ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

கலாச்சாரம் காப்போம்!

5 posters

Go down

கலாச்சாரம் காப்போம்! Empty கலாச்சாரம் காப்போம்!

Post by ராஜா Mon Mar 09, 2015 3:47 pm


கலாச்சாரம் காப்போம்! Bc90b7d6-dd86-414c-8c4b-49efc566f9f7_S_secvpf
கலாச்சாரம் என்பது ஒரு நாட்டின் ஆணிவேர். சமூகத்தின் அடையாளம். ஒவ்வொருவரின் ரத்தத்தோடும் ஊறிப்போனது.

தாய், தந்தை, கணவன், மனைவி, மாமன், மச்சான் என்ற உறவு முறைகள், கூட்டுக்குடும்ப வாழ்க்கை முறை என்று வரையறுக்கப்பட்ட அடிப்படை கட்டமைப்புகள்தான் சமூகத்தின் பாதுகாப்பு அரணாக திகழ்கிறது என்றால் மிகையாகாது.

ஆடை நாகரீகம் நாட்டுக்கு நாடு மாறுபடும். ஆனால் இந்திய ஆடை கலாச்சாரமும், உறவு முறைகளும்தான் உலகிற்கே இந்தியாவை தனித்துவமாக அடையாளம் காட்டுகிறது.

இந்திரா பிரதமராக இருந்தபோது கலாச்சார உடையான சேலை கட்டி உலக நாடுகளில் சுற்றுப்பயணம் செய்ததை பார்த்து அந்த நாடுகள் பெருமைப்பட்டன. அதன் பிறகு சேலை கட்டிய பெண்ணை எந்த நாட்டில் பார்த்தாலும் ‘ஓ.... இந்திய பெண்ணா?’ என்று ஆர்வத்துடன் கேட்டார்கள். இந்திய பெண்களுக்கு கிடைத்த பெருமை அது.

பெருந்தலைவர் காமராஜர் கூட ரஷியாவில் சுற்றுப்பயணம் செய்தபோது நடுங்கும் குளிரிலும் பாரம்பரிய வேட்டியுடன் கம்பீரமாக நடந்ததை பார்த்து அந்த நாடே வியந்தது.

இன்று கொஞ்சம் கொஞ்சமாய் நம்மை ஆக்கிரமித்த மேலை நாட்டு நாகரீக மோகத்தால் நமது பாரம்பரிய அடையாளங்களை இழந்து வருகிறோம்.

பெண்கள் ‘ஜீன்ஸ்’ அணிந்தால் தப்பா? என்று விவாதிக்கும் அளவுக்கு காலம் மாறியிருக்கிறது. இது வசதியாக இருக்கிறது. அணிய எளிதாக இருக்கிறது என்று நொண்டி சாக்கு காரணம் வேறு சொல்லி தப்பிக்கிறோம்.

வேட்டி கட்ட தெரியாதவர்களாக இளைஞர் சமுதாயம் இருக்கிறது. சேலை கட்ட தெரியாத பெண்கள் இருக்கிறார்கள். மாற்றங்கள் தேவைதான் என்றாலும் அது மரபு மீறாமல் இருக்க வேண்டும் என்பதில் யாருக்கும் கருத்து வேறுபாடு இருக்க முடியாது.

ஆணுக்கும் பெண்ணுக்கும் நம் முன்னோர்கள் சில லட்சுமண ரேகைகளை வரைந்துள்ளார்கள். அதை தாண்டக்கூடாது என்பார்கள். ஆண் இப்படித்தான் இருக்க வேண்டும். பெண் இப்படித்தான் இருக்க வேண்டும் என்று கட்டுப்பாடு விதித்த முன்னோர்கள் விவரம் புரியாதவர்களா? எதிலும் ஒரு கட்டுப்பாடு இருந்தால்தான் வாழ்க்கை சிறக்கும் என்பதை அனுபவ பூர்வமாக உணர்ந்து ஒவ்வொன்றையும் வரையறுத்து சொன்னார்கள். உணவு கட்டுப்பாடு இருந்தால்தான் உடல் கட்டுக்குள் இருக்கும். தனி மனித ஒழுக்கம் பேணப்பட்டால்தான் வாழ்க்கை ஜொலிக்கும். உடல் முழுக்க ஆடை அணியாதவர்களை அரைகுறை மனிதர்கள் என்றார்கள். காரணம் வரம்பு மீறக்கூடாது என்பதற்குத்தான்.

உலகிற்கே கலாச்சாரத்தை கற்றுக்கொடுத்த நம் நாட்டில் நிகழும் சமூக அவலங்களும், கலாச்சார சீரழிவுகளும் வேதனையான விசயம். குறிப்பாக நாளுக்கு நாள் அதிகரித்து வரும் பாலியல் கொடுமைகள் வெட்கி தலைகுனிய வைக்கிறது. இதற்கு கலாசார மீறலும் காரணம் என்பதை மறுக்க முடியாது.

பல பாலியல் தொந்தரவுகளுக்கு ஆடையும் ஒரு காரணம் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன. பெண் சமூக ஆர்வலர்களும் இதை ஒத்துக்கொள்கிறார்கள்.

கவிஞர் கண்ணதாசன் ஒரு பாடலில் அழகாக சொல்வார் ‘வீட்டை விட்டு வெளியே வந்தால் நாலும் நடக்கலாம். அந்த நாலும் தெரிந்து நடந்து கொண்டால் நல்லாயிருக்கலாம்’ என்று.

இதுதான் யதார்த்தம். இந்த எதார்த்த வாழ்வை ஒவ்வொருவரும் எல்லா விஷயங்களிலும் புரிந்து நடந்து கொண்டால் பிரச்சனைகள் வராது. நமது கலாச்சாரத்தை பற்றி தம்பட்டம் அடிக்கும் நாமே நமது கலாச்சாரத்தை கேலிக்கு உள்ளாக்குவதும், விவாதத்துக்குள்ளாக்குவதும் சமூகத்துக்கு ஆரோக்கியமானதல்ல.

ஒருவனுக்கு ஒருத்தி என்ற வாழ்க்கை முறையை பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே நமது முன்னோர்கள் வகுத்து வைத்தார்கள். இப்போது ‘எய்ட்ஸ்’ தாக்காமல் இருக்க இந்திய வாழ்க்கை முறையை பின்பற்றுங்கள் என்று அமெரிக்கா போன்ற நாடுகளே பிரசாரம் செய்கின்றன.

நம் முன்னோர்கள் வகுத்து கொடுத்த வாழ்க்கை நெறிமுறைகள், கட்டுப்பாடுகள், கற்று தந்த கலாச்சாரம் சமூக முன்னேற்றத்துக்குத்தான் உறுதுணையாக இருந்து வருகின்றன.

காலத்தின் மாற்றத்துக்கு ஏற்ப நாம் மாற வேண்டும் என்ற சித்தாந்தம் அறிவை வளர்க்கும் அறிவியலுக்கு பொருந்தும். ஆனால் வாழ்வியல் அதில் இருந்து வேறுபட்டது.

நாட்டு சூழல், சமூக அமைப்பு இவற்றை மையமாக வைத்துதான் வாழ்வியல் அமைகிறது. வாழ்வியலின் இதய துடிப்பாக விளங்குவது சமூகம் சார்ந்த கலாச்சாரம். அதை கட்டிக்காத்தால் நலம் பெறலாம். இன்றைய கால மாற்றுத்துக்கு ஏற்ப இளைய சமுதாயத்தின் திசை மாறுகிறது. அதை சுட்டிக்காட்டி திருத்துவது நம் கடமை. அதை ஒரு காரணமாக வைத்துக்கொண்டு நாட்டை திருத்தப்போகிறோம் என்று வன்முறையில் ஈடுபடுவது திருந்த நினைப்பவர்களையும் திசை மாற வைத்து விடும்.

நமது கலாச்சாரத்தை இழந்தால்–அல்லது அழித்தால் நம்மை நாம் இழப்போம். நம்மை நாமே அழித்துக்கொள்கிறோம் என்பதுதான் அர்த்தம் என்பதை அறிவுரையால் நடைமுறையால் உணர செய்வது பொறுப்புள்ளவர்களின் கடமை.

வீடு காக்க.... நாடு காக்க... நம்மை நாம் காக்க... கலாச்சாரம் தேவை. அதை கனிவுடன் அறியச்செய்வோம். நமது நாட்டின் பெருமையை நிலைநாட்டுவோம்.-maalaimalar
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

கலாச்சாரம் காப்போம்! Empty Re: கலாச்சாரம் காப்போம்!

Post by T.N.Balasubramanian Mon Mar 09, 2015 9:41 pm

வீடு காக்க.... நாடு காக்க... நம்மை நாம் காக்க... கலாச்சாரம் தேவை. அதை கனிவுடன் அறியச்செய்வோம். நமது நாட்டின் பெருமையை நிலைநாட்டுவோம்

  மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
கவிஞர் கண்ணதாசன் ஒரு பாடலில் அழகாக சொல்வார் ‘வீட்டை விட்டு வெளியே வந்தால் நாலும் நடக்கலாம். அந்த நாலும் தெரிந்து நடந்து கொண்டால் நல்லாயிருக்கலாம்’ என்று.    
மகிழ்ச்சி:D மகிழ்ச்சி மகிழ்ச்சி 

ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35029
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

கலாச்சாரம் காப்போம்! Empty Re: கலாச்சாரம் காப்போம்!

Post by ayyasamy ram Mon Mar 09, 2015 10:07 pm

கலாச்சாரம் காப்போம்! 103459460
-

"பழையன கழிதலும் புதியன புகுதலும் வழுவல கால வகையினானே"
என்ற கொள்கையினை பழங்காலத்திலேயே தமிழன் உண்டாக்கியிருக்கிறான்.

ஆகவே மாற்றங்கள் நடைபெற்றே தீரும்.
அவைகள் நன்மை தருமாயின் நன்றே.
இல்லாவிடில் சமூகம் சீரழியும்.
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82799
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

கலாச்சாரம் காப்போம்! Empty Re: கலாச்சாரம் காப்போம்!

Post by சிவனாசான் Tue Mar 10, 2015 4:29 am

எல்லாமே ஏற்றுக்கொள்ளக்கூடியதே எனலாம்.........இருப்பினும் பண்பாடு............???????????
சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Back to top Go down

கலாச்சாரம் காப்போம்! Empty Re: கலாச்சாரம் காப்போம்!

Post by M.Saranya Tue Mar 10, 2015 9:59 am

T.N.Balasubramanian wrote:
வீடு காக்க.... நாடு காக்க... நம்மை நாம் காக்க... கலாச்சாரம் தேவை. அதை கனிவுடன் அறியச்செய்வோம். நமது நாட்டின் பெருமையை நிலைநாட்டுவோம்

  மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
கவிஞர் கண்ணதாசன் ஒரு பாடலில் அழகாக சொல்வார் ‘வீட்டை விட்டு வெளியே வந்தால் நாலும் நடக்கலாம். அந்த நாலும் தெரிந்து நடந்து கொண்டால் நல்லாயிருக்கலாம்’ என்று.    
மகிழ்ச்சி:D மகிழ்ச்சி மகிழ்ச்சி 

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1124845


சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க


கொடுப்பதற்கும் பெறுவதற்கும் உரிய விலை மதிப்பில்லாத பரிசு அன்பு .

கலாச்சாரம் காப்போம்! W5td1pX3QFi1kBRhH0I3+Affection
M.Saranya
M.Saranya
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2190
இணைந்தது : 26/08/2014

Back to top Go down

கலாச்சாரம் காப்போம்! Empty Re: கலாச்சாரம் காப்போம்!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum