Latest topics
» Outstanding Сasual Dating - Verified Ladiesby VENKUSADAS Today at 5:33 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Today at 5:31 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Today at 5:31 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:50 pm
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Yesterday at 11:28 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Yesterday at 11:22 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:18 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:00 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:39 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:26 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 8:36 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:24 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:50 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:34 pm
» மனமே விழி!
by ayyasamy ram Yesterday at 7:20 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:09 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:54 pm
» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 6:52 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:37 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:14 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:20 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 12:45 pm
» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Yesterday at 8:41 am
» நாவல்கள் வேண்டும்
by Harriz Yesterday at 4:07 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Jun 29, 2024 11:20 pm
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:57 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:43 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஜெ., வழக்கில் கேள்விக்கணை தொடுத்த நீதிபதி: தீர்ப்பு தேதி இன்று அறிவிப்பு?
Page 1 of 1
ஜெ., வழக்கில் கேள்விக்கணை தொடுத்த நீதிபதி: தீர்ப்பு தேதி இன்று அறிவிப்பு?
பெங்களூரு: "முதல்வர் என்பவர், ஒரு மாநிலத்தின் தலைவர்; அவர் மீது, எந்த சட்டத்தின் கீழ், வழக்குப்பதிவு செய்துள்ளீர்கள்; இவ்வழக்குக்கு, 'கூட்டு சதி' எந்த வகையில் பொருந்தும். அதற்கான, ஆதாரம் உள்ளதா,” என, அரசு வழக்கறிஞரிடம், நீதிபதி குமாரசாமி கேள்வி எழுப்பினார்.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா உள்ளிட்ட, நான்கு பேருக்கு எதிரான, சொத்துக் குவிப்பு வழக்கு மேல் முறையீட்டு மனு மீதான விசாரணை, கர்நாடகா உயர் நீதிமன்ற சிறப்பு நீதிமன்றத்தில், நீதிபதி குமாரசாமி முன், 40வது நாளாக, நேற்று நடந்தது.ஜெயலலிதா, சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோரின் மூல சொத்துகள், கடந்த, 1991ம் ஆண்டு முதல், 1996ம் ஆண்டு வரையிலான வருமானம், செலவு மற்றும் வழக்கு தொடர்பான விவரங்களை, 177 பக்கங்களில் தயாரித்து, எழுத்து பூர்வமாக, அவர்களின் வழக்கறிஞர்கள் செந்தில், செல்வகுமார், பரணிகுமார், திவாகர் ஆகியோர், நீதிபதி குமாரசாமியிடம் சமர்ப்பித்தனர்.
நீதிபதி: இதிலுள்ள விவரங்களை மேலோட்டமாக விளக்கவும்.
ஜெ., வழக்கறிஞர் குமார்: ஜெயலலிதா உள்ளிட்ட, நான்கு பேர் மீதும், சுப்பிரமணியன்சாமி தாக்கல் செய்த, வருமானத்துக்கு அதிகமான சொத்து சேர்த்த மனு மீதான விசாரணையை, ஊழல் தடுப்பு போலீஸ் டி.ஐ.ஜி., லத்திகா சரண், விசாரணை செய்து கொண்டிருக்கும் போதே, ஐ.ஜி., பெருமாளுக்கு, அப்போதைய அரசு, அவசரமாக உத்தரவு பிறப்பித்து, எப்.ஐ.ஆர்., பதிவு செய்ய சொன்னது, முதல் தவறு.அரசியல் காழ்ப்புணர்ச்சியுடன் தொடரப்பட்ட வழக்கு.விசாரணை செய்த அதிகாரி, எப்.ஐ.ஆர்., பதிவு செய்யாமல், எஸ்.பி., பதவி அந்தஸ்திலுள்ள, உயர் போலீஸ் அதிகாரி, எப்.ஐ.ஆர்., பதிவு செய்தது, வழக்கத்துக்கு மாறானது.கடந்த, 1991ம் ஆண்டுக்கு முற்பட்ட, ஜெயலலிதாவின் சொத்து, நகைகள், கம்பெனிகளை, அவர், முதல்வர் பதவியிலிருந்த, கடந்த, 1991ம் ஆண்டு முதல், 1996 வரையிலான காலத்தில், சம்பாதித்ததாக காண்பித்திருப்பது தவறு.கட்டடங்கள் கட்டியதில், செலவு தொகையை, 18 கோடி ரூபாய் அதிகமாக காண்பித்துள்ளனர்; சசிகலாவுக்கு, கடந்த, 1988ம் ஆண்டில் இருந்தே, தனியாக சொத்துகள், கம்பெனிகள் உள்ளன. தொழிலதிபரான அவர், வருமான வரி செலுத்தி வருகிறார்.
நீதிபதி: அப்படிபட்டவர், எதற்காக, ஜெயலலிதா வீட்டில் தங்கியிருக்க வேண்டும்.
ஜெ., வழக்கறிஞர்: கடந்த, 30 ஆண்டுகளாக, இருவரும் ஒன்றாக வசித்து வருகின்றனர். இரண்டு நண்பர்கள், ஒன்றாக வசிப்பது குற்றமா, கூட்டு சதி செய்தனர் என்பது, இவ்வழக்குக்கு பொருந்தாது. அதற்கான, எந்த ஆதாரமும் இல்லை.
நீதிபதி: (அரசு வழக்கறிஞரை பார்த்து) முதல்வர் என்பவர், ஒரு மாநிலத்தின் தலைவர்; அவர் மீது, எந்த சட்டத்தின் கீழ், வழக்குப்பதிவு செய்துள்ளீர்கள். இவ்வழக்குக்கு கூட்டு சதி, எந்த வகையில் பொருந்தும். அதற்கான ஆதாரம் உள்ளதா?
அரசு வழக்கறிஞர் பவானி சிங்: கூட்டு சதி என்பதை விளக்க, சட்ட விதி 13(1)ன் படி, நேரடியான சாட்சியம் தேவையில்லை. சூழ்நிலை, சந்தர்ப்பம் ஆகியவைகளை கருத்தில் கொண்டு, கணக்கிட வேண்டும் என, குறிப்பிடப்பட்டுள்ளன. அது போன்று, ஜெயலலிதா வீட்டில் வசித்த சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோர், அவரது பதவியை, துஷ்பிரயோகப்படுத்தி, சொத்து சேர்த்தனர் என, குற்றப்பத்திரிகையில் கூறப்பட்டுள்ளது. முதல்வர் மீது, சொத்துக் குவிப்பு வழக்கு என, வரும்போது, எந்த சட்டம் பயன்படுத்த வேண்டும் என்பது குறித்து, குறிப்பிடும்படி, விதிகள் இல்லை.எனவே, தவறு செய்யும் பப்ளிக் சர்வண்ட் மீது தொடரப்படும், 21 ஐ.பி.சி., என்ற பிரிவின் கீழ், வழக்கு தொடரப்பட்டது.
நீதிபதி: இது தொடர்பாக, முந்தைய சிறப்பு நீதி மன்றத்தில், தி.மு.க., பொது செயலர் அன்பழகன், ஏதேனும் குற்றச்சாட்டு கூறியுள்ளாரா?
அரசு வழக்கறிஞர்: அன்பழகன் வழக்கறிஞர் குமரேசன், சரவணன் தாக்கல் செய்த எழுத்து பூர்வமான வாதத்தில், சொத்து குவிப்புக்கு ஆதாரம் உள்ளன என, குறிப்பிட்டுள்ளனர்.
இதையடுத்து, வழக்கறிஞர்கள் குலசேகர், நாகராஜன், ஜெயராமன், அம்பிகை தாஸ், சுந்தரபாண்டியன் ஆகியோர், ஆறு கம்பெனிகளின் சொத்து விவரம், எப்படி துவங்கப்பட்டது, உரிமையாளர்கள் யார், வங்கியில் உள்ள கடன் விவரங்கள் அனைத்தையும் விளக்கி, இந்த கம்பெனிகளுக்கும் குற்றம் சாட்டப்பட்டுள்ள, நான்கு பேருக்கும் எந்த சம்பந்தமும் இல்லை.இந்த கம்பெனிகளை, சீல் வைத்தது தவறு. எனவே, இதை, தங்களிடம் ஒப்படைக்க வேண்டுமென்று, நீதிபதியிடம் முறையிட்டனர்.
நீதிபதி: குற்றம் சாட்டப்பட்டவர்களுடன், ஆறு கம்பெனிகளும் குற்றப்பத்திரிகையில் சேர்க்கப்பட்டுள்ளன. எனவே, தப்பு செய்தவர்கள் தப்பிக்க முடியாது. பொதுவாக, விசாரணை முடிவில், குற்றம் சாட்டப்பட்டவர்கள், குற்றவாளிகள் என, தீர்ப்பளிக்கப்படுமானால், அவர்களின் சொத்துகள், பறிமுதல் செய்யப்படும்.இத்துடன், விசாரணை முடிவடைந்தது.
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![ஜெ., வழக்கில் கேள்விக்கணை தொடுத்த நீதிபதி: தீர்ப்பு தேதி இன்று அறிவிப்பு? Q9CBqnj](https://i.imgur.com/Q9CBqnj.png)
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: ஜெ., வழக்கில் கேள்விக்கணை தொடுத்த நீதிபதி: தீர்ப்பு தேதி இன்று அறிவிப்பு?
பா.ஜ., பிரமுகர் சுப்பிரமணியன்சாமி, தன், 14 பக்க எழுத்து பூர்வமான வாதத்தை, நீதிபதியிடம் இன்று சமர்பிக்கிறார். இதையடுத்து, தீர்ப்பு தேதி அறிவிக்கப்படலாம் அல்லது தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைக்கலாம்.
*கர்நாடகா உயர் நீதிமன்ற புதிய நீதிபதியாக, ராகவேந்திரா நேற்று பதவியேற்றுக்கொண்டார். இவ்விழாவில் கலந்து கொண்ட நீதிபதி குமாரசாமி, ஒரு மணி நேரம் தாமதமாக நீதிமன்றத்துக்கு வந்தார்.
*இன்று, 14 பக்கம் கொண்ட எழுத்து பூர்வமான வாதங்களை சமர்பிப்பதாக கூறிய, சுப்பிரமணியசாமியின் வழக்கறிஞர், பவன் சந்திர ஷெட்டி, அதில், குறிப்பிட்டுள்ளவைகளை கூற மறுத்தார்.
*சொத்து குவிப்பு வழக்கிலிருந்து, ஜெயலலிதா விடுதலையாக வேண்டுமென்று, திருச்செந்தூர் செந்திலாண்டவரை வேண்டி, ஜெ.,வழக்கறிஞர்கள் செல்வகுமார், திவாகர் ஆகியோர், தாடி வளர்க்கின்றனர்.
சொத்துக் குவிப்பு வழக்கில், ஜெயலலிதா உள்ளிட்ட நான்கு பேரின் வழக்கறிஞர்கள், கர்நாடகா உயர்நீதிமன்ற சிறப்பு நீதிமன்றத்தில் தாக்கல் செய்த எழுத்து பூர்வமான வாதத்தில், சில அம்சங்கள்:
*செக் ஷன்,17ன்படி, விசாரணை அதிகாரி நியமிக்கப்படவில்லை.
*டி.ஐ.ஜி., லத்திகா சரண் விசாரணையை பாதியில் நிறுத்தியது தவறு.
*விசாரணைக்கு முன், எப்.ஐ.ஆர்., போடப்பட்டது தவறு. எஸ்.பி.. பதவியில் உள்ளவர், எப்.ஐ.ஆர்., போட்டது வழக்கத்துக்கு மாறானது. விசாரணை செய்யும், இன்ஸ்பெக்டர் தான், எப்.ஐ.ஆர்., போடுவது வழக்கம். இந்த நடைமுறை, இதில் மீறப்பட்டுள்ளன.
*சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோர், ஜெயலலிதாவின் பினாமி என்பதற்கான, எந்த ஆதாரமும் சமர்பிக்கப்படவில்லை. பினாமி சட்டப்படி, வழக்கு தொடரப்படவில்லை.
*கடந்த, 1991 ம் ஆண்டு முதல், 1996 வரை, கட்டப்பட்ட கட்டடங்களுக்கான செலவை, மிக அதிகமாக கணக்கிட்டுள்ளனர். 18 கோடி ரூபாய், அதிகமாக காண்பிக்கப்பட்டுள்ளது.
*சுதாகரன் திருமண செலவு, 6.5 கோடி ரூபாய் என்று காண்பித்துள்ளனர். இந்த செலவை, ராம் குமார் உட்பட, பலர், செலவிட்டுள்ளனர்.
*திருமணம் நடந்த இரண்டு ஆண்டுக்கு பின், பந்தல் போட்ட மைதானத்தை பார்த்து, செலவை, பலகோடி ரூபாயாக கணக்கிட்டுள்ளனர்.
*முதல்வர் பதவிக்கு வருவதற்கு முன்புள்ள சொத்துகள், நகைகளை, பதவி காலத்தின் போது, சேர்த்ததாக காண்பித்துள்ளனர்.
*கட்டட செலவில், 20 சதவீதம் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.
*பதவி காலத்துக்கு முன், வங்கியில் வைப்பு நிதி போடப்பட்டிருந்தது. பதவி காலத்தின் போது, முதிர்வடைந்தது. மீண்டும், அந்த தொகை, வைப்பு நிதியாக போடப்பட்டது. ஆனால், ஊழல் தடுப்பு போலீசார், வருமானமாக கணக்கிட்டுள்ளனர்.
*திராட்சை தோட்டம் வருமானம், கட்டடங்களுக்கு வந்த வாடகை குறைவாக மதிப்பிடப்பட்டுள்ளன.
*கூட்டு சதி என்பதற்கு தகுந்த ஆதாரம் சமர்ப்பிக்கவில்லை. அரசியல் காழ்ப்புணர்ச்சியுடன் தொடரப்பட்ட வழக்கு.
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![ஜெ., வழக்கில் கேள்விக்கணை தொடுத்த நீதிபதி: தீர்ப்பு தேதி இன்று அறிவிப்பு? Q9CBqnj](https://i.imgur.com/Q9CBqnj.png)
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» நீதிபதி தினகரன் வழக்கில் இன்று தீர்ப்பு
» 2ஜி வழக்கில் 21-ந்தேதி தீர்ப்பு சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்ற நீதிபதி அறிவிப்பு
» 11 எம்.எல்ஏக்களுக்கு எதிரான தகுதி நீக்க வழக்கில் இன்று தீர்ப்பு
» மான் வேட்டை வழக்கில் சல்மானுக்கு என்ன தண்டனை: இன்று தீர்ப்பு
» அன்னிய செலாவணி மோசடியில் ரூ.25 கோடி அபராதம்: டிடிவி. தினகரன் செய்த மேல்முறையீட்டு வழக்கில் இன்று தீர்ப்பு
» 2ஜி வழக்கில் 21-ந்தேதி தீர்ப்பு சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்ற நீதிபதி அறிவிப்பு
» 11 எம்.எல்ஏக்களுக்கு எதிரான தகுதி நீக்க வழக்கில் இன்று தீர்ப்பு
» மான் வேட்டை வழக்கில் சல்மானுக்கு என்ன தண்டனை: இன்று தீர்ப்பு
» அன்னிய செலாவணி மோசடியில் ரூ.25 கோடி அபராதம்: டிடிவி. தினகரன் செய்த மேல்முறையீட்டு வழக்கில் இன்று தீர்ப்பு
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|