புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Today at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 8:15 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஏமன் உள்நாட்டுப் போர் - Page 6 Poll_c10ஏமன் உள்நாட்டுப் போர் - Page 6 Poll_m10ஏமன் உள்நாட்டுப் போர் - Page 6 Poll_c10 
91 Posts - 61%
heezulia
ஏமன் உள்நாட்டுப் போர் - Page 6 Poll_c10ஏமன் உள்நாட்டுப் போர் - Page 6 Poll_m10ஏமன் உள்நாட்டுப் போர் - Page 6 Poll_c10 
38 Posts - 26%
வேல்முருகன் காசி
ஏமன் உள்நாட்டுப் போர் - Page 6 Poll_c10ஏமன் உள்நாட்டுப் போர் - Page 6 Poll_m10ஏமன் உள்நாட்டுப் போர் - Page 6 Poll_c10 
10 Posts - 7%
mohamed nizamudeen
ஏமன் உள்நாட்டுப் போர் - Page 6 Poll_c10ஏமன் உள்நாட்டுப் போர் - Page 6 Poll_m10ஏமன் உள்நாட்டுப் போர் - Page 6 Poll_c10 
7 Posts - 5%
sureshyeskay
ஏமன் உள்நாட்டுப் போர் - Page 6 Poll_c10ஏமன் உள்நாட்டுப் போர் - Page 6 Poll_m10ஏமன் உள்நாட்டுப் போர் - Page 6 Poll_c10 
1 Post - 1%
viyasan
ஏமன் உள்நாட்டுப் போர் - Page 6 Poll_c10ஏமன் உள்நாட்டுப் போர் - Page 6 Poll_m10ஏமன் உள்நாட்டுப் போர் - Page 6 Poll_c10 
1 Post - 1%
eraeravi
ஏமன் உள்நாட்டுப் போர் - Page 6 Poll_c10ஏமன் உள்நாட்டுப் போர் - Page 6 Poll_m10ஏமன் உள்நாட்டுப் போர் - Page 6 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஏமன் உள்நாட்டுப் போர் - Page 6 Poll_c10ஏமன் உள்நாட்டுப் போர் - Page 6 Poll_m10ஏமன் உள்நாட்டுப் போர் - Page 6 Poll_c10 
283 Posts - 45%
heezulia
ஏமன் உள்நாட்டுப் போர் - Page 6 Poll_c10ஏமன் உள்நாட்டுப் போர் - Page 6 Poll_m10ஏமன் உள்நாட்டுப் போர் - Page 6 Poll_c10 
235 Posts - 37%
mohamed nizamudeen
ஏமன் உள்நாட்டுப் போர் - Page 6 Poll_c10ஏமன் உள்நாட்டுப் போர் - Page 6 Poll_m10ஏமன் உள்நாட்டுப் போர் - Page 6 Poll_c10 
32 Posts - 5%
Dr.S.Soundarapandian
ஏமன் உள்நாட்டுப் போர் - Page 6 Poll_c10ஏமன் உள்நாட்டுப் போர் - Page 6 Poll_m10ஏமன் உள்நாட்டுப் போர் - Page 6 Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
ஏமன் உள்நாட்டுப் போர் - Page 6 Poll_c10ஏமன் உள்நாட்டுப் போர் - Page 6 Poll_m10ஏமன் உள்நாட்டுப் போர் - Page 6 Poll_c10 
19 Posts - 3%
prajai
ஏமன் உள்நாட்டுப் போர் - Page 6 Poll_c10ஏமன் உள்நாட்டுப் போர் - Page 6 Poll_m10ஏமன் உள்நாட்டுப் போர் - Page 6 Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
ஏமன் உள்நாட்டுப் போர் - Page 6 Poll_c10ஏமன் உள்நாட்டுப் போர் - Page 6 Poll_m10ஏமன் உள்நாட்டுப் போர் - Page 6 Poll_c10 
8 Posts - 1%
Guna.D
ஏமன் உள்நாட்டுப் போர் - Page 6 Poll_c10ஏமன் உள்நாட்டுப் போர் - Page 6 Poll_m10ஏமன் உள்நாட்டுப் போர் - Page 6 Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
ஏமன் உள்நாட்டுப் போர் - Page 6 Poll_c10ஏமன் உள்நாட்டுப் போர் - Page 6 Poll_m10ஏமன் உள்நாட்டுப் போர் - Page 6 Poll_c10 
7 Posts - 1%
mruthun
ஏமன் உள்நாட்டுப் போர் - Page 6 Poll_c10ஏமன் உள்நாட்டுப் போர் - Page 6 Poll_m10ஏமன் உள்நாட்டுப் போர் - Page 6 Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஏமன் உள்நாட்டுப் போர்


   
   

Page 6 of 6 Previous  1, 2, 3, 4, 5, 6

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Mar 27, 2015 5:08 pm

First topic message reminder :

உள்நாட்டுப்போர் உச்சகட்டத்தை எட்டியுள்ளதால் ஏமன் அரசை காப்பாற்ற சவுதி அரேபியா வான் தாக்குதலை தொடங்கியது அரபு நாடுகளும் படையை அனுப்பி ஆதரவு

ஏமனில் உள்நாட்டுப்போர் உச்சகட்டத்தை எட்டியுள்ளதால், அதிபர் அபேத்ரப்போ மன்சூர் காதியின் வேண்டுகோளின் பேரில் சவுதி அரேபியா வான் தாக்குதலை தொடங்கியுள்ளது.

சனாவை கைப்பற்றினர்

அரேபிய தீபகற்பத்தின் தென் பகுதியில் அமைந்துள்ள ஏமன் நாட்டின் அதிபராக, அபேத்ரப்போ மன்சூர் காதி செயல்பட்டு வருகிறார். மன்சூர் அரசுக்கு எதிராக ஹவுத்தி கிளர்ச்சியாளர்கள் கடந்த செப்டம்பர் மாதம் முதல் போராட்டத்தை தொடங்கினர்.

முன்னாள் அதிபர் அலி அப்துல்லாவின் ஆதரவாளர்களும், ஷியா பிரிவை சேர்ந்தவர்களுமான இந்த ஹவுத்தி படையினருக்கு ஈரான் ஆதரவு அளித்து வருகிறது. இதனால் ஏமனின் பல்வேறு பகுதிகளில் தாக்குதலை தொடங்கிய இவர்கள், கடந்த மாதம் தலைநகர் சனாவை கைப்பற்றியதுடன், சன்னி பிரிவினரின் பகுதிகளை நோக்கி முன்னேற தொடங்கினர்.

அதிபர் வேண்டுகோள்

இதன் காரணமாக அதிபர் மன்சூர் காதி சனாவை விட்டு வெளியேறி ஏடன் நகரில் தஞ்சம் புகுந்தார். தனது ஆதரவாளர்களுடன் தொடர்ந்து அங்கே முகாமிட்டுள்ள அவர், தனது அரசுக்கு எதிராக கிளர்ச்சியில் ஈடுபட்டு வரும் ஹவுத்தி படையினரை முறியடிக்க உதவுமாறு சவுதி அரேபியாவுக்கு நேரடி வேண்டுகோள் விடுத்தார்.

இதைத்தொடர்ந்து ஹவுத்தி படையினருக்கு எதிராக சவுதி அரேபியா நேற்று களத்தில் இறங்கியது. ஏமன் தலைநகர் சனா மற்றும் ஹவுத்தி கிளர்ச்சியாளர்களின் வசமிருக்கும் பகுதிகளில் 100–க்கும் மேற்பட்ட சவுதி அரேபிய போர் விமானங்கள் அதிரடியாக குண்டு மழை பொழிந்தன.

10 நாடுகள்

இதில் கிளர்ச்சியாளர்களின் ஏராளமான போர் விமானங்கள் அழிக்கப்பட்டன. எனினும் இந்த தாக்குதலில் ஏற்பட்ட உயிரிழப்புகள் குறித்து உடனடியான தகவல் எதுவும் இல்லை. மேலும் சவுதி அரேபியாவை சேர்ந்த 1 லட்சத்து 50 ஆயிரம் படை வீரர்களும் ஏமனில் குவிக்கப்பட்டு உள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளன.

சவுதி அரேபிய படைகளுடன், கத்தார், ஜோர்டான், குவைத், பஹ்ரைன், எகிப்து, மொராக்கோ மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் உள்பட 10 நாடுகளின் படைகளும் இந்த தாக்குதலில் ஈடுபட்டு உள்ளன. மேலும் பாகிஸ்தான் மற்றும் சூடான் போன்ற நாடுகளும் இந்த தாக்குதலில் பங்கேற்க விருப்பம் தெரிவித்து உள்ளன.

அமெரிக்கா ஆதரவு – சீனா கவலை

ஏமன் கிளர்ச்சியாளர்களுக்கு எதிரான தாக்குதலில் ஈடுபட்டுள்ள அரபு நாட்டு படைகளுக்கு ஆயுத வினியோகம் மற்றும் உளவுத்துறை உதவிகளை செய்ய அமெரிக்காவும் முன் வந்துள்ளது. இதனால் ஏமனில் மிகப்பெரும் தாக்குதல் நடைபெற வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது.

எனினும் ஏமனில் நிலவி வரும் உள்நோட்டுப்போர் கவலையளிப்பதாக சீனா கூறியுள்ளது. இது குறித்து சீன வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் குவா சுனியிங் கூறும்போது, ‘ஏமன் விவகாரத்தில் ஐ.நா.வின் பாதுகாப்பு கவுன்சில் நிறைவேற்றியுள்ள தீர்மானத்தின்படி அனைத்து நாடுகளும் செயலாற்ற வேண்டும். அனைத்து பிரச்சினைகளுக்கும் பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண வேண்டும்’ என்றார்.

மிகப்பெரிய போர் அபாயம்

இந்த தாக்குதல் குறித்து ஹவுத்தி இயக்கத்தை சேர்ந்த மூத்த தலைவர் ஒருவர் கூறுகையில், ‘ஏமனில் சவுதி அரேபிய படைகள் தொடங்கியுள்ள இந்த தாக்குதல், அந்த பிராந்தியத்தில் மிகப்பெரிய போருக்கு வழிவகுக்கும்’ என தெரிவித்தார். மேலும் சவுதி அரேபிய படைகள் சனா அருகே நடத்திய தாக்குதலில் ஏராளமானோர் கொல்லப்பட்டதாக ஹவுத்தி ஆதரவு தொலைக்காட்சி ஒன்றும் தெரிவித்து உள்ளது.

இந்த நிலையில் ஹவுத்தி படையினரின் வசமிருந்த ஏடன் விமான நிலையத்தை மீட்க, அதிபர் மன்சூர் காதியின் ஆதரவு படையினர் கடும் தாக்குதல் நடத்தினர். நீண்ட நேரம் நடந்த இந்த தாக்குதலின் இறுதியில், ஏடன் விமான நிலையம் மீட்கப்பட்டது.

எண்ணெய் விலை உயர்வு

இதற்கிடையே ஏமனில் ஏற்பட்டுள்ள உள்நாட்டுப்போர் தீவிரமடைந்தால் உலகம் முழுவதும் எண்ணெய் வினியோகம் பாதிக்கப்பட்டு, கச்சா எண்ணெய் விலை உயரும் அபாயம் ஏற்பட்டு உள்ளது. நேற்று தாக்குதல் தொடங்கிய சில நிமிடங்களிலேயே கச்சா எண்ணெய் விலை சுமார் 6 சதவீதம் அளவுக்கு உயர்ந்தது.

எண்ணெய் வளம் மிகுந்த சவுதி அரேபியா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ், குவைத் மற்றும் ஈராக் போன்ற நாடுகளில் இருந்து வரும் எண்ணெய் லாரிகள், ஏடன் வளைகுடா வழியாகவே ஐரோப்பிய நாடுகளுக்கு கொண்டு செல்லப்படுவது குறிப்பிடத்தக்கது.



ஏமன் உள்நாட்டுப் போர் - Page 6 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai

rksivam
rksivam
பண்பாளர்

பதிவுகள் : 61
இணைந்தது : 09/05/2014

Postrksivam Fri Apr 24, 2015 2:30 pm

அதெல்லாம் சரி, சண்டை ஆரம்பித்தவுடன் அங்கே சிக்கிக்கொண்டிருந்த ஆயிரக்கணக்கான இந்தியர்களை அவசரம் அவசரமாக பத்திரமாக இந்தியா கொண்டு வந்து சேர்த்த சுஷ்மா ஸ்வராஜ் மற்றும் மோடி அரசை பற்றியும் யாராவது புகழ்ந்தார்களா. தற்கொலை செய்துகொண்ட கஜேந்திரனை பற்றி வாய் கிழிய பேசும் ஆங்கீல செய்தி தொலை காட்சிகள் வசதியாக மறந்ததேன். ஆரணப் கோஸ்வாமி காது கேட்க்கிறதா. எதிர் கட்சிகள் எதிரி கட்சிகளே.

சிவம்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Apr 24, 2015 11:32 pm

ஏமன் சண்டையில் 1,080 பேர் உயிரிழப்பு 4,352 படுகாயம் - உலக சுகாதார அமைப்பு

ஏமன் சண்டையில் 1,080 பேர் உயிரிழந்தனர், 4,352 படுகாயம் அடைந்தனர் என்று உலக சுகாதார அமைப்பு தெரிவித்து உள்ளது.

ஏமன் நாட்டில், அதிபரை ஓட வைத்து, முக்கிய நகரங்களை தங்கள் வசப்படுத்திய, ஷியா பிரிவை சேர்ந்த ஹவுதி கிளர்ச்சியாளர்களை ஒடுக்குவதற்கு, சன்னி பிரிவை சேர்ந்த சவுதி அரேபியா தலைமையில் ஐக்கிய அரபு எமிரேட்ஸ், குவைத், பஹ்ரைன், கத்தார், ஜோர்டான், மொராக்கோ, எகிப்து, சூடான் ஆகிய நாடுகள் கரம் கோர்த்தன. இந்த நாடுகளின் கூட்டுப்படைகள் ஏமனில் கடந்த மாதம் 26–ந் தேதி தொடங்கி வான்தாக்குதல்களை நடத்தி வந்தன. இந்த தாக்குதல்களில் ஒன்றரை லட்சத்துக்கும் மேற்பட்டோர் இடம் பெயர்ந்தனர்.

ஏறத்தாழ ஒரு மாத காலமாக நடைபெற்று வந்த இந்த தாக்குதல்களை, ஏமன் அதிபர் கேட்டுக்கொண்டதின்பேரில், நிறுத்திக்கொள்வதாக சவூதி கூட்டுப்படைகள் செவ்வாய்க்கிழமை அறிவிப்பு வெளியிடப்பட்டது. சவுதி அரேபியா மற்றும் அதன் அண்டை நாடுகளின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டதாகவும், அந்த அச்சுறுத்தலை அகற்றுவதற்காகத்தான் தாக்குதல்கள் தொடுத்ததாகவும், தங்கள் நோக்கம் நிறைவேறி விட்டதாகவும் சவுதி கூட்டுப்படைகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. ஏமன் மீதான தாக்குதல்களை முடிவுக்கு கொண்டு வந்தாலும் கூட, கடற்படையின் முற்றுகை தொடரும். ஹவுதி கிளர்ச்சியாளர்கள் நடமாட்டம் இருந்தால் தாக்குதல் தொடுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது.

ஆனால் சண்டை நிறுத்த அறிவிப்பு வெளியான 24 மணி நேரத்திற்குள், டாய்ஸ் நகரில் ஏமன் ராணுவத்தின் மீது கிளர்ச்சியாளர்கள் தாக்குதல் தொடுத்தனர். அதைத் தொடர்ந்து, அங்கு சவுதி அரேபியா தலைமையிலான கூட்டுப்படைகள் மீண்டும் வான் தாக்குதல்கள் நடத்தியது. ஏமனில் தாக்குதல்களை மீண்டும் சவுதி கூட்டுப்படைகள் தொடங்கி விட்டனவா அல்லது இது ஒரு குறுகிய கால நடவடிக்கையா என தெரியத நிலையே நிலவியது. இந்நிலையில் ஏமன் விவகாரத்தில் ஐ.நா. ஆதரவுடன் கூடிய அமைதிப் பேச்சுவார்த்தையை மீண்டும் தொடங்க வேண்டும். ஆனால் தாக்குதல்கள் முழுமையாக நிறுத்தப்பட்டபின்னர்தான் பேச்சு வார்த்தை என்று கிளர்ச்சியாளர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இந்நிலையில் ஏமன் சண்டையில் 1,080 பேர் உயிரிழந்தனர், 4,352 படுகாயம் அடைந்தனர் என்று உலக சுகாதார அமைப்பு தெரிவித்து உள்ளது. இதில் 48 சிறுவர்கள், 28 பெண்களும் அடங்குவர் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது. காயம் அடைந்தவர்கள் பலர் மருத்துவமனையில் சேர்க்கப்படாத நிலையில் இறப்பு எண்ணிக்கை மேலும் உயரக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதற்கிடையே உதவி பணிகளுக்கான நடவடிக்கையும் தொடங்கப்பட்டு உள்ளது.



ஏமன் உள்நாட்டுப் போர் - Page 6 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Apr 24, 2015 11:35 pm

ஏமன் நாட்டில் அமைதிப்பேச்சுக்கு கிளர்ச்சியாளர்கள் நிபந்தனை ‘அனைத்து வகையிலான தாக்குதல்களும் நிறுத்தப்பட வேண்டும்’

ஏமன் நாட்டில் அமைதிப் பேச்சு வார்த்தை நடத்துவதற்கு, அனைத்து வகையிலான தாக்குதல்களும் நிறுத்தப்பட வேண்டும் என்று ஹவுதி கிளர்ச்சியாளர்கள் நிபந்தனை விதித்துள்ளனர்.

சவுதி கூட்டுப்படைகள் தாக்குதல்

ஏமன் நாட்டில், அதிபரை ஓட வைத்து, முக்கிய நகரங்களை தங்கள் வசப்படுத்திய, ஷியா பிரிவை சேர்ந்த ஹவுதி கிளர்ச்சியாளர்களை ஒடுக்குவதற்கு, சன்னி பிரிவை சேர்ந்த சவுதி அரேபியா தலைமையில் ஐக்கிய அரபு எமிரேட்ஸ், குவைத், பஹ்ரைன், கத்தார், ஜோர்டான், மொராக்கோ, எகிப்து, சூடான் ஆகிய நாடுகள் கரம் கோர்த்தன.

இந்த நாடுகளின் கூட்டுப்படைகள் ஏமனில் கடந்த மாதம் 26–ந் தேதி தொடங்கி வான்தாக்குதல்களை நடத்தி வந்தன. இந்த தாக்குதல்களில் 900–க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். ஒன்றரை லட்சத்துக்கும் மேற்பட்டோர் இடம் பெயர்ந்தனர்.

தாக்குதல்கள் நிறுத்தம்

ஏறத்தாழ ஒரு மாத காலமாக நடைபெற்று வந்த இந்த தாக்குதல்களை, ஏமன் அதிபர் கேட்டுக்கொண்டதின்பேரில், நிறுத்திக்கொள்வதாக சவூதி கூட்டுப்படைகள் செவ்வாய்க்கிழமை அறிவிப்பு வெளியிட்டன. சவுதி அரேபியா மற்றும் அதன் அண்டை நாடுகளின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டதாகவும், அந்த அச்சுறுத்தலை அகற்றுவதற்காகத்தான் தாக்குதல்கள் தொடுத்ததாகவும், தங்கள் நோக்கம் நிறைவேறி விட்டதாகவும் சவுதி கூட்டுப்படைகள் கூறின.

ஏமன் மீதான தாக்குதல்களை முடிவுக்கு கொண்டு வந்தாலும் கூட, கடற்படையின் முற்றுகை தொடரும். ஹவுதி கிளர்ச்சியாளர்கள் நடமாட்டம் இருந்தால் தாக்குதல் தொடுக்கப்படும் என்றும் அவை தெரிவித்தன.

மீண்டும் தாக்குதல்

ஆனால் சண்டை நிறுத்த அறிவிப்பு வெளியான 24 மணி நேரத்திற்குள், டாய்ஸ் நகரில் ஏமன் ராணுவத்தின் மீது கிளர்ச்சியாளர்கள் தாக்குதல் தொடுத்தனர். அதைத் தொடர்ந்து, அங்கு சவுதி அரேபியா தலைமையிலான கூட்டுப்படைகள் மீண்டும் வான் தாக்குதல்கள் நடத்தின.

ஏமனில் தாக்குதல்களை மீண்டும் சவுதி கூட்டுப்படைகள் தொடங்கி விட்டனவா அல்லது இது ஒரு குறுகிய கால நடவடிக்கையா என தெரிய வில்லை.

ராணுவ மந்திரி விடுவிப்பு

இதற்கிடையே கடந்த மாதம் 26–ந் தேதி ஏடன் நகருக்கு அருகே ஒரு விமான தளத்தில் வைத்து பிடித்து தங்கள் வசம் வைத்திருந்த ஏமன் ராணுவ மந்திரி மகமது அல் சுபாய்ஹியை கிளர்ச்சியாளர்கள் சனாவில் விடுதலை செய்தனர்.

அவரை கிளர்ச்சியாளர்கள் விடுவிக்க வேண்டும் என்று ஐ.நா. கோரிக்கை விடுத்தது நினைவுகூரத்தகுந்தது.

பேச்சு வார்த்தைக்கு நிபந்தனை

இந்த நிலையில் ஹவுதி கிளர்ச்சியாளர்களின் செய்தி தொடர்பாளர் முகமது அப்துல் சலாம், ‘‘ஏமன் விவகாரத்தில் ஐ.நா. ஆதரவுடன் கூடிய அமைதிப் பேச்சுவார்த்தையை மீண்டும் தொடங்க வேண்டும். ஆனால் தாக்குதல்கள் முழுமையாக நிறுத்தப்பட்டபின்னர்தான் பேச்சு வார்த்தை’’ என கூறி உள்ளார்.

இதற்கு முன்பு ஹவுதி கிளர்ச்சியாளர்களுக்கும், அதிபர் அப்து ரபு மன்சூர் ஹாதி அரசுக்கும் இடையே கடந்த ஜனவரியில் நடந்த பேச்சு வார்த்தை தோல்வியில் முடிந்தது குறிப்பிடத்தக்கது.



ஏமன் உள்நாட்டுப் போர் - Page 6 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri May 01, 2015 10:48 pm

ஏமன் நாட்டில் மீண்டும் சண்டை வலுக்கிறது சவுதி கூட்டுப்படைகள் குண்டு மழை

ஏமன் நாட்டில் மீண்டும் சண்டை வலுக்கிறது. கிளர்ச்சியாளர்களை குறிவைத்து சவுதி கூட்டுப்படைகள் நேற்று குண்டு மழை பொழிந்தன.

ஏமனில் சண்டை

ஏமன் நாட்டில் அதிபர் மன்சூர் ஹாதி ஆதரவு படையை எதிர்த்து ஈரான் ஆதரவு பெற்ற ஷியா பிரிவு ஹவுதி கிளர்ச்சியாளர்களும், முன்னாள் அதிபர் அலி அப்துல்லா சலே படையினரும் தீவிரமாக சண்டையிட்டு வந்தனர்.

முக்கிய நகரங்களைப் பிடித்து கிளர்ச்சியாளர்கள் கைகள் ஓங்கிய நிலையில், சவுதி அரேபியா தலைமையில் ஐக்கிய அரபு எமிரேட்ஸ், குவைத், பஹ்ரைன், கத்தார், ஜோர்டான், மொராக்கோ, எகிப்து, சூடான் ஆகிய நாடுகளின் கூட்டுப்படைகள் கடந்த மார்ச் மாதம் 26-ந் தேதி களத்தில் குதித்தன.

சண்டை நிறுத்தம்

கடுமையான வான்தாக்குதல்களை தொடுத்தன. சுமார் 1 மாதம் நடந்த இந்த தாக்குதல்களில் சுமார் 950 பேர் கொல்லப்பட்டு, 3 ஆயிரத்து 500 பேர் காயம் அடைந்து, 1½ லட்சம் பேர் இடம் பெயர்ந்த நிலையில், சவுதி கூட்டுப்படைகள் கடந்த மாதம் 21-ந் தேதி தாக்குதல்களை நிறுத்திக்கொள்வதாக அறிவித்தன.

ஆனாலும் ஏமன் முழுவதும் சவுதி கூட்டுப்படைகள் தாக்குதல் ஆங்காங்கே நடந்து வருகிறது.

ஏடனில் சண்டை

இந்த நிலையில், அங்கு நேற்று முன்தினம் ஏடன் நகரில் அதிபர் ஆதரவு படையினருக்கும், ஹவுதி கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே கடும் சண்டை நடந்தது.

இந்த சண்டையில் 8 பேர் கொல்லப்பட்டனர். அவர்களில் 5 பேர் அதிபர் ஆதரவு படையினர், 3 பேர் பொதுமக்கள். இந்த தகவலை ஏடன் சுகாதாரத்துறை தலைவர் உறுதி செய்தார்.

2 மாகாணங்களில் தாக்குதல்

இது தொடர்பாக அவர் கூறும்போது, மேலும் 44 பேர் படுகாயம் அடைந்துள்ளதாகவும் தெரிவித்தார். அதே நேரத்தில் கிளர்ச்சியாளர்கள் தரப்பு சேதம் குறித்து எந்தவொரு தகவலையும் அவர் வெளியிடவில்லை.

நேற்று முன்தினம் இரவில் லாஜ், அப்யான் மாகாணங்களில் கிளர்ச்சியாளர்களை குறி வைத்து சவுதி கூட்டுப்படைகள் தாக்குதல்கள் நடத்தின.

2 மாவட்டங்களில் குண்டுமழை

மேலும், தெற்கு ஏடனில் கோர் மஸ்கார், தார் சாத் மாவட்டங்களில் கிளர்ச்சியாளர்களின் பிடியில் இருந்து இழந்த நிலைகளை மீட்கும் வகையில், சவுதி கூட்டுப்படைகள் நேற்று கிளர்ச்சியாளர்களை குறி வைத்து போர் விமானங்களில் பறந்து குண்டு மழை பொழிந்தன.

இந்த தாக்குதல்களின் சேத விவரம் உடனடியாக தெரிய வரவில்லை. ஏமனில் மீண்டும் சண்டை வலுத்து வருவது அந்தப் பிராந்தியத்தில் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.



ஏமன் உள்நாட்டுப் போர் - Page 6 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue May 12, 2015 11:17 pm

ஏமனில் போர் விமான தாக்குதல்: குண்டு வீச்சில் பொதுமக்கள் 69 பேர் பலி

ஏமன் நாட்டில் அரசு படையினருக்கும் கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே அண்மைக் காலமாக சண்டை தீவிரமடைந்து உள்ளது. கிளர்ச்சியாளர்கள் பல முக்கிய நகரங்களை கைப்பற்றி உள்ளதால் அரசு படையினருக்கு ஆதரவாக சவுதி அரேபியா தலைமையிலான கூட்டுப் படைகள் போர் விமானங்கள் மூலம் குண்டு வீசி தாக்குதல் நடத்தி வருகின்றன.

நேற்று தலைநகர் சனாவின் புறநகர் பகுதியான மவுண்ட் நோபும் என்ற இடத்தில் கிளர்ச்சியாளர்கள் கைப்பற்றியிருந்த ராணுவ முகாமை குறி வைத்து சவுதி அரேபியா போர் விமானங்கள் குண்டு வீசி தாக்குதல் நடத்தின. 2-வது நாளாக இன்றும் இந்த தாக்குதல் நீடித்தது. அப்போது குண்டுகள் ராணுவ முகாம் மீதும் அருகில் இருந்த குடியிருப்பு பகுதிகள் மீதும் விழுந்து வெடித்து சிதறின. இதில் சிக்கி 69 பேர் பலியானார்கள். 250க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். பலியான மற்றும் காயம் அடைந்த அனைவரும் பொதுமக்கள் என்று மருத்துவ அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.




ஏமன் உள்நாட்டுப் போர் - Page 6 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Sponsored content

PostSponsored content



Page 6 of 6 Previous  1, 2, 3, 4, 5, 6

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக