Latest topics
» Outstanding Сasual Dating - Verified Ladiesby VENKUSADAS Today at 5:33 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Today at 5:31 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Today at 5:31 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:50 pm
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Yesterday at 11:28 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Yesterday at 11:22 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:18 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:00 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:39 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:26 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 8:36 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:24 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:50 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:34 pm
» மனமே விழி!
by ayyasamy ram Yesterday at 7:20 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:09 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:54 pm
» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 6:52 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:37 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:14 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:20 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 12:45 pm
» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Yesterday at 8:41 am
» நாவல்கள் வேண்டும்
by Harriz Yesterday at 4:07 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Jun 29, 2024 11:20 pm
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:57 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:43 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am
நிகழ்நிலை நிர்வாகிகள்
91 வயது முன்னாள் பிரதமர் வாஜ்பாய்க்கு ‘பாரத ரத்னா’ விருது வீட்டுக்கு நேரில் சென்று ஜனாதிபதி வழங்கினார்
5 posters
Page 1 of 1
91 வயது முன்னாள் பிரதமர் வாஜ்பாய்க்கு ‘பாரத ரத்னா’ விருது வீட்டுக்கு நேரில் சென்று ஜனாதிபதி வழங்கினார்
முதுபெரும் பாரதீய ஜனதா தலைவரும், முன்னாள் பிரதமருமான 91 வயது வாஜ்பாய்க்கு நேற்று பாரத ரத்னா விருது வழங்கப்பட்டது. ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி, வாஜ்பாயின் வீட்டுக்கு நேரில் சென்று அவரிடம் விருதை வழங்கினார்.
முன்னாள் பிரதமர் வாஜ்பாய்க்கு நாட்டின் மிக உயர்ந்த சிவிலியன் விருதான ‘பாரத ரத்னா’ விருதினை வழங்குவதாக மத்திய அரசு கடந்த ஆண்டு, அவரது பிறந்த நாளின்போது அறிவித்தது.
91 வயது தலைவர்
அப்போது அவரது பிறந்த நாளை நல்லாட்சி தினமாகவும், பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பாரதீய ஜனதா கூட்டணி அரசு அறிவித்து பெருமை சேர்த்தது.
91 வயதாகும் வாஜ்பாய், 3 முறை நாட்டின் பிரதமர் பதவியை அலங்கரித்தவர்; 10 முறை பாராளுமன்ற உறுப்பினராக இருந்தவர்; சிறந்த பாராளுமன்றவாதி; ஆட்சியியல் வல்லுனர்; அற்புதமான கவிஞர்; உணர்ச்சிகரமான பேச்சாளர்; வாழ்நாளெல்லாம் திருமணம் செய்து கொள்ளாமல் பிரம்மச்சாரியம் கடைப்பிடித்தவர்.
ஓய்வில் இருக்கிறார்
2001-ம் ஆண்டு மும்பை பிரிச்கேண்டி மருத்துவமனையில் மூட்டு மாற்று அறுவை சிகிச்சை செய்துகொண்டார். அதன்பின்னர் முதுமை, சுகவீனம் காரணமாக பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்காமல் இருந்து வந்தார்.
தற்போது அரசியலில் இருந்து ஓய்வு பெற்று, நமிதா என்ற வளர்ப்பு மகளின் குடும்பத்துடன் டெல்லி கிருஷ்ண மேனன் மார்க்கில் உள்ள இல்லத்தில் வசித்து வருகிறார். அவரை, அவரது 60 ஆண்டு கால நண்பர் என்.எம்.கததே, பாரதீய ஜனதா மூத்த தலைவர் அத்வானி, முன்னாள் மத்திய மந்திரி பி.சி.கந்தூரி ஆகியோர் மட்டுமே வீட்டுக்கு சென்று சந்தித்து, அவரது மகளிடம் நலம் விசாரித்து வருவது உண்டு.
பாரத ரத்னா விருது
இந்த நிலையில் ஒரு சிறப்பு நிகழ்வாக வாஜ்பாய்க்கு அவரது வீட்டுக்கு ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி நேரில் சென்று, பாரத ரத்னா விருதை வழங்குவார் என அறிவிக்கப்பட்டது.
அதன்படி வாஜ்பாய் இல்லத்துக்கு ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி, நேற்று மாலை சென்றார். அங்கு அவர் வாஜ்பாய்க்கு பாரத ரத்னா விருதை வழங்கி, வாழ்த்தி சிறப்பு செய்தார். அதை வாஜ்பாய், புன்னகை தவழ ஏற்றுக்கொண்டார்.
அணிவகுத்த தலைவர்கள்
ஜனாதிபதி மாளிகை சார்பில் நடத்தப்பட்ட இந்த நிகழ்ச்சியில், துணை ஜனாதிபதி ஹமீது அன்சாரி, பிரதமர் நரேந்திர மோடி, முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம், முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங், ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத், பாரதீய ஜனதா மூத்த தலைவர் அத்வானி, முதல்-மந்திரிகள் பிரகாஷ்சிங் பாதல் (பஞ்சாப்), வசுந்தரா ராஜே (ராஜஸ்தான்), சிவராஜ் சிங் சவுகான் (மத்திய பிரதேசம்), சந்திரபாபு நாயுடு (ஆந்திரா), ராஜ்நாத் சிங் உள்ளிட்ட மூத்த மத்திய மந்திரிகள், ஐக்கிய ஜனதா தள தலைவர் சரத் யாதவ் உள்ளிட்ட தலைவர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
விருது வழங்கும் நிகழ்ச்சிக்கு பின்னர் வாஜ்பாய் வீட்டு புல்வெளியில் தேநீர் விருந்து நடைபெற்றது. இதிலும் அனைத்து தலைவர்களும் கலந்து கொண்டனர்.
ஜனாதிபதிக்கு மோடி நன்றி
வாஜ்பாய்க்கு பாரத ரத்னா விருது வழங்கிய இந்த நாள், ஒரு வரலாற்று சிறப்பான நாள் என்று பிரதமர் நரேந்திர மோடி நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டார். மேலும், வாஜ்பாய் இல்லத்துக்கு நேரில் வந்து, பாரத ரத்னா விருதை வழங்கியதற்கு ஜனாதிபதி பிரணாப் முகர்ஜிக்கு பிரதமர் நரேந்திர மோடி நன்றி தெரிவித்தார்.
வாஜ்பாய் இல்லத்தில் நிருபர்களிடம் பேசிய மத்திய நிதி மந்திரி அருண் ஜெட்லி, “உடல்நல காரணங்களால் வாஜ்பாய் வெளியே செல்வதில்லை என்பதால் ஜனாதிபதி இங்கு வந்து அவருக்கு பாரத ரத்னா விருதை வழங்கினார். மிகவும் வலிமை வாய்ந்த தேசிய தலைவர், நீண்ட காலம் பணியாற்றிய பாராளுமன்றவாதி, கவிஞர், சிந்தனையாளர், சொந்த கட்சிக்கு மட்டுமல்ல, நாட்டுக்கே தலைவராக திகழும் வாஜ்பாய்க்கு பாரத ரத்னா விருது வழங்கி இருப்பது, அவரது சேவைகளுக்கு கிடைத்துள்ள மகத்தான அங்கீகாரம். நம் ஒவ்வொருவருக்கும் இது மகிழ்ச்சியான தருணம்” என பெருமிதத்துடன் கூறினார்.
கடந்து வந்த பாதை
வாஜ்பாய், மத்திய பிரதேச மாநிலம், குவாலியரில் 1924-ம் ஆண்டு, டிசம்பர் 25-ந் தேதி கிருஷ்ண பிஹாரி வாஜ்பாய்-கிருஷ்ணா தேவி தம்பதியரின் மகனாக பிறந்தார். 1957-ம் ஆண்டு முதன்முதலாக பாராளுமன்ற உறுப்பினர் ஆனார். அரை நூற்றாண்டுக்கு மேலாக அவர் பாராளுமன்ற உறுப்பினராக திகழ்ந்தார்.
வாஜ்பாயின் அரசியல் பயணம், நாட்டின் சுதந்திர போராட்டத்தில் தொடங்கியது. 1942-45 ஆண்டுகளில் அவர் ‘வெள்ளையனே வெளியேறு’ போராட்டத்தில் கலந்து கொண்டார். ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் சிறிது காலம் சிறைவாசமும் அனுபவித்துள்ளார்.
ஆர்.எஸ்.எஸ். இயக்கம்
தொடக்கத்தில் ஒரு கம்யூனிஸ்டாக தன்னை வெளிப்படுத்திக்கொண்ட வாஜ்பாய், ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தில் சேர்ந்து பணியாற்றினார். பாரதீய ஜன சங்கத்தின் நிறுவனரான சியாம பிரசாத் முகர்ஜிக்கு மிகவும் நெருக்கமானவராக திகழ்ந்தார்.
1950-களில் ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தின் பத்திரிகையை நடத்துவதற்காக சட்டப்படிப்பை பாதியில் நிறுத்தியவர், இந்த எம்.ஏ. அரசியல் விஞ்ஞான பட்டதாரி.
ஐ.நா.வில் பரபரப்பு ஏற்படுத்தியவர்
இந்திரா காந்தி காலத்தில் நெருக்கடி நிலை அமல்படுத்தப்பட்டதை எதிர்த்தபோது வாஜ்பாய் சிறைக்கு செல்ல நேரிட்டது. 1977-ம் ஆண்டு மொரார்ஜி தேசாய் பிரதமர் ஆன போது அவரது மந்திரிசபையில் வெளியுறவுத்துறை மந்திரி பதவி ஏற்றார். அப்போது ஐ.நா. சபையில் இந்தியில் முதல் முதலாக பேசி பரபரப்பை ஏற்படுத்தியவர் வாஜ்பாய்.
ஜனதா அரசு கவிழ்ந்த பின்னர், வாஜ்பாய் ஜனசங்கத்தில் தீவிர ஈடுபாடு காட்டினார். பின்னர் 1980-ம் ஆண்டு பாரதீய ஜனதா தொடங்கப்பட்டபோது, அதன் முதல் தலைவர் ஆனார்.
பிரதமர் பதவியில் சாதனை
1996-ம் ஆண்டு மே மாதம் முதல் முறையாக பிரதமர் பதவி ஏற்றார், வாஜ்பாய். ஆனால் அது 13 நாட்கள் மட்டுமே நீடித்தது. மீண்டும் 1998-99-ம் ஆண்டுகளில் பிரதமர் பதவி வகித்தார். இந்த முறை 13 மாதம் அவரது ஆட்சி நீடித்தது. 3-வது முறையாக 1999-ம் ஆண்டு பிரதமர் ஆன போது, முழு பதவி காலத்திலும் ஆட்சி நடத்தினார். காங்கிரஸ் கட்சி அல்லாத ஒரு தலைவர் இந்தியாவில் 5 ஆண்டு காலம் தொடர்ந்து பிரதமர் பதவியில் இருந்தது, வாஜ்பாய் மட்டும்தான்.
துணிச்சலான முடிவுகள் எடுப்பதில் வாஜ்பாய் பெயர் பெற்றவர்.
பத்ம விபூஷண்
லாகூருக்கு பஸ் சேவையை தொடங்கி இந்திய, பாகிஸ்தான் உறவில் புதிய அத்தியாயத்தை தொடங்கியவர் என்ற சிறப்பு வாஜ்பாய்க்கு உண்டு. ஆனால் அதே வாஜ்பாய் ஆட்சி காலத்தில்தான் கார்கில் போரும் நடந்தது. இதில் இந்தியாவுக்கு வெற்றி தேடித்தந்தார்.
பொக்ரான் அணுக்குண்டு சோதனை நடத்தியதும் வாஜ்பாய் ஆட்சி காலத்தில்தான்.
நரசிம்மராவ் ஆட்சி காலத்தில் வாஜ்பாய்க்கு 1992-ம் ஆண்டு பத்மவிபூஷண் விருது வழங்கி மத்திய அரசு கவுரவித்தது.
நேசத்துக்குரிய தலைவர்
அரசியல் ரீதியாக கருத்து வேறுபாடுகள் இருந்தாலும், அரசியல் கட்சி தலைவர்கள் அனைவராலும் நேசிக்கப்படுகிற தலைவராக வாஜ்பாய் இன்றும் திகழ்கிறார்.
டெல்லி மேல்-சபையில் ஒரு முறை முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங், ‘இந்திய அரசியலின் பீஷ்மர்’ என வாஜ்பாயை பாராட்டியதும், அவருக்கு நேற்று பாரத ரத்னா விருது வழங்கிய விழாவில், மன்மோகன்சிங் பங்கேற்றதும், வாஜ்பாயியின் ஒவ்வொரு பிறந்த நாளின் போதும் மன்மோகன்சிங் மறக்காமல் வாழ்த்துவதும் குறிப்பிடத்தக்கது.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: 91 வயது முன்னாள் பிரதமர் வாஜ்பாய்க்கு ‘பாரத ரத்னா’ விருது வீட்டுக்கு நேரில் சென்று ஜனாதிபதி வழங்கினார்
கொடுப்பதற்கும் பெறுவதற்கும் உரிய விலை மதிப்பில்லாத பரிசு அன்பு .
M.Saranya- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2190
இணைந்தது : 26/08/2014
Re: 91 வயது முன்னாள் பிரதமர் வாஜ்பாய்க்கு ‘பாரத ரத்னா’ விருது வீட்டுக்கு நேரில் சென்று ஜனாதிபதி வழங்கினார்
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: 91 வயது முன்னாள் பிரதமர் வாஜ்பாய்க்கு ‘பாரத ரத்னா’ விருது வீட்டுக்கு நேரில் சென்று ஜனாதிபதி வழங்கினார்
மதத்தை முன்னிறுத்தி அரசியல் நடத்திய கால கட்டத்தில்
மனதை கவர்ந்த கண்ணியமிக்க தலைவர் இவரே
மனதை கவர்ந்த கண்ணியமிக்க தலைவர் இவரே
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Re: 91 வயது முன்னாள் பிரதமர் வாஜ்பாய்க்கு ‘பாரத ரத்னா’ விருது வீட்டுக்கு நேரில் சென்று ஜனாதிபதி வழங்கினார்
நல்லதுங்க...............
சிவனாசான்- வி.ஐ.பி
- பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014
Similar topics
» வாஜ்பாய்க்கு பாரத ரத்னா விருது!:
» பிரணாப் முகர்ஜிக்கு பாரத ரத்னா விருது: குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் வழங்கினார்
» முன்னாள் பிரதமர் வாஜ்பாய்க்கு பாரதரத்னா விருது அறிவிப்பு
» பாரத ரத்னா சர்ச்சை வெடித்து கிளம்புகிறது ; வாஜ்பாய்க்கு மத்திய அமைச்சர் சசிதரூர் ஆதரவு
» ஜாகீர்கான்- 18 பேருக்கு அர்ஜூனா விருது: ககன் நரங்குக்கு கேல்ரத்னா விருது; ஜனாதிபதி வழங்கினார்
» பிரணாப் முகர்ஜிக்கு பாரத ரத்னா விருது: குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் வழங்கினார்
» முன்னாள் பிரதமர் வாஜ்பாய்க்கு பாரதரத்னா விருது அறிவிப்பு
» பாரத ரத்னா சர்ச்சை வெடித்து கிளம்புகிறது ; வாஜ்பாய்க்கு மத்திய அமைச்சர் சசிதரூர் ஆதரவு
» ஜாகீர்கான்- 18 பேருக்கு அர்ஜூனா விருது: ககன் நரங்குக்கு கேல்ரத்னா விருது; ஜனாதிபதி வழங்கினார்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|