புதிய பதிவுகள்
» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 9:27 am
» கருத்துப்படம் 15/06/2024
by mohamed nizamudeen Yesterday at 10:36 pm
» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm
» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm
» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm
» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm
» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:53 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:38 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:37 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:23 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:39 pm
» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:12 pm
» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:10 pm
» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:04 pm
» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 pm
» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:01 pm
» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:25 am
» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:24 am
» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:23 am
» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:22 am
» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:21 am
» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:23 pm
» குடி --குடியை கெடுக்கும்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:21 pm
» wifi சிக்னலை அதிகரிக்க
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:09 pm
» wifi தகராறு
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:07 pm
» அதிகாலையின் அமைதியில் - பரீஸ் வஸீலியெவ் இந்த புத்தகம் இருந்தால் பகிரவும்.......
by JGNANASEHAR Fri Jun 14, 2024 9:53 pm
» உலக ரத்த தான தினம்
by T.N.Balasubramanian Fri Jun 14, 2024 4:45 pm
» தங்கம் விலை... இன்றைய நிலவரம்
by ayyasamy ram Fri Jun 14, 2024 1:00 pm
» அழகை ரசிப்போம்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:59 pm
» உன் அழகை வர்ணிக்க…
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:58 pm
» சிரிக்க சிந்திக்க மட்டும்.
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:57 pm
» பலாப்பழமும் பாலபாடமும்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:54 pm
» நடிகர் அரவிந்த் சாமி மகளா இவர்? என்ன செய்கிறார் தெரியுமா? ...
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:51 pm
» சினிமாவாகும் கிரண்பேடி வாழ்க்கை கதை!
by ayyasamy ram Fri Jun 14, 2024 9:42 am
» இங்கிலாந்து பட விழாவில் ‘கேப்டன் மில்லர்’
by ayyasamy ram Fri Jun 14, 2024 9:40 am
» குவைத்தில் உயிரிழந்த 7 தமிழர்கள் உள்பட 45 பேரின் உடல்களுடன் கொச்சி புறப்பட்டது சிறப்பு விமானம்
by ayyasamy ram Fri Jun 14, 2024 9:37 am
» தாலாட்டும்... வானகத்தில்... "பாலூட்டும்,,வெண்ணிலவே,,,
by ayyasamy ram Thu Jun 13, 2024 10:42 pm
» உலகத்தை முதலில் சுத்தி வந்தது யாரு?
by ayyasamy ram Thu Jun 13, 2024 9:13 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Jun 13, 2024 6:53 pm
by sanji Today at 9:27 am
» கருத்துப்படம் 15/06/2024
by mohamed nizamudeen Yesterday at 10:36 pm
» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm
» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm
» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm
» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm
» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:53 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:38 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:37 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:23 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:39 pm
» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:12 pm
» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:10 pm
» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:04 pm
» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 pm
» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:01 pm
» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:25 am
» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:24 am
» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:23 am
» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:22 am
» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:21 am
» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:23 pm
» குடி --குடியை கெடுக்கும்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:21 pm
» wifi சிக்னலை அதிகரிக்க
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:09 pm
» wifi தகராறு
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:07 pm
» அதிகாலையின் அமைதியில் - பரீஸ் வஸீலியெவ் இந்த புத்தகம் இருந்தால் பகிரவும்.......
by JGNANASEHAR Fri Jun 14, 2024 9:53 pm
» உலக ரத்த தான தினம்
by T.N.Balasubramanian Fri Jun 14, 2024 4:45 pm
» தங்கம் விலை... இன்றைய நிலவரம்
by ayyasamy ram Fri Jun 14, 2024 1:00 pm
» அழகை ரசிப்போம்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:59 pm
» உன் அழகை வர்ணிக்க…
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:58 pm
» சிரிக்க சிந்திக்க மட்டும்.
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:57 pm
» பலாப்பழமும் பாலபாடமும்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:54 pm
» நடிகர் அரவிந்த் சாமி மகளா இவர்? என்ன செய்கிறார் தெரியுமா? ...
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:51 pm
» சினிமாவாகும் கிரண்பேடி வாழ்க்கை கதை!
by ayyasamy ram Fri Jun 14, 2024 9:42 am
» இங்கிலாந்து பட விழாவில் ‘கேப்டன் மில்லர்’
by ayyasamy ram Fri Jun 14, 2024 9:40 am
» குவைத்தில் உயிரிழந்த 7 தமிழர்கள் உள்பட 45 பேரின் உடல்களுடன் கொச்சி புறப்பட்டது சிறப்பு விமானம்
by ayyasamy ram Fri Jun 14, 2024 9:37 am
» தாலாட்டும்... வானகத்தில்... "பாலூட்டும்,,வெண்ணிலவே,,,
by ayyasamy ram Thu Jun 13, 2024 10:42 pm
» உலகத்தை முதலில் சுத்தி வந்தது யாரு?
by ayyasamy ram Thu Jun 13, 2024 9:13 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Jun 13, 2024 6:53 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel | ||||
JGNANASEHAR | ||||
cordiac |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel | ||||
JGNANASEHAR | ||||
Srinivasan23 |
நிகழ்நிலை நிர்வாகிகள்
மறந்து போன தமிழர் உணவுகள்!
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
ரெட் ரோஸ் வெஜிடபிள் பிரியாணி
தேவையானவை:
எண்ணெய் - 150 மில்லி
காய்ந்த ரெட் ரோஸ் இதழ்கள் - 25 கிராம்
பிரியாணி இலை - 10 கிராம்
பட்டை - 15 கிராம்
ஏலக்காய் - 5
கிராம்பு - 5 கிராம்
சின்னவெங்ககாயம் - 180 கிராம்
பச்சைமிளகாய் - 5
தயிர் - 50 மில்லி (ரைத்தாவுக்கு)
மல்லித்தூள் (தனியாத்தூள்) - ஒன்றரை டீஸ்பூன்
இஞ்சி-பூண்டு விழுது - 5 டீஸ்பூன்
மிளகாய்த்தூள் - 1 டீஸ்பூன்
சீரகத்தூள் - ஒன்றரை டீஸ்பூன்
கரம் மசாலாத்தூள் - 1 டீஸ்பூன்
பாஸ்மதி அரிசி - 1 கிலோ
ரோஸ் வாட்டர் - 30 மில்லி
புதினா இலைகள் - 50 கிராம்
கொத்தமல்லித்தழை - 25 கிராம்
நெய் - 50 மில்லி
பீன்ஸ், கேரட், பச்சைப் பட்டாணி - தலா 50 கிராம் (மீடியம் சைஸில் நறுக்கவும்)
உப்பு - தேவையாண அளவு
பெரிய வெங்காயம் - தேவையான அளவு (ரைத்தாவுக்கு)
செய்முறை:
பாஸ்மதி அரிசியை அரை மணி நேரம் ஊற விடவும். அடுப்பில் கடாயை வைத்து எண்ணெய், நெய், சின்னவெங்காயம், பச்சை மிளகாய், பிரியாணி இலை, பட்டை, ஏலக்காய், கிராம்பு சேர்த்து பிரவுன் நிறம் ஆகும் வரை வதக்கவும். இதில் இஞ்சி-பூண்டு விழுதைச் சேர்த்து பச்சை வாசனை போக வதக்கி, நறுக்கிய காய்கறிகள், மிளகாய்த்தூள், மல்லித்தூள் (தனியாத்தூள்), சீரகத்தூள், கரம் மசாலாத்தூள் சேர்த்து நன்கு வதக்கவும். கழுவிய புதினா, கொத்தமல்லித்தழையைச் சேர்த்து நன்கு வதக்கவும். அரிசிக்குத் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி அதில் தேவையான அளவு உப்பு, ரோஸ் வாட்டர், ரோஸ் இதழ்களைச் சேர்த்து ஒரு கலக்குக் கலக்கவும். இதில் அரிசியைச் சேர்த்து மெதுவாக கிளறி மூடி போட்டு, பதினைந்து நிமிடம் வேக விடவும். அரிசி வெந்ததும் இறக்கி விடவும். தயிர், வெங்காயம், உப்பு கலந்து ரைத்தா தயாரிக்கவும். இந்த ரைத்தாவுடன் பிரியாணியைப் பரிமாறினால் சுவை தூக்கலாக இருக்கும்.
ரோஸ் இதழ்களை மாடியில் இரண்டு நாட்கள் காய போட்டு பின்பு உபயோகிக்கலாம்.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
புதுவயல் நண்டு மசாலா
தேவையானவை:
நண்டு - 400 கிராம்
பொடியாக நறுக்கிய சின்னவெங்காயம் - 150 கிராம்
பொடியாக நறுக்கிய தக்காளி - 100 கிராம்
பச்சை மிளகாய் - 4
பூண்டு - 3 டீஸ்பூன் (பொடியாக நறுக்கியது)
ஊறவைத்து கரைத்த புளிக்கரைசல் - 75 மில்லி
கடுகு - அரை டீஸ்பூன்
வெந்தயம் - கால் டீஸ்பூன்
மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன்
முழுதேங்காய் - 1 (துருவிக் கொள்ளவும்)
கறிவேப்பிலை - 1 டீஸ்பூன்
கொத்தமல்லித்தழை - 2 டீஸ்பூன்
சோம்பு - அரை டீஸ்பூன்
காய்ந்த மிளகாய் - 6
மல்லி (தனியா) - 100 கிராம்
பட்டை - 5
ஏலக்காய் - 5
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - 100 மில்லி
செய்முறை:
புதுவயல் மசாலா:
அடுப்பில் கடாயை வைத்துத் துருவிய தேங்காய், மல்லி (தனியா), காய்ந்த மிளகாய், பட்டை, ஏலக்காய், சோம்பு சேர்த்து தேங்காய் பிரவுன் நிறம் வரும் வரை நன்கு வதக்கவும். ஆறியதும் மிக்ஸியில் தண்ணீர் விட்டு, விழுதாக அரைத்துத் தனியாக எடுத்து வைக்கவும்.
அடுப்பில் கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி கடுகு, வெந்தயம், கறிவேப்பிலை, பச்சைமிளகாய், பூண்டு, நறுக்கிய வெங்காயம் சேர்த்து வெங்காயம் நிறம் மாறும் வரை நன்கு வதக்கவும். அரைத்து வைத்திருக்கும் மசாலாவை இதில் சேர்தது மஞ்சள்தூள், தக்காளி, சேர்த்து நன்கு வதக்கவும். நண்டை நன்கு கழுவி சுத்தம் செய்து, இதில் சேர்த்து மசாலா நண்டோடு சேரும் வரை, சிறிது நேரம் நன்கு வதக்கவும். புளிக்கரைசல், உப்பு, தேவையான அளவு தண்ணீர் விட்டு பதினைந்து நிமிடம் நன்கு வேக விடவும். இறக்கி சூடான சாதத்தோடுப் பரிமாறவும்.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சின்ன வெங்காயம் உப்புக் கறி
தேவையானவை:
சிக்கன் - 250 கிராம்
சின்ன வெங்காயம் - 100 கிராம்
இஞ்சி-பூண்டு விழுது - 3 டீஸ்பூன்
பொடியாக நறுக்கிய தக்காளி - 50 கிராம்
மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன்
மிளகாய்த்தூள் - அரை டீஸ்பூன்
மல்லித்தூள் (தனியாத்தூள்) - அரை டீஸ்பூன்
சோம்புத்தூள் - கால் டீஸ்பூன்
மிளகுத்தூள் - அரை டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
தேங்காய் எண்ணெய் - 120 மிலி
கடுகு - அரை டீஸ்பூன்
கறிவேப்பிலை - அரை டீஸ்பூன்
காய்ந்த மிளகாய் - 2
கொத்தமல்லித்தழை - 2 டீஸ்பூன்
செய்முறை:
சிக்கனை கழுவி சிறிய துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். அடுப்பில் பேனை வைத்து எண்ணெய் விட்டு காய்ந்ததும் கடுகு, காய்ந்த மிளகாய், கறிவேப்பிலை, சின்னவெங்காயம் சேர்த்து பிரவுன் நிறம் ஆகும் வரை நன்கு வதக்கவும். இதில் இஞ்சி-பூண்டு விழுதைச் சேர்த்து பச்சை வாசனை போக வதக்கவும். நறுக்கிய தக்காளி சேர்த்து மைய வதக்கவும். மஞ்சள்தூள், மிளகாய்த்தூள், மல்லித்தூள் (தனியாத்தூள்), சோம்புத்தூள், மிளகுத்தூள், தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு வதக்கவும். இதில் சிக்கனைச் சேர்த்து பதினைந்து முதல் இருபது நிமிடம் நன்கு வேக விட்டு இறக்கி கொத்தமல்லித்தழைத் தூவி பரிமாறவும்.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சவால் கா முருஹ் கெபாப்
தேவையானவை:
சிக்கனின் நெஞ்சுப்பகுதி - 1
வேக வைத்த பாஸ்மதி - ஒரு கைப்பிடி
சின்ன வெங்காயம் - 25 கிராம்
இஞ்சி-பூண்டு விழுது - ஒன்றரை டீஸ்பூன்
எலுமிச்சை - 1
கஸுரி மேத்தி - அரை பிஞ்ச்
காஷ்மீரி மிளகாய்த்தூள் - 3 டீஸ்பூன்
சாட் மசாலா - அரை பிஞ்ச்
கடுகு எண்ணெய் - 4 டீஸ்பூன்
தயிர் - 100 மில்லி
கருப்பு உப்பு - கால் டீஸ்பூன்
சீரகத்தூள் - 1 டீஸ்பூன்
முந்திரிபவுடர் - 4 டீஸ்பூன்
பச்சை மிளகாய் விழுது - 2 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
கெபாப் மசாலா செய்ய:
ஒரு பவுலில் தயிர், முக்கால் டீஸ்பூன் சீரகத்தூள் இரண்டரை டீஸ்பூன் காஷ்மீரி மிளகாய்த்தூள், கஸுரி மேத்தி, பச்சை மிளகாய் பேஸ்ட், முந்திரி பவுடர், கடுகு எண்ணெய், கருப்பு உப்பு சேர்த்து நன்கு கலக்கவும்.
ஸ்டஃபிங் மசாலாவுக்கு:
பாஸ்மதி சாதம், பொடியாக நறுக்கிய சின்னவெங்காயம், மீதமுள்ள காஷ்மீரி மிளகாய்த்தூள், சாட் மசாலா, கால் டீஸ்பூன் சீரகத்தூள் சேர்த்து கலந்து வைக்கவும்.
செய்முறை:
சிக்கனை இஞ்சி-பூண்டு விழுது, எலுமிச்சை சாறு சேர்த்து இருபது நிமிடம் ஊற வைக்கவும். இருபது நிமிடம் கழித்து சிக்கனை பக்கவாட்டில் லேசாக நீளமாகக் கீறி விடவும். இதன் உள்ளே ஸ்டஃபிங் மசாலாவை ஸ்டஃப் செய்யவும். இதனை கெபாப் மசாலாவில் பதினைந்து நிமிடம் ஊற விடவும். தந்தூரி அடுப்பு இருப்பவர்கள் அதற்கான ஸ்டிக்கில் குத்தி வேக வைத்து எடுக்கவும். தந்தூரி அடுப்பு இல்லாதவர்கள் தோசைக் கல்லில் சிறிது எண்ணெய் ஊற்றி, சிக்கன் பிரெஸ்ட்டை வைத்து மூடி போட்டு, இருபுறமும் வேகவைத்து இதை இரண்டாக வெட்டி புதினா சட்னியோடுப் பரிமாறவும்.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
கத்திரிக்காய் பொடித் தூவல்
தேவையானவை:
பிஞ்சு கத்திரிக்காய் - 400 கிராம்
சென்னா தால் (கடலைப்பருப்பு) - 25 கிராம்
காய்ந்த மிளகாய் - 10
மல்லி (தனியா) - 15 கிராம்
உளுந்து - 25 கிராம்
சீரகம் - 10 கிராம்
அன்னாசிப்பூ - 10
வெந்தயம் - 5 கிராம்
கறிவேப்பிலை - சிறிதளவு
பாசிப்பருப்பு - 25 கிராம்
சின்ன வெங்காயம் - 150 கிராம்
கடுகு - அரை டீஸ்பூன்
மிளகாய்த்தூள் - 1 டீஸ்பூன்
மஞ்சள்தூள் - அரை டீஸ்பூன்
இஞ்சி-பூண்டு விழுது - 2 டீஸ்பூன்
தக்காளி - 5
எண்ணெய் - பொரிக்க
உப்பு - தேவையான அளவு
கொத்தமல்லித்தழை - சிறிதளவு
பொடித் தூவல் மசாலா செய்ய:
அடுப்பில் ஒரு கடாயை வைத்து கடலைப்பருப்பு, உளுந்து, சீரகம், அன்னாசிப்பூ, பாசிப்பருப்பு, வெந்தயம், காய்ந்த மிளகாய், மல்லி (தனியா) விதை சேர்த்து தீயைக் குறைத்து வைத்து சிவக்க வறுக்கவும். அடுப்பை அணைத்து ஆற விட்டு, மிக்ஸியில் கொரகொரப்பாக அரைத்து வைக்கவும்.
செய்முறை:
கத்திரிக்காயை அலசி ஈரம் போக துடைத்து, அதனை நான்காக அடி பாகத்துக்கு முன்பு வரை வெட்டி, எண்ணெயில் பொரித்துக் கொள்ளவும். அடுப்பில் கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி, கடுகு, கறிவேப்பிலை, இரண்டாக வெட்டிய சின்னவெங்காயம் போட்டு நிறம் மாறும் வரை வதக்கவும். இதில் இஞ்சி-பூண்டு விழுது, பொடியாக நறுக்கிய தக்காளி சேர்த்து, நன்றாக வதக்கவும். அரைத்து வைத்த பொடித் தூவலை இதில் சேர்த்து, மஞ்சள்தூள், மிளகாய்த்தூள், பொரித்த கத்திரிக்காய், உப்பு சேர்த்து நன்கு கிளறவும். கத்திரிக்காயின் உள்ளே மசாலா சேரும் அளவுக்குக் குறைந்த தீயில் ஐந்து நிமிடம் வதக்கவும். இதில் தண்ணீர் சேர்க்க தேவையில்லை. இறுதியாக கொத்தமல்லித்தழை தூவிப் பரிமாறவும்.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
பருத்திப் பால் அல்வா
தேவையானவை:
பருத்தி விதைகள் - 100 கிராம்
சர்க்கரை இல்லாத கோவா - 100 கிராம் (டிப்பார்ட்மென்ட் ஸ்டோர்களில் கிடைக்கும்)
வெல்லம் - 200 கிராம்
சுக்கு - 10 கிராம்
நெய் - 40 கிராம்
மில்க் மெய்ட் - 100 கிராம்
முந்திரி - 25 கிராம்
பாதாம் - 25 கிராம்
கிஸ்மிஸ் பழம் - 25 கிராம்
செய்முறை:
பருத்தி விதைகள் மூழ்கும் அளவுக்கு தண்ணீர் ஊற்றி நான்கு முதல் ஐந்து மணி நேரம் ஊற வைத்து, மிக்ஸியில் அரைக்கவும். வாய் அகன்ற பாத்திரத்தில் மஸ்லின் துணி விரித்து அரைத்தவற்றை ஊற்றி வடிகட்டினால் சுத்தமான பருத்திப் பால் கிடைக்கும். இதனை ஒரு கடாயில் ஊற்றி நன்கு கொதிக்க விடவும். இருக்கும் பாலின் அளவு மூன்று பாகமாகக் குறையும் அளவுக்குக் கொதிக்க விடவும். துருவிய கோவா, மில்க் மெய்டை இதில் சேர்த்து நன்கு காய்ச்சவும். தொடர்ந்து கிளறிக் கொண்டே இருக்கவும் பிறகு தீயைக் குறைத்து மூன்று நிமிடம் வேக விடவும். இதில் சுக்குப்பொடி, வெல்லம் சேர்த்துத் தொடர்ந்துக் கிளறவும். அல்வா பதத்துக்கு வரும்போது இறக்கிவிடவும். ஒரு ப்ளேட்டில் நெய் தடவி வைக்கவும். அதில் அல்வாவைக் கொட்டி மேலே முந்திரி, பாதாம், கிஸ்மிஸ்பழம் தூவி துண்டுகள் போட்டுப் பரிமாறவும்.
விகடன்
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
நவதானிய இட்லி - கருவடாம் துவையல்
தேவையானவை:
இட்லி அரிசி - 1 கிலோ
உளுந்து - 100 கிராம்
கிட்னி பீன்ஸ் - 25 கிராம்
கேழ்வரகு - 25 கிராம்
கோதுமை - 25 கிராம்
கடலைப்பருப்பு - 25 கிராம்
பாசிப்பயறு - 25 கிராம்
கொண்டைக்கடலை - 25 கிராம்
கொள்ளு - 25 கிராம்
உப்பு - தேவையான அளவு
கருவடாம் துவையலுக்கு:
சின்னவெங்காயம் - 150 கிராம்
சோம்பு - 1 டீஸ்பூன்
காய்ந்த மிளகாய் - 4
புளி - 20 கிராம்
ஊறவைத்த வெந்தயம் - அரை டீஸ்பூன்
தாளிக்க:
கடுகு - அரை டீஸ்பூன்
கறிவேப்பிலை - அரை டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
காய்ந்த மிளகாய் - 1
செய்முறை:
துவையல் செய்ய கொடுத்தவற்றை எல்லாம் மிக்ஸியில் சேர்த்து, தண்ணீர் விட்டு கெட்டியாக அரைத்து வைக்கவும். அடுப்பில் கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி கடுகு, கறிவேப்பிலை, காய்ந்த மிளகாய் தாளித்து சட்னியில் சேர்த்துக் கலக்கவும்.
எல்லா தானியங்களையும் மூன்று முறை தண்ணீரில் நன்கு அலசவும். தானியங்கள் மற்றும் அரிசியைத் தனித்தனியாக நான்கு மணி நேரம் ஊற வைக்கவும். இதை இட்லி மாவாக அரைத்து உப்பு சேர்த்து, ஒரு நாள் இரவு முழுவதும் புளிக்க விடவும். மறுநாள் இட்லி சட்டியில் எண்ணெய் தடவி மாவை ஊற்றி, இட்லியாக சுட்டெடுக்கவும். இதனை கருவடாம் துவையலோடு சேர்த்துப் பரிமாறவும்.
தேவையானவை:
உப்புக்கண்டம் (பதமாக காய வைத்த ஆட்டுக்கறி) - அரைக்கிலோ
நல்லெண்ணெய் - 5 டீஸ்பூன்
கடுகு - அரை டீஸ்பூன்
பச்சை மிளகாய் - 4
சோம்பு - அரை டீஸ்பூன்
சின்னவெங்காயம் - 150 கிராம்
தக்காளி - 75 கிராம்
இஞ்சி-பூண்டு விழுது - 3 டீஸ்பூன்
மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன்
மிளகாய்த்தூள் - அரை டீஸ்பூன்
சீரகத்தூள்- ஒரு டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
தேங்காய் - 1 (அரைத்து வைக்கவும்)
செய்முறை:
அடுப்பில் ஒரு கடாயை வைத்து சிறிது எண்ணெய் ஊற்றி சின்ன வெங்காயத்தை முழுதாகப் போட்டு குறைந்த தீயில் நிறம் மாற வதக்கவும். பொடியாக நறுக்கிய தக்காளியை இதில் சேர்த்து சிறிது நேரம் வதக்கவும். மஞ்சள்தூள், இரண்டாக உடைத்த இரண்டு பச்சை மிளகாய் சேர்த்து நன்கு வதக்கி, அடுப்பை அணைத்து ஆற விட்டு மிக்ஸியில் மைய அரைத்து வைத்தால் மசாலாவுக்கான கிரேவி ரெடி.
அடுப்பில் கடாயை வைத்து எண்ணெய், கடுகு, சோம்பு, மீதம் இருக்கும் பச்சை மிளகாய் போட்டு வதக்கவும். இத்துடன் இஞ்சி-பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போக வதக்கி, மஞ்சள்தூள், மிளகாய்த்தூள், சீரகத்தூள் சேர்த்து மிதமான தீயில் நன்கு வதக்கவும். அரைத்து வைத்த மசாலாவை இதனுடன் சேர்த்து சிறிது தண்ணீர் விட்டு நன்கு கொதிக்க விடவும். பிறகு, உப்புக்கண்டம், தேவையான உப்பு சேர்த்து இருபது நிமிடம் நன்கு கொதிக்க விடவும். உப்புக்கண்டம் வெந்ததும் அரைத்த தேங்காய் சேர்த்து, பத்து நிமிடம் கொதிக்க விடவும். பின்பு அடுப்பை அணைத்துப் பரிமாறவும்.
தேவையானவை:
இட்லி அரிசி - 1 கிலோ
உளுந்து - 100 கிராம்
கிட்னி பீன்ஸ் - 25 கிராம்
கேழ்வரகு - 25 கிராம்
கோதுமை - 25 கிராம்
கடலைப்பருப்பு - 25 கிராம்
பாசிப்பயறு - 25 கிராம்
கொண்டைக்கடலை - 25 கிராம்
கொள்ளு - 25 கிராம்
உப்பு - தேவையான அளவு
கருவடாம் துவையலுக்கு:
சின்னவெங்காயம் - 150 கிராம்
சோம்பு - 1 டீஸ்பூன்
காய்ந்த மிளகாய் - 4
புளி - 20 கிராம்
ஊறவைத்த வெந்தயம் - அரை டீஸ்பூன்
தாளிக்க:
கடுகு - அரை டீஸ்பூன்
கறிவேப்பிலை - அரை டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
காய்ந்த மிளகாய் - 1
செய்முறை:
துவையல் செய்ய கொடுத்தவற்றை எல்லாம் மிக்ஸியில் சேர்த்து, தண்ணீர் விட்டு கெட்டியாக அரைத்து வைக்கவும். அடுப்பில் கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி கடுகு, கறிவேப்பிலை, காய்ந்த மிளகாய் தாளித்து சட்னியில் சேர்த்துக் கலக்கவும்.
எல்லா தானியங்களையும் மூன்று முறை தண்ணீரில் நன்கு அலசவும். தானியங்கள் மற்றும் அரிசியைத் தனித்தனியாக நான்கு மணி நேரம் ஊற வைக்கவும். இதை இட்லி மாவாக அரைத்து உப்பு சேர்த்து, ஒரு நாள் இரவு முழுவதும் புளிக்க விடவும். மறுநாள் இட்லி சட்டியில் எண்ணெய் தடவி மாவை ஊற்றி, இட்லியாக சுட்டெடுக்கவும். இதனை கருவடாம் துவையலோடு சேர்த்துப் பரிமாறவும்.
உப்புக்கண்டம் குழம்பு
தேவையானவை:
உப்புக்கண்டம் (பதமாக காய வைத்த ஆட்டுக்கறி) - அரைக்கிலோ
நல்லெண்ணெய் - 5 டீஸ்பூன்
கடுகு - அரை டீஸ்பூன்
பச்சை மிளகாய் - 4
சோம்பு - அரை டீஸ்பூன்
சின்னவெங்காயம் - 150 கிராம்
தக்காளி - 75 கிராம்
இஞ்சி-பூண்டு விழுது - 3 டீஸ்பூன்
மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன்
மிளகாய்த்தூள் - அரை டீஸ்பூன்
சீரகத்தூள்- ஒரு டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
தேங்காய் - 1 (அரைத்து வைக்கவும்)
செய்முறை:
அடுப்பில் ஒரு கடாயை வைத்து சிறிது எண்ணெய் ஊற்றி சின்ன வெங்காயத்தை முழுதாகப் போட்டு குறைந்த தீயில் நிறம் மாற வதக்கவும். பொடியாக நறுக்கிய தக்காளியை இதில் சேர்த்து சிறிது நேரம் வதக்கவும். மஞ்சள்தூள், இரண்டாக உடைத்த இரண்டு பச்சை மிளகாய் சேர்த்து நன்கு வதக்கி, அடுப்பை அணைத்து ஆற விட்டு மிக்ஸியில் மைய அரைத்து வைத்தால் மசாலாவுக்கான கிரேவி ரெடி.
அடுப்பில் கடாயை வைத்து எண்ணெய், கடுகு, சோம்பு, மீதம் இருக்கும் பச்சை மிளகாய் போட்டு வதக்கவும். இத்துடன் இஞ்சி-பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போக வதக்கி, மஞ்சள்தூள், மிளகாய்த்தூள், சீரகத்தூள் சேர்த்து மிதமான தீயில் நன்கு வதக்கவும். அரைத்து வைத்த மசாலாவை இதனுடன் சேர்த்து சிறிது தண்ணீர் விட்டு நன்கு கொதிக்க விடவும். பிறகு, உப்புக்கண்டம், தேவையான உப்பு சேர்த்து இருபது நிமிடம் நன்கு கொதிக்க விடவும். உப்புக்கண்டம் வெந்ததும் அரைத்த தேங்காய் சேர்த்து, பத்து நிமிடம் கொதிக்க விடவும். பின்பு அடுப்பை அணைத்துப் பரிமாறவும்.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
பலாக்கொட்டை வெள்ளைப்பூண்டுப் பொரியல்
தேவையானவை:
பலாக்கொட்டை - 250 கிராம்
ஸ்லைஸ்களாக நறுக்கிய பூண்டு - 25 கிராம்
இஞ்சி-பூண்டு விழுது - 2 டீஸ்பூன்
சின்ன வெங்காயம் - 75 கிராம்
பொடியாக நறுக்கிய தக்காளி - 40 கிராம்
மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன்
மிளகாய்த்தூள் - 1 டீஸ்பூன்
சீரகத்தூள் - அரை டீஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிதளவு
கொத்தமல்லித்தழை - ஒன்னரை டீஸ்பூன்
காய்ந்த மிளகாய் - 2
உப்பு - தேவையான அளவு
கடுகு - அரை டீஸ்பூன்
சோம்பு - கால் டீஸ்பூன்
எண்ணெய் - 3 டீஸ்பூன்
துருவிய தேங்காய்- 3 டீஸ்பூன்
செய்முறை:
அடுப்பில் கடாயை வைத்து தண்ணீர் ஊற்றி அதில் பலாக்கொட்டை, சிறிது இஞ்சி-பூண்டு விழுது, ஒரு சிட்டிகை மஞ்சள்தூள், தேவையான அளவு உப்பு சேர்த்து வேகவைத்து தண்ணீரை இறுத்து வைக்கவும். வெந்த பலாக்கொட்டையை தோல் நீக்கி தனியாக வைக்கவும். அடுப்பில் கடாயை வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி கடுகு, சோம்பு, காய்ந்த மிளகாய், கறிவேப்பிலை, பூண்டு, சின்ன வெங்காயம் போட்டு நிறம் மாறும் வரை நன்கு வதக்கவும். மீதம் இருக்கும் இஞ்சி-பூண்டு விழுது, தக்காளியை இதனுடன் சேர்த்து நன்கு வதக்கவும். மூன்று நிமிடம் கழித்து சீரகத்தூள், மிளகாய்த்தூள், தேவையான அளவு உப்பு சேர்த்து ஒரு நிமிடம் வதக்கி, பலாக்கொட்டை சேர்த்து மீண்டும் இரண்டு நிமிடம் வதக்கவும். தீயை குறைத்து வைத்து, சில நிமிடம் வதக்கி, தேங்காய் சேர்த்து வதக்கவும். இரண்டு நிமிடம் கழித்து அடுப்பை அணைத்து கொத்தமல்லித்தழை தூவிப் பரிமாறவும்.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
வடு மாங்காய் மொச்சைப் பிரட்டல்
தேவையானவை:
வடு மாங்காய் - 250 கிராம்
மொச்சை - 250 கிராம்
பூண்டு - 25 கிராம்
சின்ன வெங்காயம் - 75 கிராம்
பொடியாக நறுக்கிய தக்காளி - 40 கிராம்
மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன்
மிளகாய்த்தூள் - 1 டீஸ்பூன்
சீரகத்தூள் - அரை டீஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிதளவு
கொத்தமல்லித்தழை - ஒன்றரை டீஸ்பூன்
காய்ந்த மிளகாய் - 2
புளித்தண்ணீர் - 2 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
கடுகு - அரை டீஸ்பூன்
சோம்பு - கால் டீஸ்பூன்
நல்லெண்ணெய் - 3 டீஸ்பூன்
செய்முறை:
வடு மாங்காயைக் கழுவி ஈரம் போக துடைத்து சின்னதாக வெட்டிக் கொள்ளவும். மொச்சையைத் தண்ணீரில் ஒரு நாள் இரவு முழுவதும் ஊற வைத்து, மறுநாள் தண்ணீர் இறுத்து புது தண்ணீர் ஊற்றி வேகவைத்து தனியாக வைக்கவும். அடுப்பில் கடாயை வைத்து நல்லெண்ணெய் ஊற்றி கடுகு, சோம்பு, கறிவேப்பிலை, காய்ந்த மிளகாய், பூண்டு, சின்ன வெங்காயம் சேர்த்து நன்கு வதக்கவும். இதனுடன் தக்காளியை சேர்த்து மைய வதக்கி மஞ்சள்தூள், மிளகாய்த்தூள், சீரகத்தூள் சேர்த்து நன்கு வதக்கவும். இதில் புளிக்கரைசலைச் சேர்த்து ஐந்து நிமிடம் கொதிக்க விடவும். இதில் வடு மாங்காய், உப்பு, மொச்சையைச் சேர்த்து சிறிது நேரம் கொதிக்க விட்டு இறக்கி, கொத்தமல்லிதழை தூவிப் பரிமாறவும்.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
கேழ்வரகு அடை
தேவையானவை:
கேழ்வரகு - 500 கிராம்
பொடியாக நறுக்கிய சின்ன வெங்காயம் - 150 கிராம்
பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய் - 2 டீஸ்பூன்
பொடியாக நறுக்கிய கறிவேப்பிலை - 1 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
நல்லெண்ணெய் - பொரிக்க
சட்னிக்கு:
துருவிய தேங்காய் - 200 கிராம்
பூண்டு பல் - 2
பொரிக்கடலை - 25 கிராம்
காய்ந்த மிளகாய் - 3
உப்பு - தேவையான அளவு
தாளிக்க:
கடுகு - ஒரு டீஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிதளவு
எண்ணெய் - பொரிக்க
செய்முறை:
கேழ்வரகை ஒரு நாள் இரவு முழுவதும் தண்ணீரில் ஊற வையுங்கள். மறுநாள் தண்ணீரை இறுத்து புதிதாகத் தண்ணீர் சேர்த்துக் கெட்டியான மாவாக அரைத்து வைக்கவும். இதில் வெங்காயம், பச்சை மிளகாய், கறிவேப்பிலை, உப்பு சேர்த்துக் கலக்கவும். அடுப்பில் தோசைக்கல்லை வைத்து சிறிது நல்லெண்ணெய் ஊற்றி மாவை இருபுறமும் வேகவைத்து எடுக்கவும் சட்னிக்குத் தேவையானதை எல்லாம் மிக்ஸியில் சேர்த்து தேவையான அளவு தண்ணீர் சேர்த்து அரைத்து, ஒரு பவுலில் வைக்கவும். அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய், கடுகு, கறிவேப்பிலை சேர்த்துத் தாளித்து சட்னியில் ஊற்றி அடையோடு பரிமாறவும்.
விகடன்
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- Sponsored content
Page 1 of 2 • 1, 2
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2
|
|