு எமன்! எச்சரிக்கும் மருத்துவர்கள்

Post by krishnaamma Tue Mar 31, 2015 9:30 am

//செல்போன்களை சட்டையின் இடதுபக்க பாக்கெட்டில் வைத்தால், கதிர்வீச்சின் மூலம் இதயம் பாதிக்கப்பட வாய்ப்பு உண்டு. எனவே அதைத் தவிர்க்கவும்.//

pant பாக்கெட் களிலும் வைக்க வேண்டாம் என்று சொல்கிறார்கள் சிவா புன்னகை
.
.
.
நல்ல தேவையான பதிவு புன்னகை..நன்றி !


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

செல்போன் கதிர்வீச்சு உயிருக்கு எமன்! எச்சரிக்கும் மருத்துவர்கள் Empty Re: செல்போன் கதிர்வீச்சு உயிருக்கு எமன்! எச்சரிக்கும் மருத்துவர்கள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum