Latest topics
» நாவல்கள் வேண்டும்by prajai Yesterday at 11:25 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:19 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
prajai | ||||
Raji@123 | ||||
Srinivasan23 | ||||
kavithasankar | ||||
Barushree |
Top posting users this month
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
திருந்த வேண்டும்
2 posters
Page 1 of 1
திருந்த வேண்டும்
சில மாதங்களுக்கு முன்பு தில்லியில் நிகழ்ந்த பாலியல் பலாத்காரத்தில் குறிப்பிட்ட பெண்ணை பலவந்தம் செய்ததில் ஓர் இளைஞருக்கும் பங்கு இருந்தது. இவ்விளைஞரைச் சிறுவர் என்று நம் பத்திரிகைகள் அழைக்கின்றன. நம் நீதிமன்றங்கள் அழைக்கின்றன. இதில் உள்ள அடிப்படையை ஆராய வேண்டும்.
பெருங்குற்றம் செய்வதில் சிறுவர் என்ன? பெரியவர் என்ன? சின்ன வயதிலேயே ஒரு பெருங்குற்றத்தைச் செய்வானேயானால், சிறுவன் என்ற முறையில் அவனைத் தண்டிக்காமல் விடுவது சரிதானா?
தாமாகத் திருந்திவிடுவார்கள் என்று விடப்பட்ட குற்றவாளிகளில் எத்தனை பேர் திருந்தி உள்ளார்கள்? பல பேர் திருந்துவது இல்லை என்பதுதான் படிப்பினையாக இருக்கிறது.
ஒரு பெண் ஒவ்வொருவராகத் திருமணம் செய்து, திருமணம் செய்துகொண்டவரிடமிருந்து பணமும் நகையும் பறித்துத் தப்பி விட்டு, பிறகு அடுத்தவரைத் திருமணம் செய்து கொள்வது என்பதை வழக்கமாகக் கொண்டிருந்தார்.
இப்படி நான்கு பேரை மாற்றி மாற்றித் திருமணம் செய்துகொண்ட அந்தப் பெண் நான்காவது நபரை ஏமாற்றித் திருமணம் செய்துகொண்ட போது, அவரிடமிருந்து ஐந்து இலட்சம் பணமும், ஐந்து பவுன் நகையும் வேண்டும் என்று கேட்டாள், அவர் விழித்துக் கொண்டார். விசாரிக்கத் தொடங்கினார்.
இந்தப் பெண்ணுக்கு இதுதான் வேலை என்று அறிந்தவுடன், காவல்துறையிடம் முறையிட்டு அந்தப் பெண் அண்மையில் கைது செய்யப்பட்டிருக்கிறாள். முதல் தவற்றின் போதே தண்டிக்கப்பட்டிருந்தால் இத்தனை பேர் ஏமாறவேண்டிய தேவை ஏற்பட்டிருக்காது.
சாலையில் நடக்கும் போக்குவரத்துக் குற்றமும், பிக்பாக்கெட் அடிக்கும் குற்றமும் வீடுகளில் திருடுவோர் செய்யும் குற்றமும் இன்னபிற குற்றங்களும் நிரூபிக்கப்பட்டவுடன் அவர்களுக்குத் தண்டனை அளிக்காமல், தவறும் சமுதாயத்தில் குற்றங்கள் குறையாது. நாளும் பல்கிப் பெருகுவதையே நடப்பில் பார்க்கிறோம்.
சிலப்பதிகாரத்தில் கோவலன் கையில் இருந்த காற்சிலம்பை அரண்மனையில் திருடப்பட்ட சிலம்பு என்று பொற்கொல்லன் மன்னரிடம் தெரிவித்து மரணதண்டனை வாங்கிக் கொடுத்துவிடுகிறான்.
அதனால், வாழ்க்கையை இழந்த கண்ணகி, வழக்காட பாண்டியன் நெடுஞ்செழியன் அரண்மனையில் நுழைந்து, "தேரா மன்னா' என்று அழைத்து நியாயம் வேண்டியபோது, ஒரு கள்வனைக் கொல்லுதல் கொடுங்கோன்மை அன்று என்று பாண்டிய அரசன் இயல்பாகச் சொல்கிறான்.
இன்ன பிற செய்திகள் ஒரு பக்கம் இருந்தாலும், திருடனைக் கொன்று விடுவது முற்காலத்தில் வழக்கமாக இருந்திருக்கிறது. அதிலிருந்து இன்னபிற குற்றங்களுக்கு எத்தகு தண்டனை வழங்கப்பட்டிருக்கும் என்பதை ஊகித்து விடலாம்.
குற்றங்களுக்குத் தண்டனை வழங்குவதில், நாட்டுக்கு நாடு வேறுபாடு இருக்கிறது. குறிப்பாக, இந்தியாவையும் சிங்கப்பூரையும் ஒப்பிட்டுப் பார்த்தால் இதனைப் புரிந்து கொள்ளலாம்.
சாலை போன்ற பொது இடங்களை எவ்வளவு அசுத்தப்படுத்தினாலும், இந்தியாவில் கேள்வி கேட்பாரில்லை. தெருவைக் கூட்டி அடுத்த வீட்டு வாசலில் ஒதுக்குவோர் இன்னும் இருக்கிறார்கள். சாலையை அசுத்தப்படுத்துவோர் கடுங் குற்றம் செய்தவராகக் கருதப்பட்டுத் தண்டனை வழங்குவது சிங்கப்பூரில் இன்னும் வழக்கத்தில் இருக்கிறது. விளைவு, அந்த நாட்டில் சாலையை அசுத்தப்படுத்துவோர் இல்லை.
சிங்கப்பூரில் பொதுவாக கொசு இல்லை. காக்கை இல்லை. அதன் அடையாளம் அந்த நாடு தூய்மையாக இருக்கிறது என்று பொருள். கொசு அழுக்கிலிருந்து பிறக்கிறது. இருட்டில் இருந்து பிறக்கிறது. ஆனால், எல்லா நோய்களையும் உண்டாக்குகிறது.
அதுமட்டுமில்லாமல், மனிதனின் உறக்க நேரத்தை ஒழித்துக் கட்டுகிறது. இரவில் உறங்க வாய்ப்பில்லாத மனிதன் பகலில் வேலை செய்யும் இடத்தில் சோர்வாகச் செயல்படுகிறான். வேறு வழி?
செத்த எலி, உண்ட இறைச்சித் துண்டங்கள் இவையெல்லாம் தெருவில் சிதறிக் கிடப்பதால், வானத்தில் காகங்கள் வட்டமிடுகின்றன.
இதனை அறிந்துகொண்ட சிங்கப்பூர் அரசு அசுத்தங்களுக்குப் பொது இடங்களில் இடமே இல்லை என்னும்படிக்குச் செயல்படுகிறது. அங்குள்ள அடுக்கு வீடுகளில் சிங்கப்பூர் அரசின் உள்ளாட்சி ஊழியர்கள் ஈரம் இருக்கும் இடமெல்லாம் கொசு மருந்து அடிப்பதைக் காணலாம்.
நாட்டிலேயே மிக அசுத்தமாக இருக்கும் பகுதி தமிழர் மிகுதியாக வாழும் பகுதி என்று கேவலமாகப் பேசும்படி இருக்கிறது. இதே பார்வையும் சொல்லும் இந்தியத் தலைநகரான தில்லியிலும் சென்னைத் தமிழரைப் பற்றிப் பேசப்படுகின்றன.
தவறு செய்பவர் தமக்குத் தண்டனை உறுதியாக உண்டு என்று நம்பும்படியாக காவல் துறையும் நீதித் துறையும் அவற்றைப் பின்னிருந்து இயக்கும் அரசுத் துறையும் இருக்கவேண்டும்.
தவறு செய்தால் பண நோட்டுகள் சிலவற்றைக் கொடுத்துவிட்டால் போதும் தப்பிக் கொள்ளலாம் என்ற நம்பிக்கை இருக்கும் நாட்டில் தவறுகள் முடிவுக்கு வராமல் தொடர்ந்து நடந்துகொண்டேதான் இருக்கும்.
வெளிநாடுகளில் "நோ பார்க்கிங்' என்ற இடத்தில் வாகனங்கள் நிறுத்தப்பட்டிருந்தால் உடனடியாகக் காவல் துறையின் நடவடிக்கை பாயும். சில சமயம் வண்டியையே காவல்துறையினர் சிறைப்படுத்தி எடுத்துச் சென்று விடுவது உண்டு.
வாகனத்தின் மீது "உங்கள் மேல் நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது' என்ற அறிவிப்பு ஒட்டப்பட்டிருப்பதும் உண்டு.
இத்தகு இடங்களில் போக்குவரத்தை மீறும் குற்றங்கள் மிகக் குறைவு. போக்குவரத்தை மீறினால் என்ன என்ன நடக்கும்? இந்தக் கேள்விகளுக்கு நம் நாட்டில் நடக்கும் அன்றாட நிகழ்ச்சிகளைக் கவனித்தால் விடை கிடைத்துவிடும்.
க.ப. அறவாணன்
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: திருந்த வேண்டும்
மன்னன் எப்படியோ அப்படியே மக்களும்... அரசு எப்படியோ அப்படியே அதிகாரிகள்.. .......சட்டத்தை மதித்து நடப்பவனே நல் மனிதனாவான்..........மற்றவன்........வாதியாவான். என்னே நிர்வாகம்........??????
சிவனாசான்- வி.ஐ.பி
- பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014
Similar topics
» திரித்துக் கூறும் திருமாவளவன் திருந்த வேண்டும்!
» இன்னும் எத்தனை பெரியார் வேண்டும் இவர்கள் திருந்த?
» ரஜினியைப்பார்த்து திருந்த வேண்டியதுதான்...
» மகனை மனம் திருந்த வைத்த தாய்ப்பாசம்
» “காரியம் ஆக வேண்டும் என்றால் கழுதை காலையும் பிடிக்க வேண்டும்”
» இன்னும் எத்தனை பெரியார் வேண்டும் இவர்கள் திருந்த?
» ரஜினியைப்பார்த்து திருந்த வேண்டியதுதான்...
» மகனை மனம் திருந்த வைத்த தாய்ப்பாசம்
» “காரியம் ஆக வேண்டும் என்றால் கழுதை காலையும் பிடிக்க வேண்டும்”
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|