ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 5:37 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 3:31 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 3:25 pm

» இன்றைய செய்திகள்- ஜன் 20
by ayyasamy ram Today at 3:17 pm

» விஜய் பிறந்த நாளில் 6 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Today at 3:16 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 3:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 2:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:57 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:52 pm

» காதல் தவிப்பு - கவிதை
by ayyasamy ram Today at 1:44 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:41 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:33 pm

» கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து 16 பேர் பரிதாப உயிரிழப்பு:
by ayyasamy ram Today at 1:09 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:08 pm

» முத்த மழை!- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 1:05 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by ayyasamy ram Today at 1:02 pm

» தாமரை வடிவ ஆவுடையாரில் லிங்கம்
by ayyasamy ram Today at 12:59 pm

» மூன்று தலையுடன் கூடிய அர்த்த நாரீஸ்வரர்
by ayyasamy ram Today at 12:57 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:52 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:24 pm

» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by Dr.S.Soundarapandian Today at 11:58 am

» பல்சுவை கதம்பம்
by Dr.S.Soundarapandian Today at 11:56 am

» கருத்துப்படம் 19/06/2024
by Dr.S.Soundarapandian Today at 11:51 am

» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Yesterday at 7:46 pm

» நாவல்கள் வேண்டும்
by Anitha Anbarasan Yesterday at 6:50 pm

» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Yesterday at 6:15 pm

» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm

» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Yesterday at 1:18 pm

» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm

» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm

» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm

» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Yesterday at 1:10 pm

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 12:12 pm

» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm

» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm

» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm

» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm

» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm

» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm

» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:04 pm

» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:03 pm

» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:37 pm

» வேகமாய் மாறும் மனிதனின் மனநிலை!
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:36 pm

» அன்புள்ள எழுதுகோலுக்கு அய்யம் பெருமாள் எழுதுவது
by ayyamperumal Tue Jun 18, 2024 6:37 pm

» நினைவு கூறலாம் -திரு கக்கன் பிறந்த தினம் --நினைவு கூறுவோம்.
by ayyamperumal Tue Jun 18, 2024 6:34 pm

» செயற்கை முறைக் கருக்கட்டலிலும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:05 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

2015-16 பொது பட்ஜெட் தாக்கல்:- பட்ஜெட் குறித்த கருத்துகள்

Go down

2015-16 பொது பட்ஜெட் தாக்கல்:- பட்ஜெட் குறித்த கருத்துகள் Empty 2015-16 பொது பட்ஜெட் தாக்கல்:- பட்ஜெட் குறித்த கருத்துகள்

Post by ayyasamy ram Sat Feb 28, 2015 8:41 pm

சேவை வரி உயர்வு அதிர்ச்சி அளிக்கிறது: தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு

மத்திய பட்ஜெட்டில் சேவை வரி 12 சதவீதத்திலிருந்து 14 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது அதிர்ச்சி அளிக்கிறது என தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தெரிவித்துள்ளது. இது குறித்து அந்த அமைப்பு வெளியிட்டுள்ள செய்தியில் கூறியிருப்பதாவது:

மத்திய பட்ஜெட்டில் வணிகர்களுக்கென்று முத்ரா வங்கி என்ற பெயரில் தனி வங்கியை அமைக்க உள்ளதாக அறிவிப்பு செய்த பிரதமர் நரேந்திரமோடி, நிதிஅமைச்சர் அருண்ஜெட்லி ஆகியோருககு நன்றியை தெரிவித்து கொள்கிறோம்.பட்ஜெட்டில் வருமானவரி விலக்கு தொடர்பாக எந்தவித அறிவிப்பும் வெளியிடப்படவில்லை.

வணிகர்கள், நடுத்தர மக்கள் பயன்பெறும் வகையில் வருமானவரி விலக்கு வரம்பை ரூ.5 லட்சமாக உயர்த்த வேண்டும். சேவைவரி 12 சதவீதத்திலிருந்து 14 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது அதிர்ச்சி அளிக்கிறது. இதனை 10 சதவீதமாக குறைக்க வேண்டும்.

இந்த பட்ஜெட்டில் பெண்களின் பாதுகாப்பு, இளைஞர்கள் மேம்பாடு, உள்கட்டமைப்பு வசதிகள், விவசாயிகளுக்கான திட்டங்கள், கல்வி, மருத்துவம் உள்ளிட்ட சமூக நலத்திட்டங்களை முன்னிலைப்படுத்தி இருப்பது வரவேற்கத்தக்கது என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82623
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

2015-16 பொது பட்ஜெட் தாக்கல்:- பட்ஜெட் குறித்த கருத்துகள் Empty Re: 2015-16 பொது பட்ஜெட் தாக்கல்:- பட்ஜெட் குறித்த கருத்துகள்

Post by ayyasamy ram Sat Feb 28, 2015 8:44 pm

தனிநபர் வருமான வரி விலக்கு உச்ச வரம்பு அதிகரிக்காதது ஏமாற்றம் : இளங்கோவன்
-
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் அறிக்கையில், தனிநபர் வருமான வரி விலக்கு உச்சவரம்பு அதிகரிக்கப்படாதது மிகுந்த ஏமாற்றத்தைத் தருகிறது என்று கூறியுள்ளார்.

மேலும்,

அதேநேரத்தில் நிறுவன வரியை 30 சதவீதத்திலிருந்து 25 சதவீதமாக குறைத்திருப்பது பெரும் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு ஆதரவான அரசு என்பது வெளிப்பட்டுள்ளது. வரி ஏய்ப்பு செய்தால் 10 ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப்படும் என்று நிதியமைச்சர் அறிவித்திருக்கிறார். நமது நாட்டு மக்கள் தொகையில் மிகமிக குறைவானவர்களே வருமான வரி செலுத்தி வருகிறார்கள். இதற்கு காரணம் போதிய கல்வி அறிவு இல்லாத நிலையில் வருமான வரி கட்ட வேண்டும் என்கிற விழிப்புணர்வு ஏற்படவில்லை. இந்நிலையில் கடுமையான நடவடிக்கை பயன் தருமா என்பது மிகப்பெரிய கேள்விக்குறியாகும்.
-

நிதியமைச்சர் எல்லாவற்றிற்கும் அரசு - தனியார் துறை இணைந்த முயற்சிகளையும், அந்நிய முதலீட்டையும் தான் தொழில் வளர்ச்சிக்கு நம்பியிருக்கிறாரே தவிர, நமது சொந்தக் காலில் நிற்க வேண்டும் என்கிற எண்ணம் இருப்பதாகத் தெரியவில்லை. இதனால் வேலை வாய்ப்பை பெருக்குவதற்கான எந்த திட்டமும் அரசிடம் இல்லை என்பதையே காட்டுகிறது. சேவை வரியை 12.34 சதவீதத்திலிருந்து 14 சதவீதமாக அதிகரித்திருப்பது சாதாரண, நடுத்தர மக்களை மிகவும் பாதிக்கிற நடவடிக்கையாகும்.

கடந்த ஜூலை மாதத்தில் சமர்ப்பிக்கப்பட்ட இடைக்கால நிதிநிலை அறிக்கையில் தமிழ்நாட்டிற்காக பல அறிவிப்புகள் செய்யப்பட்டிருந்தன. அதில் குறிப்பாக டில்லி எய்ம்ஸ் மருத்துவமனைக்கு இணையாக தமிழகத்தில் மருத்துவ நிலையம் தொடங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இதுவரை அதற்கான எந்த நடவடிக்கையும் எடுக்காத நிலையில் மீண்டும் அதே அறிவிப்பை மறுபடியும் செய்திருப்பது கண்துடைப்பு நடவடிக்கையாகும். அதேபோல சென்னை கே.கே. நகரில் ரூ.180 கோடியில் 200 படுக்கைகளுடன் முதியோர் மருத்துவ நிறுவனம் தொடங்கப்படும் என்று கடந்த முறை அறிவித்திருந்தார். அதற்கான நடவடிக்கைகள் குறித்து இந்த நிதிநிலை அறிக்கையில் கூறப்படாதது மிகுந்த ஏமாற்றத்தை தருகிறது என்று கூறியுள்ளார்.
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82623
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

2015-16 பொது பட்ஜெட் தாக்கல்:- பட்ஜெட் குறித்த கருத்துகள் Empty Re: 2015-16 பொது பட்ஜெட் தாக்கல்:- பட்ஜெட் குறித்த கருத்துகள்

Post by ayyasamy ram Sat Feb 28, 2015 8:46 pm

மத்திய பட்ஜெட்: எதிர்பார்ப்புகளில் ஏமாற்றம் ஏற்பட்டிருக்கிறது: ஜெயலலிதா
-


பலவகையான அறிவிப்புகள் மத்திய பட்ஜெட்டில் இடம் பெற்றிருந்தாலும், எதிர்பார்ப்புகளில் ஏமாற்றம் ஏற்பட்டிருப்பதாக அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா கருத்துத் தெரிவித்துள்ளார். மேலும் அவர் கூறியபோது, தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க வேண்டும் என்ற தமது வேண்டுகோளை ஏற்றும், இதற்காக 3 இடங்களில் நிலம் ஒதுக்க தயாராக இருப்பதாக கடந்த ஆண்டு ஜூலை மாதம் கடிதமும் எழுதியிருந்தேன். அதே நேரத்தில் உலக பாரம்பரிய கலாச்சார சின்னத்திற்கான உதவியை பெறுவதற்கு தமிழகத்தில் எந்தவொரு பாரம்பரிய கலாச்சார சின்னமும் தேர்வு செய்யப்படாதது ஏமாற்றத்தை அளிக்கிறது.

குஜராத் மற்றும் மஹாராஷ்டிரா மாநிலங்களில் தொழில்துறை வளர்ச்சிக்கு பெருமளவு நிதி ஒதுக்கப்பட்டுள்ள நிலையில், மற்ற மாநிலங்கள் புறக்கணிக்கப்பட்டுள்ளன. மதுரை-தூத்துக்குடி, சென்னை-பெங்களூரு போன்ற வணிக வழித்தட தொழில் முனையங்களுக்கு உரிய நிதி ஒதுக்க வேண்டும். மொத்தத்தில் பலவகையான அறிவிப்புகள் மத்திய பட்ஜெட்டில் இடம் பெற்றிருந்தாலும், எதிர்பார்ப்புகளில் ஏமாற்றம் ஏற்பட்டிருக்கிறது என்று ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82623
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

2015-16 பொது பட்ஜெட் தாக்கல்:- பட்ஜெட் குறித்த கருத்துகள் Empty Re: 2015-16 பொது பட்ஜெட் தாக்கல்:- பட்ஜெட் குறித்த கருத்துகள்

Post by ayyasamy ram Sat Feb 28, 2015 8:47 pm

உண்மை நிலைக்கு ஏற்றவாறு பட்ஜெட்டில் அறிவிப்பு இல்லை: ஜி.கே. வாசன்
-


மத்திய அரசின் பொது பட்ஜெட் உண்மை நிலைக்கு ஏற்றவாறான அறிவிப்பு இல்லையென குற்றஞ்சாட்டினார் தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே. வாசன்.திருவாரூரில் சனிக்கிழமை செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:

இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பு, ஏழை, எளிய மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தும் வகையிலான திட்டங்கள் பட்ஜெட்டில் இல்லை. மக்கள் பயன்பெறும் மிகப் பெரிய திட்டமான 100 நாள் வேலைத் திட்டத்துக்கு சொற்ப அளவில் தொகை ஒதுக்கியுள்ளது. கோடிக்கண க்கான மக்கள் பயன்பெறும் இத்திட்டத்தை முழுமைப்படுத்த வேண்டும்.

தென்மாவட்ட மக்கள் மட்டுமின்றி தமிழகத்தின் கனவுத் திட்டமான சேது சமுத்திரத் திட்டத்தை மத்திய மாநில அரசுகள் ஒருங்கிணைந்து செயல்படுத்த வேண்டும். காவிரியில் அணை கட்டும் விவகாரத்தில் கர்நாடகத்தின் பிடிவாத போக்கு ஜனநாயகத்துக்கு எதிரானது. இப்பிரச்னையில் மத்திய மாநில அரசுகள் உடனடியாக தலையிட்டு அதிகாரப்பூர்வமாக தடுத்து நிறுத்த வேண்டும். இலங்கை - தமிழக மீனவர்கள் பேச்சுவார்த்தை உடனடியாக தொடங்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

மாநில அரசின் வளர்ச்சிக்கு ஏற்ப நிதி ஒதுக்காதது கவலையளிக்கிறது. பெட்ரோல், டீசல் விலை உயர்வு ஏழை, எளிய மக்களின் வாழ்வாதாரத்தை பாதிக்கும் என்பதுடன் விலைவாசி உயர்வுக்கு வழிவகுக்கும் என்பதால் விலை உயர்வை உடனடியாக திரும்பப் பெறவேண்டுமென்றார் வாசன்.

பேட்டியின் போது, கட்சியின் மாவட்டத் தலைவர் குடவாசல் தினகரன், முன்னாள் பேரவை உறுப்பினர் எம். ராம்குமார் மற்றும் நிர்வாகிகள் செந்தில்பாண்டியன், சங்கர், செல்லதுரை ஆகியோர் உடனிருந்தனர்.
-
--தினமணி
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82623
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

2015-16 பொது பட்ஜெட் தாக்கல்:- பட்ஜெட் குறித்த கருத்துகள் Empty Re: 2015-16 பொது பட்ஜெட் தாக்கல்:- பட்ஜெட் குறித்த கருத்துகள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum