ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:49 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:11 pm

» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:49 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:35 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:18 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:25 am

» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Yesterday at 5:33 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:18 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:00 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sun Jun 30, 2024 10:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 8:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:34 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:09 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sun Jun 30, 2024 6:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:14 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 4:34 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

Top posting users this week
heezulia
அதிகாரி சகாயம்... வதம் செய்யும் அரசாங்கம்!  Poll_c10அதிகாரி சகாயம்... வதம் செய்யும் அரசாங்கம்!  Poll_m10அதிகாரி சகாயம்... வதம் செய்யும் அரசாங்கம்!  Poll_c10 
ayyasamy ram
அதிகாரி சகாயம்... வதம் செய்யும் அரசாங்கம்!  Poll_c10அதிகாரி சகாயம்... வதம் செய்யும் அரசாங்கம்!  Poll_m10அதிகாரி சகாயம்... வதம் செய்யும் அரசாங்கம்!  Poll_c10 
mohamed nizamudeen
அதிகாரி சகாயம்... வதம் செய்யும் அரசாங்கம்!  Poll_c10அதிகாரி சகாயம்... வதம் செய்யும் அரசாங்கம்!  Poll_m10அதிகாரி சகாயம்... வதம் செய்யும் அரசாங்கம்!  Poll_c10 
VENKUSADAS
அதிகாரி சகாயம்... வதம் செய்யும் அரசாங்கம்!  Poll_c10அதிகாரி சகாயம்... வதம் செய்யும் அரசாங்கம்!  Poll_m10அதிகாரி சகாயம்... வதம் செய்யும் அரசாங்கம்!  Poll_c10 

Top posting users this month
heezulia
அதிகாரி சகாயம்... வதம் செய்யும் அரசாங்கம்!  Poll_c10அதிகாரி சகாயம்... வதம் செய்யும் அரசாங்கம்!  Poll_m10அதிகாரி சகாயம்... வதம் செய்யும் அரசாங்கம்!  Poll_c10 
ayyasamy ram
அதிகாரி சகாயம்... வதம் செய்யும் அரசாங்கம்!  Poll_c10அதிகாரி சகாயம்... வதம் செய்யும் அரசாங்கம்!  Poll_m10அதிகாரி சகாயம்... வதம் செய்யும் அரசாங்கம்!  Poll_c10 
mohamed nizamudeen
அதிகாரி சகாயம்... வதம் செய்யும் அரசாங்கம்!  Poll_c10அதிகாரி சகாயம்... வதம் செய்யும் அரசாங்கம்!  Poll_m10அதிகாரி சகாயம்... வதம் செய்யும் அரசாங்கம்!  Poll_c10 
VENKUSADAS
அதிகாரி சகாயம்... வதம் செய்யும் அரசாங்கம்!  Poll_c10அதிகாரி சகாயம்... வதம் செய்யும் அரசாங்கம்!  Poll_m10அதிகாரி சகாயம்... வதம் செய்யும் அரசாங்கம்!  Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

அதிகாரி சகாயம்... வதம் செய்யும் அரசாங்கம்!

Go down

அதிகாரி சகாயம்... வதம் செய்யும் அரசாங்கம்!  Empty அதிகாரி சகாயம்... வதம் செய்யும் அரசாங்கம்!

Post by சிவா Mon Mar 23, 2015 12:05 am


அரசு அதிகாரிக்கு அரசாங்கத்திடம் இருந்தே ஒத்துழைப்பு இல்லை!
அதிகாரி சகாயம்... வதம் செய்யும் அரசாங்கம்!  P10a(2)மதுரை மாவட்டத்தில் நடந்த கிரானைட் கொள்ளை தொடர்பாக கடந்த நான்கு மாதங்களாக ஏகப்பட்ட தடைகளுக்கு இடையில் விசாரணை நடத்திவந்த ஐ.ஏ.எஸ் அதிகாரி சகாயம், தன் விசாரணையின் இடைக்கால அறிக்கையை சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார். அதில் கிரானைட் கொள்ளை தொடர்பான விவரங்களைவிட அதிகக் கவனம் ஈர்த்தது, சகாயத்தின் விசாரணைக்கு அரசாங்கம் போட்டுவந்த முட்டுக்கட்டைகள்தான்! விசாரணைக்கு அரசுத் தரப்பு எந்த அளவுக்கு இடைஞ்சல் கொடுத்தது என்பதை சகாயம் அணியினர் வாய்மொழியாக விவரிக்க, அதைக் கேட்ட நீதிமன்றமே அதிர்ச்சியில் ஆழ்ந்திருக்கிறது.

'விசாரணைக் குழுவின் செலவுக்காக அரசிடம் இருந்து பணம் பெறுவதில் ஒவ்வொரு கட்டத்திலும் ஏகத்துக்கும் தாமதம். மிக அடிப்படை செலவுகளுக்குக்கூட கையைப் பிசைந்துகொண்டிருக்க வேண்டிய நிலையில் இருந்தோம். கிரானைட் மோசடி தொடர்பாக பல துறைகளைச் சேர்ந்த 30-க்கும் மேற்பட்ட அதிகாரிகளிடம் பல தகவல்களைக் கேட்டிருந்தோம். ஆனால், அதை அவர்கள் பொருட்படுத்தவே இல்லை. காவல் துறையிலும் அதே நிலைதான். அதுவும் போக விசாரணை வியூகங்களை எதிர்தரப்புக்குத் தெரிவிப்பதில், அரசு அதிகாரிகள் பலரும் ஆர்வமாக இருந்தனர்’ என சகாயம் குழுவினர் சொல்லச் சொல்ல, தலைமை நீதிபதி கவுல் முகத்தில் கோபம் அதிகரித்தபடியே இருந்தது.

கிரானைட் மோசடி நிலத்துக்கும் நீர் நிலைகளுக்கும் உண்டாக்கிய பாதிப்புகளை புகைப்பட ஆதாரங்களுடன் சகாயம் சமர்பிக்க, அதிர்ச்சியில் உறைந்துவிட்டார் கவுல். அரசுத் தரப்பு வழக்குரைஞரிடம், 'இப்படி இயற்கை வளத்தைக் கொள்ளையடித்திருக்கிறார்களே...’ எனக் கோபத்தில் கடுகடுத்துவிட்டு, சகாயம் குழுவினரிடம், 'விசாரணை தொடர்ந்து நடைபெற உங்களுக்கு வேறு என்ன வேண்டும்?’ எனக் கேட்டிருக்கிறார். விசாரணை நடவடிக்கைகளைத் துரிதப்படுத்த ஓய்வு பெற்ற இரண்டு அதிகாரிகளைக் கேட்டிருக்கிறது சகாயம் தரப்பு. உடனே குறுக்கிட்ட அரசுத் தலைமை வழக்குரைஞர் சோமயாஜி, 'இது மிகவும் ரகசியமான விசாரணை. அதனால் அரசு அதிகாரிகளை அனுப்பலாம். ஓய்வுபெற்றவர்கள் வேண்டாம்’ எனக் கூறியிருக்கிறார்.

'ஏற்கெனவே நாங்கள் கேட்ட ஒரு அதிகாரியை அனுப்பவே இல்லை. இந்த இடைக்கால அறிக்கை தாக்கல் செய்வதற்கு இரண்டு நாட்கள் முன்னர்தான் அனுப்பினார்கள்’ என சகாயம் தரப்பினர் சொல்ல, 'அரசு அதிகாரிகள் உதவியுடன்தான் கனிமக் கொள்ளை நடந்திருக்கிறது. அவர்கள் கேட்கும் ஊழியர்களை அனுப்பி வையுங்கள்’ எனச் சொல்லியிருக்கிறார்கள் நீதிபதிகள்.

'இறுதிக்கட்ட விசாரணையை முடிக்க மூன்று லட்சம் ருபாய் தேவைப்படுகிறது. அதை நேரடியாகத் தரச் சொல்லுங்கள். ஒவ்வொன்றுக்கும் ஆட்சியர் அலுவலகத்தையே தொடர்புகொள்ள வேண்டியிருக்கிறது’ என சகாயம் தரப்பினர் சொல்ல, 'மாவட்ட நிர்வாகம் இழுத்தடிக்காமல் அந்தத் தொகையைக் கொடுக்க வேண்டும்’ எனக் கடிந்திருக்கிறார் நீதிபதி. இப்படி சகாயம் விசாரணைக் குழுவின் பல கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்றச் சொன்னதோடு, விசாரணைக் காலத்தை நான்கு வாரங்களுக்கு நீட்டித்து உத்தரவிட்டிருக்கிறது நீதிமன்றம்.

மதுரை அண்ணா பேருந்து நிலையத்துக்கு எதிரே உள்ள பூமாலை வணிக வளாகத்தில்தான் சகாயத்தின் விசாரணை அலுவலகம் அமைந்திருக்கிறது. சகாயம் குழுவினரை டீஸ் செய்யும் விதமாக, மாடியில் அவருக்கு ஒதுக்கப்பட்ட அலுவலகத்தையும் கீழே மகளிர் சுய உதவிக்குழுவினர் வைத்திருக்கும் கடைகளையும் காலி செய்யும்படியும், அந்த வளாகத்தில் நோட்டீஸ் ஒட்டப்பட்டிருக்கிறது. மதுரை மாவட்ட ஆட்சியரின் கட்டுப்பாட்டில் இயங்கும் ஊரக வளர்ச்சித் துறையினர்தான் அந்த அறிவிப்பை செய்துள்ளனர். சகாயம் விசாரணைக் குழுவுக்கான அனைத்துச் செலவுகளையும் அரசாங்கம்தான் செய்கிறது. மின் கட்டணம், வாடகைப் பாக்கி என எதுவாக இருந்தாலும் அதை மாவட்ட ஆட்சியரிடம்தான் கேட்க வேண்டும். ஆனால், அதைவிட்டு இப்படி நோட்டீஸ் ஒட்டுவது யார் மனதை நோகடிப்பதற்கு?

சகாயம் அளித்த இடைநிலை அறிக்கையில் கிரானைட் கொள்ளையால் தமிழக அரசுக்கு ஏற்பட்ட இழப்பு சுமார் ஐந்து லட்சம் கோடிக்கும் அதிகமாக இருக்கும் என முதற்கட்டமாக மதிப்பிட்டிருக்கிறார்களாம். அதில் பல முன்னாள், இன்னாள் அமைச்சர்களுக்கும் பங்கு இருக்கிறது. வங்கிப் பரிவர்த்தனைகள், அரசு ஒதுக்கீடுகள், காவல் துறையின் அசட்டை... என எங்கெங்கும் ஆதாரத்துடனே பல அத்துமீறல்கள் நடந்திருக்கின்றன. அவற்றைக் கேட்டுப் பெறுவதில் இருக்கும் நடைமுறை சிக்கல்கள்தான் சகாயம் அணியினருக்குப் மிகப் பெரும் இடைஞ்சலாக இருக்கிறது. அதுவும் போக, வாடகை பாக்கி நோட்டீஸ் மூலமாக மனஉளைச்சலையும் உண்டாக்குகிறது அரசுத் தரப்பு.

முன்னர் கனிமவளக் கொள்ளை தொடர்பாக ஏகப்பட்ட முறைகேடுகளும் இப்போது அதை மறைக்க துஷ்பிரயோகங்களும் அரங்கேறுகின்றன. விசாரணையை முழுமையாக நடத்தவிடக் கூடாது என்பதில், ஆளும் கட்சியான அ.தி.மு.க மட்டும் அல்ல, தி.மு.க புள்ளிகளும் ஆர்வமாக உள்ளனர் என்பது ஆச்சர்யம். இதனால் ரதகஜதுரகபதாதிகளுடன் மோசடி கோஷ்டி சூழ்ச்சி வலை பின்ன, பொதுமக்களின் நம்பிக்கை மற்றும் ஆதரவு மட்டுமே கைகொடுக்கிறது சகாயம் அணியினருக்கு!

விகடன்


அதிகாரி சகாயம்... வதம் செய்யும் அரசாங்கம்!  Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

Back to top

- Similar topics
» சித்திரப் பேச்சு: அசுரனைத் துரத்தி வதம் செய்யும் தேவி
» ஐஏஎஸ் அதிகாரி சகாயம் விவகாரம் ! தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு !!
» மாமிச மலையை பராமரிக்க செலவு செய்யும் அரசாங்கம்!
» மாற்றுதிறனாளிகளுக்கு அரசாங்கம் செய்ய வேண்டியதை செய்யும் மனிதர்..
» சீன முட்டை விற்பனை செய்யும் வியாபாரிகள் மீது வழக்கு: உணவுத் தர நிர்ணய பாதுகாப்பு அதிகாரி எச்சரிக்கை

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum