புதிய பதிவுகள்
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 10:16 am

» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஏமன் உள்நாட்டுப் போர் - Page 4 I_vote_lcapஏமன் உள்நாட்டுப் போர் - Page 4 I_voting_barஏமன் உள்நாட்டுப் போர் - Page 4 I_vote_rcap 
19 Posts - 49%
heezulia
ஏமன் உள்நாட்டுப் போர் - Page 4 I_vote_lcapஏமன் உள்நாட்டுப் போர் - Page 4 I_voting_barஏமன் உள்நாட்டுப் போர் - Page 4 I_vote_rcap 
5 Posts - 13%
mohamed nizamudeen
ஏமன் உள்நாட்டுப் போர் - Page 4 I_vote_lcapஏமன் உள்நாட்டுப் போர் - Page 4 I_voting_barஏமன் உள்நாட்டுப் போர் - Page 4 I_vote_rcap 
5 Posts - 13%
வேல்முருகன் காசி
ஏமன் உள்நாட்டுப் போர் - Page 4 I_vote_lcapஏமன் உள்நாட்டுப் போர் - Page 4 I_voting_barஏமன் உள்நாட்டுப் போர் - Page 4 I_vote_rcap 
4 Posts - 10%
T.N.Balasubramanian
ஏமன் உள்நாட்டுப் போர் - Page 4 I_vote_lcapஏமன் உள்நாட்டுப் போர் - Page 4 I_voting_barஏமன் உள்நாட்டுப் போர் - Page 4 I_vote_rcap 
3 Posts - 8%
Raji@123
ஏமன் உள்நாட்டுப் போர் - Page 4 I_vote_lcapஏமன் உள்நாட்டுப் போர் - Page 4 I_voting_barஏமன் உள்நாட்டுப் போர் - Page 4 I_vote_rcap 
2 Posts - 5%
kavithasankar
ஏமன் உள்நாட்டுப் போர் - Page 4 I_vote_lcapஏமன் உள்நாட்டுப் போர் - Page 4 I_voting_barஏமன் உள்நாட்டுப் போர் - Page 4 I_vote_rcap 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ஏமன் உள்நாட்டுப் போர் - Page 4 I_vote_lcapஏமன் உள்நாட்டுப் போர் - Page 4 I_voting_barஏமன் உள்நாட்டுப் போர் - Page 4 I_vote_rcap 
141 Posts - 40%
ayyasamy ram
ஏமன் உள்நாட்டுப் போர் - Page 4 I_vote_lcapஏமன் உள்நாட்டுப் போர் - Page 4 I_voting_barஏமன் உள்நாட்டுப் போர் - Page 4 I_vote_rcap 
134 Posts - 38%
Dr.S.Soundarapandian
ஏமன் உள்நாட்டுப் போர் - Page 4 I_vote_lcapஏமன் உள்நாட்டுப் போர் - Page 4 I_voting_barஏமன் உள்நாட்டுப் போர் - Page 4 I_vote_rcap 
21 Posts - 6%
mohamed nizamudeen
ஏமன் உள்நாட்டுப் போர் - Page 4 I_vote_lcapஏமன் உள்நாட்டுப் போர் - Page 4 I_voting_barஏமன் உள்நாட்டுப் போர் - Page 4 I_vote_rcap 
20 Posts - 6%
Rathinavelu
ஏமன் உள்நாட்டுப் போர் - Page 4 I_vote_lcapஏமன் உள்நாட்டுப் போர் - Page 4 I_voting_barஏமன் உள்நாட்டுப் போர் - Page 4 I_vote_rcap 
8 Posts - 2%
வேல்முருகன் காசி
ஏமன் உள்நாட்டுப் போர் - Page 4 I_vote_lcapஏமன் உள்நாட்டுப் போர் - Page 4 I_voting_barஏமன் உள்நாட்டுப் போர் - Page 4 I_vote_rcap 
7 Posts - 2%
prajai
ஏமன் உள்நாட்டுப் போர் - Page 4 I_vote_lcapஏமன் உள்நாட்டுப் போர் - Page 4 I_voting_barஏமன் உள்நாட்டுப் போர் - Page 4 I_vote_rcap 
6 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
ஏமன் உள்நாட்டுப் போர் - Page 4 I_vote_lcapஏமன் உள்நாட்டுப் போர் - Page 4 I_voting_barஏமன் உள்நாட்டுப் போர் - Page 4 I_vote_rcap 
4 Posts - 1%
Guna.D
ஏமன் உள்நாட்டுப் போர் - Page 4 I_vote_lcapஏமன் உள்நாட்டுப் போர் - Page 4 I_voting_barஏமன் உள்நாட்டுப் போர் - Page 4 I_vote_rcap 
4 Posts - 1%
T.N.Balasubramanian
ஏமன் உள்நாட்டுப் போர் - Page 4 I_vote_lcapஏமன் உள்நாட்டுப் போர் - Page 4 I_voting_barஏமன் உள்நாட்டுப் போர் - Page 4 I_vote_rcap 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஏமன் உள்நாட்டுப் போர்


   
   

Page 4 of 6 Previous  1, 2, 3, 4, 5, 6  Next

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Mar 27, 2015 5:08 pm

First topic message reminder :

உள்நாட்டுப்போர் உச்சகட்டத்தை எட்டியுள்ளதால் ஏமன் அரசை காப்பாற்ற சவுதி அரேபியா வான் தாக்குதலை தொடங்கியது அரபு நாடுகளும் படையை அனுப்பி ஆதரவு

ஏமனில் உள்நாட்டுப்போர் உச்சகட்டத்தை எட்டியுள்ளதால், அதிபர் அபேத்ரப்போ மன்சூர் காதியின் வேண்டுகோளின் பேரில் சவுதி அரேபியா வான் தாக்குதலை தொடங்கியுள்ளது.

சனாவை கைப்பற்றினர்

அரேபிய தீபகற்பத்தின் தென் பகுதியில் அமைந்துள்ள ஏமன் நாட்டின் அதிபராக, அபேத்ரப்போ மன்சூர் காதி செயல்பட்டு வருகிறார். மன்சூர் அரசுக்கு எதிராக ஹவுத்தி கிளர்ச்சியாளர்கள் கடந்த செப்டம்பர் மாதம் முதல் போராட்டத்தை தொடங்கினர்.

முன்னாள் அதிபர் அலி அப்துல்லாவின் ஆதரவாளர்களும், ஷியா பிரிவை சேர்ந்தவர்களுமான இந்த ஹவுத்தி படையினருக்கு ஈரான் ஆதரவு அளித்து வருகிறது. இதனால் ஏமனின் பல்வேறு பகுதிகளில் தாக்குதலை தொடங்கிய இவர்கள், கடந்த மாதம் தலைநகர் சனாவை கைப்பற்றியதுடன், சன்னி பிரிவினரின் பகுதிகளை நோக்கி முன்னேற தொடங்கினர்.

அதிபர் வேண்டுகோள்

இதன் காரணமாக அதிபர் மன்சூர் காதி சனாவை விட்டு வெளியேறி ஏடன் நகரில் தஞ்சம் புகுந்தார். தனது ஆதரவாளர்களுடன் தொடர்ந்து அங்கே முகாமிட்டுள்ள அவர், தனது அரசுக்கு எதிராக கிளர்ச்சியில் ஈடுபட்டு வரும் ஹவுத்தி படையினரை முறியடிக்க உதவுமாறு சவுதி அரேபியாவுக்கு நேரடி வேண்டுகோள் விடுத்தார்.

இதைத்தொடர்ந்து ஹவுத்தி படையினருக்கு எதிராக சவுதி அரேபியா நேற்று களத்தில் இறங்கியது. ஏமன் தலைநகர் சனா மற்றும் ஹவுத்தி கிளர்ச்சியாளர்களின் வசமிருக்கும் பகுதிகளில் 100–க்கும் மேற்பட்ட சவுதி அரேபிய போர் விமானங்கள் அதிரடியாக குண்டு மழை பொழிந்தன.

10 நாடுகள்

இதில் கிளர்ச்சியாளர்களின் ஏராளமான போர் விமானங்கள் அழிக்கப்பட்டன. எனினும் இந்த தாக்குதலில் ஏற்பட்ட உயிரிழப்புகள் குறித்து உடனடியான தகவல் எதுவும் இல்லை. மேலும் சவுதி அரேபியாவை சேர்ந்த 1 லட்சத்து 50 ஆயிரம் படை வீரர்களும் ஏமனில் குவிக்கப்பட்டு உள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளன.

சவுதி அரேபிய படைகளுடன், கத்தார், ஜோர்டான், குவைத், பஹ்ரைன், எகிப்து, மொராக்கோ மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் உள்பட 10 நாடுகளின் படைகளும் இந்த தாக்குதலில் ஈடுபட்டு உள்ளன. மேலும் பாகிஸ்தான் மற்றும் சூடான் போன்ற நாடுகளும் இந்த தாக்குதலில் பங்கேற்க விருப்பம் தெரிவித்து உள்ளன.

அமெரிக்கா ஆதரவு – சீனா கவலை

ஏமன் கிளர்ச்சியாளர்களுக்கு எதிரான தாக்குதலில் ஈடுபட்டுள்ள அரபு நாட்டு படைகளுக்கு ஆயுத வினியோகம் மற்றும் உளவுத்துறை உதவிகளை செய்ய அமெரிக்காவும் முன் வந்துள்ளது. இதனால் ஏமனில் மிகப்பெரும் தாக்குதல் நடைபெற வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது.

எனினும் ஏமனில் நிலவி வரும் உள்நோட்டுப்போர் கவலையளிப்பதாக சீனா கூறியுள்ளது. இது குறித்து சீன வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் குவா சுனியிங் கூறும்போது, ‘ஏமன் விவகாரத்தில் ஐ.நா.வின் பாதுகாப்பு கவுன்சில் நிறைவேற்றியுள்ள தீர்மானத்தின்படி அனைத்து நாடுகளும் செயலாற்ற வேண்டும். அனைத்து பிரச்சினைகளுக்கும் பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண வேண்டும்’ என்றார்.

மிகப்பெரிய போர் அபாயம்

இந்த தாக்குதல் குறித்து ஹவுத்தி இயக்கத்தை சேர்ந்த மூத்த தலைவர் ஒருவர் கூறுகையில், ‘ஏமனில் சவுதி அரேபிய படைகள் தொடங்கியுள்ள இந்த தாக்குதல், அந்த பிராந்தியத்தில் மிகப்பெரிய போருக்கு வழிவகுக்கும்’ என தெரிவித்தார். மேலும் சவுதி அரேபிய படைகள் சனா அருகே நடத்திய தாக்குதலில் ஏராளமானோர் கொல்லப்பட்டதாக ஹவுத்தி ஆதரவு தொலைக்காட்சி ஒன்றும் தெரிவித்து உள்ளது.

இந்த நிலையில் ஹவுத்தி படையினரின் வசமிருந்த ஏடன் விமான நிலையத்தை மீட்க, அதிபர் மன்சூர் காதியின் ஆதரவு படையினர் கடும் தாக்குதல் நடத்தினர். நீண்ட நேரம் நடந்த இந்த தாக்குதலின் இறுதியில், ஏடன் விமான நிலையம் மீட்கப்பட்டது.

எண்ணெய் விலை உயர்வு

இதற்கிடையே ஏமனில் ஏற்பட்டுள்ள உள்நாட்டுப்போர் தீவிரமடைந்தால் உலகம் முழுவதும் எண்ணெய் வினியோகம் பாதிக்கப்பட்டு, கச்சா எண்ணெய் விலை உயரும் அபாயம் ஏற்பட்டு உள்ளது. நேற்று தாக்குதல் தொடங்கிய சில நிமிடங்களிலேயே கச்சா எண்ணெய் விலை சுமார் 6 சதவீதம் அளவுக்கு உயர்ந்தது.

எண்ணெய் வளம் மிகுந்த சவுதி அரேபியா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ், குவைத் மற்றும் ஈராக் போன்ற நாடுகளில் இருந்து வரும் எண்ணெய் லாரிகள், ஏடன் வளைகுடா வழியாகவே ஐரோப்பிய நாடுகளுக்கு கொண்டு செல்லப்படுவது குறிப்பிடத்தக்கது.



ஏமன் உள்நாட்டுப் போர் - Page 4 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai

ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009
http://eegarai.com/

Postரிபாஸ் Tue Apr 07, 2015 10:06 am

தகவலுக்கு நன்றி தல



காலங்கள் மாறலாம் ஆனால் நட்பு என்றும் மாறாது

ஏமன் உள்நாட்டுப் போர் - Page 4 Logo12
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Apr 07, 2015 1:54 pm

தகவலுக்கு நன்றி சிவா புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
M.Saranya
M.Saranya
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2190
இணைந்தது : 26/08/2014

PostM.Saranya Tue Apr 07, 2015 2:13 pm

தகவலுக்கு நன்றி............



கொடுப்பதற்கும் பெறுவதற்கும் உரிய விலை மதிப்பில்லாத பரிசு அன்பு .

ஏமன் உள்நாட்டுப் போர் - Page 4 W5td1pX3QFi1kBRhH0I3+Affection
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Apr 08, 2015 3:53 pm

ஏமனில் இருந்து இதுவரை 4,000 இந்தியர்களை மீட்டது கடற்படை; வெளிநாட்டினர் 230 பேர் மீட்பு

மும்பை விமான நிலையத்தில் காத்திருக்கும் ஏமனிலிருந்து மீட்கப்பட்ட இந்திய குடும்பம். |படம்: ராய்ட்டர்ஸ்.
மும்பை விமான நிலையத்தில் காத்திருக்கும் ஏமனிலிருந்து மீட்கப்பட்ட இந்திய குடும்பம். |படம்: ராய்ட்டர்ஸ்.

போர்ச் சூழல் நிலவும் ஏமனில் இருந்து இதுவரை 4,000 குடிமக்களை மீட்டுள்ள இந்திய கடற்படை, 26 நாடுகளைச் சேர்ந்த 230 வெளிநாட்டினரையும் பத்திரமாக மீட்டுள்ளது.

ஏமனிலிருந்து சிக்கி தவித்த இந்தியர்கள் பலகட்டமாக மீட்கப்பட்ட நிலையில், எஞ்சியவர்களையும் மீட்டு அழைத்து வரும் ஆபரேஷன் ரஹாத் இன்றுடன் முடிவுக்கு வருகிறது.

ஆபரேஷன் ரஹாத் நடவடிக்கை மூலம் இந்திய விமானப் படை மற்றும் கடற்படையின் உதவியோடு இதுவரை சுமார் 4000 இந்தியர்கள் மீட்கப்பட்டதாக வெளியுறவுத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

இது தொடர்பாக அந்த துறையின் செய்தித் தொடர்பாளர் சயீத் அக்பரூதீன் கூறும்போது, "ஏமனில் சிக்கி இருந்த இந்தியர்களை மீட்டுக் கொண்டு வரும் பணி இன்றுடன் முடிவுக்கு வருகிறது. அங்கிருந்து வெளியேற நினைப்பவர்கள் நமது இறுதிகட்ட பயணத்தில் இணைய வேண்டும்.

செவ்வாய்க்கிழமை மட்டும் 700-க்கும் அதிகமானோர் அழைத்துவரப்பட்டனர். அவர்களில் கிட்டத்தட்ட 600 பேர் மிக மோசமான நிலையில் இருக்கும் சனா பகுதியிலிருந்து மீட்கப்பட்டவர்கள். பெரும்பாலானோரை மீட்கும் பணி நிறைவுபெற்றது. எஞ்சியவர்களை கடல் போக்குவரத்து வழியாக மீட்டு கொண்டு வரும் பணி சில நாட்களுக்கு தொடரும்" என்றார்.

இந்தியர்களை மட்டுமல்லாமல் 26 நாடுகளைச் சேர்ந்த 230 வெளிநாட்டவர்களை இந்திய அதிகாரிகள் மீட்டுள்ளனர். அவர்கள் அனைவரும் பத்திரமாக அவர்களது நாடுகளுக்கு அனுப்பப்பட்டனர்.

கடந்த சில வருடங்களில் உக்ரைன், இராக், லிபியா ஆகிய நாடுகளில் உள்நாட்டுப் போர் நிகழ்ந்தபோது அங்கிருக்கும் மக்களை வெளியேற்றும் பணிகளில் மற்ற நாடுகளுக்கு இந்தியா உதவியது.

கடந்த 2006-ல் நடந்த லெபனான் போருக்கு பின்னர் மீட்பு பணிக்காக கடற்படை போர் கப்பல்களை ஈடுப்படுத்தப்படாமல் இந்தியா தவிர்த்து வந்தது. ஆனால் ஏமன் நிலவரத்தில் மீட்பு பணிக்காக பல ஆண்டுகளுக்கு பின்னர் கடற்படை போர் கப்பல் ஈடுப்பட்டது குறிப்பிடத்தக்கது.



ஏமன் உள்நாட்டுப் போர் - Page 4 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Apr 08, 2015 3:57 pm

ஏமனில் தவித்த 11 இந்தியர்களை மீட்டது பாக். கடற்படை

போர்ச் சூழலால் பாதிக்கப்பட்டுள்ள ஏமனின் தென்கிழக்கு நகரமான முக்காலாவில் சிக்கித் தவித்துக் கொண்டிருந்த 11 இந்தியர்களை பாகிஸ்தான் கடற்படை அதிகாரிகள் மீட்டனர்.

இந்தியர்கள் 11 பேரும் பாகிஸ்தான் கடற்படை கப்பல் மூலம் கராச்சி சென்றடைந்தனர். இந்தத் தகவலை, இந்தியாவிடம் பாகிஸ்தான் அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை தெரிவித்தனர்.

கராச்சியில் உள்ள 11 இந்தியர்களையும் சிறப்பு விமானம் மூலம் டெல்லிக்கு அனுப்புவதாக பாகிஸ்தான் தெரிவித்தது.

இதற்கான பணிகளை இந்தியாவுக்கான பாகிஸ்தான் தூதர் அப்துல் பசீத் செய்து வருவதாக இந்திய வெளியுறவுத் துறை உறுதிப்படுத்தியுள்ளது.

பாகிஸ்தான் முன்வந்து செய்த இந்த மீட்புப் பணி உதவியை இந்தியா ஏற்றுக் கொண்டது.



ஏமன் உள்நாட்டுப் போர் - Page 4 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Apr 08, 2015 4:44 pm

ஏமன் உள்நாட்டுப் போர்: சவுதி கூட்டணி படைகளுக்கு ஆயுத சப்ளையை விரைவுபடுத்தும் அமெரிக்கா

ஏமனில் ஹவுத்தி கிளர்ச்சியாளர்கள் மீதான தாக்குதலை தீவிரப்படுத்த சவுதி அரசுக்கு ஆயுத சப்ளையை விரைவுபடுத்தும் நடவடிக்கையில் அமெரிக்கா இறங்கியுள்ளது.

ஏமனில் நடைபெறும் உள்நாட்டு போர் கடந்த மார்ச் 19–ந் தேதி முதல் தீவிரம் அடைந்துள்ளது. அரசுக்கு எதிராக போரிடும் ஹவுத்தி கிளர்ச்சி படையை ஒடுக்க சவுதி அரேபியாவும் அதன் நட்பு நாடுகளும் குண்டு வீச்சு நடத்தி வருகின்றன.

ஹவுத்தி கிளர்ச்சியாளர்களும் எதிர் தாக்குதல் நடத்துகின்றனர். இதனால் உயிர்ச்சேதம், பொருட்சேதமும் பெருமளவில் ஏற்படுகிறது.

சவுதி அரேபியா குண்டு வீச்சு தொடங்கிய மார்ச் 19 முதல் இதுவரை அதாவது 3 வாரத்தில் 540 பேர் பலியாகி உள்ளனர். 1700 பேர் காயம் அடைந்துள்ளனர். இந்த தகவலை உலக சுகாதார நிறுவனத்தின் செய்தி தொடர்பாளர் கிறிஸ்டியன் லிண்ட்மியர் தெரிவித்துள்ளார். போரின் போது 74 குழந்தைகள் பலியானதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

இந்நிலையில், கிளர்ச்சியாளர்களுக்கு எதிரான நடவடிக்கைகளை தீவிரப்படுத்துவதற்காக சவுதி அரசுக்கு வழங்கும் ஆயுதங்கள் துரிதமாக சென்றடைய அமெரிக்கா நடவடிக்கை எடுத்துள்ளது.

இதுபற்றி அமெரிக்காவின் பாதுகாப்புத்துறை இணை மந்திரி டோனி பிளிங்கன் ரியாத்தில் நிருபர்களிடம் கூறுகையில், “ஏமனை ஆயுத பலத்தால் ஒருபோதும் கைப்பற்றிவிட முடியாது என்று ஹவுத்தி கிளர்ச்சியாளர்களுக்கு சவுதி அரேபியா கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது. அதன் ஒரு பகுதியாக நாங்கள் ஆயுதங்கள் சப்ளையை விரைவுபடுத்தியிருக்கிறோம். உளவுத்துறை பகிர்வை அதிகரித்திருக்கிறோம். இதற்காக கூட்டு ஒருங்கிணைப்பு திட்ட மையத்தையும் ஏற்படுத்தி உள்ளோம்” என்றார்.



ஏமன் உள்நாட்டுப் போர் - Page 4 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Thu Apr 09, 2015 3:03 pm

எல்லாரும் கிளம்பி வாங்க சம்பரிச்சது போதும்...இங்க விவசாயம் பாக்க ஆள் இல்லை..
ம்ம்ம் கிளம்புங்கள் மூட்டை முடிச்சுகளை கட்டிக்கிட்டு ....அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை

.. :நல்வரவு:



ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Thu Apr 09, 2015 3:36 pm

சரவணன் wrote:எல்லாரும் கிளம்பி வாங்க சம்பரிச்சது போதும்...இங்க விவசாயம் பாக்க ஆள் இல்லை..
ம்ம்ம் கிளம்புங்கள் மூட்டை முடிச்சுகளை கட்டிக்கிட்டு ....அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை

.. :நல்வரவு:
மண்டையில் அடி மண்டையில் அடி

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Apr 09, 2015 10:35 pm

ஏமனில் ஹவுதி கிளர்ச்சியாளர்களுக்கு 'உதவி செய்யும்' ஈரானுக்கு அமெரிக்கா கடும் எச்சரிக்கை

உள்நாட்டு போர் தீவிரம் அடைந்து உள்ள ஏமனில், ஹவுதி கிளர்ச்சியாளர்களுக்கு 'உதவி' செய்து வரும் ஈரானுக்கு அமெரிக்கா கடும் எச்சரிக்கை விடுத்து உள்ளது.

சனாவை கைப்பற்றினர்

அரேபிய தீபகற்பத்தின் தென் பகுதியில் அமைந்துள்ள ஏமன் நாட்டின் அதிபராக, அபேத்ரப்போ மன்சூர் காதி செயல்பட்டு வருகிறார். மன்சூர் அரசுக்கு எதிராக ஹவுதி கிளர்ச்சியாளர்கள் கடந்த செப்டம்பர் மாதம் முதல் போராட்டத்தை தொடங்கினர்.

முன்னாள் அதிபர் அலி அப்துல்லாவின் ஆதரவாளர்களும், ஷியா பிரிவை சேர்ந்தவர்களுமான இந்த ஹவுத்தி படையினருக்கு ஈரான் ஆதரவு அளித்து வருகிறது. இதனால் ஏமனின் பல்வேறு பகுதிகளில் தாக்குதலை தொடங்கிய இவர்கள், கடந்த மாதம் தலைநகர் சனாவை கைப்பற்றியதுடன், சன்னி பிரிவினரின் பகுதிகளை நோக்கி முன்னேற தொடங்கினர்.

அரபு நாடுகள் தாக்குதல்

இதன் காரணமாக அதிபர் மன்சூர் காதி சனாவை விட்டு வெளியேறி ஏடன் நகரில் தஞ்சம் புகுந்தார். தனது ஆதரவாளர்களுடன் தொடர்ந்து அங்கே முகாமிட்டுள்ள அவர், தனது அரசுக்கு எதிராக கிளர்ச்சியில் ஈடுபட்டு வரும் ஹவுதி படையினரை முறியடிக்க உதவுமாறு சவுதி அரேபியாவுக்கு நேரடி வேண்டுகோள் விடுத்தார்.

இதைத்தொடர்ந்து ஹவுதி படையினருக்கு எதிராக சவுதி அரேபியா களத்தில் இறங்கியது. ஏமன் தலைநகர் சனா மற்றும் ஹவுதி கிளர்ச்சியாளர்களின் வசமிருக்கும் பகுதிகளில் 100–க்கும் மேற்பட்ட சவுதி அரேபிய போர் விமானங்கள் அதிரடியாக குண்டு மழை பொழிந்தன. சவுதி அரேபியாவை சேர்ந்த 1 லட்சத்து 50 ஆயிரம் படை வீரர்களும் ஏமனில் குவிக்கப்பட்டு உள்ளதாக செய்திகள் வெளியாகியது.

சவுதி அரேபிய படைகளுடன், கத்தார், ஜோர்டான், குவைத், பஹ்ரைன், எகிப்து, மொராக்கோ மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் உள்பட 10 நாடுகளின் படைகளும் இந்த தாக்குதலில் ஈடுபட்டு உள்ளன. மேலும் பாகிஸ்தான் மற்றும் சூடான் போன்ற நாடுகளும் இந்த தாக்குதலில் பங்கேற்க விருப்பம் தெரிவித்து உள்ளன. தொடர்ந்து அங்கு இருதரப்பு இடையே சண்டை நடைபெற்று வருகிறது. இதுவரையில் 520-க்கும் மேற்பட்டோர்கள் உயிரிழந்து உள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.

ஏமனின் துறைமுக நகரான ஏடனில் பெரும் போர் முற்றிஉள்ளது. ஏடன் நகரை கைப்பற்றும் முயற்சியில் கிளர்ச்சியாளர்கள் ஈடுபட்டு உள்ளனர். அவர்களுக்கு எதிராக சவுதி தலைமையிலான படை தாக்குதல் நடத்தி வருகிறது. உயிரிழப்பு அதிகரிக்கக் கூடும் என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளது.

ஈரானுக்கு அமெரிக்கா எச்சரிக்கை

ஏமன் கிளர்ச்சியாளர்களுக்கு எதிரான தாக்குதலில் ஈடுபட்டுள்ள அரபு நாட்டு படைகளுக்கு ஆயுத வினியோகம் மற்றும் உளவுத்துறை உதவிகளை செய்ய ஏற்கனவே அமெரிக்கா முன் வந்துள்ளது. ஏமனில் மிகப்பெரும் தாக்குதல் நடைபெற்று வருகிறது.

ஏமனில் ஷியா பிரிவை சேர்ந்த ஹவுதி படையினருக்கு ஈரான் ஆதரவு அளித்து வருகிறது. ஆனால் வெளிப்படையாக ஈரான் இதனை மறுத்து வருகிறது.

இருப்பினும், ஏமனின் தெற்குகடல் பகுதியில் உள்ள ஏடன் வளைகுடாவிற்கு ஈரான் இரண்டு போர் கப்பல்களை அனுப்பி உள்ளது. கடற்படை கமாண்டர் ஹாபிபோல்லாக் சய்யாரி, கப்பல்களுக்கான பாதுகாப்பை உறுதி செய்வதற்காகவே இந்த நடவடிக்கை ஆகும் என்று கூறினார்.

ஹவுதி கிளர்ச்சியாளர்களுக்கு 'உதவி' செய்து வரும் ஈரானுக்கு அமெரிக்கா கடும் எச்சரிக்கை விடுத்து உள்ளது.

“மத்திய கிழக்கில், ஈரான் நாட்டால் அச்சுறுத்தல் ஏற்படும் என்று உணரும் அனைத்து நாடுகளுக்கும் அமெரிக்கா ஆதரவு தெரிவிக்கும், பிராந்தியத்தில் ஒரு ஸ்திரமின்மையை ஈரான் உருவாக்க முயற்சி செய்தால் அமெரிக்கா அமைதியாக இருக்காது,” என்று அமெரிக்க வெளியுறவுத் துறை மந்திரி ஜான் கெர்ரி கடும் எச்சரிக்கை விடுத்து உள்ளார்.

ஈரான் ஹவுதி கிளர்ச்சியாளர்களுக்கு உதவி செய்கிறது என்பது தெளிவாக தெரிகிறது. ஹவுதி கிளர்ச்சியாளர்களுக்கு அனைத்து உதவிகளும் ஈரானில் இருந்து கிடைக்கிறது என்று தெளிவாக வெளிப்படையாகவே தெரிகிறது. ஒவ்வொரு வாரமும் ஈரான் நாட்டின் விமானங்கள் ஏமனுக்குள் பறக்கிறது. பிராந்தியத்தில் ஸ்திரமின்மை இல்லாத நிலைஏற்படும் போது அமெரிக்கா அமைதியாக இருக்காது என்பதை ஈரான் தெரிந்துக் கொள்ளவேண்டிய தேவை உள்ளது. என்று கெர்ரி தெரிவித்து உள்ளார்.

இதற்கிடையே ஏமனில் கிளர்ச்சியாளர்களுக்கு எதிரான போரில் பங்குபெறுவது தொடர்பாக பாகிஸ்தான் பாராளுமன்றத்தில் விவாதம் நடைபெற்று வருகிறது. அங்கும் எதிர்ப்பும் மற்றும் ஆதரவும் வெளியாகி வருகிறது.



ஏமன் உள்நாட்டுப் போர் - Page 4 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Apr 10, 2015 12:40 pm

உலகம் வியந்த இந்திய கடற்படையின் மீட்புப் பணிகள் நிறைவு: ஏமனில் தூதரகம் மூடல்

உலக நாடுகளை வியப்பில் ஆழ்த்திய இந்திய கடற்படையின் மீட்பு நடவடிக்கைகள் நிறைவடைந்த நிலையில், ஏமனில் உள்ள இந்திய தூதரகம் மூடப்பட்டது.

இந்திய வெளியுறவுத் துறையின் முயற்சியால் ஏமனில் இருந்து 960 வெளிநாட்டவர்களும், 4,640 இந்தியர்களும் மீட்கப்பட்டுள்ளனர். மீட்புப் பணிகள் நிறைவடைந்ததால், ஏமனில் உள்ள இந்திய தூதரகம் மூடப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏமனின் போர்ச் சூழலில் சிக்கியிருந்த இந்தியர்களை மீட்கும் முயற்சியை கடற்படை மற்றும் விமானப் படையின் அபார பங்களிப்புடன் வெளியுறவுத் துறை வெற்றிகரமாக முடித்துக் கொண்டது. ஒட்டுமொத்தமாக 4,640 இந்தியர்கள் மற்றும் 41 நாடுகளைச் சேர்ந்த 960 வெளிநாட்டவர்கள் என 5,600 பேர் மீட்கப்பட்டுவிட்டதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

இது குறித்து வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் கூறும்போது, "ஏமனில் மீட்பு பணிகள் நிறைவடைந்துவிட்டது. இந்த பணிக்கு பொறுப்பேற்ற வி.கே.சிங் இன்று இரவு திரும்புவார். இத்துடன் அங்கிருக்கும் நமது தூதரகமும் மூடப்படுகிறது" என்றார்.

முன்னதாக இதனையே குறிப்பிட்ட வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் சயீத் அக்பரூதீன், எஞ்சிய 630 பேரை 3 சிறப்பு விமானங்கள் மூலம் ஏமன் தலைநகர் சனாவிலிருந்து மீட்டு அழைத்து வரப்படுவார்கள் என்று தெரிவித்தார்.

மேலும், "ஏடன் துறைமுகத்தில் வான்வழித் தாக்குதல் தொடங்கிவிட்டது. இதனால் இதற்கு மேற்பட்டு நாம் விமானப் போக்குவரத்தை உபயோகிக்க முடியாது. இதுவரை 18 பிரிவுகளாக வந்த விமானங்கள் மூலம் மட்டும் 2,900 பேர் மீட்கப்பட்டனர்.

கடற்படைப் போர் கப்பல்கள் மூலம் ஏடன், அல்-ஹுதையா, அல்-முக்காலா துறைமுக நகரங்களிலிருந்து மார்ச் 31-ஆம் தேதி முதல் சுமார் 1,670 பேர் மீட்கப்பட்டனர். ஐ.என்.எஸ். சுமித்ராவில் 46 இந்தியர்கள், 303 வெளிநாட்டவர்கள் என மொத்தம் 349 பேர் அழைத்து வரப்பட்டனர். இவர்கள் அனைவரும் ஏப்ரல் 9-ஆம் தேதி வந்து சேர்ந்தனர்" என்றார் அவர்.



ஏமன் உள்நாட்டுப் போர் - Page 4 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Sponsored content

PostSponsored content



Page 4 of 6 Previous  1, 2, 3, 4, 5, 6  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக