ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Yesterday at 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Yesterday at 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:11 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 3:07 pm

» கருத்துப்படம் 04/10/2024
by mohamed nizamudeen Yesterday at 3:01 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:46 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:06 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:30 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm

» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Yesterday at 11:36 am

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Yesterday at 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Yesterday at 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Yesterday at 7:09 am

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed Oct 02, 2024 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

எங்கும் இருக்கும் மைதிலி!

3 posters

Go down

எங்கும் இருக்கும் மைதிலி! Empty எங்கும் இருக்கும் மைதிலி!

Post by சிவா Sun Mar 29, 2015 11:03 am

எங்கும் இருக்கும் மைதிலி! P30a

மதிய உணவு வேளை. மூன்றாம் வகுப்பு படிக்கும் மைதிலியின் பள்ளிக்கு வெளியே, மதில் சுவரை ஒட்டி கூட்டம். அங்கே இருந்து ஓடிவந்த லட்சுமியிடம், ‘‘அங்கே என்னப்பா கூட்டம்?’’ என்று கேட்டாள் மைதிலி.

‘‘நாய் ஒண்ணு, கால்ல அடிபட்டிருக்கு.  ரத்தம் வருது. வயிறு பெருசா இருக்கு’’ என்று துண்டு துண்டாகச் சொல்லிவிட்டு  ஓடினாள். அவளுக்கு மைதிலியைவிட க்ளோஸ் ஃப்ரெண்டு, ஆத்ரேயா.  அவளிடம் இதைச் சொல்லவே ஓடினாள்.

மைதிலி, கூட்டத்தை விலக்கிப் பார்த்தாள். சுவரை ஒட்டிப் படுத்திருந்த அந்த நாய், வலியால் முனகியது. அதன் முன் கால் ஒன்றில் இருந்து ரத்தம் வழிந்தது. அதன் வயிறு பெரிதாக இருந்தது.

‘‘வயிறு ஏன்ப்பா பெருசா இருக்கு?’’ என்று பொதுவாகக் கேட்டாள்.

‘‘இதுகூட தெரியாதா? குட்டி பிறக்கப்போகுது’’ என்று ஐந்தாம் வகுப்பு அவினேஷ் சொன்னான்.

அப்போது, பின்னால் இருந்து நீளமான விசில் சப்தம். பி.டி. சார். இவர் எங்கேதான் இருப்பாரோ தெரியாது. நாலு பேர் ஒண்ணு சேர்ந்தால், வந்துவிடுவார். எல்லோரும் பள்ளிக்குள் ஓடினார்கள்.

மைதிலி வகுப்புக்குச் சென்று, லன்ச் பாக்ஸை எடுத்துக்கொண்டு திரும்பவும் வந்தாள். அவள், பாதிதான் சாப்பிட்டு இருந்தாள். இவளைப் பார்த்த பி.டி.சார், மீண்டும் விசில் அடிக்க முயன்றார்.

அதற்குள் அவரை நெருங்கி, ‘‘சார், இந்தச் சாப்பாட்டை அந்த நாய்க்குப் போட்டுட்டு வந்துடுறேன் சார்’’ என்றாள்.

‘‘நோ... நோ... கடிச்சிரும்’’ வாயில் இருக்கும் விசிலோடு மாஸ்டர் பேச, அவர் பேச்சுக்கு இசை அமைப்பதுபோல விசில் சப்தமும் வந்தது.

‘‘தூரமாவே வெச்சுட்டு வந்துடுறேன் சார்’’ என்றபடி, வேகமாக ஓடினாள். வேறு வழியின்றி, அவரும் கூடவே வந்தார்.

நாயை நெருங்கிய மைதிலி, லன்ச் பாக்ஸைத் திறந்து சாப்பாட்டைக் கொட்டினாள். ஒரு நொடி நிமிர்ந்து பார்த்த அந்த நாய், அடுத்த நொடி நகர்ந்துவந்து சாப்பிடத் தொடங்கியது.

‘‘ரொம்பப் பசியோட இருக்கு’’ என்றாள் மைதிலி.

‘‘சரி, சரி... வா’’ என்றவர், நீளமாக விசில் அடித்தார்.

இது மைதிலிக்கு அல்ல, இவர்களைப் பார்த்துவிட்டு ஆவலோடு ஓடி வந்த இரண்டு பையன்களுக்கு. அவர்கள், அப்படியே யு டர்ன் அடித்து, உள்ளே சென்றுவிட்டார்கள்.

அடுத்த நாளும் மதிய இடைவேளையில், அந்த நாய்க்குச் சாப்பாடு வைக்க ரஞ்சனாவோடு பள்ளி  வாசலுக்கு வர, ‘‘பாப்பா... எங்கே போறே?’’ என்று தடுத்தார் வாட்ச்மேன்.

‘‘வெளியே இருக்கிற நாய்க்கு சாப்பாடு...’’ என்றாள் மைதிலி.

‘‘அதெல்லாம் போவக் கூடாது. உள்ளே போங்க’’ என்றார்.

‘‘பாவம் அங்கிள். நேத்தே ரொம்பப் பசியா இருந்துச்சு’’ என்று சப்போர்ட் பண்ணினாள் ரஞ்சனா.

‘‘உங்களை வெளியே விட்டா, என் வேலை போய்டும். அப்புறம் நான் பசியோடு இருக்கணும்’’ என்றார்.

‘‘மைதிலி, ஈவ்னிங் ஸ்கூல் முடிஞ்சு போறப்ப வைக்கலாம்’’ என்று காதுக்குள் கிசுகிசுத்தாள் ரஞ்சனா.

நல்ல ஐடியாதான். அது வரை அந்த நாய் பசியோடு இருக்குமே, என நினைத்த மைதிலிக்குக் கவலையாக இருந்தது. வாட்ச்மேன் விடவே மாட்டார். நேற்றே, பி.டி. சார், வாட்ச்மேனைத் திட்டினாராம்.

பள்ளி முடிந்ததும் மைதிலி, ரஞ்சனாவோடு இன்னும் சிலர் சேர்ந்துகொண்டார்கள். இந்த முறை இன்னும் அருகில் போய் சாப்பாட்டை வைத்தாள். அதன் காலில் ரத்தம் உலர்ந்துபோயிருந்தது.

மூன்றாம் நாள் மாலை, நொண்டியபடி மைதிலியின் பின்னால் அந்த நாய் வந்தது. மைதிலி, மற்ற பிள்ளைகளோடு சேர்ந்து ஆட்டோவில் ஏறி, டாட்டா காட்டினாள். அது குரைத்தது.

‘‘அந்த நாய்க்கு கால் நல்லா இருந்திருந்தா,உன் வீட்டுக்கே வந்துடும்’’ என்றாள் அபர்ணா.

அடுத்த நாள் ஞாயிறு. ‘இன்று, நாய்க்கு யார் சாப்பாடு கொடுப்பார்கள்?’ என்று நினைக்க, கவலையாக இருந்தது மைதிலிக்கு.

திங்கட்கிழமை. பள்ளிக்கூட வாசலில் ஆட்டோவில் இருந்து இறங்கியதும், மதில் சுவரை நோக்கி ஓடினாள் மைதிலி. அங்கே, அந்த நாயைக் காணவில்லை.

‘‘என்ன பாப்பா நாயைத் தேடுறியா?’’ என்றபடி  வந்த வாட்ச்மேன், ‘‘உங்களில் யாரையாவது கடிச்சிட்டா, பேரன்ட்ஸுக்கு யார் பதில் சொல்றது? அதான், ரொம்பத் தூரத்துக்குத் துரத்திவிட்டேன்’’ என்றார்.

‘பாவம் அது. எங்கே போச்சோ?’ என நினைத்தபடி வகுப்புக்கு சென்றாள் மைதிலி.

இரண்டு நாட்களுக்குப் பிறகு அம்மாவோடு மளிகை கடைக்குச் சென்றபோது, கடை ஓரத்தில்... அட, அதே நாய். அதைச் சுற்றி நான்கு குட்டிகள். மைதிலியைப் பார்த்துவிட்டு, அந்த நாய் சந்தோஷமாகக் குரைத்தது. 
 
‘‘எங்கிருந்தோ வந்துச்சுமா. என் பொண்ணு மைதிலிதான், ‘நாம பார்த்துக்கலாம்’னு சொல்லி சாப்பாடு கொடுத்தாள்” என்றார் கடைக்காரர்.

‘‘அட, உங்க பொண்ணு பேரும் மைதிலியா?” என்று அம்மா ஆச்சர்யப்பட்டார்.

‘ஒரு கதவு மூடப்பட்டால் இன்னொரு கதவு திறக்கும்’ என்பதை கடவுள் எல்லா உயிர்களுக்கும் பொதுவாகவே வைத்திருக்கிறார் என்பதை மைதிலி புரிந்துகொண்டாள்!

எம்.லோகேஷ் மதன்


எங்கும் இருக்கும் மைதிலி! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

எங்கும் இருக்கும் மைதிலி! Empty Re: எங்கும் இருக்கும் மைதிலி!

Post by ஜாஹீதாபானு Mon Mar 30, 2015 4:25 pm

அருமையான கதை



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

எங்கும் இருக்கும் மைதிலி! Empty Re: எங்கும் இருக்கும் மைதிலி!

Post by M.Saranya Mon Mar 30, 2015 5:07 pm

எங்கும் இருக்கும் மைதிலி! 3838410834 எங்கும் இருக்கும் மைதிலி! 3838410834


கொடுப்பதற்கும் பெறுவதற்கும் உரிய விலை மதிப்பில்லாத பரிசு அன்பு .

எங்கும் இருக்கும் மைதிலி! W5td1pX3QFi1kBRhH0I3+Affection
M.Saranya
M.Saranya
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2190
இணைந்தது : 26/08/2014

Back to top Go down

எங்கும் இருக்கும் மைதிலி! Empty Re: எங்கும் இருக்கும் மைதிலி!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum