Latest topics
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்by heezulia Today at 11:15 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 10:30 am
» தமிழ்ப் பழமொழிகள்
by ayyasamy ram Today at 10:27 am
» வாட்ஸ் அப் காமெடி
by ayyasamy ram Today at 10:00 am
» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Today at 9:30 am
» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by ayyasamy ram Today at 8:52 am
» அதர்வா முரளியின் ‘டிஎன்ஏ’பட டப்பிங் பணிகள் தொடங்கியது!
by ayyasamy ram Today at 8:51 am
» கள்ளச்சாராயம் - மீம்ஸ் -(ரசித்தவை)
by ayyasamy ram Today at 8:49 am
» கருத்துப்படம் 25/06/2024
by mohamed nizamudeen Today at 8:02 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:20 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 1:04 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 12:51 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:34 am
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:56 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:50 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:42 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:35 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:12 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:55 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 10:30 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 10:11 pm
» செய்திக்கொத்து
by ayyasamy ram Yesterday at 10:06 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:53 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:11 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:51 pm
» வங்கி சேமிப்பு கணக்கு
by T.N.Balasubramanian Yesterday at 5:11 pm
» சொந்த வீடு... தனி வீடு Vs ஃப்ளாட் - எது பெஸ்ட்?
by Dr.S.Soundarapandian Yesterday at 1:45 pm
» பூட்டுக் கண் திறந்த வீடு
by Dr.S.Soundarapandian Yesterday at 1:34 pm
» புதுப்பறவை ஆகுவேன் - கவிதை
by ayyasamy ram Yesterday at 12:16 pm
» திரைத்துளி
by ayyasamy ram Yesterday at 11:43 am
» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:39 pm
» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:32 pm
» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:53 pm
» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:37 pm
» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:36 pm
» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:35 pm
» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:34 pm
» உலகின் மிக குட்டையான திருமண ஜோடி
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:33 pm
» பெட்ரோ டாலர் என்றால் என்ன?
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:33 pm
» இப்பல்லாம் மனைவிக்கு பயப்படறதில்லையாமே…!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:32 pm
» தேங்காபழம் இல்லியாம்னே!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:31 pm
» கொத்தமல்லி புளிப்பொங்கல்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:30 pm
» கோயில் பொங்எகல்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:29 pm
» சுந்தர் பிச்சை
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:26 pm
» மனசாட்சிக்கு உண்மையாக இரு...!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:25 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:23 pm
» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:13 pm
» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Sun Jun 23, 2024 2:33 pm
» இயற்கை அழகு & மலர்கள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 1:14 pm
Top posting users this week
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Balaurushya |
| |||
prajai |
| |||
mohamed nizamudeen |
| |||
Ammu Swarnalatha |
| |||
T.N.Balasubramanian |
|
Top posting users this month
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
prajai |
| |||
sugumaran |
| |||
Ammu Swarnalatha |
| |||
Karthikakulanthaivel |
| |||
ayyamperumal |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
நிலக்கரி சுரங்க ஊழல் வழக்கில் மன்மோகன் சிங்குக்கு சம்மன்
Page 1 of 1
நிலக்கரி சுரங்க ஊழல் வழக்கில் மன்மோகன் சிங்குக்கு சம்மன்
நிலக்கரி சுரங்க ஒதுக்கீடு ஊழல் வழக்கில், குற்றம்சாட்டப்பட்டவர் என்ற முறையில், முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்குக்கு சிறப்பு நீதிமன்றம் சம்மன் அனுப்பியுள்ளது.
மன்மோகன் சிங் உள்ளிட்ட குற்றம்சாட்டப்பட்ட 6 பேரும் ஏப்ரல் 8-ல் சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என்று அந்த சம்மனில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நிலக்கரிச் சுரங்க ஒதுக்கீடு வழக்கில் தொழிலதிபர் குமார மங்கலம் பிர்லா மற்றும் முன்னாள் நிலக்கரிச் செயலர் பி.சி.பராக், ஹிண்டில்கோ நிறுவனம், அதன் அதிகாரிகள் ஷுபேண்ந்து அமிதாப் மற்றும் டி.பட்டாச்சார்யா ஆகியோரும் சம்மன் அனுப்பப்பட்டவர்களில் அடங்குவர்.
ஒடிஸா மாநிலம், சம்பல்பூர் மாவட்டத்தில் உள்ளது தலபிரா கிராமம். இங்கு நிலக்கரி சுரங்கம் அமைக்க கடந்த 2005-ம் ஆண்டு மத்திய அரசு அனுமதி வழங்கியது. இதற்கு அந்தக் கிராம மக்கள் கடும் எதிர்ப்புத் தெரிவித்தனர். காடுகள், சுற்றுச்சூழலைப் பாதிக்கும் என்று குரல் எழுப்பினர். எனினும், சுரங்கத்துக்கு ஒப்புதல் வழங்கப்பட்டது. பின்னர், நிலக்கரி சுரங்க ஒதுக்கீட்டில் பல்வேறு முறைகேடுகள் நடந்ததாக புகார் எழுந்தது. இதுகுறித்து சிபிஐ வழக்கு பதிவு செய்தது.
வழக்கு விசாரணையின் போது, மன்மோகன் சிங், பிரதமர் அலுவலக உயரதிகாரிகள் சிலரிடம் விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்யும்படி சிபிஐ நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. அதன்படி, மன்மோகன் சிங், சிங்கின் அப்போதைய முதன்மைச் செயலர் டிகேஏ நாயர், அப்போதைய தனிச் செயலாளர் பி.வி.ஆர் .சுப்பிரமணியம் உட்பட வழக்கில் தொடர்புடைய சிலரின் வாக்குமூலத்தை சிபிஐ பதிவு செய்து மூடி முத்திரையிட்ட உறையில் அறிக்கையாக நீதிமன்றத்தில் தாக்கல் செய்தது.
இந்நிலையில், மன்மோகன் சிங், குமாரமங்கலம் பிர்லா, ஹிண்டால்கோ நிறுவனம், இந்நிறுவனத்தின் மூத்த அதிகாரிகள் ஷுப்ஹெண்டு அமிதாப், டி. பட்டாச்சார்யா, முன்னாள் செயலர் பி.சி.பராக் ஆகியோருக்குச் சிபிஐ சிறப்பு நீதிமன்றம் சம்மன் அனுப்ப உத்தரவிட்டது. இவர்கள் 6 பேரும் ஏப்ரல் 8-ம் தேதி நீதிமன்றத்தில் நேரில் ஆஜராக வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![நிலக்கரி சுரங்க ஊழல் வழக்கில் மன்மோகன் சிங்குக்கு சம்மன் Q9CBqnj](https://i.imgur.com/Q9CBqnj.png)
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: நிலக்கரி சுரங்க ஊழல் வழக்கில் மன்மோகன் சிங்குக்கு சம்மன்
இதுகுறித்து சிபிஐ நீதிமன்ற நீதிபதி பரத் பராஷார், தனது 73 பக்க உத்தரவில் கூறியிருப்பதாவது:
ஹிண்டால்கோ நிறுவனத்துக்கு நிலக்கரி சுரங்க ஒதுக்கீடு வழங்கும்படி, அப்போதைய செயலர் பராக் பரிந்துரைத்துள்ளார். ஆனால், பிரதமர் அலுவலக அதிகாரிகள் கே.வி.பிரதாப், ஜாவீத் உஸ்மானி ஆகியோர் ஆட்சேபனைத் தெரிவித்துள்ளனர். ஏற்கெனவே உள்ள விதிமுறைகள் தளர்த்தப்பட்டுள்ளன. எனவே, ஹிண்டால்கோவுக்கு அனுமதி வழங்கக் கூடாது என்று குறிப்பு எழுதி உள்ளனர். அதை கருத்தில் கொள்ளாமல், மன்மோகன் சிங் ஒப்புதல் வழங்கி உள்ளார்.
இந்த வழக்கில் ஹிண்டால்கோ நிறுவனம், குமாரமங்கலம் பிர்லா, ஷுப்ஹெண்டு, பட்டாச்சார்யா ஆகியோர் முதல்கட்ட குற்றச் சதியில் ஈடுபட்டுள்ளதற்கான முகாந்திரம் இருப்பது தெரிகிறது. அதன்பின், நால்வரும் அப்போதைய அரசு செயலர் பராக்கையும், அப்போது நிலக்கரித் துறை அமைச்சர் பொறுப்பையும் வைத்திருந்த மன்மோகன் சிங்கையும் இந்த சதியில் இழுத்துள்ளனர். பராக் மற்றும் மன்மோகன் இருவரும் தனித்தனியாக செயல்பட்டுள்ளது தெரிகிறது. எனினும், கடைசியில் ஹிண்டால்கோ நிறுவனத்துக்கு நிலக்கரி சுரங்க ஒதுக்கீட்டுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இவர்கள் அனைவரும் ஏப்ரல் 8-ம் தேதி நீதிமன்றத்தில் நேரில் ஆஜராக வேண்டும்.
இவ்வாறு நீதிபதி பரத் பராஷார் உத்தரவிட்டுள்ளார்.
ஆதித்ய பிர்லா குழுமத்தைச் சேர்ந்தது ஹிண்டால்கோ நிறுவனம். இந்நிறுவனம் நேற்று வெளியிட்ட அறிக்கையில், ‘எங்கள் நிறுவனத்தைச் சேர்ந்த அதிகாரிகள் யாரும், நிலக்கரி சுரங்க ஒதுக்கீட்டைப் பெறுவதற்காக எந்த சட்டவிரோத நடவடிக்கைகளிலும் ஈடுபடவில்லை. சம்மன் தொடர்பாக நீதிமன்ற உத்தரவை ஆராய்ந்து வருகிறோம். சட்டப்படி எந்தப் பிரச்சினையையும் சந்திப்போம்’ என்று தெரிவித்துள்ளது.
இதேபோல் முன்னாள் செயலர் பராக் கூறும்போது, ‘நான் எந்தத் தவறும் செய்யவில்லை. சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபடவில்லை. சம்மன் அனுப்ப நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது ஆச்சரியமாக உள்ளது’ என்றார்.
குற்றம் நிரூபிக்கப்பட்டால் அனைவருக்கும் அதிகபட்சமாக ஆயுள் தண்டனை வழங்க சட்டத்தில் வழி உள்ளது.
ஹிண்டால்கோ நிறுவனத்துக்கு நிலக்கரி சுரங்க ஒதுக்கீடு வழங்கும்படி, அப்போதைய செயலர் பராக் பரிந்துரைத்துள்ளார். ஆனால், பிரதமர் அலுவலக அதிகாரிகள் கே.வி.பிரதாப், ஜாவீத் உஸ்மானி ஆகியோர் ஆட்சேபனைத் தெரிவித்துள்ளனர். ஏற்கெனவே உள்ள விதிமுறைகள் தளர்த்தப்பட்டுள்ளன. எனவே, ஹிண்டால்கோவுக்கு அனுமதி வழங்கக் கூடாது என்று குறிப்பு எழுதி உள்ளனர். அதை கருத்தில் கொள்ளாமல், மன்மோகன் சிங் ஒப்புதல் வழங்கி உள்ளார்.
இந்த வழக்கில் ஹிண்டால்கோ நிறுவனம், குமாரமங்கலம் பிர்லா, ஷுப்ஹெண்டு, பட்டாச்சார்யா ஆகியோர் முதல்கட்ட குற்றச் சதியில் ஈடுபட்டுள்ளதற்கான முகாந்திரம் இருப்பது தெரிகிறது. அதன்பின், நால்வரும் அப்போதைய அரசு செயலர் பராக்கையும், அப்போது நிலக்கரித் துறை அமைச்சர் பொறுப்பையும் வைத்திருந்த மன்மோகன் சிங்கையும் இந்த சதியில் இழுத்துள்ளனர். பராக் மற்றும் மன்மோகன் இருவரும் தனித்தனியாக செயல்பட்டுள்ளது தெரிகிறது. எனினும், கடைசியில் ஹிண்டால்கோ நிறுவனத்துக்கு நிலக்கரி சுரங்க ஒதுக்கீட்டுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இவர்கள் அனைவரும் ஏப்ரல் 8-ம் தேதி நீதிமன்றத்தில் நேரில் ஆஜராக வேண்டும்.
இவ்வாறு நீதிபதி பரத் பராஷார் உத்தரவிட்டுள்ளார்.
ஆதித்ய பிர்லா குழுமத்தைச் சேர்ந்தது ஹிண்டால்கோ நிறுவனம். இந்நிறுவனம் நேற்று வெளியிட்ட அறிக்கையில், ‘எங்கள் நிறுவனத்தைச் சேர்ந்த அதிகாரிகள் யாரும், நிலக்கரி சுரங்க ஒதுக்கீட்டைப் பெறுவதற்காக எந்த சட்டவிரோத நடவடிக்கைகளிலும் ஈடுபடவில்லை. சம்மன் தொடர்பாக நீதிமன்ற உத்தரவை ஆராய்ந்து வருகிறோம். சட்டப்படி எந்தப் பிரச்சினையையும் சந்திப்போம்’ என்று தெரிவித்துள்ளது.
இதேபோல் முன்னாள் செயலர் பராக் கூறும்போது, ‘நான் எந்தத் தவறும் செய்யவில்லை. சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபடவில்லை. சம்மன் அனுப்ப நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது ஆச்சரியமாக உள்ளது’ என்றார்.
குற்றம் நிரூபிக்கப்பட்டால் அனைவருக்கும் அதிகபட்சமாக ஆயுள் தண்டனை வழங்க சட்டத்தில் வழி உள்ளது.
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![நிலக்கரி சுரங்க ஊழல் வழக்கில் மன்மோகன் சிங்குக்கு சம்மன் Q9CBqnj](https://i.imgur.com/Q9CBqnj.png)
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: நிலக்கரி சுரங்க ஊழல் வழக்கில் மன்மோகன் சிங்குக்கு சம்மன்
மன்மோகன் சிங் வருத்தம்
சிபிஐ நீதிமன்றம் சம்மன் அனுப்ப உத்தரவிட்டுள்ளது குறித்து டெல்லியில் செய்தியாளர்கள் கேட்டதற்கு மன்மோகன் சிங் கூறியதாவது:
இந்த உத்தரவை அறிந்து வருத்தம் அடைந்தேன். எனினும் வாழ்க்கையில் இதுபோன்ற சூழ்நிலையும் ஒரு அங்கம்தான். நேர்மையான விசாரணை நடக்கும்போது உண்மை வெளியில் வரும் என்று நம்புகிறேன். சட்டப்படி எந்த விசாரணையையும் சந்திக்கத் தயார் என்று நான் தொடர்ந்து கூறி வருகிறேன். நிலக்கரி சுரங்க ஒதுக்கீட்டில் நடந்த உண்மைகள் அனைத்தையும் தெரிவிக்க எனக்கு கிடைத்திருக்கும் வாய்ப்பாகத்தான் இதைப் பார்க்கிறேன்.
இந்த வழக்கு தொடர்பாக சிபிஐ முன்னிலையில் நான் ஏற்கெனவே வாக்குமூலம் தந்திருக்கிறேன். பிரதமர் பதவி வகித்தபோதே, நான் எடுத்த நியாயமான நடவடிக்கைகள் குறித்து விரிவான அறிக்கையும் வெளியிட்டிருக்கிறேன். நாட்டில் நீதிமன்ற நடவடிக்கைகளுக்கு மதிப்பளிக்கிறேன். இந்த வழக்குக்கும் எனக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்பதை நீதிமன்றத்தில் நிரூபிப்பேன். உண்மை நிச்சயம் வெற்றி பெறும்.
இவ்வாறு மன்மோகன் சிங் கூறினார்.
சிபிஐ நீதிமன்றம் சம்மன் அனுப்ப உத்தரவிட்டுள்ளது குறித்து டெல்லியில் செய்தியாளர்கள் கேட்டதற்கு மன்மோகன் சிங் கூறியதாவது:
இந்த உத்தரவை அறிந்து வருத்தம் அடைந்தேன். எனினும் வாழ்க்கையில் இதுபோன்ற சூழ்நிலையும் ஒரு அங்கம்தான். நேர்மையான விசாரணை நடக்கும்போது உண்மை வெளியில் வரும் என்று நம்புகிறேன். சட்டப்படி எந்த விசாரணையையும் சந்திக்கத் தயார் என்று நான் தொடர்ந்து கூறி வருகிறேன். நிலக்கரி சுரங்க ஒதுக்கீட்டில் நடந்த உண்மைகள் அனைத்தையும் தெரிவிக்க எனக்கு கிடைத்திருக்கும் வாய்ப்பாகத்தான் இதைப் பார்க்கிறேன்.
இந்த வழக்கு தொடர்பாக சிபிஐ முன்னிலையில் நான் ஏற்கெனவே வாக்குமூலம் தந்திருக்கிறேன். பிரதமர் பதவி வகித்தபோதே, நான் எடுத்த நியாயமான நடவடிக்கைகள் குறித்து விரிவான அறிக்கையும் வெளியிட்டிருக்கிறேன். நாட்டில் நீதிமன்ற நடவடிக்கைகளுக்கு மதிப்பளிக்கிறேன். இந்த வழக்குக்கும் எனக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்பதை நீதிமன்றத்தில் நிரூபிப்பேன். உண்மை நிச்சயம் வெற்றி பெறும்.
இவ்வாறு மன்மோகன் சிங் கூறினார்.
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![நிலக்கரி சுரங்க ஊழல் வழக்கில் மன்மோகன் சிங்குக்கு சம்மன் Q9CBqnj](https://i.imgur.com/Q9CBqnj.png)
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|