ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சாக்கே சாராயம்
by ayyasamy ram Today at 22:16

» நம்மிடமே இருக்கு மருந்து – நன்னாரி
by ayyasamy ram Today at 22:15

» நெஞ்சம் நிறைந்த நிறைமதியே
by ayyasamy ram Today at 22:05

» பருக்கைத் தேடும் காக்கைகள்
by ayyasamy ram Today at 22:04

» பொல்லாத காதலுக்கு…
by ayyasamy ram Today at 22:03

» அடியேன் பங்களிப்பு
by ayyasamy ram Today at 22:02

» நெஞ்சிலே நினைவு எதற்கு?
by ayyasamy ram Today at 22:01

» மரங்கொத்தி- புதுக் கவிதை
by ayyasamy ram Today at 21:59

» கருத்துப்படம் 12/09/2024
by mohamed nizamudeen Today at 21:53

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 20:57

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 20:39

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 20:29

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 20:12

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 17:58

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 16:09

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 15:28

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 14:46

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 14:04

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 13:41

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 12:49

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:23

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:13

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:04

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 0:51

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 23:22

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 23:16

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 23:11

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 23:06

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 20:49

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 20:38

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 19:25

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 19:10

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:52

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 0:39

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue 10 Sep 2024 - 23:11

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue 10 Sep 2024 - 23:06

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue 10 Sep 2024 - 23:01

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue 10 Sep 2024 - 22:59

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue 10 Sep 2024 - 22:56

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue 10 Sep 2024 - 22:53

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue 10 Sep 2024 - 21:59

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue 10 Sep 2024 - 21:05

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue 10 Sep 2024 - 19:46

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue 10 Sep 2024 - 14:50

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon 9 Sep 2024 - 23:48

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon 9 Sep 2024 - 21:22

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon 9 Sep 2024 - 20:48

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon 9 Sep 2024 - 18:25

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon 9 Sep 2024 - 9:29

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon 9 Sep 2024 - 9:28

நிகழ்நிலை நிர்வாகிகள்

தமிழக பட்ஜெட் முக்கிய அம்சங்கள்!

2 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

தமிழக பட்ஜெட் முக்கிய அம்சங்கள்! Empty தமிழக பட்ஜெட் முக்கிய அம்சங்கள்!

Post by சிவா Wed 25 Mar 2015 - 14:03

சென்னை: மத்திய அரசு நிதியை குறைத்துவிட்டது என்று 2015-16 ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்து உரையாற்றும்போது முதல்வர்: ஓ.பன்னீர்செல்வம் குற்றஞ்சாட்டி உள்ளார்.

தமிழக சட்டப்பேரவையில் பட்ஜெட் கூட்டத் தொடர் இன்று காலை 10 மணிக்கு தொடங்கியது. இதில், முதல்வரும் நிதியமைச்சருமான ஓ.பன்னீர் செல்வம் 2015-2016 ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்து உரையாற்றினார்.

அப்போது, ''மத்திய அரசிடம் இருந்து அதிக நிதி பெற முடியும் என்ற நம்பிக்கை தகர்ந்துவிட்டது. மத்திய அரசு மூலம் செயல்படுத்தப்படும் 24 திட்டங்களுக்கு நிதி குறைக்கப்பட்டுள்ளன. 14வது நிதி ஆணையம் தமிழகத்திற்கு பெரும் அநீதியை இழைத்து விட்டது.

மேகதாதுவில், கர்நாடகா அணை கட்ட எந்த முயற்சி எடுத்தாலும் அதை தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும். மாநிலத்தின் உரிமைகளை நிலைநாட்டிட அரசு முழு மூச்சாக செயல்படும். சூரியஒளி சக்தி உள்ளிட்ட புதுப்பிக்கத்தக்க மின்சார உற்பத்தியில் தமிழகம் முதலிடம்.

மேலும், மத்திய அரசின் பல்வேறு நிதி உதவிகள் வருங்காலங்களில் கிடைக்காத நிலை ஏற்பட்டுள்ளது. மத்திய அரசிடம் இருந்து தமிழகத்திற்கு கிடைத்து வந்த பங்கு குறைக்கப்பட்டுள்ளது. இதனால் ரூ.1,137 கோடி வருவாய் இழப்பு ஏற்பட வாய்ப்புள்ளது" என்று குற்றஞ்சாட்டி உரையாற்றினார்.

தமிழக சட்டப்பேரவையில் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் 2015-16 ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்து உரையாற்ற தொடங்கியதும் தி.மு.க. உறுப்பினர்கள் பல்வேறு பிரச்னைகள் குறித்து விவாதிக்க அனுமதி கேட்டு அமளியில் ஈடுபட்டு வெளிநடப்பு செய்துள்ளனர்.

மேலும் இடை நீக்கம் செய்யப்பட்டுள்ள தே.மு.தி.க. உறுப்பினர்கள் சட்டப்பேரவை வளாகத்தில் கருப்பு சட்டை அணிந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பட்ஜெட் சிறப்பம்சங்கள்...

* 40.3 கோடி மனுக்களுக்கு அம்மா திட்டம் மூலம் நிவாரணம்.

* பொதுச்சேவை மையங்கள் மூலம் அரசின் சேவைகள் மக்களைச் சென்றடைய ஏற்பாடு.

* அம்மா திட்டம் மூலம் 43.9 லட்சம் மனுக்கள் பெறப்பட்டு தீர்வு தரப்பட்டுள்ளது.

* தமிழ்த்துறையின் வளர்ச்சிக்கு ரூ 46.77 கோடி நிதி ஒதுக்கீடு.

* 17,18,19ம் நூற்றாண்டைச் சேர்ந்த 120 அரிய புத்தகங்கள் இலக்க முறையில் கொண்டு வரப்பட்டுள்ளன.

* சாலை விபத்துகளை தடுக்க உயர் முன்னுரிமை.

* சாலை விபத்துகளை தவிர்க்க கூடுதலாக  ரூ.165 கோடி ஒதுக்கீடு.

* சிறைத்துறைக்கு ரூ 227.03 கோடி நிதி ஒதுக்கீடு.

* சிறைச்சாலை கைதிகளுக்கு தொழிற்பயிற்சி அளிக்க ரூ10.78 கோடி ஒதுக்கீடு.

* தீயணைப்புத் துறையை நவீனப்படுத்த ரூ10.78 கோடி நிதி ஒதுக்கீடு.

* காவல்துறைக்கு ரூ5,568 கோடி நிதி ஒதுக்கீடு.

* நீதித்துறைக்கு ரூ 809.70 கோடி ஒதுக்கீடு.

* 169 புதிய நீதிமன்றங்கள் அமைக்க ஒப்புதல்.

* கிராமப்புற வறுமை ஒழிப்பின் கீழ் பயனாளிகளை அடையாளம் காணும் பணி விரைவில்  முடியும்.

* தேசிய நகர்ப்புற வாழ்வாதார திட்டம் ரூ 250 கோடி.

* தமிழக வாழ்வாதர திட்டத்திற்கு ரூ 107 கோடி ஒதுக்கீடு

* பயனாளிகளுக்கு மானியங்களை நேரடியாக அளிக்கும் திட்டம் சிறப்பாக செயல்படுகிறது.

* சமூக நலத்திட்ட உதவித்தொகை, பயனாளிகளின் வங்கிக் கணக்கில் நேரடியாக செலுத்தப்படுகிறது.

* விவசாயிகளுக்கு பயிர்க் கடனாக ரூ.5,500 கோடி வழங்க இலக்கு.

* ரூ.4,955 கோடியாக இருந்த பயிர் கடன்கள் ரூ.5.500 கோடியாக அதிகரிப்பு.

* சாதாரண நெல்லுக்கு குவிண்டால் ரூ.50, சன்னரக நெல்லுக்கு குவிண்டால் ரூ.70 மானியம்.

* விவசாயிகளுக்கு சரியான நேரத்தில் உரங்கள் கிடைக்க ரூ.150 கோடி ஒதுக்கீடு.

* நெல்லுக்கான மாநில அரசின் உற்பத்தி ஊக்கத் தொகை ரூ.200 கோடி நிதி ஒதுக்கீடு.

* விவசாயிகளுக்கு கடன்கள் வட்டின்றி வழங்கப்படும்.

* தோட்டக்கலை பயிர்ப் பரப்பு 25.9 லட்சம் ஏக்கராக அதிகரிப்பு.

* விலையில்லா ஆடுகள், பசுக்கள் வழங்க ரூ.241 கோடி நிதி ஒதுக்கீடு.

* 12,000 கறவை பசுக்கள், 6 லட்சம் செம்மறி ஆடுகள் வழங்க திட்டம்.

* 25 கால்நடை மருந்தகங்கள் புதிதாக தரம் உயர்த்தப்படும்.

* கைத்தறை மற்றும் நெசவுத்துறைக்கு 499.16 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு.

* கைத்தறி விற்பனையை ஊக்குவிக்க தள்ளுபடி மானியத் திட்டத்திற்கு ரூ.78.45 கோடி.

* தமிழகத்தில் உள்ள 113 அணைகளை புனரமைக்க ரூ.450.13 கோடி ஒதுக்கீடு.

* நீர்ப்பாசத் துறைக்கு ரூ.3,727.37 கோடி நிதி ஒதுக்கீடு.

* நதிநீர் இணைப்புத் திட்டங்களுக்கு ரூ.253.5 கோடி நிதி ஒதுக்கீடு.

* மின்சாரத் துறைக்கு ரூ.13,586 கோடி நிதி ஒதுக்கீடு.

* 2015-16ம் ஆண்டில் மின்சார மானியத்திற்கான ஒதுக்கீடு ரூ.7,136 கோடியாக உயர்வு.

* நெடுஞ்சாலைத் துறைக்கு 8,828 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு.

* ஒருங்கிணைந்த சாலை கட்டமைப்பு மேம்பாட்டு திட்டத்திற்கு ரூ.2,800 கோடி ஒதுக்கீடு.

* 427 கி.மீ. சாலைகள் ரூ.2,414 கோடியில் இரு வழித்தட சாலைகளாக தரம் உயர்த்தப்படும்.

* கிராமப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு ரூ.5,422.08 கோடி நிதி.

* 6 ஆயிரம் கி.மீ. ஊரக உள்ளாட்சி அமைப்புச் சாலைகளை மேம்படுத்த ரூ.1,400 கோடி நிதி.

* வரும் நிதியாண்டில் 2 லட்சம் இளைஞர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சிகள்.

* திறன் மேம்பாட்டு பயிற்சிக்கான நிதி ரூ.100 கோடியில் இருந்து ரூ.150 கோடியாக உயர்வு.

* சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்துறைக்கு ரூ.365.91 கோடி நிதி ஒதுக்கீடு.

* தகவல் தொழ்ல்நுட்பவியல் துறைக்கு ரூ.82.94 கோடி நிதி ஒதுக்கீடு.

* சூரிய ஒளி பசுமை வீடுகள் திட்டத்திற்கு ரூ.1,260 கோடி ஒதுக்கீடு.

* மாணவர்களுக்கான இலவச பேருந்து பயன மானியத்திற்கு ரூ.480 கோடி.

* டீசல் மாணியம் ரூ.500 கோடி ஒதுக்கீடு.

* மக்கள் நல்வாழ்வுக்கு நிதி ஒதுக்கீடு ரூ.8,245 கோடியாக உயர்வு

* தேசிய சுகாதார இயக்க திட்டத்திற்கு ரூ.1,342.67 கோடி

* முதல்வரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டத்திற்கு ரூ.781 கோடி நிதி ஒதுக்கீடு.

* கர்ப்பிணிகளுக்கான மகப்பேறு உதவித் திட்டத்திற்கு ரூ.668.32 கோடி ஒதுக்கீடு.

* குழந்தைகள் நல பரிசு பெட்டக திட்டத்திற்கு ரூ.50 கோடி.

* மகளிர் சுகாதர திட்டத்திற்கு ரூ.60.28 கோடி நிதி ஒதுக்கீடு.

* மெட்ரோ ரயில் பணிகளை உரிய நேரத்தில் நிறைவேற்ற ரூ.615.78 கோடி நிதி ஒதுக்கீடு.

* 107 தொடக்கப் பள்ளிகள் நடுநிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்தப்படுகிறது.

* அன்னதான திட்டம் மேலும் 206 கோயில்களுக்கு விரிவு.

* 250 பழம்பெரும் கோயில்களை புனரமைக்க ரூ.90 கோடி நிதி ஒதுக்கீடு.

* பெண் குழந்தை பாதுகாப்புத் திட்டத்திற்கு ரூ.140.12 கோடி ஒதுக்கீடு.

* ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்டத்திற்கு ரூ.1,575.36 கோடி நிதி ஒதுக்கீடு.

* பள்ளிக் குழந்தைகளுக்கு பல்வகை கலவை சாதம் வழங்க ரூ.1,470.53 கோடி.

* சுற்றுலாத் துறைக்கு ரூ.183.14 கோடி

* அண்ணாமலைப் பல்கலைக் கழகத்திற்கு ரூ.110.57 கோடி நிதி உதவி.

* பிற பல்கலைக் கழகங்களுக்கு ரூ.868.40 கோடி நிதி உதவி.

* பள்ளிக்கல்வித் துறைக்கு ரூ.20,936 கோடி நிதி ஒதுக்கீடு.

* உயர்கல்வித் துறைக்கு ரூ.3,696.82 கோடி நிதி.

* விலையில்லா பாடப்புத்தகங்கள், நோட்டுகள் உள்ளிட்டவை வழங்க நிதி ரூ.1,037.85 கோடி

* 6.62 லட்சம் மாணவ, மாணவியருக்கு விலையில்லா மிதிவண்டி வழங்க ரூ.219.50 கோடி நிதி ஒதுக்கீடு.

* ரூ.450.96 கோடி நிதியில் பள்ளிக் கட்டமைப்பு வலுப்படுத்த திட்டம்.


தமிழக பட்ஜெட் முக்கிய அம்சங்கள்! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

தமிழக பட்ஜெட் முக்கிய அம்சங்கள்! Empty Re: தமிழக பட்ஜெட் முக்கிய அம்சங்கள்!

Post by சிவா Wed 25 Mar 2015 - 18:48

மீண்டும் முதல்வராக பதவியேற்பார் ஜெயலலிதா: பட்ஜெட் உரையில் ஓபிஎஸ் உறுதி

தமிழக மக்களுக்காக தன் வாழ்வையே அர்ப்பணித்து தியாக வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருக்கும் ஜெயலலிதா, மீண்டும் முதலமைச்சராகப் பதவியேற்று, மாநிலத்தை புகழின் உச்சிக்கு கொண்டு செல்லும் நாள் வெகுதொலைவில் இல்லை" என்று பட்ஜெட் உரையில் தமிழக முதல்வரும், நிதியமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் கூறினார்.

மேலும், ஊழல் வழக்கில் தண்டனை பெற்ற ஒருவரை சட்டப்பேரவையில் புகழ்ந்து பேசக்கூடாது என எதிர்க்கட்சிகள் பலமுறை கண்டனம் தெரிவித்திருந்தும், இன்றைய பட்ஜெட் உரையிலும் ஜெயலலிதாவை புகழ்வது நீடித்தது.

2015-16 நிதி ஆண்டுக்கான பட்ஜெட்டை தமிழக முதல்வரும் நிதி அமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்தார். பட்ஜெட் உரையை திருக்குறளுடன் துவக்கினார் ஓ.பன்னீர்செல்வம். நாலடியாரை மேற்கோள்காட்டி உரையை நிறைவு செய்தார்.

திருக்குறள் முதல் ஓ.பி.எஸ்.-சின் குரல் வரை அனைத்தும் அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவை புகழும் வகையில் கவனமாக தேர்வு செய்யப்பட்டு பட்ஜெட் உரையில் புகுத்தப்பட்டிருந்தது.

பட்ஜெட் முன்னுரையில் 6 முறை, முடிவுரையில் 4 முறை என மொத்தம் 10 முறை மாண்புமிகு புரட்சித்தலைவி அம்மா என்ற சொற்றொடர் இடம் பெற்றிருந்தது. அதுதவிர பட்ஜெட் அறிவிப்புகள் இடைஇடையேயும் ஜெயலலிதாவை புகழும் வார்த்தைகள் இடம்பெற்றிருந்தன.

"அஞ்சாமை ஈகை அறிவூக்கம் இந்நான்கும் எஞ்சாமை வேந்தர்க்(கு) இயல்பு" (குறள் 382). இந்த குறளை வாசித்தே பன்னீர்செல்வம் பட்ஜெட் உரையை துவக்கினார்.

"ஜெயலலிதாவின் நல்லாசியுடன், 2015-2016 ஆம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையை இப்பேரவையின் முன் வைக்க விழைகிறேன். தொடர்ந்து ஐந்தாவது முறையாக இந்த அரசின் நிதிநிலை அறிக்கையை சமர்ப்பிக்கும் அரிய வாய்ப்பினை அளித்தமைக்காக அவருக்கு நான் என்றென்றும் நன்றிக்கடன்பட்டுள்ளேன்" என குறிப்பிட்டார்.


தமிழக பட்ஜெட் முக்கிய அம்சங்கள்! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

தமிழக பட்ஜெட் முக்கிய அம்சங்கள்! Empty Re: தமிழக பட்ஜெட் முக்கிய அம்சங்கள்!

Post by சிவா Wed 25 Mar 2015 - 18:48



தமிழக அரசு சாதனை:

கடந்த மூன்றரை ஆண்டுகளில் ஜெயலலிதாவின் தலைமையின் கீழ், தமிழ்நாடு அனைத்து துறைகளிலும் பல வியத்தகு சாதனைகளைப் படைத்துள்ளது. அதற்கு, காவேரி நடுவர்மன்றத்தின் இறுதி ஆணையை மத்திய அரசிதழில் இடம்பெறச் செய்தது; முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 142 அடியாக உயர்த்தும் வகையில் சாதகமான தீர்ப்பினை உச்ச நீதிமன்றத்தில் பெற்றது; மாநிலத்தின் மின் உற்பத்தித் திறனைப் பெருக்கி, முன் எப்போதும் இல்லாத அளவிற்கு உயர்த்தி, மின்சக்தித் துறையில் காணப்பட்ட மின்தேவைக்கும் உற்பத்திக்குமான இடைவெளியைக் குறைத்தது போன்றவற்றை சான்றாக குறிப்பிட்டார்.

தொலைநோக்குத் திட்டம் 2023:

உயர் பொருளாதார வளர்ச்சியை அடைந்து மக்களுக்கு அதிக வளம் சேர்த்திடும் வகையில், தமிழ்நாட்டை ஒரு முன்னணி மாநிலமாக மாற்றிடும் உயர்ந்த நோக்கத்துடன் ஜெயலலிதா வெளியிடப்பட்ட தொலைநோக்குத் திட்டம் 2023 ஒரு முன்னோக்கு முயற்சியாக வரலாற்றில் நிச்சயம் நிலைபெறும்.

இந்த அரசு அனைத்துத் துறைகளிலும் வளர்ச்சியை ஊக்குவிக்கும் விதமாக பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. கல்வி, மக்கள் நல்வாழ்வு போன்ற சமூகநலன் சார்ந்த துறைகளுக்கு அதிக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு வியத்தகு பல சாதனைகள் படைக்கப்பட்டுள்ளன.

சமச்சீரான பொருளாதார வளர்ச்சியை உறுதி செய்யும் வகையில், முன் எப்போதும் இருந்திராத அளவிற்கு நலத் திட்டங்கள் விரிவுபடுத்தப்பட்டுள்ளன. இத்தகைய பல்வேறு மக்கள் நலத் திட்டங்கள் மூலமாக ஏழை எளியோரின் வாழ்வாதாரப் பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. கட்டமைப்பை மேம்படுத்தி வேளாண் மற்றும் உற்பத்திசார் துறைகளில் அதிக முதலீடுகள் செய்வதன் மூலமாக பொருளாதார வளர்ச்சியை உயர்த்துவது; சமூக நலன் சார்ந்த பணிகள் மூலம் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவது; உறுதியான சமூக நல பாதுகாப்புத் திட்டங்களின் மூலம் ஏழை எளியோரின் வாழ்வாதாரத்தைப் பாதுகாப்பது என்ற இந்த அரசின் மும்முனை நடவடிக்கைகள் தொடரும்.


தமிழக பட்ஜெட் முக்கிய அம்சங்கள்! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

தமிழக பட்ஜெட் முக்கிய அம்சங்கள்! Empty Re: தமிழக பட்ஜெட் முக்கிய அம்சங்கள்!

Post by சிவா Wed 25 Mar 2015 - 18:49


வளர்ச்சிப் பாதையில் தமிழகம்

4 ஆண்டுகளுக்கு முன்னர் ஜெயலலிதா ஆட்சிப் பொறுப்பை ஏற்றபோது, இந்த மாநிலத்தின் நிர்வாகம் உருக்குலைந்து இருந்ததாக குறிப்பிட்ட பன்னீர்செல்வம், தனது மதிநுட்பத்தல் துரிதமாக செயல்பட்டு, தமிழ்நாட்டை மீண்டும் வளர்ச்சிப் பாதைக்குக் ஜெயலலிதா கொண்டு வந்தததாக கூறினார். கடந்த ஆண்டிலிருந்து உலக அளவிலும், தேசிய அளவிலும் ஏற்பட்ட பொருளாதார வீழ்ச்சி, நமக்கு கடுமையான பாதிப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

முதல்வராகும் நாள் வெகுதொலைவில் இல்லை:

பட்ஜெட் முடிவுரையில், ஜெயலலிதா மீண்டும் முதலமைச்சராகப் பதவியேற்று, இந்த பேரவைக்கு வந்து நம்மையும் இந்த அரசையும் மிகுந்த ஆற்றலுடனும், அர்ப்பணிப்பு உணர்வுடனும் வழி நடத்தும் நாள் வெகுதொலைவில் இல்லை என முதல்வர் பன்னீர்செல்வம் தெரிவித்தார்.

பட்ஜெட் உரை நிறைவுறும் தருணத்தில் நாலடியாரை மேற்கோள் காட்டி அவர் கூறியதாவது, "இந்த அரசின் உயிராகவும், உணர்வாகவும் உள்ள எங்களின் கருணை மிகுந்த தலைவி, இந்த உன்னத கருத்துக்களையே எங்களின் செயல்பாட்டிற்கான கொள்கையாக வகுத்துத் தந்துள்ளார். அதனால்தான், இந்த அரசு கடினமான நிதிச் சூழ்நிலைகளை எதிர்கொண்டுள்ள போதிலும், ஏழை எளிய மக்களின் நலன் காக்கும் பல்வேறு திட்டங்களை முனைந்து செயல்படுத்துவதில் சிறப்புக் கவனம் செலுத்தி வருகிறது.

தமிழக மக்களின் நலனையும், தமிழ்நாட்டின் முன்னேற்றத்தையும் மட்டுமே லட்சியமாகக் கொண்டு, எவ்வித எதிர்பார்ப்பும் இன்றி, தமிழக மக்களுக்காக தன் வாழ்வையே அர்ப்பணித்து தியாக வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருக்கும் அவரது வழிகாட்டுதலின்படி இந்த நிதிநிலை அறிக்கையின் ஒவ்வொரு சொல்லும் அதற்கு அடிப்படையாக ஒவ்வொரு சிந்தனையும் அமைக்கப்பட்டுள்ளது என்பதை இந்த பேரவைக்கு தெரிவிப்பதில் மிகவும் பெருமை அடைகிறேன்.

அவர் காட்டும் வழியில் அயராது பயணிக்கும் அதே வேளையில், மீண்டும் ஜெயலலிதா முதலமைச்சராகப் பதவியேற்று, இந்த பேரவைக்கு வந்து நம்மையும் இந்த அரசையும் மிகுந்த ஆற்றலுடனும், அர்ப்பணிப்பு உணர்வுடனும் வழி நடத்தி மாநிலத்தை புகழின் உச்சிக்கு கொண்டு செல்லும் நாள் வெகுதொலைவில் இல்லை என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன்" என பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.


தமிழக பட்ஜெட் முக்கிய அம்சங்கள்! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

தமிழக பட்ஜெட் முக்கிய அம்சங்கள்! Empty Re: தமிழக பட்ஜெட் முக்கிய அம்சங்கள்!

Post by சிவா Wed 25 Mar 2015 - 18:50

நடப்பு ஆண்டு முதல் சென்னை மெட்ரோ ரயில் சேவை: தமிழக பட்ஜெட்டில் அறிவிப்பு

இந்த ஆண்டு முதல் சென்னை மெட்ரோ இரயில் திட்டம் படிப்படியாக செயல்பாட்டிற்கு கொண்டுவரப்படும் என்று தமிழக பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டது.

2015-16-க்கான தமிழக பட்ஜெட்டை இன்று தாக்கல் செய்த முதல்வரும், நிதியமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் இது தொடர்பாக வெளியிட்ட அறிவிப்பு:

இந்த ஆண்டு முதல் சென்னை மெட்ரோ ரயில் திட்டம் படிப்படியாக செயல்பாட்டிற்கு கொண்டுவரப்படும். இதுவரை கடன் மற்றும் பங்கு மூலதன உதவியாக 3,105.82 கோடி ரூபாயை மாநில அரசு அளித்து தன்னுடைய பங்களிப்பை முழுமையாக நிறைவேற்றியுள்ளது.

2015-2016 ஆம் ஆண்டு வரவு-செலவுத் திட்டத்தில் இப்பணிகளை உரிய நேரத்தில் நிறைவேற்றுவதற்காக 615.78 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இத்திட்டத்திற்கு மத்திய அரசு கடனாகவும், பங்கு மூலதன உதவியாகவும் ஏற்கனவே அளிக்கவேண்டியுள்ள 1,498.74 கோடி ரூபாய் நிலுவைத் தொகையை விரைவில் வழங்கும் என நாங்கள் நம்புகிறோம்.


தமிழக பட்ஜெட் முக்கிய அம்சங்கள்! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

தமிழக பட்ஜெட் முக்கிய அம்சங்கள்! Empty Re: தமிழக பட்ஜெட் முக்கிய அம்சங்கள்!

Post by சிவா Wed 25 Mar 2015 - 18:50

அம்மாவில் ஆரம்பித்து அம்மாவிலேயே முடிந்த பூஜ்ஜிய பட்ஜெட்: இளங்கோவன்

2015- 16ம் ஆண்டுக்கான தமிழக நிதிநிலை அறிக்கை 'அம்மாவில் ஆரம்பித்து, அம்மாவிலேயே முடிந்திருக்கிறது'. இந்த நிதிநிலை அறிக்கையை பொறுத்தவரை பூஜ்ஜியம் தான் என்று தமிழக காங்கிரஸ் தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் தெரிவித்துள்ளார்.

இது குறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், '' தமிழகத்தின் முதலமைச்சராக கருதப்படுகிற ஓ. பன்னீர்செல்வம் நிதிநிலை அறிக்கை என்றபோர்வையில் மூச்சுக்கு மூச்சு அம்மா, அம்மா என்று துதிபாடி மகிழ்ந்திருக்கிறார். இந்தியாவிலேயே எந்த நிதியமைச்சரும் இவ்வளவு துதிபாடி நிதிநிலை அறிக்கையை சமர்ப்பித்திருக்க மாட்டார்கள்.

மத்திய அரசின் வருவாயில் மாநிலங்களுக்கு பகிர்ந்தளிக்கப்படும் நிதியின் பங்கு 32 சதவீதத்திலிருந்து 42 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளதாக கூறி, வரவேற்பு அறிக்கை வெளியிட்ட ஓ. பன்னீர்செல்வம் இன்றைக்கு மத்திய அரசு வழங்க வேண்டிய நிதியை வழங்கவில்லை என்று ஒப்பாரி வைப்பது ஏனென்று தெரியவில்லை.

டெல்லி மாநிலங்களவையிலே மத்திய அரசுக்கு ஆதரவு, நிதிநிலை அறிக்கையிலே ஒப்பாரி என்று இரட்டை வேடம் போடுகிற அதிமுக வின் நிதிநிலை அறிக்கையில் உருப்படியான திட்டங்கள் எதுவும் இல்லை. நிதிநிலை அறிக்கையில் கூறப்பட்டுள்ளபடி தமிழக அரசின் மொத்த நிலுவைக் கடன் 2 லட்சத்து 11 ஆயிரத்து 483 கோடி ரூபாய்.

பொதுத்துறை நிறுவனங்கள் கடனையும் சேர்த்தால் 4 லட்சம் கோடி ரூபாயைத் தாண்டி, அதல பாதாளத்தில் தமிழக அரசின் நிதி நிலைமை விழுந்து கிடக்கிறது. தமிழக மக்கள் அனைவரும் கடனாளியாக ஆக்கப்பட்டிருக்கிறார்கள். தமிழகத்தை தூக்கி நிறுத்துவதற்கு எந்தவிதமான அறிகுறியும் தற்போது தெரியவில்லை. கிட்டத்தட்ட தமிழக அரசு திவாலான நிலையில் சென்று கொண்டிருக்கிறது. இதை யாராலும் காப்பாற்ற முடியாது.

தமிழகத்தில் வேலை வாய்ப்பு அலுவலகத்தில் படித்த இளைஞர்கள் 85 லட்சம் பேர் பதிவு செய்து காத்திருக்கிறார்கள். அவர்களுக்கு வேலை வாய்ப்பு கொடுக்கிற எந்த திட்டமும் இல்லை. தமிழகத்தில் பெருகிவிட்ட லஞ்ச லாவண்யத்தை ஒழிப்பதற்கு எந்த வழிமுறையும் இல்லை. நாள்தோறும் நாளேடுகளில் இன்றைய நிலவரம் என்ற தலைப்பில் ஆதாயத்திற்காக படுகொலைகள், வீட்டின் பூட்டை உடைத்து திருட்டு, ஆள் கடத்தல், தாலிப் பறிப்பு போன்ற குற்றங்கள் செய்தியாக வெளிவந்து கொண்டிருக்கின்றன.

விவசாயத்திற்கு அடுத்தபடியாக உள்ள நெசவு தொழிலுக்கு ஆதரவாக எந்த திட்டமும் தமிழக அரசிடம் இல்லை.

ஏற்கனவே நான் கூறியபடி, இந்த நிதிநிலை அறிக்கை 'அம்மாவில் ஆரம்பித்து, அம்மாவிலேயே முடிந்திருக்கிறது”. இந்த நிதிநிலை அறிக்கையை பொறுத்தவரை பூஜ்ஜியம் தான்.’’ என்று ஈவிகேஎஸ் இளங்கோவன் தெரிவித்துள்ளார்.


தமிழக பட்ஜெட் முக்கிய அம்சங்கள்! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

தமிழக பட்ஜெட் முக்கிய அம்சங்கள்! Empty Re: தமிழக பட்ஜெட் முக்கிய அம்சங்கள்!

Post by சிவா Wed 25 Mar 2015 - 18:51

தமிழ்மொழி வளர்ச்சிக்காக ரூ.46.77 கோடி ஒதுக்கீடு

தமிழ்மொழி வளர்ச்சிக்காக 46.77 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக சட்டப்பேரவையில் 2015-16 நிதியாண்டுக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்த தமிழக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அறிவித்தார்.

பேரவையில் அவர் பட்ஜெட் உரையை வாசித்தபோது, "கடந்த நான்கு ஆண்டுகளில் தமிழ்மொழி வளர்ச்சிக்காக அரசு 135.93 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்துள்ளது.

உலகெங்கும் வாழ்ந்துவரும் தமிழர்களுக்கு தரப்படுத்தப்பட்ட கல்வித் தொகுப்புகள், எண்முறை நூலகம், கல்வி முறைகள் ஆகியவற்றை அளித்து தமிழ் இணையக் கல்விக் கழகம் சிறந்த சேவையாற்றி வருகிறது.

13,327 பக்கங்கள் கொண்ட தமிழ்ச் சொல் இலக்கண அகராதியை எண்முறைப்படுத்தி, இணையத்தில் வழங்கிடுவதற்கான பெரும் முயற்சி ஒன்றையும் இந்நிறுவனம் மேற்கொண்டு வருகிறது.

17, 18 மற்றும் 19 ஆம் நூற்றாண்டுகளில் வெளியிடப்பட்ட 170 முக்கிய புத்தகங்கள் இலக்கமுறையில் (digitised) தயாரிக்கப்பட்டு உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனத்தால் வெளியிடப்பட்டுள்ளன. வரும் நிதியாண்டில் தமிழ்மொழி வளர்ச்சிக்காக 46.77 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது" என்றார்.


தமிழக பட்ஜெட் முக்கிய அம்சங்கள்! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

தமிழக பட்ஜெட் முக்கிய அம்சங்கள்! Empty Re: தமிழக பட்ஜெட் முக்கிய அம்சங்கள்!

Post by சிவா Wed 25 Mar 2015 - 18:51

காகித அறிக்கையைப் புறக்கணித்து வெளிநடப்பு செய்கிறோம்: ஸ்டாலின்

தகுதி இழந்துவிட்ட அரசால் விளம்பரத்துக்காக வைக்கப்படும் வெறும் காகித அறிக்கையைப் புறக்கணித்து வெளிநடப்பு செய்கிறோம் என திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

2015-16 நிதியாண்டுக்கான தமிழக பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்பட்டது. முன்னதாக, அவையில் முக்கியப் பிரச்சினைகள் குறித்து விவாதிக்க அனுமதிக்குமாறு அவையில் திமுகவினர் கோரிக்கை வைத்தனர். ஆனால் அதற்கு அவைத்தலைவர் அனுமதிக்கவில்லை இதனையடுத்து திமுகவினர் அவையில் இருந்து வெளிநடப்புச் செய்தனர்.

அவையில் மு.க.ஸ்டாலின் வாசிக்கவிருந்த அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அதில், "2015-2016ஆம் ஆண்டுக்கான தமிழக அரசின் நிதி நிலை அறிக்கை இன்று தாக்கலாகும் நிலையில், அ.தி.மு.க. அரசின் நிதி நிலைமை எவ்வாறு உள்ளது என்பதை தமிழ்நாட்டின் ஏடுகள் பல, கடந்த சில வாரங்களாகத் தொடர்ந்து எழுதி வருகின்றன.

சீர் குலைந்து விட்ட நிர்வாகம், சிதைந்து விட்ட நிதி மேலாண்மை ஆகியவற்றினால், அ.தி.மு.க. அரசின் நிதி நிலை, நெருக்கடி வலையில் சிக்குண்டு விட்டது; ஆழமான கடன்களில் மூழ்கித் திவாலாகும் கட்டத்தை எட்டி விட்டது. மின்சார வாரியத்தின் கடன் மட்டும் 72 ஆயிரம் கோடி ரூபாய்; போக்குவரத்துக் கழகங்களில் நிதி இழப்பு 2 ஆயிரம் கோடி ரூபாய்; பொதுத் துறை நிறுவனங்களின் கடன்களையும் சேர்த்து மொத்தக் கடன் 4 லட்சம் கோடி ரூபாய்.

செயலற்ற அரசு என்பதால், அ.தி.மு.க. அரசு கடன்களைத் திருப்பிச் செலுத்துவதற்கான வழிவகைகளைத் தேடும் திறனின்றித் திண்டாடுகிறது. தமிழகத்திற்கு மத்திய பா.ஜ.க. அரசின் நிதி ஒதுக்கீடு வெகுவாகக் குறைக்கப்பட்டு விட்டது. உலக வங்கியோ, ஆசிய வளர்ச்சி வங்கியோ தமிழக அரசுக்கு நிதியேதும் வழங்கிடத் தயக்கம் காட்டுகின்றன.

தொழில் உற்பத்தி வளர்ச்சியில் தமிழகத்திற்குக் கிடைத்திருப்பது, கடைசி இடமான 18வது இடம். தமிழ் நாட்டின் உற்பத்தி வளர்ச்சியை எடுத்துக் கொண்டால், தி.மு.க. ஆட்சியில் 2009-2010இல் 29.18 சதவிகிதம். அ.தி.மு.க. ஆட்சியில் 2012-2013இல் 1.31 சதவிகிதம். வேளாண்மை வளர்ச்சியோ மைனஸ் 12 சதவிகிதமே!

இந்த நிதி ஆண்டுக்கான (2014-15) பற்றாக்குறை 25 ஆயிரத்து 714 கோடி என்று கணக்கிடப்பட்டிருக்கிறது. இது அடுத்த (2015-2016) நிதி ஆண்டில் 28 ஆயிரத்து 579 கோடியாக உயரப் போகிறது. இந்தப் பற்றாக்குறையை சமாளிக்க என்ன செய்யப் போகிறார்கள்?

பற்றாக்குறையை உயர்த்தி - கடன்தொகையையும் உயர்த்தி - தொழில் வளர்ச்சியிலும், உற்பத்தி வளர்ச்சியிலும் தமிழகத்தைக் கடைசி இடத்திற்குக் கொண்டு வந்துள்ள அ.தி.மு.க. அரசு - ஊழல் பட்டியலில் மட்டும் அனைத்து இந்தியாவிலேயே முதல் இடத்தை எட்டியிருக்கிறது. முட்டை வாங்குவதிலும், பருப்பு வாங்குவதிலும் ஊழல் - நெடுஞ்சாலைப் பணிகளிலே ஊழல் - மாநகராட்சி களிலே மண்டிக் கிடக்கும் ஊழல் - ஆவின் பாலில் ஊழல் - மின்சாரம் வாங்குவதிலே கோடி கோடியாக ஊழல் - அரசுப் பணிகளுக்கு டெண்டர் விடுவதிலே ஊழல் என்று அனைத்துத் துறைகளிலும் பல்லாயிரம் பல்லாயிரம் கோடி ரூபாய் லஞ்சம், ஊழல்!

திருமண நிதி உதவித் திட்டத்திலிருந்து, இலவசப் பசு வரை, நலத்திட்ட உதவிகளைப் பெறுவதற்கு ஏழைப் பயனாளிகள் வழங்க வேண்டிய லஞ்சம்; அரசுத் துறைகளில் பதவி உயர்வுக்கும், மாறுதலுக்கும் கொடுக்க வேண்டிய லஞ்சம்; பட்டியலிடப்பட்டு ஏடுகளில் வெளியாகியுள்ளன. அ.தி.மு.க. அரசின் அடி முதல் நுனி வரை லஞ்சம் - ஊழல் புரையோடிப் புற்று நோயாகப் பரவிவிட்டது. ஆட்சியாளர்களின் மிரட்டலுக்கு அஞ்சி, அரசின் நேர்மையான அதிகாரிகள் எல்லாம் தற்கொலை செய்து கொண்டு சாகிறார்கள்.

தமிழகத்தில் 85 இலட்சம் இளைஞர்கள் வேலை வாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்து காத்துக் கிடக்கும் நிலையில்; அரசுத் துறைகளில் நான்கு இலட்சம் காலிப் பணியிடங்கள்! அ.தி.மு.க. ஆட்சியில் ஒரு முறை கூட அரசு ஊழியர் சங்கங்களை அழைத்துப் பேச முன் வரவில்லை. ஆசிரியர்கள் உள்ளிட்ட அனைத்துத் துறைகளின் அலுவலர்கள், வேறு வழியின்றிப் போராட்டப் பாதையைத் தேர்ந்தெடுத்துள்ளனர்.

கடுந்தேளாகக் கொட்டும் கடன்கள்; கட்டுப்பாட்டுக்குள் இல்லாத சட்டம் - ஒழுங்கு; கரை புரண்டோடும் லஞ்சம் - ஊழல்; பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டுச் செயலிழந்து விட்ட நிர்வாகம்; விவசாயிகள், மீனவர், நெசவாளர் பிரச்சினைகள் எதுவும் தீர்க்கப்படாத பெரும் பின்னடைவுகள்; குழி தோண்டிப் புதைக்கப்பட்டு விட்ட ஜனநாயக மரபுகள் எனத் தமிழகத்தை இருள் சூழ்ந்திருக்கும் இந்த வேளையில், நிதி நிலை அறிக்கையைச் சமர்ப்பித்திடும் தார்மீகத் தகுதியை அ.தி.மு.க. அரசு இழந்து விட்டது. விளம்பரத்திற்காக வைக்கப்படும் கவைக்குதவாத வெறும் காகித அறிக்கையைப் புறக்கணித்து வெளிநடப்பு செய்கிறோம்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


தமிழக பட்ஜெட் முக்கிய அம்சங்கள்! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

தமிழக பட்ஜெட் முக்கிய அம்சங்கள்! Empty Re: தமிழக பட்ஜெட் முக்கிய அம்சங்கள்!

Post by சிவா Wed 25 Mar 2015 - 18:52

வேளாண் துறை நிதி ஒதுக்கீட்டை உயர்த்தியது தமிழக அரசு

வேளாண் துறைக்கு இதுவரை இல்லாத அளவுக்கு ரூ.6,613.68 கோடி நிதியை தமிழக அரசு ஒதுக்கியுள்ளது. அத்துடன், 5,500 கோடி ரூபாய் அளவிற்கு பயிர்க்கடன் வழங்குவதை இலக்காகக் கொண்டு கூட்டுறவு அமைப்புகள் செயல்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2015-16-ம் ஆண்டுக்கான தமிழக பட்ஜெட்டை தாக்கல் செய்த முதல்வரும், நிதியமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் விவசாயம் தொடர்பாக வெளியிட்ட அறிவிப்புகள்:

நடப்பாண்டில் தேசிய வேளாண்மை வளர்ச்சித் திட்டத்தின் கீழ் 298.95 கோடி ரூபாய் அளவிலும், நிலைக்கத்தக்க வேளாண்மைக்கான தேசிய இயக்கத்தின் கீழ், 90 கோடி ரூபாய் அளவிலும், திட்டப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

2010-2011 ஆம் ஆண்டில் 2,072.43 கோடி ரூபாயாக இருந்த வேளாண்துறைக்கான நிதி ஒதுக்கீடு கணிசமாக உயர்த்தப்பட்டு, வரும் நிதியாண்டில் இதுவரை இருந்திராத அளவாக 6,613.68 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

கடந்த நான்கு ஆண்டுகளில் மட்டும் 605.25 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 3.06 இலட்சம் ஏக்கர் பரப்பை நுண்ணீர் பாசனத்தின் கீழ் கொண்டுவர வழிவகுத்துள்ளது. வரும் நிதியாண்டில், 200 கோடி ரூபாய் மதிப்பீட்டில், மேலும் 1.20 இலட்சம் ஏக்கர் பரப்பை நுண்ணீர் பாசனத்தின் கீழ் கொண்டுவந்து, நீர்ப் பயன்பாட்டுத் திறனை உயர்த்திடஇந்த அரசு முனைப்புடன் செயல்படும்.

தோட்டக்கலை, விவசாயிகளுக்கு அதிக வருவாய் ஈட்டித்தருவதைக் கருத்தில் கொண்டு, 2010-2011 ஆம் ஆண்டில் 23.25 இலட்சம் ஏக்கராக இருந்த நமது மாநிலத்தின் தோட்டப் பயிர் சாகுபடி பரப்பளவு 2014-2015 ஆம் ஆண்டில் 25.95 இலட்சம் ஏக்கராக இந்த அரசால் உயர்த்தப்பட்டுள்ளது.

ஒருங்கிணைந்த தோட்டக்கலை வளர்ச்சி இயக்கம் மற்றும் இதர திட்டங்களின் கீழ் கிடைக்கும் நிதியைப் பயன்படுத்தி, 2015-2016 ஆம் ஆண்டில் இப்பரப்பு 27.18 இலட்சம் ஏக்கராக மேலும் உயர்த்தப்படும். இத்திட்டங்களின்கீழ், 111.97 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 2015-2016 ஆம் ஆண்டில் உயர் தொழில்நுட்ப முயற்சிகள் தொடர்ந்து மேற்கொள்ளப்படும்.

2014-2015 ஆம் ஆண்டில் 576.60 கோடி ரூபாய் மதிப்பிலான 4.69 இலட்சம் மெட்ரிக் டன் உரங்களை கூட்டுறவு அமைப்புகள் விநியோகம் செய்துள்ளன. விவசாயிகளுக்கு சரியான நேரத்தில் உரங்கள் கிடைப்பதை உறுதி செய்திட தமிழ்நாடு கூட்டுறவு இணையத்திற்கு இந்த வரவு-செலவுத்திட்டத்தில் 150 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இந்த ஆண்டில் கூட்டுறவு அமைப்புகள் மூலமாகவிவசாயிகளுக்கு வழங்குவதற்கான பயிர்க்கடன் இலக்கான 5,000 கோடி ரூபாய் உறுதியாக எய்தப்படும். இதுவரை, 4,955 கோடி ரூபாய் பயிர்க்கடன் வழங்கப்பட்டு 9.72 இலட்சம் விவசாயிகள் பயனடைந்துள்ளனர்.

வரும் நிதியாண்டில், இதுவரை இருந்திராத அளவிற்கு, அதாவது 5,500 கோடி ரூபாய் அளவிற்கு பயிர்க்கடன் வழங்குவதை இலக்காகக் கொண்டு கூட்டுறவு அமைப்புகள் செயல்படும். மேலும், கடனை முறையாகத் திருப்பிச் செலுத்துவோருக்கு இக்கடன்கள் வட்டியின்றி கிடைக்கும். இதற்கான, வட்டி மானியம் வழங்கிட இந்த வரவு-செலவுத் திட்டத்தில் 200 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

கடந்த நான்கு ஆண்டுகளில் வேளாண் இயந்திரப் பயன்பாட்டை ஊக்குவிப்பதற்காக 227.16 கோடி ரூபாய் செலவிடப்பட்டுள்ளது. கணிசமான அளவில் பண்ணை இயந்திரப் பயன்பாட்டை மேற்கொள்வதற்காக 2015-2016 ஆம் ஆண்டு வரவு-செலவுத் திட்டத்தில் 100 கோடி ரூபாய் நிதியை இந்த அரசு ஒதுக்கீடு செய்துள்ளது.

அறுவடைக்குப் பிந்தைய இழப்புகளைக் குறைப்பதற்காக,கடந்த நான்கு ஆண்டுகளில் 2,000 மெட்ரிக் டன்னிலிருந்து 10,000 மெட்ரிக் டன் வரையிலான கொள்ளளவு கொண்ட 88 நவீன சேமிப்புக் கிடங்குகளும், தலா 25 மெட்ரிக் டன் கொள்ளளவு கொண்ட 70 குளிர் சாதன சேமிப்புக் கிடங்குகளும் 149.86 கோடி ரூபாய் செலவில் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

நெல்லுக்கான மாநில அரசின் உற்பத்தி ஊக்கத்தொகைக்காக இந்த வரவு-செலவுத் திட்டத்தில் 200 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. விவசாயிகளின் நலனைப் பாதுகாப்பதற்கேற்ற கொள்முதல் விலைக் கொள்கையை இந்த அரசு தொடர்ந்து பின்பற்றும்.


தமிழக பட்ஜெட் முக்கிய அம்சங்கள்! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

தமிழக பட்ஜெட் முக்கிய அம்சங்கள்! Empty Re: தமிழக பட்ஜெட் முக்கிய அம்சங்கள்!

Post by சிவா Wed 25 Mar 2015 - 18:52


கால்நடை பராமரிப்பு

2015-2016 -ம் ஆண்டிலும், 12,000 கறவைப் பசுக்களும், ஆறு லட்சம் செம்மறி ஆடுகள், வெள்ளாடுகளும் தொடர்ந்து வழங்கிட 241.90 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மாநிலத்தில் கோழி வளர்ப்புத் தொழில் வளர்ச்சியடையாத பின்தங்கிய பகுதிகளில் கோழி வளர்ப்பதை ஊக்குவிப்பதற்கும், குறிப்பாக பழங்குடியினர் வாழும் பகுதிகளில் கோழி வளர்ப்பினை ஊக்குவிப்பதற்கும் இந்த அரசு மேற்கொண்டுவரும் முயற்சிகள் தொடரும். இதற்காக 2015-2016 ஆம் ஆண்டிற்கு 25 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இந்த அரசால் கால்நடைத்துறை கட்டமைப்பு மேம்பாட்டிற்குப் பெருமளவு நிதி வழங்கப்பட்டுள்ளது. கடந்த நான்கு ஆண்டுகளில் நபார்டு வங்கி உதவியுடன் 282.49 கோடி ரூபாய் மதிப்பீட்டிலான கட்டட கட்டமைப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

2011 ஆம் ஆண்டு மே மாதம் முதல் இதுவரை, 785 கால்நடை கிளை நிலையங்கள் கால்நடை மருந்தகங்களாக தரம் உயர்த்தப்பட்டுள்ளதுடன், 100 கால்நடை கிளை நிலையங்களும், 20 கால்நடை மருந்தகங்களும் புதிதாக

அமைக்கப்பட்டுள்ளன. வரும் நிதியாண்டில் மேலும் 25 கால்நடை கிளைநிலையங்கள், கால்நடை மருந்தகங்களாகத் தரம் உயர்த்தப்படும்.


தமிழக பட்ஜெட் முக்கிய அம்சங்கள்! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

தமிழக பட்ஜெட் முக்கிய அம்சங்கள்! Empty Re: தமிழக பட்ஜெட் முக்கிய அம்சங்கள்!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum