ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Today at 15:00

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Today at 14:58

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Today at 14:54

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Today at 14:52

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Today at 14:50

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:55

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Today at 0:23

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Yesterday at 23:27

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 17:52

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 17:41

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 16:58

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 16:37

» கருத்துப்படம் 04/10/2024
by mohamed nizamudeen Yesterday at 16:31

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 16:16

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 15:56

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 15:46

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 15:36

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 15:24

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 15:17

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 15:10

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:31

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:18

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 14:00

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 13:40

» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Yesterday at 13:06

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 8:46

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 8:45

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Yesterday at 8:44

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Yesterday at 8:42

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Yesterday at 8:41

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Yesterday at 8:39

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed 2 Oct 2024 - 21:57

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed 2 Oct 2024 - 21:47

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed 2 Oct 2024 - 19:18

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 14:19

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 13:58

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 13:23

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 13:16

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed 2 Oct 2024 - 10:26

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed 2 Oct 2024 - 3:12

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:18

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:16

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:14

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:12

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:10

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:09

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:08

» புன்னகை என்பது…
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:07

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:07

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:04

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆமோதித்து மறுக்கும் அரிய கலை!

Go down

ஆமோதித்து மறுக்கும் அரிய கலை! Empty ஆமோதித்து மறுக்கும் அரிய கலை!

Post by krishnaamma Mon 16 Mar 2015 - 20:17

எவர் ஒருவரிடமும் எப்பேர்ப்பட்ட விஷயங்களையும், பலமான வாதங்களையும், எதிர்மறை கருத்துகளையும் முன்னெடுத்து வைத்து விட முடியும். ஆனால், இதற்கென்று சில அணுகுமுறைகள் உள்ளன.

நீதிபதியின் முன் விரல் நீட்டிப் பேச மண்ணில் எவருக்கும் உரிமையோ, திராணியோ இல்லை. மறுப்பாரும், எதிர்ப்பாரும் இல்லாதிருக்கும் இவர்களிடம் கூட, 'கனம் நீதிபதி அவர்களே...' என ஆரம்பித்து, அவர் கடந்து வராத வழக்குகளையும், அறிந்திராத சில தீர்ப்புகளையும் ஒரு இளம் வழக்கறிஞர், தம் திறமையான அணுகுமுறையால் நீதிபதியையே கேட்க வைத்து, தம் கட்சிக்காரருக்கு எதிராக திரும்ப இருந்த தீர்ப்பை, சாதகமாக வாங்கி விடுகிறார் என்றால், நாம் சந்திக்கிற மற்ற மனிதர்கள் நம் முன் எம்மாத்திரம்?

'நீங்க சொல்றது கரெக்ட் முதலாளி; அப்படியே ஆகட்டும் முதலாளி...' என்று ஆரம்பித்து, 'அதில் ஒரு கஷ்டம் இருக்கு முதலாளி; அது என்னன்னா முதலாளி...' என்று ஆரம்பிக்கிற தொழிலாளி, புத்திசாலி.

உடன்பட்டு மறுக்கிற கெட்டிக்காரத்தனம் என்னமாய் வேலை செய்யும் தெரியுமா?
'அதெப்படி முடியும்... இதெல்லாம் நடக்கிற காரியமா... நீங்க இறங்கிப் பாத்தால் தான் உங்களுக்கு அதில் உள்ள கஷ்டம் தெரியும்....' என்று எதிர்மறையாக ஆரம்பித்து, சீட்டுக்கிழிந்து விடும் என்கிற பயம் வந்த பின், ஜகா வாங்கும் ஊழியர் பத்தாம்பசலி.

பட்டிமன்றத்தில் சிலர் கையாளுகிற உத்தி, நடுவரை கவர்கிறதோ இல்லையோ, பார்வையாளர்களை ஏகமாய் கவர்ந்து விடும். அது, 'மாற்று அணியை சேர்ந்த அம்மையார், அருமையான வாதம் ஒன்றை முன் வைத்தார்; நானே அசந்துபோய் விட்டேன். ஆனால், இந்த வாதம் யாருக்குப் பொருந்தும் என்கிறீர்கள்...' என ஆரம்பித்து, ஆணித்தரமாக பேச ஆரம்பித்ததும், அது, பார்வையாளர்களையும், நடுவரையும் வெகுவாக கவர்ந்து விடும். அக்கணமே தீர்ப்பின் போக்கும் மற்றவர்களுக்கு பிடிபட்டு விடும்.

'என்ன அறிவுகெட்ட வாதம் இது... ஏன் இப்படி உளர்றீங்க, இதெல்லாம் ஒரு வாதமா, நீங்க சொல்றதையெல்லாம் கேட்டுக்க, எனக்கென்ன கிறுக்கா பிடிச்சுருக்கு...' என்று ஆரம்பிக்கிற எதிரணி மறுப்பாளர், பார்வையாளர்கள் மதிப்பில், 'சரசர'வென்று மைனஸ் மதிப்பெண் வாங்கி விடுகிறார்; நடுவரும் கடுப்பாகி விடுவார்.

இப்படிப்பட்ட வார்த்தைகள், தனிப்பட்ட இருவரின் வாதத்தின் போது, காயப்படுத்தி விடவும், இதன் விளைவாக, நட்பும், உறவும் கெட்டு விடவும் வாய்ப்புகள் உண்டு. அத்துடன், இது, கவுரவப் போராக மாறி, கை கலப்பில் முடிந்து விடக் கூடிய ஆபத்தும் இருக்கிறது.

'நீங்க சொல்ற கோணம் ரொம்ப வித்தியாசமா இருக்கு; ஆனா பாருங்க...' என ஆரம்பித்தால், அங்கே அனலுக்கு வேலையில்லை; அப்புறம், புனல்(நீர்) தான்.

வாக்குவாதங்கள், எதிர்வாதங்கள் ஏனோ இந்த மண்ணில் ஆரோக்கியமாக நிகழ்வதில்லை. வாத, பிரதிவாதங்கள் நீதிமன்றத்திற்கு வெளியே நடக்குமானால், அவற்றை அறிவின் விருத்திக்கே என்று மேலை நாட்டவர்கள் ஆக்கப்பூர்வமாக பார்க்கின்றனர்.

இங்கு என்ன நடக்கிறது... 'மூஞ்சியில கரியப் பூசிட்டான், அவமானப்படுத்திட்டான், எல்லார் முன்னாலயும் அசிங்கப் படுத்திட்டான்...' என்று தனிப்பட்ட விஷயமாகவும், கவுரவப் போராகவும் எடுத்துக் கொண்டு விடுகின்றனர்.

தவறான செய்திகளை, ஆதாரமற்ற, ஊகமான விஷயங்களை ஆணித்தரமான குரலில் எதிராளி பேசுகிறார் என்றால், மனிதர் சூடாகி விட்டார் என்பதை எளிதில் கண்டு விடலாம்.
'நீங்க சொல்றதை இந்தக் கோணத்திலிருந்தும் பார்க்கலாமான்னு கொஞ்சம் பரிசீலனை செய்யுங்க...' என்று பொய் மூட்டைகளை அவிழ்ந்தோட வைக்கும் வெளிச்சக் கீற்றினை, மென்மையாக பற்ற வையுங்கள்.

எதிர்வாதமாக இருந்தாலும், இதை ஏற்றுக் கொள்ள முன்வருவர். ஆமோதித்து மறுக்கும் கலை, அரிய கலை; இது கைவரப் பெற்றால், உறவுகளுக்குள் துறவு வர வாய்ப்பு இல்லை.

லேனா தமிழ்வாணன்


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum