Latest topics
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டுby heezulia Today at 22:05
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 14:18
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:08
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 0:46
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 22:23
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 14:15
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:27
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:18
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 0:59
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 0:49
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 22:01
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:59
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:57
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:56
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:54
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:52
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:50
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:48
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:46
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:45
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat 28 Sep 2024 - 18:21
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat 28 Sep 2024 - 17:52
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat 28 Sep 2024 - 17:39
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat 28 Sep 2024 - 17:03
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat 28 Sep 2024 - 15:39
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat 28 Sep 2024 - 14:35
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sat 28 Sep 2024 - 14:24
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat 28 Sep 2024 - 13:15
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 23:08
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 23:00
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:51
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:46
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:44
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:42
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:30
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:26
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:13
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:08
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:06
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri 27 Sep 2024 - 17:04
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri 27 Sep 2024 - 16:12
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 10:54
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 10:50
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu 26 Sep 2024 - 21:11
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu 26 Sep 2024 - 15:51
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu 26 Sep 2024 - 15:48
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu 26 Sep 2024 - 15:45
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu 26 Sep 2024 - 15:43
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu 26 Sep 2024 - 15:42
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu 26 Sep 2024 - 15:38
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
யூதிகா பரமேஸ்வரன்!
3 posters
Page 1 of 1
யூதிகா பரமேஸ்வரன்!
எம்பெருமான் ஈசனுக்கு எத்தனை எத்தனையோ
திருப்பெயர்கள் உண்டு. ஆனால் வித்தியாசமான,
"யூதிகா பரமேஸ்வரன்' என்ற பெயரோடு அவர்
அருளும் தலம் ஒன்று நாகை மாவட்டத்தில்
உள்ளது.
-
யூதிகா பரமேஸ்வரருக்கு "முல்லைவன நாதர்'
என்றும் ஒரு பெயர் உண்டு. அப்பெயர் வந்ததற்கான
புராண வரலாறு, மன்னன் முதலாம் கிளிவளவனுடன்
தொடர்புடையது.
-
ஒருசமயம் மன்னன் தன் பரிவாரங்களுடன்
வேட்டைக்குச் செல்கையில் வனத்தில் ஓரிடத்தில்
அரசரது குதிரையின் கால்கள் முல்லைக்கொடிகளில்
சுற்றிக் கொள்ளவே, தன் வாளால் அந்தக்
கொடிகளை வெட்டினான்.
-
முல்லைக்கொடி வெட்டுப்பட்ட கணத்தில்
அங்கிருந்து ரத்தம் பீய்ச்சி அடித்தது. அதிர்ந்து
போனான் மன்னன். உள்ளே தவம் செய்த முனிவர்
யாரையோ அறியாமல் வெட்டி விட்டோம் என
நினைத்து பயந்து நடுங்கியபடி, கொடிகளை
அகற்றிப் பார்த்தார்.
-
அங்கே சிவலிங்கம் ஒன்றிலிருந்து குருதி வழிந்தபடி
இருக்க, ஈசனையே வெட்டி விட்டோமே என்ற
வேதனை தாளாமல் தனது தலையை வாளால் வெட்ட
முனைந்தான்.
-
உடனே தன நாயகியுடன் அங்கு தோன்றி,
மன்னனை மன்னித்து ஆசியளித்தார்.
-
முல்லைவனத்தில் தோன்றியதால் இறைவன்,
முல்லைவனநாதர். அவருடன் அணியாகவந்ததால்
அம்பிகை அணிகொண்ட கோதை நாயகி
திருமுல்லைவாசல், தென் திருமுல்லைவாசல் எனவும்
இத்தலம் அழைக்கப்படுகிறது.
-
அரசன் வாளால் வெட்டுண்ட தழும்பு இன்றும்
முல்லைவனநாதரின் லிங்கத்திருமேனியில் காணப்ப
டுவதாகச் சொல்கிறார்கள். இத்தழும்பு இருந்தாலும்
இவரை வழிபடுவதில் எந்தக் குற்றமும் இல்லை
என்பதால், மாசிலா மணீஸ்வரர் என்றும்,
வடமொழியில் யூதிகா (குற்றமற்ற) பரமேஸ்வரர்
எனவும் அழைக்கப்படுகிறார் இத்தலத்து இறைவன்.
-
ஒருசமயம் கிள்ளிவளவனுக்கு உடல் முழுவதும்
கொப்புளங்கள் ஏற்பட்டு வெப்பநோயால் பெரும் அவதிப்
பட்டான். அந்த நோய் மருந்தால் தீராததால், இறைவனை
வேண்டி யாகம் ஒன்றைச் செய்தனர்.
அப்போது அங்கே வந்த அகத்திய மாமுனிவர், முதலில்
கடலிலும் அதன்பின், முல்லைவனநாதர் ஆலய
தீர்த்தங்களுள் ஒன்றான சந்திர புஷ்கரணியிலும்
நீராடும்படி சொல்ல, அவ்வாறே செய்து நோய் நீங்கப்
பெற்றான் மன்னன்.
அவன் இத்தலத்தில் நீராட வந்தபோதுதான், வழியில்
முல்லைவன நாதர் வெளிப்பட்டதாகவும் சொல்வதுண்டு.
வாமதேவன் எனும் முனிவன் தனது தந்தையின்
அஸ்தியை புணணிய தீர்த்தங்கள் பலவற்றிலும் இட்டார்.
அப்படி இத்தலத்து புண்ணிய தீர்த்தத்திலும் போட்டபோது,
அது ரத்தினக்கல்லாக மாறியதாம்.
அதே சமயத்தில் வானில் இருந்து பிரம்மா என்று ஓர்
ஒலி முழங்க, அதுமுதல் இந்த தீர்த்தம் பிரம்மதீர்த்தம்
என அழைக்கப்படுகிறது. ஆடி அமாவாசை நாளில்
இந்தத் தீர்த்தக்கரையில் பித்ரு தர்ப்பணம் செய்தால்
முன்னோரின் ஆசியோடு, சகல நலன்களையும் பெறலாம்
என்பது ஐதிகம்.
இந்த தலத்தில் உள்ள பிரம்ம தீர்த்தம் மற்றும் சந்திர
தீர்த்தம் ஆகியவற்றிற்கு இணையாக தேவலருகில்கூட
எந்தத் தீர்த்தமும் இல்லை என்கிறார்கள் சித்தர்கள்.
சந்திரன், பெண்ணால் சாபம் பெற்று இந்த இரு
தீர்த்தங்களிலும் நீராடி சாபவிமோசனம் பெற்றதாகவும்
ஒரு புராண சம்பவம் உண்டு.
இத்தலம் வந்து ஈசனையும் அணி கொண்ட கோதை
நாயகியையும் வழிபட்டால், வாழ்க்கையில் பதவி,
மேன்மை, ஆரோக்கியம் பெறலாம் என்கிறது வரலாறு.
இந்தக் கோயிலின் தலவிருட்சம், முல்லை. கோயிலின்
பின்புறம் ஒரு மரத்தில் பெரிதாகப்படர்ந்து செழித்துள்ளது.
பௌர்ணமி நாட்களில் இங்கே வந்து சந்திரதீர்த்தத்தில்
நீராடி இறைவனை வழிபட்டு, பின் தலவிருட்சத்தை
வணங்கினால் தோல் நோய்கள், மூட்டு எலும்பு
தேய்மானம் போன்ற நோய்கள் விலகுமாம்.
பன்னிரண்டு அமாவாசை தினங்களில் இங்கு வந்து
கடலில் நீராடி, பின் சந்திர, பிரம்ம தீர்த்தத்தில் குளித்து
முல்லைவனநாதரை நினைத்த பிதுர் பூஜை செய்தால்
நிச்சயம் செல்வந்தர் ஆகலாம் என்கிறார் காக முனிவர்.
இந்த கோயிலில் பள்ளியறை கிடையாது.
இதற்கும் ஒரு சுவாரஸ்ய தகவல் வரலாற்றில்
குறிப்பிடப்பட்டிருக்கிறது. பஞ்சாட்சர மந்திரத்தை
பொருளோடு சிவபெருமானிடம் கற்கவேண்டும் என்று
ஆசைப்பட்ட பார்வதிதேவி, இது குறித்த சிவனிடம்
வேண்ட, அவரும் இத்தலத்தில் தேவிக்கு பஞ்சாட்சர
மந்திரத்தையும், அதன் பெருமையையும் உபதேசித்தார்.
இத்தலத்தில் சிவன் குருவாகவும், அம்மன் சத்தியானந்த
சவுந்தரியாக சிஷ்யையாக இருந்ததால் இத்
திருக்கோயிலில் பள்ளியறை இல்லை. இறைவன்
இங்கே குருவாக அமர்ந்ததால் ஜாதகத்தில் குருவின்
ஸ்தானம் சரியாக அமையப் பெறாதவர்கள்
முல்லைவனநாதரை பூஜித்தால் குருதோஷ பாதங்கள்
நீங்கும் என்பது ஐதிகம்.
யூதிகா பரமேஸ்வரர் என்று அழைக்கப்படும்
முல்லைவனநாதர் மூலவராக வீற்றிருக்க, அவருக்கு
அருகே தனிசன்னதியில் அணிகொண்ட கோதையாக
சத்தியானந்த சவுந்தரி அருள்பாலிக்கிறாள். சன்னதியின்
மேற்குதிசையில் முருகப்பெருமான் வள்ளி -
தெய்வானையுடனும், தென்திசையில் தட்சிணாமூர்த்தியும்
காட்சி தருகிறார்கள்.
-
ஈசானிய மூலையில் சந்திரத்தீர்த்தமும், வட திசையில்
பிரம்ம தீர்த்தமும் அமைந்திருக்கின்றது.
திருஞானசம்பந்தரால் பாடல்பெற்ற, காவிரி வடகரைத்
தலங்களுள் ஒன்றான இங்கே வந்து இறைவனையும் -
இறைவியையும் வழிபட்டு வளமான வாழ்வினை
நீங்களும் பெறலாமே!
எங்கே இருக்கு:
நாகை மாவட்டம், சீர்காழியிலிருந்து கிழக்கே சுமார்
12 கீ.மீ. தொலைவில் திருமுல்லைவாசல் உள்ளது.
-
தரிசன நேரம்: காலை 6-12, மாலை 4-9
-
- ஆர். விவேக் ஆனந்தன்.
-
--------------------------
குமுதம் பக்தி
திருப்பெயர்கள் உண்டு. ஆனால் வித்தியாசமான,
"யூதிகா பரமேஸ்வரன்' என்ற பெயரோடு அவர்
அருளும் தலம் ஒன்று நாகை மாவட்டத்தில்
உள்ளது.
-
யூதிகா பரமேஸ்வரருக்கு "முல்லைவன நாதர்'
என்றும் ஒரு பெயர் உண்டு. அப்பெயர் வந்ததற்கான
புராண வரலாறு, மன்னன் முதலாம் கிளிவளவனுடன்
தொடர்புடையது.
-
ஒருசமயம் மன்னன் தன் பரிவாரங்களுடன்
வேட்டைக்குச் செல்கையில் வனத்தில் ஓரிடத்தில்
அரசரது குதிரையின் கால்கள் முல்லைக்கொடிகளில்
சுற்றிக் கொள்ளவே, தன் வாளால் அந்தக்
கொடிகளை வெட்டினான்.
-
முல்லைக்கொடி வெட்டுப்பட்ட கணத்தில்
அங்கிருந்து ரத்தம் பீய்ச்சி அடித்தது. அதிர்ந்து
போனான் மன்னன். உள்ளே தவம் செய்த முனிவர்
யாரையோ அறியாமல் வெட்டி விட்டோம் என
நினைத்து பயந்து நடுங்கியபடி, கொடிகளை
அகற்றிப் பார்த்தார்.
-
அங்கே சிவலிங்கம் ஒன்றிலிருந்து குருதி வழிந்தபடி
இருக்க, ஈசனையே வெட்டி விட்டோமே என்ற
வேதனை தாளாமல் தனது தலையை வாளால் வெட்ட
முனைந்தான்.
-
உடனே தன நாயகியுடன் அங்கு தோன்றி,
மன்னனை மன்னித்து ஆசியளித்தார்.
-
முல்லைவனத்தில் தோன்றியதால் இறைவன்,
முல்லைவனநாதர். அவருடன் அணியாகவந்ததால்
அம்பிகை அணிகொண்ட கோதை நாயகி
திருமுல்லைவாசல், தென் திருமுல்லைவாசல் எனவும்
இத்தலம் அழைக்கப்படுகிறது.
-
அரசன் வாளால் வெட்டுண்ட தழும்பு இன்றும்
முல்லைவனநாதரின் லிங்கத்திருமேனியில் காணப்ப
டுவதாகச் சொல்கிறார்கள். இத்தழும்பு இருந்தாலும்
இவரை வழிபடுவதில் எந்தக் குற்றமும் இல்லை
என்பதால், மாசிலா மணீஸ்வரர் என்றும்,
வடமொழியில் யூதிகா (குற்றமற்ற) பரமேஸ்வரர்
எனவும் அழைக்கப்படுகிறார் இத்தலத்து இறைவன்.
-
ஒருசமயம் கிள்ளிவளவனுக்கு உடல் முழுவதும்
கொப்புளங்கள் ஏற்பட்டு வெப்பநோயால் பெரும் அவதிப்
பட்டான். அந்த நோய் மருந்தால் தீராததால், இறைவனை
வேண்டி யாகம் ஒன்றைச் செய்தனர்.
அப்போது அங்கே வந்த அகத்திய மாமுனிவர், முதலில்
கடலிலும் அதன்பின், முல்லைவனநாதர் ஆலய
தீர்த்தங்களுள் ஒன்றான சந்திர புஷ்கரணியிலும்
நீராடும்படி சொல்ல, அவ்வாறே செய்து நோய் நீங்கப்
பெற்றான் மன்னன்.
அவன் இத்தலத்தில் நீராட வந்தபோதுதான், வழியில்
முல்லைவன நாதர் வெளிப்பட்டதாகவும் சொல்வதுண்டு.
வாமதேவன் எனும் முனிவன் தனது தந்தையின்
அஸ்தியை புணணிய தீர்த்தங்கள் பலவற்றிலும் இட்டார்.
அப்படி இத்தலத்து புண்ணிய தீர்த்தத்திலும் போட்டபோது,
அது ரத்தினக்கல்லாக மாறியதாம்.
அதே சமயத்தில் வானில் இருந்து பிரம்மா என்று ஓர்
ஒலி முழங்க, அதுமுதல் இந்த தீர்த்தம் பிரம்மதீர்த்தம்
என அழைக்கப்படுகிறது. ஆடி அமாவாசை நாளில்
இந்தத் தீர்த்தக்கரையில் பித்ரு தர்ப்பணம் செய்தால்
முன்னோரின் ஆசியோடு, சகல நலன்களையும் பெறலாம்
என்பது ஐதிகம்.
இந்த தலத்தில் உள்ள பிரம்ம தீர்த்தம் மற்றும் சந்திர
தீர்த்தம் ஆகியவற்றிற்கு இணையாக தேவலருகில்கூட
எந்தத் தீர்த்தமும் இல்லை என்கிறார்கள் சித்தர்கள்.
சந்திரன், பெண்ணால் சாபம் பெற்று இந்த இரு
தீர்த்தங்களிலும் நீராடி சாபவிமோசனம் பெற்றதாகவும்
ஒரு புராண சம்பவம் உண்டு.
இத்தலம் வந்து ஈசனையும் அணி கொண்ட கோதை
நாயகியையும் வழிபட்டால், வாழ்க்கையில் பதவி,
மேன்மை, ஆரோக்கியம் பெறலாம் என்கிறது வரலாறு.
இந்தக் கோயிலின் தலவிருட்சம், முல்லை. கோயிலின்
பின்புறம் ஒரு மரத்தில் பெரிதாகப்படர்ந்து செழித்துள்ளது.
பௌர்ணமி நாட்களில் இங்கே வந்து சந்திரதீர்த்தத்தில்
நீராடி இறைவனை வழிபட்டு, பின் தலவிருட்சத்தை
வணங்கினால் தோல் நோய்கள், மூட்டு எலும்பு
தேய்மானம் போன்ற நோய்கள் விலகுமாம்.
பன்னிரண்டு அமாவாசை தினங்களில் இங்கு வந்து
கடலில் நீராடி, பின் சந்திர, பிரம்ம தீர்த்தத்தில் குளித்து
முல்லைவனநாதரை நினைத்த பிதுர் பூஜை செய்தால்
நிச்சயம் செல்வந்தர் ஆகலாம் என்கிறார் காக முனிவர்.
இந்த கோயிலில் பள்ளியறை கிடையாது.
இதற்கும் ஒரு சுவாரஸ்ய தகவல் வரலாற்றில்
குறிப்பிடப்பட்டிருக்கிறது. பஞ்சாட்சர மந்திரத்தை
பொருளோடு சிவபெருமானிடம் கற்கவேண்டும் என்று
ஆசைப்பட்ட பார்வதிதேவி, இது குறித்த சிவனிடம்
வேண்ட, அவரும் இத்தலத்தில் தேவிக்கு பஞ்சாட்சர
மந்திரத்தையும், அதன் பெருமையையும் உபதேசித்தார்.
இத்தலத்தில் சிவன் குருவாகவும், அம்மன் சத்தியானந்த
சவுந்தரியாக சிஷ்யையாக இருந்ததால் இத்
திருக்கோயிலில் பள்ளியறை இல்லை. இறைவன்
இங்கே குருவாக அமர்ந்ததால் ஜாதகத்தில் குருவின்
ஸ்தானம் சரியாக அமையப் பெறாதவர்கள்
முல்லைவனநாதரை பூஜித்தால் குருதோஷ பாதங்கள்
நீங்கும் என்பது ஐதிகம்.
யூதிகா பரமேஸ்வரர் என்று அழைக்கப்படும்
முல்லைவனநாதர் மூலவராக வீற்றிருக்க, அவருக்கு
அருகே தனிசன்னதியில் அணிகொண்ட கோதையாக
சத்தியானந்த சவுந்தரி அருள்பாலிக்கிறாள். சன்னதியின்
மேற்குதிசையில் முருகப்பெருமான் வள்ளி -
தெய்வானையுடனும், தென்திசையில் தட்சிணாமூர்த்தியும்
காட்சி தருகிறார்கள்.
-
ஈசானிய மூலையில் சந்திரத்தீர்த்தமும், வட திசையில்
பிரம்ம தீர்த்தமும் அமைந்திருக்கின்றது.
திருஞானசம்பந்தரால் பாடல்பெற்ற, காவிரி வடகரைத்
தலங்களுள் ஒன்றான இங்கே வந்து இறைவனையும் -
இறைவியையும் வழிபட்டு வளமான வாழ்வினை
நீங்களும் பெறலாமே!
எங்கே இருக்கு:
நாகை மாவட்டம், சீர்காழியிலிருந்து கிழக்கே சுமார்
12 கீ.மீ. தொலைவில் திருமுல்லைவாசல் உள்ளது.
-
தரிசன நேரம்: காலை 6-12, மாலை 4-9
-
- ஆர். விவேக் ஆனந்தன்.
-
--------------------------
குமுதம் பக்தி
Re: யூதிகா பரமேஸ்வரன்!
திருக்கருகாவூர் இருக்கும் சிவபெருமானுக்கும் முல்லைவனநாதர் என்று தான் பெயர்
இந்த திருக்கருகாவூர் கோவிலில் உள்ள அம்பாளை வழிபட்டால் திருமணமாகி நீண்ட நாட்களாக குழந்தை பேரு இல்லாதவர்களுக்கும் அடிக்கடி கருசிதைவு ஆகுபவர்களுக்கும் நல்லபடியாக குழந்தை பேரு கிட்டும்.
இந்த திருக்கருகாவூர் கோவிலில் உள்ள அம்பாளை வழிபட்டால் திருமணமாகி நீண்ட நாட்களாக குழந்தை பேரு இல்லாதவர்களுக்கும் அடிக்கடி கருசிதைவு ஆகுபவர்களுக்கும் நல்லபடியாக குழந்தை பேரு கிட்டும்.
Re: யூதிகா பரமேஸ்வரன்!
நல்ல பதிவு.....
கொடுப்பதற்கும் பெறுவதற்கும் உரிய விலை மதிப்பில்லாத பரிசு அன்பு .
M.Saranya- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2190
இணைந்தது : 26/08/2014
Similar topics
» நடிகை – அனுபமா பரமேஸ்வரன்
» பள்ளி கொண்ட பரமேஸ்வரன்
» பித்ருதோஷம் நீக்கும் பரமேஸ்வரன் கோயில்
» துக்கம், பிறவிப்பிணி நீக்க – பரமேஸ்வரன் .
» கண்களும் சிரிப்பும்தான் எனக்கு அழகு! -அனுபமா பரமேஸ்வரன்
» பள்ளி கொண்ட பரமேஸ்வரன்
» பித்ருதோஷம் நீக்கும் பரமேஸ்வரன் கோயில்
» துக்கம், பிறவிப்பிணி நீக்க – பரமேஸ்வரன் .
» கண்களும் சிரிப்பும்தான் எனக்கு அழகு! -அனுபமா பரமேஸ்வரன்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|