புதிய பதிவுகள்
» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Today at 5:33 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Today at 5:31 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Today at 5:31 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:50 pm

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Yesterday at 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Yesterday at 11:22 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:18 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:00 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 8:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:34 pm

» மனமே விழி!
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:54 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 6:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:14 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 12:45 pm

» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Yesterday at 8:41 am

» நாவல்கள் வேண்டும்
by Harriz Yesterday at 4:07 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Jun 29, 2024 11:20 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சுகபோக வாழ்வு Poll_c10சுகபோக வாழ்வு Poll_m10சுகபோக வாழ்வு Poll_c10 
2 Posts - 67%
VENKUSADAS
சுகபோக வாழ்வு Poll_c10சுகபோக வாழ்வு Poll_m10சுகபோக வாழ்வு Poll_c10 
1 Post - 33%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
சுகபோக வாழ்வு Poll_c10சுகபோக வாழ்வு Poll_m10சுகபோக வாழ்வு Poll_c10 
2 Posts - 67%
VENKUSADAS
சுகபோக வாழ்வு Poll_c10சுகபோக வாழ்வு Poll_m10சுகபோக வாழ்வு Poll_c10 
1 Post - 33%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சுகபோக வாழ்வு


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82754
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat Mar 28, 2015 7:55 am

மாதம் மும்மாரி மழை பொழியும் என்பர் அல்லவா?
விஜயநகரத்தில் மழைக்குப் பஞ்சமே இல்லை.

மழை பெய்து புற்கள் தழைத்து நின்றதால், அந்தப் புல்
தரையில் இளைஞன் ஒருவன் ஆனந்தமாகப்படுத்துத்
தூங்கிக் கொண்டிருந்தான்.”குளிர்ந்த காற்று வீசிக்
கொண்டிருந்தது.

மாமன்னர் கிருஷ்ண தேவராயரும், அப்பாஜியும்
நகர்வலம் வந்த போது இதனைக் கண்டனர்

“”ஓரளவு குளிர்ந்த காற்று அடித்தாலும் நம்மால் அதைத்
தாங்க முடியவில்லையே… இவன் இவ்விதம்
கவலையில்லாமல் படுத்து உறங்குகிறானே, இவனால்
இவ்விதம் படுத்து உறங்க எவ்விதம் முடிகிறது,”என்று
தன் சந்தேகத்தை அப்பாஜியிடம் கேட்டார் மன்னர்.

அப்பாஜி புன்னகை புரிந்த வண்ணம், மன்னருக்குப்
பதிலளித்தார்..

“”மன்னர் அவர்களே, இயற்கையுடன் இயற்கையாக ஒன்றி
வாழ்பவர்களை எந்தக் குளிரும் ஒன்றும் செய்து விடாது.
நாமெல்லாம் இயற்கைக்குப் பயந்து சுகம் தேடி அலைகிறோம்.
அவர்கள் நம்மைப் போன்று அல்லர். எதையும் பொருட்
படுத்தாமல் வாழ்ந்து இயற்கையோடு ஒன்றி வாழ்வதில்
இன்பம் காண்பவர்கள்;

அவர்களை எந்தக் குளிரோ, வெயிலோ எதுவும் செய்துவிடாது.
வெற்று உடம்பினராய் வாழ்வர், போர்த்திக் கொள்ள மாட்டனர்,
இயற்கை தரும் காய்கனி வகைகளை உண்டு நிம்மதியுடன்
வாழ்வர். ஆற்று நீரும், ஊற்று நீரும், அருவி நீரும், அவர்களுக்கு
ஆனந்த வாழ்வு தருபவையாகும். அவர்களுக்கு எந்தவித உடல்
உபாதையும் ஏற்படுவது இல்லை.
இயற்கையோடு இயற்கையாக வாழ்வதால் அவர்கள் என்றுமே
நலமுடன் வாழ்கின்றனர்.

“”அவர்களுடையே எளிய உணவுப் பழக்கமும் ஒரு முக்கியமான
காரணமாகும். இவ்விதம் அவர்கள் வாழ்வதால் தான்,
நோய் நொடியின்றி இனிதாக வாழ்கின்றனர். இந்த இளைஞனும்
இயற்கையோடு இயற்கையாக ஒன்றி வாழ்வதால்தான்,
அதாவது காற்றிலும், மழையிலும் அவன் காணும் சுகம்தான்
இவனை நலமுடன் வாழ வைக்கிறது. இவனுக்கு ஈரமான
புல்தரையும், இளம் வெயிலும் இன்பத்தையே தருபவையாகும்.

இவனை நாம் அழைத்துச் சென்று கொஞ்சம் சுகபோக வாழ்வைக்
கொடுத்தோமென்றால் இயற்கை வாழ்விலிருந்தும் இவனைப்
பிரித்து விடுவதால் நோய் வந்து உடனே இவனைத் தாக்க
ஆரம்பித்து விடும்,” என்று நீண்ட உரை யாற்றினார் அப்பாஜி.

இவ்விதம் கூறியவைகளையெல்லாம் மன்னர் எண்ணிப் பார்த்தார்.

இந்த இளைஞனை அழைத்து வந்து அவனுக்கு ஒரு வேலையைக்
கொடுத்து, அவனை இயற்கை வாழ்விலிருந்து பிரித்துப் பார்க்கலாமே
என்று எண்ணிய மன்னர், அப்பாஜியிடம் அந்த இளைஞனை
அழைத்து வர ஏற்பாடு செய்யச் சொன்னார்.

அரசருடைய படைப் பிரிவில் வேலை கிடைத்தது. அவன்
சுகபோக வாழ்க்கையில் ஈடு பட்டான். நல்ல வசதியான வீட்டில்
தங்கிச் சுகம் கண்டான்.

ஒரு மழை நாளில், வாடைக் காற்றும், பலமாக வீசிய வண்ணம்
இருந்தது.
அந்த நிலையில் பணியாளன் ஒருவனை அனுப்பி அந்த இளைஞனை
வரவழைத்தனர்.
அவன் வந்ததும், “”இளைஞனே, நீ ஒரு முக்கிய பணியைச் செய்து
முடிக்க வேண்டும். இதை மிகவும் ரகசியமாகவே செய்ய வேண்டும்.
இந்தப் பணியைச் செய்யும் முழு ஆற்றலையும் பெற்றவன் நீ
என்பதை உணர்ந்து தான் இந்தப் பணியை உன்னிடம் ஒப்படைக்கிறோம்.
இந்தக் கடிதத்துடன் இன்றிரவே நீ புறப்பட்டுச் செல்ல வேண்டும்!”
என்று கூறி அவன் செல்ல வேண்டிய இடம் பற்றியும், சந்திக்க
வேண்டிய நபர் பற்றியும் அவனிடம் கூறப்பட்டது.

அந்த இளைஞன் கடிதத்தையும், முகவரியையும் பெற்றுக் கொண்டான்;
மகிழ்ச்சியுடன் தன் வீடு சென்று தன் தாயாரிடம் விஷயத்தைக் கூறிக்
காலையில் புறப்படப் போவதாகக் கூறினான்.

அவன் வெற்றியுடன் முடித்து விட்டுத் திரும்புவான் என்று தான்
எண்ணினார்கள் மன்னரும், அப்பாஜியும். ஆனால், அவன் வேலையை
முடித்த மறுநாளே வர வேண்டியவன் வரவில்லை.

சந்தேகப்பட்ட அப்பாஜி அவனுடைய வீட்டிற்கு ஒரு பணியாளை
அனுப்பிப் பார்த்தார். அவன் உடல் நலமின்றி அவதிப் பட்டுக்
கொண்டிருப்பதாக அந்தப் பணியாள் வந்து கூறினான்.

மன்னர் பெரிதும் ஆச்சரியப்பட்டார். ஆனால், அப்பாஜி ஆச்சரியப்
படவில்லை. அவர் இதை எதிர்பார்த்ததுதான்.

“”இயற்கையுடன் ஒன்றி வாழ்ந்தவனை அங்கிருந்து பிரித்து வந்து
அவனுக்குச் சுகபோக வாழ்வு அளித்ததால், அவனால் குளிரையும்,
மழையையும் தாக்குப் பிடிக்க முடியவில்லை.

அவன் ஈரத் தரையில் படுத்து உறங்கியவன்தான்; மழைச்சாரலில்
நனைந்தவன்தான். அது ஒரு காலம்.

“”ஆனால், இப்போதோ… அவன் கட்டிலில் படுத்துச் சுகம் அனுபவிக்கத்
தொடங்கினான்; கம்பளிப் போர்வை போர்த்தி படுக்க ஆரம்பித்தான்.
கையையே தலையணையாக வைத்துப் படுத்தவன், நல்ல இலவம்
பஞ்சுத் தலையணை வைத்துப் படுக்க ஆரம்பித்தான்.

பழைய சோற்றை உண்டு வந்த அவன், இப்போது சூடுபறக்க
இட்டிலியும், வடையும் சாப்பிட ஆரம்பித்தான்; அதுமட்டுமின்றி,
நன்றாகப் பசியெடுத்த பின்னரே உண்டு வந்த அவன், இப்போது
நேரம் பார்த்துச் சாப்பிட ஆரம்பித்தான்.

“”கடைசியில் எல்லாமுமாகச் சேர்ந்து என்னவாயிற்று.
அவனுடைய நோய் எதிர்ப்புச் சக்தி முற்றிலும் அழிந்து விட்டது.
ஆம், அவனை விட்டு அந்த மகத்தான சக்தி சிறுகச் சிறுகச் சென்று
விட்டது. எனவே, துன்பம் அடைய ஆரம்பித்தான்!”

இவைகளை எல்லாம் உணர்ந்து கூறிய அப்பாஜியை, மன்னர்
கிருஷ்ண தேவராயர் பெரிதும் பாராட்டினார்.

பின்னர், அரண்மனை மருத்துவரை அழைத்து அந்த இளைஞனுக்கு
சிகிச்சையளிக்கக் கூறினர்.

அவனோ, தனக்கு எந்த மருந்துமே தேவையில்லையென்றும்
பழையபடியே இயற்கை வழி முறைகளைப் பின்பற்றப் போவதாகக்
கூறினான்; அவன் கூறியது போன்றே தன்னைக் குணப்படுத்திக்
கொண்டான்; மேலும், இயற்கையுடன் ஒன்றி வாழப் போவதாகவும்
உறுதியுடன் கூறி விட்டு தன் ஊருக்கேச் சென்றார்.

————————————
சிறுவர் மலரில் வந்த மூலக்
கதையின் சுருக்கம்

M.Saranya
M.Saranya
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2190
இணைந்தது : 26/08/2014

PostM.Saranya Sat Mar 28, 2015 12:31 pm

அருமையான கதை............



கொடுப்பதற்கும் பெறுவதற்கும் உரிய விலை மதிப்பில்லாத பரிசு அன்பு .

சுகபோக வாழ்வு W5td1pX3QFi1kBRhH0I3+Affection
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat Mar 28, 2015 11:48 pm

ரொம்ப அறுபுதமான கருத்துள்ள கதை, நாம் இயற்கையை விட்டு வெகுதூரம் விலகி வந்த தால் தான் நிறைய வியாதிகள் பெருகிவிட்டன புன்னகை..............பகிர்வுக்கு நன்றி ராம் அண்ணா !



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக