புதிய பதிவுகள்
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 10:16 am

» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இந்தியாவின் கவுரவம் எதில் இருக்கிறது? Poll_c10இந்தியாவின் கவுரவம் எதில் இருக்கிறது? Poll_m10இந்தியாவின் கவுரவம் எதில் இருக்கிறது? Poll_c10 
19 Posts - 50%
mohamed nizamudeen
இந்தியாவின் கவுரவம் எதில் இருக்கிறது? Poll_c10இந்தியாவின் கவுரவம் எதில் இருக்கிறது? Poll_m10இந்தியாவின் கவுரவம் எதில் இருக்கிறது? Poll_c10 
5 Posts - 13%
heezulia
இந்தியாவின் கவுரவம் எதில் இருக்கிறது? Poll_c10இந்தியாவின் கவுரவம் எதில் இருக்கிறது? Poll_m10இந்தியாவின் கவுரவம் எதில் இருக்கிறது? Poll_c10 
4 Posts - 11%
வேல்முருகன் காசி
இந்தியாவின் கவுரவம் எதில் இருக்கிறது? Poll_c10இந்தியாவின் கவுரவம் எதில் இருக்கிறது? Poll_m10இந்தியாவின் கவுரவம் எதில் இருக்கிறது? Poll_c10 
4 Posts - 11%
T.N.Balasubramanian
இந்தியாவின் கவுரவம் எதில் இருக்கிறது? Poll_c10இந்தியாவின் கவுரவம் எதில் இருக்கிறது? Poll_m10இந்தியாவின் கவுரவம் எதில் இருக்கிறது? Poll_c10 
3 Posts - 8%
Raji@123
இந்தியாவின் கவுரவம் எதில் இருக்கிறது? Poll_c10இந்தியாவின் கவுரவம் எதில் இருக்கிறது? Poll_m10இந்தியாவின் கவுரவம் எதில் இருக்கிறது? Poll_c10 
2 Posts - 5%
kavithasankar
இந்தியாவின் கவுரவம் எதில் இருக்கிறது? Poll_c10இந்தியாவின் கவுரவம் எதில் இருக்கிறது? Poll_m10இந்தியாவின் கவுரவம் எதில் இருக்கிறது? Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
இந்தியாவின் கவுரவம் எதில் இருக்கிறது? Poll_c10இந்தியாவின் கவுரவம் எதில் இருக்கிறது? Poll_m10இந்தியாவின் கவுரவம் எதில் இருக்கிறது? Poll_c10 
140 Posts - 40%
ayyasamy ram
இந்தியாவின் கவுரவம் எதில் இருக்கிறது? Poll_c10இந்தியாவின் கவுரவம் எதில் இருக்கிறது? Poll_m10இந்தியாவின் கவுரவம் எதில் இருக்கிறது? Poll_c10 
134 Posts - 39%
Dr.S.Soundarapandian
இந்தியாவின் கவுரவம் எதில் இருக்கிறது? Poll_c10இந்தியாவின் கவுரவம் எதில் இருக்கிறது? Poll_m10இந்தியாவின் கவுரவம் எதில் இருக்கிறது? Poll_c10 
21 Posts - 6%
mohamed nizamudeen
இந்தியாவின் கவுரவம் எதில் இருக்கிறது? Poll_c10இந்தியாவின் கவுரவம் எதில் இருக்கிறது? Poll_m10இந்தியாவின் கவுரவம் எதில் இருக்கிறது? Poll_c10 
20 Posts - 6%
Rathinavelu
இந்தியாவின் கவுரவம் எதில் இருக்கிறது? Poll_c10இந்தியாவின் கவுரவம் எதில் இருக்கிறது? Poll_m10இந்தியாவின் கவுரவம் எதில் இருக்கிறது? Poll_c10 
8 Posts - 2%
வேல்முருகன் காசி
இந்தியாவின் கவுரவம் எதில் இருக்கிறது? Poll_c10இந்தியாவின் கவுரவம் எதில் இருக்கிறது? Poll_m10இந்தியாவின் கவுரவம் எதில் இருக்கிறது? Poll_c10 
7 Posts - 2%
prajai
இந்தியாவின் கவுரவம் எதில் இருக்கிறது? Poll_c10இந்தியாவின் கவுரவம் எதில் இருக்கிறது? Poll_m10இந்தியாவின் கவுரவம் எதில் இருக்கிறது? Poll_c10 
6 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
இந்தியாவின் கவுரவம் எதில் இருக்கிறது? Poll_c10இந்தியாவின் கவுரவம் எதில் இருக்கிறது? Poll_m10இந்தியாவின் கவுரவம் எதில் இருக்கிறது? Poll_c10 
4 Posts - 1%
Guna.D
இந்தியாவின் கவுரவம் எதில் இருக்கிறது? Poll_c10இந்தியாவின் கவுரவம் எதில் இருக்கிறது? Poll_m10இந்தியாவின் கவுரவம் எதில் இருக்கிறது? Poll_c10 
4 Posts - 1%
T.N.Balasubramanian
இந்தியாவின் கவுரவம் எதில் இருக்கிறது? Poll_c10இந்தியாவின் கவுரவம் எதில் இருக்கிறது? Poll_m10இந்தியாவின் கவுரவம் எதில் இருக்கிறது? Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இந்தியாவின் கவுரவம் எதில் இருக்கிறது?


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Mar 07, 2015 10:16 pm


ஆவணப்படத்தால் அல்ல, நம் சமூகத்தின் ஆணாதிக்க மனத்தால்தான் நமக்குத் தலைக்குனிவு!

கிளேட்டன் வீட் வில்லியம்ஸ் என்ற அமெரிக்கத் தொழிலதிபர் 1990-ல் டெக்ஸாஸ் மாகாணத்தின் ஆளுநர் தேர்தலுக்கான போட்டியில் ஒரு பெண்ணை எதிர்த்து நின்றார். அவருக்கு இருந்த பணபல செல்வாக்கில் நிச்சயம் வென்றிருப்பார். தேர்தலுக்கு முன்பு எடுக்கப்பட்ட கருத்துக்கணிப்பில்கூட 20 புள்ளிகள் முன்னணியில் இருந்தார். ஆனால், பிரச்சார நாட்களின்போது அவரது நாக்கில் சனி வந்து அமர்ந்தான். தனது பண்ணையில் சிலருடன் பேசும்போது, மோசமான பருவநிலையைப் பாலியல் பலாத்காரத்துடன் ஒப்பிட்டார். “நம்மால் ஆகக் கூடியது ஒன்றுமில்லை என்றால், (பாலியல் பலாத்காரத்தைப் போல) சும்மா படுத்து அதை அனுபவிக்க வேண்டியதுதான்!” என்றார். பெண்ணியவாதிகளும் பொதுஜனங்களும் கண்டனக் குரல் எழுப்ப, உள்ளூர் பத்திரிகைகள் அவரை ‘சைத்தான் வில்லியம்ஸ்’ என்று கேலிச்சித்திரங்கள் வரைந்தன. ‘ஹாஸ்யம்’ என்று நினைத்த திமிர் பிடித்த வார்த்தைகளால் தேர்தலில் தோற்றார்.

கிளேட்டன் சொன்ன வாக்கியம் இன்று மீண்டும் எனக்கு நினைவுக்கு வருவதற்குக் காரணம், கிட்டத்தட்ட இதே போன்ற கருத்தை நிர்பயா பாலியல் வன்கொடுமை சம்பவத்தில் குற்றம்சாட்டப்பட்டு மரணதண்டனையை எதிர்நோக்கியிருக்கும் முகேஷ் சிங் என்ற குற்றவாளி (குற்றம்சாட்டப்பட்ட ஆறு பேர்களில் ஒருவர்) சொல்லியிருக்கிறார். லெஸ்லீ உத்வின் என்ற பிரிட்டிஷ் ஆவணப்பட இயக்குநர் ‘இந்தியாவின் மகள்’ (இண்டியா’ஸ் டாட்டர்) என்ற தலைப்பில் இயக்கியிருக்கும் ஒரு ஆவணப்படத்தில்தான் முகேஷ் சிங் இப்படிச் சொல்லியிருக்கிறார்.

எல்லோரும்தான் செய்கிறார்கள்!

மார்ச் 8-ம் தேதி வெளியிட இருந்த அந்த ஆவணப் படத்துக்கு இந்தியாவில் தடை விதிக்கப்பட்டிருக்கிறது. “பாலியல் பலாத்காரத்துக்கு அந்தப் பெண் எதிர்ப்புத் தெரிவிக்காமல் இருந்திருக்க வேண்டும். முட்டாள் பெண் சும்மா இருந்திருந்தால் (அதாவது, இணங்கியிருந்தால்) நாங்கள் கொன்றிருக்க மாட்டோம்” என்று ஆரம்பித்து, கொஞ்சமும் குற்றவுணர்வில்லாமல் பேசிக்கொண்டே போகிறார். மரண தண்டனை விதிக்கப்பட்ட ஐவர் உட்பட, குற்றம்சாட்டப்பட்டவர் எல்லோருக்குமே தாங்கள் செய்தது தவறு என்று தோன்றியதற்கான அடையாளம் கொஞ்சமும் இல்லை என்கிறார் லெஸ்லீ.

‘நாங்கள் மட்டும்தான் இப்படிப்பட்ட குற்றங்களைச் செய்திருக்கிறோமா? எல்லோரும்தான் செய்கிறார்கள்” என்றிருக்கிறார்கள் நிர்பயா வழக்கில் தண்டிக்கப் பட்டிருக்கும் மற்றவர்கள்.

அவர்கள் பேச்சிலிருந்து ஒன்று புரிந்தது என்கிறார் லெஸ்லீ. “அவர்களின் மதிப்பீட்டில் பெண்கள் ஒரு பொருட்டே இல்லை. ஆண்கள் விதித்திருக்கும் கோட்பாடுகளைப் பெண்கள் மீறினால், அவர்கள் தண்டிக்கப்பட வேண்டியவர்கள்.” அவர்களுக்காக வாதாடும் வக்கீல் சர்மாவும், பாலியல் வன்முறைக்கு ஆளான நிர்பயாவே குற்றவாளி என்கிறார். “இரவு 9 மணிக்கு மேல் ஒரு பெண் ஏன் வெளியில் செல்கிறாள்? அதுவும் ஒரு சிநேகிதனுடன்? பெற்றோர்கள் ஏன் கண்டிக்கவில்லை?” என்கிறார்.

இரண்டு ஆண்டுகளுக்கு முன் (2012- டிசம்பர் 16) டெல்லியில் மிகவும் பயங்கரமான பாலியல் வன்முறைக்கு ஆளாக்கப்பட்ட அந்தப் பெண்ணுக்கு நிர்பயா என்று பெயர் சூட்டப்பட்டது, ‘பயமற்றவள்’என்கிற பொருளில். அந்தப் பெயரே பாலியல் வன்முறையால் பாதிக்கப்பட்ட/ பாதிக்கப்படும் பெண்களுக்கான குறியீடாக ஆனது.

பாலினத் திமிர்

அமெரிக்கத் தொழிலதிபரும் அரசியல்வாதியுமான கிளேட்டன் வீட் வில்லியம்ஸின் திமிர்ப் பேச்சுக்கும் வேலைவெட்டி இல்லாத ஏழை இளைஞன் முகேஷ் சிங்கின் பேச்சுக்கும் அதிக வித்தியாசமில்லை. இருவருக்குள்ளும் இருப்பது பொதுவான பாலினத் திமிர்தான். இந்திய ஆண்கள் மட்டுமே குற்றவாளிகள் என்றோ இந்தியப் பெண்களே இலக்காகிறார்கள் என்றோ சொல்வதற்கில்லை. இந்தப் படத்தை எடுக்க நினைத்ததற்குக் காரணமே லெஸ்லீ உத்வின்னும் இதே போன்ற பாலியல் வன்முறைக்கு 18 வயதில் ஆளானதும், அதை வெளியில் சொல்ல வெட்கப்பட்டு வாய்மூடி இருந்ததால் ஏற்பட்ட, இதுநாள் வரை அனுபவித்த குற்றவுணர்வுமேதான். நிர்பயா சம்பவத்தையொட்டி இந்தியத் தலைநகரில் ஏற்பட்ட பிரம்மாண்டமான எதிர்ப்பும் கோபமும் அவரை உலுக்கிவிட்டதாகச் சொல்கிறார். உடனடியாக இதைப் பற்றியும், பாலியல் வன்முறையாளர்களின் உளவியலையும் ஆய்வுசெய்யும் நோக்கத்துடன் அவர்களைச் சந்தித்து அதை ஆவணமாக்க வேண்டும் என்கிற ஆவேசத்துடன்தான் இந்தியா வந்ததாகச் சொல்கிறார்.

எவ்வளவு கேவலம்!

இந்த ஆவணப்படம் தயாரிக்கும்போது தனக்குள் மாபெரும் மாற்றம் ஏற்பட்டதாகச் சொல்கிறார். “விஷயம் என்னைவிட முக்கியமானது என்று உணர்ந்தேன். நான் அதுநாள் வரை அனுபவித்த அவமானம் எனக்கல்ல; நான் கவுரவமாகத் தலை நிமிர்ந்து நிற்கலாம் என்று புரிந்தது.” தனக்கேற்பட்ட கொடுமையான அனுபவம் காரணமாக, திஹார் சிறையில் குற்றவாளிகளைச் சந்திக்கும்போது கோபத்தில் வெடித்துவிடுவோமோ என்று அவர் பயந்தார். ஆனால், அவர்களுடன் உரையாடியபோது மிதமிஞ்சிய பரிதாபம் ஏற்பட்டதாகச் சொல்கிறார். பரிதாபம் அவர்களைக் கண்டல்ல. நாம் வாழும் சமூகத்தில் பெண்ணின் நிலை எவ்வளவு கேவலமாகிப்போனது என்கிற துக்கம்தான் அவரை ஆட்கொண்டது.

மார்ச் 8-ல் மட்டும்தான் கண் தெரியுமா?

மீண்டும் மீண்டும் அந்த விஷயம் விவாதப் பொருளாகிறது. மிக முக்கியமாக, மார்ச் 8-ம் தேதி நெருங்கிவிட்டால், அப்போதுதான் பெண் என்கிற ஒரு ஜீவன் கண்ணில் தென்படுவதுபோலவும் அவளுக்கு இழைக்கப்படும் மிக மோசமான வன்முறைகள் நினைவுக்கு வருவதுபோலவும் பேசப்படுகிறது. நமது கலாச்சார, தார்மிகக் கோட்பாடுகளை இன்றைய சூழலோடு பொருத்திப் பார்க்க வேண்டிய , அவற்றைப் புரட்டிப்போட வேண்டிய அவசர காலகட்டத்தில் இருப்பதை சமூகம் உணரவில்லை. பள்ளிகளில் ‘பாலினம்குறித்த விழிப்புணர்வு’ என்ற விஷயத்தைத் துல்லியமாக உணர்த்தக்கூடிய பாடம் இதுவரை இணைக்கப்படவில்லை. பாதிக்கப்பட்ட பெண், சமூகத்தின் எந்தத் தட்டைச் சேர்ந்தவராக இருந்தாலும், குற்றத்தின் கொடூரம் ஒன்றேதான். ஆகவே, குற்றவாளி யாராக இருந்தாலும், துரிதமாகத் தண்டிக்கப்பட வேண்டும். இதுதான் எல்லாவற்றையும்விட முக்கியம்.

ஒருவகையில், பாலியல் வன்முறை நிகழ்வுகளுக்கு அதிக வெளிச்சம் கிடைப்பதும், அதைப் பற்றி விவாதம் நடப்பதும் நல்லதுதான். நமது சமூகம் பாசாங்குத்தனம் மிக்கது. இந்த ஆவணப்படத்தை வெளியிட இந்திய அரசு தடை விதித்திருப்பதும் அதன் வெளிப்பாடுதான். இந்தியாவுக்குச் சங்கடமாம். நமது பண்பாட்டுக்கு இழுக்காம்! நமது பண்பாடும் மானமும் கவுரவமும் காக்கப்பட வேண்டிய பொறுப்பு பெண்கள் கையில் மட்டும்தான் என்று நம்பும் ஐதீகம் இருக்கும் வரை, மாற்றம் வருவது சாத்தியமில்லை.

- வாஸந்தி, மூத்த பத்திரிகையாளர்.



இந்தியாவின் கவுரவம் எதில் இருக்கிறது? Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Sat Mar 07, 2015 10:28 pm

முற்றிலும் வித்தியாசமான பார்வையில் கட்டுரை. அருமை

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக