ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கருத்துப்படம் 12/09/2024
by mohamed nizamudeen Today at 9:53 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:57 pm

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 8:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 8:29 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 8:12 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 5:58 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 4:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 3:28 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:46 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:04 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:41 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 12:49 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:23 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:13 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:04 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:51 am

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:22 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 11:16 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 11:11 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 11:06 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 8:49 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 8:38 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 7:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:52 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 am

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 11:11 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 11:06 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 11:01 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 10:59 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 10:56 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 10:53 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 9:59 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 9:05 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:46 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 2:50 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 11:48 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 9:22 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 8:48 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 6:25 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 9:29 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 9:28 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 9:27 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 9:25 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 9:24 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 9:22 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 10:57 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 10:39 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 10:36 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 5:46 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

'சிந்து நதியின் மிசை நிலவினிலே:' சிரிப்பாய் சிரிக்குது ராஜ்யசபா

3 posters

Go down

'சிந்து நதியின் மிசை நிலவினிலே:' சிரிப்பாய் சிரிக்குது ராஜ்யசபா Empty 'சிந்து நதியின் மிசை நிலவினிலே:' சிரிப்பாய் சிரிக்குது ராஜ்யசபா

Post by சிவா Tue Mar 03, 2015 3:19 am


தனக்கு அளிக்கப்பட்ட, 3 நிமிடத்தில், 2 நிமிடத்திற்கு ராகம் போட்டு பாட்டுப்பாடி, மீதமுள்ள ஒரு நிமிடத்தில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க நடவடிக்கை எடுக்கும்படி வலியுறுத்திய, அ.தி.மு.க., - எம்.பி.,யை பார்த்து, ராஜ்யபா துணைத் தலைவர் குரியன் உட்பட ஒட்டுமொத்த சபையும், விலா நோகச் சிரித்து தீர்த்தது.

ராகத்துடன்...:

ராஜ்யசபாவில் நேற்று காலை, பொது முக்கியத்துவம் வாய்ந்த நேரத்தில், தமிழக எம்.பி.,யான விஜிலா சத்யானந்திற்கு, பேச வாய்ப்பு வழங்கப்பட்டது. அவர் எழுந்து, மாநிலங்களுக்கு இடையிலான ஒற்றுமை குறித்து, சில வார்த்தைகளை பேசிவிட்டு, திடீரென, 'சிந்து நதியின் மிசை நிலவினிலே..' என, ராகம் போட்டு பாட ஆரம்பித்தார். பாரதியாரை மேற்கோள்காட்டி பாடினாலும், கைகொடுத்த தெய்வம் படத்தில், சிவாஜி கணேசன் வாயசைத்து பாடிய, அந்த திரையிசைப் பாடலின் ராகத்தில், அப்படியே ஏற்ற இறக்கத்துடனும், முகபாவனையுடனும் பாடிக் கொண்டே போனார். சபையில், மற்ற எம்.பி.,க்கள், 'என்ன இது' என பார்க்க ஆரம்பிக்க, சபை தலைவர் இருக்கையில் இருந்த குரியனும், தலையை ஆட்டி, பாட்டை ரசித்துக் கொண்டே, "யெஸ்... குட்... திஸ் ஸ் டூ பி என்கரேஜ்...” என்றார். ராகத்தோடு பாட்டு ஒரு பக்கம், அதை ஊக்கப்படுத்தும் குரியன் மறுபக்கம் என, பார்த்த எம்.பி.,க்களுக்கு சிரிப்பை அடக்க முடியவில்லை. ஆனால், நடந்ததோ வேறு; ஓரிரு வரிகளுடன் முடிக்காத விஜிலா சத்யானந்த், தொடர்ச்சியாக அந்த பாட்டின் அடுத்தடுத்த வரிகளையும் தொடர்ந்தார். 'முழு பாடலுமா!?' என, அதிர்ச்சியடைந்த குரியன், "விஷயத்திற்கு வாருங்கள்” என, பரபரத்தார்.

மூத்த எம்.பி.,க்கள் குபீர்:

அதற்கு, "விஷயமே இதுதான்” எனக் கூறிவிட்டு, வரிக்குவரி விளக்கம் அளித்து பாடலையும் தொடர, அனைவருக்கும் ஒரு மாதிரியாக ஆகிவிட்டது. மூத்த எம்.பி.,க்கள் அம்பிகா சோனி, அஸ்வினி குமார் என, ஒரு பக்கம் விழுந்து விழுந்து சிரிக்க, விஜிலாவுக்கு பக்கத்திலும் பின்னாலும் இருந்த, மனோஜ் பாண்டியனும், ரபி பெர்னாட்டும் சிரிப்பை அடக்க முடியாமல் தவித்தனர். அருகில் இருந்த பிற எம்.பி.,க்களுக்கு, அந்த இருவரும் விளக்கம் அளித்துக் கொண்டிருந்தனர். பொறுமை இழந்த குரியன், "விஜிலா, விஷயத்தை பேசுங்கள்” என்று வலியுறுத்தவே, வேறு வழியின்றி, "காவிரி ஒழுங்குமுறை ஆணையத்தை அமைக்க, மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றார். 3 நிமிட ஒதுக்கீட்டில், பாட்டு பாடுவதற்கு, 2 நிமிடம் எடுத்துக் கொண்ட விஜிலா சத்யானந், மீதமுள்ள ஒரு நிமிடத்தில், 3 முறை அம்மா நாமம் உச்சரித்தார். அவருக்கு ஒதுக்கப்பட்ட நேரம் முடிந்துவிட்டதால், மைக் ஆப் செய்யப்படவே, பேச வேண்டிய கோரிக்கையை பேசாமல், அந்தரத்திலேயே தொங்க விட்டுவிட்டு அமர நேர்ந்தது.

அபாயம்:

ஒட்டுமொத்த சபையும், 'அம்மா' 'அம்மா' என எடுத்துக் கொடுத்து, சிரிப்பாய் சிரித்துக் கொண்டிருந்த வேளையில், தி.மு.க., - எம்.பி., சிவா எழுந்தார். அவரையும் பாட்டு பாட சிலர் கேட்க, அவரோ மிக சீரியசாக, "மேகதாது என்ற இடத்தில், கர்நாடகா கட்ட திட்டமிட்டுள்ள அணையால், தஞ்சை டெல்டா பகுதி, பாலைவனமாக மாறும் அபாயம் உள்ளது. எனவே, தமிழகம் மற்றும் கர்நாடகா ஆகிய இரு மாநிலங்களுக்கு இடையிலான நல்லுறவை கட்டிக்காக்க, காவிரி மேலாண்மை வாரியத்தை உடனடியாக அமைக்க வேண்டும்,” என்றார்.


'சிந்து நதியின் மிசை நிலவினிலே:' சிரிப்பாய் சிரிக்குது ராஜ்யசபா Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

'சிந்து நதியின் மிசை நிலவினிலே:' சிரிப்பாய் சிரிக்குது ராஜ்யசபா Empty 'சிந்து நதியின் மிசை நிலவினிலே:' சிரிப்பாய் சிரிக்குது ராஜ்யசபா

Post by ayyasamy ram Tue Mar 03, 2015 9:00 am

'சிந்து நதியின் மிசை நிலவினிலே:' சிரிப்பாய் சிரிக்குது ராஜ்யசபா OPu9h0UPR7G2gDntV7RK+Tamil_News_large_1196671
-

தனக்கு அளிக்கப்பட்ட, 3 நிமிடத்தில், 2 நிமிடத்திற்கு
ராகம் போட்டு பாட்டுப்பாடி, மீதமுள்ள ஒரு நிமிடத்தில்
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க நடவடிக்கை
எடுக்கும்படி வலியுறுத்திய, அ.தி.மு.க., - எம்.பி.,யை
பார்த்து, ராஜ்யபா துணைத் தலைவர் குரியன் உட்பட
ஒட்டுமொத்த சபையும், விலா நோகச் சிரித்து தீர்த்தது.
-
ராகத்துடன்...:
-
ராஜ்யசபாவில் நேற்று காலை, பொது முக்கியத்துவம்
வாய்ந்த நேரத்தில், தமிழக எம்.பி.,யான
விஜிலா சத்யானந்திற்கு, பேச வாய்ப்பு வழங்கப்பட்டது.
அவர் எழுந்து, மாநிலங்களுக்கு இடையிலான ஒற்றுமை
குறித்து, சில வார்த்தைகளை பேசிவிட்டு, திடீரென,
'சிந்து நதியின் மிசை நிலவினிலே..' என, ராகம் போட்டு
பாட ஆரம்பித்தார்.

பாரதியாரை மேற்கோள்காட்டி பாடினாலும்,
கைகொடுத்த தெய்வம் படத்தில், சிவாஜி கணேசன்
வாயசைத்து பாடிய, அந்த திரையிசைப் பாடலின் ராகத்தில்,
அப்படியே ஏற்ற இறக்கத்துடனும், முகபாவனையுடனும்
பாடிக் கொண்டே போனார்.

சபையில், மற்ற எம்.பி.,க்கள், 'என்ன இது' என பார்க்க
ஆரம்பிக்க, சபை தலைவர் இருக்கையில் இருந்த குரியனும்,
தலையை ஆட்டி, பாட்டை ரசித்துக் கொண்டே,
"யெஸ்... குட்... திஸ் ஸ் டூ பி என்கரேஜ்...” என்றார்.
ராகத்தோடு பாட்டு ஒரு பக்கம், அதை ஊக்கப்படுத்தும்
குரியன் மறுபக்கம் என, பார்த்த எம்.பி.,க்களுக்கு சிரிப்பை
அடக்க முடியவில்லை.

ஆனால், நடந்ததோ வேறு; ஓரிரு வரிகளுடன் முடிக்காத
விஜிலா சத்யானந்த், தொடர்ச்சியாக அந்த பாட்டின்
அடுத்தடுத்த வரிகளையும் தொடர்ந்தார். 'முழு பாடலுமா!?'
என, அதிர்ச்சியடைந்த குரியன், "விஷயத்திற்கு வாருங்கள்”
என, பரபரத்தார்.
-
மூத்த எம்.பி.,க்கள் குபீர்:
-
அதற்கு, "விஷயமே இதுதான்” எனக் கூறிவிட்டு, வரிக்குவரி
விளக்கம் அளித்து பாடலையும் தொடர, அனைவருக்கும் ஒரு
மாதிரியாக ஆகிவிட்டது. மூத்த எம்.பி.,க்கள் அம்பிகா சோனி,
அஸ்வினி குமார் என, ஒரு பக்கம் விழுந்து விழுந்து சிரிக்க,
விஜிலாவுக்கு பக்கத்திலும் பின்னாலும் இருந்த,
மனோஜ் பாண்டியனும், ரபி பெர்னாட்டும் சிரிப்பை அடக்க
முடியாமல் தவித்தனர்.

அருகில் இருந்த பிற எம்.பி.,க்களுக்கு, அந்த இருவரும் விளக்கம்
அளித்துக் கொண்டிருந்தனர். பொறுமை இழந்த குரியன்,
"விஜிலா, விஷயத்தை பேசுங்கள்” என்று வலியுறுத்தவே,
வேறு வழியின்றி, "காவிரி ஒழுங்குமுறை ஆணையத்தை
அமைக்க, மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்”
என்றார்.

3 நிமிட ஒதுக்கீட்டில், பாட்டு பாடுவதற்கு, 2 நிமிடம் எடுத்துக்
கொண்ட விஜிலா சத்யானந், மீதமுள்ள ஒரு நிமிடத்தில்,
3 முறை அம்மா நாமம் உச்சரித்தார். அவருக்கு ஒதுக்கப்பட்ட
நேரம் முடிந்துவிட்டதால், மைக் ஆப் செய்யப்படவே,
பேச வேண்டிய கோரிக்கையை பேசாமல், அந்தரத்திலேயே
தொங்க விட்டுவிட்டு அமர நேர்ந்தது.
-
அபாயம்:
-
ஒட்டுமொத்த சபையும், 'அம்மா' 'அம்மா' என எடுத்துக்
கொடுத்து, சிரிப்பாய் சிரித்துக் கொண்டிருந்த வேளையில்,
தி.மு.க., - எம்.பி., சிவா எழுந்தார். அவரையும் பாட்டு பாட சிலர்
கேட்க, அவரோ மிக சீரியசாக, "மேகதாது என்ற இடத்தில்,
கர்நாடகா கட்ட திட்டமிட்டுள்ள அணையால், தஞ்சை டெல்டா
பகுதி, பாலைவனமாக மாறும் அபாயம் உள்ளது.
எனவே, தமிழகம் மற்றும் கர்நாடகா ஆகிய இரு மாநிலங்களுக்கு
இடையிலான நல்லுறவை கட்டிக்காக்க, காவிரி மேலாண்மை
வாரியத்தை உடனடியாக அமைக்க வேண்டும்,” என்றார்.
-
----------------------------------------------
-தினமலர்
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83921
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

'சிந்து நதியின் மிசை நிலவினிலே:' சிரிப்பாய் சிரிக்குது ராஜ்யசபா Empty Re: 'சிந்து நதியின் மிசை நிலவினிலே:' சிரிப்பாய் சிரிக்குது ராஜ்யசபா

Post by கோ. செந்தில்குமார் Tue Mar 03, 2015 9:13 am

என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது
கோ. செந்தில்குமார்
கோ. செந்தில்குமார்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 332
இணைந்தது : 03/04/2014

http://www.aanmeegachudar.blogspot.in

Back to top Go down

'சிந்து நதியின் மிசை நிலவினிலே:' சிரிப்பாய் சிரிக்குது ராஜ்யசபா Empty Re: 'சிந்து நதியின் மிசை நிலவினிலே:' சிரிப்பாய் சிரிக்குது ராஜ்யசபா

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum