ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:42 pm

» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Today at 8:03 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Today at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 4:45 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:22 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

சில தகவல்கள்

Go down

சில தகவல்கள் Empty சில தகவல்கள்

Post by dawndhan Tue Nov 10, 2009 5:14 pm

முடிவெடுக்கும் திறனை பாதிக்கும் 'மது'

சில தகவல்கள் Ratநன்மையை விட தீமைகள் வேகமாக பரவிவிடுகின்றன. விடலைப் பருவத்தில் குழந்தைகள் பெற்றோரை மீறி வளரும் சூழல் இயல்பாகவே அமைவதால் பலர் சில தீய பழக்கங்களுக்கு உள்ளாகிறார்கள். அத்தகைய தீய பழக்கங்களில் மதுப்பழக்கமும் ஒன்று.

மதுப்பழக்கம் புத்தியை தடுமாறச் செய்வதால் பல்வேறு குற்றங்களையும் செய்யத் தூண்டுவதாக அமைகிறது. தற்போது புதிய ஆய்வு ஒன்றில், விடலைப் பருவத்தினரின் முடிவு எடுக்கும் திறனை மதுப்பழக்கம் பாதிப்பதாக தெரியவந்துள்ளது.

அமெரிக்காவின் வாஷிங்டன் பல்கலைக்கழக மாணவர்கள் குழு, இதை கண்டுபிடித்து உள்ளது. அவர்கள் தங்களது ஆய்வுக்கு சில எலிகளை எடுத்துக் கொண்டனர். எலிகளுக்கு தேவையான உணவுப் பண்டங்கள், இனிப்பு துகள்கள் குடுவைகளில் வைக்கப்பட்டு இருந்தன. பல வால்வுகள் குடுவையுடன் இணைக்கப்பட்டு இருக்கும். அவற்றில் ஒரு வால்வை இழுத்தால் தேவையான உணவுப் பண்டங்கள் கிடைக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டு இருந்தது.

ஒரு எலியின் உடலில் 20 நாட்கள் வரை எத்தனால் செலுத்தப்பட்டது. அதன்பிறகு அதற்கு போதை மருந்து செலுத்தப்படவில்லை. மற்ற எலிகள் சாதாரண நிலையில் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டன.

ஆய்வின் முடிவில் போதைப் பொருள் நுகர்ந்த எலியின் உடலில் மதுவின் தாக்கம் எத்தனால் செலுத்துவதை நிறுத்திய பிறகும் இருந்தது. அந்த எலியால் சரியான வால்வை அடையாளம் கண்டு இழுத்து உணவை பெற முடியாமல் திணறியது. இதனால் அதன் முடிவு எடுக்கும் திறனில் போதைப்பழக்கம் தடுமாற்றத்தை ஏற்படுத்து வது உறுதியானது.

மாணவ ஆய்வாளரான நிக்கோலஸ் நாஸ்ரல்லா கூறும்போது, "மனிதர்களை இந்த ஆய்வுக்கு நேரடியாக உட்படுத்த முடியாததால் எலிகளை சோதனை செய்து பார்க்கப்பட்டது. அதிலிருந்து முடிவெடுக்கும் திறனில் மதுப்பழக்கம் பாதிப்பை ஏற்படுத்துவது தெரியவந்தது. இந்த பாதிப்புகள் மனிதர்களிடமும் ஏற்படும் என்பது ஆய்வின் மூலம் உறுதியாகிறது'' என்றார்.

***********************************************************************************************************************************

பிளாஸ்டிக்கில் இருந்து எரிபொருள்

சில தகவல்கள் Page04பிளாஸ்டிக் நெகிழா தன்மை கொண்டது. டீ கோப்பை, பாலிதீன் பைகள் முதற்கொண்டு அலங்காரப் பொருட்கள் உள்பட நாம் பயன்படுத்தும் ஏராளமான பொருட்களில் பிளாஸ்டிக் சேர்க்கப்பட்டு உள்ளது. இதனால் நாள்தோறும் வீணாகும் கழிவுகளிலும் அதில் அதிக அளவில் பிளாஸ்டிக்கும் கலந்து இருக்கிறது.

இது நெகிழா தன்மை கொண்டது மட்டுமல்லாமல் மறுசுழற்சி செய்தாலும் காற்றுக்கு பாதிப்பு ஏற்படுத்தும் தன்மை உடையது. அதனால்தான் பிளாஸ்டிக் பொருட்களுக்கு எதிரான விழிப்புணர்வு பிரசாரங்கள் தீவிரமாக நடந்து வருகின்றன.

இந்த நிலையில் பிளாஸ்டிக்கை உபயோகமான ஒரு வழியில் மறுசுழற்சி செய்யலாம் என்று அமெரிக்காவில் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. ஏராளமாக குவியும் இந்த கழிவுகளை பெட்ரோல், டீசல் போன்ற ஒரு மாற்று எரிபொருளாக மாற்றிவிடலாம் என்பதுதான் அந்த புதிய முறை.

இந்த முறையில் ஒரு டன் பிளாஸ்டிக் கழிவில் இருந்து 3 முதல் 5 பேரல் எரிபொருளை தயாரிக்கலாம். இந்த ஆயில், தாவர எண்ணை போன்ற கலங்கலான நிறத்திலும், மண்எண்ணை மற்றும் டீசல்போன்ற சிறிது மணமுடனும் இருக்கும். இந்த எண்ணையை மோட்டார் எரிபொருளாக பயன்படுத்தலாம்.

இப்படி பிளாஸ்டிக்கில் இருந்து தயாரிக்கப்படும் எரிபொருளை பயன்படுத்த ஒரு நிறுவனம் ஒப்பந்தம் செய்துள்ளது. பல்வேறு நிறுவனங்கள் ஆலோசித்து வருகின்றன. வரும் காலத்தில் உலகம் முழுவதும் பிளாஸ்டிக் எரிபொருள் பரவலாக பயன்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கலாம்.

***********************************************************************************************************************************

பொய்யை காட்டிக் கொடுக்கும் 'கையெழுத்து'

சில தகவல்கள் Handi1'கையெழுத்தைப் போல தலையெழுத்து அமையும்' என்று கூறுவார்கள். அது எந்த அளவு உண்மை என்று தெரியாது. ஆனால் கையெழுத்தை வைத்து இவர் பொய் சொல்லி இருக்கிறார் என்பதை கண்டுபிடித்துவிடலாம் என்கிறார்கள் விஞ்ஞானிகள்.

இஸ்ரேல் நாட்டின் ஹெய்பா பல்கலைக்கழகத்தை சேர்ந்த ஆய்வாளர்கள் 34 பேரை ஆய்வு எடுத்துக் கொண்டனர். அவர்கள் 2 பத்தி அளவு தகவலை மனப்பாடம் செய்ய வைக்கப்பட்டனர். பின்னர் அவர்களை எழுத வைத்து சோதனை செய்தனர். எழுத்துக்கள் தெளிவாக பதியும் படியான வயர்லஸ் எலக்ட்ரானிக் பேனாக்கள் கொண்டு அவர்கள் எழுதினார்கள்.

பின்னர் அந்த கையெழுத்துக்கள் கணினி மற்றும் `டச் சென்சிடிவ் பேடு' கருவி மூலம் ஆய்வு செய்யப்பட்டது. ஆய்வில் சிலர் மறந்துபோன விஷயங்களை குறிப்பிடும் போது, அதாவது பொய்த் தகவல்களை அளித்த இடங்களில் கையெழுத்தில் மாற்றங்கள் இருப்பது உணரப்பட்டது.

தவறான தகவல்கள் உள்ள இடங்களில் கையெழுத்து அழுத்தமாகவும், சீராக இல்லாமல் நீளமாகவோ, வார்த்தைக் கோர்வையின்றியோ காணப்பட்டன. மேலும் சரியான தகவல்கள் எழுதும்போது உயரமான எழுத்துக்களாக குறிப்பிடுவதும் அறியப்பட்டது.

இந்த முறையைப் பயன்படுத்தி ஒருவர் குறிப்பிட்டு இருக்கும் தகவல்கள் உண்மையா? பொய்யா? என்று கண்டுபிடித்துவிடலாம் என்கிறார்கள் ஆய்வாளர்கள். "இந்த மாற்றங்களை வெறும் கண்களாலும் பார்க்க முடியும். ஆனால் துல்லியமான முடிவுக்கு கருவிகள் மூலமே ஆய்வு செய்ய வேண்டும். இன்சூரன்சு நிறுவனங்கள் மற்றும் பத்திரங்கள் வழங்கும் இடங்களில் இந்த முறையைப் பயன்படுத்தி கொடுக்கப்பட்டு உள்ள விவரங்கள் உண்மையானவையா? என்பதை கண்டறியலாம்'' என்று விஞ்ஞானிகள் தெரிவித்து உள்ளனர்.

ஹெர்ட்போட்சைர் பல்கலைக்கழக பேராசிரியரான வைஸ்மேன், 'இந்த முறையில் உண்மை இருப்பினும் இதுபற்றிய ஆய்வுகள் பெரிய அளவில் நடைபெற வேண்டும்` என்று கருத்து தெரிவித்துள்ளார்.
avatar
dawndhan
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 26
இணைந்தது : 17/10/2009

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum