Latest topics
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)by ayyasamy ram Yesterday at 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:54 pm
» கருத்துப்படம் 17/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:29 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Yesterday at 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Yesterday at 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Yesterday at 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Yesterday at 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Yesterday at 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Yesterday at 7:30 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm
» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm
» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm
» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm
» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm
» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm
» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm
» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm
» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm
» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm
» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm
Top posting users this month
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D | ||||
வேல்முருகன் காசி | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
பணம் மட்டும் போதுமா? ..by kirushnaamma :)
5 posters
Page 1 of 1
பணம் மட்டும் போதுமா? ..by kirushnaamma :)
அன்று இரவு சிவராமனுக்கு உறக்கம் பிடிக்கவே இல்லை....பொழுது விடிந்தால் அவருடைய பேரன், அமெரிக்காவிலிருந்து 4 வருடங்கள் கழித்து வருகிறான்.அது மட்டும் அல்ல, அவன் இவர்களின் குல தெய்வமான, செந்தில் ஆண்டவனுக்கு 'தங்க வேல்' சார்த்தப்போகிறான்.............அது தான் இவருக்கு இப்போது அவன் வருகையை விட, ரொம்ப சந்தோஷமான விஷையமாக இருந்தது.
அவர் எண்ணங்கள் பின்னோக்கி ஓடின. அன்பான மனைவியும், 4 மகன்களும் 2 மகள்களும். குடும்பம் பெரியதானாலும் அன்பான குடும்பம். கஷ்டப்பட்டுத்தான் ஒவ்வொருவரையும் ஆளாக்கினார். பசங்களும் நன்கு படித்தனர். அதில் மூவர் நல்ல வேலை இல் அமர்ந்தனர். பெண்களையும் ஓரளவுக்கு படிக்க வைத்து கல்யாணம் செய்து கொடுத்துவிட்டார்.
ஆச்சு இவரின் கடைசி பையனும் நல்ல வேலை இல் அமர்ந்து விட்டால், இவரின் பொறுப்பு முடிந்து விடும்; பசங்களை பொருத்தவரை தான்.ஆனால், நீண்ட நாளாக அவர் மனதில் இருந்த ஒரு வேண்டுதல்?.........அந்த வேண்டுதலையும் முடித்தால் தான் தனக்கு நிம்மதி பிறக்கும் என்று நனைத்தார்.
அதாவது, அவர் ரொம்ப கஷ்டப்பட்ட காலத்தில் தன் குல தெய்வத்திடம் வேண்டி இருந்தார், தான் தன்னுடைய வாரிசுகள் எல்லாருக்கும் ஒரு நல்ல வழி செய்து முடித்துவிட்டால், அந்த செந்தில் ஆண்டவனுக்கு வெள்ளி இல் வேல் செய்து சார்த்துவதாக. அதை செய்வது பற்றி இனி தான் யோசிக்கணும்.
அன்று இரவே , தன் மகன்களிடம் இது பற்றி பேசினார். எல்லோரும் சந்தோஷத்துடன் சம்மதித்தனர். கோவிலில் போய் விசாரிக்கை இல் கிட்டத்தட்ட 4 அடி 2 அங்குலம் அளவில் வேல் வேண்டி இருந்தது. 1 3/4 கிலோ வெள்ளி தேவையாக இருந்தது. அதை செய்ய எல்லோரும் அவர்களால் முடிந்த அளவு பணம் ஏற்பாடு செய்தனர்.மிதியை கொஞ்சம் கடன்வாங்கி புரட்டினார்.
ஒரு நல்ல நாளில் , அற்புதமான வெள்ளி வேல் அந்த ஆண்டவனுக்கு சாற்றப்பட்டது. சிவராமனுக்கு மகிழ்ச்சி க்கு அளவே இல்லை . இத்தனை அருமையான மனம் படைத்த குடும்பம் தனக்கு வைத்ததற்கு கடவுளுக்கு மீண்டும் மீண்டும் நன்றி சொன்னார். இத்தனை அருமையான குடும்பத்துக்கு இந்த பணக்கஷ்டம் மட்டும் இல்லாதிருந்தால் இன்னும் எவ்வளவோ செய்யலாமே என்கிற சிறு அங்கலாய்ப்பும் அவரிடம் இருந்தது.
ஒருவருக்கு எல்லாமே வாய்த்து விட்டால், அவன் அப்புறம் கடவுளை நினைக்கவே மாட்டான் என்று அந்த கடவுளுக்கே பயம் போல இருக்கு. அது தான் எல்லோருக்கும் ஏதாவது ஒரு குறை வைத்து விடுகிறான் என்று எண்ணினார். இது நடந்து பலவருடங்கள் ஆகிவிட்டது, இவரின் பேரன் இப்போ அமெரிக்காவில் நிரம்ப சம்பாதிக்கிறான், அவனும் இவரைப்போலவே, குல தெய்வத்திடம் வேண்டிக்கொண்டான்...'தனக்கு அமேரிக்காவில் வேலை கிடைத்தால், 'தங்கத்தில் வேல் ' செய்து சாற்றுவதாக.
இதோ வேலை கிடைத்து அங்கேயே செட்டில் உம் ஆகிவிட்டான். இப்போது அந்த வேண்டுதலை நிறை வேற்றத்தான் வருகிறான். நேற்றே சென்னை வந்திருப்பான், அங்கு ஆர்டர் கொடுத்துள்ள வேலை வாங்கிக்கொண்டு நாளை காலை இங்கு வருகிறான். மற்ற ஏற்பாடுகளை இங்கு அவன் அப்பா, அது தான் சிவராமனின் பையன் செய்துவிட்டார்.
வயதானதால், சிவராமன் ரொம்பவும் தளந்து போய்விட்டார், கண் பார்வையும் கொஞ்சம் குறைவாகவே இருக்கு. என்றாலும், பேரன் வாங்கி வரும் வேலை பார்க்க ரொம்ப ஆவலாக இருந்தார். தானும் தன் குடும்பமும் எவ்வளவோ கஷ்டப்பட்டுத்தான் அந்த வெள்ளி வேலை சார்த்தினோம், ஆனால் இன்று... அன்று அவர் நினைத்த படியே நிரம்ப பணமும் கொடுத்திருக்கான் அந்த செந்தில் ஆண்டவன். அதனால் தான் பேரன் தங்க வேல் சாற்றுகிறான் என்று பூரித்துப் போயிருந்தார்.
இடைவிடாமல் அந்த செந்தில் ஆண்டவன் நாமத்தை சொல்லியபடி அந்த இரவைக் கழித்தார். ஆச்சு பேரன் வந்தாச்சு. 4 வருடங்கள் கழித்து வந்தவனை உறவுகள் சூழ்ந்து கொண்டனர். நல்ல நிறமாய் இருந்தான். பார்க்கவே ரொம்ப சந்தோஷமாய் இருந்தது அனைவருக்கும். தாத்தாவுக்கும் ரொம்ப சந்தோசம் தான் என்றாலும் அவருக்கு 'தங்க வேலை' பார்க்கவேண்டும் என்பதே குறியாக இருந்தது.
அவன் வேறு போனில் சொல்லி இருந்தான், வேலில் விபூதி பட்டைக்காக வெள்ளை கற்களும் நடுவில் ஒரு மாணிக்க கல்லும் பதித்து இருப்பதாக. எனவே, பள பளக்கும் அந்த வேலைக் காட்டு, பெட்டியை திற முதலில் என்றார் பேரனிடம்.
அவன் "அதுக்கு எதுக்கு தாத்தா பெட்டியை திறக்கணும்? ...இதோ இருக்கே?" என்றவாறே கோட் பாக்கெட்டில் கைவிட்டான்.
இவருக்கு 'என்ன இவன் ? வேலைக் கேட்டால் , பாக்கெட்டில் கை விடுகிறான்' என்று இருந்தது.
அவன் தன் கோட் பாக்கெட்டில் இருந்து ஒரு சின்னஞ்சிறிய வெல்வெட் டப்பாவை எடுத்தான். அதில் அவன்
2 கிராமுக்கு செய்திருந்த தங்க வேல் சிவராமனை பார்த்து சிரித்தது.
அவருக்கு தன் கண்களையே நம்ப முடியலை...........'இத்துனுண்ண்டா?'.............மனம் அடித்துக்கொண்டது...............'அடப்பாவி, எத்தனை அள்ளி கொடுத்த என் தெய்வத்துக்கு '........'ஒரு பவுனில் செய்யக்கூட மனம் இல்லையே உனக்கு'.............என்று அவர் மனம் அழுதது. பாவம், ரொம்ப எதிர்பார்த்துவிட்டார் தன் பேரனிடமிருந்து; இப்போ, ஏதும் சொல்லமுடியாமல் வாயடைத்து நின்றார்.
அவன் இவரை கவனிக்காமலேயே, "எத்தனை அருமையான வேலைப்பாடு பாரு தாத்தா" என்று மேலே ஏதோ சொல்லிக்கொண்டே போனான்.
"ஆண்டவனுக்கு மட்டும் அல்ல , யாருக்காவது ஏதாவது செய்யவேண்டும் என்றால், நிறைய பணம் மட்டும் போறாது கொஞ்சம் மனமும் வேண்டும்" என்று அவருக்கு இந்த வயதில் தான் புரிந்தது.
கிருஷ்ணாம்மா
பிற்சேர்க்கை: அன்று கோவிலில், குடும்பத்தாரிடம் இருந்த அந்த அதிர்ச்சி வெளிப்படையாகத் தெரிந்தது. அர்ச்கரர் முதல் கோவில் பக்தர்கள் வரை எல்லோரின் பார்வை இலும் 'அடப்பாவி' என்கிறது தெரிந்தது என்றாலும் என்ன சொல்லமுடியும்? இதுவும் வேல் தானே? ....என்றாலும் போன வாரம் ஈகரை இல் மனோ எழுதிய இறைவன் இளிச்சவாயன்.! கவிதை சிவராமன் மனக்கண் முன் வந்து போனது ...ஒரு பெருமூச்சுடன் அந்த செந்தில் ஆண்டவனை தனக்கு எப்போதும் தாராள மனம் வேண்டும் என்று வேண்டிக்கொண்டார்.
அவர் எண்ணங்கள் பின்னோக்கி ஓடின. அன்பான மனைவியும், 4 மகன்களும் 2 மகள்களும். குடும்பம் பெரியதானாலும் அன்பான குடும்பம். கஷ்டப்பட்டுத்தான் ஒவ்வொருவரையும் ஆளாக்கினார். பசங்களும் நன்கு படித்தனர். அதில் மூவர் நல்ல வேலை இல் அமர்ந்தனர். பெண்களையும் ஓரளவுக்கு படிக்க வைத்து கல்யாணம் செய்து கொடுத்துவிட்டார்.
ஆச்சு இவரின் கடைசி பையனும் நல்ல வேலை இல் அமர்ந்து விட்டால், இவரின் பொறுப்பு முடிந்து விடும்; பசங்களை பொருத்தவரை தான்.ஆனால், நீண்ட நாளாக அவர் மனதில் இருந்த ஒரு வேண்டுதல்?.........அந்த வேண்டுதலையும் முடித்தால் தான் தனக்கு நிம்மதி பிறக்கும் என்று நனைத்தார்.
அதாவது, அவர் ரொம்ப கஷ்டப்பட்ட காலத்தில் தன் குல தெய்வத்திடம் வேண்டி இருந்தார், தான் தன்னுடைய வாரிசுகள் எல்லாருக்கும் ஒரு நல்ல வழி செய்து முடித்துவிட்டால், அந்த செந்தில் ஆண்டவனுக்கு வெள்ளி இல் வேல் செய்து சார்த்துவதாக. அதை செய்வது பற்றி இனி தான் யோசிக்கணும்.
அன்று இரவே , தன் மகன்களிடம் இது பற்றி பேசினார். எல்லோரும் சந்தோஷத்துடன் சம்மதித்தனர். கோவிலில் போய் விசாரிக்கை இல் கிட்டத்தட்ட 4 அடி 2 அங்குலம் அளவில் வேல் வேண்டி இருந்தது. 1 3/4 கிலோ வெள்ளி தேவையாக இருந்தது. அதை செய்ய எல்லோரும் அவர்களால் முடிந்த அளவு பணம் ஏற்பாடு செய்தனர்.மிதியை கொஞ்சம் கடன்வாங்கி புரட்டினார்.
ஒரு நல்ல நாளில் , அற்புதமான வெள்ளி வேல் அந்த ஆண்டவனுக்கு சாற்றப்பட்டது. சிவராமனுக்கு மகிழ்ச்சி க்கு அளவே இல்லை . இத்தனை அருமையான மனம் படைத்த குடும்பம் தனக்கு வைத்ததற்கு கடவுளுக்கு மீண்டும் மீண்டும் நன்றி சொன்னார். இத்தனை அருமையான குடும்பத்துக்கு இந்த பணக்கஷ்டம் மட்டும் இல்லாதிருந்தால் இன்னும் எவ்வளவோ செய்யலாமே என்கிற சிறு அங்கலாய்ப்பும் அவரிடம் இருந்தது.
ஒருவருக்கு எல்லாமே வாய்த்து விட்டால், அவன் அப்புறம் கடவுளை நினைக்கவே மாட்டான் என்று அந்த கடவுளுக்கே பயம் போல இருக்கு. அது தான் எல்லோருக்கும் ஏதாவது ஒரு குறை வைத்து விடுகிறான் என்று எண்ணினார். இது நடந்து பலவருடங்கள் ஆகிவிட்டது, இவரின் பேரன் இப்போ அமெரிக்காவில் நிரம்ப சம்பாதிக்கிறான், அவனும் இவரைப்போலவே, குல தெய்வத்திடம் வேண்டிக்கொண்டான்...'தனக்கு அமேரிக்காவில் வேலை கிடைத்தால், 'தங்கத்தில் வேல் ' செய்து சாற்றுவதாக.
இதோ வேலை கிடைத்து அங்கேயே செட்டில் உம் ஆகிவிட்டான். இப்போது அந்த வேண்டுதலை நிறை வேற்றத்தான் வருகிறான். நேற்றே சென்னை வந்திருப்பான், அங்கு ஆர்டர் கொடுத்துள்ள வேலை வாங்கிக்கொண்டு நாளை காலை இங்கு வருகிறான். மற்ற ஏற்பாடுகளை இங்கு அவன் அப்பா, அது தான் சிவராமனின் பையன் செய்துவிட்டார்.
வயதானதால், சிவராமன் ரொம்பவும் தளந்து போய்விட்டார், கண் பார்வையும் கொஞ்சம் குறைவாகவே இருக்கு. என்றாலும், பேரன் வாங்கி வரும் வேலை பார்க்க ரொம்ப ஆவலாக இருந்தார். தானும் தன் குடும்பமும் எவ்வளவோ கஷ்டப்பட்டுத்தான் அந்த வெள்ளி வேலை சார்த்தினோம், ஆனால் இன்று... அன்று அவர் நினைத்த படியே நிரம்ப பணமும் கொடுத்திருக்கான் அந்த செந்தில் ஆண்டவன். அதனால் தான் பேரன் தங்க வேல் சாற்றுகிறான் என்று பூரித்துப் போயிருந்தார்.
இடைவிடாமல் அந்த செந்தில் ஆண்டவன் நாமத்தை சொல்லியபடி அந்த இரவைக் கழித்தார். ஆச்சு பேரன் வந்தாச்சு. 4 வருடங்கள் கழித்து வந்தவனை உறவுகள் சூழ்ந்து கொண்டனர். நல்ல நிறமாய் இருந்தான். பார்க்கவே ரொம்ப சந்தோஷமாய் இருந்தது அனைவருக்கும். தாத்தாவுக்கும் ரொம்ப சந்தோசம் தான் என்றாலும் அவருக்கு 'தங்க வேலை' பார்க்கவேண்டும் என்பதே குறியாக இருந்தது.
அவன் வேறு போனில் சொல்லி இருந்தான், வேலில் விபூதி பட்டைக்காக வெள்ளை கற்களும் நடுவில் ஒரு மாணிக்க கல்லும் பதித்து இருப்பதாக. எனவே, பள பளக்கும் அந்த வேலைக் காட்டு, பெட்டியை திற முதலில் என்றார் பேரனிடம்.
அவன் "அதுக்கு எதுக்கு தாத்தா பெட்டியை திறக்கணும்? ...இதோ இருக்கே?" என்றவாறே கோட் பாக்கெட்டில் கைவிட்டான்.
இவருக்கு 'என்ன இவன் ? வேலைக் கேட்டால் , பாக்கெட்டில் கை விடுகிறான்' என்று இருந்தது.
அவன் தன் கோட் பாக்கெட்டில் இருந்து ஒரு சின்னஞ்சிறிய வெல்வெட் டப்பாவை எடுத்தான். அதில் அவன்
2 கிராமுக்கு செய்திருந்த தங்க வேல் சிவராமனை பார்த்து சிரித்தது.
அவருக்கு தன் கண்களையே நம்ப முடியலை...........'இத்துனுண்ண்டா?'.............மனம் அடித்துக்கொண்டது...............'அடப்பாவி, எத்தனை அள்ளி கொடுத்த என் தெய்வத்துக்கு '........'ஒரு பவுனில் செய்யக்கூட மனம் இல்லையே உனக்கு'.............என்று அவர் மனம் அழுதது. பாவம், ரொம்ப எதிர்பார்த்துவிட்டார் தன் பேரனிடமிருந்து; இப்போ, ஏதும் சொல்லமுடியாமல் வாயடைத்து நின்றார்.
அவன் இவரை கவனிக்காமலேயே, "எத்தனை அருமையான வேலைப்பாடு பாரு தாத்தா" என்று மேலே ஏதோ சொல்லிக்கொண்டே போனான்.
"ஆண்டவனுக்கு மட்டும் அல்ல , யாருக்காவது ஏதாவது செய்யவேண்டும் என்றால், நிறைய பணம் மட்டும் போறாது கொஞ்சம் மனமும் வேண்டும்" என்று அவருக்கு இந்த வயதில் தான் புரிந்தது.
கிருஷ்ணாம்மா
பிற்சேர்க்கை: அன்று கோவிலில், குடும்பத்தாரிடம் இருந்த அந்த அதிர்ச்சி வெளிப்படையாகத் தெரிந்தது. அர்ச்கரர் முதல் கோவில் பக்தர்கள் வரை எல்லோரின் பார்வை இலும் 'அடப்பாவி' என்கிறது தெரிந்தது என்றாலும் என்ன சொல்லமுடியும்? இதுவும் வேல் தானே? ....என்றாலும் போன வாரம் ஈகரை இல் மனோ எழுதிய இறைவன் இளிச்சவாயன்.! கவிதை சிவராமன் மனக்கண் முன் வந்து போனது ...ஒரு பெருமூச்சுடன் அந்த செந்தில் ஆண்டவனை தனக்கு எப்போதும் தாராள மனம் வேண்டும் என்று வேண்டிக்கொண்டார்.
Last edited by krishnaamma on Sun Mar 01, 2015 9:37 am; edited 1 time in total
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: பணம் மட்டும் போதுமா? ..by kirushnaamma :)
சிலருக்கு மனம் இருந்தால் பணம் இல்லை, பணம் இருந்தால் மனம் இல்லை. நடப்பதை நயமான கதையாக வடித்து விட்டீர்கள் அக்கா. நன்றி அக்கா. அக்கான்னா அக்கா தான். தொடருங்கள்.
மாணிக்கம் நடேசன்- கல்வியாளர்
- பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009
Re: பணம் மட்டும் போதுமா? ..by kirushnaamma :)
மேற்கோள் செய்த பதிவு: 1123428மாணிக்கம் நடேசன் wrote:சிலருக்கு மனம் இருந்தால் பணம் இல்லை, பணம் இருந்தால் மனம் இல்லை. நடப்பதை நயமான கதையாக வடித்து விட்டீர்கள் அக்கா. நன்றி அக்கா. அக்கான்னா அக்கா தான். தொடருங்கள்.
நன்றி மாமா.................. உங்கள் ஊக்கமான பின்னுட்டத்துக்கு மீண்டும் நன்றி
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: பணம் மட்டும் போதுமா? ..by kirushnaamma :)
week end எழுதியதால் நிறைய பேர் இப்போ படிக்க , இதை மேலே கொண்டு வருகிறேன்
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: பணம் மட்டும் போதுமா? ..by kirushnaamma :)
வேலவனுக்கு வேலுண்டு மனிதனுக்கு
பணம் பண்ணும் வேலை மட்டுமே உண்டு
மனதை வேல் குத்தும் கதைம்மா
பணம் பண்ணும் வேலை மட்டுமே உண்டு
மனதை வேல் குத்தும் கதைம்மா
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Re: பணம் மட்டும் போதுமா? ..by kirushnaamma :)
பணம் இருக்கும் இடத்தில் குணம் இருக்காது...
குணம் இருக்கும் இடத்தில் பணம் இருக்காது...
நல்ல கதைமா பகிர்வுக்கு நன்றி
குணம் இருக்கும் இடத்தில் பணம் இருக்காது...
நல்ல கதைமா பகிர்வுக்கு நன்றி
ஜாஹீதாபானு- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011
Re: பணம் மட்டும் போதுமா? ..by kirushnaamma :)
மேற்கோள் செய்த பதிவு: 1124036ஜாஹீதாபானு wrote:பணம் இருக்கும் இடத்தில் குணம் இருக்காது...
குணம் இருக்கும் இடத்தில் பணம் இருக்காது...
நல்ல கதைமா பகிர்வுக்கு நன்றி
நன்றி பானு
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: பணம் மட்டும் போதுமா? ..by kirushnaamma :)
யினியவன் wrote:வேலவனுக்கு வேலுண்டு மனிதனுக்கு
பணம் பண்ணும் வேலை மட்டுமே உண்டு
மனதை வேல் குத்தும் கதைம்மா
ம்.............இது நிஜத்தைதழுவி எழுதியது இனியவன்....................
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: பணம் மட்டும் போதுமா? ..by kirushnaamma :)
அருமையான கதை ..................
கொடுப்பதற்கும் பெறுவதற்கும் உரிய விலை மதிப்பில்லாத பரிசு அன்பு .
M.Saranya- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2190
இணைந்தது : 26/08/2014
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Similar topics
» கொடியேற்றினால் மட்டும் போதுமா?
» படித்தால் மட்டும் போதுமா?
» படித்தால் மட்டும் போதுமா?
» ஆறு குளம் ஏரி தூர்வாரினால் மட்டும் போதுமா?
» பாலிசி எடுத்தால் மட்டும் போதுமா ? ? ? ?
» படித்தால் மட்டும் போதுமா?
» படித்தால் மட்டும் போதுமா?
» ஆறு குளம் ஏரி தூர்வாரினால் மட்டும் போதுமா?
» பாலிசி எடுத்தால் மட்டும் போதுமா ? ? ? ?
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|