ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Today at 4:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 4:37 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by Anthony raj Today at 4:36 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Today at 4:29 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Today at 4:27 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Today at 4:23 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Today at 4:12 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:03 pm

» கருத்துப்படம் 05/07/2024
by mohamed nizamudeen Today at 3:54 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 3:34 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 3:18 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Today at 3:18 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 1:08 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:42 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 11:31 am

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 10:05 am

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 9:44 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 9:17 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 9:00 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Today at 8:53 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 8:41 am

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:55 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:30 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 6:35 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:01 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 5:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 1:56 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 4:47 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 4:46 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 4:42 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 4:39 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 4:37 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 4:33 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 4:31 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 4:31 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 4:30 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 7:19 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:31 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:29 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 1:03 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 8:48 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 7:17 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 5:47 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 5:45 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 5:44 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 5:43 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 5:42 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 5:41 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 5:29 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 3:23 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆடம்பரம்... வாழ்க்கையை தொலைக்கும் மாணவிகள், குடும்ப பெண்கள்!

4 posters

Go down

ஆடம்பரம்... வாழ்க்கையை தொலைக்கும் மாணவிகள், குடும்ப பெண்கள்! Empty ஆடம்பரம்... வாழ்க்கையை தொலைக்கும் மாணவிகள், குடும்ப பெண்கள்!

Post by சிவா Wed Mar 25, 2015 8:06 am

இன்று தனிமனித ஒழுக்கம் சீர்குலைந்து வருவதற்கு பல சம்பவங்களை சுட்டிக்காட்டலாம். எப்படியும் வாழலாம் என்ற சிந்தனை இன்றைய மக்களிடம் தலைதூக்கி உள்ளது. இதுவே மக்களை தவறான பாதைக்கு அழைத்துச் சென்று கொண்டு இருக்கிறது.

கோவை அவினாசி சாலையில் உள்ள நட்சத்திர ஓட்டலில் மார்ச் முதல் வாரம் காவல்துறையினர் நடத்திய சோதனையில் விபச்சார அழகிகளும், புரோக்கர்களும் பிடிப்பட்டனர். இதில் கோவையில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலைப்பார்க்கும் பெண் என்ஜினீயரும் சிக்கினார். அவரிடம் விசாரணை நடத்தியபோது 'தற்போது வாங்கும் சம்பளம் எனது ஆடம்பர வாழ்க்கைக்கு போதுமானதாக இல்லை. இதனால் இந்த தவறான தொழிலுக்கு வந்து உங்களிடம் மாட்டிக்கொண்டேன். இனிமேல் இந்த பக்கம் தலைவைத்து திரும்பிப் பார்க்க மாட்டேன்' என்று கண்ணீர் விட்டு அழுதுள்ளார்.
 

அடுத்து சிக்கிய பெண் பி.டெக் மாணவி. மதுரையை சேர்ந்த இவர், கோவையில் உள்ள தனியார் என்ஜினீயரிங் கல்லூரியில் படித்து வருகிறார். அப்போது, அதே கல்லூரியில் படிக்கும் ஒரு மாணவனை காதலித்துள்ளார். இருவரும் சந்தோஷமாக இருந்தப்போது மாணவிக்கு தெரியாமல் காதலன் அதை செல்போனில் வீடியோ எடுத்துள்ளான். இந்த வீடியோவை காண்பித்து மாணவியிடம் பணம் கேட்டு காதலன் மிரட்ட, வேறு வழியின்றி விபச்சாரத்தில் ஈடுபட்டுள்ளார் அந்த மாணவி. இதில் கிடைக்கும் பணத்தை காதலனுக்கு கொடுப்பதாக மாணவி சொன்னதும், காவல்துறையினருக்கே தலை சுற்றி இருக்கிறது. இந்தளவுக்கு தரம் தாழ்ந்து போயிருக்கும் இவர்கள் வெளியுலகிற்கு தெரிந்து விட்டார்கள். ஆனால் ஆடம்பர வாழ்க்கைக்காக  பல இடங்களில் குடும்ப பெண்கள், மாணவிகள் விபச்சாரத்தில் ஈடுபட்டு வருவது அதிர்ச்சி அளிப்பதாக உள்ளது.

கடந்த சில வாரங்களுக்கு முன்பு தாம்பரம் பகுதியில் நடந்த சம்பவம் இது: கணவன், மனைவிக்கு இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக மனைவி தாய் வீட்டுக்கு செல்கிறார். இந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி கணவன், விபச்சார அழகியை வீட்டுக்கு அழைத்து வந்து சந்தோஷத்தில் ஈடுபட்டு இருக்கிறார். நள்ளிரவில் வீட்டுக்குத் திரும்பிய மனைவி கதவை தட்டிய போது, தேள்கொட்டிய திருடனாக கணவனின் அந்தரங்க லீலை வெளிச்சத்துக்கு தெரியவந்தது. இதில் இன்னொரு காமெடி என்னவென்றால் விபச்சார அழகிக்கு பணம் கொடுப்பதில் ஏற்பட்ட பிரச்னைக்குக் காவல்துறையினர் தலையீட்டு தீர்வு கண்டுள்ளனர். இப்படி தமிழகம் முழுவதும் விபச்சார தடுப்பு பிரிவு காவல்துறையினரின் அதிரடி வேட்டையில் சிக்குபவர்களின் கதை ஒவ்வொன்றும் ஒவ்வொருவிதமாக இருக்கின்றன.

தென்மாவட்டத்தை சேர்ந்த விபச்சார அழகி ஒருவரின் கதை இது; கல்லூரியில் காதலித்தவனுடன் சென்னைக்கு வந்துள்ளார் இவர். திருமணமும் செய்து இல்லற வாழ்க்கையை இனிதே தொடங்கி இருக்கிறார்கள். உயிருக்கு உயிராய் காதலித்த காதலன், திருமணமான சில மாதங்களிலேயே கம்பியை நீட்டி விட்டார். தாய் வீட்டுக்கு செல்ல முடியாமல் தவித்த அவர், விபச்சார கும்பலிடம் சிக்கி இந்த தொழிலுக்குள் வந்து இருக்கிறார். இப்போது பெற்றோர் வீட்டிலிருந்து பார்ட் டைமாக இந்த தொழிலில் குடும்பத்தினருக்குத் தெரியாமல் ஈடுபட்டு வருதாக அவர் சொல்கிறார்.
 

முன்பெல்லாம் விபச்சாரத்தில் ஈடுபடுபவர்களை விபச்சார தடுப்பு பிரிவு காவல்துறையினர் எளிதில் கண்டறிந்து விடுவார்கள். ஆனால், இப்போது விபச்சாரம் நடப்பதை கூட ஹைடெக்காக நடத்த தொடங்கி விட்டனர் இந்த கும்பல். பங்களாக்களில் விபச்சாரம் நடந்தால் அந்த தகவல் தங்களுக்கு எளிதில் கிடைத்துவிடும் என்கிறார்கள் காவல்துறையினர். ஆனால் இப்போது எல்லாம் பாலியல் தொழில்களின் புகலிடமாக சில மசாஜ் சென்டர்கள் மாறி இருக்கின்றன. இதையும் காவல்துறையினர் மோப்பம் பிடித்து விட்டனர்.

காவல்துறையினரின் கண்காணிப்பு வளையத்துக்குள் இத்தகைய மசாஜ் சென்டர்கள் இருப்பதால் இங்கேயும் அந்த தொழில் அவ்வளவாக நடப்பதில்லை. இதனால் வீட்டுக்கே பெண்களை அனுப்பும் யுக்தியை விபச்சார புரோக்கர்கள் கையாளுகின்றனர். இது இந்த கும்பல் மீது நடவடிக்கை எடுக்க முடியாமல் காவல்துறையினர் திணறுகின்றனர்.  இன்னொரு புறம் பாலியல் தொழில் நடப்பது காவல்துறையினரில் சிலருக்கு தெரிந்தும் மாதந்தோறும் மாமூல் வருவதால் அவர்கள் எதையும் கண்டுகொள்ளாமலும் இருக்கிறார்கள்.

வறுமையில் வாடும் குடும்ப பெண்களை குறி வைத்து வேலை வாங்கித் தருவதாக கூறி விபச்சார புதைக்குழிக்குள் தள்ளிவிடுவதுண்டு. ஒரு முறை தவறு செய்துவிட்டு அதிலிருந்து மீள முடியாதவர்களும் இந்த கும்பலில் இருக்கிறார்கள். விலைமாதுக்களிடம் பாதுகாப்பற்ற உடலுறவால் எய்ட்ஸ் உள்ளிட்ட பாலின நோய்கள் அதிகம் பரவுவதாக கண்டறியப்பட்டுள்ளது. இதுகுறித்து விழிப்புணர்வும் ஏற்படுத்தப்பட்டு வருகிறது. பெரும்பாலும் விபச்சார வழக்குகளில் சிக்கும் பெண்கள் குடும்ப வறுமையின் காரணமாகவே இந்த தொழிலுக்கு வந்ததாக காவல்துறையினரிடமும், நீதிமன்றங்களிலும் வாக்குமூலம் கொடுக்கிறார்கள்.

திருடனாய் பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாததைப் போல தனிமனித ஒழுக்கத்தை கடைப்பிடிக்கும் போது மட்டுமே இதை தவிர்க்க முடியும். அதோடு ஒருத்தனுக்கு ஒருத்தி என்ற பண்பாட்டையும் மறக்கக் கூடாது.
 
-எஸ்.மகேஷ்


ஆடம்பரம்... வாழ்க்கையை தொலைக்கும் மாணவிகள், குடும்ப பெண்கள்! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

ஆடம்பரம்... வாழ்க்கையை தொலைக்கும் மாணவிகள், குடும்ப பெண்கள்! Empty Re: ஆடம்பரம்... வாழ்க்கையை தொலைக்கும் மாணவிகள், குடும்ப பெண்கள்!

Post by T.N.Balasubramanian Wed Mar 25, 2015 9:58 am

காதில் விழும் சில விஷயங்கள் நாராசம் .
வருங்காலத்தில் கன்னிக் கழியா கன்னிகள் காண்பது அரிதாகி விடும் .
கன்னிகளும் கவலை படபோவதில்லை 
கன்னிகளின் பெற்றோர்களும் கவலை படபோவதில்லை .
கட்டிக்க போகும் கணவன்மார்களும் கவலைப்பட போவதில்லை .
சமிபத்தில் ஒரு TV நிகழ்ச்சியில் ,
நிருபர் : (பெண்ணிடம் ) நீங்கள் மணமுடிக்கப் போகும் பிள்ளையை பற்றி ,ஏடாகூடமான செய்தி வந்தால் 
அதாவது திருமணத்திற்கு முன்பே அவர் பல பெண்களுடன் உடல் ரீதியாக தொடர்புகொண்டு இருந்தார் என தெரிந்தால் , நீங்கள் அவரை மணம்முடிப்பீரா , என்ற கேள்விக்கு அந்தப் பெண் ." தவறு செய்யாதவர்கள் யாரும் இல்லை . பெண்களிலும் ஈசி going அதிகம் உண்டு . சிலர்  விஷயங்கள் வெளி வருகிறது  சிலர் விஷயம் வெளி வருவதில்லை . என்னை பொருத்தவரையில் , மணம் முடிந்த பிறகு , உண்மையாக இருந்தால் போதும் .Experienced chap -no probs"  

பெரிய அதிர்ச்சி .
உலகம் மிகவும் மாறி விட்டது .
ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35031
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

ஆடம்பரம்... வாழ்க்கையை தொலைக்கும் மாணவிகள், குடும்ப பெண்கள்! Empty Re: ஆடம்பரம்... வாழ்க்கையை தொலைக்கும் மாணவிகள், குடும்ப பெண்கள்!

Post by யினியவன் Wed Mar 25, 2015 10:46 am

இன்று இவற்றில் ஈடுபடுத்துவதில் ஆண் பெண் பேதமில்லை.
இன்று இவற்றில் ஈடுபடுவதிலும் ஆண் பெண் பேதமில்லை.

ஒருவரின் இயலாமையை பயன்படுத்தி இதில் ஈடுபடவைப்பதே ஏற்பதற்கில்லை
இந்தக் கருத்து தான் ஆண் பெண் பேதமின்றி இன்று ஏற்புடயாதிகிவிட்டது

என்னவெல்லாம் நடக்க இருக்கிறதோ அது நடந்தே தீரும்...



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

ஆடம்பரம்... வாழ்க்கையை தொலைக்கும் மாணவிகள், குடும்ப பெண்கள்! Empty Re: ஆடம்பரம்... வாழ்க்கையை தொலைக்கும் மாணவிகள், குடும்ப பெண்கள்!

Post by ayyasamy ram Wed Mar 25, 2015 10:59 am

ஒருத்தனுக்கு ஒருத்தி என்ற பண்பாட்டை
நம்மை வழி நடத்தும் தலைவர்களில் சிலர்
கடைப்பிடிப்பதில்லை...
-
-தலைவனே அப்படி என்றால்
தொண்டன் என்ன ஆவான்..?!
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82799
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

ஆடம்பரம்... வாழ்க்கையை தொலைக்கும் மாணவிகள், குடும்ப பெண்கள்! Empty Re: ஆடம்பரம்... வாழ்க்கையை தொலைக்கும் மாணவிகள், குடும்ப பெண்கள்!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum