ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:54 pm

» கருத்துப்படம் 17/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:29 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Yesterday at 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Yesterday at 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Yesterday at 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Yesterday at 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Yesterday at 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Yesterday at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

அதிமுக ஆட்சியில் இருட்டு, திருட்டு, புரட்டு அனைத்தும் உண்டு!:கலைஞர் கடிதம்

3 posters

Go down

அதிமுக ஆட்சியில் இருட்டு, திருட்டு, புரட்டு அனைத்தும் உண்டு!:கலைஞர் கடிதம் Empty அதிமுக ஆட்சியில் இருட்டு, திருட்டு, புரட்டு அனைத்தும் உண்டு!:கலைஞர் கடிதம்

Post by சிவா Thu Feb 26, 2015 1:25 am

திமுக தலைவர் உடன்பிறப்புகளுக்கு கடிதம்:

’’தமிழக ஆளுநர் 17-2-2015 அன்று ஆற்றிய உரை மீதான விவாதத்திற்கு தமிழக முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் 23ஆம் தேதி பதிலளித்திருக்கிறார். ஆளுநர் உரை விவாதத்திற்கு, எதிர்க்கட்சி உறுப்பினர்கள் ஆற்றிய உரைக்குப் பதில் சொல்வதைவிட, முன்னாள் முதல் அமைச்சர், பெங்களூர் சிறப்பு நீதிமன்ற நீதிபதியால் நான்காண்டுகள் சிறைத் தண்டனையும், 100 கோடி ரூபாய்அபராதமும் விதிக்கப்பட்டு, பதவி இழந்த தன்னுடைய கட்சியின் பொதுச் செயலாளர் ஜெயலலிதாவுக்கு பேரவையில் பிறந்த நாள் வாழ்த்துக் கூறுவதைத்தான் பன்னீர்செல்வம் முக்கிய கடமையாகக் கருதியிருப்பார் போலும்!

பேரவையில் ஆற்றிய உரையில் “அம்மா அரியணை யில் மீண்டும் அமர்ந்திடுவார், இது உறுதி”என்று கூறிய போதிலும், அவர்களுடைய கட்சி நாளேட்டில், முதல் அமைச்சர் பன்னீர்செல்வம் கொடுத்துள்ள இரண்டு பக்க விளம்பரத்தில் “ஆற்றலை ஆயுத மாக்கி அரசாட்சி நடத்தி வரும் அம்மா அவர்களே, தங்களின் 67வது பிறந்த நாள் தமிழகத்தின் திருநாள், பல்லாண்டு, புகழுடன் வாழ இறைவனைப் பிரார்த்திக்கிறேன்” என்றுதான் உள்ளதே தவிர, அதிலே “மீண்டும் அரியணையில் அமர்ந்திடுவார்” என்பதைக் குறிப்பிடாமல் விட்டிருப்பதில் இருந்தே அவரது ஆழ்ந்த உள்ளக்கிடக்கை தெளிவாகத் தெரிகிறது. ஆனால் கவனமாக அந்த விளம்பரத்தைக் கூட கட்சியின் பொருளாளர் என்ற முறையில் தான் தந்திருக்கிறாரே தவிர, “முதலமைச்சர்” என்று அந்த விளம்பரத்தில் குறிப்பிட்டுக் கொள்ளவில்லை. ஒருவேளை, அவரு டைய விளம்பரத்திலே கூறியிருப்பதைப் போல “அரசாட்சி நடத்தி வருவதாகத்” தெரிவித்திருப்பதால், தன்னை முதலமைச்சர் என்று போடக் கூடாது என்று நினைத்திருப்பாரோ என்னவோ?

குற்றம் புரிந்தவர் என்று நீதிமன்றத்தினால் தண்டிக்கப்பட்ட ஒருவருக்கு சட்டப்பேரவையில் பிறந்த நாள் வாழ்த்துக் கூறலாமா? ஆனால் இந்த ஆட்சியில் மரபுகளையெல்லாம் எடுத்தெறிந்து விட்டு எதை வேண்டுமானாலும் செய்வார்கள்! எதிர்க்கட்சித் தலைவரை “குடிமகன்” என்று பேரவையில் விமர்சனம் செய்வார்கள்; அதை எதிர்த்துக் கருத்துக் கூற அந்தக் கட்சியின் சார்பில் எழுந்தால் ஜனநாயக ரீதியாக அனுமதி அளிக்காமல், அவையிலிருந்தே வெளியேற்று வார்கள்; காவலர்களை விட்டே வெளியேற்றுவார்கள்; பின்னர் அந்தக் காவலர்களில் ஒருவரை மருத்துவமனையிலே அனுமதிக்கச் செய்து, அவரிடமே புகார் மனு எழுதி, எதிர்க் கட்சியைச் சேர்ந்த சட்டப்பேரவை உறுப்பினர்களைக் கைது செய்ய முற்படுவார்கள்! இவையனைத்தும் சரியான நடைமுறைகளா என்பதைப் பத்திரிகையாளர்கள்தான் நாட்டு மக்களுக்கு எடுத்துக் கூற வேண்டும். நடந்ததாகச் சொல்லப்படும் ஒரு செயலுக்கு, உரிமைக் குழு நடவடிக்கை, காவல் துறை நடவடிக்கை எனப் பல முனை நடவடிக்கை இயற்கை நீதிக்கு ஏற்றதுதானா என்பது ஆழ்ந்து பரிசீலிக்க வேண்டிய அம்சமாகும்.

ஆளுநர் உரை பற்றி நான் கருத்து கூறும்போது, “ஆளுநர் உரை கடந்த ஆண்டில் இந்த ஆட்சியினர் என்னென்ன செய்தார்கள் என்பது பற்றிய விளம்பர உரையாக இருக்கிறதே தவிர, அடுத்த ஆண்டுக்கான ஆக்கப்பூர்வமான திட்டங்கள் எதுவும் அறிவிக்கப்பட வில்லை” என்று தெரிவித்திருந்தேன். என்னுடைய இந்தக் கருத்திற்கு மேலும் வலு சேர்க்கும் வகையில், முதல் அமைச்சரின் பதிலுரையும், கடந்த காலத்தில் இந்த ஆட்சியினர் என்னென்ன செய்தார்கள் என்பது பற்றியே இருக்கிறதே தவிர, இந்த ஆண்டு என்ன செய்யப் போகிறார்கள் என்று கூறப்படவில்லை.

நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்து, அதன் பொது விவாதத்திற்குப் பதில் அளிப்பது போலத்தான் முதலமைச்சரின் உரை அமைந்துள்ளது. நிதியமைச்சராக இருந்தவர் அல்லவா, அவருக்கு இன்னமும் முதல்வராகப் பொறுப்பேற்ற நினைவே வரவில்லைபோலும்! கேட்டால், “நாங்கள் ஏதாவது செய்வதாக இருந்தால்தானே, இந்த ஆண்டு ஆளுநர் உரையிலே அதனைக் குறிப்பிட முடியும். எங்களிடம் நிதி ஆதாரம் வற்றிப் போய் விட்டதால் திட்டம் எதுவும் இல்லாத போது நாங்கள் எப்படி அதைப் பற்றியெல்லாம் சொல்ல முடியும்? திட்டம் தீட்டுவதாக இருந்தால், கடந்த ஆண்டு இறுதியில் ஆண்டுதோறும் கூட்டுகின்ற மாவட்ட ஆட்சித் தலைவர்களின் கூட்டத்தைக் கூட்டி விவாதித் திருக்க மாட்டோமா? நானாக ஏதாவது திட்டங்களை அறிவித்து விட்டால், பிறகு இந்தப் பதவியில் நீடித்திருக்க வேண் டாமா?” என்றெல்லாம் விளக்கம்
அளிக்கக்கூடும்!

தண்டனை பெற்ற ஒருவருக்கு ஆளுநர் உரையிலே பாராட்டு தெரிவிக்கலாமா என்று கேட்டிருந்தேன். அதுவும் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா என்று கூட ஆளுநர் உரையிலே குறிப்பிடப்படவில்லை. சாதாரணமாக “செல்வி ஜெ. ஜெயலலிதா” என்றுதான் இருக்கிறது. அதைப் பற்றியெல்லாம் பன்னீர்செல்வம் தனது பதிலுரையில் கூறுவார் என்று எதிர்பார்த்தோம். ஆனால் அதைப் பற்றி முதல்வர் பன்னீர்செல்வம் வாயே திறக்கவில்லை!

செம்மொழி பற்றியும், தமிழ் மொழிக்கு உரிய முக்கியத்துவம் தராதது பற்றியும், அரசுப் பள்ளிகளில் ஆங்கில வழிக் கல்வியைப் புகுத்தியதைப் பற்றியும் தெரிவித்திருந்தேன். முதல் அமைச்சரின் பதிலிலே அது பற்றி எதுவும் இல்லை. “மத்திய அரசு திட்டக் குழுவை மாற்றியிருப்பது பற்றி ஆளுநர் உரையில் வரவேற்றிருக் கிறீர்களே, அப்படியானால் மாநிலத்தில் திட்டக் குழுவின் கதி என்ன” என்று கேட்டிருந்தேன். பேரவையில் முதலமைச்சர் அளித்த பதிலில் இதைப் பற்றி எதுவுமே கூறவில்லை. “அ.தி.மு.க. ஆட்சியினால் அறிவிக்கப்பட்ட விலையில்லா மிக்சி, கிரைண்டர், மின் விசிறி போன்றவை இன்னும் 90 லட்சம் பேர்களுக்கு இந்த ஆண்டு வழங்கப்படவில்லை என்றும், வழங்கப்பட்ட ஆடு, மாடுகளும் சந்தைகளிலே விற்கப்படுகிறது என்றும் வந்த செய்திகளுக்கு என்ன விளக்கம்” என்று கேட்டிருந்தேன். அதற்கு “நான் என்ன செய்வேன்?” என்பதைப் போல முதலமைச்சர் பதில் கூறவே இல்லை.

நெடுஞ்சாலைத் திட்டப் பணிகளையெல்லாம் தனியாரிடம் தாரை வார்ப்பதற்கு என்ன விளக்கம் சொல்லப் போகிறீர்கள் என்று கேட்டிருந்தேன். கடந்த ஆண்டு அக்டோபர்த் திங்களில் உலக அளவில் முதலீட்டாளர்களை ஈர்க்கும் மாநாடு நடத்தப்போவதாக கடந்த ஆண்டு அறிவித்திருந்தீர்களே, இப்போது அந்த மாநாடே நடைபெறாமல், வரும் மே மாதத்தில்தான் அந்த மாநாட்டினைக் கூட்டப் போவதாகத் தெரிவிக்க என்ன காரணம் என்று வினவியிருந்தேன். இதற்கெல்லாம் முதல்வர் பன்னீர்செல்வம் “நீ யார் கேட்க, நான் யார் பதில் சொல்ல; நான் அம்மாவின் முதன்மைச் சீடன்” என்ற ரீதியில் இருந்திருக்கிறார்.

தி.மு. கழகத்தின் சார்பில் பேரவையில் ஆளுநர் உரை மீது உரையாற்றிய தம்பி ஐ. பெரியசாமியும், தம்பி எஸ்.எஸ். சிவசங்கரும், மற்ற எதிர்க்கட்சிகளின் சார்பில் உரையாற்றியவர்களும் அடுக்கடுக்கான பிரச்சினை களை எழுப்பி, அவற்றிற்கெல்லாம் பதில் எங்கே என்று கேட்டார்களே, எதற்காவது பன்னீர்செல்வம் பதில் சொன்னாரா என்றால் கிடையாது.

ஏற்கனவே மின் திட்டங்கள் பற்றிப் பேரவையிலே அவர் படித்த அறிக்கை யையே மீண்டும் ஒரு முறை படித்திருக்கிறார். எண்ணூர் மாற்று அனல் மின் திட்டம் மற்றும் உப்பூர் அனல் மின் திட்டம் ஆகியவை என்னவாயிற்று என்று கேட்டிருந் தேன். அதற்கு அந்தத் திட்டங்களின் மூலம் மின்சாரம் கிடைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப் பட்டுள்ளது என்று முதல் அமைச்சர் பேரவையிலே பதில் கூறியிருக்கிறார். வடசென்னை அனல் மின் திட்டம், மூன்றாம் நிலை, உடன்குடி அனல் மின் திட்ட விரிவாக்கம், தூத்துக்குடி அனல் மின் திட்டத்திற்கான மாற்றுத் திட்டம் இவைகள் எல்லாம் என்ன ஆயிற்று என்றால், இந்த மின்சாரத் திட்டங்களுக்கான சுற்றுச் சூழல் அனுமதி பெற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று பதிலளித்திருக்கிறார் பன்னீர்செல்வம்!

செய்யூர் அனல் மின் நிலையம் எங்கே என்றால், இதற்கான நிலம் கையகப்படுத்தும் பணிகள் அரசால் முடிக்கப்பட்டுள்ளன என்பதுதான் முதல் அமைச்சரின் பதில். 25-4-2013 அன்று ஜெயலலிதா சட்டப்பேரவை யில் 110வது விதியின் கீழ் படித்த அறிக்கையில், நீலகிரி மாவட்டத்தில் 2000 மெகாவாட் மின் திறன் கொண்ட சில்லஹல்லா நீரேற்று புனல் மின் திட்டம் 7,000 கோடி ரூபாய் மதிப்பீட்டிலும், மின் நிலையங்கள் மற்றும் மின் தொடர் பாதைகள் அமைக்கும் திட்டம் 8,000 கோடி ரூபாய் மதிப்பீட்டிலும், 20 ஆயிரம் புதிய மின் மாற்றிகள் அமைக்கும் திட்டம் 500 கோடி ரூபாய் மதிப்பீட்டிலும், 15 ஆயிரம் கிலோ மீட்டர் நீளத்திற்கு மின் வழித்தடங்கள் அமைக்கும் திட்டம் 850 கோடி ரூபாய் மதிப்பீட்டிலும் ஆக மொத்தம் 16,350 கோடி ரூபாய் மதிப்பீட்டில் திட்டங்கள் செயல்படுத்தப்படும் என்றும், இந்த நடவடிக்கைகள் மூலம் தமிழகம் விரைவில் மின் மிகை மாநிலமாக மாறும் என்பதோடு, மின் நுகர்வோருக்கு தடையற்ற சீரான மின்சாரம் வழங்குவது உறுதி செய்யப்படும் என்றும் அறிவித்தாரே, என்ன ஆயிற்று இந்த அறிவிப்புகள்? - என்று நான் கேட்டிருந்தேன். அதற்கு பேரவையில் நேற்று முதலமைச்சர் அளித்த பதில் என்ன தெரியுமா?

“2000 மெகாவாட் திறனுள்ள மின் திட்டத்திற்கான ஆய்வுப் பணி முனைப்புடன் நடைபெற்று வருகின்றன” என்பதுதான்! “விரைவில்” என்ற சொல்லுக்கு இந்த ஆட்சியில் என்ன பொருளோ? ஒரு வாரமா? ஒரு மாதமா? ஓராண்டா? - ஒன்றும் புரியவில்லை; அல்லது “எப்போதும் இல்லை; நடக்கவே நடக்காது” என்பதுதான் பொருளா?

மேலும் முதலமைச்சர் பன்னீர்செல்வம், தனது பதிலுரையில் “மொத்தம் 22 ஆயிரத்து 440 மெகாவாட் மின்சாரம் கிடைக்க இந்த அரசால் வழி வகை செய்யப்பட்டுள்ளது” என்று சொல்லியிருக்கிறார். இந்த அளவுக்கு மின்சாரம் கிடைக்க இந்த அரசு வழி வகை செய்திருக்கிறது என்பது உண்மையானால்; நீண்ட கால ஒப்பந்தங்களின் அடிப்படையில் 3 ஆயிரத்து 330 மெகாவாட் மின்சாரமும், நடுத்தரக் காலக் கொள்முதல் மூலம் 500 மெகாவாட் மின்சாரமும் வாங்குவதற்குத் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் ஒப்பந்தம் செய்திருப்பது ஏன்? விளக்கம் அளிக்க வேண்டிய கடமை அரசுக்கு இருக்கிறதா, இல்லையா?

அடுத்து, முதலமைச்சர் தனது பதில் உரையில் 2011-12இல் 101.52 லட்சம் மெட்ரிக் டன் உணவு ம்தானிய உற்பத்தி செய்யப்பட்டதாகவும், 2013-2014இல் 110.02 லட்சம் மெட்ரிக் டன் உணவு தானிய உற்பத்தி செய்யப்பட்டதாகவும் தெரிவித்திருக்கிறார்.

இடையில் 2012-2013இல் உணவு தானிய உற்பத்தியில் தொய்வு ஏற்பட என்ன காரணம்? அப்போதும் அ.தி.மு.க. ஆட்சிதானே? தொடர்ந்து மூன்று ஆண்டுகள், டெல்டா மாவட்டங்களில் குறுவைச் சாகுபடி பொய்த்துப் போய் விட்ட நிலையில், கொடுத்திருக்கும் உற்பத்தி குறித்த புள்ளி விபரம் உண்மையானதுதானா என்று விவசாயிகளே சந்தேகிக்கிறார்கள்!

2012-13இல் வறட்சி நிவாரணமாக 20 லட்சத்து 89 ஆயிரத்து 554 விவசாயிகளுக்கு 1,328.50 கோடி ரூபாய் வழங்கப்பட்டது என்று பெருமைப்பட்டுக் கொண் டிருக்கிறார் முதலமைச்சர்! பாதிக்கப்பட்ட விவசாயிகள் அனைவருக்கும் நிவாரணம் முழுமையாக முறையாக வழங்கப்பட்டு விட்டதா? தி.மு. கழகம் ஆட்சிக்கு வருவதற்கு முன்பே விவசாயிகள் வாங்கிய சுமார் 7,000 கோடி ரூபாய் கூட்டுறவு விவசாயக் கடன்கள் தள்ளுபடி செய்யப்படும் என்று அறிவித்து, அவ்வாறே செய்யப்பட்டதின் காரணமாக 22 இலட்சத்து 40 ஆயிரத்து 739 விவசாயக் குடும்பங்கள், அதிலே பெரும்பாலும் அ.தி.மு.க.வைச் சேர்ந்தவர்களும் பயன் பெற்றார்கள் என்பதையும் பன்னீர்செல்வம் மறந்து விட்டாரா?

பால் கொள்முதல் விலையை லிட்டர் ஒன்றுக்கு 28 ரூபாயாக உயர்த்தியதை தனது பதிலுரையில் முதல மைச்சர் சுட்டிக்காட்டியிருக்கிறார். கொள்முதல் விலையைக் குறிப்பிட்ட முதலமைச்சர் பால் விற்பனை விலையைச் சுட்டிக்காட்டியிருக்க வேண்டாமா? ஆட்சிக்கு வந்தவுடன் 2011ஆம் ஆண்டிலேயே, கழக ஆட்சியில் பாலின் விலை லிட்டர் ஒன்றுக்கு 17 ரூபாய் 75 பைசா என்றிருந்த நிலையினை மாற்றி, 24 ரூபாயாக, அதாவது லிட்டர் ஒன்றுக்கு 6 ரூபாய் 25 பைசா அளவுக்கு உயர்த்தினார்கள்.

2014ஆம் ஆண்டு அக்டோபரில் 24 ரூபாய் என்பதிலேயிருந்து மேலும் லிட்டருக்கு 10 ரூபாய் உயர்த்தி, 34 ரூபாய் என்று ஆக்கினார்கள். பால் விற்பனை விலையை இரண்டு மடங்காக உயர்த்திய அந்தச் சாதனையை பன்னீர் செல்வம் பேரவையில் மறைக்கலாமா? ஆவின் பால் நிறுவனத்தில் நடைபெற்ற ஊழல் பற்றி முதல் அமைச்சர் வாயே திறக்கவில்லையே? அமைச்சர் ஒருவரையே வீட்டிற்கு அனுப்பினார்களே? ஆளுங்கட்சியைச் சேர்ந்த உறுப்பினர் ஒருவரே கைது செய்யப்பட்டாரே? மடியில் கனமில்லை என்றால், அந்த விவரங்களையும் பேரவையில் நேர்மையுடன் தெரிவித்திருக்க வேண்டாமா?

கால்நடைத் துறை பற்றிப் பதிலளித்த பன்னீர் செல்வம், அ.தி.மு.க. ஆட்சியில் 585 கால்நடை கிளை நிலையங்கள் ஊரகக் கால்நடை மருந்தகங்களாகவும், 20 கால்நடை மருந்தகங்கள் புதியதாக ஏற்படுத்தப் பட்டதாகவும் பேரவையில் பேசியிருக்கிறார். தி.மு.கழக ஆட்சியில் 2007- 2008இல் 888 கால்நடை கிளை நிலையங்கள் தரம் உயர்த்தப்பட்ட கால்நடை நிலையங் களாக ஆக்கப்பட்டன. மேலும் 51 புதிய கால் நடை மருந்தகங்கள், 30 கால்நடை கிளை நிலையங்கள்மற்றும் 55 பார்வை கிளை நிலையங்கள் 218.24 லட்சம் ரூபாய் செலவில் துவக்கப்பட்டன என்பதையும்; ஆசியாவிலேயே முதல் கால்நடைப் பல்கலைக் கழகம் கழக ஆட்சியிலேதான் உருவாக்கப்பட்டதென் பதையும் முதல் அமைச்சருக்கு நினைவூட்டுகிறேன்.

மீனவர்களின் நலன் பேணும் வகையில் கடல் மீனவ குடும்பங்களுக்கு மீன்பிடித் தடைக்காலத்தில் வழங்கப்பட்டு வந்த 1000 ரூபாய் உதவித் தொகையை 2000 ரூபாயாக அ.தி.மு.க. ஆட்சியில் உயர்த்தப்பட்ட தாக முதலமைச்சர் பன்னீர்செல்வம் கூறியிருக்கிறார். இந்த உதவித் தொகையை வழங்கும் திட்டத்தின் கீழ் ஏற்கனவே 500 ரூபாய் என்றிருந்ததை 800 ரூபாயாக வும்,அதன் பிறகு 1000 ரூபாயாகவும், இரட்டிப்பாக்கி உத்தரவு பிறப்பித்தது தி.மு.கழக ஆட்சிதான். அதன் பிறகுதான் இவர்கள் ஆட்சியில் அதனை இரண்டு மடங்காக உயர்த்தியிருக்கிறார்கள்.

இன்னும் சொல்லப்போனால், மத்திய - மாநில அரசுகளின் நிதி உதவியுடன் கூடிய தேசிய மீனவர் சேமிப்பு மற்றும் நிவாரணத் திட்டத்தின் கீழ் ஆண்டிற்கு 1,80,000 மீனவர்களுக்கு மே 2006 முதல் 5 ஜனவரி 2011 வரை 88 கோடியே 57 லட்சத்து 1029 ரூபாய் நிவாரணமாக கழக ஆட்சியில் வழங்கப்பட்டது. இது தவிர வேறு பல நிவாரணத் திட்டங்களும் மீனவர் நலனுக்காக கழக ஆட்சியில் நடைமுறைப்படுத்தப்பட்டன.

தமிழக இலங்கை மீனவர்களிடையே 5-3-2015 அன்று சென்னையில் பேச்சுவார்த்தை நடத்திட மத்திய அரசு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது என்று பன்னீர்செல்வம் தனது உரையிலே கூறியிருக்கிறார். ஆனால் அந்தப் பேச்சுவார்த்தை 5ஆம் தேதி கிடையாதென்றும், அது ஒத்திவைக்கப்பட்டு விட்டது என்பதையும் அவருக்கு நான் நினைவூட்டுகிறேன்.

பள்ளிக் கல்வித் துறையில் அ.தி.மு.க. ஆட்சியில் தரம் உயர்த்தப்பட்ட பள்ளிகள் எத்தனை என்ற புள்ளி விவரத்தை பேரவையில் முதலமைச்சர் படித்திருக் கிறார். அதில், “182 தொடக்கப்பள்ளிகள் புதியதாகத் தொடங்கப்பட்டுள்ளன. 107 தொடக்கப்பள்ளிகள் நடுநிலைப் பள்ளிகளாகவும், 810 நடுநிலைப் பள்ளிகள் உயர்நிலைப் பள்ளிகளாகவும், 400 உயர்நிலைப் பள்ளிகள் மேல்நிலைப் பள்ளிகளாகவும் தரம் உயர்த்தப்பட்டுள்ளன” என்று சுட்டிக்காட்டியிருக்கிறார்.

தி.மு.கழக ஆட்சிக்காலத்தில் 2006 முதல் 2010-2011 வரையில், 569 புதிய தொடக்கப் பள்ளிகள் தொடங்கப்பட்டதுடன், 2,626 தொடக்கப் பள்ளிகள், நடுநிலைப் பள்ளிகளாகவும், 645 நடுநிலைப் பள்ளிகள் உயர் நிலைப் பள்ளி களாகவும், 570 உயர்நிலைப் பள்ளிகள் மேல்நிலைப் பள்ளிகளாகவும் தரம் உயர்த்தப்பட்டன என்பதை நினைவூட்டுவதோடு, முதலமைச்சர் பன்னீர்செல்வம் பேரவையில் படித்த இந்த விவரங்கள் அனைத்தும், பொதுவாக மானியக் கோரிக்கைகளின் போது, அந்தந்த துறை அமைச்சர்கள் தங்கள் பதிலுரை யிலும், கொள்கை விளக்கக் குறிப்பிலும் சுட்டிக்காட்டு கின்ற புள்ளி விவரங்களாகும் என்பதையும் குறிப்பிட விரும்புகிறேன். எனவே பன்னீர்செல்வம் அமைச்சர் என்ற நிலையிலிருந்து விடுபட்டு முதல் அமைச்சராகப் பதில் சொல்ல இனியாவது முயற்சிக்க வேண்டும்.

சட்டம், ஒழுங்கு பற்றியும் முதலமைச்சர் ஏதோ பதில் சொல்ல முயற்சி செய்திருக்கிறார். அதற்கு நான் பதில் கூற வேண்டியதில்லை. தினந்தோறும் தமிழகத்தில் நடைபெறும் கொலைகளும், கொள்ளைகளும், வழிப்பறிகளும், செயின் திருட்டுகளும், மோசடிகளும் பற்றிய விபரங்கள் நாளேடுகள் மூலம் வெளியாகி அவற்றைத் தமிழ்நாட்டு மக்கள் முறையாகப் படித்து தெரிந்திருக்கிறார்கள். ஆனால் இவற்றையெல்லாம் வசதியாக மறைத்துவிட்டு தபன்னீர்செல்வம், “கடந்த கால மைனாரிட்டி ஆட்சி போல, இருட்டு இல்லை, திருட்டு இல்லை, புரட்டு இல்லை, புனை சுருட்டு இல்லை ” என்றெல்லாம் பேசியிருக்கிறார். அதே பாணியில் “குற்றவாளி ஜெயலலிதா ஆட்சியில் இருட்டும் உண்டு, திருட்டும் உண்டு, புரட்டும் உண்டு, புனை சுருட்டும் உண்டு” என்று அவர் பாணியிலேயே பதிலளிக்க எவ்வளவு நேரமாகும்?’’


அதிமுக ஆட்சியில் இருட்டு, திருட்டு, புரட்டு அனைத்தும் உண்டு!:கலைஞர் கடிதம் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

அதிமுக ஆட்சியில் இருட்டு, திருட்டு, புரட்டு அனைத்தும் உண்டு!:கலைஞர் கடிதம் Empty Re: அதிமுக ஆட்சியில் இருட்டு, திருட்டு, புரட்டு அனைத்தும் உண்டு!:கலைஞர் கடிதம்

Post by ayyasamy ram Thu Feb 26, 2015 4:44 am

புன்னகை புன்னகை
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83983
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

அதிமுக ஆட்சியில் இருட்டு, திருட்டு, புரட்டு அனைத்தும் உண்டு!:கலைஞர் கடிதம் Empty Re: அதிமுக ஆட்சியில் இருட்டு, திருட்டு, புரட்டு அனைத்தும் உண்டு!:கலைஞர் கடிதம்

Post by மாணிக்கம் நடேசன் Thu Feb 26, 2015 8:19 am

எங்க நாட்டுலேயும் உள்ள ஓர் அரசியல் கட்சியிலேயும் இதே தான் நடந்தது. மக்களை ஏமாத்தியே வாழ்ந்திட்டானுங்க, இன்னும் வாழ்ந்து கிட்டு இருக்கனானுங்க. இப்போ அந்த கட்சியில ஒரே ஒரு நல்லவர்தான் என் கண்களுக்கு தெரியிராரு.
avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்


பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Back to top Go down

அதிமுக ஆட்சியில் இருட்டு, திருட்டு, புரட்டு அனைத்தும் உண்டு!:கலைஞர் கடிதம் Empty Re: அதிமுக ஆட்சியில் இருட்டு, திருட்டு, புரட்டு அனைத்தும் உண்டு!:கலைஞர் கடிதம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» அதிமுக ஆட்சியில் தான் ஸ்டெர்லைட் ஆலைக்கு அனுமதி-வைகோ
» அதிமுக ஆட்சியில் அதிகாரிகள் மாற்றப்படுவது வாடிக்கையானதுதான் கருணாநிதி அறிக்கை
» அரசு அலுவலர்களும், அ.தி.மு.க. அரசும்! : கலைஞர் கடிதம்
» தமிழர்கள் தாக்கப்பட்டது உண்மை :உம்மன்சாண்டிக்கு கலைஞர் பதில் கடிதம்
» இறுதிப் போரில் நாம் வெல்வது திண்ணம்! கலைஞர் கடிதம்.

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum