Latest topics
» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!by ayyasamy ram Today at 6:24 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:38 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:14 am
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm
» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
நிகழ்நிலை நிர்வாகிகள்
சிங்கப்பூரின் தந்தை லீ குவான் இயூ காலமானார்
5 posters
Page 3 of 5
Page 3 of 5 • 1, 2, 3, 4, 5
சிங்கப்பூரின் தந்தை லீ குவான் இயூ காலமானார்
First topic message reminder :
-
சிங்கப்பூரின் தந்தை திரு லீ குவான் இயூ
இன்று திங்கட்கிழமை 23.3.2015 அதிகாலை
3.18 மணிக்கு சிங்கப்பூர் பொது மருத்துவமனையில்
காலமானார்.
இதனை பிரதமர் அலுவலகம் தெரிவித்தது.
திரு லீ குவான் இயூ நிமோனியா பாதிப்புக்காக
கடந்த பிப்ரவரி 5ஆம் தேதி
முதல் சிங்கப்பூர் பொது மருத்துவமனையில்
சேர்க்கப்பட்டிருந்தார்.
–
————————————
-
சிங்கப்பூரின் தந்தை திரு லீ குவான் இயூ
இன்று திங்கட்கிழமை 23.3.2015 அதிகாலை
3.18 மணிக்கு சிங்கப்பூர் பொது மருத்துவமனையில்
காலமானார்.
இதனை பிரதமர் அலுவலகம் தெரிவித்தது.
திரு லீ குவான் இயூ நிமோனியா பாதிப்புக்காக
கடந்த பிப்ரவரி 5ஆம் தேதி
முதல் சிங்கப்பூர் பொது மருத்துவமனையில்
சேர்க்கப்பட்டிருந்தார்.
–
————————————
Re: சிங்கப்பூரின் தந்தை லீ குவான் இயூ காலமானார்
லீயின் மனம் ஒன்றுபட்ட மலேசியாவை நேசித்தது. ஆனால் அரசியல் சதுரங்கத்தில் முடிவு வேறு விதமாக அமைந்தது. சிங்கப்பூரில் சீன மொழி பேசுபவர்கள் அதிகம் பேர் இருந்தனர்.
அவர்களுக்கும் மலாய் மக்களுக்கும் இடையே பெரும் கலவரம் மூண்டது. 23 பேர் கொல்லப்பட்டனர். மக்களை அமைதிப்படுத்த லீ எடுத்த முயற்சிகள் பலனளிக்க வில்லை. எனவே சிங்கப்பூர் – மலேசியா இணைப்பு நெடுநாள் நீடிக்கவில்லை. வேறு வழியின்றி 1965–ல் சிங்கப்பூரை மீண்டும் தனிநாடாக பிரித்து குடியரசு நாடாக அறிவித்தார்.
ஆனால் அவரது மனம் துடித்தது. இது பற்றி அவர் கூறும்போது, ‘சிங்கப்பூரை மலேசியாவில் இருந்து பிரித்து குடியரசு நாடாக நான் அறிவித்தேன். நாடு முழுவதும் பலரும் பட்டாசு வெடித்து கொண்டாடினார்கள். ஆனால் எனக்கோ தூக்கங்கள் இல்லாத இரவுகளாக கழிந்தன. மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளானேன்’ என்றார்.
அதற்கு காரணம் சிங்கப்பூருக்கு அப்போது வாழ்வா? சாவா? பிரச்சினை. ஒரு தனி நாடாக இயங்குவதற்கு தேவையான இயற்கை வளம், மனித வளம் எதுவும் அங்கு இல்லை. பிரதமராக இருந்து எப்படி நாட்டை உயர்த்துவது என்று சிந்தித்தார்.
கடல் வாணிபத்துக்கு ஏதுவான புவியியல் அமைப்பு மட்டுமே இருந்தது. புலம் பெயர்ந்து வந்த மக்கள் கடுமையாக உழைத்தார்கள். லீயின் அரசும் மக்களின் செயல்பாட்டுக்கு உகந்த அரசாக இருந்தது.
கடுமையான சட்டங்களை கொண்டுவந்தார். சாலையில் எச்சில் உமிழ்ந்தால் பிரம்படி, சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டால் ஜெயில் தண்டனை, போதை பொருட்களை விற்றாலோ, சாப்பிட்டாலோ மரண தண்டனை... இப்படிப்பட்ட சட்டங்களால் நாடே கிடுகிடுத்து போனது. இதனால் லீ பலரது விரோதத்தையும் சம்பாதித்தார். ஆனால் அதை அவர் பொருட்படுத்த வில்லை. நாட்டின் வளர்ச்சிக்கு சில தியாகங்களை செய்தாக வேண்டும். இது ஆரம்பத்தில் கசப்பான கஷாயமாகத்தான் தெரியும். காலப்போக்கில் இதன் பலன்களை நீங்கள் கட்டாயம் அனுபவிப்பீர்கள் என்றார்.
50 ஆண்டுகளில் அவர் சொன்னபடியே பலனை பலமடங்கு அனுபவித்து வருகிறார்கள். அதனால் தான் அந்த மக்கள் மனதில் தங்கள் தேசத்தின் தந்தையாக குடிகொண்டிருக்கிறார்.
உலக வரைபடத்தில் ஒரு சின்னஞ்சிறு புள்ளியாக தெரியும் சிங்கப்பூர் இன்று நிர்வாகம், தொழில் நுட்பம், வாணிபம் என்று எல்லாதுறைகளிலும் சாதனை படைத்து உயர்ந்து நிற்கிறது. எல்லா நாடுகளும் ஒரு முன் மாதிரி நாடாக சிங்கப்பூரை எடுத்து சொல்கிறது. ஒருமுறை சிங்கப்பூர் சென்று திரும்பியவர்கள் ஆஹா என்ன அற்புதமான நாடு... என்று மறக்க முடியாத நினைவுகளை சுமந்து கொண்டிருக்கிறார்கள்.
இதற்கெல்லாம் காரணம் பிரதமராக இருந்த லீயின் திட்டமிட்ட செயல்பாடுகள் தான்.
அரசியலுக்கு வருபவர்களிடம் நிறைய தகுதிகளை லீ எதிர்பார்த்தார். ‘சைக்கோமெட்ரிக்’ முறையில் திறமையானவர்களை தேர்வு செய்து அரசியல் கடலில் நீந்த பாராளுமன்ற உறுப்பினர்களாக்குவார். 2 ஆண்டுகளுக்கு அவர்களுக்கு எந்த சலுகையும் பதவிகளும் வழங்காமல் தொகுதிகளை பார்க்க சொல்வார். அவர்கள் தொகுதிகளை பராமரிப்பதை வைத்து தான் அவர்களுக்கு அமைச்சர் பதவி கிடைக்கும்.
இத்தனை சோதனைகளை கடந்து வருபவர்கள் தன்னலமற்ற சேவை மனப்பான்மையுடன் வருவார்கள். அதன் பிறகும் அவர்கள் தடம் மாறாமல் இருக்க... மக்களின் காசுக்கு ஆசைப்படாமல் இருக்க... ஊதியம் பெருமளவில் வழங்கப்படுகிறது. லீயின் நம்பிக்கை வீண்போகவில்லை. அமைச்சர்கள் தேவைக்கு அதிகமான சம்பளம் பெற்றதால் ‘கிம்பளத்தை’ எதிர் பார்ப்பதில்லை.
சுமார் 50 ஆண்டுகள் வரை எதிர்க்கட்சிகள் ஒரு சில தொகுதிகளில் மட்டுமே ஜெயிக்க முடிந்தது. தொடர்ந்து 7 முறை கட்சியை வெற்றிபாதையில் பயணிக்க வைத்தவர். 31 ஆண்டுகள் பிரதமராக இருந்து உலகில் நீண்டநாள் பிரதமராக இருந்தவர் என்ற பெயரை பெற்றார்.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: சிங்கப்பூரின் தந்தை லீ குவான் இயூ காலமானார்
2011–ல் நடந்த தேர்தலில் லீயின் மக்கள் செயல்கட்சி லேசான சறுக்கலை சந்தித்தது. கைவசம் இருந்த முக்கியமான 6 தொகுதிகளை இழந்தது. இந்த சிறு சறுக்கலை பெரிதாக எடுத்துக்கொண்ட லீ சுயபரிசோதனை செய்தார். அப்போது இன்றைய இளைஞர்கள் நிறைய எதிர்பார்க்கிறார்கள். மாற்றத்தை எதிர்பார்க்கும் இந்த நவீன காலத்து இளைஞர்களின் குரல்களுக்கு செவி சாய்க்கும் சுறுசுறுப்பான அமைச்சர்களையே தங்கள் பிரதிநிதிகளாக எதிர்பார்க்கிறார்கள். எனவே இளைய சமுதாயத்துக்கு வழிவிட்டு நான் அரசியலில் இருந்து நிரந்தரமாக விலகி கொள்கிறேன் என்று அறிவித்தார்.
தன்னைப்போன்ற மூத்தவர்கள் இளைஞர்களுக்கு வழிவிட வேண்டிய தருணம் வந்துவிட்டது என்பதை தானே முன்னின்று மற்றவர்களுக்கு உணர்த்தினார்.
1990–ல் லீ பிரதமர் பதவியில் இருந்து விலகி அவரது கட்சியை சேர்ந்த கோ சோக் தோங்குவை பிரதமராக நியமித்தார். சிங்கப்பூரை வார்த்தெடுத்த அந்த வாழும் பிரம்மாவை விடுவதற்கு அந்த நாடு விரும்பவில்லை. அவருக்காகவே வழிகாட்டி அமைச்சர் என்ற புதிய இலாகா உருவாக்கப்பட்டது. இந்த பதவியில் 2004 முதல் 2011 வரை செயல்பட்டார்.
சிங்கப்பூரில் பெருகி வந்த மக்கள் தொகை நாட்டின் வளர்ச்சிக்கு முட்டுக்கட்டையாகி விடும் என்று குடும்ப கட்டுப்பாடு முறையை நமக்கும் முன்பே அந்த நாட்டில் அவர் அமுல்படுத்தி விட்டார். 2 குழந்தைகளுக்கு மேல் பெற்றால் சலுகைகள் ரத்து என்றார்.
படித்த பெண்களை திருமணம் செய்ய விரும்பாத மனநிலையில் மக்கள் இருந்த காலம் அது. அந்த நிலையை மாற்ற படித்த பெண்களை திருமணம் செய்பவர்களுக்கு அரசு சலுகைகளை அறிவித்தார்.
பொதுவாக குற்றச் செயல்களுக்குத் தான் சட்டத்தில் தண்டனை அதிகம் இருக்கும். ஆனால் லீயோ ஒழுக்ககேடான செயல்களை செய்பவர்களுக்குத் தான் தண்டனை அதிகம் வழங்கினார்.
ஊழல் எல்லா நாடுகளுக்கும் பொதுவானது தான். சிங்கப்பூரிலும் தலை தூக்கியது. ஆனால் அதை ஒழிக்க அவர் எடுத்த நடவடிக்கை கடுமையானது. ஊழலை விசாரிக்க அதிக அதிகாரம் கொண்ட குழுவை அமைத்தார். இந்த குழு தேவைப்பட்டால் யாரையும், விசாரிக்கலாம். எங்கும் சோதனை போடலாம் என்று முழு அதிகாரம் வழங்கினார். அதனால் தலை தூக்கிய ஊழல் தடம் தெரியாமல் போய் விட்டது. இப்படி ஒரு குட்டித்தீவை எல்லோரும் எட்டிப்பார்க்கும் பிரமாண்டமான சிங்கப்பூராக உருவாக்கிய லீ மறைந்து விட்டார். ஆனால் அவரது ஆன்மா சிங்கப்பூரையே சுற்றி சுற்றி வரும்...
அதற்கு அவர் உள்ளம் உதிர்த்த வார்த்தைகளே சாட்சி. ‘‘சிங்கப்பூரை ஆட்சி செய்பவர்கள் எவராக இருந்தாலும் அவரிடத்தில் இரும்பு போன்ற திடம் இருக்க வேண்டும் ஏதோ வந்தோம், சென்றோம் என்று விளையாட்டாக ஆட்சி செய்து விட்டு போக இது ஒன்றும் சீட்டாட்டம் இல்லை.
சிங்கப்பூரை வளர்க்க நான் என்னுடைய மொத்த ஆயுளையும் அர்ப்பணித்து இருக்கிறேன். நான் உயிருடன் இருக்கும் வரையில் என் நாட்டை யாரிடமும் விட்டுக்கொடுக்க மாட்டேன். ஒரு வேளை நான் இறந்த பிறகும் என் நாட்டுக்கு ஏதாவது ஒருவகையில் அச்சுறுத்தல் நேர்ந்தால் கல்லறையில் இருந்தும் எழுந்து வருவேன்” என்பது தான் அந்த வார்த்தைகள்.
சிங்கப்பூர் மண் இருக்கும் வரை இந்த மாமனிதரின் நினைவும் நிலைத்து நிற்கும்.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: சிங்கப்பூரின் தந்தை லீ குவான் இயூ காலமானார்
லீ குவான் யூ உடலுக்கு 3 லட்சத்திற்கு அதிகமான சிங்கப்பூர் மக்கள் கண்ணீர் மல்க இறுதி அஞ்சலி
சிங்கப்பூரின் முன்னாள் பிரதமர் லீ குவான் யூ உடலுக்கு 3 லட்சத்திற்கு அதிகமான சிங்கப்பூர் மக்கள் இறுதி அஞ்சலி செலுத்தியுள்ள நிலையில், தொடர்ந்து மக்கள் கூட்டம் அந்நாட்டு பாராளுமன்ற வளாகத்தை நோக்கி படையெடுத்தப்படியே உள்ளனர்.
சிங்கப்பூரின் தந்தை மற்றும் ‘நவீன சிங்கப்பூரின் சிற்பி’ என்று அழைக்கப்படும் முன்னாள் பிரதமர் லீ குவான் யூ உடல்நலக்குறைவு காரணமாக கடந்த திங்கட்கிழமை காலமானார். அவரது இறுதிச்சடங்கு நாளை நடைபெறுகின்றது. அந்த நாட்டின் மொத்த மக்கள் தொகை 5.5 மில்லியன் (55 லட்சம்) ஆகும். இதில் 3.34 லட்சம் மக்களே சிங்கப்பூர் குடிமக்கள். மற்றவர்கள் வெளிநாட்டைச் சேர்ந்தவர்கள். இதுவரை 3,30,000 சிங்கப்பூர் மக்கள் தங்கள் குடும்பம் மற்றும் நண்பர்கள் உடன் வந்து தங்களின் அன்பிற்கு இனிய தலைவருக்கு அஞ்சலி செலுத்தியபடி உள்ளனர். இது அந்த நாட்டு மக்கள் தொகையில் 10 சதவிதம் ஆகும்.
நேற்று மாலை கட்டுக்கடங்காத மக்கள் வெள்ளத்தால் மக்களின் பாதுகாப்பு நலன் கருதி அந்நாட்டு பாராளுமன்ற வளாகம் தற்காலிகமாக மூடப்பட்டது. மீண்டும் இன்று காலை முதல் பொதுமக்களின் அஞ்சலிக்காக பாராளுமன்ற வளாகம் திறக்கப்பட்டுள்ளது. இருப்பினும் ஞாயிற்றுக்கிழமையன்று இறுதி சடங்கு நடைபெறயிருப்பதால் பலரினால் இறுதி அஞ்சலி செலுத்த முடியாமல் போக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.
இந்திய பிரதமர் மோடி உட்பட பல வெளிநாட்டு தலைவர்கள் நாளை நடைபெறும் இறுதி சடங்கில் கலந்து கொள்ளவிருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
சிங்கப்பூரின் முன்னாள் பிரதமர் லீ குவான் யூ உடலுக்கு 3 லட்சத்திற்கு அதிகமான சிங்கப்பூர் மக்கள் இறுதி அஞ்சலி செலுத்தியுள்ள நிலையில், தொடர்ந்து மக்கள் கூட்டம் அந்நாட்டு பாராளுமன்ற வளாகத்தை நோக்கி படையெடுத்தப்படியே உள்ளனர்.
சிங்கப்பூரின் தந்தை மற்றும் ‘நவீன சிங்கப்பூரின் சிற்பி’ என்று அழைக்கப்படும் முன்னாள் பிரதமர் லீ குவான் யூ உடல்நலக்குறைவு காரணமாக கடந்த திங்கட்கிழமை காலமானார். அவரது இறுதிச்சடங்கு நாளை நடைபெறுகின்றது. அந்த நாட்டின் மொத்த மக்கள் தொகை 5.5 மில்லியன் (55 லட்சம்) ஆகும். இதில் 3.34 லட்சம் மக்களே சிங்கப்பூர் குடிமக்கள். மற்றவர்கள் வெளிநாட்டைச் சேர்ந்தவர்கள். இதுவரை 3,30,000 சிங்கப்பூர் மக்கள் தங்கள் குடும்பம் மற்றும் நண்பர்கள் உடன் வந்து தங்களின் அன்பிற்கு இனிய தலைவருக்கு அஞ்சலி செலுத்தியபடி உள்ளனர். இது அந்த நாட்டு மக்கள் தொகையில் 10 சதவிதம் ஆகும்.
நேற்று மாலை கட்டுக்கடங்காத மக்கள் வெள்ளத்தால் மக்களின் பாதுகாப்பு நலன் கருதி அந்நாட்டு பாராளுமன்ற வளாகம் தற்காலிகமாக மூடப்பட்டது. மீண்டும் இன்று காலை முதல் பொதுமக்களின் அஞ்சலிக்காக பாராளுமன்ற வளாகம் திறக்கப்பட்டுள்ளது. இருப்பினும் ஞாயிற்றுக்கிழமையன்று இறுதி சடங்கு நடைபெறயிருப்பதால் பலரினால் இறுதி அஞ்சலி செலுத்த முடியாமல் போக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.
இந்திய பிரதமர் மோடி உட்பட பல வெளிநாட்டு தலைவர்கள் நாளை நடைபெறும் இறுதி சடங்கில் கலந்து கொள்ளவிருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: சிங்கப்பூரின் தந்தை லீ குவான் இயூ காலமானார்
லீ குவான் யுக்கு இன்று இறுதிச்சடங்கு: மக்களுடன் மழையும் அஞ்சலி.,
சிங்கப்பூர்: நீண்ட காலம் நோய் வாய்ப்பட்டிருந்த சிங்கப்பூர் நிறுவனரான அந்நாட்டு முன்னாள் பிரதமர் லீ குவான் யு (91) இறுதிச்சடங்கு இன்று நடக்கிறது. முன்னதாக கடந்த 5 நாட்களாக மக்கள் திரள், திரளாக அணிவகுத்து நின்று நீண்ட நேரம் காத்து கிடந்து தங்களின் அன்பு தலைவருக்கு அஞ்சலி செலுத்தினர். இன்று நடக்கும் இறுதிச்சடங்கில் லட்சக்கணக்கானவர்கள் பங்கேற்றனர். கண்ணீருடன் சென்ற மக்களோடு வானமும் மழை பொழிந்தது. தொடர் மழையும் பொருட்படுத்தாமல் மக்கள் அலை, அலையாய் தங்களின் அன்பு தலைவருக்கு இறுதி அஞ்சலி செலுத்தினர்.
சிங்கப்பூர்: நீண்ட காலம் நோய் வாய்ப்பட்டிருந்த சிங்கப்பூர் நிறுவனரான அந்நாட்டு முன்னாள் பிரதமர் லீ குவான் யு (91) இறுதிச்சடங்கு இன்று நடக்கிறது. முன்னதாக கடந்த 5 நாட்களாக மக்கள் திரள், திரளாக அணிவகுத்து நின்று நீண்ட நேரம் காத்து கிடந்து தங்களின் அன்பு தலைவருக்கு அஞ்சலி செலுத்தினர். இன்று நடக்கும் இறுதிச்சடங்கில் லட்சக்கணக்கானவர்கள் பங்கேற்றனர். கண்ணீருடன் சென்ற மக்களோடு வானமும் மழை பொழிந்தது. தொடர் மழையும் பொருட்படுத்தாமல் மக்கள் அலை, அலையாய் தங்களின் அன்பு தலைவருக்கு இறுதி அஞ்சலி செலுத்தினர்.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: சிங்கப்பூரின் தந்தை லீ குவான் இயூ காலமானார்
உலகத் தலைவர்கள் பங்கேற்பு
இன்று நடக்கும் இறுதிச்சடங்கில் உலகம் முழுவதும் பல்வேறு நாட்டு தலைவர்கள் பங்கேற்றனர்.
இந்திய பிரதமர் நரேந்திரமோடி, ஆஸி., பிரதமர் டோனி அப்போட், ஜப்பான் பிரதமர் ஷின்ஷோ அபே, இந்தோனேஷிய பிரதமர் ஜாக்கோ விதோபா, மியான்மர் அதிபர் திய்ன் செய்ன், தென்கொரிய அதிபர் பார்க் க்யூன், கம்போடிய பிரதமர் ஹூன் சென் , மலேசிய மன்னர் சுல்தான் அப்துல், இஸ்ரேல் அதிபர் ரிவன்ரிவ்லின், சீன துணை அதிபர் லீ யுவான்ஷோ, முன்னாள் அமெரிக்க அதிபர் பில் கிளிண்டன், லாவோஸ் பிரதமர் தான்சிங் தம்மாவாங், வியட்னாம் பிரதமர் நிகியான் தான் டங், கனடா சார்பில் கவர்னர் ஜெனரல் டேவிட் ஜான்சன், கஜகஸ்தான் பிரதமர் கரீம் மாசிமோவ், பிரிட்டன் , நியூஸிலாந்து, அமெரிக்கா, ரஷ்யா ஆகிய நாடுகளின் முதன்மை செயலர்கள் , குவான் உடலுக்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.
இன்று நடக்கும் இறுதிச்சடங்கில் உலகம் முழுவதும் பல்வேறு நாட்டு தலைவர்கள் பங்கேற்றனர்.
இந்திய பிரதமர் நரேந்திரமோடி, ஆஸி., பிரதமர் டோனி அப்போட், ஜப்பான் பிரதமர் ஷின்ஷோ அபே, இந்தோனேஷிய பிரதமர் ஜாக்கோ விதோபா, மியான்மர் அதிபர் திய்ன் செய்ன், தென்கொரிய அதிபர் பார்க் க்யூன், கம்போடிய பிரதமர் ஹூன் சென் , மலேசிய மன்னர் சுல்தான் அப்துல், இஸ்ரேல் அதிபர் ரிவன்ரிவ்லின், சீன துணை அதிபர் லீ யுவான்ஷோ, முன்னாள் அமெரிக்க அதிபர் பில் கிளிண்டன், லாவோஸ் பிரதமர் தான்சிங் தம்மாவாங், வியட்னாம் பிரதமர் நிகியான் தான் டங், கனடா சார்பில் கவர்னர் ஜெனரல் டேவிட் ஜான்சன், கஜகஸ்தான் பிரதமர் கரீம் மாசிமோவ், பிரிட்டன் , நியூஸிலாந்து, அமெரிக்கா, ரஷ்யா ஆகிய நாடுகளின் முதன்மை செயலர்கள் , குவான் உடலுக்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: சிங்கப்பூரின் தந்தை லீ குவான் இயூ காலமானார்
பிரதமர் மோடி புகழாரம்
பிரதமர் மோடி தனது இறுதி மரியாதை செய்தியில்;
எங்களின் எண்ணத்தில் பதிந்தவர் லீ குவான் யு . அவர் எங்களின் மனதில் தாக்கங்களை ஏற்படுத்தியவர். அனைவருக்கும் வீடு, தூய்மை தொடர்பான விஷயத்தில் எங்களின் முன் மாதிரியாக திகழ்ந்தவர். இவருக்கு எனது இதயப்பூர்வ அஞ்சலி .
பிரதமர் மோடி தனது இறுதி மரியாதை செய்தியில்;
எங்களின் எண்ணத்தில் பதிந்தவர் லீ குவான் யு . அவர் எங்களின் மனதில் தாக்கங்களை ஏற்படுத்தியவர். அனைவருக்கும் வீடு, தூய்மை தொடர்பான விஷயத்தில் எங்களின் முன் மாதிரியாக திகழ்ந்தவர். இவருக்கு எனது இதயப்பூர்வ அஞ்சலி .
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: சிங்கப்பூரின் தந்தை லீ குவான் இயூ காலமானார்
சிங்கப்பூர் நிறுவனர் லீ குவான் யூ-வின் உடல் தகனம்
சிங்கப்பூரின் முதலாவது பிரதமர் லீ குவான் யூ-வின் உடல் தகனம் செய்யப்பட்டது. வெளிநாட்டுத் தலைவர்கள் உட்பட ஏராளமானோர் இறுதி நிகழ்வில் பங்கேற்றனர்.
சிங்கப்பூரை நிறுவியவர் என்று அறியப்படும் லீ குவான் யூ-வின் இறுதி நிகழ்வில் குடும்ப உறுப்பினர்கள், பொதுமக்கள், மதத் தலைவர்கள் மற்றும் பன்னாட்டுத் தலைவர்கள் உட்பட பலர் பங்குபெற்றனர்.
கசப்பான உண்மைகளிலிருந்து விலகிச் செல்லாமல் தமது தந்தை சிங்கப்பூரைக் கட்டியெழுப்பினார் என்று லீ குவான் யூவின் இறுதி நிகழ்வில் உரையாற்றிய அவரது மகனும் தற்போதைய பிரதமருமான லீ ஸியென் லூங் புகழாரம் சூட்டினார்.
தமது தந்தை ஒரு போராளியாக இருந்தார் என்றார் லீ ஸியென் லூங். அமைச்சரவை உறுப்பினர்களும் மறைந்த தலைவரின் நண்பர்களும் இறுதி நிகழ்வில் பேசினர்.
ஒரு நிமிடம் மௌன அஞ்சலிக்குப் பின்னர், மிகவும் நெருங்கியவர்கள் மட்டுமே பங்குபெறும் வகையில் அவரது உடல் தகனம் செய்யப்படுவதற்காக எடுத்துச் செல்லப்பட்டது.
சிங்கப்பூரின் பிரதமராக முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக லீ குவான் இருந்தார் என்றாலும் அடக்குமுறை ஆட்சியை முன்னெடுத்தார் என்று அடிக்கடி விமர்சிக்கப்பட்டவர்.
சிங்கப்பூரின் முதலாவது பிரதமர் லீ குவான் யூ-வின் உடல் தகனம் செய்யப்பட்டது. வெளிநாட்டுத் தலைவர்கள் உட்பட ஏராளமானோர் இறுதி நிகழ்வில் பங்கேற்றனர்.
சிங்கப்பூரை நிறுவியவர் என்று அறியப்படும் லீ குவான் யூ-வின் இறுதி நிகழ்வில் குடும்ப உறுப்பினர்கள், பொதுமக்கள், மதத் தலைவர்கள் மற்றும் பன்னாட்டுத் தலைவர்கள் உட்பட பலர் பங்குபெற்றனர்.
கசப்பான உண்மைகளிலிருந்து விலகிச் செல்லாமல் தமது தந்தை சிங்கப்பூரைக் கட்டியெழுப்பினார் என்று லீ குவான் யூவின் இறுதி நிகழ்வில் உரையாற்றிய அவரது மகனும் தற்போதைய பிரதமருமான லீ ஸியென் லூங் புகழாரம் சூட்டினார்.
தமது தந்தை ஒரு போராளியாக இருந்தார் என்றார் லீ ஸியென் லூங். அமைச்சரவை உறுப்பினர்களும் மறைந்த தலைவரின் நண்பர்களும் இறுதி நிகழ்வில் பேசினர்.
ஒரு நிமிடம் மௌன அஞ்சலிக்குப் பின்னர், மிகவும் நெருங்கியவர்கள் மட்டுமே பங்குபெறும் வகையில் அவரது உடல் தகனம் செய்யப்படுவதற்காக எடுத்துச் செல்லப்பட்டது.
சிங்கப்பூரின் பிரதமராக முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக லீ குவான் இருந்தார் என்றாலும் அடக்குமுறை ஆட்சியை முன்னெடுத்தார் என்று அடிக்கடி விமர்சிக்கப்பட்டவர்.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: சிங்கப்பூரின் தந்தை லீ குவான் இயூ காலமானார்
லீ குவான் இயூ இறுதி ஊர்வலம் – வழிநெடுக மக்கள் வெள்ளம்!
சிங்கையின் சிற்பி லீ குவான் இயூவின் இறுதி ஊர்வலம் சிங்கப்பூரின் தெருக்களின் வழியாக இன்று பிற்பகல் தொடங்கிய வேளையில் அவருக்கு இறுதி அஞ்சலி செலுத்த கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல் சாலைகளின் இரு மருங்கிலும் சிங்கப்பூர் மக்கள் திரண்டனர்.
சாலைகளில் சிங்கப்பூரின் தேசியக் கொடி வரிசையாக தொங்கிக் கொண்டிருக்க, மழைத் தூறலிலும், தங்களின் தலைவனுக்கு, இறுதி மரியாதை தெரிவிக்கவும், ஊர்வலத்தில் பங்கு பெறவும் திரண்டிருந்த மக்கள் வெள்ளம்.
லீ குவான் இயூவிற்கு இறுதி மரியாதை தெரிவிக்கும் சடங்குகளில் கலந்து கொள்ள இன்று சாங்கி விமான நிலையம் வந்தடைந்த தென் கொரிய அதிபர் பார்க் கியூன் ஹாய்
சிங்கையின் சிற்பி லீ குவான் இயூவின் இறுதி ஊர்வலம் சிங்கப்பூரின் தெருக்களின் வழியாக இன்று பிற்பகல் தொடங்கிய வேளையில் அவருக்கு இறுதி அஞ்சலி செலுத்த கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல் சாலைகளின் இரு மருங்கிலும் சிங்கப்பூர் மக்கள் திரண்டனர்.
சாலைகளில் சிங்கப்பூரின் தேசியக் கொடி வரிசையாக தொங்கிக் கொண்டிருக்க, மழைத் தூறலிலும், தங்களின் தலைவனுக்கு, இறுதி மரியாதை தெரிவிக்கவும், ஊர்வலத்தில் பங்கு பெறவும் திரண்டிருந்த மக்கள் வெள்ளம்.
லீ குவான் இயூவிற்கு இறுதி மரியாதை தெரிவிக்கும் சடங்குகளில் கலந்து கொள்ள இன்று சாங்கி விமான நிலையம் வந்தடைந்த தென் கொரிய அதிபர் பார்க் கியூன் ஹாய்
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: சிங்கப்பூரின் தந்தை லீ குவான் இயூ காலமானார்
லீ குவான் இயூ இறுதிச் சடங்கில் பில் கிளிண்டன், மோடி, ஜோக்கோ, டோனி அப்போட் – உலகத் தலைவர்கள்!
சிங்கப்பூர், மார்ச் 29 – நினைவு தெரிந்து அண்மையக் காலத்தில் எந்த ஒரு நாட்டிலும், எந்த ஒரு உலகத் தலைவருக்காகவும் – அதுவும் இருபதாண்டுகளுக்கு முன்பே தனது பதவியைத் துறந்து விட்ட ஓரு முன்னாள் பிரதமருக்கு – இத்தனை நாடுகளின் தலைவர்கள் ஒன்று திரண்டு வந்து அஞ்சலி செலுத்தியிருப்பார்களா என்பது சந்தேகம்தான்.
ஆம், இன்று சிங்கப்பூர் தேசியப் பல்கலைக் கழகத்தின் கலாச்சார மைய மண்டபத்திற்குக் கொண்டுவரப்பட்ட சிங்கையின் சிற்பி லீ குவான் இயூவின் நல்லுடல் ஒருபுறம் வைக்கப்பட்டிருந்த நிலையில் – நடைபெற்ற இறுதிச் சடங்குகளில் பத்து முக்கிய பிரமுகர்கள் அஞ்சலி உரைகளை ஆற்றிய வேளையில் உலகின் முக்கிய தலைவர்கள் அமர்ந்திருந்து அந்த நிகழ்வுகளில் பங்கு பெற்றார்கள்.
அவர்களில் ஆஸ்திரேலியப் பிரதமர் டோனி அப்போட், புருணையின் ஆட்சியாளர் சுல்தான் ஹாசானால் போல்கியா, பூட்டான் மன்னர் ஜிக்மே கேசர் நாம்கியல் வாங்சுக், கம்போடிய பிரதமர் ஹன் சென், கனடாவின் கவர்னர் ஜெனரல் டேவிட் ஜோன்ஸ்டன், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, இந்தோனிசிய அதிபர் ஜோக்கோ விடோடோ, இஸ்ரேலிய அதிபர் ரேவன் ரிவ்லின், ஜப்பானியப் பிரதமர் ஷின்சோ அபே ஆகியோரும் அடங்குவர்.
லீ குவான் இயூவின் நல்லுடல் சிங்கப்பூர் தேசியப் பல்கலைக் கழகத்தின் கலாச்சார மையத்திற்குள் கொண்டுவரப்படுகின்றது
இந்த இறுதி அஞ்சலி சடங்குகளில் மலேசிய மாமன்னர் அப்துல் ஹாலிம் முவாசாம் ஷா, கசக்ஸ்தான் பிரதமர் கரிம் மாசிமோவ், லாவோஸ் பிரதமர் தோங்சிங் தம்மாவோங், மியன்மார் அதிபர் யு தெய்ன் செய்ன், நியூசிலாந்து கவர்னர் ஜெனரல் ஜெர்ரி மாட்பெரே, பிலிப்பைன்ஸ் நாடாளுமன்ற மேல்சபை தலைவர் பிராங்க்ளின் டிரிலோன், சீனா துணை அதிபர் லி யுவான்சாவ், தென் கொரியா அதிபர் பார்க் கியூன் ஹாய், கத்தார் எமிர் ஷேக் தமிம் பின் ஹாமாட் அல் தானி, ரஷியாவின் முதல் துணைப் பிரதமர் இகோர், ஷூவாலோவ், தாய்லாந்து பிரதமர் பிராயுட் சான்-ஓ-சா, வியட்னாம் பிரதமர் ங்குயென் தான் டங், பிரிட்டனின் வெளியுறவு அமைச்சரும் நாடாளுமன்ற கீழ் சபையின் தலைவருமான வில்லியம் ஹேக் ஆகியோரும் கலந்து கொண்டனர்.
சிங்கப்பூரின் முக்கிய நட்புறவு நாடான அமெரிக்கா லீ குவான் இயூவிற்கு மரியாதை தரும் பொருட்டு, முன்னாள் அதிபர் பில் கிளிண்டன் தலைமையிலான குழுவை இறுதிச் சடங்குகளில் கலந்து கொள்ள அனுப்பியுள்ளது.
இத்தனை உலகத் தலைவர்கள் கலந்து கொண்டது சிங்கப்பூருக்கு அந்தத் தலைவர்கள் தரும் முக்கியத்துவத்தை உணர்த்துவதாகவும், லீ குவான் இயூ மீது அவர்கள் கொண்டிருந்த அபிமானத்தையும் கௌரவத்தையும் உணர்த்துவதாகவும் அமைந்திருந்தது.
சிங்கப்பூர், மார்ச் 29 – நினைவு தெரிந்து அண்மையக் காலத்தில் எந்த ஒரு நாட்டிலும், எந்த ஒரு உலகத் தலைவருக்காகவும் – அதுவும் இருபதாண்டுகளுக்கு முன்பே தனது பதவியைத் துறந்து விட்ட ஓரு முன்னாள் பிரதமருக்கு – இத்தனை நாடுகளின் தலைவர்கள் ஒன்று திரண்டு வந்து அஞ்சலி செலுத்தியிருப்பார்களா என்பது சந்தேகம்தான்.
லீ குவான் இயூவின் புகைப்படத்தை ஏந்தி அவரது குடும்ப உறுப்பினர்கள் சிங்கப்பூர் தேசியப் பல்கலைக் கழகத்தின் கலாச்சார மையத்திற்குள் கொண்டு வந்தபோது…
ஆம், இன்று சிங்கப்பூர் தேசியப் பல்கலைக் கழகத்தின் கலாச்சார மைய மண்டபத்திற்குக் கொண்டுவரப்பட்ட சிங்கையின் சிற்பி லீ குவான் இயூவின் நல்லுடல் ஒருபுறம் வைக்கப்பட்டிருந்த நிலையில் – நடைபெற்ற இறுதிச் சடங்குகளில் பத்து முக்கிய பிரமுகர்கள் அஞ்சலி உரைகளை ஆற்றிய வேளையில் உலகின் முக்கிய தலைவர்கள் அமர்ந்திருந்து அந்த நிகழ்வுகளில் பங்கு பெற்றார்கள்.
அவர்களில் ஆஸ்திரேலியப் பிரதமர் டோனி அப்போட், புருணையின் ஆட்சியாளர் சுல்தான் ஹாசானால் போல்கியா, பூட்டான் மன்னர் ஜிக்மே கேசர் நாம்கியல் வாங்சுக், கம்போடிய பிரதமர் ஹன் சென், கனடாவின் கவர்னர் ஜெனரல் டேவிட் ஜோன்ஸ்டன், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, இந்தோனிசிய அதிபர் ஜோக்கோ விடோடோ, இஸ்ரேலிய அதிபர் ரேவன் ரிவ்லின், ஜப்பானியப் பிரதமர் ஷின்சோ அபே ஆகியோரும் அடங்குவர்.
லீ குவான் இயூவின் நல்லுடல் சிங்கப்பூர் தேசியப் பல்கலைக் கழகத்தின் கலாச்சார மையத்திற்குள் கொண்டுவரப்படுகின்றது
இந்த இறுதி அஞ்சலி சடங்குகளில் மலேசிய மாமன்னர் அப்துல் ஹாலிம் முவாசாம் ஷா, கசக்ஸ்தான் பிரதமர் கரிம் மாசிமோவ், லாவோஸ் பிரதமர் தோங்சிங் தம்மாவோங், மியன்மார் அதிபர் யு தெய்ன் செய்ன், நியூசிலாந்து கவர்னர் ஜெனரல் ஜெர்ரி மாட்பெரே, பிலிப்பைன்ஸ் நாடாளுமன்ற மேல்சபை தலைவர் பிராங்க்ளின் டிரிலோன், சீனா துணை அதிபர் லி யுவான்சாவ், தென் கொரியா அதிபர் பார்க் கியூன் ஹாய், கத்தார் எமிர் ஷேக் தமிம் பின் ஹாமாட் அல் தானி, ரஷியாவின் முதல் துணைப் பிரதமர் இகோர், ஷூவாலோவ், தாய்லாந்து பிரதமர் பிராயுட் சான்-ஓ-சா, வியட்னாம் பிரதமர் ங்குயென் தான் டங், பிரிட்டனின் வெளியுறவு அமைச்சரும் நாடாளுமன்ற கீழ் சபையின் தலைவருமான வில்லியம் ஹேக் ஆகியோரும் கலந்து கொண்டனர்.
சிங்கப்பூரின் முக்கிய நட்புறவு நாடான அமெரிக்கா லீ குவான் இயூவிற்கு மரியாதை தரும் பொருட்டு, முன்னாள் அதிபர் பில் கிளிண்டன் தலைமையிலான குழுவை இறுதிச் சடங்குகளில் கலந்து கொள்ள அனுப்பியுள்ளது.
இத்தனை உலகத் தலைவர்கள் கலந்து கொண்டது சிங்கப்பூருக்கு அந்தத் தலைவர்கள் தரும் முக்கியத்துவத்தை உணர்த்துவதாகவும், லீ குவான் இயூ மீது அவர்கள் கொண்டிருந்த அபிமானத்தையும் கௌரவத்தையும் உணர்த்துவதாகவும் அமைந்திருந்தது.
லீ குவான் இயூவின் நல்லுடல் இராணுவ மரியாதையுடன் ஊர்வலமாகக் கொண்டு செல்லப்படும் காட்சி
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: சிங்கப்பூரின் தந்தை லீ குவான் இயூ காலமானார்
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Page 3 of 5 • 1, 2, 3, 4, 5
Similar topics
» சிங்கப்பூரின் தந்தை லீ குவான் இயூவின் 90 வது பிறந்தநாள் - இங்கிலாந்து ராணி வாழ்த்து
» சிங்கப்பூரின் முன்னோடி அஞ்சலக அதிகாரி எம் பாலசுப்பிரமணியம் காலமானார்
» நடிகர் விக்ரமின் தந்தை வினோத்ராஜ் காலமானார்
» மலேசிய ஹாக்கி விளையாட்டின் தந்தை சுல்தான் அஸ்லான் ஷா காலமானார்
» விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரன் அவர்களின் தந்தை வேலுப்பிள்ளை இன்று காலமானார்..!
» சிங்கப்பூரின் முன்னோடி அஞ்சலக அதிகாரி எம் பாலசுப்பிரமணியம் காலமானார்
» நடிகர் விக்ரமின் தந்தை வினோத்ராஜ் காலமானார்
» மலேசிய ஹாக்கி விளையாட்டின் தந்தை சுல்தான் அஸ்லான் ஷா காலமானார்
» விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரன் அவர்களின் தந்தை வேலுப்பிள்ளை இன்று காலமானார்..!
Page 3 of 5
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|