புதிய பதிவுகள்
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Today at 9:08 am

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Today at 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Today at 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Today at 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Today at 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Today at 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Today at 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Today at 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:49 pm

» கருத்துப்படம் 25/09/2024
by mohamed nizamudeen Yesterday at 8:56 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Yesterday at 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:00 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 12:49 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Yesterday at 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Yesterday at 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Yesterday at 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm

» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:31 pm

» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:29 pm

» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:28 pm

» அமுதமானவள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:44 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 2:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Sep 24, 2024 1:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 12:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 12:39 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 24, 2024 12:34 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 11:26 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm

» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:05 pm

» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:02 pm

» சமையல்...சமையல்
by ayyasamy ram Mon Sep 23, 2024 6:53 pm

» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:51 pm

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:42 pm

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:35 pm

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:12 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
செம்மொழி: சில செய்திகள்! Poll_c10செம்மொழி: சில செய்திகள்! Poll_m10செம்மொழி: சில செய்திகள்! Poll_c10 
52 Posts - 61%
heezulia
செம்மொழி: சில செய்திகள்! Poll_c10செம்மொழி: சில செய்திகள்! Poll_m10செம்மொழி: சில செய்திகள்! Poll_c10 
24 Posts - 28%
வேல்முருகன் காசி
செம்மொழி: சில செய்திகள்! Poll_c10செம்மொழி: சில செய்திகள்! Poll_m10செம்மொழி: சில செய்திகள்! Poll_c10 
4 Posts - 5%
mohamed nizamudeen
செம்மொழி: சில செய்திகள்! Poll_c10செம்மொழி: சில செய்திகள்! Poll_m10செம்மொழி: சில செய்திகள்! Poll_c10 
3 Posts - 4%
sureshyeskay
செம்மொழி: சில செய்திகள்! Poll_c10செம்மொழி: சில செய்திகள்! Poll_m10செம்மொழி: சில செய்திகள்! Poll_c10 
1 Post - 1%
viyasan
செம்மொழி: சில செய்திகள்! Poll_c10செம்மொழி: சில செய்திகள்! Poll_m10செம்மொழி: சில செய்திகள்! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
செம்மொழி: சில செய்திகள்! Poll_c10செம்மொழி: சில செய்திகள்! Poll_m10செம்மொழி: சில செய்திகள்! Poll_c10 
244 Posts - 43%
heezulia
செம்மொழி: சில செய்திகள்! Poll_c10செம்மொழி: சில செய்திகள்! Poll_m10செம்மொழி: சில செய்திகள்! Poll_c10 
221 Posts - 39%
mohamed nizamudeen
செம்மொழி: சில செய்திகள்! Poll_c10செம்மொழி: சில செய்திகள்! Poll_m10செம்மொழி: சில செய்திகள்! Poll_c10 
28 Posts - 5%
Dr.S.Soundarapandian
செம்மொழி: சில செய்திகள்! Poll_c10செம்மொழி: சில செய்திகள்! Poll_m10செம்மொழி: சில செய்திகள்! Poll_c10 
21 Posts - 4%
வேல்முருகன் காசி
செம்மொழி: சில செய்திகள்! Poll_c10செம்மொழி: சில செய்திகள்! Poll_m10செம்மொழி: சில செய்திகள்! Poll_c10 
13 Posts - 2%
prajai
செம்மொழி: சில செய்திகள்! Poll_c10செம்மொழி: சில செய்திகள்! Poll_m10செம்மொழி: சில செய்திகள்! Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
செம்மொழி: சில செய்திகள்! Poll_c10செம்மொழி: சில செய்திகள்! Poll_m10செம்மொழி: சில செய்திகள்! Poll_c10 
8 Posts - 1%
Guna.D
செம்மொழி: சில செய்திகள்! Poll_c10செம்மொழி: சில செய்திகள்! Poll_m10செம்மொழி: சில செய்திகள்! Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
செம்மொழி: சில செய்திகள்! Poll_c10செம்மொழி: சில செய்திகள்! Poll_m10செம்மொழி: சில செய்திகள்! Poll_c10 
7 Posts - 1%
mruthun
செம்மொழி: சில செய்திகள்! Poll_c10செம்மொழி: சில செய்திகள்! Poll_m10செம்மொழி: சில செய்திகள்! Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

செம்மொழி: சில செய்திகள்!


   
   
சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Tue Feb 24, 2015 10:00 pm

ஆங்கிலேயர்கள் ஆட்சிக் காலத்தில் இந்திய மொழிகள் பற்றிய ஆய்வு அதிகமாக நடைபெற்றது. 1786-ஆம் ஆண்டில் கிழக்கிந்திய கம்பெனி அமைத்த இந்திய உச்சநீதிமன்றத்தில் நீதிபதியாக இருந்த சர். வில்லியம் ஜோன்ஸ் ஆசிய கழகத்தைத் தோற்றுவித்து, "சம்ஸ்கிருதம் ஒரு செம்மையான மொழி. அது இந்தோ - ஐரோப்பிய மொழிகள் குடும்பத்தைச் சேர்ந்தது. கிரேக்க, லத்தீன் மொழிகளைவிட சிறந்த இலக்கண கட்டமைப்புக் கொண்டது' என்று கூறினார்.

அவர் கூற்று மொழியியல் துறையிலும், கலாசார ரீதியிலும் மிகுந்த கவனம் பெற்றது. பல ஐரோப்பியர்கள் சம்ஸ்கிருதம் படித்தார்கள். அது மேற்கையும் கிழக்கையும் இணைக்கும் மொழியாக இருந்தது. பல சம்ஸ்கிருதப் பனுவல்கள் ஐரோப்பிய மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டன.

இந்தியாவையும், இந்தியர்களையும் அறிந்து கொள்ள சம்ஸ்கிருதம் என்ற ஒரு மொழியே போதுமானது என்ற கருத்து நிலை பெற்று இருந்தது.

சென்னை புனித ஜார்ஜ் கோட்டையில் ஒரு அதிகாரியாக இருந்த பிரான்சிஸ் ஒயிட் எல்லீஸ் 1816-ஆம் ஆண்டில் அலெக்சாண்டர் டூங்கன் செம்பேல் எழுதிய தெலுங்கு இலக்கணம் என்ற நூலுக்கு எழுதியுள்ள முன்னுரையில் "தமிழ் திராவிட மொழிக் குடும்பத்தைச் சேர்ந்தது. அது தனி மொழி' என்றார். அவர் கருத்து மொழியியல் துறையில் கவனம் பெற்றது.

1856-ஆம் ஆண்டில் இராபர்ட் கால்டுவெல் லண்டனில் திராவிட மொழிகள் ஒப்பிலக்கணம் என்ற நூலை வெளியிட்டார். ஆங்கில மொழியில் வெளியான நூலில் "தமிழ்,

தெலுங்கு, கன்னடம், மலையாளம் எல்லாம் திராவிட மொழிக் குடும்பம் சார்ந்தவை. திராவிட மொழிகள் குடும்பத்தில் பன்னிரண்டு மொழிகள் உள்ளன. அவை இந்தியாவின் பல பகுதிகளிலும் பேசப்படுகின்றன' என்றார்.

அவருடைய ஆய்வு திராவிட மொழிக் குடும்பத்தைப் பற்றிச் சொல்வதுதான். ஆனால், தமிழ்ப் பற்றியே அதிகமாகச் சொல்லியிருந்தார். அது தமிழர்கள் தங்கள் மொழி மீது பெருமிதம் கொள்ளக் காரணமாகியது.

திருவனந்தபுரத்தில் வசித்த பேராசிரியர் பெ. சுந்தரம் பிள்ளை 1891-ஆம் ஆண்டில் எழுதிய மனோன்மணியம் என்னும் நாடகக் காப்பியத்தின் தொடக்கத்தில் தமிழ் மொழியைத் தாயாகவும், தெய்வமாகவும் உருவகப்படுத்தி "எத்திசையும் புகழ் மணக்க இருந்த பெரும் தமிழணங்கே' என்று பாடினார்.

தேசிய மறுமலர்ச்சி ஏற்பட்டிருந்த காலத்தில், தமிழர்கள் தங்கள் மொழி மீது ஈடுபாடும் அக்கறையும் கொள்ள அது காரணமாகியது.

1921-ஆம் ஆண்டில் அமெரிக்க மொழியியல் அறிஞர் எட்வெர்ட் ஸ்பர், உலகத்தின் பழைய மொழிகள் பற்றி ஆராய்ந்து, அவற்றின் இலக்கணம், இலக்கியம், பழைமை ஆகியவற்றின் அடிப்படையில் செம்மொழி என்ற கருத்தாக்கத்தை ஏற்படுத்தினார்.

அவருடைய செம்மொழி பட்டியலில் கிரேக்கம், லத்தீன், ஹீப்ரூ, பாரசீகம், சீனம், சம்ஸ்கிருதம் ஆகிய மொழிகள் இடம்பெற்றன.

இந்தியா சுதந்திரம் பெற்ற பின்னர் மொழி வழி மாநிலங்கள் அமைக்கப்பட்டன. அவை தாய்மொழி மீது பற்றுக் கொள்ளக் காரணமாக அமைந்தது. ஆனால், சம்ஸ்கிருதம் எந்த மாநிலத்து மொழியாகவும் இல்லை.

அது எந்த மாநிலத்தின் ஆட்சி மொழியாக இல்லாவிட்டாலும் சர்வதேசச் செம்மொழியாக இருந்தது. அதன் வளர்ச்சி, ஆய்வுக்கு நடுவண் அரசு ஏராளமாகச் செலவிட்டது.

மூவாயிரம் ஆண்டுகளுக்கு மேலாக பேச்சு மொழியாகவும், இலக்கண, இலக்கியங்கள் கொண்ட மொழியாகவும் இருக்கும் தமிழ் மொழி செம்மொழிதான். எனவே, இந்திய அரசு தமிழ் மொழியை செம்மொழி என்று அறிவிக்க வேண்டுமென்று பல வகையிலும் போராடினார்கள்.

2004-ஆம் ஆண்டில் இந்திய அரசு தமிழ் மொழியை செம்மொழி என்று அறிவித்தது. அதன் வளர்ச்சி, ஆய்வுக்காக C‌e‌n‌t‌e‌r ‌o‌f E‌x​c‌e‌l‌l‌e‌n​c‌e ‌f‌o‌r ‌s‌t‌u‌d‌i‌e‌s ‌i‌n C‌l​a‌s‌s‌i​c​a‌l Ta‌m‌i‌l​ மைசூரில் அமைக்கப்பட்டது. தமிழக அரசு, எங்கள் மொழிக்கான அமைப்பு எங்கள் மாநிலத்தில் இருக்க வேண்டும் என்று சென்னைக்குக் கொண்டு வந்தது.

தமிழக முதல்வராக பதவி வகித்தவர் அதன் தலைமையை ஏற்றுக் கொண்டார். அதன் பெயர், 'C‌e‌n‌t‌r​a‌l I‌n‌s‌t‌i‌t‌u‌t‌e ‌o‌f C‌l​a‌s‌s‌i​c​a‌l Ta‌m‌i‌l' என்று மாற்றப்பட்டு "செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம்' என்று மொழிபெயர்க்கப்பட்டது.

தொல்காப்பியம், எட்டுத்தொகை, பத்துப்பாட்டு நூற்கள், சிலப்பதிகாரம், மணிமேகலை, இறையனார் அகப்பொருள், முத்தொள்ளாயிரம், திருக்குறள் உள்பட பதினெண்கீழ்க்கணக்கு நூற்கள் என்று நாற்பத்தொரு பனுவல்களால் தமிழ் மொழி செம்மொழி ஆனது.

அதன் காலம் கி.மு. மூன்றாம் நூற்றாண்டு முதல் கி.பி. ஆறாம் நூற்றாண்டு வரை என்று சான்றோர்கள் முடிவு செய்தார்கள். இக்காலவரையறைக்குள் வரும் பக்திப் பனுவல்கள் பலவும் புறந்தள்ளப்பட்டுவிட்டன.

தமிழ் மொழியை செம்மொழி என்று அறிவித்த இந்திய அரசு, 2005-ஆம் ஆண்டில் சம்ஸ்கிருதம் செம்மொழி என்று அறிவித்தது. இந்தோ-ஐரோப்பிய குடும்பத்தில், சம்ஸ்கிருதத்தோடு உலகம் முழுவதிலும் எழுநூறு தாய் மொழிகளும் கிளை மொழிகளும் உள்ளன.

இந்தியாவின் பழைய மொழிகளான தமிழ், சம்ஸ்கிருதம் இரண்டும் செம்மொழி என்று அறிவிக்கப்பட்டதும் தெலுங்கு, கன்னட மொழியினர் எங்கள் மொழிகளுக்கும் செம்மொழி அங்கீகாரம் வழங்க வேண்டும் என்றார்கள். 2008-ஆம் ஆண்டில் தெலுங்கும் கன்னடமும் செம்மொழி ஆயின.

திராவிட மொழி குடும்பத்தில் எழுத்து கொண்ட கடைசி மொழியான மலையாளம் செம்மொழியாக்கப்பட வேண்டும் என்று கோரினர். அதனை ஏற்று 2013-ஆம் ஆண்டில் மலையாளம் செம்மொழி என்று அறிவிக்கப்பட்டது.

இந்திய மொழியியல் அறிஞர் டி.பி. பட்நாயக் ஒரிய மொழியைத் தாய்மொழியாகக் கொண்டவர். இந்திய மொழிகள் நிறுவனத்தின் முதல் இயக்குநர். அவர் ஒரிய மொழியை செம்மொழியாக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்தார்.

2014-ஆம் ஆண்டில் நாடாளுமன்றத்தில் ஒரிய மொழி செம்மொழி என்று அறிவிக்கப்பட்டது. அது அர்த்த மகாகியில் இருந்தும் பாலியில் இருந்தும் வளர்ந்த மொழியாகும்.

ஒரு மொழி செம்மொழி என்பது அரசின் அறிவிப்பு வழியாகப் பெற வேண்டியிருப்பதால் பல மொழியினரும் தங்கள் மொழியை செம்மொழி என்று அறிவிக்க வேண்டும். நிதி உதவி செய்ய வேண்டும், விருதுகள் வழங்க வேண்டும் என்று போராட ஆரம்பித்து இருக்கிறார்கள்.

இந்தியாவின் பழைய மொழிகளில் ஒன்று பாலி. அது பேச்சு வழக்கில் இல்லை. ஆனால், பகவான் புத்தரின் உபதேசங்கள் பாலி மொழியில்தான் உள்ளன. எனவே அது புனித மொழி. அதனைச் செம்மொழியாக்க வேண்டுமென்று பலர் கோரி வருகிறார்கள்.

பிகார், உத்தரப் பிரேதசம், மத்தியப் பிரதேசத்தில் வாழும் யாதவர்கள் பேச்சு மொழி போஜ்புரி. அது கிருஷ்ண பரமாத்மா பேசிய மொழி. ஆகையால், போஜ்புரி மொழியைச் செம்மொழியாக்குவது அரசின் கடமை என்கிறார்கள்.

பிராகிருத மொழிகள் தொகுப்பில் வளமான மொழி மராத்தி. எழுதப்படும், பேசப்படும் மராத்திக்குச் செம்மொழியாக்கப்பட எல்லா தகுதிகளும் உள்ளன. எனவே, மராத்தியை செம்மொழி என்று அறிவிப்பதில் தயக்கம் காட்டக்கூடாது என்கிறார்கள்.

செம்மொழி என்று அறிவிக்கப்பட்டுள்ள ஆறு மொழிகளில் சம்ஸ்கிருதம் தவிர்த்து மற்ற மொழிகள் பேச்சு வழக்கில் உள்ள மாநில மொழிகள். அவை பள்ளிகளில், கல்லூரிகளில் கற்பிக்கப்படுகின்றன.

ஆனால், செம்மொழி கோரிக்கையை முன்வைத்து போராடியவர்களில் பலரும் தங்கள் குழந்தைகளைச் செம்மொழிகளைப் படிக்க அனுப்புவதில்லை. ஏனெனில், உயர் கல்விக்கு - பெரிய வேலைகளுக்குச் செல்ல பயன்படாத மொழியென அவற்றைக் கருதுகிறார்கள்.

பொழுதுபோக்க, சினிமா பார்க்க, கேளிக்கைக்காகச் செம்மொழி படிக்க வேண்டுமா என்று கேட்கிறார்கள்.

செம்மொழி தகுதியைக் கேட்டு வாங்கியவர்களுக்கு, தங்கள் மொழியை செம்மொழி சொற்களால் எழுதக்கூட தெரியவில்லை. சம்ஸ்கிருதம் தவிர, மற்றெந்த செம்மொழிக்குமான அமைப்புக்கு செம்மொழியில் பெயரில்லை.

மூவாயிரம் ஆண்டுகளாகப் பேச்சு மொழியாகவும், எழுத்து மொழியாகவும் இருப்பதோடு பிற மொழிச் சொற்கள் இன்றித் தனித்தியங்கும் ஆற்றல் கொண்டது என்று சொல்லப்படும் தமிழ்ச் செம்மொழி அமைப்பின் பெயர், "செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம்'. ஆங்கிலம், இந்தியில் தமிழாய்வு இல்லை. மத்திய என்பது சம்ஸ்கிருதம். நிறுவனம் என்பது புது தமிழ்ச் சொல்.

தன் பெயரைக் கூட செம்மொழி சொற்களால் எழுதிக் கொள்ள முடியவில்லை என்பது அம்மொழியில் சொல் இல்லாததால் வந்ததில்லை. சொல் அறியாதவர்கள் கூடி அக்கறையின்மை, பொறுப்பின்மையால் செய்தது.

செம்மொழி கேட்டவர்கள் முதலில் தம் மொழி அமைப்பதற்கான பெயரைச் செம்மொழிச் சொற்களில் எழுதத் தெரிந்து கொள்ளுங்கள் என்பது செம்மொழித் தகுதியைப் பறிப்பதாகாது என்றே குறிப்பிட வேண்டும். (சா. கந்தசாமி - தினமணி நாளிதழ்)

M.Saranya
M.Saranya
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2190
இணைந்தது : 26/08/2014

PostM.Saranya Wed Feb 25, 2015 2:19 pm

செம்மொழி: சில செய்திகள்! 103459460 செம்மொழி: சில செய்திகள்! 103459460

செம்மொழி: சில செய்திகள்! 1571444738



கொடுப்பதற்கும் பெறுவதற்கும் உரிய விலை மதிப்பில்லாத பரிசு அன்பு .

செம்மொழி: சில செய்திகள்! W5td1pX3QFi1kBRhH0I3+Affection

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக