புதிய பதிவுகள்
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:20 pm

» கருத்துப்படம் 29/06/2024
by mohamed nizamudeen Yesterday at 10:40 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:17 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 4:59 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:50 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:44 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:41 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:55 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:38 am

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Yesterday at 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:04 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Fri Jun 28, 2024 9:52 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:49 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Fri Jun 28, 2024 7:36 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:35 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:35 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:33 am

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 5:09 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
உ.பி.யில் ரயில் தடம் புரண்டு 38 பேர் பலி Poll_c10உ.பி.யில் ரயில் தடம் புரண்டு 38 பேர் பலி Poll_m10உ.பி.யில் ரயில் தடம் புரண்டு 38 பேர் பலி Poll_c10 
84 Posts - 46%
ayyasamy ram
உ.பி.யில் ரயில் தடம் புரண்டு 38 பேர் பலி Poll_c10உ.பி.யில் ரயில் தடம் புரண்டு 38 பேர் பலி Poll_m10உ.பி.யில் ரயில் தடம் புரண்டு 38 பேர் பலி Poll_c10 
69 Posts - 38%
T.N.Balasubramanian
உ.பி.யில் ரயில் தடம் புரண்டு 38 பேர் பலி Poll_c10உ.பி.யில் ரயில் தடம் புரண்டு 38 பேர் பலி Poll_m10உ.பி.யில் ரயில் தடம் புரண்டு 38 பேர் பலி Poll_c10 
9 Posts - 5%
Dr.S.Soundarapandian
உ.பி.யில் ரயில் தடம் புரண்டு 38 பேர் பலி Poll_c10உ.பி.யில் ரயில் தடம் புரண்டு 38 பேர் பலி Poll_m10உ.பி.யில் ரயில் தடம் புரண்டு 38 பேர் பலி Poll_c10 
7 Posts - 4%
mohamed nizamudeen
உ.பி.யில் ரயில் தடம் புரண்டு 38 பேர் பலி Poll_c10உ.பி.யில் ரயில் தடம் புரண்டு 38 பேர் பலி Poll_m10உ.பி.யில் ரயில் தடம் புரண்டு 38 பேர் பலி Poll_c10 
5 Posts - 3%
prajai
உ.பி.யில் ரயில் தடம் புரண்டு 38 பேர் பலி Poll_c10உ.பி.யில் ரயில் தடம் புரண்டு 38 பேர் பலி Poll_m10உ.பி.யில் ரயில் தடம் புரண்டு 38 பேர் பலி Poll_c10 
2 Posts - 1%
Manimegala
உ.பி.யில் ரயில் தடம் புரண்டு 38 பேர் பலி Poll_c10உ.பி.யில் ரயில் தடம் புரண்டு 38 பேர் பலி Poll_m10உ.பி.யில் ரயில் தடம் புரண்டு 38 பேர் பலி Poll_c10 
2 Posts - 1%
Balaurushya
உ.பி.யில் ரயில் தடம் புரண்டு 38 பேர் பலி Poll_c10உ.பி.யில் ரயில் தடம் புரண்டு 38 பேர் பலி Poll_m10உ.பி.யில் ரயில் தடம் புரண்டு 38 பேர் பலி Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
உ.பி.யில் ரயில் தடம் புரண்டு 38 பேர் பலி Poll_c10உ.பி.யில் ரயில் தடம் புரண்டு 38 பேர் பலி Poll_m10உ.பி.யில் ரயில் தடம் புரண்டு 38 பேர் பலி Poll_c10 
2 Posts - 1%
சிவா
உ.பி.யில் ரயில் தடம் புரண்டு 38 பேர் பலி Poll_c10உ.பி.யில் ரயில் தடம் புரண்டு 38 பேர் பலி Poll_m10உ.பி.யில் ரயில் தடம் புரண்டு 38 பேர் பலி Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
உ.பி.யில் ரயில் தடம் புரண்டு 38 பேர் பலி Poll_c10உ.பி.யில் ரயில் தடம் புரண்டு 38 பேர் பலி Poll_m10உ.பி.யில் ரயில் தடம் புரண்டு 38 பேர் பலி Poll_c10 
435 Posts - 47%
heezulia
உ.பி.யில் ரயில் தடம் புரண்டு 38 பேர் பலி Poll_c10உ.பி.யில் ரயில் தடம் புரண்டு 38 பேர் பலி Poll_m10உ.பி.யில் ரயில் தடம் புரண்டு 38 பேர் பலி Poll_c10 
320 Posts - 35%
Dr.S.Soundarapandian
உ.பி.யில் ரயில் தடம் புரண்டு 38 பேர் பலி Poll_c10உ.பி.யில் ரயில் தடம் புரண்டு 38 பேர் பலி Poll_m10உ.பி.யில் ரயில் தடம் புரண்டு 38 பேர் பலி Poll_c10 
77 Posts - 8%
T.N.Balasubramanian
உ.பி.யில் ரயில் தடம் புரண்டு 38 பேர் பலி Poll_c10உ.பி.யில் ரயில் தடம் புரண்டு 38 பேர் பலி Poll_m10உ.பி.யில் ரயில் தடம் புரண்டு 38 பேர் பலி Poll_c10 
38 Posts - 4%
mohamed nizamudeen
உ.பி.யில் ரயில் தடம் புரண்டு 38 பேர் பலி Poll_c10உ.பி.யில் ரயில் தடம் புரண்டு 38 பேர் பலி Poll_m10உ.பி.யில் ரயில் தடம் புரண்டு 38 பேர் பலி Poll_c10 
30 Posts - 3%
prajai
உ.பி.யில் ரயில் தடம் புரண்டு 38 பேர் பலி Poll_c10உ.பி.யில் ரயில் தடம் புரண்டு 38 பேர் பலி Poll_m10உ.பி.யில் ரயில் தடம் புரண்டு 38 பேர் பலி Poll_c10 
8 Posts - 1%
Karthikakulanthaivel
உ.பி.யில் ரயில் தடம் புரண்டு 38 பேர் பலி Poll_c10உ.பி.யில் ரயில் தடம் புரண்டு 38 பேர் பலி Poll_m10உ.பி.யில் ரயில் தடம் புரண்டு 38 பேர் பலி Poll_c10 
5 Posts - 1%
sugumaran
உ.பி.யில் ரயில் தடம் புரண்டு 38 பேர் பலி Poll_c10உ.பி.யில் ரயில் தடம் புரண்டு 38 பேர் பலி Poll_m10உ.பி.யில் ரயில் தடம் புரண்டு 38 பேர் பலி Poll_c10 
5 Posts - 1%
Srinivasan23
உ.பி.யில் ரயில் தடம் புரண்டு 38 பேர் பலி Poll_c10உ.பி.யில் ரயில் தடம் புரண்டு 38 பேர் பலி Poll_m10உ.பி.யில் ரயில் தடம் புரண்டு 38 பேர் பலி Poll_c10 
4 Posts - 0%
Ammu Swarnalatha
உ.பி.யில் ரயில் தடம் புரண்டு 38 பேர் பலி Poll_c10உ.பி.யில் ரயில் தடம் புரண்டு 38 பேர் பலி Poll_m10உ.பி.யில் ரயில் தடம் புரண்டு 38 பேர் பலி Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

உ.பி.யில் ரயில் தடம் புரண்டு 38 பேர் பலி


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82744
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat Mar 21, 2015 7:25 am

உ.பி.யில் ரயில் தடம் புரண்டு 38 பேர் பலி ZDemEsijQdCRrdEgVQ9n+train_accident
-

உத்தரப் பிரதேச மாநிலம், ரேபரேலி மாவட்டத்தில் விரைவு ரயில் வெள்ளிக்கிழமை தடம் புரண்டு விபத்துக்குள்ளானதில், 38 பேர் பலியாகினர். 150 பேர் காயத்துடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இதுகுறித்து ரயில்வே துறை மூத்த அதிகாரிகள் தெரிவித்ததாவது:

உத்தரகண்ட் மாநிலம், டேராடூனில் இருந்து, உத்தரப் பிரதேச மாநிலம், வாராணசிக்கு ஜனதா விரைவு ரயில் வெள்ளிக்கிழமை சென்று கொண்டிருந்தது. ரேபரேலி மாவட்டத்தில் உள்ள பச்ரவண் ரயில் நிலையம் அருகே இந்த ரயில் காலை 9.30 மணியளவில் திடீரென தடம்புரண்டு விபத்துக்குள்ளானது. ரயிலின் என்ஜினும், அதனுடன் இணைக்கப்பட்டிருந்த 2 பெட்டிகளும் தடம் புரண்டன.

இந்த விபத்தில் 38 பேர் உடல் நசுங்கி பலியாகினர். மேலும் 150 பேர் காயத்துடன் மீட்கப்பட்டு, ரேபரேலி மாவட்ட அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்று ரயில்வே மூத்த அதிகாரிகள் கூறினர்.

எனினும், விபத்தில் பலியானோர் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக் கூடும் என்று லக்னௌ பிராந்திய காவல் துறை ஆணையர் மகேஷ் குப்தா தெரிவித்தார்.

விபத்துக்கு என்ன காரணம் என்பது இதுவரை உறுதியாகத் தெரிவிக்கப்படவில்லை. இதுதொடர்பாக விபத்து நேரிட்ட பகுதியில் இருந்த ரயில்வே அதிகாரிகள் கூறியபோது, "பிரேக்' கோளாறால் இந்த விபத்து நேரிட்டிருக்க வாய்ப்பிருப்பதாகக் குறிப்பிட்டனர்.

விபத்து பற்றிய தகவலின்பேரில், லக்னௌ, ரேபரேலி ஆகிய இடங்களில் இருந்து மீட்புக் குழுவினர் விரைந்து சென்று மீட்புப் பணியில் ஈடுபட்டனர். மீட்புப் பணியில் கிரேன் இயந்திரங்களும் ஈடுபடுத்தப்பட்டன.

விபத்து நடைபெற்ற பகுதிக்கு மருத்துவர்கள், உதவியாளர்கள் அடங்கிய 24 குழுக்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக லக்னௌ பிராந்திய தலைமை மருத்துவ அதிகாரி மருத்துவர் எஸ்.என்.எஸ்.யாதவ் தெரிவித்துள்ளார். லக்னௌ மருத்துவமனையில் முன்னெச்சரிக்கையாக 150 படுக்கைகள் தயார்நிலையில் வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

இழப்பீடு அறிவிப்பு: இந்த விபத்து தொடர்பாக விசாரணை நடத்த ரயில்வே அமைச்சர் சுரேஷ் பிரபு உத்தரவிட்டுள்ளார். விபத்தில் உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு தலா ரூ. 2 லட்சமும், பலத்த காயம் அடைந்தோருக்கு ரூ.50 ஆயிரமும், லேசான காயமடைந்தோருக்கு ரூ.20 ஆயிரமும் வழங்கப்படும் என்றும் அவர் அறிவித்தார்.

இதேபோல், உத்தரப் பிரதேச மாநில முதல்வர் அகிலேஷ் யாதவும், ரயில் விபத்தில் உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு தலா ரூ. 2 லட்சமும், காயமடைந்தோருக்கு தலா ரூ. 50 ஆயிரமும் வழங்கப்படும் என்று அறிவித்தார்.

விபத்து நடைபெற்ற பகுதிக்கு விரைந்து சென்று ஆய்வு நடத்தும்படி, ரயில்வே வாரியத் தலைவர் ஏ.கே. மித்தல், வாரிய உறுப்பினர் அஜய் சுக்லா ஆகியோருக்கு ரயில்வே அமைச்சர் சுரேஷ் பிரபு உத்தரவிட்டுள்ளார்.

ரயில் போக்குவரத்து பாதிப்பு: ரயில் தடம் புரண்டு விபத்துக்குள்ளான இடம் போர்க்களம் போன்று காட்சியளித்தது. தடம் புரண்ட ரயில் பெட்டிகளில் ஒன்று உருக்குலைந்து விட்டது. இந்த விபத்தின் காரணமாக, லக்னௌ-வாராணசி வழித்தடத்தில் ரயில் சேவை கடுமையாக பாதிக்கப்பட்டது.

தடம் புரண்ட 2 பெட்டிகளில் ஒரு பெட்டி, காவலர்கள் இருக்கும் பெட்டியாகும். விபத்து நேரிட்டபோது, அந்தப் பெட்டி காலியாக இருந்தது. அந்தப் பெட்டியில் ஒருவேளை பயணிகள் இருந்திருந்தால், உயிரிழப்பு எண்ணிக்கை மேலும் அதிகமாக இருந்திருக்கக்கூடும்.

மீட்புப் பணிக்கு கிராம மக்கள் உதவி: விபத்து குறித்து தகவல் தெரிந்ததும், அப்பகுதியைச் சேர்ந்த கிராமமக்கள் சம்பவ இடத்துக்கு உடனடியாக விரைந்து வந்து மீட்பு, நிவாரணப் பணிகளுக்கு உதவினர். ரயில் பெட்டிகளுக்குள் சிக்கியிருந்த ஏராளமான பயணிகளை பத்திரமாக வெளியே மீட்டுக் கொண்டு வருவதற்கு மீட்புக் குழுவினருக்கு அவர்கள் உதவி செய்தனர்.

உ.பி. அரசு மீது பிஎஸ்பி குற்றச்சாட்டு: ஜனதா விரைவு ரயில் தடம் புரண்டு விபத்துக்குள்ளான விவகாரத்தை, உத்தரப் பிரதேச மாநில அரசு சரிவரக் கையாளவில்லை என்று பகுஜன் சமாஜ் கட்சி (பிஎஸ்பி) குற்றம்சாட்டியது.

இதுதொடர்பாக சட்டப்பேரவை வெள்ளிக்கிழமை தொடங்கியதும், எதிர்க்கட்சித் தலைவர் சுவாமி பிரசாத் மௌரியா பேசியதாவது:

ரயில் விபத்து தொடர்பாக நான் தகவல் அறிந்ததும், முதன்மைச் செயலாளரின் கவனத்துக்கு அதைக் கொண்டு சென்றேன். அப்போது அவரிடம், விபத்து நேரிட்ட பகுதியில் மாவட்ட ஆட்சியரும், மாவட்ட காவல் துறைக் கண்காணிப்பாளரும் இல்லை எனத் தெரிவித்தேன். ஆனால், அவர்கள் இருவரும் விடுமுறையில் இருப்பதாக எனக்குப் பதில் தெரிவிக்கப்பட்டது. விபத்துக்கு அரசு எந்த முக்கியத்துவமும் கொடுக்காததையே இது வெளிப்படுத்துகிறது.

இதுதொடர்பாக முதல்வர் அகிலேஷ் யாதவின் கவனத்துக்கும் கொண்டு சென்றேன் என்றார் அவர்.

அதற்கு மாநில சுகாதாரத் துறை அமைச்சர் ரகுராஜ் பிரதாப் சிங் பதிலளிக்கையில், "காயமடைந்தோருக்குத் தேவையான உதவிகளைச் செய்யும்படி சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு முதல்வர் அகிலேஷ் உத்தரவிட்டுள்ளார்' என்றார்.
-
பிரணாப், மோடி இரங்கல்
-
ரயில் விபத்தில் உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி, பிரதமர் நரேந்திர மோடி ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

உத்தரப் பிரதேச ஆளுநர் ராம் நாயக்குக்கு பிரணாப் முகர்ஜி எழுதியுள்ள கடிதத்தில், ரயில் விபத்து குறித்து கேள்விப்பட்டு தாம் மிகவும் வேதனையடைந்ததாகக் குறிப்பிட்டுள்ளார். விபத்தில் உயிரிழந்தோரின் குடும்பத்தினர்களுக்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ள அவர், காயமடைந்தோர் விரைவில் குணமடையப் பிரார்த்திப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

பிரதமர் அலுவலகம் வெளியிட்ட அறிவிப்பில் கூறப்பட்டிருப்பதாவது: உத்தரப் பிரதேச ரயில் விபத்தில் உயிரிழப்புகள் நேரிட்டிருப்பதற்கு பிரதமர் வேதனை தெரிவித்துள்ளார். விபத்தில் காயமடைந்தோர் விரைவில் குணமடைய பிரார்த்திப்பதாகவும் தெரிவித்துள்ளார். அத்துடன், நிலைமையை உன்னிப்பாகக் கவனித்து, உடனடியாக நிவாரணமும், பிற உதவிகளும் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ரயில்வே துறை அமைச்சர் சுரேஷ் பிரபுவுக்கு பிரதமர் உத்தரவிட்டுள்ளார்' எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதேபோல், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியும் தனது இரங்கலைத் தெரிவித்துக் கொண்டுள்ளார்.
================
தினமணி

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக