புதிய பதிவுகள்
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Today at 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Today at 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Today at 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Today at 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Today at 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Today at 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Today at 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Today at 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Today at 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Today at 8:36 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:25 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Today at 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Today at 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Today at 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Today at 9:20 am

» கருத்துப்படம் 26/09/2024
by ayyasamy ram Today at 9:14 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Yesterday at 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Yesterday at 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Yesterday at 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Yesterday at 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Yesterday at 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Yesterday at 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Yesterday at 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Yesterday at 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Yesterday at 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Yesterday at 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Yesterday at 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அதிகாரி சகாயம்... வதம் செய்யும் அரசாங்கம்!  Poll_c10அதிகாரி சகாயம்... வதம் செய்யும் அரசாங்கம்!  Poll_m10அதிகாரி சகாயம்... வதம் செய்யும் அரசாங்கம்!  Poll_c10 
81 Posts - 68%
heezulia
அதிகாரி சகாயம்... வதம் செய்யும் அரசாங்கம்!  Poll_c10அதிகாரி சகாயம்... வதம் செய்யும் அரசாங்கம்!  Poll_m10அதிகாரி சகாயம்... வதம் செய்யும் அரசாங்கம்!  Poll_c10 
24 Posts - 20%
வேல்முருகன் காசி
அதிகாரி சகாயம்... வதம் செய்யும் அரசாங்கம்!  Poll_c10அதிகாரி சகாயம்... வதம் செய்யும் அரசாங்கம்!  Poll_m10அதிகாரி சகாயம்... வதம் செய்யும் அரசாங்கம்!  Poll_c10 
9 Posts - 8%
mohamed nizamudeen
அதிகாரி சகாயம்... வதம் செய்யும் அரசாங்கம்!  Poll_c10அதிகாரி சகாயம்... வதம் செய்யும் அரசாங்கம்!  Poll_m10அதிகாரி சகாயம்... வதம் செய்யும் அரசாங்கம்!  Poll_c10 
4 Posts - 3%
sureshyeskay
அதிகாரி சகாயம்... வதம் செய்யும் அரசாங்கம்!  Poll_c10அதிகாரி சகாயம்... வதம் செய்யும் அரசாங்கம்!  Poll_m10அதிகாரி சகாயம்... வதம் செய்யும் அரசாங்கம்!  Poll_c10 
1 Post - 1%
viyasan
அதிகாரி சகாயம்... வதம் செய்யும் அரசாங்கம்!  Poll_c10அதிகாரி சகாயம்... வதம் செய்யும் அரசாங்கம்!  Poll_m10அதிகாரி சகாயம்... வதம் செய்யும் அரசாங்கம்!  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
அதிகாரி சகாயம்... வதம் செய்யும் அரசாங்கம்!  Poll_c10அதிகாரி சகாயம்... வதம் செய்யும் அரசாங்கம்!  Poll_m10அதிகாரி சகாயம்... வதம் செய்யும் அரசாங்கம்!  Poll_c10 
273 Posts - 45%
heezulia
அதிகாரி சகாயம்... வதம் செய்யும் அரசாங்கம்!  Poll_c10அதிகாரி சகாயம்... வதம் செய்யும் அரசாங்கம்!  Poll_m10அதிகாரி சகாயம்... வதம் செய்யும் அரசாங்கம்!  Poll_c10 
221 Posts - 37%
mohamed nizamudeen
அதிகாரி சகாயம்... வதம் செய்யும் அரசாங்கம்!  Poll_c10அதிகாரி சகாயம்... வதம் செய்யும் அரசாங்கம்!  Poll_m10அதிகாரி சகாயம்... வதம் செய்யும் அரசாங்கம்!  Poll_c10 
29 Posts - 5%
Dr.S.Soundarapandian
அதிகாரி சகாயம்... வதம் செய்யும் அரசாங்கம்!  Poll_c10அதிகாரி சகாயம்... வதம் செய்யும் அரசாங்கம்!  Poll_m10அதிகாரி சகாயம்... வதம் செய்யும் அரசாங்கம்!  Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
அதிகாரி சகாயம்... வதம் செய்யும் அரசாங்கம்!  Poll_c10அதிகாரி சகாயம்... வதம் செய்யும் அரசாங்கம்!  Poll_m10அதிகாரி சகாயம்... வதம் செய்யும் அரசாங்கம்!  Poll_c10 
18 Posts - 3%
prajai
அதிகாரி சகாயம்... வதம் செய்யும் அரசாங்கம்!  Poll_c10அதிகாரி சகாயம்... வதம் செய்யும் அரசாங்கம்!  Poll_m10அதிகாரி சகாயம்... வதம் செய்யும் அரசாங்கம்!  Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
அதிகாரி சகாயம்... வதம் செய்யும் அரசாங்கம்!  Poll_c10அதிகாரி சகாயம்... வதம் செய்யும் அரசாங்கம்!  Poll_m10அதிகாரி சகாயம்... வதம் செய்யும் அரசாங்கம்!  Poll_c10 
8 Posts - 1%
Guna.D
அதிகாரி சகாயம்... வதம் செய்யும் அரசாங்கம்!  Poll_c10அதிகாரி சகாயம்... வதம் செய்யும் அரசாங்கம்!  Poll_m10அதிகாரி சகாயம்... வதம் செய்யும் அரசாங்கம்!  Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
அதிகாரி சகாயம்... வதம் செய்யும் அரசாங்கம்!  Poll_c10அதிகாரி சகாயம்... வதம் செய்யும் அரசாங்கம்!  Poll_m10அதிகாரி சகாயம்... வதம் செய்யும் அரசாங்கம்!  Poll_c10 
7 Posts - 1%
mruthun
அதிகாரி சகாயம்... வதம் செய்யும் அரசாங்கம்!  Poll_c10அதிகாரி சகாயம்... வதம் செய்யும் அரசாங்கம்!  Poll_m10அதிகாரி சகாயம்... வதம் செய்யும் அரசாங்கம்!  Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அதிகாரி சகாயம்... வதம் செய்யும் அரசாங்கம்!


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Mar 23, 2015 12:05 am


அரசு அதிகாரிக்கு அரசாங்கத்திடம் இருந்தே ஒத்துழைப்பு இல்லை!
அதிகாரி சகாயம்... வதம் செய்யும் அரசாங்கம்!  P10a(2)மதுரை மாவட்டத்தில் நடந்த கிரானைட் கொள்ளை தொடர்பாக கடந்த நான்கு மாதங்களாக ஏகப்பட்ட தடைகளுக்கு இடையில் விசாரணை நடத்திவந்த ஐ.ஏ.எஸ் அதிகாரி சகாயம், தன் விசாரணையின் இடைக்கால அறிக்கையை சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார். அதில் கிரானைட் கொள்ளை தொடர்பான விவரங்களைவிட அதிகக் கவனம் ஈர்த்தது, சகாயத்தின் விசாரணைக்கு அரசாங்கம் போட்டுவந்த முட்டுக்கட்டைகள்தான்! விசாரணைக்கு அரசுத் தரப்பு எந்த அளவுக்கு இடைஞ்சல் கொடுத்தது என்பதை சகாயம் அணியினர் வாய்மொழியாக விவரிக்க, அதைக் கேட்ட நீதிமன்றமே அதிர்ச்சியில் ஆழ்ந்திருக்கிறது.

'விசாரணைக் குழுவின் செலவுக்காக அரசிடம் இருந்து பணம் பெறுவதில் ஒவ்வொரு கட்டத்திலும் ஏகத்துக்கும் தாமதம். மிக அடிப்படை செலவுகளுக்குக்கூட கையைப் பிசைந்துகொண்டிருக்க வேண்டிய நிலையில் இருந்தோம். கிரானைட் மோசடி தொடர்பாக பல துறைகளைச் சேர்ந்த 30-க்கும் மேற்பட்ட அதிகாரிகளிடம் பல தகவல்களைக் கேட்டிருந்தோம். ஆனால், அதை அவர்கள் பொருட்படுத்தவே இல்லை. காவல் துறையிலும் அதே நிலைதான். அதுவும் போக விசாரணை வியூகங்களை எதிர்தரப்புக்குத் தெரிவிப்பதில், அரசு அதிகாரிகள் பலரும் ஆர்வமாக இருந்தனர்’ என சகாயம் குழுவினர் சொல்லச் சொல்ல, தலைமை நீதிபதி கவுல் முகத்தில் கோபம் அதிகரித்தபடியே இருந்தது.

கிரானைட் மோசடி நிலத்துக்கும் நீர் நிலைகளுக்கும் உண்டாக்கிய பாதிப்புகளை புகைப்பட ஆதாரங்களுடன் சகாயம் சமர்பிக்க, அதிர்ச்சியில் உறைந்துவிட்டார் கவுல். அரசுத் தரப்பு வழக்குரைஞரிடம், 'இப்படி இயற்கை வளத்தைக் கொள்ளையடித்திருக்கிறார்களே...’ எனக் கோபத்தில் கடுகடுத்துவிட்டு, சகாயம் குழுவினரிடம், 'விசாரணை தொடர்ந்து நடைபெற உங்களுக்கு வேறு என்ன வேண்டும்?’ எனக் கேட்டிருக்கிறார். விசாரணை நடவடிக்கைகளைத் துரிதப்படுத்த ஓய்வு பெற்ற இரண்டு அதிகாரிகளைக் கேட்டிருக்கிறது சகாயம் தரப்பு. உடனே குறுக்கிட்ட அரசுத் தலைமை வழக்குரைஞர் சோமயாஜி, 'இது மிகவும் ரகசியமான விசாரணை. அதனால் அரசு அதிகாரிகளை அனுப்பலாம். ஓய்வுபெற்றவர்கள் வேண்டாம்’ எனக் கூறியிருக்கிறார்.

'ஏற்கெனவே நாங்கள் கேட்ட ஒரு அதிகாரியை அனுப்பவே இல்லை. இந்த இடைக்கால அறிக்கை தாக்கல் செய்வதற்கு இரண்டு நாட்கள் முன்னர்தான் அனுப்பினார்கள்’ என சகாயம் தரப்பினர் சொல்ல, 'அரசு அதிகாரிகள் உதவியுடன்தான் கனிமக் கொள்ளை நடந்திருக்கிறது. அவர்கள் கேட்கும் ஊழியர்களை அனுப்பி வையுங்கள்’ எனச் சொல்லியிருக்கிறார்கள் நீதிபதிகள்.

'இறுதிக்கட்ட விசாரணையை முடிக்க மூன்று லட்சம் ருபாய் தேவைப்படுகிறது. அதை நேரடியாகத் தரச் சொல்லுங்கள். ஒவ்வொன்றுக்கும் ஆட்சியர் அலுவலகத்தையே தொடர்புகொள்ள வேண்டியிருக்கிறது’ என சகாயம் தரப்பினர் சொல்ல, 'மாவட்ட நிர்வாகம் இழுத்தடிக்காமல் அந்தத் தொகையைக் கொடுக்க வேண்டும்’ எனக் கடிந்திருக்கிறார் நீதிபதி. இப்படி சகாயம் விசாரணைக் குழுவின் பல கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்றச் சொன்னதோடு, விசாரணைக் காலத்தை நான்கு வாரங்களுக்கு நீட்டித்து உத்தரவிட்டிருக்கிறது நீதிமன்றம்.

மதுரை அண்ணா பேருந்து நிலையத்துக்கு எதிரே உள்ள பூமாலை வணிக வளாகத்தில்தான் சகாயத்தின் விசாரணை அலுவலகம் அமைந்திருக்கிறது. சகாயம் குழுவினரை டீஸ் செய்யும் விதமாக, மாடியில் அவருக்கு ஒதுக்கப்பட்ட அலுவலகத்தையும் கீழே மகளிர் சுய உதவிக்குழுவினர் வைத்திருக்கும் கடைகளையும் காலி செய்யும்படியும், அந்த வளாகத்தில் நோட்டீஸ் ஒட்டப்பட்டிருக்கிறது. மதுரை மாவட்ட ஆட்சியரின் கட்டுப்பாட்டில் இயங்கும் ஊரக வளர்ச்சித் துறையினர்தான் அந்த அறிவிப்பை செய்துள்ளனர். சகாயம் விசாரணைக் குழுவுக்கான அனைத்துச் செலவுகளையும் அரசாங்கம்தான் செய்கிறது. மின் கட்டணம், வாடகைப் பாக்கி என எதுவாக இருந்தாலும் அதை மாவட்ட ஆட்சியரிடம்தான் கேட்க வேண்டும். ஆனால், அதைவிட்டு இப்படி நோட்டீஸ் ஒட்டுவது யார் மனதை நோகடிப்பதற்கு?

சகாயம் அளித்த இடைநிலை அறிக்கையில் கிரானைட் கொள்ளையால் தமிழக அரசுக்கு ஏற்பட்ட இழப்பு சுமார் ஐந்து லட்சம் கோடிக்கும் அதிகமாக இருக்கும் என முதற்கட்டமாக மதிப்பிட்டிருக்கிறார்களாம். அதில் பல முன்னாள், இன்னாள் அமைச்சர்களுக்கும் பங்கு இருக்கிறது. வங்கிப் பரிவர்த்தனைகள், அரசு ஒதுக்கீடுகள், காவல் துறையின் அசட்டை... என எங்கெங்கும் ஆதாரத்துடனே பல அத்துமீறல்கள் நடந்திருக்கின்றன. அவற்றைக் கேட்டுப் பெறுவதில் இருக்கும் நடைமுறை சிக்கல்கள்தான் சகாயம் அணியினருக்குப் மிகப் பெரும் இடைஞ்சலாக இருக்கிறது. அதுவும் போக, வாடகை பாக்கி நோட்டீஸ் மூலமாக மனஉளைச்சலையும் உண்டாக்குகிறது அரசுத் தரப்பு.

முன்னர் கனிமவளக் கொள்ளை தொடர்பாக ஏகப்பட்ட முறைகேடுகளும் இப்போது அதை மறைக்க துஷ்பிரயோகங்களும் அரங்கேறுகின்றன. விசாரணையை முழுமையாக நடத்தவிடக் கூடாது என்பதில், ஆளும் கட்சியான அ.தி.மு.க மட்டும் அல்ல, தி.மு.க புள்ளிகளும் ஆர்வமாக உள்ளனர் என்பது ஆச்சர்யம். இதனால் ரதகஜதுரகபதாதிகளுடன் மோசடி கோஷ்டி சூழ்ச்சி வலை பின்ன, பொதுமக்களின் நம்பிக்கை மற்றும் ஆதரவு மட்டுமே கைகொடுக்கிறது சகாயம் அணியினருக்கு!

விகடன்



அதிகாரி சகாயம்... வதம் செய்யும் அரசாங்கம்!  Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக