ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:43 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:10 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:51 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:43 pm

» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:07 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Oct 04, 2024 4:22 pm

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

91 வயது முன்னாள் பிரதமர் வாஜ்பாய்க்கு ‘பாரத ரத்னா’ விருது வீட்டுக்கு நேரில் சென்று ஜனாதிபதி வழங்கினார்

5 posters

Go down

 91 வயது முன்னாள் பிரதமர் வாஜ்பாய்க்கு ‘பாரத ரத்னா’ விருது வீட்டுக்கு நேரில் சென்று ஜனாதிபதி வழங்கினார் Empty 91 வயது முன்னாள் பிரதமர் வாஜ்பாய்க்கு ‘பாரத ரத்னா’ விருது வீட்டுக்கு நேரில் சென்று ஜனாதிபதி வழங்கினார்

Post by சிவா Sat Mar 28, 2015 9:09 am

 91 வயது முன்னாள் பிரதமர் வாஜ்பாய்க்கு ‘பாரத ரத்னா’ விருது வீட்டுக்கு நேரில் சென்று ஜனாதிபதி வழங்கினார் 322295-vajpayee-president

முதுபெரும் பாரதீய ஜனதா தலைவரும், முன்னாள் பிரதமருமான 91 வயது வாஜ்பாய்க்கு நேற்று பாரத ரத்னா விருது வழங்கப்பட்டது. ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி, வாஜ்பாயின் வீட்டுக்கு நேரில் சென்று அவரிடம் விருதை வழங்கினார்.

முன்னாள் பிரதமர் வாஜ்பாய்க்கு நாட்டின் மிக உயர்ந்த சிவிலியன் விருதான ‘பாரத ரத்னா’ விருதினை வழங்குவதாக மத்திய அரசு கடந்த ஆண்டு, அவரது பிறந்த நாளின்போது அறிவித்தது.

91 வயது தலைவர்

அப்போது அவரது பிறந்த நாளை நல்லாட்சி தினமாகவும், பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பாரதீய ஜனதா கூட்டணி அரசு அறிவித்து பெருமை சேர்த்தது.

91 வயதாகும் வாஜ்பாய், 3 முறை நாட்டின் பிரதமர் பதவியை அலங்கரித்தவர்; 10 முறை பாராளுமன்ற உறுப்பினராக இருந்தவர்; சிறந்த பாராளுமன்றவாதி; ஆட்சியியல் வல்லுனர்; அற்புதமான கவிஞர்; உணர்ச்சிகரமான பேச்சாளர்; வாழ்நாளெல்லாம் திருமணம் செய்து கொள்ளாமல் பிரம்மச்சாரியம் கடைப்பிடித்தவர்.

ஓய்வில் இருக்கிறார்

2001-ம் ஆண்டு மும்பை பிரிச்கேண்டி மருத்துவமனையில் மூட்டு மாற்று அறுவை சிகிச்சை செய்துகொண்டார். அதன்பின்னர் முதுமை, சுகவீனம் காரணமாக பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்காமல் இருந்து வந்தார்.

தற்போது அரசியலில் இருந்து ஓய்வு பெற்று, நமிதா என்ற வளர்ப்பு மகளின் குடும்பத்துடன் டெல்லி கிருஷ்ண மேனன் மார்க்கில் உள்ள இல்லத்தில் வசித்து வருகிறார். அவரை, அவரது 60 ஆண்டு கால நண்பர் என்.எம்.கததே, பாரதீய ஜனதா மூத்த தலைவர் அத்வானி, முன்னாள் மத்திய மந்திரி பி.சி.கந்தூரி ஆகியோர் மட்டுமே வீட்டுக்கு சென்று சந்தித்து, அவரது மகளிடம் நலம் விசாரித்து வருவது உண்டு.

பாரத ரத்னா விருது

இந்த நிலையில் ஒரு சிறப்பு நிகழ்வாக வாஜ்பாய்க்கு அவரது வீட்டுக்கு ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி நேரில் சென்று, பாரத ரத்னா விருதை வழங்குவார் என அறிவிக்கப்பட்டது.

அதன்படி வாஜ்பாய் இல்லத்துக்கு ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி, நேற்று மாலை சென்றார். அங்கு அவர் வாஜ்பாய்க்கு பாரத ரத்னா விருதை வழங்கி, வாழ்த்தி சிறப்பு செய்தார். அதை வாஜ்பாய், புன்னகை தவழ ஏற்றுக்கொண்டார்.

அணிவகுத்த தலைவர்கள்

ஜனாதிபதி மாளிகை சார்பில் நடத்தப்பட்ட இந்த நிகழ்ச்சியில், துணை ஜனாதிபதி ஹமீது அன்சாரி, பிரதமர் நரேந்திர மோடி, முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம், முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங், ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத், பாரதீய ஜனதா மூத்த தலைவர் அத்வானி, முதல்-மந்திரிகள் பிரகாஷ்சிங் பாதல் (பஞ்சாப்), வசுந்தரா ராஜே (ராஜஸ்தான்), சிவராஜ் சிங் சவுகான் (மத்திய பிரதேசம்), சந்திரபாபு நாயுடு (ஆந்திரா), ராஜ்நாத் சிங் உள்ளிட்ட மூத்த மத்திய மந்திரிகள், ஐக்கிய ஜனதா தள தலைவர் சரத் யாதவ் உள்ளிட்ட தலைவர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

விருது வழங்கும் நிகழ்ச்சிக்கு பின்னர் வாஜ்பாய் வீட்டு புல்வெளியில் தேநீர் விருந்து நடைபெற்றது. இதிலும் அனைத்து தலைவர்களும் கலந்து கொண்டனர்.

ஜனாதிபதிக்கு மோடி நன்றி

வாஜ்பாய்க்கு பாரத ரத்னா விருது வழங்கிய இந்த நாள், ஒரு வரலாற்று சிறப்பான நாள் என்று பிரதமர் நரேந்திர மோடி நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டார். மேலும், வாஜ்பாய் இல்லத்துக்கு நேரில் வந்து, பாரத ரத்னா விருதை வழங்கியதற்கு ஜனாதிபதி பிரணாப் முகர்ஜிக்கு பிரதமர் நரேந்திர மோடி நன்றி தெரிவித்தார்.

வாஜ்பாய் இல்லத்தில் நிருபர்களிடம் பேசிய மத்திய நிதி மந்திரி அருண் ஜெட்லி, “உடல்நல காரணங்களால் வாஜ்பாய் வெளியே செல்வதில்லை என்பதால் ஜனாதிபதி இங்கு வந்து அவருக்கு பாரத ரத்னா விருதை வழங்கினார். மிகவும் வலிமை வாய்ந்த தேசிய தலைவர், நீண்ட காலம் பணியாற்றிய பாராளுமன்றவாதி, கவிஞர், சிந்தனையாளர், சொந்த கட்சிக்கு மட்டுமல்ல, நாட்டுக்கே தலைவராக திகழும் வாஜ்பாய்க்கு பாரத ரத்னா விருது வழங்கி இருப்பது, அவரது சேவைகளுக்கு கிடைத்துள்ள மகத்தான அங்கீகாரம். நம் ஒவ்வொருவருக்கும் இது மகிழ்ச்சியான தருணம்” என பெருமிதத்துடன் கூறினார்.

கடந்து வந்த பாதை

வாஜ்பாய், மத்திய பிரதேச மாநிலம், குவாலியரில் 1924-ம் ஆண்டு, டிசம்பர் 25-ந் தேதி கிருஷ்ண பிஹாரி வாஜ்பாய்-கிருஷ்ணா தேவி தம்பதியரின் மகனாக பிறந்தார். 1957-ம் ஆண்டு முதன்முதலாக பாராளுமன்ற உறுப்பினர் ஆனார். அரை நூற்றாண்டுக்கு மேலாக அவர் பாராளுமன்ற உறுப்பினராக திகழ்ந்தார்.

வாஜ்பாயின் அரசியல் பயணம், நாட்டின் சுதந்திர போராட்டத்தில் தொடங்கியது. 1942-45 ஆண்டுகளில் அவர் ‘வெள்ளையனே வெளியேறு’ போராட்டத்தில் கலந்து கொண்டார். ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் சிறிது காலம் சிறைவாசமும் அனுபவித்துள்ளார்.

ஆர்.எஸ்.எஸ். இயக்கம்

தொடக்கத்தில் ஒரு கம்யூனிஸ்டாக தன்னை வெளிப்படுத்திக்கொண்ட வாஜ்பாய், ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தில் சேர்ந்து பணியாற்றினார். பாரதீய ஜன சங்கத்தின் நிறுவனரான சியாம பிரசாத் முகர்ஜிக்கு மிகவும் நெருக்கமானவராக திகழ்ந்தார்.

1950-களில் ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தின் பத்திரிகையை நடத்துவதற்காக சட்டப்படிப்பை பாதியில் நிறுத்தியவர், இந்த எம்.ஏ. அரசியல் விஞ்ஞான பட்டதாரி.

ஐ.நா.வில் பரபரப்பு ஏற்படுத்தியவர்

இந்திரா காந்தி காலத்தில் நெருக்கடி நிலை அமல்படுத்தப்பட்டதை எதிர்த்தபோது வாஜ்பாய் சிறைக்கு செல்ல நேரிட்டது. 1977-ம் ஆண்டு மொரார்ஜி தேசாய் பிரதமர் ஆன போது அவரது மந்திரிசபையில் வெளியுறவுத்துறை மந்திரி பதவி ஏற்றார். அப்போது ஐ.நா. சபையில் இந்தியில் முதல் முதலாக பேசி பரபரப்பை ஏற்படுத்தியவர் வாஜ்பாய்.

ஜனதா அரசு கவிழ்ந்த பின்னர், வாஜ்பாய் ஜனசங்கத்தில் தீவிர ஈடுபாடு காட்டினார். பின்னர் 1980-ம் ஆண்டு பாரதீய ஜனதா தொடங்கப்பட்டபோது, அதன் முதல் தலைவர் ஆனார்.

பிரதமர் பதவியில் சாதனை

1996-ம் ஆண்டு மே மாதம் முதல் முறையாக பிரதமர் பதவி ஏற்றார், வாஜ்பாய். ஆனால் அது 13 நாட்கள் மட்டுமே நீடித்தது. மீண்டும் 1998-99-ம் ஆண்டுகளில் பிரதமர் பதவி வகித்தார். இந்த முறை 13 மாதம் அவரது ஆட்சி நீடித்தது. 3-வது முறையாக 1999-ம் ஆண்டு பிரதமர் ஆன போது, முழு பதவி காலத்திலும் ஆட்சி நடத்தினார். காங்கிரஸ் கட்சி அல்லாத ஒரு தலைவர் இந்தியாவில் 5 ஆண்டு காலம் தொடர்ந்து பிரதமர் பதவியில் இருந்தது, வாஜ்பாய் மட்டும்தான்.

துணிச்சலான முடிவுகள் எடுப்பதில் வாஜ்பாய் பெயர் பெற்றவர்.

பத்ம விபூஷண்

லாகூருக்கு பஸ் சேவையை தொடங்கி இந்திய, பாகிஸ்தான் உறவில் புதிய அத்தியாயத்தை தொடங்கியவர் என்ற சிறப்பு வாஜ்பாய்க்கு உண்டு. ஆனால் அதே வாஜ்பாய் ஆட்சி காலத்தில்தான் கார்கில் போரும் நடந்தது. இதில் இந்தியாவுக்கு வெற்றி தேடித்தந்தார்.

பொக்ரான் அணுக்குண்டு சோதனை நடத்தியதும் வாஜ்பாய் ஆட்சி காலத்தில்தான்.

நரசிம்மராவ் ஆட்சி காலத்தில் வாஜ்பாய்க்கு 1992-ம் ஆண்டு பத்மவிபூஷண் விருது வழங்கி மத்திய அரசு கவுரவித்தது.

நேசத்துக்குரிய தலைவர்

அரசியல் ரீதியாக கருத்து வேறுபாடுகள் இருந்தாலும், அரசியல் கட்சி தலைவர்கள் அனைவராலும் நேசிக்கப்படுகிற தலைவராக வாஜ்பாய் இன்றும் திகழ்கிறார்.

டெல்லி மேல்-சபையில் ஒரு முறை முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங், ‘இந்திய அரசியலின் பீஷ்மர்’ என வாஜ்பாயை பாராட்டியதும், அவருக்கு நேற்று பாரத ரத்னா விருது வழங்கிய விழாவில், மன்மோகன்சிங் பங்கேற்றதும், வாஜ்பாயியின் ஒவ்வொரு பிறந்த நாளின் போதும் மன்மோகன்சிங் மறக்காமல் வாழ்த்துவதும் குறிப்பிடத்தக்கது.


 91 வயது முன்னாள் பிரதமர் வாஜ்பாய்க்கு ‘பாரத ரத்னா’ விருது வீட்டுக்கு நேரில் சென்று ஜனாதிபதி வழங்கினார் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

 91 வயது முன்னாள் பிரதமர் வாஜ்பாய்க்கு ‘பாரத ரத்னா’ விருது வீட்டுக்கு நேரில் சென்று ஜனாதிபதி வழங்கினார் Empty Re: 91 வயது முன்னாள் பிரதமர் வாஜ்பாய்க்கு ‘பாரத ரத்னா’ விருது வீட்டுக்கு நேரில் சென்று ஜனாதிபதி வழங்கினார்

Post by M.Saranya Sat Mar 28, 2015 1:36 pm

 91 வயது முன்னாள் பிரதமர் வாஜ்பாய்க்கு ‘பாரத ரத்னா’ விருது வீட்டுக்கு நேரில் சென்று ஜனாதிபதி வழங்கினார் 103459460  91 வயது முன்னாள் பிரதமர் வாஜ்பாய்க்கு ‘பாரத ரத்னா’ விருது வீட்டுக்கு நேரில் சென்று ஜனாதிபதி வழங்கினார் 1571444738


கொடுப்பதற்கும் பெறுவதற்கும் உரிய விலை மதிப்பில்லாத பரிசு அன்பு .

 91 வயது முன்னாள் பிரதமர் வாஜ்பாய்க்கு ‘பாரத ரத்னா’ விருது வீட்டுக்கு நேரில் சென்று ஜனாதிபதி வழங்கினார் W5td1pX3QFi1kBRhH0I3+Affection
M.Saranya
M.Saranya
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2190
இணைந்தது : 26/08/2014

Back to top Go down

 91 வயது முன்னாள் பிரதமர் வாஜ்பாய்க்கு ‘பாரத ரத்னா’ விருது வீட்டுக்கு நேரில் சென்று ஜனாதிபதி வழங்கினார் Empty Re: 91 வயது முன்னாள் பிரதமர் வாஜ்பாய்க்கு ‘பாரத ரத்னா’ விருது வீட்டுக்கு நேரில் சென்று ஜனாதிபதி வழங்கினார்

Post by சிவா Sat Mar 28, 2015 3:55 pm

 91 வயது முன்னாள் பிரதமர் வாஜ்பாய்க்கு ‘பாரத ரத்னா’ விருது வீட்டுக்கு நேரில் சென்று ஜனாதிபதி வழங்கினார் 22703_966067880079371_4931506992388175839_n


 91 வயது முன்னாள் பிரதமர் வாஜ்பாய்க்கு ‘பாரத ரத்னா’ விருது வீட்டுக்கு நேரில் சென்று ஜனாதிபதி வழங்கினார் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

 91 வயது முன்னாள் பிரதமர் வாஜ்பாய்க்கு ‘பாரத ரத்னா’ விருது வீட்டுக்கு நேரில் சென்று ஜனாதிபதி வழங்கினார் Empty Re: 91 வயது முன்னாள் பிரதமர் வாஜ்பாய்க்கு ‘பாரத ரத்னா’ விருது வீட்டுக்கு நேரில் சென்று ஜனாதிபதி வழங்கினார்

Post by யினியவன் Sat Mar 28, 2015 8:18 pm

மதத்தை முன்னிறுத்தி அரசியல் நடத்திய கால கட்டத்தில்
மனதை கவர்ந்த கண்ணியமிக்க தலைவர் இவரே



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

 91 வயது முன்னாள் பிரதமர் வாஜ்பாய்க்கு ‘பாரத ரத்னா’ விருது வீட்டுக்கு நேரில் சென்று ஜனாதிபதி வழங்கினார் Empty Re: 91 வயது முன்னாள் பிரதமர் வாஜ்பாய்க்கு ‘பாரத ரத்னா’ விருது வீட்டுக்கு நேரில் சென்று ஜனாதிபதி வழங்கினார்

Post by சிவனாசான் Sat Mar 28, 2015 9:36 pm

நல்லதுங்க...............
சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Back to top Go down

 91 வயது முன்னாள் பிரதமர் வாஜ்பாய்க்கு ‘பாரத ரத்னா’ விருது வீட்டுக்கு நேரில் சென்று ஜனாதிபதி வழங்கினார் Empty Re: 91 வயது முன்னாள் பிரதமர் வாஜ்பாய்க்கு ‘பாரத ரத்னா’ விருது வீட்டுக்கு நேரில் சென்று ஜனாதிபதி வழங்கினார்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
»  வாஜ்பாய்க்கு பாரத ரத்னா விருது!:
» பிரணாப் முகர்ஜிக்கு பாரத ரத்னா விருது: குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் வழங்கினார்
» முன்னாள் பிரதமர் வாஜ்பாய்க்கு பாரதரத்னா விருது அறிவிப்பு
» பாரத ரத்னா சர்ச்சை வெடித்து கிளம்புகிறது ; வாஜ்பாய்க்கு மத்திய அமைச்சர் சசிதரூர் ஆதரவு
» சச்சினுக்கு பாரத ரத்னா விருது கிடைக்க வாய்ப்பு

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum