புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Sat Sep 28, 2024 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Sep 28, 2024 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கருணாநிதி இந்து விரோதி, ஜெயலலிதா இந்து துரோகி! Poll_c10கருணாநிதி இந்து விரோதி, ஜெயலலிதா இந்து துரோகி! Poll_m10கருணாநிதி இந்து விரோதி, ஜெயலலிதா இந்து துரோகி! Poll_c10 
284 Posts - 45%
heezulia
கருணாநிதி இந்து விரோதி, ஜெயலலிதா இந்து துரோகி! Poll_c10கருணாநிதி இந்து விரோதி, ஜெயலலிதா இந்து துரோகி! Poll_m10கருணாநிதி இந்து விரோதி, ஜெயலலிதா இந்து துரோகி! Poll_c10 
236 Posts - 37%
mohamed nizamudeen
கருணாநிதி இந்து விரோதி, ஜெயலலிதா இந்து துரோகி! Poll_c10கருணாநிதி இந்து விரோதி, ஜெயலலிதா இந்து துரோகி! Poll_m10கருணாநிதி இந்து விரோதி, ஜெயலலிதா இந்து துரோகி! Poll_c10 
32 Posts - 5%
Dr.S.Soundarapandian
கருணாநிதி இந்து விரோதி, ஜெயலலிதா இந்து துரோகி! Poll_c10கருணாநிதி இந்து விரோதி, ஜெயலலிதா இந்து துரோகி! Poll_m10கருணாநிதி இந்து விரோதி, ஜெயலலிதா இந்து துரோகி! Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
கருணாநிதி இந்து விரோதி, ஜெயலலிதா இந்து துரோகி! Poll_c10கருணாநிதி இந்து விரோதி, ஜெயலலிதா இந்து துரோகி! Poll_m10கருணாநிதி இந்து விரோதி, ஜெயலலிதா இந்து துரோகி! Poll_c10 
19 Posts - 3%
prajai
கருணாநிதி இந்து விரோதி, ஜெயலலிதா இந்து துரோகி! Poll_c10கருணாநிதி இந்து விரோதி, ஜெயலலிதா இந்து துரோகி! Poll_m10கருணாநிதி இந்து விரோதி, ஜெயலலிதா இந்து துரோகி! Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
கருணாநிதி இந்து விரோதி, ஜெயலலிதா இந்து துரோகி! Poll_c10கருணாநிதி இந்து விரோதி, ஜெயலலிதா இந்து துரோகி! Poll_m10கருணாநிதி இந்து விரோதி, ஜெயலலிதா இந்து துரோகி! Poll_c10 
8 Posts - 1%
T.N.Balasubramanian
கருணாநிதி இந்து விரோதி, ஜெயலலிதா இந்து துரோகி! Poll_c10கருணாநிதி இந்து விரோதி, ஜெயலலிதா இந்து துரோகி! Poll_m10கருணாநிதி இந்து விரோதி, ஜெயலலிதா இந்து துரோகி! Poll_c10 
7 Posts - 1%
Guna.D
கருணாநிதி இந்து விரோதி, ஜெயலலிதா இந்து துரோகி! Poll_c10கருணாநிதி இந்து விரோதி, ஜெயலலிதா இந்து துரோகி! Poll_m10கருணாநிதி இந்து விரோதி, ஜெயலலிதா இந்து துரோகி! Poll_c10 
7 Posts - 1%
mruthun
கருணாநிதி இந்து விரோதி, ஜெயலலிதா இந்து துரோகி! Poll_c10கருணாநிதி இந்து விரோதி, ஜெயலலிதா இந்து துரோகி! Poll_m10கருணாநிதி இந்து விரோதி, ஜெயலலிதா இந்து துரோகி! Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கருணாநிதி இந்து விரோதி, ஜெயலலிதா இந்து துரோகி!


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Mar 21, 2015 10:44 am

கருணாநிதி இந்து விரோதி, ஜெயலலிதா இந்து துரோகி! Ramagopalan600
‘தமிழகத்தின் பால் தாக்கரே’ என தனது ஆதரவாளர்களால் கொண்டாடப்பட்ட இந்து முன்னணித் தலைவர் ராமகோபாலனுக்கு, இப்போது வயது 88. வயது மூப்பு காரணமாக சோர்வு தெரிந்தாலும், வார்த்தைகளில் கேலியும், கிண்டலும் அதிகம்!

‘‘திராவிட இயக்கங்களின் தாயகமான தமிழகத்தில், இந்து இயக்கங்கள் முன் எப்போதையும்விட இப்போது வலுவாகக் காலூன்றத் துடிப்பதன் நோக்கம் என்ன?’’

‘‘30 ஆண்டுகளுக்கு முன்பு, இந்துக்களுக்காகப் போராடவும், வாதாடவும்தான் இந்து முன்னணி அமைப்பைத் தொடங்கினோம். நாங்கள்தான் பேசுகிறோம்... போராடுகிறோம். ஆனால், பொதுவான இந்துக்களிடம் இது பற்றிய விழிப்புணர்வு இல்லை. அதனால்தான், இங்கே இந்துக்களைப் பற்றி யார் என்ன இழிவாகப் பேசினாலும், கேட்க நாதி இல்லை என்ற நிலைமை நீடிக்கிறது. இன்னொரு பக்கம், யார் இந்து? கோயிலுக்குப் போகிறார்கள்; திருநீறு, சந்தனம் பூசுகிறார்கள். ஆனால் சாமியிடம், ‘எனக்கு நல்ல வேலை, காசு, பணம், வாழ்க்கைத் துணை கொடு. வியாதியைத் தீர்த்து வை. பையனுக்கு நல்ல படிப்பைக் கொடு’ எனப் பிச்சை எடுக்கிறார்களே தவிர, ‘எனக்கு ஞானம் கொடு. நல்ல சிந்தையைக் கொடு’ எனக் கேட்பது இல்லை. அந்த வகையிலும் எங்களுடைய குறிக்கோள் நிறைவேறவில்லை. அது நிறைவேறும் வரை நாங்கள் போராடுவோம். இப்படி எல்லாம் பேசுவதால் எங்களை ‘மதவாதி’ எனச் சொன்னால் ரொம்பச் சந்தோஷம். ஏனென்றால், வடிவேலு சொல்வதுபோல, ‘என்னை ரொம்ப நல்லவன்னு சொல்லிட்டாங்க’ எனச் சொல்லி, முதுகைக் காட்டிக்கொண்டு இருக்க முடியாது.’’

‘‘தாலி தொடர்பான சர்ச்சையில் நீங்கள் கடுமையாக எதிர்வினையாற்றினாலும், அதன் தேவை குறித்த திருப்தியான பதில் அளிக்க முடியவில்லையே. இந்து திருமணச் சட்டத்தில்கூட தாலிக்குப் பிரதான முக்கியத்துவம் இல்லையே?’’

‘‘சட்டத்தில் எப்படி வேண்டுமானாலும் இருக்கட்டும். ஆனால், தாலிக்குப் பண்பாட்டு ரீதியான முக்கியத்துவம் இருக்கிறது. இங்கு உள்ள பெரும்பான்மைப் பெண்கள், தாலியைப் புனிதச் சின்னமாகத்தான் நினைக்கிறார்கள். மக்களின் உணர்வுபூர்வமான விஷயங்களோடு விளையாடாதீர்கள் என்றுதான் நாங்கள் சொல்கிறோம்.’’

‘‘ஆனால், ‘தாலி என்ற சொல்லே தமிழில் இல்லை... தாலி கட்டும் பண்பாடே தமிழர் பண்பாடு இல்லை’ என ஆய்வாளர்கள் சொல்கிறார்களே?’’

‘‘இந்த ஆய்வாளர்கள் தொல்லை தாங்க முடியலை. வெளியே இப்படிப் பேசுவார்கள். ஆனால், அவர்கள் வீட்டுப் பெண்களுக்குத் தாலி கட்டித்தான் திருமணம் செய்வார்கள்.’’

‘‘ஊடக அலுவலகத்தில் தாக்குதல் மேற்கொள்வது என, இந்து அமைப்புகள் தீவிரவாத வழியைக் கையில் எடுப்பது சரியா?’’

‘‘அந்தத் தனியார் தொலைக்காட்சி அலுவலகத்தில் யார் குண்டு வைத்தது? அது பரபரப்புக்காக அவர்களே விளையாடும் விளையாட்டு. ஆனால், எங்கள் மீது பழிபோடுகிறார்கள்.’’

‘‘நரேந்திர மோடியின் ஆட்சி திருப்தி அளிக்கிறதா?’’

‘‘அவரால் என்ன செய்ய முடியுமோ, அதைச் சிறப்பாகச் செய்கிறார். ரொம்ப அபூர்வமாக, புதிய புதிய கோணங்களில் சிந்தித்துச் செயல்படுகிறார். விவசாயிகள், பெண்கள் பற்றி எல்லாம் கவலைப்படுகிறார். இந்த இரண்டும் அவரது ஆட்சியைச் சிறப்பாக்கும்.’’

‘‘ஆனால், மோடி அரசு கொண்டுவந்திருக்கும் நில ஆர்ஜிதச் சட்டத்தால் விவசாயிகள் பாதிக்கப்படுவது... (கேள்வியை முடிக்கு முன்பே இடைமறிக்கிறார்.)

‘‘எனக்கு அதுபற்றி எல்லாம் ஒன்றும் தெரியாது. அப்படி ஒரு சட்டம் இருக்கிறதே இப்போதான் தெரியும். அதனால் அதைப் பற்றி நான் எதுவும் பேச முடியாது.’’

‘‘இந்து அமைப்புகள், காங்கிரஸ் ஆட்சியில் அடக்கி வாசிப்பதும், பா.ஜ.க. ஆட்சியில் உற்சாகமாகச் செயல்படுவதுமாகத் தோன்றுகிறதே?’’

‘‘யார் சொன்னார்கள்? அது சிறந்த ஜோக். 30 வருஷங்களுக்கு முன்பு இந்து முன்னணியைத் தொடங்கியபோது பா.ஜ.க. ஆட்சியில் இல்லை. அன்றைக்கும் சரி... இன்றைக்கும் சரி... இந்து மக்களின் சமஉரிமைக்காகப் போராட, யாருடைய தயவையும் நாங்கள் வேண்டி நிற்கவில்லை.’’

‘‘நீங்கள் கருணாநிதியை ஒரு முறை சந்தித்தபோது, அவருக்கு நீங்கள் ‘பகவத் கீதை’ புத்தகத்தையும், அவர் உங்களுக்கு ‘கீதையின் மறுபக்கம்’ என்ற புத்தகத்தையும் கொடுத்தார். கருணாநிதி கொடுத்த அந்தப் புத்தகத்தை வாசித்தீர்களா?’’

‘‘இல்லை! ஏனென்றால், இது மாதிரி கீதையை இழித்தும் பழித்தும் ரொம்பப் பேர் எழுதி விட்டனர். அதை எல்லாம் தாக்குப்பிடித்துத்தான் இந்து மதம் நிற்கிறது. ‘இவர் ஏன் அவர் எழுதிய புத்தகங்களைக் கொடுக்காமல், வீரமணி எழுதியதைக் கொடுத்தார். அது தாழ்வுமனப்பான்மையா... தோல்வி மனப்பான்மையா?’ என அப்போதே கேட்டேன். அதற்கு இதுவரை எனக்குப் பதில் வரவில்லை. எங்கள் கேள்விகளுக்கு எல்லாம் பதில் சொல்லவேண்டிய அவசியம் இல்லை என நினைக்கிறார்கள்போல. ஆனால், எங்கள் கேள்விகளுக்கும் பதில் சொல்லவேண்டிய காலம் சீக்கிரமே வரும்.’’

‘‘இன்றும் இந்து மதத்தில்தான் அதிக அளவில் மதமாற்றங்கள் நடக்கின்றன. மத அமைப்பில் பிரச்னை இருப்பதால்தானே, அவை நடக்கின்றன. பிரச்னையைக் கண்டறிந்து சரி செய்ய என்ன திட்டம் வைத்திருக்கிறீர்கள்?’’

‘‘இரண்டு காரணங்களுக்காகத்தான் மத மாற்றங்கள் நடக்கின்றன. ஒன்று, தீண்டாமை; இன்னொன்று சாதிச் சண்டை. இந்த இரண்டும் இந்து ஒற்றுமைக்கு உலைவைக்கின்ற சாபக்கேடுகள்.’’

‘‘ ‘நாம் தமிழர்’ கட்சித் தலைவர் சீமான் ‘தமிழம்’ என்ற புதிய மதத்தைத் தொடங்கி இருப்பதோடு, ‘ராம் லீலா’வுக்குப் பதில் ‘ராவண லீலா’ கொண்டாடப்போவதாகக் கூறுகிறாரே?’’

‘‘அவரைப் பார்த்தால் எனக்குப் பரிதாபமாக இருக்கிறது. சைமன் என்கிற அவரே தன் பெயரை சீமான் என மாற்றித்தான் இங்கே அரசியல் செய்ய வேண்டியிருக்கிறது. அவர்களுக்குள் நடக்கும் ‘நான் முந்தி... நீ முந்தி...’ போட்டியில் முன்னாடி வருவதற்கு ‘வீரத் தமிழன்’ எனச் சொல்லிக்கொண்டிருக்கிறார்.’’

‘‘கருணாநிதி, ஜெயலலிதா... இருவரில் உங்களுக்கு வேண்டியவர் யார்... வேண்டாதவர் யார்?’’

‘‘கருணாநிதி இந்து விரோதி... ஜெயலலிதா இந்து துரோகி. இந்த எண்ணத்தில் எப்போதும் எனக்கு மாற்றுக் கருத்தே இல்லை.’’

‘‘ ‘திருமணம் செய்துகொள்ளவில்லையே!’ என, எப்போதாவது வருந்தியது உண்டா?’’

(சிரிக்கிறார்) ‘‘நீங்கள் எல்லாம் கல்யாணம் பண்ணிட்டுப் படுற பாட்டைப் பார்த்த பிறகும் அப்படி ஒரு வருத்தம் வருமா எனக்கு? 19 வயசுல சமுதாயப் பணிக்கு வந்தேன். வருமானமே இல்லாதவனுக்கு யார் பெண் கொடுப்பார்கள்? அதுவும் போக, எனக்குத் திருமணம் செய்யும் ஆசையும் வரவில்லை. அதனால் அப்படியே இருந்துவிட்டேன்.’’

-டி.அருள் எழிலன் @ விகடன்



கருணாநிதி இந்து விரோதி, ஜெயலலிதா இந்து துரோகி! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Sat Mar 21, 2015 1:37 pm

இருவருமே தமிழகத்தின் சாப கேடு



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84138
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat Mar 21, 2015 1:41 pm

சைமன் என்கிற அவரே தன் பெயரை சீமான்
என மாற்றித்தான் இங்கே அரசியல் செய்ய
வேண்டியிருக்கிறது. ...
-
யதார்த்தமான பதில்
சூப்பருங்க சூப்பருங்க

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Sat Mar 21, 2015 1:49 pm

இருவருமே தமிழ் நாட்டின் சாபகேடு



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sat Mar 21, 2015 2:16 pm

விரோதியை விரட்ட துரோகியை துரத்த
இங்கு வேறு கட்சிகள் எவற்றிற்கும் இல்லை பலம்
மாற்றி மாற்றி ஏமாருவதே நம் மக்களின் பலவீனம்




பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Sat Mar 21, 2015 2:25 pm

யினியவன் wrote:விரோதியை விரட்ட துரோகியை துரத்த
இங்கு வேறு கட்சிகள் எவற்றிற்கும் இல்லை பலம்
மாற்றி மாற்றி ஏமாருவதே நம் மக்களின் பலவீனம்
மேற்கோள் செய்த பதிவு: 1126364

ஆமோதித்தல் ஆமோதித்தல்



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக