ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 21
by ayyasamy ram Today at 7:17 pm

» செய்யும் தொழிலே தெய்வம்
by Rathinavelu Today at 5:13 pm

» ஸ்ரீமத் பாகவதம் - பகவான் விஷ்ணுவின் பெருமை காவியம் .
by balki1949 Today at 3:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 10:46 am

» பெண்ணும் இனிப்பும்
by ayyasamy ram Today at 8:44 am

» யார் இந்த கிளியோபாட்ரா..
by ayyasamy ram Today at 8:41 am

» திடீர் பாயாசம்
by ayyasamy ram Today at 8:38 am

» பழைமையில் தான் எத்துனை நிறைவு!!
by ayyasamy ram Today at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:35 am

» கருத்துப்படம் 20/08/2024
by mohamed nizamudeen Yesterday at 7:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:36 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 6:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:01 pm

» படித்ததில் ரசித்தது
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» ஆனந்தம் தானாக அமையும்.
by ayyasamy ram Yesterday at 5:23 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:15 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:26 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 20
by ayyasamy ram Yesterday at 11:59 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 11:57 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:48 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:39 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 10:31 am

» அன்பின் கதை... படித்ததில் பிடித்தது!
by ayyasamy ram Yesterday at 6:26 am

» உங்க சிரிப்பே சொல்லுதுண்ணே…!!!
by ayyasamy ram Yesterday at 6:18 am

» முடா ஊழல் விவகாரம்: ஆளுநர் அனுமதியை எதிர்த்து முதல்வர் சித்தராமையா வழக்கு
by ayyasamy ram Yesterday at 6:11 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:00 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Aug 19, 2024 8:35 pm

» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Mon Aug 19, 2024 3:13 pm

» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:29 pm

» ஜானுக்கு தமன்னா பாராட்டு
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» கதைக்கு தேவைப்பட்டால் கிளாமர்
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» இன்னொரு மாலைப்பொழுதிற்காக…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:24 pm

» காதல் தேவதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:23 pm

» புத்தகம் படிப்பதேயில்லை…!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:22 pm

» கனிந்த காதல் அந்தாதி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:21 pm

» சந்திப்பு - புதுக்கவிதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:20 pm

» கிராமமல்ல சொர்க்கம்!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:18 pm

» திருநங்கைகளின் வலி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:15 pm

» மாத்தி யோசி
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:57 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 18
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:53 pm

» மவுனமும் நல்லது. சிரிப்பும் நல்லது!
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:37 pm

» அங்கே இருக்கிற ஆம்பளைங்க எப்படி...!
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:58 pm

» மயில் இறகின் மகத்துவம்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:56 pm

» முருகனின் பெருமைகளை உணர்த்தும் நூல்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:50 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

1989 மார்ச் 16: குழந்தைக் கவிஞர் அழ.வள்ளியப்பா மறைந்த தினம்

2 posters

Go down

1989 மார்ச் 16: குழந்தைக் கவிஞர் அழ.வள்ளியப்பா மறைந்த தினம் Empty 1989 மார்ச் 16: குழந்தைக் கவிஞர் அழ.வள்ளியப்பா மறைந்த தினம்

Post by சிவா Tue Mar 17, 2015 12:21 am

1989 மார்ச் 16: குழந்தைக் கவிஞர் அழ.வள்ளியப்பா மறைந்த தினம் Azahavalli_2343052f
நத்தையம்மா நத்தையம்மா எங்கே போகிறாய்?
அத்தை குளிக்கத் தண்ணீர்க் குடம் கொண்டு போகிறேன்
எத்தனை நாள் ஆகும் அத்தை வீடு செல்லவே?
பத்தே நாள்தான்; வேணுமானால் பார்த்துக்கொண்டிரு!


குழந்தைகள் மட்டுமல்ல, பெரியவர்களும் விரும்பிப் படிக்கும் வகையில் இருப்பதுதான் சிறந்த குழந்தை இலக்கியம் என்பார்கள். மேற்கண்ட பாடலுக்கும் இந்த இலக்கணம் பொருந்துகிறதல்லவா?

குழந்தைகளின் கவனத்தைக் கவர்வது அத்தனை எளிதான காரியம் அல்ல. அதேபோல், குழந்தைகளுக்கான இலக்கியம் படைப்பது என்பது அசாத்தியமான உழைப்பைக் கோருவது. அவர்களுக்கான உலகம், மொழி, எளிமை என்று பல விஷயங்களைக் கைக்கொண்டால்தான் குழந்தைகளும் வாசிக்கும் வகையிலான இலக்கியத்தைப் படைக்க முடியும். தமிழில் குழந்தை இலக்கியத்தின் முன்னோடிகளில் ஒருவராகக் கருதப்படுபவர் அழ. வள்ளியப்பா. குழந்தைக் கவிஞர் என்று சொன்னாலே அதன் பின்னான வார்த்தையாக அழ. வள்ளியப்பாவின் பெயர்தான் மனதில் தோன்றும். குழந்தை களுக்கான பாடல்கள் மட்டுமல்லாது, அவர்களின் பொது அறிவையும் நல்லொழுக்கத்தையும் வளர்க்கும் விதமான கதை, கட்டுரைகளையும் எழுதியவர் அழ. வள்ளியப்பா. குழந்தை இலக்கியத்தில் பிறரும் ஈடுபட பெரும் ஊக்கியாக இருந்தவர்.

குழந்தை இலக்கியத்துக்குப் புகழ்பெற்ற புதுக்கோட்டை மாவட்டத்தின் இராயவரத்தில் 1922 நவம்பர் 7-ல் பிறந்தார்.

அவரது ஆரம்பக் கல்வி ராயவரத்தில் அமைந்தது. பிறகு இராமச்சந்திரபுரத்தில் உள்ள பூமீஸ்வர ஸ்வாமி இலவச உயர்நிலைப் பள்ளியில் படித்தார். பள்ளி நாட்களிலேயே அவரது கற்பனைத் திறன் பளிச்சிட்டது. எனினும் குடும்பச் சூழ்நிலை காரணமாக அவரால் படிப்பைத் தொடர முடியவில்லை. பிறகு, வை. கோவிந்தனின் ‘சக்தி' இதழின் பொருளாளராக 1940-ல் பணியில் அமர்ந்தார் வள்ளியப்பா. அந்த இதழின் ஆசிரியராகப் பணிபுரிந்த தி.ஜ.ர., வள்ளியப்பாவின் கற்பனைத் திறனைக் கண்டு, எழுதுமாறு ஊக்குவித்தார். அந்த உற்சாகத்தில் ‘ஆளுக்குப் பாதி’ எனும் தனது முதல் சிறுகதையை எழுதினார் வள்ளியப்பா.

1944-ல் ‘மலரும் உள்ளம்' எனும் அவரது முதல் கவிதைத் தொகுப்பு வெளியானது. 1961-ல் அவர் வெளியிட்ட ‘சிரிக்கும் பூக்கள்' எனும் கவிதைத் தொகுப்பு, ‘குழந்தைக் கவிஞர்’ எனும் பட்டத்தை அவருக்குப் பெற்றுத்தந்தது. ‘பாலர் மலர்’,‘டமாரம்’, ‘சங்கு’ ஆகிய இதழ்களின் கவுரவ ஆசிரியராகப் பணியாற்றிய அழ. வள்ளியப்பா, ‘பூஞ்சோலை’, ‘கோகுலம்’ ஆகிய சிறுவர் இதழ்களின் ஆசிரியராகவும் இருந்தார். தன்னைப் போலவே குழந்தை இலக்கியத்தில் ஈடுபட்ட எழுத்தாளர்களை ஒன்றிணைத்து, ‘குழந்தை எழுத்தாளர்கள் சங்கம்’ எனும் அமைப்பை உருவாக்கினார். மிகுந்த அக்கறையுடன் குழந்தை இலக்கியத்தை வளர்த்தெடுத்த அழ. வள்ளியப்பா, 1989-ல் தனது 67-வது வயதில் இதே நாளில் காலமானார்.


1989 மார்ச் 16: குழந்தைக் கவிஞர் அழ.வள்ளியப்பா மறைந்த தினம் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

1989 மார்ச் 16: குழந்தைக் கவிஞர் அழ.வள்ளியப்பா மறைந்த தினம் Empty Re: 1989 மார்ச் 16: குழந்தைக் கவிஞர் அழ.வள்ளியப்பா மறைந்த தினம்

Post by T.N.Balasubramanian Tue Mar 17, 2015 7:15 am

"குழந்தைகள் மட்டுமல்ல, பெரியவர்களும் விரும்பிப் படிக்கும் வகையில் இருப்பதுதான் சிறந்த குழந்தை இலக்கியம் என்பார்கள்"
அழ .வள்ளியப்பா சிறு கவிதைகள் சிறுவர் முதல் பெரியவர் வரை 
விரும்பி படித்த ஒன்று .நிகழ் காலத்தில்" இவரை" போன்றவர் என்று 
கூறுகின்ற அளவில் யாரும் இருப்பதாக தெரியவில்லை .


1989 மார்ச் 16: குழந்தைக் கவிஞர் அழ.வள்ளியப்பா மறைந்த தினம் 103459460 1989 மார்ச் 16: குழந்தைக் கவிஞர் அழ.வள்ளியப்பா மறைந்த தினம் 3838410834 ,சிவா 

ரமணியன்  


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35055
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum