புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:19 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சிங்கப்பூரின் தந்தை லீ குவான் இயூ காலமானார் - Page 2 I_vote_lcapசிங்கப்பூரின் தந்தை லீ குவான் இயூ காலமானார் - Page 2 I_voting_barசிங்கப்பூரின் தந்தை லீ குவான் இயூ காலமானார் - Page 2 I_vote_rcap 
25 Posts - 38%
heezulia
சிங்கப்பூரின் தந்தை லீ குவான் இயூ காலமானார் - Page 2 I_vote_lcapசிங்கப்பூரின் தந்தை லீ குவான் இயூ காலமானார் - Page 2 I_voting_barசிங்கப்பூரின் தந்தை லீ குவான் இயூ காலமானார் - Page 2 I_vote_rcap 
19 Posts - 29%
mohamed nizamudeen
சிங்கப்பூரின் தந்தை லீ குவான் இயூ காலமானார் - Page 2 I_vote_lcapசிங்கப்பூரின் தந்தை லீ குவான் இயூ காலமானார் - Page 2 I_voting_barசிங்கப்பூரின் தந்தை லீ குவான் இயூ காலமானார் - Page 2 I_vote_rcap 
6 Posts - 9%
வேல்முருகன் காசி
சிங்கப்பூரின் தந்தை லீ குவான் இயூ காலமானார் - Page 2 I_vote_lcapசிங்கப்பூரின் தந்தை லீ குவான் இயூ காலமானார் - Page 2 I_voting_barசிங்கப்பூரின் தந்தை லீ குவான் இயூ காலமானார் - Page 2 I_vote_rcap 
4 Posts - 6%
T.N.Balasubramanian
சிங்கப்பூரின் தந்தை லீ குவான் இயூ காலமானார் - Page 2 I_vote_lcapசிங்கப்பூரின் தந்தை லீ குவான் இயூ காலமானார் - Page 2 I_voting_barசிங்கப்பூரின் தந்தை லீ குவான் இயூ காலமானார் - Page 2 I_vote_rcap 
4 Posts - 6%
prajai
சிங்கப்பூரின் தந்தை லீ குவான் இயூ காலமானார் - Page 2 I_vote_lcapசிங்கப்பூரின் தந்தை லீ குவான் இயூ காலமானார் - Page 2 I_voting_barசிங்கப்பூரின் தந்தை லீ குவான் இயூ காலமானார் - Page 2 I_vote_rcap 
2 Posts - 3%
Raji@123
சிங்கப்பூரின் தந்தை லீ குவான் இயூ காலமானார் - Page 2 I_vote_lcapசிங்கப்பூரின் தந்தை லீ குவான் இயூ காலமானார் - Page 2 I_voting_barசிங்கப்பூரின் தந்தை லீ குவான் இயூ காலமானார் - Page 2 I_vote_rcap 
2 Posts - 3%
kavithasankar
சிங்கப்பூரின் தந்தை லீ குவான் இயூ காலமானார் - Page 2 I_vote_lcapசிங்கப்பூரின் தந்தை லீ குவான் இயூ காலமானார் - Page 2 I_voting_barசிங்கப்பூரின் தந்தை லீ குவான் இயூ காலமானார் - Page 2 I_vote_rcap 
1 Post - 2%
Barushree
சிங்கப்பூரின் தந்தை லீ குவான் இயூ காலமானார் - Page 2 I_vote_lcapசிங்கப்பூரின் தந்தை லீ குவான் இயூ காலமானார் - Page 2 I_voting_barசிங்கப்பூரின் தந்தை லீ குவான் இயூ காலமானார் - Page 2 I_vote_rcap 
1 Post - 2%
M. Priya
சிங்கப்பூரின் தந்தை லீ குவான் இயூ காலமானார் - Page 2 I_vote_lcapசிங்கப்பூரின் தந்தை லீ குவான் இயூ காலமானார் - Page 2 I_voting_barசிங்கப்பூரின் தந்தை லீ குவான் இயூ காலமானார் - Page 2 I_vote_rcap 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
சிங்கப்பூரின் தந்தை லீ குவான் இயூ காலமானார் - Page 2 I_vote_lcapசிங்கப்பூரின் தந்தை லீ குவான் இயூ காலமானார் - Page 2 I_voting_barசிங்கப்பூரின் தந்தை லீ குவான் இயூ காலமானார் - Page 2 I_vote_rcap 
155 Posts - 42%
ayyasamy ram
சிங்கப்பூரின் தந்தை லீ குவான் இயூ காலமானார் - Page 2 I_vote_lcapசிங்கப்பூரின் தந்தை லீ குவான் இயூ காலமானார் - Page 2 I_voting_barசிங்கப்பூரின் தந்தை லீ குவான் இயூ காலமானார் - Page 2 I_vote_rcap 
140 Posts - 38%
mohamed nizamudeen
சிங்கப்பூரின் தந்தை லீ குவான் இயூ காலமானார் - Page 2 I_vote_lcapசிங்கப்பூரின் தந்தை லீ குவான் இயூ காலமானார் - Page 2 I_voting_barசிங்கப்பூரின் தந்தை லீ குவான் இயூ காலமானார் - Page 2 I_vote_rcap 
21 Posts - 6%
Dr.S.Soundarapandian
சிங்கப்பூரின் தந்தை லீ குவான் இயூ காலமானார் - Page 2 I_vote_lcapசிங்கப்பூரின் தந்தை லீ குவான் இயூ காலமானார் - Page 2 I_voting_barசிங்கப்பூரின் தந்தை லீ குவான் இயூ காலமானார் - Page 2 I_vote_rcap 
21 Posts - 6%
Rathinavelu
சிங்கப்பூரின் தந்தை லீ குவான் இயூ காலமானார் - Page 2 I_vote_lcapசிங்கப்பூரின் தந்தை லீ குவான் இயூ காலமானார் - Page 2 I_voting_barசிங்கப்பூரின் தந்தை லீ குவான் இயூ காலமானார் - Page 2 I_vote_rcap 
8 Posts - 2%
prajai
சிங்கப்பூரின் தந்தை லீ குவான் இயூ காலமானார் - Page 2 I_vote_lcapசிங்கப்பூரின் தந்தை லீ குவான் இயூ காலமானார் - Page 2 I_voting_barசிங்கப்பூரின் தந்தை லீ குவான் இயூ காலமானார் - Page 2 I_vote_rcap 
8 Posts - 2%
வேல்முருகன் காசி
சிங்கப்பூரின் தந்தை லீ குவான் இயூ காலமானார் - Page 2 I_vote_lcapசிங்கப்பூரின் தந்தை லீ குவான் இயூ காலமானார் - Page 2 I_voting_barசிங்கப்பூரின் தந்தை லீ குவான் இயூ காலமானார் - Page 2 I_vote_rcap 
7 Posts - 2%
T.N.Balasubramanian
சிங்கப்பூரின் தந்தை லீ குவான் இயூ காலமானார் - Page 2 I_vote_lcapசிங்கப்பூரின் தந்தை லீ குவான் இயூ காலமானார் - Page 2 I_voting_barசிங்கப்பூரின் தந்தை லீ குவான் இயூ காலமானார் - Page 2 I_vote_rcap 
5 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
சிங்கப்பூரின் தந்தை லீ குவான் இயூ காலமானார் - Page 2 I_vote_lcapசிங்கப்பூரின் தந்தை லீ குவான் இயூ காலமானார் - Page 2 I_voting_barசிங்கப்பூரின் தந்தை லீ குவான் இயூ காலமானார் - Page 2 I_vote_rcap 
4 Posts - 1%
Guna.D
சிங்கப்பூரின் தந்தை லீ குவான் இயூ காலமானார் - Page 2 I_vote_lcapசிங்கப்பூரின் தந்தை லீ குவான் இயூ காலமானார் - Page 2 I_voting_barசிங்கப்பூரின் தந்தை லீ குவான் இயூ காலமானார் - Page 2 I_vote_rcap 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சிங்கப்பூரின் தந்தை லீ குவான் இயூ காலமானார்


   
   

Page 2 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 83994
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Mar 23, 2015 8:46 am

First topic message reminder :

சிங்கப்பூரின் தந்தை லீ குவான் இயூ காலமானார் - Page 2 Mood4Y29R2z41dWtUKgQ+MRLEE_2
-
சிங்கப்பூரின் தந்தை திரு லீ குவான் இயூ
இன்று திங்கட்கிழமை 23.3.2015 அதிகாலை
3.18 மணிக்கு சிங்கப்பூர் பொது மருத்துவமனையில்
காலமானார்.

இதனை பிரதமர் அலுவலகம் தெரிவித்தது.
திரு லீ குவான் இயூ நிமோனியா பாதிப்புக்காக
கடந்த பிப்ரவரி 5ஆம் தேதி
முதல் சிங்கப்பூர் பொது மருத்துவமனையில்
சேர்க்கப்பட்டிருந்தார்.

————————————


T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35060
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Mon Mar 23, 2015 5:39 pm

இன்றைய சிங்கப்பூர் ஒரு எடுத்துக்காட்டு எனில் ,
அதற்கு மூலக் காரணம் லீ குவான் இயூ என்றால் மிகையாது .
ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Mar 23, 2015 5:56 pm

சிங்கப்பூரின் நிஜ நாயகன் லீ குவான் யூ !

சிங்கப்பூரின் தந்தை லீ குவான் இயூ காலமானார் - Page 2 Li0223_1

எதுவுமே இல்லை என்பதிலிருந்து எதுவும் சாத்தியம் என்பதை சாதித்து காட்டிய லீ குவானின் மறைவு சிங்கப்பூர் மக்களிடையே மட்டுமல்லாது, உலக அளவிலும் அதிர்ச்சியையும், துயரத்தையும் ஏற்படுத்தி உள்ளது.

லீ குவான் யூ நவீன சிங்கப்பூரைச் செதுக்கியவர். சிங்கப்பூர் ராபல்ஸ் என்பவரால் நிர்மாணிக்கப்பட்டது. பல்வேறு தீவுகளைக்கொண்ட சில நூறு சதுரகிலோமீட்டர்கள் கொண்ட சிறிய தேசம் அது. ராபல்ஸ் கட்டுப்பாடுகள் அற்ற துறைமுகமாகச் சிங்கப்பூரை மாற்றினார். இங்கிலாந்து ஆதிக்கத்தின் கீழ் அப்பகுதி ஒரு ஐம்பது வருடங்களுக்கு முன்வரை இருந்தது. லீ குவான் யூ நான்கு தேசியகீதங்கள் பாடுகிற அளவுக்கு நாட்டில் இந்த ஐம்பது வருட காலத்துக்குள் எண்ணற்ற மாற்றங்கள் நிகழ்ந்தன.

லீ, செல்வம் வளம் மிகுந்த பாபாக்கள் என்று அழைக்கப்படும் சீனப் பாரம்பரியம் கொண்ட தொழிற்துறையில் இயங்குகிற குடும்பத்தில் வளர்ந்தவர். தங்கத்தட்டில் ஏந்திப் பிள்ளையைக் கொண்டாடினார்கள். அவரின் இளம்வயது முதலாளித்துவக் காதல், பொருளாதார வீழ்ச்சியின்பொழுது விழுந்தது. குடும்பம் நடுத்தெருவுக்கு வந்திருந்தது. அம்மா எண்ணற்ற வேலைகள் செய்து குடும்பத்தைக் கரை சேர்த்தார்.கேம்ப்ரிட்ஜில் படிக்கப்போன லீக்கு ஆங்கிலேயர்களின் நிறவெறி அதிர்ச்சியை அதிகரித்தது. பட்டங்கள் பெற்று நாடு திரும்பிய சூழலில், உலகப்போரில் ஜப்பான், பிரிட்டனைப் பந்தாடியது அவருக்கு இங்கிலாந்து மீதிருந்த காதலை அடித்து நொறுக்கியது.

ஜப்பானுக்குப் போரில் வேலை பார்த்து அவர் தன்னைக் காப்பாற்றிக்கொண்டார். சோசியலிசம் மீதான காதல் அரும்பி மறைந்திருந்தது.இங்கிலாந்து உலகப்போருக்குப் பின்னர் மீண்டும் சிங்கப்பூரைப் பிடித்துக்கொண்டது. PAP கட்சியை, தோழர்களோடு இணைந்து ஆரம்பித்தார் அவர். டோய்ன்பீ-யின் நூல்களை வாசித்தது பெரிய மாற்றத்தை அவருக்குள் உண்டாக்கியது. படைப்பாற்றல் கொண்ட சிறுபான்மையினரே நாட்டை மாற்றியமைப்பார்கள் என்கிற சிந்தனை ஆழமாக அவருக்குள் வேர்விட்டிருந்தது. ஜெர்மனி உலகப்போருக்குப் பின்னர் வலிமையான அரசாங்கத்தால் படிப்படியாக அற்புதமாக எழுந்தது அவரின் எண்ணத்தை வலுப்படுத்தியது.

முதல் முதலாகப் பிரிட்டன் கட்டுப்பாட்டில் இருக்கும் பொழுது நடந்த தேர்தலில் அவரின் கட்சி ஒப்புக்கு போட்டியிட்டு நான்கு தொகுதிகளை வென்றது. மலேசியாவின் பிரதமர் எங்களோடு நீங்கள் இணையுங்கள் என்று அழைத்தார். லீ அதை முன் வைத்து, தேர்தலில் பிரிட்டனுக்கு எதிராக விடுதலை மற்றும் மலேசிய இணைப்புக்கு ஆதரவாகப் பிரச்சாரம் செய்தார். தேர்தலில் கட்சி அமோக வெற்றிப் பெற்றது. மலேசியாவுடன் இணைந்தபிறகு சிக்கல்கள் ஆரம்பித்தன.



இயற்கை வளங்களோ, தங்களைப்போல ஒரே இனமாகவோ இல்லாத சிங்கப்பூர் மக்களை ஏற்றுக்கொள்வதில் சிக்கல்கள் எழுந்தன.ஒரு கட்டத்தில் பெரும் கலவரங்கள் வெடித்தன. சிங்கப்பூர் தனிதேசமாக உருவான பொழுது அது நீடித்து நிற்காது என்பதே பலரின் பார்வையாக இருந்தது. "பெருத்த துயரத்தோடு தான் இந்தப் பிரிவை நான் ஏற்றுக்கொள்கிறேன் !" என்று சொல்லிவிட்டு லீ சிலகாலம் நோய்வாய்ப்பட்டுக் கிடந்தார். பின்னர் எழுந்து வந்தார்.லீ தனக்கென்று பாதைகள் வகுத்துக்கொண்டார்.

ஜனநாயகம் என்றெல்லாம் பெரிதாக வாய்த் திறக்கக்கூடாது. தேசத்தின் தேவைகள் முக்கியம். மூன்றுவகையாக மக்களை வடிவமைத்தார். நல்ல தலைவர்கள் மேலே இருப்பார்கள்,சிறந்த அதிகார வட்டம் அடுத்து இருக்கும்,மீதமிருக்கும் மக்கள் சுய மற்றும் சமூகக் கட்டுப்பாட்டோடு நடந்து கொள்ளவேண்டும். தேசம் உருப்படும் என்பது அவரின் பார்வையாக இருந்தது. கூடவே எப்பொழுதும் தன்னைச் சீனா சாப்பிடலாம் என்கிற அச்சம்துளிர்க்கவே வலுவான ராணுவத்தை இஸ்ரேலின் உதவியோடு அமைத்துக்கொண்டார்கள். அரசு செய்கிற செலவில் கால்வாசி ராணுவம்
சார்ந்தே அமைந்திருந்தது,

சான் பிரான்சிஸ்கோ பங்குச்சந்தை மூடுவதற்கும், ஜெர்மனியின் ஜூரிச் பங்குச்சந்தை திறப்பதற்கும் இடையே அரைநாள் அளவுக்கு இடைவெளி இருப்பதை நெதர்லாந்தில் இருந்து பொருளாதார ஆலோசனை சொல்ல வந்த ஆல்பர்ட் வின்செமியஸ் கவனித்துச் சொன்னார். இருபத்திநான்கு மணிநேரமும் இயங்கும் பங்குச்சந்தை ஆரம்பிக்கப்பட்டது. பெரிய தொல்லைகள் தராமல் தொழில் தொடங்க கதவுகள் திறந்து விடப்பட்டன. வரி விதிப்பு அளவுகள் குறைவாக இருந்து, முதலீட்டாளர்களின் சொர்க்கமானது சிங்கப்பூர்

பல பில்லியன் டாலர்களை இருக்கிற பத்துக்கும் குறைவான பல்கலைக்கழகங்கள் மற்றும் பாலிடெக்னிக்குகள் ஆகியவற்றுக்கு ஒதுக்கினார். பள்ளிகளில் கல்வி அரசு கவனித்து வழங்குவதாக மாறியது. வெளிநாட்டில் இருப்பவர்கள் படிக்க வந்தால் கிட்டத்தட்ட இலவசம் என்று கூவிக்கூவி அழைத்தார்கள். படித்த பின்பு இங்கேயே நிரந்தரமாகத் தங்கிக்கொள்ளும் வாய்ப்பு மற்றும் மூன்று ஆண்டுகள் கட்டாய வேலை ஒப்பந்தம் காத்திருக்கும். இப்படி உலகம்முழுக்கவும் இருந்து சிறந்த திறமைகள் வந்து சேர்ந்தன. சேரிகள் புதிய கட்டடத்திட்டங்களின் மூலம் காலி செய்யப்பட்டன. வசதியான வீடுகள்கட்டித்தரப்பட்டன. இலவசம் இல்லையென்றாலும் படிப்படியாக மக்களிடம் இருந்து அவர்களின் வருமானத்தில் இருந்துபோட்ட பணம் மீட்டெடுக்கப்பட்டது.

சின்னத் தேசம் என்பதும், ஏற்றுமதியை முன்னிலைப்படுத்தியும் நகர்ந்ததால் ரோட்டில் கார்கள் ஓடத் தடைகள் சுற்றி வளைத்து விதிக்கப்பட்டன. பத்து சதவிகித நிலப்பரப்பு இயற்கைப் பாதுகாப்புக்கு ஒதுக்கப்பட்டது. உலகம் முழுக்க இருந்து நாட்டுக்குள் நடைபெற்றபெரும்பாலான தொழில்களை அரசாங்கம் கவனித்துக்கொண்டாலும், அவற்றின் மேலாண்மையைச் செயல்படுத்த எண்ணற்ற சுதந்திரம் கொண்ட அதிகாரிகள் நியமிக்கப்பட்டார்கள். கட்டாயப் PF திட்டத்தின் கீழ் எல்லாச் சம்பளக்காரர்களின் சேமிப்பில் ஐம்பது சதவிகிதம் நாட்டின் வளர்ச்சித் திட்டங்கள் நோக்கி செலுத்தப்பட்டது.



கேள்விகள் கேட்கிற எதிர்க்கட்சியினர், பத்திரிக்கையாளர்கள், மனித உரிமை என்று குரல் கொடுப்பவர்கள் யாராக இருந்தாலும் கேள்விகள் கேட்காமல் சிறை வரவேற்கும். நீதி என்றெல்லாம் பேச முடியாது. சொத்துக்கள் பறிமுதல் செய்யப்படும். சீனப்பாரம்பரியம் கொண்டவர்கள்தான் எண்பது சதவிகிதத்துக்கும் மேலே கல்லூரிகளில் இடம் பெற்றிருக்கிறார்கள். கல்லூரிகளிலும் பெரும்பாலான உதவித்தொகைகள் அவர்களுக்கே சென்று சேர்கிறது. பாதி ஜனநாயகம் கொண்டிருக்கும் இந்தத் தேசத்தில் ஆளுங்கட்சியான லீயின் கட்சியை எதிர்த்து பெரும்பாலும் வேட்பாளர்கள் நிற்க மாட்டார்கள்.

இப்பொழுது லீயின் மகன் கோலோச்சுகிறார். நாட்டின் பரப்பளவு லீ குவான் யூ போட்ட பாதையில் விரிந்து கொண்டே செல்கிறது. உலகிலேயே வர்த்தகம் செய்ய விரும்புகிறவர்களின் சொர்க்க பூமியாகச் சிங்கப்பூர் இருக்கிறது. அதற்காகத் தியாகங்கள் சிலவற்றை மக்களைச் செய்யவைத்த அதிகார சூத்திரதாரியான லீ, ஊழலுக்கு எதிராகக் கடுமையான சட்டங்களை வகுத்துச் செயல்படுத்தியதும் நல்ல பலன் தந்தது. அவர் தண்ணீருக்குக் கூடப் பக்கத்துத் தேசத்தை நம்பிக்கொண்டிருந்த மண்ணைத் தலைநிமிர்ந்து உலக வல்லரசுகளில் ஒன்றாக மாற்றிய திருப்தியோடு விடை பெற்றுக்கொண்டார்.

"ஆசியாவின் இருண்ட மூலையில் இருக்கும் பாவப்பட்ட சிறிய சந்தை !" எனப்பட்ட சிங்கப்பூர், 'பொருளாதாரப்புலி' என்கிற பெயரை அவரின் பணிகளால் பெற்றது. எதுவுமே இல்லை என்பதிலிருந்து எதுவும் சாத்தியம் என்பதைச் சாதித்த சிங்கப்பூரின் நிஜ நாயகன் அவர்.



சிங்கப்பூரின் தந்தை லீ குவான் இயூ காலமானார் - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Mar 23, 2015 5:57 pm

சிங்கப்பூரின் தந்தை லீ குவான் இயூ காலமானார் - Page 2 11066789_800135093397292_3266818377709006587_n



சிங்கப்பூரின் தந்தை லீ குவான் இயூ காலமானார் - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Mar 23, 2015 5:59 pm

சிங்கப்பூரின் தந்தை லீ குவான் இயூ காலமானார் - Page 2 10847474_880826751980032_217974693823592584_o



சிங்கப்பூரின் தந்தை லீ குவான் இயூ காலமானார் - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Mar 23, 2015 6:08 pm

சிங்கப்பூரின் தந்தை லீ குவான் இயூ காலமானார் - Page 2 10168184_1011673315510735_2135688593729648950_n



சிங்கப்பூரின் தந்தை லீ குவான் இயூ காலமானார் - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Mar 23, 2015 6:37 pm

காலத்தை வென்றவர் லீ...: காவியம் ஆனவர் லீ...

சிங்கப்பூர் : மக்கள் நலனையும், நாட்டின் உயர்வையும், சுகாதாரத்தையும் லட்சியமாகக் கொண்டு வாழ்ந்த மாபெரும் தலைவர் ; நவீன சிங்கப்பூரின் தந்தை என்று போற்றப்படும் லீ க்வான் யூ. இது போன்ற தலைவர் தங்களுக்கும், தங்கள் நாட்டிற்கும் கிடைக்க மாட்டாரா என உலக மக்களை ஏங்க வைத்தவர். தனது வாழ்நாளில் உலக நாடுகளுக்கு வழிகாட்டும் வகையில் லீ பேசிய சிறந்த மேடைப் பேச்சுகள் மற்றும் பேட்டிகளில் இருந்து எடுக்கப்பட்ட துளிகள்:

" மனிதர்கள் அனைவரும் சமம். அனைத்து மதங்களும், அரசியல் கொள்கையாளர்களும் கூறுவதும் இதனைத் தான். கட்சி பேதங்கள், மதங்கள், கொள்கைகளின் அடிப்படையில் மக்களை வேறுபடுத்தி பார்க்காதீர்கள். அவ்வாறு செய்யாவிட்டால் அந்நாடு அழிவை சந்திக்கும்.

சிங்கப்பூரில் இருக்கும் அமெரிக்க பத்திரிக்கையாளர்களை நாங்கள் மதிக்கிறோம். சிங்கப்பூர் தலைவர்கள் குறித்து அவர்கள் கூறும் கருத்துக்களையும் வரவேற்கிறோம். சிங்கப்பூரைப் பற்றி வெளிநாட்டிவர் என்ன படிக்கிறார்கள் என்பது எங்களுக்கு தெரியும். சிங்கப்பூரில் இருக்கும் வெளிநாட்டு பத்திரிகைகளையும் நாங்கள் நேசிக்கிறோம். ஆனால் அமெரிக்க பத்திரிகைகள் சிங்கப்பூரின் ஆட்சி அதிகாரங்களில் தலையிடுவதை அனுமதிக்க மாட்டோம். அமெரிக்க பத்திரிகைகள் அமெரிக்காவை ஆளலாம்.

1959 முதல் 7 பொதுத் தேர்தல்களை சந்தித்துள்ளேன். சிங்கப்பூரை சிறப்பாக மாற்ற நான் செய்துள்ள திட்டங்களே, சிங்கப்பூர் மக்கள் என் மீது வைத்திருக்கும் நம்பிக்கைக்கு சான்று". இவை பல்வேறு காலகட்டங்களில் அவர் பேசியவை.

லீ ஒரு சர்வாதிகாரி, அடக்குமுறையாளர் என பலரும் விமர்சித்து வந்த வேளையில் அதற்கு அவர் அளித்த பதில்:

''நீங்கள் சிங்கப்பூரில் நல்லாட்சி நடத்த வேண்டுமானால் இரும்பு கரம் கொண்டு செயல்பட வேண்டும். மற்றவற்றை தூக்கி எறியுங்கள். இது சீட்டுக்கட்டு விளையாட்டல்ல. இதில் உங்கள் வாழ்க்கையும் என் வாழ்க்கையும் அடங்கி உள்ளது. நமது மொத்த வாழ்க்கையும் சேர்ந்து உருவானது தான் இந்த கட்டடம். இதற்கு மற்றவர்கள் பொறுப்பேற்க முடியாது.

மக்களின் நல்வாழ்வு மற்றும் வாழ்வாதாரமே எங்களின் முக்கிய நோக்கம். அடுத்தது ஜனநாயக நடைமுறைகள் மற்றும் செயல்பாடுகள். அதனை காலத்திற்கு தகுந்தாற் போல் மாற்ற வேண்டும். மீடியாக்களின் விமர்சனத்திற்கும் மக்களின் எண்ணங்களுக்கும் ஏற்றவாறு நீங்கள் ஆடிக் கொண்டிருந்தால் நல்ல தலைவனாக இருக்க முடியாது. புயல் எந்த திசையில் அடித்தாலும் அதனை சமாளிக்கும் திறன் வேண்டும். அதன் போக்கில் செல்வது திறமையல்ல.

அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட உலகின் பல்வேறு நாடுகளும் கருத்து சுதந்திரம், கருத்து உரிமை என்ற பெயரில் தங்கள் நாட்டு தலைவர்களை கேலி செய்து கார்ட்டூன்கள் வெளியிட்டு வருகின்றன. ஆனால் சிங்கப்பூரில் அப்படி கிடையாது. தலைவர்களை அவர்கள் மதிக்கிறார்கள். தலைவர்களை கேலி செய்வதை அனுமதித்தால் அவர்களின் ஆணைக்கு அங்கு மதிப்பு கிடைப்பது கடினம்.

உங்களைச் சுற்றி இருப்பவர்கள் யார், நீங்கள் எப்படி வாழ்கிறீர்கள், எப்படி பேசுகிறீர்கள், என்ன பேசுகிறீர்கள், எங்கு பேசுகிறீர்கள், என்ன மொழி பயன்படுத்துகிறீர்கள் என்பன போன்ற உள்ளார்ந்த தேடல்களை தீவிரமாக மேற்கொள்ளாவிட்டால், நாம் பொருளாதார வளர்ச்சி காண முடியாது. நாம் இன்று இந்த இடத்திற்கு வந்திருக்க முடியாது'' என்றார்.

உடல் ஆரோக்கியத்தில் அதிக அக்கறை கொண்டவர் லீ. அவரிடம் புகைப்பழக்கம், குடிப்பழக்கம் போன்றவை கிடையாது. தினமும் அதிகாலையில் எழுந்து உடற்பயிற்சி, நீச்சல் பயிற்சி செய்வதை வழக்கமாகக் கொண்டவர். இது தான் தனது உற்சாகத்தின் ரகசியம் எனவும் அவர் பல முறை கூறி உள்ளார்.

தான் எவ்வாறு சுத்தமாக இருக்க வேண்டும் என கருதுவாரோ அதே அளவிற்கு சுற்றுப்புறமும் சுத்தமாக இருக்க வேண்டும் என விரும்பியவர் லீ. அதற்கான நடவடிக்கைகளில் தானே நேரடியாக களத்தில் இறங்கி செயல்பட்டார். அதில் வெற்றியும் கண்டு, இன்றைய தூய்மை நகரமாக சிங்கப்பூரை மாற்றி காட்டி உள்ளார்.

அது குறித்து அவர் ஒருமுறை மேடையில் பேசிய போது, "நான் மரணப்படுக்கையில் இருந்தால் கூட என்னைச் சுற்றி அசுத்தம் இருப்பதை உணர்ந்தால் ஏதோ தவறு நடக்கிறது என்பதை புரிந்து கொண்டு மீண்டும் எழுந்து வருவேன்" என சுத்தத்தை உயிர்மூச்சாக எண்ணி முழங்கிய, மகத்தான தலைவர் லீ.



சிங்கப்பூரின் தந்தை லீ குவான் இயூ காலமானார் - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Mar 25, 2015 12:02 pm


லீ குவான் யூ இறுதிச்சடங்கில் கலந்துகொள்கிறார் மோடி!

modiபுதுடெல்லி, மார்ச் 25 – சிங்கப்பூரின் தந்தை என போற்றப்படும் லீ குவான் யூ இறுதிச்சடங்கில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொள்கிறார். நிமோனியா காய்ச்சலால் லீ குவான் 91 வயதில் கடந்த ஞாயிற்றுக்கிழமை காலமானார்.

அவரது இறுதிச்சடங்கு வரும் 29-ஆம் தேதி நடைபெறுகிறது. லீ குவான் இறுதிச்சடங்கில், பிரதமர் மோடி கலந்துகொள்வார் என வெளியுறவு செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

முன்னதாக நேற்று முன்தினம் பிரதமர் மோடி வெளியிட்டிருந்த இரங்கல் செய்தியில், “சிங்கப்பூர் தந்தையும் முன்னாள் பிரதமருமான லீ குவான் யூ மரணமடைந்தது மிகவும் வேதனை அளிக்கும் தருணம்”.

“தொலைநோக்குப் பார்வையுடன் தலைவர்கள் மத்தியில் சிங்கமாகத் திகழ்ந்தவர். லீயின் வாழ்க்கை நமக்கு நிறைய பாடங்களை அளிப்பதாக இருக்கிறது. அவரது இழப்பு வருத்தமளிக்கிறது”.

“லீயின் குடும்பத்தினருக்கும் அம்மக்களுக்கும் நமது பிரார்த்தனை எப்போதும் உடனிருக்கும். லீயின் ஆன்மா சாந்தியடையட்டும்” என்று தெரிவித்திருந்தார் மோடி.




சிங்கப்பூரின் தந்தை லீ குவான் இயூ காலமானார் - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Mar 25, 2015 12:04 pm

லீ குவான் இயூ மறைவு: உலகத் தலைவர்கள் இரங்கல் புத்தகத்தில் கையெழுத்திட்டு அஞ்சலி (படத்தொகுப்பு)

சிங்கப்பூர், மார்ச் 25 – மறைந்த சிங்கப்பூரின் முன்னாள் பிரதமர் லீ குவான் இயூவிற்கு உலகத்தலைவர்கள் பலர், அந்தந்த நாட்டில் அமைந்திருக்கும் சிங்கப்பூர் தூதரகத்திற்கு சென்று இரங்கல் புத்தகத்தில் கையெழுத்திட்டு தங்களது அனுதாபங்களைத் தெரிவித்து வருகின்றனர்.

சிங்கப்பூரின் தந்தை லீ குவான் இயூ காலமானார் - Page 2 Lee-4
 (மலேசியப் பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக், கோலாலம்பூரில் அமைந்திருக்கும் சிங்கப்பூர் தூதரகத்தில் வைக்கப்பட்டிருக்கும் இரங்கல் புத்தகத்தில் கையெழுத்திட்டார்.)


சிங்கப்பூரின் தந்தை லீ குவான் இயூ காலமானார் - Page 2 Lee-3
(தென்கொரியாவின் வெளியுறவுத்துறை அமைச்சர் யங் பியங் சே, சியோலில் அமைந்திருக்கும் சிங்கப்பூர் தூதரகத்தில் வைக்கப்பட்டிருக்கும் இரங்கல் புத்தகத்தில் கையெழுத்திட்டார்.)


சிங்கப்பூரின் தந்தை லீ குவான் இயூ காலமானார் - Page 2 Lee-1
(அமெரிக்க பொதுச்செயலாளர் பான் கீ மூன், நியூயார்க்கில் அமைந்திருக்கும் சிங்கப்பூர் தூதரகத்தில் வைக்கப்பட்டிருக்கும் இரங்கல் புத்தகத்தில் கையெழுத்திட்டார்.)


சிங்கப்பூரின் தந்தை லீ குவான் இயூ காலமானார் - Page 2 Lee-2
(ஜப்பான் பிரதமர் சின்ஸோ அபே, டோக்கியோவில் அமைந்திருக்கும் சிங்கப்பூர் தூதரகத்தில் வைக்கப்பட்டிருக்கும் இரங்கல் புத்தகத்தில் கையெழுத்திட்டார்.)


சிங்கப்பூரின் தந்தை லீ குவான் இயூ காலமானார் - Page 2 Lee-5
(சிங்கப்பூர் முன்னாள் அதிபர் எஸ்.ஆர்.நாதன், சிங்கப்பூர் இஸ்தானா அதிபர் மாளிகையில் வைக்கப்பட்டிருக்கும் லீ குவான் இயூ நல்லுடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்தி, இரங்கல் புத்தகத்தில் கையெழுத்திட்டார்.)


சிங்கப்பூரின் தந்தை லீ குவான் இயூ காலமானார் - Page 2 51859080

(சிங்கப்பூரின் நடப்பு அதிபர் டோனி டான் கெங், தனது மனைவியுடன் சிங்கப்பூர் நாடாளுமன்ற கட்டிடத்தில் வைக்கப்பட்டிருக்கும் இரங்கல் புத்தகத்தில் கையெழுத்திட்டார்.)


மறைந்த சிங்கப்பூரின் முதல் பிரதமர் திரு லீ குவான் இயூவின் இறுதிச் சடங்கில் உலகத் தலைவர்கள் பலர் பங்கேற்கவுள்ளனர்.

எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 2 மணிக்கு சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகத்தின் கலாசார மண்டபத்தில் நிகழும் இச்சடங்கில் நேரடியாகக் கலந்துகொள்ள உலகத் தலைவர்கள் தங்களது பயணத்தை உறுதிசெய்து வருகின்றனர்.



சிங்கப்பூரின் தந்தை லீ குவான் இயூ காலமானார் - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Mar 25, 2015 5:12 pm

தமிழர்கள் மீது தனிப்பாசம் கொண்ட லீ குவான் யூ

தற்போது சிங்கப்பூர் பிரதமராக லீயின் மூத்த மகன் லீசியன் லூங் இருக்கிறார். லீயின் வாரிசு என்பதால் எளிதில் சியனுக்கு பிரதமர் அரியணை கிடைத்திடவில்லை. ஹார்வர்டு பல்கலைகழகத்தில் முதுகலைபட்டம் பெற்று 13 ஆண்டுகள் ராணுவத்தில் பயிற்சி பெற்ற பிறகு தான் 1990–ல் துணை பிரதமர் ஆனார். 14 ஆண்டுகள் கழித்து 2004–ல் பிரதமர் ஆனார்.

நடிகர் ரஜினிகாந்திடம் டைரக்டர் பாலசந்தர் ஒருமுறை உனக்கு பிடித்த தலைவர் யார்? என்று கேட்ட போது டக் என்று சொன்னார். ‘எனக்கு பிடித்த தலைவர் சிங்கப்பூர் பிரதமர் லீ குவான் யூ என்று.

தமிழர்கள் மீது லீ தனிப்பாசம் கொண்டவர். இலங்கை தமிழர் பிரச்சினையில் இலங்கை அரசை கடுமையாக விமர்சித்தார். அப்போது அவர் கூறியதாவது:–

இலங்கை கட்டாயம் ஒரு சந்தோசமான நாடாக இருக்க வாய்ப்பில்லை. யாழ்ப்பாணத்தில் வாழும் தமிழர்களுக்கு இழைக்கப்படும். அநீதியை பொறுக்க முடியவில்லை. இலங்கையில் சிங்களர்கள் இருந்த காலம் தொட்டு தமிழர்களும் இருந்து வருகிறார்கள். அந்த நிலப்பரப்பில் இரு இனத்தவர்களுக்கும் சம உரிமை உண்டு. ஆனால் திறமையில் தமிழர்களைவிட பின் தங்கிய சிங்களர்கள் தாழ்வு மனப்பான்மையால் தமிழர்களை கொன்று வருகிறார்கள். அதை எதிர்த்து ஈழத் தமிழர்கள் தொடுத்த போர் என்னை பொறுத்தவரை நியாய மானதே.

நான் ராஜபக்சேவின் சில பிரசாரங்களையும், மேடை பேச்சுக்களையும் கேட்டிருக்கிறேன். அதையெல்லாம் வைத்து பார்க்கும் போது அவர் ஒரு சிங்கள வெறியர் என்றுதான் தோன்றுகிறது. வெற்றிக்காக எதையும் துணிந்து செய்யக்கூடியவர் என்று புரிகிறது.

இந்த போரில் தமிழர்களின் தோல்வி தற்காலிகமானது. அவர்கள் வெகுநாட்களாக அமைதியாக இருக்கப்போவதில்லை. கூடிய விரைவில் மீண்டு வருவார்கள்.



சிங்கப்பூரின் தந்தை லீ குவான் இயூ காலமானார் - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Mar 25, 2015 5:14 pm

சிங்கப்பூரை சொர்க்க பூமியாக மாற்றிய மாமனிதர் லீ குவான் யூ

அக்கரை சீமை அழகினிலே மனம் ஆடக்கண்டேனே...
புதுமையிலே மயங்குகிறேன்...
பார்க்க பார்க்க ஆனந்தம்
வேலையின்றி யாரும் இல்லை எங்கும் சந்தோசம்!
வெறும் பேச்சு வெட்டிக்கூட்டம் ஏதும் இல்லை
இந்த ஊரில் சீனர், தமிழர், மலேசிய மக்கள் உறவினர் போல
அன்புடன் நட்புடன் வாழும் சிங்கப்பூர்!

சொர்க்கம் போல இன்பமும் பெருமையும் வாழும் சிங்கப்பூர்...

– என்று கவிஞர்களையும் வியந்து பாட வைத்த பூமி சிங்கப்பூர்.

அரை நூற்றாண்டுக்கு முன்பு வரை குட்டித் தீவாய் காட்சியளித்த இந்த சின்னஞ்சிறு தீவு இன்று உலகமே அண்ணாந்து பார்த்து வியந்து மகிழும் அளவுக்கு சொர்க்க பூமியாக உயர்ந்து நிற்பது எப்படி?

ஒரு மாயா ஜாலக்காரரை போல் உலக தலைவர்கள் பிரமித்து பார்க்கும் இந்த மாபெரும் தலைவர் தான் சிங்கப்பூரை செதுக்கிய சிற்பி.

சிங்கப்பூரின் தந்தை என்று போற்றப்படும் இந்த சிற்பி உயிரற்ற சிற்பமாய் மாறி இரண்டு நாட்கள் ஆகிவிட்டன.

வழிந்தோடும் கண்ணீரோடு தங்கள் மனம் கவர்ந்த தலைவனுக்கு சிங்கப்பூர் பிரியா விடை கொடுத்து விட்டது.

உலகை சிருஷ்டித்த பிரம்மா போல் சிங்கப்பூரை சிருஷ்டிக்க இந்த மாமனிதர் அரும்பணியாற்றி இருக்கிறார்.

இந்த குட்டித்தீவில் தமிழர்கள், சீனர்கள், மலாய்மக்கள் என்று உலகின் பல நாட்டினரும் பிழைப்புதேடி சென்று குடியேறினார்கள்.

லீ குவான் யூவின் மூதாதையர்களும் சீனத்துகாரர்கள் தான். அந்த பரம்பரையில் 1923–ம் ஆண்டு லீ குவான் யூ பிறந்தார்.

அப்போது ஆங்கிலேயே ஏகாதிபத்தியத்தின் காலனி ஆதிக்கத்தின் கீழ் இருந்தது சிங்கப்பூர். படிப்பில் படுசுட்டியாக விளங்கிய லீ பள்ளிப்படிப்பை முடித்து பல்கலைக் கழக படிப்புக்கு நுழைந்த போது இரண்டாம் உலகப்போர் உக்கிரமாக நடந்து கொண்டிருந்ததால் படிப்பு தடைபட்டது. தனது உறவினரின் நிறுவனத்தில் பணியில் சேர்ந்தார். பின்னர் தானே சொந்தமாக ‘பசை’ தயாரித்து விற்பனை செய்தார்.

போரும் முடிவுக்கு வந்தது. அதன்பிறகு லீயின் வாழ்க்கை பயணமும் மாறியது. லண்டன் பல்கலைக் கழகத்தில் சட்டம் படித்து வக்கீல் ஆனார். சிங்கப்பூர் திரும்பிய லீ மாதம் 500 டாலர் சம்பளத்தில் ஜான் லே காக் என்ற சீனியர் வக்கீலிடம் ஜூனியராக பணியாற்றினார். தொழிற்சங்கம் மற்றும் மாணவர் அமைப்புகளுக்கு ஆலோசகராகவும் இருந்தார்.

1951–ல் நடந்த சட்டமன்ற தேர்தலில் பிரிட்டீஸ் ஆதரவு கட்சியின் பூத் ஏஜென்டாக பணியாற்றினார். அதுவே அவருக்கு அரசியல் ஆர்வத்தை ஊட்டியது.

அதன் விளைவாக 1954–ல் ‘மக்கள் செயல்கட்சி’ என்ற அரசியல் கட்சியை தொடங்கினார். மறு ஆண்டில் நடைபெற்ற தேர்தலில் லீயின் கட்சி எதிர்க்கட்சி அந்தஸ்தை பெற்றது.

1959–ல் நடந்த பொதுத் தேர்தலில் மொத்தம் உள்ள 53 தொகுதிகளில் 43 தொகுதியை லீயின் மக்கள் செயல் கட்சி கைப்பற்றியது. சிங்கப்பூரின் முதல் பிரதமராக அதே ஆண்டு ஜூன் 3–ந்தேதி பதவி ஏற்றார்.

சுய கவுரவத்துடன் தன்னிறைவு பெற்ற நாடாக சிங்கப்பூரை நிர்மாணிக்க திட்டமிட்டு பணியாற்றினார். மலாய் மக்களும், அதிக அளவில் வசித்ததால் சிங்கப்பூரைையும் மலேசியாவையும் இணைத்து ஒரே தேசமாக உருவாக்க பாடுபட்டார். அவரது முயற்சிக்கு ஆதரவும் கிடைத்தது.




சிங்கப்பூரின் தந்தை லீ குவான் இயூ காலமானார் - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Sponsored content

PostSponsored content



Page 2 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக