Latest topics
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)by ayyasamy ram Yesterday at 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:54 pm
» கருத்துப்படம் 17/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:29 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Yesterday at 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Yesterday at 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Yesterday at 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Yesterday at 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Yesterday at 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Yesterday at 7:30 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm
» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm
» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm
» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm
» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm
» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm
» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm
» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm
» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm
» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm
» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm
Top posting users this month
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D | ||||
வேல்முருகன் காசி | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
தங்கத்தின் மீதான மோகத்தை குறைக்க, தங்க நாணய திட்டம்
+2
ராஜா
krishnaamma
6 posters
Page 1 of 2
Page 1 of 2 • 1, 2
தங்கத்தின் மீதான மோகத்தை குறைக்க, தங்க நாணய திட்டம்
தங்கத்தின் மீதான மோகத்தை குறைக்க பா.ஜ.,வின் தங்க நாணய திட்டம் !
புதுடில்லி : வெளிநாட்டில் இருந்து கொண்டு வரப்படும் தங்கத்தின் மீதான மோகத்தை குறைப்பதற்காகவும், உள்நாட்டு தங்கத்தின் மீது ஈர்ப்பை ஏற்படுத்தவும் "தங்க நாணய திட்டம்" என்ற புதிய திட்டத்தை மத்திய அரசு அறிமுகப்படுத்தி உள்ளது. நேற்று தாக்கல் செய்யப்பட்ட மத்திய பொது பட்ஜெட்டில் இதற்கான அறிவிப்பை மத்திய நிதியமைச்சர் அருண்ஜெட்லி வெளியிட்டார்.
வெளிநாட்டு தங்க மோகம் : உலகிலேயே அதிக அளவில் தங்கம் இறக்குமதி செய்யம் நாடாக இந்தியா திகழ்கிறது. ஆண்டுக்கு சராசரியாக 800 முதல் 1000 டன்கள் தங்கத்தை இந்தியா இறக்குமதி செய்து வருகிறது. அதே சமயம் இந்தியாவில் உள்ள மொத்த தங்கத்தின் அளவு 20,000 டன்கள் என புள்ளி விபர அறிக்கை தெரிவிக்கிறது. இந்த தங்கம் பெரும்பாலும் விற்பனை செய்யப்படுவதே இல்லை.
இதனால் தங்கத்தின் தேவை அதிகரித்ததுடன் வெளிநாட்டு தங்கத்தின் மீதான மோகம் அதிகரித்துள்ளது. இதன் விளைவாக தங்கத்தின் தேவையும், வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் தங்கத்தின் அளவும் ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்து வருகிறது.இதனால் இந்திய தங்க நகை உற்பத்தியாளர்களின் தொழில் முடங்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
தங்க நாணய திட்டம் : தங்க சேமிப்பு திட்டம் மற்றும் தங்கத்தின் மீதான கடன் திட்டம் ஆகியவற்றிற்கு மாற்றாக கொண்டு வரப்பட்டுள்ளது தான், தங்க நாணய திட்டம். இந்த புதிய திட்டத்தின் மூலம், வங்கி வாடிக்கையாளர்கள் தங்கத்தை முதலீடு செய்து அதன் மூலம் வருமானம் பெற முடியும். மேலும், முதலீடு செய்த தங்கத்தின் மீது கடனும் பெற முடியும்.
வங்கிகள் மற்றும் பிற டீலர்கள் மூலம் தங்கத்தை பணம் ஆக்கிக் கொள்ளலாம். இதன் மூலம் பழைய தங்கத்தை மீண்டும் புதுப்பித்து கொள்ள வாய்ப்பு ஏற்படுகிறது. இதனை மேலும் ஊக்குவிப்பதற்காக இந்திய தங்க நாணயங்களையும் அரசு அறிமுகம் செய்ய உள்ளது. இந்த தங்க நாணயங்களில் அசோக சக்கரம் பொறிக்கப்பட்டு விற்பனைக்கு வர உள்ளது.
வியாபாரிகள் வரவேற்பு : அரசின் தங்க நாணய திட்டத்திற்கு தங்க நகை வியாபாரிகள் வரவேற்பு தெரிவித்துள்ளனர். இது குறித்து தங்க நகை வர்த்தக கூட்டமைப்பின் தலைவர் ஹரிஷ் சோனி கூறுகையில், தங்கத்தின் மீதான சுங்க வரி குறைக்கப்படாதது ஏமாற்றம் அளிக்கிறது. இருந்த போதும் அரசு அறிமுகம் செய்துள்ள தங்க நாணய திட்டம் மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. இது ராஷ்டிர ஸ்வர்ண நிவேஸ் திட்டத்தை போன்றே உள்ளது. இதன் மூலம் உள்நாட்டு தங்கத்தின் புழக்கம் அதிகரிப்பதுடன், இறக்குமதிகள் குறைக்கப்படும் என தெரிவித்துள்ளார்.
தங்க பத்திரம்: இனி, வீட்டு பீரோவில் சும்மா கிடக்கும் தங்கத்தின் மூலம் வட்டி வருமானம் பார்க்கலாம். இந்திய மக்களின் வீடுகளில் 20 ஆயிரம் டன் தங்கம் இருப்பதாக கூறப்படுகிறது. இந்த விதமான சேமிப்பு, பூட்டி வைக்கப்படுவதால், வங்கி சேமிப்புகளை போல் முதலீடுகளுக்கு கிடைக்காமல் போய்விடுகிறது. இந்த நிலையை மாற்றி, தங்கம் வாங்குபவர்கள், முதலீட்டாளர்கள், அரசு என, முத்தரப்பினரும் பயன்பெறும் விதத்தில், பட்ஜெட்டில் இரண்டு புதிய திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளன.
தங்கத்தை பணமாக்கும் திட்டம் (கோல்டு மானிடைசேஷன் ஸ்கீம்) - இதில் வங்கி கணக்கை போல் தங்கத்திற்கு பிரத்யேக கணக்கை துவங்கி, தங்கத்தை அதில் வைக்கலாம். வைக்கப்பட்ட தங்கத்திற்கு வட்டி வழங்கப்படும். நகை தொழிலில் உள்ளவர்களும் இத்தகைய கணக்கை துவங்கி வைப்பு தங்கத்தின் மீது கடன் வாங்கிக் கொள்ளலாம்.
அரசு தங்கம் கடன் பத்திரம் (சாவரின் கோல்டு பாண்டு) - தங்கத்தை நேரடியாக வாங்குவதற்கு பதில் இதை வாங்கலாம். இவற்றின் மீது வட்டி வழங்கப்படும். தங்கம் அல்லது பணம் தேவைப்படும் போது, பத்திரத்தை கொடுத்துவிட்டு, அன்றைய விலையில் தங்கமோ அல்லது அதற்கு நிகரான பணத்தையோ பெற்றுக்கொள்ளலாம்.
தினமலர்
புதுடில்லி : வெளிநாட்டில் இருந்து கொண்டு வரப்படும் தங்கத்தின் மீதான மோகத்தை குறைப்பதற்காகவும், உள்நாட்டு தங்கத்தின் மீது ஈர்ப்பை ஏற்படுத்தவும் "தங்க நாணய திட்டம்" என்ற புதிய திட்டத்தை மத்திய அரசு அறிமுகப்படுத்தி உள்ளது. நேற்று தாக்கல் செய்யப்பட்ட மத்திய பொது பட்ஜெட்டில் இதற்கான அறிவிப்பை மத்திய நிதியமைச்சர் அருண்ஜெட்லி வெளியிட்டார்.
வெளிநாட்டு தங்க மோகம் : உலகிலேயே அதிக அளவில் தங்கம் இறக்குமதி செய்யம் நாடாக இந்தியா திகழ்கிறது. ஆண்டுக்கு சராசரியாக 800 முதல் 1000 டன்கள் தங்கத்தை இந்தியா இறக்குமதி செய்து வருகிறது. அதே சமயம் இந்தியாவில் உள்ள மொத்த தங்கத்தின் அளவு 20,000 டன்கள் என புள்ளி விபர அறிக்கை தெரிவிக்கிறது. இந்த தங்கம் பெரும்பாலும் விற்பனை செய்யப்படுவதே இல்லை.
இதனால் தங்கத்தின் தேவை அதிகரித்ததுடன் வெளிநாட்டு தங்கத்தின் மீதான மோகம் அதிகரித்துள்ளது. இதன் விளைவாக தங்கத்தின் தேவையும், வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் தங்கத்தின் அளவும் ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்து வருகிறது.இதனால் இந்திய தங்க நகை உற்பத்தியாளர்களின் தொழில் முடங்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
தங்க நாணய திட்டம் : தங்க சேமிப்பு திட்டம் மற்றும் தங்கத்தின் மீதான கடன் திட்டம் ஆகியவற்றிற்கு மாற்றாக கொண்டு வரப்பட்டுள்ளது தான், தங்க நாணய திட்டம். இந்த புதிய திட்டத்தின் மூலம், வங்கி வாடிக்கையாளர்கள் தங்கத்தை முதலீடு செய்து அதன் மூலம் வருமானம் பெற முடியும். மேலும், முதலீடு செய்த தங்கத்தின் மீது கடனும் பெற முடியும்.
வங்கிகள் மற்றும் பிற டீலர்கள் மூலம் தங்கத்தை பணம் ஆக்கிக் கொள்ளலாம். இதன் மூலம் பழைய தங்கத்தை மீண்டும் புதுப்பித்து கொள்ள வாய்ப்பு ஏற்படுகிறது. இதனை மேலும் ஊக்குவிப்பதற்காக இந்திய தங்க நாணயங்களையும் அரசு அறிமுகம் செய்ய உள்ளது. இந்த தங்க நாணயங்களில் அசோக சக்கரம் பொறிக்கப்பட்டு விற்பனைக்கு வர உள்ளது.
வியாபாரிகள் வரவேற்பு : அரசின் தங்க நாணய திட்டத்திற்கு தங்க நகை வியாபாரிகள் வரவேற்பு தெரிவித்துள்ளனர். இது குறித்து தங்க நகை வர்த்தக கூட்டமைப்பின் தலைவர் ஹரிஷ் சோனி கூறுகையில், தங்கத்தின் மீதான சுங்க வரி குறைக்கப்படாதது ஏமாற்றம் அளிக்கிறது. இருந்த போதும் அரசு அறிமுகம் செய்துள்ள தங்க நாணய திட்டம் மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. இது ராஷ்டிர ஸ்வர்ண நிவேஸ் திட்டத்தை போன்றே உள்ளது. இதன் மூலம் உள்நாட்டு தங்கத்தின் புழக்கம் அதிகரிப்பதுடன், இறக்குமதிகள் குறைக்கப்படும் என தெரிவித்துள்ளார்.
தங்க பத்திரம்: இனி, வீட்டு பீரோவில் சும்மா கிடக்கும் தங்கத்தின் மூலம் வட்டி வருமானம் பார்க்கலாம். இந்திய மக்களின் வீடுகளில் 20 ஆயிரம் டன் தங்கம் இருப்பதாக கூறப்படுகிறது. இந்த விதமான சேமிப்பு, பூட்டி வைக்கப்படுவதால், வங்கி சேமிப்புகளை போல் முதலீடுகளுக்கு கிடைக்காமல் போய்விடுகிறது. இந்த நிலையை மாற்றி, தங்கம் வாங்குபவர்கள், முதலீட்டாளர்கள், அரசு என, முத்தரப்பினரும் பயன்பெறும் விதத்தில், பட்ஜெட்டில் இரண்டு புதிய திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளன.
தங்கத்தை பணமாக்கும் திட்டம் (கோல்டு மானிடைசேஷன் ஸ்கீம்) - இதில் வங்கி கணக்கை போல் தங்கத்திற்கு பிரத்யேக கணக்கை துவங்கி, தங்கத்தை அதில் வைக்கலாம். வைக்கப்பட்ட தங்கத்திற்கு வட்டி வழங்கப்படும். நகை தொழிலில் உள்ளவர்களும் இத்தகைய கணக்கை துவங்கி வைப்பு தங்கத்தின் மீது கடன் வாங்கிக் கொள்ளலாம்.
அரசு தங்கம் கடன் பத்திரம் (சாவரின் கோல்டு பாண்டு) - தங்கத்தை நேரடியாக வாங்குவதற்கு பதில் இதை வாங்கலாம். இவற்றின் மீது வட்டி வழங்கப்படும். தங்கம் அல்லது பணம் தேவைப்படும் போது, பத்திரத்தை கொடுத்துவிட்டு, அன்றைய விலையில் தங்கமோ அல்லது அதற்கு நிகரான பணத்தையோ பெற்றுக்கொள்ளலாம்.
தினமலர்
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: தங்கத்தின் மீதான மோகத்தை குறைக்க, தங்க நாணய திட்டம்
//தங்கத்தை பணமாக்கும் திட்டம் (கோல்டு மானிடைசேஷன் ஸ்கீம்) - இதில் வங்கி கணக்கை போல் தங்கத்திற்கு பிரத்யேக கணக்கை துவங்கி, தங்கத்தை அதில் வைக்கலாம். வைக்கப்பட்ட தங்கத்திற்கு வட்டி வழங்கப்படும். நகை தொழிலில் உள்ளவர்களும் இத்தகைய கணக்கை துவங்கி வைப்பு தங்கத்தின் மீது கடன் வாங்கிக் கொள்ளலாம். //
லாகாரில் வைப்பது போலவா?................அணிவதற்குத்தானே நகை வாங்குகிறோம்...திடீரென்று வேண்டும் என்றால்?...............எடுக்க முடியுமா?...யாராவது விளக்கமுடியுமா இது பற்றி?.............வங்கி இல் உருக்கி விடுவார்களா? .......புரியலையே?...................விளக்கம் ப்ளீஸ்
லாகாரில் வைப்பது போலவா?................அணிவதற்குத்தானே நகை வாங்குகிறோம்...திடீரென்று வேண்டும் என்றால்?...............எடுக்க முடியுமா?...யாராவது விளக்கமுடியுமா இது பற்றி?.............வங்கி இல் உருக்கி விடுவார்களா? .......புரியலையே?...................விளக்கம் ப்ளீஸ்
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: தங்கத்தின் மீதான மோகத்தை குறைக்க, தங்க நாணய திட்டம்
நல்ல முயற்சி , அனைவரும் தங்கள் பயன்படுத்தும் ஒரு சில அணிகலன்களை தவிர மற்ற (bank locker , வீட்டு அலமாரிகளில்) சும்மா இருக்கும் நகைகளை இது போல தங்க நாணய திட்டத்தில் சேர்த்தால் வட்டியும் கிடைக்கும் இதன் மூலம் இந்திய ரூபாயின் மதிப்பு உயரவும் வாய்ப்புள்ளது.
Re: தங்கத்தின் மீதான மோகத்தை குறைக்க, தங்க நாணய திட்டம்
திட்டம் நன்றாக தான் இருக்கிறது. ஆனா, கிருஷ்ணாம்மா சொல்வது போல வேணும் போது தேவையான நகைகளை எடுத்து கொள்ள முடியுமா....?
விமந்தனி- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
Re: தங்கத்தின் மீதான மோகத்தை குறைக்க, தங்க நாணய திட்டம்
தங்க நாணயதிட்டம் என்று தானே சொல்லியுள்ளனர் அக்கா , நாம் deposit பண்ணும் நகைகளுக்கு ஈடான 24 காரெட் நாணயங்களை எப்போது வேண்டுமானாலும் பெற்றுக்கொள்ள முடியும் என்று நினைக்கிறேன்விமந்தனி wrote:திட்டம் நன்றாக தான் இருக்கிறது. ஆனா, கிருஷ்ணாம்மா சொல்வது போல வேணும் போது தேவையான நகைகளை எடுத்து கொள்ள முடியுமா....?
Re: தங்கத்தின் மீதான மோகத்தை குறைக்க, தங்க நாணய திட்டம்
krishnaamma wrote:லாகாரில் வைப்பது போலவா?................அணிவதற்குத்தானே நகை வாங்குகிறோம்...திடீரென்று வேண்டும் என்றால்?...............எடுக்க முடியுமா?...யாராவது விளக்கமுடியுமா இது பற்றி?.............வங்கி இல் உருக்கி விடுவார்களா? .......புரியலையே?...................விளக்கம் ப்ளீஸ்
லாக்கரில் வைப்பது போல் இல்லை. தங்கள் நகைகளுக்கு ஈடாக 24 காரட்டில் அன்றைய விலையில் மாற்றி அந்த தங்கத்தை கணக்கில் வரவு வைத்து விடுவார்கள். அதற்கு வட்டியும் தருவார்கள். என்று வேண்டுமோ அன்று அன்றைய விலையில் 24 காரட் தங்கமாக அல்லது அதற்கு ஈடான விலையை தந்துவிடுவார்கள்.
நகை வேண்டும் என்றால் யார்ட்டயாவது அடிச்சிட வேண்டியது தான் தேவைக்கு ஏற்ப
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Re: தங்கத்தின் மீதான மோகத்தை குறைக்க, தங்க நாணய திட்டம்
யினியவன் wrote:லாக்கரில் வைப்பது போல் இல்லை. தங்கள் நகைகளுக்கு ஈடாக 24 காரட்டில் அன்றைய விலையில் மாற்றி அந்த தங்கத்தை கணக்கில் வரவு வைத்து விடுவார்கள். அதற்கு வட்டியும் தருவார்கள். என்று வேண்டுமோ அன்று அன்றைய விலையில் 24 காரட் தங்கமாக அல்லது அதற்கு ஈடான விலையை தந்துவிடுவார்கள்.
நகை வேண்டும் என்றால் யார்ட்டயாவது அடிச்சிட வேண்டியது தான் தேவைக்கு ஏற்ப
அருமையான திட்டம் , இந்த தங்கத்தை உலக வங்கியில் deposit பண்ணி நமது பணத்தின் மதிப்பை உயர்த்திகொள்ளலாம்
Re: தங்கத்தின் மீதான மோகத்தை குறைக்க, தங்க நாணய திட்டம்
தங்கமான திட்டங்க.........வரவேற்போம்...........
சிவனாசான்- வி.ஐ.பி
- பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014
Re: தங்கத்தின் மீதான மோகத்தை குறைக்க, தங்க நாணய திட்டம்
மேற்கோள் செய்த பதிவு: 1123707யினியவன் wrote:krishnaamma wrote:லாகாரில் வைப்பது போலவா?................அணிவதற்குத்தானே நகை வாங்குகிறோம்...திடீரென்று வேண்டும் என்றால்?...............எடுக்க முடியுமா?...யாராவது விளக்கமுடியுமா இது பற்றி?.............வங்கி இல் உருக்கி விடுவார்களா? .......புரியலையே?...................விளக்கம் ப்ளீஸ்
லாக்கரில் வைப்பது போல் இல்லை. தங்கள் நகைகளுக்கு ஈடாக 24 காரட்டில் அன்றைய விலையில் மாற்றி அந்த தங்கத்தை கணக்கில் வரவு வைத்து விடுவார்கள். அதற்கு வட்டியும் தருவார்கள். என்று வேண்டுமோ அன்று அன்றைய விலையில் 24 காரட் தங்கமாக அல்லது அதற்கு ஈடான விலையை தந்துவிடுவார்கள்.
நகை வேண்டும் என்றால் யார்ட்டயாவது அடிச்சிட வேண்டியது தான் தேவைக்கு ஏற்ப
அதுக்கு ஏன் நாம் வாங்கி,( கூலி சேதாரம் போட்டு வாங்கி...) வங்கி இல் வைக்கணும் இனியவன்?....( இவங்க வேறு 24 காரட் என்று மாற்ற எவ்வளவு கழிப்பாங்களோ ? ) ............வாங்கும்போதே coin ஆக வாங்கிடலாமே?..........நகைகளை போட்டுக்கணும் என்று வாங்கி விட்டு, இவர்களிடம் எப்படி கொடுப்பது? ................
சிலர், பணம் ( வட்டி ) கிடைக்கும் ஆசை இல் உள்ளே வைத்திருக்கும் நகைகளை கொண்டு போய் வங்கி இல் வைக்கும்போது,
" இது ஏற்கனவே டிக்ளேர் செய்த நகையா? "..." எப்போ வாங்கினது"?....."பில் இருக்கா " என்று ஆயிரம் கேள்வி கேட்ப்பார்கள்.......
கருப்பு பணம் போல கருப்பு நகைகளை வெளியே கொண்டு வர போட்டுள்ள திட்டம் இது.............எவ்வளவு பேர் இதை உபயோகிப்பார்கள் என்று எனக்கு சந்தேகமாய் இருக்கு
.
.
ஸ்விஸ் இல் இருப்பதை கொடுவந்துட்டாங்க..............இப்போ இது
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: தங்கத்தின் மீதான மோகத்தை குறைக்க, தங்க நாணய திட்டம்
பெண்கள் நகை அணிந்தால்தான் அழகாய் இருப்பார்களா ?
வெளிநாட்டு பெண்கள், இந்திய பெண்கள் போல் நகை அணிகின்றனரா?
நகை அணியவேண்டியதின் அவசியம் என்ன ?
ரமணியன்
பிகு : எப்பிடி இருப்பினும் , இந்த முயற்சி/ திட்டம் , வெற்றி அடையுமா ? என்பது சந்தேகமே !!
ர...ன்
வெளிநாட்டு பெண்கள், இந்திய பெண்கள் போல் நகை அணிகின்றனரா?
நகை அணியவேண்டியதின் அவசியம் என்ன ?
ரமணியன்
பிகு : எப்பிடி இருப்பினும் , இந்த முயற்சி/ திட்டம் , வெற்றி அடையுமா ? என்பது சந்தேகமே !!
ர...ன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35056
இணைந்தது : 03/02/2010
Page 1 of 2 • 1, 2
Similar topics
» பெட்ரோல் மீதான வரி: மாநில அரசுகள் குறைக்க வேண்டும்-தியோரா
» தங்கத்தின் மீதான மோகம் குறைகிறது
» தங்கத்தின் மீதான இறக்குமதி வரி 15 சதவீதமாக உயர்வு
» திருப்பதியில் தங்க நாணய விற்பனை மையம் தொடக்கம்
» தங்கத்தின் மீதான மோகம் குறைகிறது...விலையில் இன்னும் வீழ்ச்சி ஏற்படுமா?
» தங்கத்தின் மீதான மோகம் குறைகிறது
» தங்கத்தின் மீதான இறக்குமதி வரி 15 சதவீதமாக உயர்வு
» திருப்பதியில் தங்க நாணய விற்பனை மையம் தொடக்கம்
» தங்கத்தின் மீதான மோகம் குறைகிறது...விலையில் இன்னும் வீழ்ச்சி ஏற்படுமா?
Page 1 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|